tag:blogger.com,1999:blog-35738787.post7967313076803865234..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: இடைச்சாதி நான் என்றான்!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-35738787.post-75317616873814956242016-07-08T12:08:20.724+05:302016-07-08T12:08:20.724+05:30நன்றி மிக,,தமிழே போதை அல்லவா அதான் அப்படிச்செய்க...நன்றி மிக,,தமிழே போதை அல்லவா அதான் அப்படிச்செய்கிறதுபோலும்!!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-14218253316405135712016-07-08T10:43:46.905+05:302016-07-08T10:43:46.905+05:30எனக்குப் பிடித்த இரண்டு பாடல்கள் .
அலச அலச , காதல்...எனக்குப் பிடித்த இரண்டு பாடல்கள் .<br />அலச அலச , காதல் அதிகமாகவே செய்கிறது <br />"தமிழ் மீது"Sadasivam Chelladuraihttps://www.blogger.com/profile/13221073944202966287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-41421457380767809882012-11-26T15:17:53.810+05:302012-11-26T15:17:53.810+05:30interesting explanation...interesting explanation...Saravanan / C Subramanianhttps://www.blogger.com/profile/06268961094196958491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-62910528151705126412011-12-03T15:35:40.201+05:302011-12-03T15:35:40.201+05:30புலவர் சா இராமாநுசம் said...
அருமையான சிந்தனை! வி...புலவர் சா இராமாநுசம் said... <br />அருமையான சிந்தனை! விளக்கமான விரிவுரை!பலரது சிந்தனைகளை தூண்டி விட்டீர்!<br /><br />பொதுவாக படைப்பாளி எதையும்<br />எண்ணிப் படைப்பதில்லை அவனை<br />அறியாமல் சொற்கள் இயல்பாக வந்து விழுகின்றன!<br />அதை இரசிக்கின்ற மனத்தோடு உள்ளவர்கள் சிந்தித்து<br />உரைகாணும் போதுதான் அதில் உள்ள<br />பொருள் நயங்களும், கருத்துச் சிறப்புகளும் வெளிப்படும் அதுகூட<br />ஆளுக்கு ஆள் மாறுபடுவதும் உண்டு!<br /><br />புலவர் சா இராமாநுசம்<br /><br />12:58 PM<br /><br />>>>>>>>>ஆமாம் புலவர் ஐயா..சற்றே சிந்தனையை விரிக்கலாம் என்ற யுத்தியில் இப்படிக்கொண்டுபோக நேர்ந்தது நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-52298450937696546412011-12-03T12:58:48.414+05:302011-12-03T12:58:48.414+05:30அருமையான சிந்தனை! விளக்கமான விரிவுரை!பலரது சிந்தனை...அருமையான சிந்தனை! விளக்கமான விரிவுரை!பலரது சிந்தனைகளை தூண்டி விட்டீர்!<br /> <br /> பொதுவாக படைப்பாளி எதையும்<br /> எண்ணிப் படைப்பதில்லை அவனை<br />அறியாமல் சொற்கள் இயல்பாக வந்து விழுகின்றன!<br /> அதை இரசிக்கின்ற மனத்தோடு உள்ளவர்கள் சிந்தித்து<br />உரைகாணும் போதுதான் அதில் உள்ள<br />பொருள் நயங்களும், கருத்துச் சிறப்புகளும் வெளிப்படும் அதுகூட<br />ஆளுக்கு ஆள் மாறுபடுவதும் உண்டு!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-76555409931985482222011-12-02T22:42:20.139+05:302011-12-02T22:42:20.139+05:30//தமிழ் விரும்பி said...
