Social Icons

Pages

Wednesday, October 29, 2008

காதல்(கவிதை)

 
Posted by Picasa





(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)
மேலும் படிக்க... "காதல்(கவிதை)"

Tuesday, October 28, 2008

நானே நானா நட்சத்திரமாய் மாறினேனா?:)


துளசிமேடம் ஜிரா கேஆரெஸ் சுப்பையா மதுமிதா மங்களூர்சிவா இலவசகொத்தனார் ஆசிஃப்மீரான் சிறில் அலெக்ஸ் செல்வநாயகி மங்கை குமரன் என பிரபலபதிவர்கள் ஏறிய மேடையில் இன்று நானா? நானே நானா யாரோதானா நட்சத்திரமாய் மாறினேனா?

ஆச்சர்யமா இருக்குங்க!

தமிழ்மணத்துக்கு முதல் நன்றி.

இந்த நட்சத்திரங்களைப்பற்றி சிறுகுறிப்பு(நிறையபேர் நிறைய நிறைவா சொல்லிட்டாங்க நான் சொல்ல எதுவுமில்லேன்னாலும் ஏதாவதாவது சொல்லலேன்னா எப்படிங்க?:)

மறந்துட்டேனே மறக்காம நீங்க எல்லாரும் பின்குறிப்பு பாக்கணும் என்ன?

அன்று ஒருநாள் அம்மிமிதித்து அருந்ததி பார்க்கச்சொனார்கள் பட்டப்பகலில் நட்சத்திரமானது எப்படித்தெரியுமென கல்யாணங்களில் எந்தப்பெண்ணும் எந்தமாப்பிள்ளையும் கேட்பதே இல்லை!!!

வசிஷ்டர் மனைவி அருந்ததி உத்தமபத்தினி .அதனால் நட்சத்திரமாய் வானில் ஜொலிக்கிறார் என்கிறதுபுராணக்கதை.

சிறுவன் துருவனுக்கும் வானில் சிறப்பான இடம் உண்டு.

நட்சத்திரங்கள் நிரந்தரமானவை அதனாலதான் அதற்கு அந்தஸ்து.

உண்மையில் சூரியனே ஒரு நட்சத்திரம்தா அதனால்தான் கேஆரெஸ் எனும் ரவி(சூரியன்) ஆன்மீக சூப்பர்ஸ்டாரா இருக்காரோ?!

இந்த பூமியின் சுற்றளவை விட 110 மடங்கு பெரிய சுற்றளவும், 10 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடக் கூடிய அளவு இருக்கும் சூரியனை ஏனைய நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் சமயம் அது ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்கிறது வானியல் ஆராய்ச்சிக்குறிப்பு


நம் அண்டவெளியில் மட்டும் 1000 லட்சம் நட்சத்திரங்கள் இருப்பதாக கணித்திருக்கிறார்கள். நம் அண்டவெளியில் மட்டும் இவ்வளவு என்றால் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு இருக்குமோ?

மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களும் பிறக்கின்றன.மரணிக்கின்றன.

இந்த அற்புதம் நாள்தோறும் இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

எல்லையில்லாத இறை ஆற்றலின் படைப்புகள்தான் எத்தனை அற்புதமானவை!

அறிவியல்ரீதியா சிந்திக்க இங்கபலபேருக்குதெரியும் என்பதாலும் எனக்கு இதுக்குமேல சிந்திக்கதெரியாது எனப்தாலும் இந்தவிஷயம் இங்கு நிறைவுபெறுகிறது!

நட்சத்திரங்களின் ஆளுமை பலவிதம்.

நம்ம வீடுகளில்ஜாதகம் எடுத்தா போதும் முதல்ல நட்சத்திரம் என்னன்னுதான் கேட்பாங்க

கோயிலில் அர்ச்சனைக்ளுக்கும் நட்சத்திரம் தேவை.

ஒருவரின் பிறந்த நாளைய நட்சத்திரத்தை வைத்து அவரின் குணாதிசயங்களை சொல்லலாமாம்! சுப்பையாஸாருக்கு இதுபற்றி நன்கு தெரிந்திருக்கும்.

மகம் ஜகம் ஆளுமாம்
ஆண்மூலம் அரசாளுமாம்
பெண்மூலம் நிர்மூலமாம்
பரணி தரணி ஆளுமாம்
கேட்டை ஜேஷ்டனுக்காகாது
உத்திரத்தில் ஒருபிள்ளையும் ஊர்கோடியிலொருகாணிநிலமும் இருக்கணுமாம்
பூராடம் நூலாடாது....

இன்னும் இருக்கலாம்....


இதுல நட்சத்திரப்பலன்கள் வழக்கம்போல பெண்களுக்குபாதகமாத்தான் இருக்கு. பாசிடிவ் எல்லாம் ஆணுக்கு நெகடிவ் எல்லாம் பெண்ணுக்கு!(மகம் மட்டும் விதிவிலக்கு):)

சமீபத்துல தெரிந்த குடும்பம் ஒன்றில் காதலர்கள் இருவருக்கும் நட்சத்திரப்பொருத்தமே சரி இல்லையென்று பையனின் அப்பாவிலிருந்து அனைவரும் கல்யாணத்தைத்தடுக்கப்பார்த்தார்கள்.

