Social Icons

Pages

Sunday, April 27, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம் 12ஜெய்நகர் போலீஸ் ஸ்டேஷன்.

இன்ஸ்பெக்டர் பசவராஜ் தனக்குத்தெரிந்த அரைகுறை தமிழில் பேச ஆரம்பித்தார்.

"சொல்லுப்பா மஞ்சுநாத்.!..எதுக்கு நீ அந்தம்மாவே கொலே செய்தே? "

அவர் எதிரில் முகம் இறுகி நின்று கொண்டிருந்த மஞ்சுநாத் சட்டென," இன்ஸ்பெக்டர்! நான் ராதிகாவைக்கொலை செய்யல... இதோ நின்னிட்டு இருக்கானே சாரங்கன், இவனுக்குத்தான் மனைவி மேல சந்தேகம் அதான் தீர்த்துக்கட்டி இருக்குறான்...ஆனா ஃப்ளாட்டுல அந்த பத்ரிக்கிழவர் ஏதோ என்கூட ராதிகா எப்பவோ வெளீல சுத்தினதா சொன்னதை காரணமா வச்சி என்னை இங்க அழைச்சி இப்படி விசாரிக்கறது சரி இல்ல ஆமா?" என்று கத்தினான்.

"இருக்காது என் தம்பிக்கு ஒரு எறும்புக்கு தீங்கு நினைக்கக்கூட மனசு வராது அவன் இந்தக்கொலையை செய்தான்னு சொல்றது அபாண்டம். உண்மையில் நான் தான் ராதிகாவைப்பத்தி என்புருஷன் ஊர்ல சொன்னதும் இங்கவந்தவ அவளைப்பார்த்ததும் துப்பாக்கில சுட்டுட்டேன்" என்றாள் சுமித்ரா.

"அக்கா! என்ன உளற்றீங்க? உங்களுக்கு துப்பாக்கிய கையில பிடிக்கத்தெரியுமா? எனக்காக பழியைப்போட்டுக்காதீங்க" சாரங்கன் வேதனையுடன் கத்தினான்.

"என்னப்பா செய்வது? உன்னைக்காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல.." அழுதாள் சுமிதரா.

சாரங்கன் இன்ஸ்பெக்டரை தீர்க்கமாய் பார்த்தான் பிறகு," இனியும் நான் உண்மையை மறைக்கவிரும்பல..மஞ்சுநாத் சொன்னது சரிதான் ..நேத்து எதிர்கட்டிடத்தில் ரொம்ப நேரம் அமர்ந்தவன் விடிவதற்கு கொஞ்சநேரம் முன்பாய் வீடுவந்தேன். என் மனைவியின் முகத்தைப்பார்த்தேன்...என்னை ஏமாற்றி வருகிறாள் அவள் என்பதை நினைத்தபோது நெஞ்சு கொதித்தது. நான் சாதுதான் .மென்மையான சுபாவக்காரன் தான் ஆனா நேத்து அவை எல்லாம் காணாமல போய் மிருகமாயிட்டேன்,,ஆத்திரத்தில் அவளை சுட்டுத்தள்ளிட்டு வெளில வந்திட்டேன்... நாந்தான் குற்றவாளி இன்ஸ்பெக்டர் என்னைக்கைது செய்யுங்க.."

"பாத்தீங்களா நான் சொல்லல இன்ஸ்பெக்டர்? தூக்கி அவனை ஜெயில்லபோடுங்க அயோக்கிய ராஸ்கல் சாரங்கன்" மஞ்சுநாத் கிண்டலாய் சிரித்தான்.

பசவராஜ் சட்டென," ஹலோ கொஞ்சம் வாயை மூடுங்க...போலீஸை முட்டாளா நினச்சி நீங்க எல்லாரும் பேசிட்டே போறீங்களே? எங்களுக்குத்தெரியும் உண்மையான குற்றவாளி யாருன்னு...அவங்களே இப்ப இங்க வரபோறாங்க பாருங்க?" என்றார்.

அனைவரும் குழப்பமாய் அவரைப்பார்க்கும்போது அடுத்த சில நிமிஷங்களில் அங்கே வந்த நபரைப்பார்த்ததும் சாரங்கன் அதிர்ச்சியில் கூவிவிட்டான். "மாலதீ?"

அவனை ஆழமாய்பார்த்த மாலதி," ஆமா சாரங்..நாந்தான் உங்க மனைவியைக்கொலை செய்தேன் ..சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கில சுட்டேன் அதைத்தான் உடனே இங்க வந்து இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி சரணடைந்தேன்..உங்க எல்லாரையும் இங்க வரவழைத்து விவரம் சொல்ல விரும்பினேன்.

"சாரங்! நானும் எட்டுமாதங்களாய் என் இல்லத்துக்கட்டிடவேலையை மேற்பார்வை பார்க்க வரும்போதெல்லாம் ராதிகா பெரும்பாலும் மஞ்சுநாத்துடன் சுத்தறதை காண நேர்ந்தது.மேஜிககலை தெரிந்த எனக்கு அவர்கள் அறியாமல் தொடர்ந்து பேசினதை எல்லாம் கேட்கமுடிஞ்சுது. கடைசியில் மஞ்சுநாத்தையும் துறந்து ராதிகா பம்பாய்க்குபோகபோவதை நேத்து ராத்திரி பால்கனிக்கு மழைக்குழாய்மூலமா ஏறிவந்து, மறைவா நின்னுட்டு இருந்த எனக்கு அவள் போனில் பேசியபோது தெரியவந்தது. புறப்பட இருந்த அவளைத்த்டுத்தேன். அட்வைஸ் செய்துபார்த்தேன் . அவள் கேட்கவில்லை. சாரங்கன் மாதிரி அன்பும் பொறுமையும் நிறைந்த மனுஷனைப்புரிஞ்சிக்கத்தெரியாமல் போனவளை கொலை செய்வதைத்தவிர எனக்கு வேறுமுடிவு தெரியவில்லை. " மாலதி முடித்துவிட்டு கண்பனித்தாள்.

அவள் கையில் விலங்கு மாட்டப்பட்டபோது சாரங்கனின் கண்கள் அவள் கண்களை பரிவோடு சந்தித்தன.

அவைகள்,'இந்த ஜனம்த்திலேயே உனக்காக காத்திருப்பேன் மாலதி 'என்று சொல்லாமல் சொல்லின.


முற்றும்.
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Saturday, April 26, 2008

மனம் ஒரு குழந்தை.

அதட்டிப்பார்த்தேன்
அடங்கவில்லை
அன்பாய் சொல்லிப்பார்த்தேன்
அழுது அடம்பிடித்தது
ஆனது ஆகட்டும் என்று
அலட்சியம் செய்தேன்
அமைதியாகிப்போனது
மனக்குழந்தை!
மேலும் படிக்க... "மனம் ஒரு குழந்தை."

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம் 11
"யாரும்மா நீங்க? இந்த சூர்யா ·ப்ளாட்டுல யாரைப்பாக்கணும்?"

தூக்கக்கலக்கத்தில் காம்பவுண்ட் கதவைத் திறந்தபடி வேலய்யா கேட்டான்.

ஆட்டோக்காரருக்கு அவர் மீட்டருக்கு மேல் கேட்ட பணத்தை பர்சிலிருந்து எடுத்துக்கொடுத்துவிட்டு வந்த சுமித்ரா,"என் தம்பி

சாரங்கனைப்பாக்க வந்தேன்ப்பா....சூர்யா ·ப்ளாட்ஸ் நாலாவது ப்ளாக்குல வீடுன்னு அட்ரஸ்ல படிச்ச ஞாபகம். அங்க போகணும்.கொஞ்சம் வழி காட்டறியா? நான் ஊருக்குப்புதுசு" என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்



"சாரங்கன் ஐயா வீடுங்களா? அந்த தம்பி முகத்துல பொழுது விடியறத்துக்கு முன்னே இப்படி முழிச்சா எனக்கு இன்ன்னிப்பொழுது
நல்லாவேபோகும் சந்தேகமே இல்ல...அவரு அக்காவாம்மா நீங்க? அதான் மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க... முகத்துல இப்படி ஒரு

சாந்தக்களை எல்லாருக்கும் வராதும்மா... என் பேரு வேலய்யா...வாட்ச்மேன் நான் தான் இங்க... நீங்க வாங்கம்மா... தம்பி வீட்டுக்கு நான் கொண்டு சேக்கறேன்"

சி ப்ளாக்கின் அந்த நான்காவது மாடிக்குப்போகும் வழியில் வேலய்யா பேசிக்கொண்டே வந்தான்.

"ராத்திரிபூரா எதிரே புதுசா கட்டி முடிச்சிவந்திருக்கிற அணைக்கும் இல்லத்துல கோகுலாஷ்டமி நிகழ்ச்சி நடந்திச்சி..எல்லாரும்தாமதமாதான் இங்க வந்து படுத்தோம். அதான் நானும் நீங்க ஆட்டோல வர்ரது தெரியாம கண்அசந்து தூங்கிட்டேன். பிரசாதம்னு வந்தவங்களுக்கெல்லாம் வயிறு நிறைய சாப்பாடு போட்டுட்டாங்களா நல்லா சாப்பிட்டு படுத்ததுதான் தெரியும்...என் வேலையே ராத்திரி கண்முழிச்சி இங்க காவல் காக்கணும். ஆனா பாருங்க நேத்து அடிச்சப்போட்டாப்டி தூங்கி இருக்கேன்...·ப்ளாட்டை கவனிக்கற லட்சணம் இதுதானான்னு யாரும் கேட்டா இன்னிக்கு நான் வாயத்திறக்க முடியாது.. என்னவோ போங்க...மனுஷங்களுக்கு எப்போ என் நேருதுன்னு யாருக்குத்தெரியுது ? ஆங்..சாரங்கன் தம்பி வீடு வந்தாச்சி..இதாம்மா அவரு ·ப்ளாட்டு..பெல் அடிங்க. கதவ தொறப்பாங்க.."

சுமித்ரா காலிங்பெல்லில் விரல்வைத்து அழுத்தினாள். உள்ளே குருவி மூன்றுமுறை கத்தி ஓய்ந்தது.

"யாரும் திறக்கக்காணோமேப்பா? ஊருக்கு கீருக்கு போயிட்டாங்களா?' என்றாள் சுமித்ரா குழப்பமாய்.

"கதவைத்தட்டிப்பாருங்கம்மா...எல்லாம் இருப்பாங்க...தம்பிய ராத்திரி பூரா எதிர்கட்டிடத்துல நான் பாத்தேனே? "

"அப்படியா?' என்ற சுமித்ரா கதவைத் தட்டினாள். தட்டும்போது கதவு தானாய் உள் நோக்கி நகர்ந்தது.

"அட! கதவு திறந்தே இருக்குதா? எழுந்திட்டாங்களா காலைல நாலுமணிக்கே? ஆச்சரியமா இருக்கே ?" வேலய்யன் வியப்புடன் உள்பக்கம்பார்த்து இருட்டினூட்டே குரலால் கூவியபடி துழாவினான்.

"தம்பீ உங்க அக்கா வந்திருக்காங்க.."

உள்ளிருந்துபதில் இல்லை.

சுமித்ரா சற்று முகம் அரண்டவளாய் ."என்ன ஆச்சி? ராதிகாவும் இல்லையா வீட்ல? " என்றாள்.

வேலைய்யா கையிலிருந்த டார்ச் லைட்டினால் ஹாலுக்குள் ஒளிவட்டமிட்டு சுவரில் தெரிந்த சுவிட்சை விரலால் தட்டினான்.

வேகமாக ஹாலுக்குள் வந்த சுமித்ரா சுற்றும் முற்றும்பார்த்தவள்,"அந்த ஓரமா குப்புறக் கவிழ்ந்து கிடப்பது யாரு?" என்று வீறிட்டபடி அங்கே ஓடினாள்.

அடுத்தகணம்,"ஐயோ' என்று அலறினாள்.

தொடரும்---
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Friday, April 25, 2008

எனக்கு எப்போதும் இரண்டாவது இடம்

கூட்டம் ஆரம்பிக்க இன்னும் சில நிமிஷங்களே இருந்தன உதயன் தலைவரின் அருகே போய் நின்றுகொண்டுவிட்டான். நான் வழக்கம் போல இரண்டாவதாய் சற்று தள்ளிநின்று கொண்டேன். எனக்குப்பின்னே முகிலன், நிலவன் ஏனையோர்

தலைவர் அரசியலில் மிகவும் பிரபலமானவர். இருமுறை மந்திரிபதவி வகித்தவர். இப்போதும் தேர்தல்கூட்டத்திற்குத்தான் நாங்கள் கோவைக்கு வந்திருக்கிறோம். தலைவரைப்பற்றி எதிர்கட்சிகள் அவதூறாய்ப் பேசினாலும் அவர்மீது எனக்கு அபிமானம் உண்டு.

ஆனால் உதயனைப்போல தலைவருக்கு ஐஸ் வைக்க எனக்குத்தெரிவதில்லை. உண்மையான தொண்டன் எதற்கு தன் தலைவருக்கு ஐஸ் வைக்க வேண்டும் ?இயல்பாய் இருந்தால்போதாதா என நினைத்தே நான் பின்னுக்குபோய்விட்டேன் ,உதயன் முன்னால்போய்விட்டான்.அவனுக்குத்தான் தலைவர் முதலிடம் கொடுத்திருக்கிறார் நான் இரண்டாமிடத்தில். உதயன் இல்லையென்றால் மட்டும் என்னை அழைப்பார் முதலில்.

தலைவரின் பின்னே நாங்கள் ஐந்தாறு பேர் எப்போதும் அவர் எங்கு சென்றாலும் உடன் செல்வோம் ..இப்போதும்

உதயன் குனிந்து கைகட்டி தலைவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவரும் அவனுக்கு
சின்னக்குரலில சில ஆணைகள் இட்ட் வண்ணம் இருந்தார். கூட்டத்தில் பலரின் கண்கள் உதயனைப்பொறாமையுடன் பார்த்தன.

என் மனைவி சொல்வாள்."உங்களுக்குப்பிழைக்கத் தெரியலீங்க....இந்த உலகத்துல முகமூடி போட்டுக்கிட்டுத்தான் பழகணும்..நாம் நாமாக இருந்தா யாரும் மதிக்க மாட்டாங்க..நீங்க இருக்கறதோ அரசியல் என்கிற முகமூடிக்கொள்ளைக்காரங்களின் பாசறைல ..இதுல உத்தம்புத்திரனா இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா இப்படியே ரெண்டாமிடத்துல இருக்கவேண்டியதுதான்... வேற வழியே இல்ல"

அரசியலிலோ திரைஉலகிலோ நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று என்னைப்போல நாலுபேராவது இருந்தால் தானே மக்களுக்கு மனதில் அவைகளைப்பற்றி நல்ல எண்ணம் வரும்?

ஆனாலும் இந்தக்கூட்டத்தில் உதயனைவிட எனக்கு முன்னுரிமைதருவார் தலைவர் என எதிர்பார்த்திருந்தேன் கூட்டம் அமைக்கப் படாதபாடுபட்டது நான் என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனாலும் இப்போதும் இரண்டாம் இடம் எனக்கு.

பொறுமை இழந்துவிடுவேன் போலிருக்கிறது.
மேடையில் தலைவரின் நாற்காலிக்குப்பின்னே பவ்யமாய் உதயன் நின்றுகொண்டிருக்க மேடையின் பின்னே பளபளக்கும் சாடின் திரையின் ஓரமாய் அனாதையாய் நான்..

என் தலைகுனிகிறது.

குனியக்குனியக்குட்டுவார்களோ? இருக்கும் இருக்கும். கூட்டம் முடியட்டும் தலைவரிடமேபொங்கிவிடவேண்டும்

நினைத்துக்கொண்டே நான் விழிகளை உயர்த்தவும்' டுமீல் டுமீல 'என இருமூறை துப்பாக்கிகுண்டுவெடிக்கவும் சரியாக இருக்கிறது.

'ஐயோ ஐயோ'

கூட்டம் சிதறிசின்னாபின்னமாகிறது
.
மேடை நிலைகுலைகிறது.

"தலைவரை சுட்டுட்டான் யாரோ ஒருபாவி.பக்கத்துலயே நின்னுட்டு இருந்த உதயனுக்கும் குண்டடிபட்டு, ரண்டுபேரும் ரத்த வெள்ளத்துலகிடக்கிறாங்க.." ஓலமிட்டது ஒருகுரல்.

"யாராவது ரெண்டுபேரு வாங்க... தலைவரைத்தூக்கிப்பாருங்க மூச்சு இருக்கா பாக்கணும்"
தொண்டர் ஒருவர் கூக்குரலிட்டார்.

முகிலன் விரைகிறான் முதலில் .

பின்னாலேயே நானும் செல்கிறேன், மேடை ஓரமாய் ரத்தவெள்ளத்தில் அனாதையாய்கிடக்கும் உதயனின்மீது பார்வை படர்வதை தவிர்க்க இயலாதவனாக.


(வா வ ச ..இரண்டு போட்டிக்காக)
மேலும் படிக்க... "எனக்கு எப்போதும் இரண்டாவது இடம்"

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம்-10.


எதிர் கட்டிடத்தில் கோகுலாஷ்டமி நிகழ்ச்சிகள் முடிந்து விட்டன.

அப்பார்ட்மெண்ட்டில் அனைவரும் தங்களது ஃப்ளாட்டுக்குத் திரும்ப ,சாரங்கன்
மட்டும் அந்த தியான மண்டபத்தில்
ஒரு தூண் ஒரமாக சாய்ந்து உட்கார்ந்திருந்தவன் அந்த ஆன்மிக சொற்பொழிவின் உள்
அர்த்தம் நிறைந்த கதையை மறுபடியும் அசை போட்டான். சட்டென உடம்பு
சிலிர்த்துப்போனது. ஏதோ புரிந்த மாதிரி இருந்தது, அமைதியான அந்த இடத்தில்
காதுக்குள் மீண்டும் மீண்டும் அந்தக்குரல் எதிரொலித்தது.


"இந்த ஜன்மாவும் நீ எனக்குக்கிடைக்காவிட்டால் , அடுத்த ஜன்மாவிலும் அதற்கு
அடுத்த ஜன்மாவிலும் ,........'


எங்கேயோ கேட்ட குரல்! அந்தக்குரலை உணர்ந்தான் சாரங்கன். எத்தனை ஆண்டுகள் ஆனால்
என்ன, மனிதர்களைக்காணாதபோதிலும் அடையாளம் காட்டுவது குரல்தானே?


ஒளி மறையலாம்.
ஒலி விலகுமா? கண்ணுக்குப்புலப்படாத ஒலியைக்காற்றின்வழியே பிடித்து சேமித்தும்
வைத்துவிடுகிறோம்.


சாரங்கனுக்குக்கண் பனிக்க ஆரம்பித்தது.


"மா....மாலதீ, நீயா? அன்று நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இன்று இந்த இளம்
வயதிலேயே சந்நியாசினி போல
ஆகிவிட்டாயா தாயே? உன் மனதை அன்று நான் புரிந்துகொண்டும் , உன்னை மனதார
விரும்பியும்நிராகரித்ததற்கு இன்று எனக்கு ஒரு நம்பிக்கை துரோகி மனைவியாய்
கிடைத்து இருக்கிறாள். மன்னிச்சிடு மாலதி இந்தப்பாவியை?'
வாய்விட்டுப்புலம்பி விட்டான்.குரல்கேட்டு அந்த இல்லத்தின் செயலாளர் ஓடி
வந்தார்.


சாரங்கனைப்பார்த்ததும் "சார்... நீங்க இன்னும் வீட்டுக்குப்போகலயா?
எல்லாரும் போயிட்டாங்களே... இங்கயே தங்கலாம்னாலும் தங்கிக்கலாம்..
உள்ளவாங்க".என்று கனிவோடு சொன்னார். அந்த அன்பும் கனிவும் அந்த இல்லத்தில்
பணிபுரிபவர்களின் சிறப்பு குணங்கள்.


அன்புதான் அங்குதாய்மொழி.


அந்த அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவரைப்பார்த்து சாரங்கன்," "ஐயா! இந்த
இல்லத்தலைவிக்கு சொந்த ஊர் எது அவங்களோட பூர்வாங்கபேர் என்ன ?அவங்க இந்த
ஸ்தாபனம் அமைக்க யார் உதவி செய்தாங்க ?இதெல்லாம்
கொஞ்சம் சொல்லுங்களேன் " என்று கேட்டான்


"சொல்றேன்..." என்று ஆரம்பித்த அந்தபெரியவர் முழுக்கதையை கூறி முடித்தபோது
சொற்பொழிவாற்றிய அந்த்ப்பெண், கருணானந்தமயீ என்ற பெயரில் இப்போது மற்றவர்களால்

அறியப்பட்டாலும் அது டில்லியில் தன்னை ஆழமாய் காதலித்த
மாலதிதான் என்பது சாரங்கனுக்கு உறுதியாகிப்போனது.
அவள் அப்பாவின் சொத்துக்கள் கோர்ட்டில் கேசில் இருப்பதாக முன்பு சொல்லி
இருந்தாள் அவை இபபொழுது கைக்குவரவும், அவள்அப்பாவும் மரணமடையவும் மாலதி
பெங்களூர்வந்து அனாதை இல்லம் ஆரம்பித்திருக்கிறாள், அதுவும் சாரங்கன் குடி
இருந்த பகுதிக்கு எதிரிலேயே.


எதிரேயே எட்டுமாதங்களாய் வந்து போய்க்கொண்டிருந்தவளை இத்தனை நாள்
பார்க்காமலேயே இருந்திருக்கிறேனா?


"ஐயா நான் அவங்களைஉடனே பார்த்துப்பேசணும் உதவ இயலுமா?" சாரங்கன் அவசர அவசரமாய் கேட்டான்.


'வாருங்கள்! தன்னை எந்த நேரத்தில் யார் பார்க்க வந்தாலும் தலைவி
மறுக்கமாட்டாங்க."..அந்தப்பெரியவர் சாரங்கனை
மாலதியின் அறைக்கு அழைத்து சென்றார்.

ஆனால் அங்கு மாலதி இல்லை


*தொடரும்*
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Monday, April 21, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம்.9.
"ஹலோ மஞ்சுநாத்?"


ஜெய்நகர் போவதாக சாரங்கனிடம் சொல்லிய ராதிகா தெருமுனையிலிருந்த பார்க்கில்
போய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டாள். சுற்றிலும் பார்வையை நுழைத்தபடி செல்போனில் மஞ்சுநாத்தை அழைத்தாள்


ஏற்கனவே ஆபீசில்தான் வசமாய்மாட்டிக்கொண்டுவிட்ட கவலையில் வீட்டில்
முடங்கிக்கிடந்த மஞ்சுநாத்
ராதிகாவின் அழைப்பை வழக்கம்போல் ஆரவ்மாய் ஏற்காமல் சுரத்தில்லாமல்
" ஹலோ ?"என்றான்.