மிகவும் அற்புதமான அழகான ...//தமிழ் விரும்பி said... <br />மிகவும் அற்புதமான அழகான சுவாரஸ்யமான விசயங்களை பொருதி கற்பனையோடு மகாகவியின் அந்த வரிகளுக்கு அர்த்தம் இதுவாகவும் இருக்குமோ அல்லது <br />அப்படியே, ஆண்டாளாய், மீராவை... பாரதி சக்தியை கண்ணம்மாவாக அவனின் காதலியாக புணர்கிறான்... பாரதி அறுபத் தாறிலேக் காணலாம்.<br /><br />"ஊழிக் கூத்திலே" மிகவும் அருமையாக பிரபஞ்சத் தத்துவத்தைக் கூறியும் இருக்கிறான். <br /><br />சகோதிரி.... பின்னூட்டம் எழுதப் போய்.... காற்று வெளியாய் விரிந்து விட்டது....<br />நல்லப் பதிவு... ////<br /><br />வாங்க தமிழ் விரும்பி..ஞானக்கிறுக்கனைப்பற்றீய உங்கள் கருத்தையே பதிவாக இடலாம்போல அப்படி விரிவாய் தெளிவாய் அருமையாய் உள்ளதே...இன்னும் நிறைய அவன் பாடல்களைப்பற்றிப்பேசுவோம்.நன்றி வருகைக்கும் மிகச்சிறப்பான பின்னூட்டம் இட்டதற்கும்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-7190529183945572482011-12-02T22:39:23.657+05:302011-12-02T22:39:23.657+05:30//V.Radhakrishnan said...
அட! இடைச்சாதி என்பதற்கா...//V.Radhakrishnan said... <br />அட! இடைச்சாதி என்பதற்கான பாரதியின் சிந்தனை ஒன்றுதான். கிருஷ்ணன் இடையர் குலத்தில் பிறந்தவர். அவ்வளவே. ஆனால் அந்த வார்த்தையில் இருந்து இவ்வளவு சிந்தனைகள் இருக்கலாம் என சொன்னது உங்கள் எழுத்து. எழுதுபவர் ஒன்றை நினைத்து எழுத, வாசிப்பவர் தனக்கென பல கருத்துகள் கொள்ள வைப்பதுதான் ஒரு எழுத்துக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி. அதாவது ஒரு எழுத்து பிறரை சிந்திக்க தூண்ட வேண்டும். அதற்காக அனைவருமே சிந்திப்பார்கள் என சொல்ல முடியாது. ;) <br /><br /><br />///<<<<...<br />வாங்க ராதகிருஷ்ணன்..<br />பாரதியின் இந்த இடைச்சாதி சொல்லாட்சி எத்தனை அருமை பாருங்க...பலரது சிந்தனையைத்தூண்டி இருக்கும் <br /><br />//காற்றுவெளியிடை கண்ணம்மா என்பதில் பாரதியின் சிந்தனை எல்லாம் கண்ணமாவின் இடுப்பு மேல் எல்லாம் இல்லை, கண்ணமாவின் மீதான காதலில் இருக்கிறது. ;)<br /><br />///<br /><br />உண்மைதான்.<br /><br /><br />//எதற்கும் மொத்த பாடலை படித்தால் பாரதியின் கவித்துவம் புரியும். :) <br />--------------------------<br />///<br /><br />கவித்துவம் ரசனை மிகுந்ததாக இருக்கவும்தான் இதனைப்பற்றி எழுத ஆவல் வந்தது.நா.கண்ணன் மிகச்சிறப்பாக எழுதக்கூடியவர். அவர் எழுத்தினை இங்கு கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி தங்கள் வருகை கருத்துக்கு மிக்க நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-32360674388710056162011-12-02T21:22:52.385+05:302011-12-02T21:22:52.385+05:30அட! இடைச்சாதி என்பதற்கான பாரதியின் சிந்தனை ஒன்றுதா...