காதலித்த அந்தப்பொண்ணு வந்து பையனின் அம்மாகிட்ட கெஞ்சிக்கேட்டுக்கொண்டது.

'மனப்பொருத்தம் இருந்தா போதும் மற்ற எதுவும் தேவைஇல்லை'ன்னு அந்தப்பெண்மணி முடிவெடுத்து மகனின் கல்யாணத்தை பல எதிர்ப்புகள் நடுவே செய்து வைச்சாங்க.

பெண்ணுக்குப்பெண்ணே எதிரியா யார் சொன்னது, பல இடங்களில் தோழி தான்!



பின்குறிப்பு. நட்சத்திரப்பதிவுகளில் நான் இடப்போகும் எல்லாபதிவுகளையும் இதேபோல வந்து பார்த்து படிச்சி கருத்து சொல்லப்போறதுக்கு உங்களுக்கெல்லாம் முன்கூட்டியே நன்றி!





மேலும் படிக்க... "நானே நானா நட்சத்திரமாய் மாறினேனா?:)"

Monday, October 27, 2008

தீபாவளிக்கவிதைகள்.

வருவாய் ஒளியே, தீபாவளியே!
************************************************


சுதந்திரக்காற்றையெல்லாம்,நீர்
சூழ்ந்த அந்தத்தீவில்
எந்தச்சுனாமி
அள்ளிக் கொண்டுபோனதோ?

நெருப்பு சுவாலைக்கு மத்தியிலும்
உருகாத பனிக்கட்டியாய்
பாலைவனவெப்பத்திலும்
தோகை விரித்தாடும் மயில்களாய்
உப்புக்கடலில் உதித்த
செப்புத்தாமரைகளாய்
அதர்மக்கூடாரத்தில்
தர்மவான்களாய் வாழும்
தமிழினத்தின் உயிரினம்
அழிந்துகாண்பதுசுடுவனம்

விடியலைவேண்டும் அந்த
வெள்ளைமனங்களின்
இருளடர்ந்த வாழ்வில்
படியளக்க வரவேண்டும்
நம்பிக்கை தீபம்!

சமமாக எங்குமேபரவி
அமைதியை இலங்கைக்குத்தந்து
எல்லோரும் நன்றாக
எல்லாரும்ஒன்றாகவாழ
எங்கெங்கும் ஒளிதந்து
எல்லையில்லா ஆனந்தம்
எம் இனத்தமிழர்க்கு இன்று
ஏற்றமுடன் தந்திடவே
வருவாய்ஒளியே! தீபாவளியே!
************************************************



மத்தாப்பூவாய்.....



மத்தாப்பூவாய் மலர்ந்த காதல் உன்
அப்பாவின் அணுகுண்டு கோபத்தில்
புஸ்வாணமாகிப்போனது
தரைச்சக்கரமாய் சுழல்கிறது என்மனது
சாட்டையடியாய் திரும்பிப் பேசி
தவுசண்ட் வாலாவாய் வெடிக்கத்
தெரியும் எனக்கும் .
ஓலைக்குள் சுருண்டிருக்கும்
பட்டாசாய்மௌனம்காக்கிறேன்
நேரம் வரும் எனக்கும்
வேலைஒன்றுகிடைக்கும் பின்பு
வானம்அதிரவெடிவைப்பேன்
மாலையும் சூட்டுவேன் உன்கழுத்தில்!


(இரண்டு கவிதைகளும் விகடன் மின்னிதழ் தீபாவளி மலரில் வந்துள்ளன)
மேலும் படிக்க... "தீபாவளிக்கவிதைகள்."

Saturday, October 25, 2008

தொட்டிச்செடி

கொட்டும் மழையில்
ஒருநாள் கிடப்பேன்
கொளுத்தும் வெய்யிலில்
மறுநாள் கிடப்பேன்.

கூண்டுக் கிளிக்காவது
சீட்டு எடுக்கும்போது
சில நிமிட விடுதலை.
தொட்டிச் செடிக்கு
அப்படி எதுவுமில்லை.

வேர்க் கால்களை
வீசி நடக்க
வேறு பாதை ஏதுமில்லை.

வேடிக்கை காண வரும்
விந்தை மனிதர்களைப்
பார்த்தபடியும்
மேய்ந்துவரும் மாடுகளிடம்
என்னில் பாதியை
இழப்பதுவுமே
வாடிக்கையாகிவிட்டது.

அலையும் மனதிற்கு
ஆதரவாய் அருகில்
கிளைக்கரம் தொட்டு
ஆறுதல் சாமரம் வீச
மரம் செடி எதுவுமில்லை.

தொட்டிக்குள் அடங்கிவிட்டது,
என் உடல் மட்டுமல்ல
விடுதலை கிடைக்குமென்ற
வாழ்க்கைக் கனவுகளும்தான்
மேலும் படிக்க... "தொட்டிச்செடி"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.