" ஹேய் மஞ்சு, வேர் ஆர் யூ யா? இங்க, சாரங்கனுக்கு சந்தேகம்
வந்திடிச்சி..இன்னிக்கு ஆபிசிலிருந்து வந்ததுமுதல் கேள்வியா கேட்டு தாக்கறாரு.
நீ வாங்கித்தந்த வைரநெக்லசை சந்தேகமா கையில் வாங்கிப்பாத்தாரு நான்
கவரிங்குனு அடிச்சி சொல்லிட்டேன்.ஆனா முகம் சரியாஇல்ல... எனக்குபயமா
இருக்கு..சாதுமிரண்டா காடு கொள்ளாதும்பாங்க இல்ல?"


"உன் புருஷன் முகம் சரியா இல்லாம போகக் காரணம் ஆபிசில் என் கோல்மால்
தெரிஞ்சுபோனதுலதான்
நீ கவலைப்படாதே டியர்.. அப்றோம் ஒருவிஷயம்...."


"என்ன சொல்லு?"


"ராது,அந்த வைரநெக்லசை திருப்பித்தந்துடேன்?"


"ஐயோ!எதுக்குதரணும்?ஆசையா நான் கேட்டேன்னு நீ வாங்கித்தந்தியே மறந்திட்டியா?"


"ஆபீசில் நான்பணத்தை திரும்பக்கட்டணும் ராதிகா...கைல பைசா காசு இல்ல..நெக்லசை
வித்து முதல்ல கொஞ்சம் கட்டிடலாம்னு பாக்றேன் இல்லாட்டி வேலை போய்டும்"


"ஹேய் போடா..உனக்கும் எனக்கும் இன்னிக்கு நேத்திக்குப் பழக்கமா? என்பள்ளிக்கூட
நாளில் நான் சென்னைக்கு எஸ்கர்ஷன் போனபோது அங்க பீச்சில் என்னை நீ
பாத்துகண்ணடிச்சே .அப்றோம் என்னையே ஃபாலோ செய்து என் ஊருக்கும் வந்தே..அங்க
தோப்புல சந்திச்சிட்டோ ம்.போன்ல லெட்டர்ல நிறைய நாம பேசிட்டு இருந்தோம்..நடுல
நாந்தான் வேலைவிஷய்மா பம்பாய் போனேன் பிசியாயிட்டேன்..நமக்குள்ள தொடர்பே
இல்லாம் போச்சி..ஆனா கடைசில உன்னை எதிர்பாராமல் இதே ஊர்ல சந்திச்சதும்
குஷியாபோச்சி. உனக்காக நான் எத்தனைதடவை என்னை இழந்திருப்பேன்? நீ எனக்காக் அந்த
வைரநெக்லசைஇழக்கக் கூடாதாக்கும்?'


'ராதிகா! நான் சிக்கல்ல மாட்டிட்டு இருக்கேன். பணம் கட்டலேன்னா
ஜெயிலுக்குபோகணும் .
அதான் கேக்கறேன் இதபாரு,நாளைக்கு சாரங்கன் ஆபீஸ்புறப்பட்டுப் போனதும் நான் வீடு
வரேன் நெக்லசை என்கிட்ட கொடு ப்ளீஸ்"


"......................"


...அடப்பாவி ஒருத்தன் சிக்கல்ல மாட்டிட்டு கஷ்டப்படறேன்னு சொல்றேன் நீ நெக்லசை
தர மறுக்கிறே?
பாதகி! காரியவாதி! நீ சாரங்கனை ஏமாத்தலாம் என்னை ஏமாத்த நினச்சே..மகளே
உன்னைநான் தொலைச்சிக்கட்டிடுவேன் ஆமா.."


மஞ்சுநாத் இணைப்பை துண்டித்ததும் ராதிகா அரண்டுபோனாள்.

மஞ்சுநாத் கையில் இனி காசு கிடையாது போலிருக்கிறதே ?கொடுத்த நகையையே
திருப்பிக்
கேட்கிறானே?
இவனைநம்பி இனி வாழமுடியாது.. வேற ஆளைப்பார்க்க வேண்டியதுதான்.. பேசாம
வீட்டுக்குப்போயி
துணிமணிகளைமூட்டைகட்டிட்டு விடியறதுக்குள்ள எங்காவது ஓடிப்போயிடணும்.. வேற
சுகவாழ்க்கைதேடிக்கணும்..புருஷனும் உஷாராயிட்டான் ..கள்ளக்காதலனும்
காசிபணமில்லாத நிலைல இருக்கான்...இனி இங்க நமக்கு
சரிப்படாது..'


குழப்பமாய் தன் அபார்ட்மெண்ட் வந்தவளை கீழ் ஃப்ளாட்டில்குடி இருப்பவர்களின்
குழந்தை அழைத்தது.


"ஆன் ட்டீ?"


ராதிகா லிஃப்டில் ஏற இருந்தவள் திரும்பினாள்.


'ஹை...வர்ஷாகுட்டியா? என்ன தனியா இருட்டுல நிக்கற கண்ணு?"


"எதிர ஒரு பெரிய பில்டிங் வந்திருக்கே அதுல இன்னிக்கு சிறப்பு
நிகழ்ச்சியாம்..கோகுலாஷ்டமின்னு ராத்திரிபூரா பஜனை பாட்டு டான்ஸ் எல்லாம்
இருக்கு ....நம்ம ஃப்ளாட்ல எல்லாரும் போயிட்டாங்க ..சாரங் அங்கிளும் அங்கதான்
இருகாரு,நான் என்னோட டான்சுக்கு சலங்கை எடுத்துட்டுப்போக மறந்திட்டேன் அதான்
திரும்ப வீடுவந்தேன்... இப்போ போயிட்டே இருக்கேன்.நீங்களும் வரீங்களா ஆண்ட்டீ? " என்றது அந்த ஆறுவயது சிறுமி.


"நான் நானா? இல்லம்மா வேலை வீட்ல நிறைய இருக்கு ..இன்னும் டின்னரே செய்யல ...
நீ போய்ட்டுவா..."
என்றாள் ராதிகா..
'ஓகே ஆண்ட்டி"


வீட்டிற்குள் நுழைந்து பால்கனிஓரமாய் நின்று வெளியே பார்த்தாள்.


எதிர்கட்டிடத்திலிருந்து மைக்கில் ஒரு பெண்ணின் குரலில் தீர்க்கமான சொற்பொழிவு
நடந்துகொண்டிருந்தது காதில் விழ ஆரம்பித்தது.
'தத்வ விவேகா விஷ்ணுபுராணாத் என்று விஷ்ணுபுராணத்தை மிகவும்
கொண்டாடிப்பேசுகிறார் ஆதிசங்கரர். எங்கும் வியாபித்திருக்கிற பரமாத்மா தான்
ஸ்ரீ கிருஷ்ணபகவான். அவனிடம் ஆத்மார்த்த பக்தி கொண்டள் ருக்மிணி. அவள்
கிருஷ்ணனுக்கு ஏழு சுலோகங்களை எழுதி அனுப்பினாள்.அதில் ஏழாவது சுலோகமாக,'இந்த
ஜன்மத்தில் நீ எனக்குக்கிடைக்காவிட்டாலும் அடுத்த ஜன்மத்திலும் அதற்கு
அடுத்தடுத்த ஜன்மத்திலும் தொடரும் நூறு ஜன்மங்களிலும் உன்னையே தொடர்ந்து அடைய
முயற்சி செய்வேன்' என்று பொருள்பட எழுதினாள். நூறு ஜனமம் என்று ருக்மிணி கணக்கு
சொல்வது எண்ணிக்கையைக்குறிக்க அல்ல. ஆயிரம் ஆயிரம் என்று வேதம் சொல்வதெல்லாம்
வெறும் ஆயிரம் இல்லை. அனேகம் என்ற பொருளில் உபயோகப்படுகிறது.'சதம்'என்பது
எண்ணிக்கையைக் குறிக்க வந்ததன்று. அதேபோலத்தான் சஹஸ்ரம் என்பதும். உலகையே
அளந்தவனை எண்ணிக்கையில் அடக்கிவிட இயலுமா?சஹஸ்ரநாமங்கள் இருப்பினும் 'கோவிந்தா'
என்று பக்தன் குரல்கேட்டதும் ஓடிவருபவன் க்ருஷ்ணன். அதர்மம்
தலைதூக்கும்போதெல்லாம் தன் அடியார்களுக்கு இன்னல் வரும்போதெல்லாம் அவர்களை
ரட்சிக்க அவதாரம் எடுப்பவனகடவுள்.


*பரித்ராணாய சாதூனாம் வினாசாய துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே!
.*


ராதிகா சட்டென தன் செவிகளை கரங்களால் மூடிக்கொண்டாள்." ஸ்டுபிடா இருக்கு
இந்தப்பேச்செல்லாம்!ஹ்ம்ம்...இந்த மாதிரி பழைய கதை பேசியே மக்களை உருப்படாம
அடிக்கிற கூட்டம் இது... ஆன்மீகமாம் சொற்பொழிவாம்! அழகா ஒரு டிஸ்கோ டான்ஸ்
வச்சிருக்கலாம்.'

முணுமுணுத்தபடி அடுத்து என்ன செய்யலாம் எனதிட்டமிட்டவள் யோசித்துக்குழம்பி ஒரு
முடிவிற்கு வந்தபோது மணி நடுநிசியைய்த்தாண்டி விட்டிருந்தது. பம்பாயில்
கொஞ்சநாள் இருந்தபோது பழகிய ஒரு ஹிந்திக்கார இளைஞனின் நினைவுவந்தது. பால்கனி
சுவரில் சாய்ந்துகொண்டு,அவனுக்கு போன் செய்தாள்.

"ரத்தன் சிங்! நான் பம்பாய் வரேன்....உன்கூட தங்கப்போறேன் ..சரியா?
ஓ..லவ்லிபாய்! சோ ஸ்வீட் ஆஃப்யூ! ஆமா ...கல்யாண வாழ்க்கைபோர்
அடிக்குது...அதான் இதுக்கு பைபை சொல்லிட்டு உன்னைப்பாக்க வரேன்.. இதோகிளம்பிட்டே
இருக்கேன் ரத்தன்சிங்..பம்பாய் வந்து போன் செய்றேன்.."

போனை வைத்துவிட்டு பால்கனியிலிருந்து அறைக்கு வந்தாள்.

எதிர் கட்டிடத்திலிருந்து யாரோ
'அன்பர்கள் பிரசாதம் பெற்றுக்கொண்டு செல்லவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்'
ஸ்பீக்கரில் யாரோ உரக்கக்கேட்டுக்கொண்டார்.


"ஓ நிகழ்ச்சிகள் முடிஞ்சிடிச்சா?அப்போ எல்லாரும்
ஃப்ளாட்டுக்குத்திரும்பிடுவாங்க...அதுக்கு முன்னாடி ஜூட் விடணுமே?'


ராதிகா சூட்கேசில் வேண்டியதை அடைத்துக்கொண்டு அறையினின்றும் ஹாலிற்குவந்தாள்.
வாசல்கதவைத்திறக்க இருந்தவளை சட்டென தடுத்து நிறுத்தியது ஒரு கரம்.

ராதிகா வெளிறிபோன முகத்துடன் நிமிர்ந்தாள்.

உடல்முழுவதும் கறுப்புத்துணி போர்த்திக்கொண்டிருந்த அந்த உருவம், ராதிகாவை
முட்டித்தள்ளி சுவர் மூலையில் கொண்டு நிறுத்தியது.

'ஏய் யார் நீ.? யாரு? நான் போலீசைக் கூ...கூப்பிடுவே....." முடிப்பதற்குள் அவள்
செல்போனை பிடுங்கிக்கொண்ட அந்த உருவம் , தன் கையிலிருந்த ரிவால்வரை அவளை நோக்கி நீட்டியது.
ராதிகா பயத்தில் கண்கள் நிலைகுத்த அப்படியே நின்றாள்.

தொடரும்...
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Tuesday, April 15, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.

காலமெல்லாம் காத்திருப்பேன்
அத்தியாயம் 8

"சுமித்ரா! சுமித்ரா!"

எதிர்வீட்டு பாக்யா அலறிக்கொண்டு ஓடிவந்தாள்

கோகுலாஷ்டமிக்காக பூஜை அறையை அலங்கரித்துக்கொண்டிருந்த சுமித்ரா நிமிர்ந்தாள்.

"வா பாக்யா!ரொம்ப பதட்டமாய் தெரியறியே, உக்கார்ந்து நிதானமா சொல்லேன்?' என்றாள்
மென்மையானகுரலில்.

சாரங்கனைப்போல சுமித்ராவிற்கும் அதிர்ந்து பேசிப்பழக்கமில்லை.

"சு சுமித்ரா...உன் பொறுமைக்கு சோதனை வந்திடிச்சி...ஆமா..உன் புருஷனை..உன் புருஷனை.."

"என்னாச்சு பாக்யா? என்புருஷனுக்கு என்னாச்சு?" சுமித்ரா பதட்டமாய் கேட்டாள்.

"உன் புருஷனை போலீஸ் பிடிச்சிட்டுப்போயிட்டிச்சி.."

"என்ன, போலீசா?"

"ஆமா..மேலத்தெருவுல இருக்கற உங்க சம்மந்தி-அதான் சாரங்கன்மாமனாரை உன் புருஷன்
அரிவாளில் வெட்டிப்போட்டுட்டானாம்"


"ஐயோ"

'பேச்சுவார்த்தையில ஆரம்பிச்சி கடைசில அது இப்படி ஆயிடிச்சின்னு பாத்தவங்க சொன்னாங்க.. "

சுமித்ரா தலையில் அடித்துக்கொண்டபடி போலீஸ் ஸ்டேஷனுக்குப்போனாள்.

லாக்கப்பில் இருந்த சீனீவாசன் இவளைக்கண்டதும் கதறி அழ ஆரம்பித்தான்.

"சுமித்ரா! என்னை மன்னிச்சிடு. நான் உனக்கும் உன் தம்பிக்கும் துரோகம் செஞ்சிட்டேன்...அந்தப்
பொண்ணு ராதிகா நல்ல பொண்ணு இல்ல. சினிமா ஆசைல ஒருவருஷம் முன்னாடியாரோடயோ பம்பாய் போயி சுத்திட்டு வீடுவந்தவ. அதெல்லாம் தெரிஞ்சும் அவன் அப்பன் எனக்குபணம் தர்ரதா சொன்னதால உங்க ரண்டுபேருகிட்டயும் அதை மறைச்சி சாரங்கனுக்கு ராதிகாவை கட்டிவச்சேன். இப்போ எனக்குப் பணம் வேணும்னு அவன்கிட்ட கேக்கப்போயி அவன் இல்லைன்னதும் கோபத்துல கத்தினேன்,"ஏண்டா..உன் பொண்ணு கதை தெரிஞ்சா எவன் கட்டிக்குவான்னு நான் பரிதாப்பட்டு சாரங்கனுக்கு கட்டிவச்சேன்,,அதுக்குக்கூலியா அப்பப்போ பணம் கேக்கறேன் முதல்ல ஒத்துக்கிட்டு இப்போ முடியாதுன்னு கைவிரிக்கிறியே மக கழுத்துல தாலி ஏறி அவ பெங்களூர்ல சந்தோஷமா குடித்தனம் நடத்தற திமிரா உனக்கு?'ன்னு கேட்டேன்.

அதுக்கு அவன்'ராதிகா சாரங்கனோட சந்தோஷமா இருக்காளோ இல்ல
தன் போக்குல வழக்கம்போல எவன்கூட சுத்தறாளோ எனக்குக்கவலை இல்ல.என் பொறுப்பு
விட்டது...ஏதோ ஊர்வாய அடைக்க ஒருகல்யாணம் செய்து அனுப்பிட்டேன் அவ்வளோதான். என் காரியம் ஆச்சி. உனக்கு பைசாகாசுதரமாட்டேன்னான்.கெஞ்சினேன் கதறினேன் ..கடைசில....கடைசில.."

சொல்லிவிட்டு தலைகுனிந்தவனை எரிச்சலுடன் பார்த்தாள் சுமித்ரா.

:ஐயோ ..என் வாழ்கையை நாசம் செஞ்சது போதாதுன்னு என் அன்புத்தம்பிவாழ்க்கையையும் நாசம்
பண்ணிட்டியே பாவி மனுஷா ?சாரங்கன் வெகுளி ,அவனை ஏமாத்தறது சுலபம் ..அந்த ராதிகாமட்டும் என் தம்பிகூட ஒழுங்கா வாழாமல் இருப்பதா எனக்கு தெரியவந்திச்சி, அவளை என்கையாலயே திர்த்துக்கட்டிட்டு
நானும் உன்கூட ஜெயிலுக்கு வரேன் இப்பவே நேர்ல போய் பார்த்துடறேன்.."

சுமித்ரா ஆற்றாமையாய் தலையில் அடித்துக்கொண்டு இருட்டத் தொடங்கிய அந்தநேரத்தில் பஸ்ஸ்டாண்டிற்கு வந்தாள்.

தொடரும்.....
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Saturday, April 12, 2008

சித்திரைப்பெண்ணே! சித்திரைப்பெண்ணே!

மெல்லசிவந்த மாங்கொழுந்தும்
மண்ணில் சிதறிக்கிடக்கும் வேம்பூவும்
கொள்ளை அழகாய் நறுமலர்கள்பூக்கக்
கொண்டாடிவரும் வசந்தமுடன்
மஞ்சள்பலாவும் பலஇன் கனியும்
மக்கள் மகிழத் திருவிழாக்களும்
பஞ்சமின்றி பாரில் தந்திடவே
பாவை சித்திரை வருகின்றாள்

உண்ணும் உணவிலும் வாழ்க்கையின்
உயர்ந்த தத்துவம் பல உண்டு
எண்ணிப் பார்க்கையிலே அதுவும்
எளிதில் நமக்கு புலனாகும்
இனிக்கும் வாழ்க்கை என்றைக்கும்
இசைந்தே கசப்பையும் ஏற்றுவிடும்
விரும்பி கசப்பை உண்ணுவதை
வேப்பம்பூபச்சடி உணர்த்திவிடும்


ஊழிக்கால ஓவியத்தேரை
ஒவ்வொருவருடமும் ஓட்டிவரும்
வாழி சித்திரை !வாழிய நீ!
வாழ்வில் வளமே தங்கும் இனி!
மேலும் படிக்க... "சித்திரைப்பெண்ணே! சித்திரைப்பெண்ணே!"

Friday, April 11, 2008

சித்திரையே வருவாய்!

வசந்தமதை வரவழைத்து
வாசலிலே நிற்கவைத்து
வாசனை மலர்கள் அளித்து
வாழ்த்துகூற வந்தனையோ?


விழியின் மணியேபோல்
விரித்தமலர் மணமேபோல்
உரித்துவைத்த முக்கனிச் சுவையேபோல்
உவந்த தமிழ் சொல்லே போல்
சிரித்துவரும் மழலைபோல்
சித்திரையே நீ வந்தாயோ!

ஓய்வின்றி உழைப்பவரை
உலகில் வளர்ப்பாய்!
தாயாகி அன்புமழை
தரணிக்குத் தருவாய்!
தமிழ்நாட்டோ டு வையகமும்
தழைத்திடச் செய்வாய்!
மேலும் படிக்க... "சித்திரையே வருவாய்!"

Thursday, April 10, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்!

காலமெல்லாம் காத்திருப்பேன்
அத்தியாயம் 7




சந்தேக நூலிழை கயிறாகமுன்பு அதை அறுத்து எறிய நினைத்த சாரங்கன், அன்று வீடுவந்ததும் ராதிகாவை அழைத்தான்.

"என்ன இது புதுசா இருக்கு குரலை உயர்த்தி என் பேரைச்சொல்லிக்கூப்பிடறீங்க?" வியந்தாள் ராதிகா.

'காரணம் இருக்கு ராதிகா..ஆமா அன்னிக்கு எனக்காக வாங்கினதாய் நீ காண்பித்த அந்த பித்தளைபட்டர்ப்ளை வச்ச ஷூ எங்க?
ஷூ ராக்கிலயும் காணோமே?' என்று சாரங்கன் கேட்டான்.

"அ அது அதுவந்து... அந்த மாடல் உங்க அழகுக்கு எடுபடாதுன்னு கடைல கொண்டுபோய் கொடுத்து அதுக்கு பதிலா எனக்கு ஒரு சப்பல் வாங்கிட்டேன்."

நிஜம்தானே இது ராதிகா?

பின்ன நா நான் என்ன திட்டம்போட்டு பொய் சொல்றேனா ? சரி அபத்தமாய் பேசறதைவிட்டு இந்த காஃபியைக்குடிங்க நான் ஜெய்நகர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் போகணும்.."

எதுக்கு போகணும்?

என்ன கேள்வி இது? வெஜிடபிள் வாங்கிவரத்தான்..


என்கூட பைக்குல வாயேன் நான் அழைச்சிட்டுப்போறேன்

போதும் உங்க கூட பைக்கில வந்தா பின்னாடி வரும் சைக்கிள் ஓவர்டேக் செய்யுது நம்ம வண்டியை அவ்வளோ மெதுவா ஓட்டறீங்க!"

ஸ்லோ அண் ட் ஸ்டெடி நான்

எனக்கு ஸ்பீட் தான் பிடிக்கும் சரி நான் ஆட்டோ ல போயிட்டுவரேன்

அமர்க்களமாய் அலங்கரித்துக்கொண்டு அவள்புறப்படவும் சாரங்கன் அழைத்தான்.

ராதிகா?


அடட்டா எனாச்சு இன்னிக்கு உங்களுக்கு ?சும்மா கூப்பிட்டறீங்க ஏதேதோ கேக்கறீங்க ?

ராதிகா! இருட்டப்போற நேரத்துல உன் கழுத்துல எதுக்கு இப்படி ஒரு டால் அடிக்கும் நெக்லஸ்? ஆமா அது என்ன வைரமா இப்படிமின்னுகிறதே?

வைரமா? அதெல்லாம் சாத்தியமா நமக்கு? எல்லாம் போலிகற்கள்தான்..நகையும் தங்கமேஇல்ல...கவரிங்தான்"

அப்படியா கைலகொடு நான் பார்க்கிறேன்

ஹலோ எதுக்கு உங்களுக்கு பெண்கள் நகையெல்லாம்?


கொடுக்கறியா இல்லையா?

சாரங்கனின் உஷ்ணக்குரலில் சற்றே அதிர்ந்த ராதிகா நெக்லசைக் கழற்றினாள்

கோபமாய் "இந்தாங்க" என்றாள்

நெக்லசைவாங்கியதுமே அது கனத்தது. கற்களின் மிதமான ஒளி வைரம் என்பதை உறுதிப்படுத்தியது.

போலிகள்தான் அதிகமாய் மின்னும்..அசலுக்குத்தான் கனம் அதிகம். தங்கசங்கிலியில் பதிக்கப்பட்ட வைரநெக்லஸ்தான் அது என்பதை உணர்ந்த சாரங்கன் அதை திருப்பி அவளிடமே கொடுக்கவும் வாங்கி அணிந்தவள் விருட்டென வெளியேறினாள்.

அவள் நகர்ந்ததும் வாசல் கதவைத் தாளிட்டான் சாரங்கன்.