அட! இடைச்சாதி என்பதற்கான பாரதியின் சிந்தனை ஒன்றுதான். கிருஷ்ணன் இடையர் குலத்தில் பிறந்தவர். அவ்வளவே. ஆனால் அந்த வார்த்தையில் இருந்து இவ்வளவு சிந்தனைகள் இருக்கலாம் என சொன்னது உங்கள் எழுத்து. எழுதுபவர் ஒன்றை நினைத்து எழுத, வாசிப்பவர் தனக்கென பல கருத்துகள் கொள்ள வைப்பதுதான் ஒரு எழுத்துக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி. அதாவது ஒரு எழுத்து பிறரை சிந்திக்க தூண்ட வேண்டும். அதற்காக அனைவருமே சிந்திப்பார்கள் என சொல்ல முடியாது. ;) <br /><br />காற்றுவெளியிடை கண்ணம்மா என்பதில் பாரதியின் சிந்தனை எல்லாம் கண்ணமாவின் இடுப்பு மேல் எல்லாம் இல்லை, கண்ணமாவின் மீதான காதலில் இருக்கிறது. ;)<br /><br />கண்ணமாவுக்கும், பாரதிக்குமான காதலில் காற்று புகும் அளவே இடைவெளி இருக்கிறது என்பதை வலியுறுத்துவதாக இருக்கலாம். <br /><br />எதற்கும் மொத்த பாடலை படித்தால் பாரதியின் கவித்துவம் புரியும். :) <br />--------------------------<br /><br />சரி, இது குறித்து எவரேனும் எழுதி இருக்கிறார்களா எனத் தேடி பார்த்தேன்.<br /><br />நா. கண்ணன் தனது இணைய தளத்தில் இப்படி எழுதி இருக்கிறார்.<br /><br />//காற்று வெளியிடைக் கண்ணம்மா என்று ஆரம்பிக்கிறான். பாரதியின் காதல் எத்தன்மையது? காற்றின் இடைவெளி (மூச்சு விடும் பொழுது) நேரத்தில் கூட உன்னை மறப்பதில்லை என்கிறான். எப்படி உடல் மூச்சு விட மறப்பதில்லையோ அதுபோல் பாரதி கண்ணம்மாவை நினைக்காத பொழுதுகள் இல்லை என்பதாம். வேறு: காற்றின் இடைவெளி (மூச்சு விடும் நேரம்) எப்படி சிறியதோ அதுபோல் இடை கொண்ட கண்ணம்மா என்பது. மூன்றாவது, காற்றின் வெளி பரந்து நிற்கிறது. காற்று வெளி என்று இந்த அகிலத்தையே பாரதி கூறுகிறான். இந்த அகிலமெல்லாம் அவன் கண்ணம்மாவின் காதலை கண்டு, உணர்ந்து களிக்கின்றான். கண்ணம்மாவின் காதல் இல்லாத இடமேது என்பது பாரதியின் கேள்வி.// Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-14470052095828071292011-12-02T21:22:00.721+05:302011-12-02T21:22:00.721+05:30மிகவும் அற்புதமான அழகான சுவாரஸ்யமான விசயங்களை பொரு...மிகவும் அற்புதமான அழகான சுவாரஸ்யமான விசயங்களை பொருதி கற்பனையோடு மகாகவியின் அந்த வரிகளுக்கு அர்த்தம் இதுவாகவும் இருக்குமோ அல்லது இதற்கு மேலாகுமோ?! என்றது அருமை...<br /><br />காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்<br />காதலை எண்ணிக் களிக்கின்றேன் .....<br />"காற்றுவெளி" என்பது மகாகவி இப்பாடலுக்குத் தந்த தலைப்பு... <br />"கண்ணம்மாவின் காதல்" என்று சில பதிப்புகளிலும் வெளியாகி யுள்ளதாம்.<br /><br />சரி இங்கே மகாகவி கூறும் காற்று வெளியிடை... அதற்கு முன்பு<br />இப்பாடலின் சில வரிகளையும் பார்த்து விட்டு வருவோம்.<br /><br />"................................................................ - இந்த <br />வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை<br />வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்<br />விண்ணவன் ஆகப் புரியுமே - இந்தக் (காற்று)"<br /><br />அடுத்ததாக .... கடைசி இரு அடிகள்<br /><br />"............................................................... - உயிர்த்<br />தீயினிலே வளர் சோதியே - என்றன்<br />சிந்தனை யே, என்றன், சித்தமே! இந்தக் (காற்று)"<br /><br />மகாகவி இங்கே கண்ணம்மா என்பது சக்தியை அவன் அவளை காற்று வெளியிடையிலே மிதந்து (மோனத்திலே / தியானத்திலே) அன்பால் அவளைப் பரவுகிறான்... அவளின் காதலில் திளைக்கிறான் அப்படி அவளின் காதலில் மூழ்கிய நிலையிலே இருந்து மாறாது எனை வேற்று நினைவின்றித் தேற்றியே இந்த புவியிலே பேரொளியில் கலந்து ஞானம் பெற்று விண்ணவனாய் ஆகப் புரியுமே நினது, அழகும், காதலும் என்கிறான்.... அவன் நோக்கம் அதுவாகவே இருந்தது.... <br /><br />சரி கடைசியாக அவனுடைய ஆத்மாவான உயிர்த் தீயில் வளர்கின்ற சோதி அந்த கண்ணம்மா ஆம் அவள் தான் அன்னை சக்தி... என்றன் சிந்தனையே..