Social Icons

Pages

Saturday, November 01, 2014

அன்பே தகளியாக..

பொய்கை ஆழ்வார்! பூதத்தாழ்வார்! பேயாழ்வார்!

(படம் நன்றி தினமலர்)

முதலாழ்வார்கள்: எனப்படும் 
இம்மூவரும் ஒரே ஆண்டில்அடுத்தடுத்த நாள்களில் பிறந்துள்ளனர்

ஐப்பசி அவிட்டமான  இன்று பூத்ததாழ்வார் திருநட்சத்திரம். 

 வேறு வேறு ஊர்களில் பிறந்த இவர்கள் எப்படி ஒத்த எண்ணமுடையவராய்இருந்தனர்மூவரும் ஒன்றாக பள்ளியில் படித்தனராஅதுதான் இல்லை இவர்கள்மூவரும் ஒருவரை ஒருவர் கண்டதுமில்லைகேட்டதுமில்லைஆனால் இவர்கள்மூவரின் நோக்கமும்சிந்தையும் எம்பெருமானைப் பற்றியே இருந்தன

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.



அன்பைத் தகளியாகவும் ஆர்வத்தை நெய்யாவும் இன்புருகு சிந்தையைத் திரியாகவுங்கொண்டு எம்பெருமானுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேனென்கிறார். செந்தமிழ்  பைந்தமிழ் தெரியும்  ஆழ்வார் பெருமானின் ஞானததமிழ் என்னவாக இருக்கும் புரிகிறதா!

இவர்களை ஒன்றாக இணைத்துஓரிடத்தில் இருத்திஅவர்களை இடித்து நெருக்கிஅவர்களின் பக்தி பாசுரத்தை ஒரே இடத்திலேயே கேட்டு மகிழ்ந்த நம் பெருமானின்அருளுள்ளத்தை என்னவென்று சொல்ல

மூவரும் ஒருவர் படுக்கலாம்  இருவர் அமரலாம்  மூவர் நிற்கலாம் என்றிருந்த அந்த குறுகிய இடத்தில்  நின்றபடி  இறைவனுக்குப்பாமாலை சாற்ற ஆரம்பிக்கின்றனர்.

'முதல் திருவந்தாதி'யில் பொய்கையார் -

       வையம் தகளியா வார்கடலே நெய்யாக
        வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
       சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
       இடராழி நீங்குகவே என்று 

என்கிறார்.


வையம் அகலாம், கடல் நெய்யாம் சுடரோன் விளக்காம். இது ஒரு சூரியோதயப்பாட்டு.

    'இரண்டாம் திருவந்தாதி'யில் பூத்தாழ்வார் -

       அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
       இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
       ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
       ஞானத் தமிழ்புரிந்த நான். 


அன்பு அகல்  ஆர்வம் நெய் என்கிறார். இவர்கள் இருவரும் ஏற்றியவிளக்கில்..

    'மூன்றாம் திருவந்தாதி'யில் பேயாழ்வார் -

       திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
       பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று


என்று அருள்கிறார், ஆமாம் அன்பை அகலில் இட்டவுடன் ஆர்வத்தை நெய்யாக்கினதுமே இறைவன் உருகிவிட்டான். முதலாழ்வார்களுக்கு வந்து முன் நின்றுவிட்டான்!.

அன்பே மாதவம்!


மாதவன் என்கிற பெயரைசொல்லுஅதுவே போதும் என்கிறார் இன்றைய திருநட்சத்திரக்கார ஆழ்வார்!

ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன்பேர்
       எத்தும் திறமறிமின் ஏழைகாள் - ஓத்ததனை
       வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
       சொல்லுவதே ஓத்தின் சுருக்கு

ஓத்து என்பது வேதத்துக்கான தமிழ்ச் சொல்.

    'ஏழைகளே, வேதத்தைப் படிக்க முடிந்தால் நல்லது. முடியாவிட்டாலும் பரவாயில்லை, மாதவனின் பேர் சொன்னால் போதும். அதுதான் வேதத்தின் சுருக்கம்!'மாதவன் என்ற பெயர் சொல்ல சாஸ்திர ஞானம்  எதுவும் வேண்டாம் ஆர்வம் ஒன்றிருந்தால்போதுமானது.

கடவுள் எங்கு இருக்கிறான் என்னும் கேள்விக்கு பேயாழ்வார் பதில் சொல்கிறார்.’நம் மனத்துள்ளான்” என்கிறார்...’யார் மனத்தில்?’ என்று நம்முள்  கேள்வி எழும் அல்லவா அதற்கு பதிலாக,
.
உளன் கண்டாய் நன்னெஞ்சே ! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்

என்று அருள்கிறார்.

நிஜமாகவே  உள்ளத்தில் இருக்கிறானா அவனை எப்படிகண்டுகொள்வது என நாம் குழம்புவதைக்கண்டு  முயன்று தொழு நெஞ்சே’ என்று பாடுகிறார்!

முயற்சி திருவினையாக்கும் அல்லவா?

(ஆழ்வார் வைபவம்  தொடரும்)

4 comments:

  1. மிக அழகாக எழுதி உள்ளீர்கள்.படிக்க பரவசமாக இருந்தது.
    அமுத கவியான பூதத்தாழ்வாரின் நூறு வெண்பாக்களை கொண்ட இரண்டாம் திருவந்தாதியிலிருந்து சில பாசுரங்களை எடுத்து விளக்குமாறு கேட்டுகொள்ளுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கேபி சார்.இன்று பேயாழ்வார் திருநக்ஷ்த்திரம் என்று அவர்தம் மகிமையுடன் சில வரிகளில் ஒரு பதிவு இட்டிருக்கிறேன் தாங்கள்கூறியதையும் விரைவில் செய்கிறேன்

      Delete
  2. Thanks for the explanation. Continue to en-light us in this path.

    ReplyDelete
  3. தாசன் அடியேன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.