அறைக்குள் நுழைந்து ராதிகாவின் பீரோவைத்திறந்தான். குடித்தனம் வந்ததும் அவள் ஆசைப்பட்டாளே என வாங்கித்தந்த புது பீரோ.அவனுடையதற்கென தனி வார்ட்ரோப் இருக்கிறது .உடைகளில் கூட கணவனோடு சேர்ந்து இருக்க விரும்பாத பெண் தனக்கு மனைவியாக வாய்த்ததை எண்ணி ஒருக்கணம் வருந்தினான்.

மற்றவர் பொருட்களை -அது மனைவியாக இருந்தாலும்- தொடவிரும்பாத சாரங்கன் ,கண்களில் எரிச்சலோடு பீரோவைக்குடைந்தான்.

சேலைகள் சுடிதார்கள் ஜீன்ஸ்டாப்ஸ் உள்ளாடைகள் என்று அடைத்துவைத்திருந்தாள். அடுக்கி ஒழுங்காக எதுவுமேஇல்லை.
ராதிகாவின் மனதைப்போல அதுவும் சிதறி காணப்பட்டது. அவைகளில் எதையோ தேடினான்.

சில்நிமிடங்களில் கண்டுபிடித்தான்.

அது ஒரு வெல்வெட்நகைப்பெட்டி.

அதைத்திறந்தான்.

பெட்டியில் நகை இல்லை ஆனால் ஒரு சீட்டு இருந்தது.

எடுத்தான் பிரித்தான் படித்தான்.

'வித் லவ் டு மை ஸ்வீட்கார்ட் ஃப்ரம் மஞ்சு 'என்று எழுதி இருந்தது.

அதிலேயே நெக்லஸ்வாங்கிய ரசீதும் இருந்தது.. க்ருஷ்ணையாசெட்டி நகைக்கடையில் வைரநெக்லஸ் ஒன்று நான்குலட்சத்திற்கு வாங்கின ரசீது.

"மஞ்சுநாத்!துரோகி!' சாரங்கனின் வாய் கோபமாய் கத்தியது.

ஷூவில் ஏற்பட்டசந்தேகம் காரணமாய் நெக்லஸ் விஷயத்தை சோதனை செய்ய உண்மைதெரியவந்தது.

கம்பெனியில் சுருட்டிய பணத்தில் தன் மனைவிக்கு-அவனுடைய காதலிக்கு- மஞ்சுநாத் நெக்லஸ்வாங்கிக்கொடுத்ததை தன் கண்களால்
பார்க்க நேரிட்டதை தாங்க இயலாதவனாய் நின்றான்.

பழைய்படிபீரோவைபூட்டிவிட்டு ஹாலிற்குள் நுழைந்தான்.

படபடப்பாய்வந்தது .

தண்ணீர்குடிக்க சமையலறைக்குப் போகும்பொது காலிங்பெல் அடிக்கப்படவும் தயங்கிப்பின் திறந்தான்.

வாசலில் பத்ரி நின்றுகொண்டிருந்தார்.

இவனைக் கண்டதும்,
"சாரங்கா! என்னப்பா முகமெல்லம் சிவந்திருக்கு ?அன்றலர்ந்ததாமரை போல எப்போவுமே இருக்குமே உன்முகம்? உடம்புசரீல்லையாப்பா? நான் உன்னை எதிர்கட்டிடத்திறப்புவிழான்னு இன்னிக்கு நடக்க இருக்கிற ஆன்மிக சொற்பொழிவுக்கு அழைத்துப் போக வந்தேன்...இன்னிக்குகோகுலாஷ்டமிதினம் தெரியுமா உனக்கு?" என்றார்.

'கோகுலாஷ்டமியா இன்றைக்கு? உலகை ரட்சிக்க துஷ்டர்களை அழிக்கஅவதாரம் செய்த க்ருஷ்ணின் ஜன்ம தினமா? இதைக்கொண்டாடக்கூட நேரமில்லாம்ல் ஊர் சுற்றுகிறாள் ராதிகா!

நரகாசுரன் என்கிற அசுரனை அழிக்க நாராயணன் அவதாரம்செய்தார். ராவணனை அழிக்க ராமாவதாரம்நடந்தது.
துஷ்டர்களை அழிக்க கடவுள்களேஅவதாரம் எடுக்கிறார்கள்.

நான் ராமனாக இருக்கிறேன் ஆனால் என் மனைவி சீதையாக இல்லையே..

நம்பிய எனக்கு அவள் துரோகம் செய்கிறாள், அப்படியானால் நானும் அவதாரபுருஷனின் செயலை செய்தால் என்ன?'

என்னப்பா யோசிக்கறே?" என்று பத்ரிகேட்கவும் சுதாரித்த சாரங்கன்

"நான் வரேன் சார் உங்ககூட" என்றான்.

சாரங்கன் ஒருமுடிவோடு அவருடன் புறப்பட்டான்.

தொடரும்..
.
.
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்!"

மூலிகையே! மூலிகையே!

முன்குறிப்பு..
மறக்காமல்பின்குறிப்பு பார்க்க:)

மேனகா ஆறுமாதம் முன்புவரை மேனகா கார்த்திகேயனாக இருந்தாள் இப்போது மூலிகைமாமணிமேனகாகார்த்திக் என்றாகிவிட்டாள்.


இந்த ஆறுமாதத்தில் நடந்தது என்னன்னு கேக்கறீங்களா?

ரொம்ப டார்டாய்ஸ் வத்தி சுத்தவேண்டாம்னாலும் நாலுமாதம்முன்பு என்பதால் கொஞ்சம்பின்னோக்கித்தான் போகணும்.

அன்னிக்கு ஹொசூர்-க்ருஷ்ணகிரி நெடுஞ்சாலைல நானும் மேனகாவும் போய்க்கொண்டிருந்த கார் ,
ஹோசுரைத் தாண்டியதுமே எல்லைதாண்டிய வருத்தமோ என்னவோ சட்டுனு நின்னுபோச்சி.

"என்னாச்சு ட் ரைவர்? நாங்க கிருஷ்ணகிரி மலைக்கோயில் பாக்கணும்னுதான்
காலைலயேபெங்களூரைவிட்டுப்புறப்பட்டோ ம் மணி 7ஆகுது...8மணிக்குள்ல போயிடமுடியுமா?'

"தெரில்லம்மா என் கார் ஆஞ்சநேயர் மாதிரி அதன் பலம் அதுக்கே தெரியாது நாமதான்
நினைவுபடுத்தணும்...இருங்க பாக்றேன்"

என்று கார்கீழே குனிந்தவர் நீங்க அப்படி "ஓரமாமர நிழல்ல உக்காருங்க இல்ல காலாற நடந்திட்டுவாங்களேன்...நான் ரிப்பேர் ஆனதும் செல்போன்ல கூப்பிடறேன்" என்றார்

நேரம் ஆனதே தவிர கார் ரிப்பேர் சரிஆகல...

஢ நாங்க பக்கத்துல ஏதோ பாதை தெரியவும் அதில் நடக்க ஆரம்பித்தோம்..பச்சைபச்சைநிறமேன்னு பாடலாம் போல அவ்ளோ பச்சைசுற்றிலும். அதைரசித்தபடி நடந்து வந்ததில் எங்கோவழிதவறிகாட்டுக்குள்புகுந்து விட்டதை உணர்ந்தோம்.

"பயமாருக்கே மனித சஞ்சாரமே இல்லையேடி?" நான் இருமுறை மரியாதையாய்(திருதிரு) முழித்தேன்.

"காட்டுவழிபோறபுள்ள கவலப்படாத.. "பாட ஆரம்பித்தாள் மேனகா.

மேனகா=துணிச்சல்.

ஆனாலும் இத்தனை துணிச்சல் ஆகுமா?


"வீரப்பன் வசிச்ச காடுமாதிரி இருக்கு...கரடி எதும் வரபோகுது ...திரும்பிப் போயிடலாமே...கார் ரிப்பேர் ஆயிடிச்சான்னு ட் ரைவர்கிட்ட கேக்கலாம்னு பார்த்தா செல்போன் ஒர்க் ஆகல...அவரும் போன் செய்து இந்தக்காட்டுல லைன் கிடச்சிருக்காதுபோல.."

"லைன்(lion)னதும் ஏதோ சிங்கம் உறுமறாப்ல இல்ல? கர்ஜனை கேக்குதா உனக்கு?"

"ஐயோ சி சி சிங்கமா? நாய் வள்ளுன்னாலே நடுங்கிபோறவளிடம் சிங்க கர்ஜனை கேட்குதான்னு கேக்கறியே மேனகா? உனக்கு இப்போகூட பயமேவராதா?"

"என்ன பயம்? கைப் பையில தான் ஆயுதம் இருக்கே, உன் உலகப் புகழ்பெற்ற மைபா?"

சுமதியின் கிண்டலுக்கு வேறு இடமாயிருந்தால் அவளுக்குக்கிடைக்கவேண்டிய தண்டனையே வித்தியாசமாய் இருந்திருக்கும் இங்கே
காட்டில் இப்போ அவளை நம்பி இருப்பதால் மௌனமாய் நின்றேன்.

"திரும்பிப் போயிடலாம் வா சுமதி" என நான் கெஞ்ச ஒருவழியாய் அவள் சம்மதிக்க ..


அப்போது

சிம்மகர்ஜனை அருகில் கேட்டுவிட்டது.பயத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது. மரணபயம்.!

அன்புத்தம்பிவிழியன் கல்யாணத்துக்குப்போகும் முன்பே என்னை சிங்கம் விழுங்கிவிடுமா? ஐயோ என் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலே போய்விடுமா?

மறுபடி சிம்மகர்ஜனை..

ஐயோ சிங்கம் அருகில் மிக அருகில்...
நான் "ஆதீமூலமே அரங்கநாதானே காப்பத்து"கடைசிபிரார்த்தனைகளோடு கண்களைமூடிவிட்டேன்

மெல்லக் கண்திறந்தபோது........

எதிரில் காவிஉடையுடன் அறுபதுவயது மதிக்கத்தக்க பெரியவர் கொள்ளிடத்தில் சலவை செய்த வேட்டியின்வெள்ளை
நிறத்தில்தேன்கூடுபோல்தாடி வைத்துக்கொண்டு,சந்நியாசி மாதிரி தெரிந்தார்.
..அவர் கையில் கொடிகளும்பச்சைச்செடிகளும் சில இருந்தன எனலமா அல்லது அவைகள் அவர்மேல் படர்ந்திருந்தன எனலாமா என யோசிக்கையில்,

"ஷைலஜா..இவர்தான் சிங்கம்போக கர்ஜனை செய்தபடிநடந்துவந்தாராம்...காட்டுல விலங்குகள் வருமாம அதுக்குபாதுகாப்புக்கு இப்படி செய்வாராம் சொன்னாரே உன் காதுல விழலயா?" என மேனகா கேட்டாள்.

"எனக்குத்தான் கண்ணைமூடினதும் காதும் பயத்தில் அடைத்துக்கொண்டுவிட்டதே யார் என்ன பேசினார்களோ எதுவும் காதில் விழவில்லை
அப்போது.."
என்று சொல்ல வந்து சொல்லாமலே தயங்கினேன்.


"குழந்தைகளே!" என்றார்.

நாங்கள் பின்னாடிதிரும்பிப்பார்த்தோம் .

எந்தக் குழந்தையையும் காணவில்லை.

"உங்களைத்தான் குழந்தைகளே!" என்று எங்களை நோக்கி சொன்னார்.

ஆஹா ஏழுகழுதைவயதாகும் நாங்கள் குழந்தைகளா?:)

மகிழ்ச்சியில் உடல் எடை ஒருகிலோ ஐம்பதுமூணுகிராம் ஏறியது.

சுமதி சிரித்தபடி கைகுவித்தாள். அறிமுகப்படுத்திக்கொண்டு பிறகு,

வழிதெரியாமல் காட்டிற்குள் வந்த கதையை விவரித்தாள்.

நீங்க நல்ல உன்னதமான இடத்துக்கு வந்திருக்கீங்க..எல்லாரையும் இந்தப்பாதை இழுத்துவராது பெண்களே..பாக்கியசாலிகள் நீங்கள் அதான் வந்துவிட்டீர்கள்,ஆமாம்,,இந்தப்ரதேசம்முழுவதும் அபூர்வ மூலிகைகள் பல கொண்டது ..காற்றில் வீசும் நறுமணமே அதற்குசாட்சி.
கருணான்ந்த சமய்சஞ்சீவி வைத்தியசாலை முன்னாளில் தஞ்சாவூரில் ரொம்பப்பிரபலம்...சித்தவைத்தியம் மூலிகைசிகிச்சையில் புகழ்வாய்ந்தது. அந்த பரம்பரைல வந்தவன் அடியேன்... அபூர்வவைத்தியங்கள் செய்பவன்.."

"காளிமுத்து டாக்டர் மாதிரியாடீ?"

"உஸ் சும்மா இரு ஷைலஜா"

அவர் தன்கையிலிருந்த சிலசெடிகளின் இலைகளை கசக்கிப்பிழிந்து சாறு எடுத்தார். தனது வெண்தாடியின் ஒருபக்கம் தடவினார்
ஐந்தே நிமிஷங்களில்... என்ன ஆச்சரியம் நரைத்த அந்தமுடி சரேலென கருத்துப்போனதைக்கண்டோ ம்.

"ரசவாதம் தெரியுமா உங்களுக்கு?" சுமதியின் கண்களில் ஆயிரம் வாட்ஸ்பல்பு.
சிரித்தார் அவர் , பிறகு"அது சகலமும் அறிந்த சித்தர்களுக்குதெரியும் தாயே...நான் சாதாரண மானுடன்...ஆனால் மூலிகைரகசியங்கள்
அறிந்தவன் அவ்வளவுதான்" என்றார்.

சுமதி தனக்கு லேசாய் ஜலதோஷம் என்றாள்

இன்னொரு செடியின் இலைகளை முகரச்சொன்னார் தயங்கிதயங்கிமுகர்ந்தாள்
அடுத்த கண்மே தும்மல் நின்று ஜலதோஷம் போயேபோச் கான் போயிந்தி ஹோகித்து!

"இது போலபலமூலிகைகள் உள்ளன... இங்கு நான் ஒரு மூலீகைவைத்தியன் தான் ஆனால் நகரத்திற்குவரமாட்டேன் என்னைத்தேடி இங்குவருபவர்களுக்குமட்டும் சிகிச்சைஅளிப்பேன் விருப்பமுள்ளவர்களுக்கு மூலிகை ரகசியம் சொல்லித் தருவேன்"

எனக்கு மூலிகையாவது ரகசியமாவது எப்படியாவது காட்டைவிட்டு வெளியேபோய் சூடாய் ஒரு மசாலாடீ குடித்தால்தேவலைபோல் இருந்தது. அவருடைய உதவியுடன் வெளியே வந்துவிட்டோ ம்.

சுமதி அன்றிலிருந்து மூலிகைவைத்தியம் கற்க ஆரம்பித்துவிட்டாள்.

'இது மூக்கிரட்டை இலை இதை அரைச்சி அடிபட்டகாயத்துல போட்டால் பிளந்த காயம் ஒண்ணா சேர்ந்துடும்'

'தேமல்போகணுமா துவர்ப்பாக்கு வில்வ இலை நிலவேம்பு கஸ்தூரிமஞ்சள் இவைகளைப் பொடி செய்து நீரில்குழைத்து...' என்பாள்

இலுப்பைப்பூ கஷாயமாம் வல்லாரைக்கீரை துகையலாம்...

டூவீலரில் தனியாக அங்கேபோய் முலிகைசெடிகளைபறித்து அள்ளிக்கட்டிக்கொண்டுவந்துவிடுவாள்
பலநேரம் ஆடுமாடுகள் அவள் வண்டியைத்துரத்தி நெடுந்தொலைவு தொடர்ந்து வந்ததாய் பலர் சொன்னார்கள்.

எல்லாநோய்க்கும் தன்னால் ;மூலிகைசிகிச்சை செய்யமுடியும் என்பாள்...சித்தவைத்திய, மூலிகைசிகிச்சைமூலம் குழந்தைப்பேற்றினை உண்டாக்கும் டாக்டர் ஜமுனாவைப்போல தானும் வருங்காலத்தில் வரவேண்டும் என்பாள் உறுதியான குரலில்.

அனுமன் தூக்கிவந்த சஞ்சீவிமலை மூலிகைகள்தனக்குத் தெரியும் என்று குறிப்புகளைக்காட்டுவாள்.
தம்பணாமந்திரம் சொல்லி போகர் அவர் கையிலும் அகப்படாமல் விலகி ஓடும் அபூர்வ சஞ்சீவிமூலிகையை மந்திரத்தால்
கைப்பற்றிய கதையை விவரிப்பாள்
நாவல்மரப்பட்டையை நிழலில் உலர்த்தி அதைப்பொடிசெய்த சூரணம் பித்தத்தை நீக்கும் என சொல்வாள்.

அவள் கணவர் இதிலிருந்து தப்பிக்கவோ என்னவோ ஒருவருஷத்திற்கு ஆஸ்திரேலியாவில் வேலை மாற்றலாகிப்போய்விட்டார்.

குழந்தைகள் இருவரும் வரும் வருஷம் ஹாஸ்டலில் தங்கிப்படிப்பைத் தொடரலாமா என ஆலோசிப்பதாக குடும்பகிசுகிசு காற்றுவாக்கில் கசிந்துவந்தது!

நானும் மேனகாவீடுபோய்வந்தால் பச்சைஇலைக்கட்டுகளோடுதான் வீட்டிற்குத்திரும்புவதால் வீட்டில் எதிர்ப்புகிளம்பிவிட்டது. ஆனாலும் உற்ற தோழி மேனகா போய்ப்பார்க்காமல் இருக்கலாமா என்று நேற்று அவள்வீடு சென்றேன்.

இரண்டுபெண்கள் கல் உரலில் எதோஇலைகளைப்போட்டு மசிய அரைத்துக்கொண்டிருந்தார்கள். மூலிகை செடிகளின் நெடி தான் எங்கும்.

மேனகாதனக்குக்கிடைத்த பட்டத்தை சொல்லி மகிழ்ந்தாள். மூலிகைமாமணி மேனகாவாம்!
வாழ்த்திவிட்டு நைசாக நகர இருந்தவளை அதிசிய மூலிகைக்குளிகை என எதையோ கையில் தந்து என்னைமுழுங்கச் சொல்கிறாள்.
.
அதை சாப்பிட்டால் நினைத்த இடத்திற்குபோய்விடலாமாம். சோதனைமுயற்சிக்கு என்னைத்தயார்படுத்துகிறாளாம்!

குளிகை இப்போது என் கையில்!
இதோ முதலில்ஆல்ப்ஸ் நோக்கிப்புறப்பட்டுக்கொண்டிருக்கிறேன்!!!

பின்குறிப்பு...இம்மாதத்தின் முதல்நாள் இடவேண்டிய பதிவு இது தாமதமாகிவிட்டது!!
மேலும் படிக்க... "மூலிகையே! மூலிகையே!"

Wednesday, April 09, 2008

கொலையும் செய்வாள் பத்மினி!

இன்னிக்கு ரண்டுல ஒண்ணு பாக்காம விடமட்டேன் ஆமா..
அன்னிக்கு முறத்தால்புலியை விரட்டிய வீரத்தமிழ்மரபில்வந்த பெண் நான் என்கிறதை நிரூபிக்கத்தான்
போறேன்

பத்மினியின் முகம் கோபத்தில் விசாகப்பட்டினம் வெய்யிலாய் தகித்தது.

நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்... வலை போட்டு தடுத்தும் பாத்தேன்..
ஆனா அதையும் மீறி என்னை என்னை...

கன்றிச்சிவந்த தன்கன்னங்களை கண்ணாடியில் பார்த்தாள்.

ஐயோ இந்தபாதகம் செய்தால் பார்த்திட்டு நான் சும்மா இருக்கணுமா?

பல்லைக்கடித்தவள் யோசித்தாள்.


அன்று இரவு நினைத்தபடி தன் திட்டதை முடித்தாள் பத்மினி.

வெளியூர்போன கணவனுக்குபோன் செய்தாள்.

"சந்துரு! நேத்திக்கே நான் உங்க கிட்ட சொன்ன விஷயம்தான்..என்னால ஒருவாரமா பொறுக்கமுடியல நீங்களும் ஊர்ல இல்ல ,, நான் என்ன செய்யறது
சொல்லுங்க கடைசில கடைசில....."

"என்னாச்சு பத்மினி தீர்த்துக்கட்டிட்டியா?"

"ஆமாங்க..வலைகட்டி படுத்துட்டாலும் எப்படியாவது உள்ளவந்தா நான் என்ன செய்வேன்?அதான்
இன்னிக்கு கொசுமருந்துவாங்கி எல்லா கொசுக்களையும் கொலைசெய்துட்டேன்.. இனி கொசுக்கடி இல்லாம நிம்மதியா தூங்கலாம் இல்ல?"

*******************************************************************************
மேலும் படிக்க... "கொலையும் செய்வாள் பத்மினி!"

Monday, April 07, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம் 6

ராகவ் எண்டர்ப்ரைசஸ்.

மானேஜிங் டைரக்டர் சுரேஷின் பிரத்தியேக அறை.

ஏசியின் அந்தக்குளுமையிலும் சுரேஷுக்கு வியர்த்துகொட்டியது. உடம்பே பற்றி எரிகிற மாதிரி இருந்தது.எதிரே கைகட்டிக்கொண்டு
சாரங்கன் அமைதியாக நின்றிருந்தான்.அவனுக்கு சுரேஷைப்போல ஆத்திரம் வரவில்லையெனினும்
மஞ்சுநாத் இப்படிச் செய்துவிட்டதில் மனது வேதனைப்பட முடிந்தது.

கம்பெனியின் சீனியர் மேனேஜர் என்ற முறையில் மஞ்சுநாத்தை மிகவும் நம்பியிருந்தார் விபத்தில் மறைந்துபோன சுரேஷின் அப்பா.
.அதனால் அப்போது வெளிவராத உண்மைகள் எல்லாம் இப்போது தெரியவந்தன. அவன் ஊழல் செய்துவிட்டதற்கு ஆதாரமான ஃபைல்கள் ஒவ்வொன்றாய் வெளியே வரவும் சுரேஷ் அதிர்ந்துபோனான்.

"சாரங்கன்" என்றான் சுரேஷ் உடைந்தகுரலில்.

"யெஸ்சார்' என்றான் பவ்யமாய் சாரங்கன்

" இந்த மஞ்சுநாத் நிறைய தில்லுமுல்லு செய்திருக்கிறான். ராஸ்கல் அவனுக்கு எத்தனை தைரியம் பாருங்க? ஆமா... அமெரிக்காவுக்கு கால் போட்டு பேசிட்டீங்களா?"

"யெஸ் ஸார்... அமெரிக்காக்கு பேசிட்டேன்.. பேசின காலை டேப் செய்துவிட்டேன்"

" வெரிகுட்...ஒரிஜினல் கொட்டேஷன்20% போட்டிருக்க, 9%ன்னு கொட்டேஷன் செட்டப் ஆகி உள்ளது இல்லையா சாரங்கன்?"

ஆமாம் சார்.. 11%வித்தியாசம் வருகிறது... கணக்கில் பதினாலு லட்சம் குறைகிறது."