என்றன் சித்தமே.... உடல் பொருள் ஆவி எல்லாமாகி ஒரு மோன நிலையில் நின்று பாடுகிறான்..... அவனின் ஆத்மா காற்று வெளியிடையிலே மிதந்த நிலையிலே நின்றே அன்னையின் காதலில் களிக்கிறது....<br /><br />பாரதி... ஞானக் கிறுக்கன், பகைவனுக்கும் அருளச் சொன்னவன்... யுக புருஷன், வேதாந்தக் கருத்துக்களை தந்து கவிதயில் கூறியதோடு மட்டுமல்ல அப்படியே வாழ்ந்தவன்... அவ்வாறே வாழும் போதே முக்தி அடைந்தவன்... அதை நாம் ஒவ்வொருவரும் கைகொள்ள வேண்டும் என்றே பரசிவ வெள்ளம் என்னும் பாடலில் அழகாகச் சொல்லியுள்ளான்.<br /><br />பர பிரமத்தொடு கலப்பதே நமது லட்சியம் என்பது வேதாந்தம்... அதற்கு பல நெறிகள் இருந்தும் அந்த பரபிரம்மம் இந்த உலகத்தை இயக்க சக்தியைப் படைத்தது... அதனாலே அச் சக்தியே நம்மை அந்த பரபிரமத்திடம் அழைத்துச் செல்லக் கூடியதும் என்று தீர்க்கமாக நம்பியே அவனது வாழ்வும் கவியும் இருந்தது.... இந்த வேதாந்தக் கருத்தை அவனின் பாடல்களில் எல்லாம் காணலாம். தாயாய் வணங்குதல் சிறப்பு, தந்தையை வணங்குதல் இன்னும் சிறப்பு, நண்பனாய் வணங்குவது இவைகள் யாவினும் சிறப்பு, ஆனால் காதலியாய் வணங்கும் பொது தான் எல்லாவற்றிலும் சிறப்பு... அதில் தான் எளிதிலே கலக்கலாம் அப்படியே, ஆண்டாளாய், மீராவை... பாரதி சக்தியை கண்ணம்மாவாக அவனின் காதலியாக புணர்கிறான்... பாரதி அறுபத் தாறிலேக் காணலாம்.<br /><br />"ஊழிக் கூத்திலே" மிகவும் அருமையாக பிரபஞ்சத் தத்துவத்தைக் கூறியும் இருக்கிறான். <br /><br />சகோதிரி.... பின்னூட்டம் எழுதப் போய்.... காற்று வெளியாய் விரிந்து விட்டது....<br />நல்லப் பதிவு... தாமதமாக வந்து விட்டேன்... பதிவிற்கு நன்றிகள். மீண்டும் வாசிக்காமல் அனுப்புகிறேன்!?..Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-67976502986069585762011-12-02T20:48:31.862+05:302011-12-02T20:48:31.862+05:30//வை.கோபாலகிருஷ்ணன் said...
நல்ல சுவாரஸ்யமான பதிவ...//வை.கோபாலகிருஷ்ணன் said... <br />நல்ல சுவாரஸ்யமான பதிவு. பலரின் பல்வேறு கருத்துக்களும் அருமையான விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. பல விஷயங்களை அவரவர் பார்வையில் ஆரோக்யமாக அறிந்து கொள்ள முடிகிறது. பாராட்டுக்கள்.<br /><br />அன்புடன் vgk<br /><br />3:29 PM<br /><br />////<br /><br />மிக்க நன்றி திரு கோபாலக்ருஷ்ணன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27968773061583996922011-12-02T15:29:02.970+05:302011-12-02T15:29:02.970+05:30நல்ல சுவாரஸ்யமான பதிவு. பலரின் பல்வேறு கருத்துக்கள...நல்ல சுவாரஸ்யமான பதிவு. பலரின் பல்வேறு கருத்துக்களும் அருமையான விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. பல விஷயங்களை அவரவர் பார்வையில் ஆரோக்யமாக அறிந்து கொள்ள முடிகிறது. பாராட்டுக்கள்.<br /><br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-6225061956808813712011-12-01T17:16:41.013+05:302011-12-01T17:16:41.013+05:30//கணேஷ் said...