"பதினாலுலட்சம்! க்ரேட் அமௌண்ட் யார்..!அத்தனையும் முழுங்கிட்டான மஞ்சுநாத்.அவனை அவனை.."

"சார் .. பி காம் ப்ளீஸ் ...நான் உங்களுக்கு எல்லா வகையிலும் உதவறேன்அமைதியா இருங்க.."

"உங்க உதவிலதானே எல்லாமே அம்பலமயிருக்கு? ஐ ஷுட் தாங்க் யூ சாரங்கன்... ஆமா,ஆடிட்ல தெரியாம போயிடுமா? மஞ்சுநாத் என்ன தைரியத்துல இப்படி செய்தான்?'

:'"அதான் சார் எனக்கு ஆச்சர்யமா இருக்கு!"

"ஆடிட்டருக்கு ஒரு வாகனம் லஞ்சமா வாங்கித்தந்திருப்பான். வேறென்ன..ஹ்ம்ம் அவனை முழுவதும் நம்பியது பழைய எம்டியின் தப்பு.அவர் என் அப்பாவா இருந்தா என்ன ஒரு மனிதனை எந்த அளவு நம்பணும்னு அனுபவத்துல தெரிஞ்சிருக்க வேண்டாமா அவருக்கு?"

"மஞ்சுநாத்தை ஒரு நண்பன் என்கிற முறைல நான் விஜாரித்துப் பார்க்கட்டுமா சார்? கிளெரிகல் எர்ரர் மாதிரி அமைத்து அந்தப்பணத்தைக்கட்டவைத்துவிடலாம்.."

"வேற வழி? மீட்டிங் என்று கொண்டுபோனால் கம்பெனியின் மற்ற பெரிய அதிகாரிகள் தலையிட்டுப் போலீசை வரவழைக்கச் சொல்வாங்க அது அவனுக்கும் தலைகுனிவு, நம்ம கம்பெனிக்கும் அவமானம்"

"மஞ்சுநாத் அத்தனைமோசமானவர் இல்லை சார்.. மன்னிப்பு கேட்டுக்கொள்வார் என நம்பறேன்"

"சாரங்கன்1 இன்னமும் அந்த துரோகியை நீங்க சிலாகிச்சி பேசுவது வியப்பா இருக்கு! லட்சக்கணக்கில் கம்பெனி பணத்தை ஸ்வாகா செய்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல இத்தனை நாளாய் இங்கே வேலை செய்துகொண்டிருக்கிறான். நம்மை முட்டாள் என
நினைத்துவிட்டான். அமெரிக்காவிலிருந்து மூணு மெஷின்ஸ் வரவழைக்கலாம் என்று அவன் சொன்னதும் அவனை முற்றிலும் நம்பி,
அதில் இறங்க வைத்தது என் அப்பாவின் தப்புதான் அதான் இத்தனை விபரீதத்துக்குக் காரணம்"

" சார்!உங்க அப்பா- எங்க பழைய எம்டி -உத்தமமான மனிதர் சார்.. எல்லாரையும் நம்பி அவர்களைத்தட்டிக்கொடுத்து வேலைவாங்குபவர் அவருக்கு நம்பிக்கைதுரோகம் செய்தவர் மஞ்சுநாத்தானே தவிர உங்க அப்பாமீது எந்ததப்பும் இல்லை. எப்படியோ மஞ்சுநாத் தனது
ஒரிஜினல் ஃஃபைலை தவறுதலாய் தன் காபின் டேபிள் ட்ராயரில் வைத்திருக்கவும்,ஏதோ வேலையாக அந்த ட் ராயரைத் திறக்கப்
போன என் கண்ணில் பட்டுவிட்டது ...படித்துப்பார்த்ததும் திகைத்துப்போயிட்டேன் சார்,அதான் உஙக்ளுக்கு உடனே தெரிவித்தேன்"

"சாரங்கன்...நீங்க மட்டும் பாக்கலேன்னா எதுவுமே எனக்கு தெரியவந்திருக்காது. போலியாக ஒரு கொட்டேஷன் தயார் செய்து
பதினோரு பர்சன்ட்டை தன் பர்சனல் செலவுக்கு எடுத்துகிட்டு ,இந்தக்கம்பெனில மூணுமாசமா என் பக்கத்துலயே இழைஞ்சிபேசிட்டு
இருந்திருக்கான் மஞ்சுநாத், இது தெரியாம இவனை நான் வந்த்தியாசமானவன்னு அதிசயமா பார்த்து இப்படி ஏமாந்ந்திருக்கிறேன் எப்பேர்ப்படா முட்டாள் நான்? மஞ்சுநாத் ஒரு ஃப்ராட் சீட் அயோக்கியன்.."


மேஜையிலே ஓங்கிக்குத்தினான் சுரேஷ்.

"ஸார் ப்ளீஸ்.."

"ஓக்கெ ஒகே,,எனக்கு அ ந்த அயோக்கியனை நேர்ல பாக்கவும்பிடிக்கல சாரங்கன். நான் வெளியே போகிறேன் ,நீங்க பார்த்து பிடித்து
விசாரணை செய்து எனக்கு போன் செய்யுங்க.."

"யெஸ்சார்"

சுரேஷ் வெறுப்பும் விரக்தியுமாய் வெளியே சென்றான்.

சீட்டிலிருந்த ராகினிக்கு சுரேஷின் முகமே ஏதோ விபரீதத்தை கோடுகாட்டவும் சாரங்கனிடம் வந்து நின்று," என்ன ஆச்சு சார்ங் அவருக்கு?"'என்று கேட்டாள்.

"அதுவந்து... சின்ன ப்ராப்ளம் ராகினி ...அப்புறமா விவரம் சொல்ட்டுமா இப்போ கொஞ்சம் வேலை இருக்கே ப்ளீஸ்?'

சாரங்கன் இப்படிசொல்லும்போது ராகினி அவன் முகத்தையே ரசித்தபடி குறும்பாய் அவனிடம்," கையில் ஃப்ளூட் வச்சிடா அசல் காலண்டர்
க்ருஷ்ணர்தான் சாரங் நீங்க! எத்தனை அழகானமுகம் உங்களுக்கு! 'மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே" ன்னு அமலனாதிபிரான் அரங்கனைப்பார்க்கும்போது பாடிய பாடல் நினைவுக்கு வருது..உங்க கண்களும் இப்போ என்னைப்பாடாய் படுத்துது! பார்வை ஒன்றே போதுமே என்கிறதெல்லாம் இதனால்தானா சாரங்?"


சாரங்கன் வெட்கம்கலந்தபுன்னகையுடன் நகரவும் எதிரில் மஞ்சுநாத் வரவும் சரியாக இருந்தது.

"வழக்கம்போல சார் லேட் இன்னிக்கும் ஆபீசுக்கு! எங்க சுத்திட்டுவராரோ யார்கண்டாங்க?" ராகினி மஞ்சுநாத்தைக் கண்டதும் முணுமுணுத்தபடிபோய்விட்டாள்.

சாரங்கனிடம் ராகினி பேசிக்கொண்டிருந்ததையும் அதற்கு சாரங்கன் வெட்கப்பட்டதையும் தூத்த்திலிருந்து கவனித்துகொண்டு வந்த மஞ்சுநாத்," வாட் மேன்! அழகுதேவதை ஏதும் அடல்ட்ஸ் ஒன்லிஜோக் அடிச்சிதா உன்கிட்ட? கன்னமெல்லம் இப்ப்டி சிவந்திருக்கு உனக்கு? கொடுத்துவச்சவன்பா...எல்லாப் பொண்ணுங்களும் உன்னையே சுத்தறாங்க..."என்று சொல்லி கண்களைச் சிமிட்டினான்.

சாரங்கன் அதற்கு முகத்தை சகஜமாய்வைதுக்கொண்டு,"மஞ்சுநாத் !உங்ககூடதனியாபேசணும்"என்றான்.

"எ என்ன விஷயம் ?" முகத்தில் கடுப்பேற மஞ்சுநாத் கேட்டான்.

"அ அது வந்து.."

"என்ன பர்சனல் விஷயமா?" இப்ப்டிக்கேட்கும்போது முகம் வெளிறியது மஞ்சுநாத்திற்கு.

"இல்லை இது அஃபீஷியல்.."

பெருமூச்சுவிட்டபடி தோளைக்குலுக்கிய மஞ்சுநாத், சாரங்கனுடம் அந்த அறைக்குள் நுழைந்தான்.

சாரங்கன் சுற்றிவளைக்காமல் அனைத்தையும் கூறிவிட்டு அமைதியாய் நின்றான்.

"ஓஹோ இத்தனைக்கும் நீதான் கராணமா ?" மஞ்சுநாத் சுட்டுவிடுவதுபோல பார்த்தான்.

கம்பெனியின் ஊழியன் என்கிற முறையில் என்கடமையை செய்தேன் மஞ்சுநாத்"

அப்பாவிம மாதிரி இருந்திட்டு எனக்கே குழி பறிக்கிறியா? என்னை ஒருவார்த்தைகேட்காமல் புது எம்டிகிட்ட எல்லாத்தியும்
சொல்லீ இருக்கணுமா ?அதைவிட அமெரிக்கால நான் மெஷின் வாங்கின கம்பெனிக்கும்போன் செய்து சவிசாரித்து அதையும்
டேப்பில் பதிவு செய்திட்டியா ? டேய், நீ துப்பறியும்கதை அதிகம்படிப்பாயோ?"

" மஞ்சுநாத் எனக்கு வேறு வழி தெரியவில்லை ...என்னால் இப்போது முடிந்ததெல்லாம் கோபமாய் இருந்த சுரேஷை சமாதானம் செய்யமுடிஞ்சதுதான்.. அவர் மட்டும் இப்போ உங்க முன் இருந்தால் உங்களை போலீசில் பிடிச்சி தள்ளி இருக்கலாம்"

"ஷட் அப்..இந்த நிலைமையை மோசமாக்கியதே நீதான்.. அதை நான் உடனே எரிச்சிருக்கணும் விட்டதால் உன் கண்ணில் பட்டிருக்கு"

"போகட்டும் மஞ்சுநாத்! எடுத்தபணத்தை கம்பெனிக்கு கட்டிடுங்க எல்லாம் சரியாய்டும்.."

"இல்லேன்னா?"

"விஷயம் டைரக்டர்ஸ் மீட்டிங் வரைபோய்டும் உங்க கதை அம்பலமாயிடும்"

"என்ன மிரட்டறியா?"

நோ நோ எம்டியின் அடுத்த நடவடிககீதுவாக் இருக்கும் என்கிறேன்"

சாரங்கா.. சாதுமாதிரி இருந்துகிட்டு இப்படி சாமர்த்தியமான காரியம் செய்துட்டோ ம்னு பெருமையாஉனக்கு?"

பெருமை ஏதுமில்ல... கடமைதான், கம்பெனியின் ஊழியன் என்கிற வகையில்.. இப்போதும் மோசமில்லை.உங்கள காப்பத்தணும்னுதான்
நீங்க கம்பெனிமூலமா எடுத்த பணத்தை திரும்ப போடச்சொல்றேன்.."

அதுக்கு பதிலா நீ ஒண்ணு செய்

என்ன சொல்லுங்க.


"ஆடிட்டரை ஏற்கனவே கவனிச்சிடேன்.. உனக்கும் ஒரு லட்சம் தந்துடறேன்..சுரேஷை சமாளிச்சிட்டு ஒரிஜினல் ஃபைலை என்கிட்டக்
கொடுத்திடு"

"நோ மஞ்சுநாத்..நான், நேர்மையா இருக்கவே விரும்பறேன்.."

"ஆமாண்டா, பெரிய நேர்மை, நீதின்னு வாய் கிழியப் பேசுங்க ...நாட்ல அவனவன் கோடிகோடியா சுருட்டறான் ..
எதோ சில லட்சம் அடிச்சா என்னைமாட்டிவிடுங்கடா..டேய் இப்ப சொல்றேன், உங்களால் ஆனத பாத்துக்குங்க..".என்று கத்திவிட்டு
காலை தரையில் அழுத்தி சத்தமாய் ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.

சாரங் சற்றே வெறுப்பும் பயமுமாய் தலைகுனியும்போது , கால்களை அலட்சியமாய் தரையில் குத்தி வைத்து நின்று
கொண்டிருந்தவனின் பாதங்களை மூடி இருந்த அந்த ஷூக்களை சட்டென கவனித்தான்.

சில நாட்கள்முன்பு இதே சாக்லேட்ப்ரவுன் கலரில், லேஸ்போடுமிடத்தில் சின்னதாய் பித்தளைவண்ணத்துப்பூச்சி அமர்ந்த நிலையில் ,இதே
ஷூக்கள் இரண்டை தன்வீட்டு அறையின் திரைச் சீலையின் கீழேபார்த்தது நினைவுக்குவந்தது.

திடுக்கிட்டவன் நிமிர்ந்தபோது மஞ்சுநாத் அங்கு இல்லை.

சாரங்கனின் நெஞ்சில் சந்தேகம் நூலிழையாய் நுழைய ஆரம்பித்தது.
(தொடரும்)
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Friday, April 04, 2008

ஞானம்(கவிதை)

நாறும் திசையெங்கும்
நாலுகால்பாய்ச்சலில் ஓடுகிறது
நாய்.

இருந்த இடத்திலேயே
கண்ணிவைத்து
இரை தேடுகிறது
சிலந்தி.

நாய்க்கு, அலைச்சல்
சிலந்திக்கு, வலை .
ஞானம்!
மேலும் படிக்க... "ஞானம்(கவிதை)"

Sunday, March 30, 2008

தாக்கம்(சிறுகதை)

இரண்டுவருஷமாய் நான் இந்தியாவிற்குப்போகவே இல்லை. அதற்குமுன்புவரை வருடம்
ஒருமுறைதவறாமல் போவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருமுறையும் இருபதுநாளுக்குமேல் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் அப்பா அம்மா அண்ணா மன்னி தம்பிதங்கை அண்ணாவின் குழந்தை ப்ரியாக்குட்டியுடன் பொழுதினைக்கழித்துவருவேன்.மலைக்கோட்டை, சமயபுரம்,
கல்லணை,முக்கொம்பு,வயலூர் என்று பெரிய திட்டங்களோடுதான்
துபாயைவிட்டுப்புறப்படுவேன் ஆனால் அங்கெல்லாம் போக நேரம் கிடைக்காத அளவுக்கு
வீடு என்னைக் கட்டிப் போட்டுவிடும்.


இந்தவருடமும் ஊருக்குப்போகவேண்டாமென்றுதான் இருந்தேன் ஆனால் போனவாரம் போனில்
ப்ரியாகுட்டி,"சித்தப்பா எப்போ வரே?' என்று கேட்டதும் மனது கேட்கவில்லை.
புறப்பட்டுவிட்டேன்!


காவிரிப்பாலத்தில் டாக்சியில் வரும்போதே காலைநேரத்து இளம்குளிரோடு
வீசியகாற்றில் உடலிற்குப் புதுத்தெம்பு வந்துவிட்டது.


மாம்பழச்சாலையைக் கடந்து ஊருக்குள் டாக்சிநுழையும்போது எதிரே விண்ணைமுட்டும்
ராஜகோபுரம் 'வா வா' என அழைப்பதுபோல இருக்கிறது.


தெற்குவாசலில் டாக்சியை நிறுத்தசொல்லி மன்னிக்குப் பிடிக்குமே என்று ஜாதிமல்லி
பத்துமுழமும், கோபுரத்துஅடியில் கூறுகட்டி
விற்றுக்கொண்டிருந்தவளிடம் அம்மாவுக்காக கொய்யாபழமும் வாங்கிக்கொள்கிறேன்.


டாக்சியின் எஃப் எம் 'தோழா தோழா தோள் கொடு தோழா 'என்றது. போனமுறை ஊர்வந்தபோது
தீப்தா என்னிடம் பேசும்போது
பாடியபாடல்! என் இனிய சிநேகிதியான அவளுக்கும் குடும்பச் சுமை அதிகம்,அதுவும்
அவள் அப்பாவின் மறைவிற்குப்பிறகு, உள்ளூரில் ஒரு
சீட்டுக்கம்பெனியில் பணிபுரிகிறாளாம், மாதம் முவாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக


சித்திரை வீதிவழியே டாக்சிபோகும்போது இரண்டுவருடங்களில் கொஞ்சமும் மாறாத என்
ஊரைப்பெருமையுடன்பார்த்துக்கொள்கிறேன்.
. தேரடியில் ரங்கப்ரசாத் மற்றும் பாபு, சுதர்சனுடன் கிரிக்கெட் விளையாடியதை
மனம் அசைபோட்டது.


?யாரு பரத்வாஜனா? ஏண்டாப்பா, ரண்டுவருஷம் கழிச்சி வரபோல்ருக்கு?"
taaஎதிர்வீட்டுதிண்ணையிலிருந்து மூக்குக்கண்ணாடியை எடுத்து மறுபடி அணிந்தபடியே
கிச்சாமாமா குரல்கொடுத்தார்.


"ஹைய்யா சித்தப்பா வந்தாச்சு:!" ஓடிவந்தது ப்ரியாகுட்டி. அட! ப்ரியாக்குட்டி
எப்படி வளர்ந்துட்டது!


டாக்சியை அனுப்பிவிட்டு நிமிர்கிறேன்.


வீட்டுவாசல்கதவை அடைத்துக்கொண்டு உறவுப்பட்டாளம்!


பார்வையாலேயே பாசத்தைப்பொழிந்தார் அப்பா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியராய்
பணிபுரிந்தபோது அதிகம் பேசிய களைப்போ என்னவோ ஓய்வுபெற்றதிலிருந்து அப்பா
யாருடனுமே அதிகம் பேசுவதில்லை.


"அதில்லைடா பரத் உங்கப்பாக்கு குடும்பச்சுமையை உன்மேல ஏத்திட்டோ மேன்னு
மனசுக்குள்ள குறுகுறுப்பு உங்கண்ணாக்கும் சுமாரான சம்பளம்தான். சேமிப்பும்
அதிகமில்லை..குடும்பம் ஓடணும்னுதான் படிச்சதுமே நீ துபாய் போய் பணம்
அனுப்பிண்டு இருக்கே..பாவம் ...நாங்கள்ளாம் வாய்விட்டு சொல்லிடுவோம்...
உங்கப்பா மனசுக்குள் வச்சிண்டு குமைவார். அதான் மௌனசாமியாராய் ஆயிட்டார்"
என்று
போனதடவையே அம்மா சொன்னாள்.


"ரண்டுவருஷமாச்சே கண்ணா எப்டிப்பா இருக்க? என்னவோ இந்தக்குடும்பம் முன்னேறவும்
, வீட்டுக்கடனை அடைக்கவும் உன்னை
அவ்வளோ தூரத்துக்கு அனுப்பிட்டோ மேன்னு பலசமயம் வருத்தமா இருக்குப்பா"


அம்மா இப்போதும் பார்த்ததும் கண்பனித்தாள்.


"வாங்கோ! போனவருஷம் வருவேள்னு ரொம்ப எதிர்பார்த்தோம்"என்றாள் மன்னி. கல்யாணமாகி
ஆறுவருடங்களாகியும் மாறாத புன்னகைமுகம்.


" அதான் லீவே கிடைக்கலை வரமுடியலைன்னு போன்ல சொல்வானே விஜி? இப்போ லீவ்
கிடைச்சிருக்கு ஓடிவந்துட்டான் என் தம்பி!
வாடா பரத்...எப்படீ இருக்கே? அம்மா! அவனுக்கு ஃபில்டர்காஃபி புதுப்பால்ல
புதுசா போட்டுக்கொடு" அண்ணா ராஜு தோளைத்தட்டி வரவேற்றான்.


"பரத் அண்ணா! நான் இந்தவருஷம் ப்ளஸ்டூக்கு ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணி
படிக்கறேன்'


'நானும்:தான்"


இரட்டைசகோதர உறவுகள் சேர்ந்துகுரல் கொடுத்தன.


"இந்தவருஷமும் நீ வரலேன்னா நாங்க கடனை உடனைவாங்கி டிக்கட்போட்டுண்டு
துபாய்வந்துருப்போம்,தெரியுமா அப்படி
ஏங்கிட்டோ ம்டா பரத்! போன்ல எத்தனை பேசினாலும் நேர்ல பாக்றாப்ல ஆகுமா சொல்லு?"


"வந்ததும்வராததுமா அவனை ஆயிரம் கேள்வி கேக்காதங்களேண்டிம்மா.. பரத்! ஊஞ்சல்ல
உக்காருப்பா... டீ சித்ரா! fan போடேன் சித்த..
குழந்தை வெளிநாட்ல ஏசிகீசின்னு சௌகர்யமா இருப்பான் இங்க வந்த சித்த நாழில
கறுத்துப்போயிட்டான்பாரு.." அத்தை-அப்பாவின் மூத்த சகோதரி- வாஞ்சையுடன் என்
தலையைக் கோதிவிட்டாள்.


. :அம்மா சூடாய் வெண்பொங்கலும் கத்திரிக்காய் சுட்ட கொத்சும் தட்டில் வைத்து
என்னிடம் நீட்டினாள்.தங்கநிறத்தில் வறுபட்டமுந்திரிகளும், பொம்மைமுயலின்
கண்களைப்போல முழித்துக்கொண்டிருந்த மிளகும் நாக்கில் நீர் ஊறவைத்தது.


புழக்கடைப்பக்கம் போய் கிணற்றடியில் கைகால் அலம்பிக்கொண்டுவந்து தட்டை
அம்மாவிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.


"காஃபி முதல்ல தரக்கூடாதோ?" அண்ணா கத்தினான்.


"பசியா இருக்குமோன்னு முதல்ல டிபனைத் தந்தேன்..முடிச்சதும் காஃபி கலந்துட்டா
போச்சு"


"பொங்கலோட வடையும் பண்ணி இருக்கலாம்னு இப்போ தோண்றது
..சாப்பாட்டுக்குப்பண்ணிடலாம்மா...மச்சினருக்கு தயிர்வடைன்னா ரொம்பவே
பிடிக்குமே?" மன்னி உருகினாள்.


"நேத்தே திரட்டிப்பால் கிளறிவச்சிட்ட்டேன் குழந்தைக்கு தட்ல ஓரமா போடேன்
பத்மா,சொல்லணுமாக்கும்? "அத்தை அதட்டினாள் அம்மாவை அன்பாக.


வாங்கிவந்த சாமான்களை அனைவரிடமும் கொடுத்தபோது கண்களில் மகிழ்ச்சிதவழ நன்றி
தெரிவித்தனர்.


"எதுக்குடா இப்படி சிரமம் எடுத்துக்கறே?"அண்ணன் அன்பாய்கடிந்துகொண்டான்.


ஊரும் மாறவில்லை என்வீட்டுமனிதர்களும்மாறவில்லை என்னும்போது எனக்குப்பெருமையாக
இருக்கிறது.


"கொள்ளிடம்போய்குளிச்சிட்டுவந்துடறேன்" என்றபோது அப்பா தன் சைக்கிள்சாவியை
என்னிடம் தந்தார். நடந்துபோகக்கூடாதாம்!