கண்ணம்மாவின் காதலை எண்ணினால் காற்...//கணேஷ் said... <br />கண்ணம்மாவின் காதலை எண்ணினால் காற்றில் பறப்பது போல் உணர்கிறான் காதலன். காற்றுவெளியிடை உன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்ற வரிகளுக்கு எனக்கு இப்படிப் பொருள் கொள்ளத் தோன்றியது. இடைச்சாதி என்பதை அலசிய விதம் பிரமிப்பு தந்தது. பிரமாதம்...<br /><br />2:55 PM<br /><br />/////<br />வாங்க கணேஷ் பயணம் நல்லா ஆச்சா? வெளியிடைக்கு சரியா பொருள் வரலையே....வெளி என்பது புறம். அது பர்ந்தது எல்லைகள் அற்றது. அதன் இடையே என்கிறானே அதான் புரியவில்லை சூட்சம சொல் இங்கு ..நன்றி உங்க கருத்துக்கும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-87187902343158387592011-12-01T17:14:15.418+05:302011-12-01T17:14:15.418+05:30//Shakthiprabha said...
vensen அவர்கள் சொன்ன விளக...//Shakthiprabha said... <br />vensen அவர்கள் சொன்ன விளக்கம் அற்புதம்.<br /><br />1:14 PM<br /><br />////<br /><br />ஆமாம் சிந்தனையை நன்கு விரிக்கிறார்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-21735284504255422572011-12-01T17:12:54.609+05:302011-12-01T17:12:54.609+05:30Shakthiprabha said...
இன்னும் கூட அர்த்தம் தோன்றி...Shakthiprabha said... <br />இன்னும் கூட அர்த்தம் தோன்றியிருக்கும் பாரதிக்கு :)) உங்கள் நகைச்சுவை உணர்வு தான் பகிர்வுக்கு உயிர்.<br /><br />இடைச்சாதி என்றால் இடையன், பிரம்மா சிவனுக்கு இடைப்பட்ட தொழிலைச் செய்பவன் என்ற விளக்கம் பிடித்திருந்தது.<br /><br />அப்புறம் எனக்குத் சும்மா தோன்றிய இன்னொன்று....இடைகொண்ட குலமாகிய மாதர்களைக் முதலில் கள்ளமாய்க் கவர்ந்து பின் ஆசானாகி ஆதி தத்துவத்ததயே விளக்குபவன் என்பதால் ....உள்ளம் கவர் இடையன் lol சும்மா சொன்னது தான்.<br /><br />1:08 PM<br /><br /> வா சக்தி....நீ சொன்ன இட கொண்ட குலமாகிய மாதர்கள் என<br />எனக்கும் தோன்றியது அப்புறம் எங்களூக்கு மட்டும்இடை இல்லையான்னு எந்த ஆணாவது சண்டைக்கு வந்துட்டாருன்னா என்ன செய்றதுன்னு அதை விட்டுட்டேன் பல இலக்கியபாடல்களில் ஆண் இடையும் வர்ணிக்கப்படுகிறது.<br /><br />உன் கருத்துக்கு நன்றி ஷக்திஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-73743888339469045792011-12-01T14:55:20.689+05:302011-12-01T14:55:20.689+05:30கண்ணம்மாவின் காதலை எண்ணினால் காற்றில் பறப்பது போல்...கண்ணம்மாவின் காதலை எண்ணினால் காற்றில் பறப்பது போல் உணர்கிறான் காதலன். காற்றுவெளியிடை உன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்ற வரிகளுக்கு எனக்கு இப்படிப் பொருள் கொள்ளத் தோன்றியது. இடைச்சாதி என்பதை அலசிய விதம் பிரமிப்பு தந்தது. பிரமாதம்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-75927457181635569122011-12-01T13:14:26.099+05:302011-12-01T13:14:26.099+05:30vensen அவர்கள் சொன்ன விளக்கம் அற்புதம்.vensen அவர்கள் சொன்ன விளக்கம் அற்புதம்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-71813224804718793192011-12-01T13:08:34.793+05:302011-12-01T13:08:34.793+05:30இன்னும் கூட அர்த்தம் தோன்றியிருக்கும் பாரதிக்கு :)...இன்னும் கூட அர்த்தம் தோன்றியிருக்கும் பாரதிக்கு :)) உங்கள் நகைச்சுவை உணர்வு தான் பகிர்வுக்கு உயிர்.<br /><br />இடைச்சாதி என்றால் இடையன், பிரம்மா சிவனுக்கு இடைப்பட்ட தொழிலைச் செய்பவன் என்ற விளக்கம் பிடித்திருந்தது.<br /><br />அப்புறம் எனக்குத் சும்மா தோன்றிய இன்னொன்று....இடைகொண்ட குலமாகிய மாதர்களைக் முதலில் கள்ளமாய்க் கவர்ந்து பின் ஆசானாகி ஆதி தத்துவத்ததயே விளக்குபவன் என்பதால் ....உள்ளம் கவர் இடையன் lol சும்மா சொன்னது தான்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-61811600113425320232011-12-01T06:23:32.797+05:302011-12-01T06:23:32.797+05:30// மகேந்திரன் said...
இடை எனும் சொல்லுக்கு படையெட...// மகேந்திரன் said... <br />இடை எனும் சொல்லுக்கு படையெடுத்தது போல<br />இத்தனை விளக்கங்களா...<br />முதல் நான்கு விளக்கங்கள் ஏற்கனவே நான் அறிந்தது.. மற்றவை புதியது...<br />அருமையான பதிவுக்கு நன்றி சகோதரி...<br /><br />12:46 AM<br /><br />////<br /><br />வாங்கமகேந்திரன் இன்னும் கூட இருக்கலாம் அர்த்தங்கள்....கருத்துக்கு மிக்க நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-49130570431028680172011-12-01T06:22:36.579+05:302011-12-01T06:22:36.579+05:30துரைடேனியல் said...
Bharathi or Imayam. Avan paad...துரைடேனியல் said... <br />Bharathi or Imayam. Avan paadal kadalai vida azhamana arthangal kondathu. Itharku vilakkam thamizhil ida muyarchikkiren. Arumaiyana pathivu Sago. Vaalthukkal.<br /><br />12:13 AM<br /><br />//<br />thankyou என்னாச்சு உங்க தமிழ் ஃபாண்ட்?ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-36391902474373806132011-12-01T00:46:20.563+05:302011-12-01T00:46:20.563+05:30இடை எனும் சொல்லுக்கு படையெடுத்தது போல
இத்தனை விளக்...இடை எனும் சொல்லுக்கு படையெடுத்தது போல<br />இத்தனை விளக்கங்களா...<br />முதல் நான்கு விளக்கங்கள் ஏற்கனவே நான் அறிந்தது.. மற்றவை புதியது...<br />அருமையான பதிவுக்கு நன்றி சகோதரி...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-8580858422696351992011-12-01T00:15:43.981+05:302011-12-01T00:15:43.981+05:30TM 1.TM 1.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-81257854821633552402011-12-01T00:13:34.642+05:302011-12-01T00:13:34.642+05:30Bharathi or Imayam. Avan paadal kadalai vida azham...Bharathi or Imayam. Avan paadal kadalai vida azhamana arthangal kondathu. Itharku vilakkam thamizhil ida muyarchikkiren. Arumaiyana pathivu Sago. Vaalthukkal.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-84461460665143659262011-11-30T23:31:15.433+05:302011-11-30T23:31:15.433+05:30//Madhavan Srinivasagopalan said...