படித்துறையில் தீப்தா துணி துவைத்துக்கொண்டிருந்தவள், என்னைக்ண்டதும்,"பரத்
எப்போ வந்தே? "என்று வியப்பாய் கேட்டாள்.


சிறிதுநேரம் நாஞ்சில்நாடனையும் ஜெயகாந்தனையும் அலசினோம்.


"சுஜாதா போயிட்டாரேடா பரத் நம்பவேமுடியல"


"ஆமா நம்மூர்க்காரர் வேற...மனசுக்கு ரொம்பக்கஷ்டமா இருக்கு.."


"என்னவோபோ..சொல்லிக்காம வர ஒரேவிருந்தாளி மரணம்தான்...
அதுபோக்கட்டும்..நாளைக்கு ஆடும்பல்லக்குடாபரத்...வாசல்பூரா
கோலம் வழக்கம்போலப்போடப்போறேன்..நீவந்து பார்த்து கருத்து சொல்லணும் என்ன?"


"இந்த கம்ப்யூட்டர் யுகத்துலயும் சின்னக் குழந்தைமாதிரி கோலம்போடறதும்
கொள்ளிடக்குளியலுமாய் அது இதுன்னு இருக்கியா தீப்தா?"


"மனசுக்கு சந்தோஷமான விஷயங்களை எதுக்கு மாத்திக்கணும் அல்லதுமறக்கணும் , அதுவே
மத்த துக்கங்களை மறக்க ஒருகருவியா இருக்கறப்போ?"


நான் சிரித்தபடி வேறுபக்கம் நகர்ந்தேன்


ஆயிற்று ஊருக்குபோகிற நாள் வந்தாயிற்று.


எந்நேரமும் விரல்பிடித்துக்கொண்டே விளையாடிய ப்ரியாகுட்டி..


பார்வையால் வருடும் அப்பா..


வாய்க்கு ருசியாய் சமைத்துப்போடும் அம்மாவும் அதனை வயிறாரப் பரிமாறியமன்னியும்
..


பாடங்களில் சந்தேகம்கேட்டு என்னைப்பெரிய ஆசிரியர் போல மதிக்கும் என்
உடன்பிறப்புகள்..


'துபாய்ல உப்புபுளிகிடைக்குமா ?நல்ல ஹோட்டல் இருக்கா? உடம்புக்கு ஏதாவதுன்னா
யாருடா பக்கத்துல இருக்கா உனக்கு?'
அத்தையின் அன்பான அக்கறையான கேள்விகள்.


'பரத்! அம்மா அப்பாவைப்பத்தி கவலையேபடாதே ...நானும்மன்னியும் நன்னா
பாத்துக்றோம் என்ன? "
அண்ணாவின் அனுசரணையான பேச்சு..


சிநேகிதம் என்கிற எல்லைக்கோடிற்குள்லேயே எப்போதும் இருந்துகொண்டுபழகும்
அன்புதோழி தீப்தா...


எல்லாரையும் விட்டு ஊருக்குபுறப்படவேண்டுமே என்றிருக்கிறது.


அப்பாமட்டும் எவ்வளவு தடுத்தும் சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட ஸ்ரீரங்கம்
ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.


ரயில் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது அப்பா என்னிடம்,


"பரத்! உன்கிட்ட வந்ததுலேந்து கேட்க நினச்சேன் , இப்போ கேட்டுட்றேன்.. உன் தலைல
குடும்பச்சுமைய ஏத்திட்டோம்ன்னு எங்கபேர்ல கோபமா? அதனல்தானே நீ இத்தனை நாளாய்
ஊர்பக்கமே வரலயா?" என்றார்.


'ஐயோ அப்பா! இந்தப்பேச்சுக்கு உங்கள் மௌனமே பரவாயில்லை' என்று கத்தவேண்டும்
போலிருந்தது.


என்னையே பார்த்துகொண்டிருந்த அப்பாவின் விரல்களை பிடித்துக்கொள்கிறேன்.


"அ அ ..அ.ப்.பா! " வார்த்தைகள் உடைந்து வந்தன .


இருபத்தி ஏழுவயதில் இருபதுவயதை முழுங்கிவிட்டு, சிறுவனாய் கதற
ஆரம்பிக்கிறேன்.


"அப்பா ஒவ்வொரு தடவை ஊருக்கு வந்துவிட்டுப்போகிற போதெல்லாம் உங்க எல்லாருடைய
பாசத்தையும் பரிவையும் அனுபவிச்சிட்டு
திரும்பி துபாய் போனதும் பலநாட்களுக்கு என்னால் இதிலிருந்து
மீளமுடிவதில்லை.. எதையுமே ருசிகண்டால்தானே அவஸ்தை?
என்னால் ஆசையை அடக்கமுடியும்போல இருக்கு... ஆனா அவஸ்தையை தாங்க
முடியலப்பா..அதான் இத்தனை நாளா வரல...இப்போ மறுபடி துபாய்போனதும் இந்த அவஸ்தை
தொடரபோகிறதுப்பா.." நான் முடிக்கவும் உடனே


"ப..ர..த்!" அப்பாவின் குரலில் மேலும் கரைந்துவிடவும் இருந்த நிலையில், நல்ல
வேளையாய் ரயில் வந்துவிட்டது
மேலும் படிக்க... "தாக்கம்(சிறுகதை)"

Saturday, March 29, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.(தொடர்)

அத்தியாயம் 4



"யாரது சாரங்கனா?"

மாடிப்படியில் இறங்க இருந்தவனை எதிர்ப்ளாட்டின் வாசல்கதவைத்திறந்தபடி வெளியே வந்த பத்ரியின் குரல் திரும்ப வைத்தது.

நிலைப்படியின் ப்ளாஸ்டிக் மாவிலைத்தோரணத்திற்குக் கீழே கைவைத்த வெள்ளைபனியனுடன் லேசான முன் வழுக்கையுடன் பூர்ணம் விசுவநாதனின் ஜாடையில் பத்ரி நின்றுகொண்டிருந்தார். பேசுவதும் அவரைப்போலவே இருக்கும்.

அண்மையில்தான் அஞ்சல் அலுவலகப்பணியின்றும் ஓய்வு பெற்றவர். ஒரேமகள் திருமணமாகி பம்பாயில் இருக்கிறாள். திருமதி பத்ரி அமைதியாய் இருப்பவர்.

பத்ரியின் வீட்டில் எம் எஸ்சின் பாடல்களோ அல்லது ஜி என் பியின் சாகித்யஸ்வரங்களோ ஒலிக்காத நாளில்லை.சங்கீதம் தெரிந்தவராம் முதல் சந்திப்பிலேயே சொல்லி இருக்கிறார். இப்போது உளளேயிருந்து 'குறை ஒன்றுமில்லை' என்றார் எம் எஸ் தன் தேன்குரலில்.
.

"நல்லாருக்கீங்களா பத்ரிசார்?" சாரங்கன்கேட்டதும் அவர் சிரித்தார்.," எம் எஸ் பாட்டுகேட்கும்போதே தெரியணுமே உனக்கு? ஆமா ஆபீஸ் போகலயா இன்னிக்கு?'

"இல்லை சார்.." என்று ஆரம்பித்து காரணம் விவரித்தவன்,"சார்! ராதிகா எங்கவீட்டுசாவி உங்கக்கிட்ட கொடுத்தாளா?" என்று கேட்டான்
.
பத்ரி சிரிப்பை பதிலாக்கினார். "அ அதுல வந்து.." தயங்கினார்.

"ஏன் சார்சிரிக்கறீங்க? தயங்கறீங்க?'

"சாரங்கா! உன் பொறுமையும் பெரியவங்களை மதிக்கிற பண்பும் எனக்கு ரொம்பப்பிடிக்கும். இதுல கால்பங்கு உன் மனைவிக்கு இருக்கலாம்"

"ராதிகா வெளிப்படையா பேசிடுவா... மனசுல வச்சிக்கத்தெரியாது எதையும் பாவம்"

"பேச்சு பத்தி சொல்லவில்லை.. அது பிறவிகுணமாய் இருக்கலாம்..ஆனா விருப்பங்களை தேர்வு செய்யலாமில்லையா? இந்த ஃப்ளாட்ல இருக்கிற பெண்கள் எவ்வளவோ விதத்தில பொழுதை நல்லா கழிக்கறாங்க...பாட்டு பஜனை தையல்வகுப்பு ஓவியப்பயிற்சி கம்ப்யூட்டர் வகுப்புன்னு எல்லாமே இங்க ஆளுக்கொருவர் பொறுப்பேத்து நடத்தறாங்க..அதில் ஒன்றிலும் ராதிகா கலந்துக்கிறதில்லை மாறாய்
நடத்தறபெண்களை கிண்டல் செய்கிறாளாம். 'ஏ'ப்ளாக் விஜி வருத்தப்பட்டுக்கிட்டா அன்னிக்கு என் வீடுவந்தப்போ..."

"ராதிகாவுக்கு எங்காவது வெளில போய் வேலை செய்ய ஆர்வமாம் சார்"

"இப்போவே தினமும் நீ ஆபீஸ் போனதும் கதவைப்பூட்டிட்டு வெளிலதான் போயிடறா,,மாலை நீவரும்போது கரெக்டா வந்துடறா..ஒருநாள்
நான் இதைக்கேட்டபோது ஷட்அப் ன்னு திட்டிட்டு போயிட்டாப்பா..ரொம்ப துணிச்சலானபொண்ணுதான்"

"ராதிகா ஒரு சுதந்திரப்பறவை. அவள் விஷயத்தில் நான் தலையிடவே மாட்டேன் சார். பொதுவா பெண்களை நான் மிகவும் மதிப்பவன்
ராதிகா சார்புல உஙகட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்"

"அதில்ல சாரங்கா.. அதிர்ந்துவராத புருஷனும் முதிர்ந்து வராத சாதமும் உபயோகமில்லைன்னு பழமொழி சொல்வாங்க.. சரி அதிருக்கட்டும் நம் ஃப்ளாட்டுக்கு எதிரே பெரிய காலிமைதானம் இருந்ததே அதுல வேகமா ஒருகட்டிடம் வருதே, நீ பார்த்தியா?"

ஆமாம் சார் என்ன கட்டிடம் அது?

"அங்க ஒரு அனாதை இல்லம் வரப்போகுதாம...உரிமையாளர் .. அடிக்கடி கட்டிடப்பணியை பார்வையிட இங்க வராங்களாம்.. நல்லமாதிரியா இருக்காங்கன்னு ஃப்ளாட்ல எல்லாருமே சொல்றாங்க... கட்டிடத்திறப்புவிழா அன்னிக்கு நம்ம ஃப்ளாட்
பெண்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தந்திருக்காங்களாம்.."

"ஓ அப்படியா? நல்ல சேவை செய்யறாங்க!:"

சாரங்கன் இப்படி சொல்லும்பொது செருப்புசத்தம் படிகளில் கேட்டது.

ராதிகா!

"நான்சென்ஸ் ,,பவர் இல்ல லிஃப்ட் வேலை செய்யாதாம்...பேட்டரி சரிசெய்துவைக்கவேணாமோ என்ன ஃப்ளாட் இது? வாடகைமட்டும் பதினைஞ்சாயிரம் ரூபா வங்கிட்றாங்க..ஹ்ம்ம்....ஆமா நீங்க என்ன திடீர்னு வந்திருக்கீங்க?" என்று கடுகடுத்தவள்.
சாரங்கனைப் பார்த்துக் கேட்டாள் வியப்புடன்.

கதவைத்திறந்த அவளிடம் சுருக்கமாய் சொல்லிவிட்டு பத்ரியிடம் திரும்பிப்பார்த்து,"வரேன் சார் ..நன்றி, இவ்வளவு நேரம் பேசி எனக்கு கம்பெனி தந்ததற்கு"என்றான்.

"சிலருக்கு வாசல்கதவைதிறந்துவச்சிட்டு யார் எங்கபோறாங்கன்னு பாக்றதே வேலை?" என்று ராதிகா பார்வையிலும் வார்த்தையிலும் அனலைக்கக்கவும், பத்ரி உள்ளே
நழுவினார்.

"பெரியவங்ககிட்ட மரியாதையாப்பேசணும்மா ராதிகா" சொல்லியபடியே

பாத்ரூம்போய் வந்தவன்,"ராதிகா! பாத்ரூம்ல சிகரெட் துண்டுபார்த்தேன்"என்றான்.

"ஆ அ அதுவா? "

"குழாய்ரிப்பேர்காரர் வந்தாரா என்ன?"

"ஆ அ ஆமாம் ...அவந்தான் யூஸ்லெஸ்ஃபெலோ ..அங்ககுடிச்சிட்டு போட்டிருப்பான்.."

"பர்வால்ல... நான் சாக்கடைல தள்ளிவிட்டுட்டேன்.. ஆமா ராதிகா!!ஏதோ இன்டர்வியூன்னு சொன்னியே இப்போ அதுவிஷய்மாவா வெளில போயிருந்தாய்? மாலையிலதான்னு சொன்ன நினைவு எனக்கு. ஆம் ஐ ராங்?"

"நான் ரிலையன்ஸ் ஃப்ரெஷ்போய் காய்பழம்வாங்க வெளிலபோனேன்....மேலும் நான் அந்த இண்டர்வ்யூபோகபோறதில்ல"

"ஏன்மா?'

"என்னவோ பிடிக்கல..விடுங்க.."
"அப்டியா?ராதிகா !!எதிரே ஒரு அனாதைஇல்லம் வரப்போகுதாம் ..அதுக்கு நீயே வாலண்டியரா ஏதும் சேவை செய்யலாமே?மனசுக்கும் நிறைவா இருக்குமே?"

'அய்யோ! ஒரு அனாதை இல்லமா அங்கவரப் போகுது? நான் ஏதோ ஸ்டார்ஹோட்டல் இல்ல டான்ஸ்க்ளப்புனு நினச்சேன்...
சினிமாதியேட்டர் வந்தா நல்லா இருந்திருக்கும்...சினிமால நடிக்க ஆசைப்பட்ட எனக்கு தினம் சினிமாபோய் பார்க்கவாவது
முடிஞ்சிருக்கும்..இது எதுவுமில்ல ச்சே ச்சே.."

"சினிமால நடிக்கணுமா உனக்கு?"

"ஆமாங்க..ஒரு ஜோதிகா அல்லது நயனதாரா மாதிரி வரணும்..நான் பார்க்க அழகாத்தானே இருக்கேன் நடிக்கக்கூடாதா என்ன?"

சாரங்கன் தன் இளம் மனைவியை குழப்பமாய்பார்த்தான் .
இவள் என்ன ஆர்ப்பரிக்கும் கடலா? கொட்டும் அருவியா?

புன்னகையுடன் நின்றவனின் கைகளை இறுகப்பிடித்துகொண்டாள் .

தோளில்முகம் சாய்தபடி,"நைட் டின்னருக்கு தாஜ் போகலமா?" எனக்கேட்டாள் .

அந்தக்கன்னங்களின் செழுமையும் கண்களின் குறுகுறுப்பும் சாரங்கனை திக்குமுக்காடவைத்தன.அப்படியே அவளை இறுக்க அணைத்தபடி"ம்..அதற்குமுன்.."என்று அவளின் சிவந்த இதழ் நோக்கிகுனிந்தான்.

சட்டென விலகிய ராதிகா."இப்போ வேணாம் ப்ளீஸ்'என்று நகர்ந்துவிட்டாள்.

கல்யாணம் ஆன இந்த ஆறு மாதமாய் அருகில் வரும்போதெல்லாம் இதையே தான் சொல்கிறாள் ,சாரங்கனும் பொறுமையாகத்தான் இருக்கிறான் .


கிணற்று நீர்தானே ஆற்றுவெள்ளமாஅடித்துக் கொண்டு போகும் என நினைத்து சமாதானம் செய்துகொள்கிறான்.

பாவம் அவனுக்குத் தெரியுமா, வெள்ளம் வேறுதிசையில் அடித்துக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது என்பது!!?

(தொடரும்)
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்.(தொடர்)"

Friday, March 28, 2008

சுடோகுசுமதி!

சுமதி, சிறுகுறிப்பு...


சமையலில் கைதேர்ந்தவள்.. அதுவும் வட இந்திய உணவுகள் மேலைநாட்டு பாஸ்தா, பீஸ்ஸா இவைகளில்
தேர்ந்தவள். ஓவியக்கலையில் மன்னி. ஹிந்துஸ்தானீ இசை அவளிடம் கொஞ்சும். மிமிக்ரி
செய்து அசத்துவாள்.
கைபார்த்து ஜோதிடம் சொல்வாள். சீட்டுக்கட்டினைவைத்துக்கொண்டு மேஜிக்
செய்வாள்..இன்னும் பல கலைகள் அவள் வசம் இருக்கிறது.


ஒருநாள் சுமதி என் வீட்டிற்கு வந்தாள் கணவர் பாஸ்கருடன்.


வந்ததும்,"நியூஸ் பேப்பர் இருக்கா?" என்றுகேட்டாள்.


லஞ்சம் வாங்கிய எம்பியைபற்றியோ அடிக்கடி உருவாகிவரும் காற்றழுத்த
மண்டலம்பற்றியோ, கருடாமாலில் நடக்கும் கார்டன்சில்க் சேல் பற்றியோ அண்மையில்
கைதான போலிசாமியார்பற்றியோ - இதில் ஏதாவது ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ
தெரிந்துகொள்ளத்தான் சுமதி ஆர்வமாய் கேட்கிறாள் என நான் நினைத்தேன்


ஆனால் பேப்பர்அவள் கைக்குபோனதும்தான் உண்மையே தெரிந்தது.


அவள்கணவர் பாஸ்கர் என்னைபரிதாபமாய்பார்த்தார்.


"எத்தனை நாளாய் இந்த வியாதி?' என்று நான் கேட்டது கூட சுமதியின் காதில்
விழவில்லை.


அதைவிட எகிறிவிட்ட மியூசிக்சானலின் காதைப்பிளக்கும் சத்தமோ,
எட்டூருக்குக்கேட்பதுபோல கிச்சனில் அலறும் மில்க்குக்கரின்
விசிலோ எதுவுமே கேட்காமல் சுற்றுப்புறம் மறந்த நிலையில் கையிலிருந்த பேப்பரில்
சுடோ க்கு கட்டங்களில் எண்களை இடுவதும் பின் அழிப்பதுமாய் இருந்தாள்.


"சுமதிகிட்ட சென்னாபடூரா இன்னிக்கு கத்துக்கலாம்னு நினச்சேன்...கஜல் பாடச்
சொல்லி கேட்க ஆவலா இருந்தேன்... அவ என்னடானா வந்ததுமுதல் சுடோக்குலயே மூழ்கி


சோகக்தையை ஆரம்பித்தார் பாஸ்கர்.


"என்ன சுமதி , வீடுவாசல், பாட்டு படம்வரைவது, சமையல் மேஜிக் -எல்லாத்தியும்
மறந்தே போயிடபோறியா என்ன?" என்று அவளிடமே கேட்டுவிட்டேன்.


"நீயுமா ஷைலஜா? வீட்டுமுல்லைமணம் யாருக்குமே தெரியாதா? .. ஒரு நிகழ்ச்சில சுடோ
கு அறிஞர்கள் அத்தனைபேரும்
கலந்துகிட்டு சுடோ குவில் நான் சாதனை செய்த போது ஆச்சரியப்பட்டு அப்ரிஷியேட்
செய்தாங்க தெரியுமா? வீட்லதான்
ஒரு ரெகக்னீஷன் இல்ல...ஜப்பான்லயோ சீனாலயோ சுடொகுபத்தி புது புத்தகம்
வந்திருக்காம் ஒண்ணு வாங்கித்தாங்கன்னு கேட்டேன் , பாஸ்கர்கிட்ட... காதில்
போட்டுக்கவே இல்ல. எல்லாம் மேல் ஷாவனீசம்... பார்த்திட்டே இரு... நான் சுடோ கு
எக்ஸ்பர்ட் ஆயிடுவேன் உலகமே என்னைப்புகழும் அந்த நாள் அருகில்தான் தோழி!"


சொல்லிவிட்டு திரும்ப பேப்பரில் கட்டம்கட்டமாய் எண்களோடு
முன்னேறிக்கொண்டிருந்தாள்.


"சுடோ க்கு சொடக்கு சுடேகு என்றுகடமுடன்னு இதை எப்படிவேணாலும் அழைக்கலாம்.
இந்தக்கட்டம் நிரப்பும் ஆட்டத்தை நாந்தான் இவளுக்கு பொழுதுபோக்காய் இருக்குமேன்னு
முதலில்அறிமுகப்படுத்தினேன், சொல்லியும் கொடுத்தேன். இப்போ இவள் வெறும் சுமதீ
இல்லை, சுடோ குசுமதி ஆகிட்டாளே என்ன செய்வேன் நான்?" அழாதகுறையாகப்
புலம்பினார் பாஸ்கர்.


பிறகும் நான் அவளை கவனித்ததில்,


டிவி சீரியல்களையே ஒதுக்கும் அளவுக்கு அதில் ஈடுபாடும், வாரமாதநாவல்களை
மறக்கும் அளவுக்கு அதில் மனம் லயிப்பதும்,
மார்கழிமாதம் வாசலில் அரிசிமாவில்போட்டு வைத்து அதற்கு அடுத்தவீட்டு
மாமிகளிடம் விடைகேட்டு உபத்திரம் செய்யுமளவுக்குபோய் விட்டாள் என்பது
தெரியவந்தது.


பாஸ்கரின் மனக்குறையைத் தீர்க்க யோசித்தேன்.


தலைமேல் சட்டென பல்பு எரிந்தது.


சுமதியின் சுடொக்கு பித்தினையே ஒரு உபயோகமான முறையில் கொண்டுபோய்விடுவது என்ற என் எண்ணத்தை செயலாக்க முயன்றேன்.


கம்யூட்டரில் ஒரு விளம்பரத்தை லேசர்ப்ரிண்ட் அடித்துக்கொண்டு அவள் வீடுபோனேன்
.
சுலோகவகுப்பு யோகாவகுப்பு போல சுடோகுவகுப்பு நடத்தக்கூடாதா என்ன ?


*இவ்விடம் சுடோ கு கற்றுத்தரப்படும். மாதக்கட்டணம் நபருக்கு நூறேரூபாய்தான்.
சுமதிபாஸ்கர்
7.முதல்குறுக்குத்தெரு
பசவண்ணா லேஅவுட்
பெங்களூர்*
விளம்பரத்தாளை நல்ல அட்டைஒன்றில் ஒட்டிக்கொண்டேன்.


"வீட்டுவாசலில் உடனே இந்த விளம்பரஅட்டைபோர்டை அவசரத்திற்கு மாட்டிவிடு சுமதி
அப்புறமாய் முறைப்படி விளம்பரப்பலகை மட்டிக்கலாம். உனக்கு இதில் உன்
எண்ணம்போலபொழுதும்போகும் வருமானமும் வரும் எப்படி ஐடியா?"


இப்படிக்கேட்க மனதிற்குள் ஒத்திகை செய்து கொண்டேன்.


ஆறுகிலோமீட்டர் அட்டோவில் பயணித்து அன்று ஆர்வமுடன் அவள் வீட்டுக்கதவைத்
தட்டினேன்..