இப்படியும் யோ...//Madhavan Srinivasagopalan said... <br />இப்படியும் யோசிக்கலாமா..<br />அர்த்தமெல்லாம் நல்லா இருக்கே..<br />இது தெரியாம புரியாம பல பேரு ஏன் கொல வெறியோட அலையுறாங்க..<br />உருப்படியா யோசிக்க வழிகள் இருக்குனு எனக்கு சொன்னதற்கு நன்றிகள்.<br /><br />11:25 PM<br /><br />/////<br /><br />கொலைவெறி பாட்டை ரசிக்கலாம் ஆனா பாரதி கம்பன்போன்ற மகாகவிகள் பாடிய பாடல்களை மறக்கக்கூடாது அல்லவா? இந்தப்பாடல்களில் கலைவெறி உண்டு மாதவன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-34227428156861768552011-11-30T23:25:28.083+05:302011-11-30T23:25:28.083+05:30இப்படியும் யோசிக்கலாமா..
அர்த்தமெல்லாம் நல்லா இருக...இப்படியும் யோசிக்கலாமா..<br />அர்த்தமெல்லாம் நல்லா இருக்கே..<br />இது தெரியாம புரியாம பல பேரு ஏன் கொல வெறியோட அலையுறாங்க..<br />உருப்படியா யோசிக்க வழிகள் இருக்குனு எனக்கு சொன்னதற்கு நன்றிகள்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-62883370869773748252011-11-30T23:13:27.130+05:302011-11-30T23:13:27.130+05:30VenSan said...
உள்ளிழுக்கும் காற்றுக்கும்
அது உள...VenSan said... <br />உள்ளிழுக்கும் காற்றுக்கும் <br />அது உள் நிறைந்து பின் வெளிப்படும்<br />தருணத்திற்கும்<br />இடைப்பட்ட காலப்பொழுதுகளில் கூட<br />கண்ணம்மாவின் காதலை எண்ணாமல் இருக்க முடியவில்லை என்கிறாரோ<br />முண்டாசு கவி? <br /><br />காற்று வெளி (அண்டம்) இடை ( இல்லாமல்)<br />முழுதும் நிறைந்து<br />கண்ணம்மாவின் (மீதான) காதல்<br />தவிக்க வைக்கிறதோ? <br /><br /><br />>>>வாருங்கள் சகோதரரே உங்கள் விளக்கமும் நன்று,,காற்றில் ஏது இடைவெளி? நிறைந்ததுதான் நீங்கள் சொல்வதுபோல் அதனால்தான் அப்படி சொல்கிறார் போலும்!<br /><br />//..<br />இன்னமும் ஓரிரு சதவீதம் கூட உங்கள் பதிவுகளை படிக்கவில்லை..//<br /><br /><br />பழைய பதிவுகளில் ஒன்றில் ஆண்டாளுக்கு அவன்மேலிருந்த காதலை எழுதி இருப்பேன் முடிந்தால் அதை வாசியுங்கள்.<br /><br />//ஆழ்ந்து சிந்தித்து எதையும் ஆராய்ந்து பல கோணங்களில்<br />யோசித்து எழுதி பிரமிக்க வைக்கும் பலரை கண்டு<br />நான் "ஏன் நாம் இப்படி யோசிப்பதில்லை" "ஏன் எனக்கு இது தோன்றவில்லை" என <br />என்னையே கேட்டுருக்கிறேன் ..<br />என் பிரமிப்பு பட்டியலில் புதியதாய் நீங்கள்..<br /><br />வாழ்த்துக்கள் சகோதரி..<br />////<br /><br />எல்லோரும் யோசிக்கிறோம் சகோதரரே ..கதை இல்லாத மானுடம் உண்டா? கதை சொல்லத்தெரியாத மனிதன் உண்டா? அதை எழுதுவது சிலருக்கு வருகிறது அவ்வளவுதான்.அதுபோலத்தான் யோசிப்பதற்கும் ஏதாவது களம் கிடைத்தால் தானாய் வரும் என்னிடம் நீங்கள் பிரமிப்பதுப்போல் ஏதுமில்லை சராசரிசிந்தனை கொண்ட பெண் தான்!<br /><br />//வாசிக்க,சிலாகிக்க ,படித்து அசைபோட்டு<br />மனதில் தேக்கி வைத்து<br />வார்த்தைகளின் இடைவெளிகளில்<br />வாழ்ந்துவிட என்றே இந்த வாழ்க்கை..<br /><br />10:44 PM<br /><br />//<br />அழகாய் சொல்கிறீர்கள்/..நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக எழுதுகிறேன் நன்றி தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com