திறந்த கதவிற்குப்பின்னே கையில் அன்னக்கரண்டியுடன் பாஸ்கர்!


'கவலைப்படாதே சகோதரா..ஷைலஜா வந்திருக்கா கவலையைத்தான் தீர்த்திடுவா கவலைப்படத
சகோதரா' அகன்ற புன்னகையுடன் ஏறிட்டேன்.


"உள்ளவாங்க"


சமையற்கட்டிலிருந்து புகைமண்டலம் தெரிந்தது. ஏதோ தீயும்வாசனை. சுமதி சுடோ கு
போட்டபடியே சமைக்கிறாள்போலும்.


உள்ளேபோனதும் பாஸ்கர் ஏதோ சொல்ல வாயெடுக்குமுன்பாக நான் பெருமையாய் விளம்பர
அட்டையைக்காண்பித்து என் திட்டத்தை கூற வாய் எடுப்பதற்குள் அவர்மகன்
மாடியிலிருந்து கிழே இறங்கினவன்,"அம்மாவைத்தேடியா வந்தீங்க ஆண்ட்டீ? அவங்க
காலைல சுடொகுக்ளாஸ்போயிட்றாங்க...நான் தினம் ஸ்கூலுக்குப் போகிற மாதிரி தினமும்
எனக்கு முன்னாடி கிளம்பிடறாங்க....சாய்ந்திரம்தான் வராங்க...
மாசம் ஐநூறுருபாயாம் இதுக்கு..... அப்பா சொன்னாரா?" என்று கேட்டான்.
***************************************************************************
மேலும் படிக்க... "சுடோகுசுமதி!"

Tuesday, March 25, 2008

நம்பிக்கை!

நேற்றைக்கிங்கோர் நெடுமரந்தன்னில் நிறைந்திருந்த பச்சிலைகளெல்லாம்,
காற்றடிக்கக் காம்பொடிந்து கதறித்தான் வீழ்ந்தனவே!
காற்றடித்து வீழ்ந்தாலும் மண்ணுக்குள் எருவாகி;
மரமதுவின் வலிமையதை மங்காது உரமாக்கும்!

சீற்றமிகு சிங்கம்போல் சீறிவந்தக் கதிரவன்தான்,
மேற்றிசையின் மலைமடியில் மோகமுடன் வீழ்ந்துவிட்டான்!
மேற்றிசையின் மலைமடியில் வீழ்ந்துவிட்ட கதிரவனும்,
ஊற்றுமொளிப் பிழம்பாகி உதித்திடுவான் கீழ்த்திசையில்!

நேற்றைகிவ்வூர் கலங்க நிமிர்ந்துவந்த மேல்காற்றோ,
ஆற்றலெலா மொடுங்கக் கீழ்ஆழிக்குள் போயிற்றே!
ஆற்றலெலாம் மீண்டுவர ஆழியிலே நீர்முகந்தே,
ஏற்றுவரு கொண்டலென இங்குவரக் காண்போமே!


--------------------------------------------------------------------------------
மேலும் படிக்க... "நம்பிக்கை!"

சின்னஞ்சிறுகதை ...

நினச்சதுஒண்ணு.


தெருவில் நடந்துகொண்டிருந்த பரந்தாமனை உரசிக்கொண்டு வந்து நின்றது அந்த பென்ஸ்கார்.
பதறிப்போய் அப்படியே நின்றுவிட்டார் பரந்தாமன்.

ரிடையராகிவிட்ட இந்த ஆறுமாதமாய் காலை எழுந்ததும் குளித்துவிட்டுக் கோயிலுக்குச்செல்வது அவரது அன்றாடப்பழக்கம். இன்றும் அதேபோல கோயிலுக்குப்போக நடந்துவந்துகொண்டிருந்தார். சீக்கிரமாய்
போகவேண்டும் ,கோயிலில் இன்னிக்கு கும்பாபிஷேகம் என்று எண்ணியபடி நிமிர்ந்தவரிடம் கார்க்கதவைத் திறந்தபடி ஒரு இளைஞன் நெருங்கினான்.

"பெரியவரே...இந்த ஏரியால ரூபா ஒயின் ஷாப் எங்க இருக்கு வழி சொல்வீங்களா?' என்றுகேட்டான்.

பரந்தாமன் எரிச்சலுடன் அவனைப்பார்த்தார். 'இவனுக்கு என்ன இருபத்திமூன்றுவயது இருக்குமா? பார்த்தாபடித்தவன் போலத்தெரிகிறான்.. பணக்காரவீட்டுப்பிள்ளைபோலும் அதனால்தான் விடிகிறபோதே இப்படி ஒயின் ஷாப்பிற்கு வழிகேட்கிறான்? இப்படி இவனை மாதிரி இளைஞர்கள் இருந்தால் நாடு எப்படி உருப்படுமாம்?' மனதிற்குள் முணுமுணுத்துவிட்டு அவனிடம் வெறுப்புடன் ரூபா ஒயின் ஷாப் செல்லும் வழியை சொன்னார்.
பிறகு அவனைத் திரும்பியும் பாராமல் நகர்ந்துவிட்டார்.

பத்து நிமிடநடையில் கோவிலுக்குள் சென்றவரை ரூபா ஒயின்ஷாப்பிற்கு வழிகேட்ட இளைஞனே
எதிர்கொண்டான்.

பரந்தாமனை பார்த்ததும் முகம்மலர்ந்தவனாய்," பெரியவரே! வாங்க வாங்க! நீங்களும் கோயிலுக்குத்தான் வரீங்கன்னு தெரிஞ்சிருந்தா என்கார்ல அழைச்சிட்டுவந்துருப்பேனே?
நான் இந்தப்பகுதிக்கு புதுசு....ரூபா ஒயின் ஷாப் இங்க பிரபலமான கடையாமே? அதை அடையாளம் சொல்லி அதுக்கு எதிர் ரோடின் முனையில் கோயில் இருப்பதாய் சொல்லி என்னை அனுப்பினார் அப்பா.
அதான் உங்களை அப்போ ரோட்ல நிறுத்தி வழிகேட்டேன். நன்றி பெரியவரே! அப்பாக்கு உடல்நிலை மோசமாய் இருப்பதால் கும்பாபிஷேப்பணி முழுக்க நான் ஏத்துக்கிட்டு இருக்கேன் ..அப்பா இடத்துல நீங்க இருந்து முடிச்சிக் கொடுக்கணும்"என்றான்., கைகுவித்துப் பணிவாக.
மேலும் படிக்க... "சின்னஞ்சிறுகதை ..."

Monday, March 24, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம் 3


"குட்மார்னிங் சாரங்!" கூவினாள் ராகினி..

இடம் ராகவ் எண்டர்ப்ரைஸின் மூன்றாவதுதளம்.

நேரம் காலை பத்துமணி பத்துநிமிடங்கள்.

சாரங்கன் அப்போதுதான் ஆபீசுக்குள் நுழைந்து வேகவேகமாய் தனது அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.

" ஓ,காட்!..பத்துநிமிஷம் லேட்டா வந்திருக்கேனே" முணுமுணுத்தபடி நடந்துகொண்டிருந்தவனுக்கு ராகினி காலைவணக்கம் கூறியது
காதில்விழவேயில்லை.

புதிய டிசைனர் சேலையில்,அதற்கு மேட்சாக கழுத்தில் சோக்கர் அணிந்துகொண்டு ப்யூட்டிபார்லரில் நேற்று ஹைலைட்ஸ் செய்துகொண்ட மெரூன்வண்ணமுடி காற்றில்பறக்க தேவதைபோல நிற்கும் தன்னை ஏறெடுத்தும்பார்க்காமல் போன சாரங்கனீன்மீது செல்லக்
கோபமாய் வந்தது.


அறைக்குள் சென்றதும் தன் இருக்கையில் அமர்ந்த சாரங்கனுக்கோ அந்த ஏசி குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது.

தாமதமாய் ஆபிசுக்கு வந்து பழக்கமில்லாததால் ஏதோ குற்ற உணர்ச்சியில் மனம் குறுகுறுக்க தவிப்பாய் காணப்பட்டான்.

இன்றும் எப்பொழுதும்போல காலை சீக்கிரமே எழுந்து குளித்து பூஜைகளைமுடித்து டிபனையும் சாப்பிட்டு ஷூ அணிந்துகொண்டு பைக்கிலேறிஉட்காரும்போதுதான் பின் சக்கரம் பஞ்சர் ஆகி இருப்பதை கவனித்தான் சாரங்கன்.

"என்ன ஆச்சு?" உரத்தகுரலில்கேட்டபடி ராதிகா அந்த நான்காவது மாடியின் பால்கனிக்குவந்து நின்றாள்.

அந்த சூர்யா அபார்ட்மெண் டில்
மொத்தம் ஆறு ப்ளாக்குகள். அதில் சி ப்ளாக்கின் நான்காவதுமாடியில்தான் சாரங்கன் - ராதிகா குடி இருக்கிறார்கள். இரண்டு பெட் ரூம் ஹால் கிச்சன் என்ற அளவிலான அழகிய ஃப்ளாட். பேஸ்மெண்ட்டில் சிறுவர்கள் விளையாட இடம் உண்டு. ஆறுப்ளாக்குகளுக்குமாய்
பெரிய நீர்த்தொட்டி, நீச்சல்குளம் . பேஸ்மெண்ட்டில் ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் வாகனங்களை நிறுத்த வசதியாய் பார்க்கிங் இருக்கிறது.

"பஞ்ச்சர் "என்றான் சாரங்கன் மேலே நின்ற ராதிகாவை நிமிர்ந்துபார்த்து.

அடுத்த நிமிடம் ராதிகா கீழே வந்துவிட்டாள். இரவு உடையோடு அவள் அப்படி தடதடவென்று ஓடிவருவதை ஃப்ளாட்டின் கீழ்க்குடி இருப்பினர் சிலர் வேடிக்கைபார்த்தனர்.

ராதிகா யாரையும் லட்சியம் செய்யாமல், ஃப்ளாட்டின் வாட்ச் மேனை உரக்க அழைத்தாள்."வேலைய்யா வேலய்யா எங்க போய்த்
தொலைஞ்சீங்க?"

"ராதிகா...அவரை எதுக்கு இப்போ அழைக்கிறே? பாவம் வயசானவர் ராத்திரி எல்லாம் தூக்கம்முழிச்சி, இப்போதான் அந்த ஓரமாய்
படுத்துதூங்க்ப்போனார்.." என்று தடுத்தான் சாரங்கன்.

"நீங்க சும்மா இருங்க... "என்று அதட்டிவிட்டு ஓடிவந்த வாட்ச்மேனிடம் சீறத் தொடங்கினாள்.

"என்னய்யா கிழவா நீ காவல் காக்கிற லட்சணமா இது? உன்னை நம்பிதானே இங்க வண்டிகளை எல்லாரும் விடறாங்க? மாசாமாசம் சம்பளம் மட்டும் வாங்கிக்கறியே ,இங்க நிறுத்தும் வாகனங்களை ஒழுங்கா கவனிச்சிக்க துப்பு இல்லயா உனக்கு? எங்க பைக்கை
யாரோ பஞ்சர் செய்திருக்காங்க அதை நீ தடுத்திருக்கவேணாமா? யு இடியட்.
..கிழவனையெல்லாம் காவலுக்கு வச்சா இதான் கதி.. அடுத்தமாச ஃப்ளாட்மீட்டிங்ல உன்னை வேலைய விட்டு எடுக்க சொல்றேன் பாரு"

"எ..எனக்கு ஒண்ணும் தெரியாதும்மா.. யா...யாரும் இங்க வரலயே?"

வாட்ச்மேன் அறுபதைக்கடந்தவர்.ராதிகாவின் கூச்சலில் அரண்டுபோய் கைகட்டிக் குனிந்து நின்றார்.

"ராதிகா ப்ளீஸ் அவரை எதுவும் சொல்லதேம்மா.." சாரங்கன் கெஞ்சினான்

"வயசான ஆளேன்னு பாக்றேன்.. இல்லேன்னா அறைஞ்சிருப்பேன் ராஸ்கல்"

"ஐயோ ராதிகா... எல்லாரும் பாக்றாங்கம்மா,,,சத்தம்போடாதேயேன்.. வாட்ச்மேன் மேல எந்தத் தப்பும் இல்ல. நாந்தான் நேத்திக்கு ஆபீஸ் முடிஞ்சி வெளிலவரப்போ பைக்கை ஆபீஸ்ல என்னோடு வேலைபார்க்கும் மஞ்சுநாத் என்பவர்கிட்ட தந்தேன் ." அம்மாக்கு உடம்பு சீரியஸ் ஆஸ்பித்ரிபோகணும் என் வண்டி சர்வீஸ்க்கு போயிருக்கு.. உங்கவண்டிதாங்க"ன்னு கேட்டார். அவர்தான் ராத்திரி பைக்கை இங்கவச்சிட்டு நான் ஆன்மீக சொற்பொழிவுக்குபோயிட்டதினாலும் ,நீ கருடாமாலுக்கு உன் தோழிகூட ஷாப்பிங் போயிட்டதாலும், பைக் சாவியை
எதிர்ஃப்ளாட் பத்ரிசார்கிட்ட கொடுத்துப் போனார். மஞ்சுநாத்துக்கே பஞ்சர் ஆனது தெரிஞ்சிருக்காது, பாவம்"

ராதிகா பட்பட் என்றுதலையில் அடித்துக்கொண்டாள்.

"அந்த மஞ்சுநாத் தடியனுக்கு வண்டியை தராதீங்கன்னு நான் முன்னமே சொன்னேன் ..அப்போ ஒருவாட்டி உங்ககிட்டே வாங்கிட்டு
3நாள்கழிச்சி திருப்பிக் கொடுத்தான். அவனும் உங்களமாதிரி அந்த ஆபீஸ்ல பெரியபொறுப்புள்ள வேலைல உள்ளவன்னு சொல்லிக்காதீங்க கேவலமாஇருக்கு"

"ச்சேசே..மஞ்சுநாத் நல்லவர் ராதிகா. என்னைவிட மூணுவயசுதான் மூத்தவர். எனக்குமுன்னாடியே இந்தக் கம்பெனில சேர்ந்து
பணிபுரியறவர் "

'அதென்னவோ அவனைக்கண்டாலே எனக்குப்பிடிக்கல.அன்னிக்கு ஒருநாள் நானும் நீங்களும் சினிமாதியேட்டர்ல இன்டர்வல்ல
பார்த்தப்போ, நீங்க முதமுதல்ல அறிமுகம் செஞ்ச நாளே எனக்கு அவனைப்பிடிக்கல..அவன் மூஞ்சியும் அவனும்.."

"யாரையும் வெளித்தோற்றம் வைத்து எடைபோடக்கூடாதும்மா..சரி...வண்டி சாவியைக்கொண்டு வீட்ல வைச்சிடு. நான் ஆட்டோ ல
போய்க்கறேன்"

'ஒரு கார்வாங்கமாட்டீங்க... கேட்டா பெங்களூர்ல இப்போ ட்ராஃபிக் அதிகம். ஆபீசுக்கு நேரத்துக்குப் போகணும்னா பைக்தான் வசதின்னு சொல்ல வேண்டியது.. ஒரு செல்போன் வச்சிக்கமாட்டீங்க..அதுக்கும் ஒரு காரணம். 'லாண்ட் லைன் போதும் எனக்கு ..ஆபீஸ்போனால் அங்க மேஜைல நாலுபோன் இருக்கு.. எனக்கு எதுக்கு செல்போன் வேறதனியா?"ன்னு சொல்லவேண்டியது.நிஜமா நீங்கஅதிசயப்
பிறவிதான்! " நைட்டீசின் லேசினை இறுக்கியபடி முணுமுணுத்தாள் ராதிகா.

சாரங்கன் சிரித்தபடி,"வரேன்ராதிகா" என்றான்.

"ஒகே நான் இன்னிக்கு சாய்ந்திரம் அஞ்சுமணிக்கு forum ல ஒரு கடைல சேல்ஸ் கேர்ல் வேலைஇருக்காம் ..
விசாரித்துவரபோகப்போறேன்..."

"ராதிகா நீ எதுக்குமா வேலைக்குப்போகணும்?நான் தான் கைநிறைய சம்பாதிக்கிறேனே?"

"ஐயோ 18ம் நூற்றாண்டு மனுஷனாட்டம் பேசாதீங்க . பெண்கள் வேலைக்குப்போவது சம்பாதிக்கமட்டுமா? வீட்லபோர் அடிக்குதுங்க...
என் படிப்புக்கு நான் என்ன சாஃப்ட் வேர் கம்பெனியிலா வேலைபாக்க முடியும்? ஏதோ இதுவே என் பழைய தோழி ஜெயந்தி
ஏற்பாடு செய்துதரேன்னா..மேலும் வீட்ல இருந்தால் ஒருநிமிஷம் வாசல் கதவைதிறந்து வச்சிக்கமுடியறதில்லை..எதிர்வீட்டு பத்ரிக்கிழம் என்னையே லுக் விடுது"

"ச்சேசே...பெரியவங்களைப்பத்தி அப்படியெல்லாம் சொல்லக் கூடாதும்மா.. சரி, நான் சாயங்காலம் ஜெய்நகர் கோயில்ல
உபந்நியாசம்கேட்டு லேட்டா தான் வருவேன்...எனக்காக சாப்பிடாம வெயிட் செய்யாதம்மா...சரியா?"

இப்படி ராதிகாவிடம் பேசிவிட்டு ஆட்டோ கிடைத்து ஏறி புறப்பட்டுவர தாமதமாகிவிட்டதில் வருத்தமாய் அமர்ந்திருந்தவனை
ராகினி, இன்ட்டர்காமில் அழைத்தாள்.

"ஒரு முக்கியமான விஷயம் பேசணும், இப்போ நான் உங்க ருமுக்குவரலாமா சாரங்?"

லாவ்ண்டர் பெர்ஃப்யும் மணக்க அறைக்குள் நுழைந்த ராகினி ,சாரங்கனைக் கண்டதும்,"வாவ்! இந்த க்ரேகலர் சூட்ல you look awesome! "என்றாள்.

"தாங்க்ஸ். என்னவோ முக்கியமா பேசணும்னீங்களே?"

ஆமாம்... நம்ம எம் .டி. இன்னும் வரவில்லை....செல்போனில் பேசமுயற்சித்தால் எடுக்கவேஇல்லை.. சாதாரணமாய் அவர் இப்படி
இருக்கமாட்டார். உங்களைப்போல கனிவும் அன்பும் மனிதர்களை மதிக்கும் நல்லபண்பும் கொண்டமனிதர். அதான் ஏதோ
கவலையாய் இருக்கிறது."

"சென்னைக்கு ஏதோ கல்யாணத்துக்கு போகபோவதாய் என்னிடமும் சொல்லி இருந்தார். எனி டைம் இங்க வந்துவிடுவார்
வெயிட்பண்லாமே போனில் தொல்லைசெய்வதைவிட?"

"சரி...கார்லதான் போயிருக்கார்...நேராய் சென்னையிலிருந்து இங்க ஆபீசுக்கே வந்துடலாம்"

"மஞ்சுநாத்தும் வந்தமாதிரி தெரியலையே? அவர் அம்மாக்கு உடம்பு சீரியஸ்னு சொன்னார் பாவம்"

" மஞ்சுநாத்தின் அம்மாக்கு சீரியசா?"சிரித்தள்ராகினி .

பிறகு,"சாரங்..வெளுத்ததெல்லம் பால் உங்களுக்கு.. அப்பாவி நீங்க. ஆனா அந்த மஞ்சுநாத் நேத்து சந்தோஷ் தியேட்டர்ல தன் கேர்ல் ஃப்ரண்ட் கூட உக்காந்திட்டு சினிமா பார்த்ததை என் தம்பி கவனிச்சிட்டான், அவன் அவங்களுக்கு பின் சீட்டுலதான் உக்காந்துந்தானாம்.
'ரண்டு சினிமா பாத்தேன்கா "ன்னு தலையில் அடிச்சிட்டான். தம்பி என்னைப்பார்க்க வந்தபோது, மஞ்சுநாத்தை ஒருநாள் நாந்தான் அறிமுகப்படுத்திவைத்தேன்.. .சாருக்கு இதெல்லம் சகஜம்"

ராகினி இப்படிச் சொல்லும்போதே தடதடவென ஷூ ஒலிக்க அந்த இடத்தில் பிரவேசித்தான் மஞ்சுநாத்.

திரைப்படவில்லனைபோன்றமுகம். ஆறடி உயரம், ஒல்லியான உருவம். ஆனால் முரட்டுத் தோற்றம் .ராகினியிடம் ஒருமுறை
மஞ்சுநாத் ஆபாசமாய்பேச ஆரம்பித்து அறைவாங்காமல் தப்பித்துப் போயிருக்கிறான். ஆளுக்கு ஏற்றபடி பேசுவதில் அவன் வல்லவன்.எம்டியிடம் அப்படிபேசிப்பழகியே நல்லபெயரை சம்பாதித்துக்கொண்டிருப்பதில் ராகினிக்கு மிகவும் கடுப்பு.

மஞ்சுநாத் அங்குவந்ததும் சாரங்கனையும் ராகினியையும் ஏறிட்டவன்;'சாரி...உத்தரவின்றி உங்க அறைக்கு வந்துவிட்டேன் சாரங்...
சூழ்நிலையின் பதட்டம் என்னை இங்க வரவழைச்சது...நம்ம எம்டி சென்னையிலிருந்து வந்துகொண்டிருந்த கார் சற்றுமுன்
விபத்துக்குள்ளாகி விட்டது. அவர் ஸ்பாட்ல மரணமாம்.. இப்பதான் எனக்கு மெசேஜ் வந்தது" என்றான்.

ஆபீசே திடுக்கிட்டது, அனுதாபமாய் சூள்கொட்டியது.

.அவரது மறைவையொட்டி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.

சாரங்கன் மனவேதனையுடன் வீடுவந்தான்.

காலிங்பெல்லை அழுத்தினான்.

நீண்டநேரமாகியும் ராதிகா வந்துகதவைத் திறக்கவில்லை.மணிபார்த்தான் , காலை மணி11 -30தான் .
இந்தநேரத்தில் ராதிகா எங்கே போனாள்?

(தொடரும்)
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்."

Friday, March 21, 2008

கோலமயில்மீதேறி.....

பங்குனி உத்திரத்தைமுன்னிட்டு இன்று இந்தப்பாடலை முருகப்பெருமானுக்கு சமர்ப்பிக்கிறேன்.


கோல மயில் மீதேறி ஏன் இங்கு வந்தாய்?
கோரும் அடியார்கள் வினை தீர்த்தருள நின்றாய்!

பாயுமொளி போலவோ உன்கருணை உள்ளம்?
பார்க்கத்தான் வந்ததிங்கு பக்தர்பெருவெள்ளம்!

உத்திரத்திற்கு இன்று உன்னால்தானே மகிமை?
உன்புகழைப்பாடுவதே எங்களுக்கு பெருமை!

பக்தர்களுக்கு அருள்வதுதானே உன் வாடிக்கை?
பணிவான உள்ளங்களே இங்குனக்குக் காணிக்கை!

ஈசனுக்குபதேசம் செய்தவனும் நீயோ?
ஈன்றவளாய் காப்பதால் நீ எங்கள் தாயே!

வற்றாத நதிபோலும் பெருகுமோ உன் அருள்?
வந்து விடும் புதுஒளியில் மறையுமே எங்கள் இருள்!

பாமாலை பலகொண்ட உனக்குண்டோ ஈடு?
(உனை)பாடுவதால் பக்தர்க்குக் கிடைக்கும் மறுவீடு!
மேலும் படிக்க... "கோலமயில்மீதேறி....."

காலமெல்லாம் காத்திருப்பேன்!

அத்தியாயம்2*
**
*காலமெல்லாம் காத்திருப்பேன்*
*************************************************


மாலதி, டில்லியில் சாரங்கனோடு அலுவலகத்தில் ஒன்றாய் பணி புரிந்தவள். அறிவும்
அடக்கமும் அழகும் சேரும்போது அங்கே அலாதியான முகக்களை ஏற்படுமே
கவனித்திருக்கிறீர்களா அது மாலதியிடம்
ஏராளமாகவே உண்டு.


பலவருஷங்கள்முன்பே தொழில்நிமித்தம் டில்லிக்குக் குடிபெயர்ந்த பலகுடும்பங்களில்
மாலதியின் குடும்பமும் ஒன்று. மாலதியின் அப்பா பூமிநாதன் பிரபல மேஜிக் நிபுணர்.
தன் ஒரே வாரிசான மாலதியை தனக்குப்பின் இந்தக்கலையைக்கற்று அந்தக்கலையை மேலும்
பிரபலப்படுத்த நினைத்தார். மாலதி கற்றுக் கொண்டாள்.ஆனால் அப்பாவைப்போல அதையே
தொழிலாக்கிக்கொள்ள அவள் மனம் இடம் தரவில்லை. இலக்கியம் சமூக சேவை ஆன்மீகம்
என்றே சின்னவயதிலிருந்து அவைகளில் மனம் நாட்டம் கொண்டுவிட்டது. அதனாலேயே
ஏறக்குறைய தன் ரசனைக்கேற்ப இருந்த சாரங்கனின் மீது அவளுக்கு பற்று ஏற்படது.
அழகுதேவதையான மாலதியின் கடைக்கண்பார்வைக்கு எத்தனையோ டில்லி இளைஞர்கள்
ஏங்கித்தவமிருக்க அவளோ சாரங்கனை மானசீகமாய் விரும்ப ஆரம்பித்தாள்.


பெண்கள் இலேசில் காதல்வயப்படமாட்டார்கள், அப்படிப்பட்டுவிட்டால் அதை
நிறைவேற்றிக்கொள்ள எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.


அன்று அலுவலக லஞ்ச் நேரத்தில் தனிமையில் சாரங்கனை சந்தித்து தன்
உள்ளக்கிடக்கையை தெரிவித்துவிட தீர்மானித்தாள். ஆனால் பாழாய்ப்போகிற நாணம்
பேசவிடாமல் தடுத்தது. இந்தகாலத்துப்
பெண்தான் என்றாலும் அவள் வளர்ப்பு அவளுக்கு சில நியதிகளை நினைவுபடுத்தியது.
மனதுக்குப்பிடித்த ஒரு ஆணை அழகினால் வசப்படுத்துவதைவிட அறிவினாலும் அன்பினாலும்
நெருங்குவது எளிது என்பதை புரிந்துகொண்டிருந்தாள்.


தன் உணர்ச்சிகளைக் கவிதையாக்கிக் கொண்டாள்.


பூரியும் ஆலுகோபியும் தட்டில் வைத்துக்கொண்டு மேஜையில் சாப்பிடத்தயாரான
சாரங்கன் தன் அருகில் மாலதி வந்தி நிற்கவும் திகைப்புடன்," வாங்க மாலதி லஞ்ச்
ப்ளேட் எடுத்துட்டு இப்படி உட்காருங்க" என்று தன் அருகில் இடம் கொடுத்தான்.


"உங்க மனசிலும் எனக்கு ஓர் இடம் வேண்டும்சாரங்கன்" என்று தன் மனம்
அடித்துக்கொள்வதை மாலதி உணர்ந்தாள்.


'என்ன ஆயிற்று எனக்கு? பருவம் மட்டுமல்ல அந்தப்பருவ வயதில் சொல்லாமல்
கொள்ளாமல் வருவது
காதலும் தானோ? காதல் வந்தால் மனம் சிறகடித்துத்தான் பறக்குமோ?ஆதே நேரம் மௌனமே
பார்வையாய் நாணமே ஜாடையாகியும் விடுமோ?


என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது?'


தயங்கி நின்றாள சிலக்கணம். ஆனாலும் இதைவிட்டால் பிறகு சாரங்கனை சந்திக்க இப்படி
ஒரு வாய்ப்பு கிடைக்காது என நினைத்து சட்டென சொல்ல ஆரம்பித்தாள்.


"சாரங்! நான் ஒரு கவிதை எ.எழுதி இருக்கிறேன்" என்று சொல்லி நிறுத்தினாள். சந்தன
நிறத்தில் கடைந்த சிற்பமாய் புன்னகைதவழ பறித்த புது மலராய் அருகில்வந்து
நின்றவளை பரவசமாய்ப்பார்த்தான்
சாரங்கன்.


"சொல்லுங்க மாலதி.ஆய கலைகள் அறுபத்தி நாலில் உங்களுக்கு தெரியாத கலைகளே
இல்லைபோலிருக்கே? பாட்டு ஓவியம் படிப்பு மேஜிக்கலை இப்படி ஏற்கனவே கையில்
திறமைகளோடு
இருக்கீங்க..இப்போ கவிதையுமா? எனக்குக்கவிதை எழுத வரது ஆனா படிக்கப்பிடிக்கும்
எங்கே உங்களது கவிதைகள்?"

மாலதி தன்கைகளை நெஞ்சுக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு சாரங்கனையே
ஆழமாய்ப்பார்த்தாள் பிறகு சொல்ல ஆரம்பித்தாள்.


" உனக்காக சிரிக்கும்
இந்த உதடுகளுக்கு '
வத்துவிடாதே நெருப்பு


உனக்காகப்பறக்கும்
என்மனப்பறவையின்
சிறகுகளை
வெட்டக்கூடாதது
உன் பொறுப்பு


விரல்களைவெட்டினால்
வீணையா வாசிக்கமுடியும்?
விரிக்காத காதல்வலையில்
வீழ்வதும் ஒருசுகம்தானே?


உன் கடைக்கண்பார்வைக்கு
சம்மதமே பொருளானால்
அந்தப்பார்வைக்காய் நான்..
காலமெல்லாம் காத்திருப்பேன்"


உணர்ச்சிபூர்வ்மாய் சொல்லிமுடித்தவள், சாரங்கனை மறுபடி அர்த்தம் நிறைந்த பார்வை
பார்த்தாள்.


சாரங்கனுக்குப்புரியாமல் இல்லை.இது கவிதை அல்ல என்பதை அவனும் உணர்ந்தான்.
உணர்ந்தாலேயன்றி உணர்வுகளை மதிக்கவும் இயலாது.


மாலதியைப்போன்ற அழகானபுத்திசாலியானபெண் தனக்குக் கிடைக்ககொடுத்து
வைத்திருக்கவேண்டும் என எண்ணும்போது மனம் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்தது.
தன்னை அவள் நேசிக்கிறாள் எனும் நினைவே நெஞ்சை நிறைத்தது. .நேசிப்பதைக்காட்டிலும்
,நேசிக்கப்படுவது சிறப்பானது.


ஒருக்கணம்தான் அந்த இனிய உணர்வுகளில் மிதந்தான் அடுத்தகணமே
சுதாரித்துக்கொண்டான் சாரங்கன்
காலங்காலமாய் காதலுக்கு குறுக்கே நிற்கும் ஜாதிமதம் அதன் உட்பிரிவுகள் என்னும்
தடைகள் சீனிவாசன் குரலில் அசரீரியாய்காதில் விழுந்தன.மதம் ஒன்றானாலும் ஜாதி
உட்பிரிவுகளைக்காட்டி சீனிவாசன் மாலதியை தனக்கு மனைவியாக்கமாட்டான்
,வறட்டுக்குடும்பப்பெருமைபேசி திரியும் சிலமனிதர்களில் அவனும் ஒருவன்என்பதை
சாரங்கன் நினைத்துப்பார்த்தான் .மீறி செய்துகொண்டால் சீனிவாசன் தன் கோபத்தை
அக்காவிடம் காட்டிவிடுவான் என்பதையும் நினைத்தபோது உடம்பேநடுங்கியது.


மனதை அடக்கிக்கொண்டான்.


பிறகு மாலதியிடம்," அருமையான கவிதை மாலதி. பத்திரிகைகு அனுப்புங்க..இணையத்துல
போடுங்க நல்லாருக்கு"என்றான் .


மாலதி அவனைவிடவில்லை ,அப்போது சாரங்கன் வேறுவழியின்றி சீனிவாசனைப்பற்றிச்
சொல்ல வேண்டிவந்தது.


மாலதி மறுவாரமே அவனை சந்திக்க கிராமத்திற்கு வந்தாள்.பேசிப்பார்த்தாள்.ஆனால்
சீனிவாசனோ,
"போம்மா வெளில.. வீரசைவ வெள்ளாளர்குடும்பம் இது, இங்கவந்து சம்மந்தம்பேசறவங்க
இதுல உள்பிரிவுல மாறி இருந்தாக்கூட நான் சம்மதிக்கமாட்டேன்...உன் குடும்பம்
இந்த பிரிவுல இல்ல...குலம்கோத்திரம் பாக்காம கண்ணாலம் செய்றது எங்ககுடும்பத்துல
கிடையாது ..காலம் எவ்வளொ மாறினாலும் இதையெல்லாம் கெட்டியாபிடிச்சிட்டு
என்னைமாதிரி இதுக்குக்காவலா இருக்கறவங்களும் இருக்காங்க.. அதான் இந்த கலாசாரம்
அழியாம இருக்குது. இந்தவீட்ல காதலும் கத்திக்காயும் நுழையமுடியாது
தெரிஞ்சுதா போ போ"என்று சீறிஅனுப்பிவிட்டான்.


சுமித்ரா, பதட்டமுடன் மாலதிக்குப் பரிந்துகொண்டுவந்தபோது கையிலிருந்த
குடையினால் அப்படியே அவளைஒருசாத்துசாத்தினான் சீனிவாசன். .நிலமை புரிந்து மாலதி
வெளியேறிவிட்டாள்.


டில்லிவந்த அடுத்த வாரமே ஒருநாள் அலவலகத்தில் நேரே எம்டியிடம் சென்று தனது
ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டாள்.


சாரங்கனின் கேபினில் ஒருகவரைவைத்துவிட்டு மௌனமாய் சென்றுவிட்டாள்.


சாரங்கனுக்கு அவன் அக்காமூலமாய் எல்லாவிஷயமும் தெரிந்திருந்தது வேதனையுடன்
அந்தக்கவரைப்
பிரித்தான். கவிதை எழுதிய அந்தக்கவிதையை நெஞ்சு கனக்கப் படிக்கத்தொடங்கினான்.


உச்சந்தலையில் நெருப்புகிரீடம்
உருகிக்கொண்டே
மெழுகுவர்த்திதருவது
வெளிச்சம்


இயந்திரப்பற்கள்
இடையே மிதிபடும்
கரும்புதருவது
சக்கரை


உன்னிடமிருந்து
உடலால்
விலகிப்போகும்
என்னுள் உன் நினைவுகள்
என்றும் அழியா சித்திரம்


புனரபி ஜனனம்
புனரபிமரணம்
மறுஜன்மம்
அதுவே என் தருணம்


சாரங்கன் கண்கலங்கியது. மென்மையும் தன்னை இறுக்குவதை உணர்ந்தபோது தன்மீதே
வெறுப்பாகவும்வந்தது. ஆனால் வளர்த்து தன்னை ஆளாக்கிய அக்காவை நினைத்தபோது
காதல்உணர்வு நீரலைமேல் தோன்றிய நிழலானது.
கவிதைத் தாளைக் கிழித்துப் போட்டவன், மாலதியை அக்கண்மே அடியோடுமறந்தான்.


அடுத்த சில நாட்களில்பெங்களூருக்கு வேலைமாற்றல் கேட்டுவந்துவிட்டான்...அடுத்த
சிலமாதங்களில்
சீனிவாசனே மனம் உவந்து தேடிப் பார்த்துவைத்த பெண்ணின்கரம்பிடித்தான்.


அழகுச் சிலையாய் இருந்தாள் ராதிகா. ஆனால் அவளிடம் அலட்சியமும் ஆணவமும் பேச்சில் தெறிப்பது
புதுக்கணவனான சாரங்கனுக்குபுதிராய் இருந்தது.


ஒவ்வொரு ஆனின் சுபாவத்திற்குள்ளும் பெண்தன்மை இருக்குமாம் அதேபோல ஒவ்வொரு
பெண்ணிற்குள் இலேசான ஆண்தன்மையும் இருக்குமாம்.

ராதிகாவின் சுபாவம் , பிறகு பேராபத்தில் கொண்டுவிடப்போவதை அப்பாவியான சாரங்கன்
அறிந்திருக்க நியாயமில்லைதான்
(தொடரும்)
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்!"

Thursday, March 20, 2008

சின்னஞ்சிறுகதையே!

சின்னஞ்சிறுகதை(1 )

இருகோடுகள்
***************************


பேரனின் பிறந்த நாளுக்கு வாங்கிய பெரிய கப்பல் வடிவ கேக் அப்படியே நிறைய
மீந்துவிட்டதையும்

சாக்லேட்டுகள் கொட்டிக்கிடப்பதையும் சிதம்பரம் கவனித்தார்


சட்டென அவருக்கு வீட்டு வேலைக்காரி அபிராமியின் நினைவு வந்தது.


இருபதுவருஷத்துக்கு மேலாய் வீட்டில் விசுவாசமாய் வேலைசெய்யும்
ஏழைப்பெண்மணி.

குடிகாரப்புருஷன் ஐந்துகுழந்தைகள் என்று கஷ்ட ஜீவனம், அவளுக்கு இந்த
கேக்கும் சாக்லெட்டுகளும் போகட்டுமே!

சிதம்பரம் தனது தாராள மனதைத்தானே மெச்சிக்கொண்டவராய் மனைவிமருமகளை
அழைத்துவிஷயத்தை சொன்னார்.


"இம்புட்டுகேக்கும் இத்தினி சாக்லேட்டுக்கும் எங்க வீட்டுக்கா?" என்று
அபிராமி நம்பமுடியாமல்
கேட்டபோது சிதம்பரம் அலட்சியமாய் சிரித்தார் .

'ஆமாம் நாங்கள்ளாம் வாரித்தான் வழங்குவோம்...எடுத்துட்டுப்போ.."


ஒருவாரம் கழித்து சிதம்பரம் , சூப்பர்மார்க்கெட் ஒன்றில் உதவும் நெஞ்சங்களின் உரிமையாளரான நடராஜனைப் பார்த்தார். எப்போதாவது அந்த அனாதை இல்லத்திற்கு ஆயிரம் இரண்டாயிரம்ரூபாய்கள் என்று நன்கொடை கொடுப்பது அவரது வழக்கம் ,அதுவும்
நண்பர்களிடம் நிதிதிரட்டித்தான்.


நடராஜன் வணக்கம் சொல்லிவிட்டு,'"போனவாரம் உங்க பேரனுக்கு பிறந்த
நாள்அமர்க்களம் போல இருக்கு?" என்றுகேட்கவும் சிதம்பரம்அதிர்ந்தார்.


அவரை அழைக்கவே இல்லையே, எப்படித் தெரிந்தது என வியந்தார்.


குழப்பமாய் தன்னைப்பார்த்தவரிடம் நடராஜனே தொடர்ந்தார்.


"உங்க பேரன் பிறந்த நாளுக்கு வெட்டியகேக் துண்டங்களும்,சாக்லேட்டும்
எங்க இல்லத்தின் அனாதை குழந்தைகளுக்கெல்லாம் வந்ததே ? உங்கவீட்டு வேலைக்காரஅம்மா- பேரு- அபிராமினு சொன்னாங்க, அவங்க ஆசையா குழந்தைகளுக்கு உங்க பேர் சொல்லி கொடுத்தாங்க..
' நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே
பொசிந்தமாதிரி ' உங்க தர்ம சிந்தனை உங்கவீட்டு பணியாட்களுக்கும் இருக்கே?"என்றார் மகிழ்ச்சியும் வியப்புமாய்.


சிதம்பரத்திற்கு கண்முன் இருகோடுகள்தெரிந்தன அதில் சிறுகோட்டில்தான்
நிற்பதை உணர்ந்தார்
மேலும் படிக்க... "சின்னஞ்சிறுகதையே!"

Wednesday, March 19, 2008

உங்களில் யாருக்காவது?:)

ஏகப்பட்ட போன் கால்ஸ்(அட நெஜமாத்தான்) எக்கச்சக்க
மெயில்ஸ்! ஏழெட்டு கொரியர் பார்சல்கள்(தம்பி உடையாள் பரிசுக்கு
அஞ்சாள்!) காலை( கனவுல தான்)ப்ருத்விராஜுடன் ப்ரேக்ஃபாஸ்ட்!
இயக்குநர்சங்கர்(என் அடுத்தபடத்துக்கு உங்களோட வானைத்தொடலாம் வா நாவலை
எனக்குத்தாங்க) தொடர்ந்து, ரெஹ்மானின் இசைஅமைப்பில்"சின்னமலைக்காட்டு
சிறுக்கியே,உன் சின்ன இடுப்பினில் நான்
வழுக்கியே..'பாட்டு ,ஸ்ரீனிவாசுடன் ,காதுல ஹெட்போன் மாட்டிக்கொண்டு..
(இதுவும் கனவே வேறெதுவே?:))

இந்த உற்சாகத்துல உணர்ச்சிவசப்பட்டோ என்னவோ வந்த விருந்தினருக்கு
ஃபில்டர் காபிகொடுக்க(கலக்கப்போவது நானே என்பதால்:)
குளிர்பதனப்பெட்டியை ஆவலுடன் திறந்தேன்.அதிலோ....


நேற்றைய வற்றல்குழம்பும் அடைமாவும் அட்டகாசமாய் சிரித்ததே தவிர
பால்பாக்கெட்டுகளைக் காணவில்லை.


அப்போதான் நினைவுக்குவந்தது காலையில்பால்பாயசத்துக்கு(கவனிங்க
பால்பாயசம்தான் மைபா இல்ல):) எல்லாபாலையும்
ஊற்றிகாலிசெய்துவிட்டதை..ஆனால் பத்துமணிக்கு ராஜ்ஷாப்பிலிருந்து
வழக்கம்போல பால்பாக்கெட் வந்திருக்கணுமே? பிறந்த நாள் குஷில
அதைநான் கவனிக்காம விட்டுவிட்டேன்.


இந்த விருந்தினர்கள் எல்லாம் பலநேரங்களில் நான் படைபலம் இல்லாமல் தனியாய்
நிராயுதபாணியாய்(அதென்ன நிராயுதபாணியோ? சக்கரபாணி தெரியும் சாரங்கபாணி
தெரியும் ,இதுக்கு என்ன சரியான அர்த்தம்?) வீட்டில் இருந்தேன்
வந்தவர்களை அமரவைத்துவிட்டு நான் கடைக்கு பையை எடுத்துட்டுப்போகலாமா
சொல்லுங்க?


வழில மாமிங்க நாலுபேரு கிடைப்பாங்க பேசியே ஆகணும் அன்புத்தொல்லை
அதிகமே(சரிசரி அடங்கு ஷைலஜாங்கறீங்களா ஓகே ஓகே:)


அதனால ஆபத் பாந்தவனான என் அலைபேசியை எடுத்தேன்.


ராஜ் என்றபேர்கண்டதும் எண்கள் ஓடோ டிவந்தன.


எதிர்முனை லைனுக்கு வந்ததும்,"ஹலோ? உடனே நாலுபாக்கெட்பால் அனுப்புங்க...
10மணிக்கெ வந்திருக்கணும் என்னாச்சு இன்னிக்கு?
நானும் பிசி கவனிக்கவே இல்ல... ப்ரெட்,
கோடம்பி(கன்னடதுலமுந்திரிப்பருப்பு) திராட்சை பச்சைக்கற்பூரம்
இதெல்லாமும் அனுப்புங்க என்ன?" என்றேன் வேக வேகமாக.விருந்தாளிகள் என்
சுறுசுறுப்பைப்பார்த்து வியக்கவேண்டாமா என்ன?


எதிர்முனை ஒருக்கணம் அமைதியாய் இருக்கவும்,"ஹலோ? கடைல பையன் இல்லியா
என்ன?' என்று கேட்டேன்.
"இது கடையே இல்ல"


என்றுபதில்வந்தது
"வாட்? ராஜ் ஷாப்தானே நம்பர்சரிதானே?"


"ராஜ் வரை சரிதான்"


எதிர்முனை சிரித்தது .பிறகு," உங்க தோழி பவித்ராவின் ஹஸ்பண்ட் ராஜ்
நான்...ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங்குல இருக்கேன் ...."என்று சொல்லி
சிரித்தார்., நல்லவேளையா!!


ஐய்யெயோ ஸாரி ஸாரி


நோப்ராப்ளம்


ராஜ் ஷாப், பவித்ராவின் கணவர் ராஜ் - இருவருக்கும் ராஜ் என்ற ஒரே
பெயரில் . என் செல்போனில்.பதித்துக்கொண்டுவிட்ட என் புத்திசாலித்தனத்தை
என்ன சொல்வது?:):)


என்முகம்போனபோக்கை விருந்தாளிகள் ஏறெடுத்துப் பார்ப்பதற்குள்
வேறுஅறைக்கு ஓட்டமெடுத்தேன்.
உங்களில் யாருக்காவது இப்படி மாட்டிக்கொண்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?


***************************************************************************
மேலும் படிக்க... "உங்களில் யாருக்காவது?:)"

காலமெல்லாம் காத்திருப்பேன்(மெகா தொடர்)

இது ஒரு காதல்-க்ரைம் தொடர்

சாலையில் செல்லும் இளம்பெண்கள் எல்லாம் ஒருநிமிஷம் தடுமாறி நிற்கிறார்கள் என்றால் அந்த இடத்தில் சாரங்கன் நடந்துபோய்க்கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்! ஊட்டிகேரட் நிறத்தில் ,ஆறடி-அரை அங்குல உயரத்தில், கொஞ்சம் சூர்யா கொஞ்சம் ப்ருத்விராஜ் என்ற கலவையிலான முகத்தில் அனைவரையும் கவரும் புன்னகை கொண்ட சாரங்கன் படித்த (எம்பி ஏ) படிப்புக்கு சிறிதும் அலட்டிக்
கொள்ளாத அடக்கம், எளிமை!

முதல் அத்தியாயத்தின் முதல்பாராவிலேயே சாரங்கனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறபோதே உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே?

யெஸ் யு ஆர் கரெக்ட்!

சாரங்கன் தான் இந்தக்கதையின் கதாநாயகன்!
அவனப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்..

பெயர்..சாரங்கன் என்னும் சாரங்.

தொழில்.. பெங்களூரில் ராகவ் எண்ட்டர்ப்ரைசஸ் என்றபிரபல கம்பெனியில் தலமைப்பொறுப்பாளர்.

விருப்பம்...உபந்நியாசங்கள் ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்பது.

கொள்கை..பெண்மையைமதிப்பது அவர்கள் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது.

குணங்கள்-வாய்மை நேர்மை பொறுமை,

வயது..மார்ச் பத்தொன்பதாம் தேதிக்கு இருபத்தி ஏழு

நண்பர்கள் ,.. அனைவரும்.

கல்யாணம்... அண்மையில் ஆனது மனைவிபெயர் ராதிகா.

மறந்தது.. காதலித்த மாலதியை

இனி கதைக்குள் செல்லலாம்.

ராகவ் எண்ட்டர்ப்ரைசஸில் அனைவரது அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமான சாரங்கன், ராகினியை அதிகமாய்க்கவர்ந்தான். அவன்மீது அவளுக்கு ஒருகண் அல்ல இரண்டுகண். "வாட் எ நைஸ் கை ! இவனை மூணுமாசம்முன்னாடி நான் பார்த்திருக்கக்கூடாதா? வளைச்சிப்பிடிச்சிப்போட்டிருப்பேனே என் வலைக்குள்? யாரோ ராதிகாவாமே அவளுக்கு அடிச்சிருக்கு ஜாக்பாட்!" என்று ராதிகாவைப்பார்க்காமலேயே அவள்மீது பொறாமைப்பட்டாள். ராகினி அந்தக்கம்பெனியில் முக்கியபொறுப்பானபதவியில் இருப்பவள். ஷ்ரேயாவின் உடல்வாகில்,ஜோதிகாவின் துறுதுறுப்பான முகவெட்டில் கம்பெனியில் பல ஆண்களின் காதல்தேவதை.

சாரங்கன் சுபாவத்திலேயே சாது என்றாலும் சின்ன வயதில் தாய் தந்தையை விபத்தில் இழந்ததும் அவனை விட பத்துவயது மூத்தவளான அக்கா சுமித்ராவின் வீட்டில் தான் வளர்ந்தான்.

சுமித்ராவின் கணவன் சீனிவாசன் ரேஸ், சீட்டு, போதைப்பொருட்கள் ,குடி என சகல கெட்டப்பழக்கங்களுக்கும் அடிமையாகி இருந்தான் .சுமித்ராவை அடித்துத்துன்புறுத்துவான் .
ஆனால் சாரங்கனிடம் மட்டும் வெறுப்பைக்காட்டமாட்டான் .தனக்குக்குழந்தை இல்லாததால் பிற்காலத்தில் சாரங்கன் தனக்கு நன்கு சம்பாதித்து உதவுவான் என்று அவனிடம் குழைவான். ஆனாலும் சுமித்ராவை வார்த்தைகளாலும் தன் செய்கைகளாலும் சித்திரவதை செய்வான். சாடிஸ்ட்.

சாரங்கன் நன்குபடித்து டில்லியில் வேலைகிடைத்துபோகும்போது அக்காவையும் அவள்கணவனையும் தன்னோடுவரும்படி அழைத்தான்.

"டில்லி பாஷை தெரியாத ஊருப்பா.. எனக்கு இங்க வாய் நிறைய வெத்திலபோட்டுக்கிட்டு சீட்டுவிளாடிட்டு ஊரை ஜாலியா சுத்தணும் நமக்கு அந்த ஊரு சரிப்படாது உங்கக்காவை வேணாகூட்டிப்போ.. அவளுக்குத்தான் தஞ்சாவூர்பக்கத்து இந்தகிராமம் போரடிச்சிருக்கும்"என்றான் சீனிவாசன்.

ஆனால் சுமித்ரா தம்பியோடு டில்லிபோகவில்லை.சினிவாச்னை ஊரில் தனியே விட்டால் இன்னும் கெட்டப்பழக்கங்களில் மூழ்கிவிடுவான் என்று அவள் தங்கிவிட்டாள்

"சாரங்கா! மாசாமாசம் உன்சம்பளப்பணத்துல பாதி இங்கஅனுப்பணும் தெரிஞ்சுதா?'

'அனுப்பறேன் மாமா..நீங்கமட்டும் அக்காவைஅடிக்காம கொள்ளாம அன்பா வச்சிக்கிட்டால் ,முழுசம்பளமுமே அனுப்பிடறேன்' என்று சொல்ல தைரியமின்றி தலையைமட்டும் ஆட்டினான்.

அக்காவைப்பிரியும்போது கண்ணீர்முட்டியது.
சுமித்ரா அவனின் உச்சந்தலையைக் கோதிவிட்டு,"போய்வா தம்பீ, நல்லாஇருப்பா...கல்யாணம் கட்டிக்
கிட்டா உன் மனைவியை அன்பா அனுசரணையா வச்சிக்கோப்பா.. உன் மாமாமாதிரி சந்தேகப்படறதும் வார்த்தைகளிலும் தீக்குச்சியிலும் சுடறதுகூடாதுப்பா"என்று சொல்லி விசும்பினாள்.

"அக்கா !என் குணம் மென்மைன்னு உனக்குத்தெரியாதா? அதுசரி, நீ இவரோட 20வருஷம் வாழ்ந்து என்னபலன் கண்டேக்கா?உதறித்தள்ளிட்டு என் கூட டில்லி வந்துடு ..உன்னை தங்கமா வச்சி நான் காப்பத்தறேன்.."

"எப்படி சாரங்கா விடறது? நம்ம அம்மா அப்பா நம்மை அப்படி வளர்க்கலயேப்பா..?அதிகம் படிக்கலேன்னாலும் அன்பினால் ஆகாதது எதுவுமில்ல பொறுத்தார்பூமி ஆள்வார்னு பெரியவங்க சொல்லி கேட்டு இருக்கேனேப்பா? என்னிக்காவது நமக்குவிடியும், ஒளிபிறக்கும்னு நம்பறேன் ...நீ போய்வாதம்பி!"

டில்லி சென்ற சாரங்கன் தவறாமல் மாதாமாதம் பணம் அனுப்பினான். லீவில் ஊருக்குவரும் போதெல்லாம்
நிறைய பொருட்களுடன் வருவான்.

அடுத்தமுறை அவன்வரும்பொழுது அவைஎல்லாம் காணாமல் போயிருக்கும்.சுமிதரா வேதனையுடன்
சொல்வாள் ,: எல்லாம் சீட்டாட்டத்துக்கும் குடிக்குமே பணமா மாறிப் போயிடுதுப்பா.. என்கிட்ட சொல்லமலேயே.."

"ஏன் அக்கா இதை நீ தட்டிக்கேக்ககூடாதா?"

"கேட்டதுக்குக் கிடச்ச பரிசைப்பாருப்பா.."

சுமித்ரா கைகளின் பின்புறத்தையும் பாதங்களையும் காண்பித்தபோது சாரங்கன் காண சகியாமல் கண்களைமூடிக்கொண்டான்.

ஊருக்குப்புறப்படும்போது சீனிவாசன் ,"சாரங்கா உனக்கு திருவாரூர்ல ஒருபொண்ணு பாத்ருக்கேன்.. டிகிரிபடிச்சிருக்காம்..பாக்க நல்லாவே இருக்கு..உனக்கு சரியான ஜோடிதான் உயரத்திலும் நெறத்திலும்"என்றான்.

"தம்பியும் ஒரு வாட்டி நேர்ல பாத்துசொல்லவேணாமாங்க?"

"என்னடி அவன்பாக்கணும் ?நாம் வளர்த்தபுள்ளை 'தாலிகட்றா'ன்னா கட்றான்.. பாக்கணுமாமே? ஏன் உனக்குபாக்கணுமா?என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு, நாயே.. ?அடி பின்னிடுவேன்.." மேலும் கெட்டவார்த்தைகளோடு பெல்ட்டைக் கழற்றினான்.

"மாமா நீங்க சொல்ற பொண்ணையெ கட்டிக்கறேன் .அடுத்தவாட்டி ஊருவரப்போ நிச்சயம் செய்துடுங்க."
என்று கலங்கிய கண்களுடன் அக்காவைப் பார்த்தபடியே சாரங்கன் கிளம்பினான்.

சீனிவாசனுக்கு பயந்தே அவன் டில்லிஅலுவலகத்தில் தன்னை தீவிரமாய்காதலித்த மாலதியை
நிராகரிக்கவேண்டிவந்தது. ஆனால் மாலதி விடவில்லை.

மாலதீ?

அவளைப்பற்றி...
(அடுத்த அத்தியாயத்தில்)
மேலும் படிக்க... "காலமெல்லாம் காத்திருப்பேன்(மெகா தொடர்)"

Tuesday, March 18, 2008

மாலை ஒண்ணு கட்டிவச்சேன்.

மனசுக்குள்ள நீதான்னு
மஞ்ச சிறகடிச்சி
வண்ணத்துப்பூச்சி ஒண்ணு
என்காதோரம் சொல்லியதே.

கொஞ்சம் போல குங்குமத்த
நெஞ்சுமேல சரியும்படி
நெத்தியிலே இட்டுக்கிட்டு
மஞ்சணத்திப்பூ எடுத்து
மாலையொண்னு கட்டி வச்சேன்.


சாணத்தைத்தட்டிக்கிட்டே
நாணத்தை உன்கிட்ட
ரகசியமா அனுப்பி வச்சேன்.


உன் நெனப்பில் நான் தவிச்சி
ஊனுருகக் கிடந்ததெல்லாம்
சோலையிலே உலாவரும்
காத்துக்குத் தெரிஞ்சிடுச்சி
கருக்கல்லில் குளிக்கையிலே
காவிரிக்கும் புரிஞ்சிபோச்சி.


ஆசைமுகம் மறந்துடாம
அத்தைமகன் நீ வரணும்
ரோசாப்பூமாலைபோட்டு
ஜோராக தழுவிக்கணும்.


உன்மேல கொண்ட காதல்
உயிர்சுமக்கும் கர்ப்பமய்யா
ஊருக்குத் தெரியுமுன்னே தாலிக்
கயிறோடு வரவேணுமய்யா
மேலும் படிக்க... "மாலை ஒண்ணு கட்டிவச்சேன்."

Tuesday, March 04, 2008

சின்னத்திரையிலும் பெரியதிரையிலும் சீரழியும் குழந்தைகள்.

சின்னத்திரையிலும் பெரியதிரையிலும் சீரழியும் சின்னக்குழந்தைகள்
**************************************************************

சின்னவயதில் பெற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தனக்கென்று சுயமான பாதை எதுவும் தெரியாது. அப்பாவும் அம்மாவும் கைபிடித்துக்கூட்டிப்போகும் பாதைதான் அவர்களின் பாதையாகிறது.

பலருக்குத் தாங்கள் திரைநட்சத்திரமாக முடியாத ஏக்கத்தை அல்லது வெறியை தங்கள் வாரிசுகளின் மூலமாய் தீர்த்துக்கொள்கிறார்கள். குழந்தைகளும் ஒரு கட்டத்தில் தங்களைச் சுற்றிவிழும் ஆடம்பர வெளிச்சத்தை விரும்பி மாயவலையில் விழுந்துவிடுகிறார்கள்.வளரவளர அதற்காக படிப்பை இதர லட்சியங்களை அழித்திக்கொள்ளவும் சித்தமாகிறார்கள். பள்ளி செல்லும் பருவத்தில் தங்களது அடித்தளத்தையே
மாற்றிக்கொண்டு படப்பிடிக்குப்போகிறார்கள்.

ஹாலிவுட்டில் குழந்தை நட்சத்திரங்களுக்கு அரசாங்க விதிகள் இருப்பதால் சனிஞாயிறில்தான் ஷூட்டிங் செல்வார்களாம். அதிலும் அஞ்சுமணிநேரத்துக்குமெல் அங்கு குழந்தைகளை வேலைவாங்கக்கூடாதாம். தப்பித்தவறி பள்ளிநாட்களில் படப்பிடிப்புக்குவந்தால் பள்ளி
ஆசிரியரே ஸ்பாட்டுக்கு வந்து பாடம் சொல்லித்தரணுமாம்.

ஆனால் இந்தியாவிலோ தங்களது எதிர்காலம் எப்படிப்போகும் என்றே அறியாமல் குழந்தைகள் பள்ளியைவிட்டு படப்பிடிப்புக்கு வருகிறார்கள்.இதுவும் குழந்தைத்தொழிலாளர்களுக்கு நடக்கும் கொடுமைதானே?

இப்படிப்பட்ட குழந்தைகளின் வலி நிறைந்த வாழ்க்கையை ஒளியோடு தருகிறார் நடிகை ரோகினி ஒரு ஆவணப்படம் மூலமாக.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வரும் ஏப்ரலில் நடக்க இருக்கும் Indian Film Festivalக்கு தேர்வாகி இருக்கிறது இவரது ஆவணப்படம்.

' நிலா நிலா ஓடிவா' இதன் பெயர்.

குழந்தைநட்சத்திரமாய் நடிக்கஆரம்பித்து பின் படிப்படியாய் கதாநாயகிநடிகையாய் நடித்த அனுபவம் , அப்போது ஏற்பட்ட
தாக்கம் அவரை இந்தப்படத்தை ஆழ்ந்து சிந்திக்கவைத்து சிறப்பாய் எடுக்க வைத்திருக்கிறதாகக் கூறுகிறார்.

பூனைக்கு மணி கட்டினாலும் அது எழுந்து ஓடினால்தான் சத்தம் மற்றவர்களுக்குக் கேட்கும்?
மேலும் படிக்க... "சின்னத்திரையிலும் பெரியதிரையிலும் சீரழியும் குழந்தைகள்."

Tuesday, February 19, 2008

பேசும் மௌனங்கள்!

அமைதியை ஆடையாய்கொண்ட
வெட்டவெளியில்
அரவத்தின் சீற்றலாய்
மௌனம்.

உடலில் ஊர்ந்து, நகர்ந்து,பின்
வளைக்கும் உத்தேசத்தில்
காலசர்ப்பத்தின் பிடியினைப்போல
காற்றுவெளியில்
சொற்கள் சிதறிய
காலடிப்பாதைகள்.

அவ்வப்போது தலைதூக்கிப்படமெடுக்கும்
நாகத்தின் அழகில்
மயங்கத்தான் தோன்றும்மனதைப்போல
நெஞ்சக்கூட்டிலேயெ
அடைந்துகிடக்கும் சொற்கள்
புறம்தள்ளி வரும்போது
புதுமைக்கீறல்
விடியல்வானில்!
மேலும் படிக்க... "பேசும் மௌனங்கள்!"

உங்க்ளுக்குத் துப்பறியத் தெரியுமா?:)

ஆதித்யா டிடக்டிவ் ஏஜென்சீஸ் என்றபோர்டை, அண்ணாசாலையில் நட்டநடுசென் டரில் ,ஒரு
பெரியகட்டிடமாடியில், மாதம் நாற்பதாயிரம் வாடகைக்கு எடுத்த அறைவாசலில் மாட்டி, ஆறுமாசமாய் அறுபதாயிரம் ஈக்களை ஓட்டிக்கொண்டிருந்த ஆதித்யாவிற்கு,(ஸ்ஸ்ஸ் நீஈஈள வசனம்மூச்சுவாங்குதே:)) அன்றுதான் மொபைலில்' சிங்கநடைபோடு சிகரத்தில் ஏறு என்றபாடலோடு நாள்
தொடங்கியது.

நிச்சயமாய் ராங்நம்பராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்து சுரத்தில்லாமல் ஹலோவினவனுக்கு
எதிர்முனை உற்சாகமாய் ,"ஆதித்யா துப்பறியும் நிறுவனம் தானே?" என்று ஆவலாய் கேட்கவும் "யெஸ் ஆமாம் அவுனு ஜிஹாங் ஹவுது "என்று பலமொழிகளில் உணர்ச்சிவசப்பட்டான்..

"நாந்தான் காமேஷ் பேசறேன் ஆதித்"

'ஆ காமேஷா!'அலறினான் ஆதித் ஏனெனில் இவன் தனது தொழில்பலகையை அறைவாசலில் அன்று
ஒருநாள்மாட்டியதும் அதில் விஷமம் செய்தவன் இதேகாமேஷ்தான்.

ஆதித்யாடிடக்டிவ் ஏஜென்சீஸ் என்ற எழுத்துகளில் டிடக்டிவ் என்பதை டிஃபெக்டிவ் என சாக்பீசால் எழுதி சிரித்தவன்.

"யேய் ..பழையகோபத்தை இப்போ நினைவு வச்சிக்காதடா மச்சி...இப்போ நான் உஜாலாக்கு மாறிட்டேன் ஸாரி..உறையூருக்கு மாறிவந்துட்டேன்"

'எதுக்கு சர்ச்சில்குடும்பத்துக்கு சுருட்டு தயாரிக்கவா?'

'ஏண்டா இவ்ளோ எரிச்சல் உன் கேள்வில? அப்பாவோட ஆயுர்வேதப்பொருள்பிசினசை கவனிக்கத்தான் அதிருக்கட்டும்.. ஆதி, இப்போ உன்னை முக்கியமா நான்கூப்பிடகாரணம்,உபயோகமே இல்லாதிருந்த உன்மூளைக்கு வேலைதரத்தான்.."

ரஜனிபடத்துக்கு முதல்நாள்முதல்ஷோ செல்லும் ரசிகனாய் முகம்மலர்ந்தான் ஆதித்.

"என்ன என்ன சொல்லு சொல்லு?"

"வீட்லவேலைக்கு புது வேலைக்காரன் வச்சிருக்கேன்..பேரு-அப்பு .. வேலைல குத்தம் சொல்லமுடியல ஆனா
கை சுத்தமில்லனு இப்பொதான் தெரிஞ்சிது.. நேத்து என் பாண்ட் பாக்கெட்ல ஆயிரம் ருபா நோட்டை வச்சிட்டு குளிக்கபோயிட்டு வந்துபார்க்கறேன், காணலடா ....வீட்ல அப்புவைவிட்டா அப்போ வேற
யாருமில்ல....விசாரிச்சி கேட்டா அப்பு இல்லைங்கறான்...எனக்கென்னவோ அவன்மேலதான் டவுட் உன் துப்பறியும் மூளைய உபயோகிச்சி இதை நீ கண்டுபிடிக்க வரியாடா ஆதித்? "

"வரேன் வரேன் இல்லேன்னா என் மூளையும் துருப்பிடிச்சிடுமே? இப்போவே வரேன்.."

ஆதித் நேரில் போய்அப்புவை விஜாரித்தான்.

அப்பு கடைசியில்," உண்மையை சொல்லிடறேனுங்க... சின்னய்யா குளிக்கபோனதும் அவரு கோட்ஸ்டாண்டுல மாட்டி இருந்த ப்பேண்டிலேருந்து ஆயிரம் ரூபா நோட்டைஎடுத்தேங்க.. ஆனா அப்போபாத்து அவரு குளிச்சிவர்ரது தெரியவும் சட்டுனு அதை அப்படியே அங்க இருந்த ஒருபுத்தகம் நடுவில வச்சிட்டு வந்துட்டேன் ..அப்றோம் யார் எடுத்தாங்களோ எனக்கு தெரியாதுங்க"
என்றான்.

"ஓஹோ நீபணத்தைவச்சது என்னபுத்தகம்னு நினைவிருக்கா?"

"இருக்குதுங்க..டெலிபோன் மேஜைமேல இருக்குற கம்பராமாயணபுத்தகங்க"

"ஐசீ? எந்தப்பக்கம்ன்னு நினைவு இருக்குதாஅப்பு?"

'ஓ நல்லா இருக்குங்க...273ஆம் பக்கத்துக்கும் 274ஆம் பக்கத்துக்கும் இடைல செருகி வச்சது நல்லா
நினைவுல இருக்குங்க..வேற யாரோ அதை எடுத்துருக்கணும்... அப்ப வர்ட்டுங்களா நான்?"

ஆதித் அட்டகாசமாய் சிரித்தான் .

பிறகு,"காமேஷ்! இவன் சொல்வது பக்கா டூப்..ஹிந்தில ஜூட்.
அதை அழகா சொல்லிட்டு இவனுமிப்போ விடறான் ஜூட்டு! பிடிங்க அவனை. இவந்தான்
திருடினான் "என்றான் உறுதியான குரலில்.

ஆதித் ஏன் இப்படிக்கூறினான் என உங்களில் யாராவது துப்பறிந்து சொல்லமுடியுமா?
மேலும் படிக்க... "உங்க்ளுக்குத் துப்பறியத் தெரியுமா?:)"

Thursday, February 14, 2008

ஆருயிரே....(கவிதை)

ஆழ்ந்து நீகண்ணுறங்கும் வேளை தன்னில்
ஆருயிரே நினைக் காண வருவேன் ஓர் நாள்
நீள் தொலைவிலிருந்து நீ எதிர்பார்த்திராத
நபர்போல நான் வருவேன் நின்னைக் காண
தாழிட்டுக் கதவுதன்னைச் சாத்திடாதே
தாமதிக்க வைக்காதே வாசல்தன்னில்

மெதுவாக அடி எடுத்து நடந்து வந்து
வீற்றிருப்பேன் நின்னருகே எந்தன் அன்பே
மதி காணா இருளினிலே நெருங்கி நின்று
மன்னவனே நின்னை உற்று நோக்கி நிற்பேன்
பதித்த என் முத்தத்தை நீ உணரும்போது
பரவசத்தில் பாய்ந்தோடி ஒளிந்தே கொள்வேன்
மேலும் படிக்க... "ஆருயிரே....(கவிதை)"

Tuesday, February 05, 2008

நிழலும், நிஜமும்.

நிழலும் நிஜமும்
எப்போதுமே பயணம் செய்கிறது
அருகருகே.

நிழலின் பரிணாமம்
மாறிக்கொண்டே வருகிறது,
நிஜம் எப்போதுமே
ஒரேமாதிரியாய்.

இருட்டிலே சில சம்யம்
நிஜம் தேடுவதுண்டு
உடன் வந்த நிழலை

விடிந்ததும் வரும் நிழலிடம்
நிஜம் கேட்கும்
இருட்டில் அது மறைந்ததுபற்றி

நிழல் சொல்லும் மௌனமாய்..
"பலநேரங்களில் நம்பயணம் நீயும் நானுமாய்
சில நேரங்களில் நம்பயணம்
நீயே நானாய்."
மேலும் படிக்க... "நிழலும், நிஜமும்."

Sunday, February 03, 2008

அரைப்ளேடு அழைச்சபடி எழுதினதில் பிடிச்சது.

அன்புச் சகோதரர் அரைப்ளேடு என்னை சென்ற வருஷத்துல எழுதினதுல பிடிச்சதை பத்தி இங்க எழுத அழைச்சிருக்காரு.

நான் சென்ற வருஷம் பாதிநாளு காணாம போயிருந்தேன்! வேற ஏதாவது வேலைகளில் பிசியான்னா அப்ப்டி ஏதுமில்ல... சில நேரங்களில் சில விஷய்ங்களுக்கு சில மனிதர்க்ளிடையே பழகிய பழக்கத்திற்கு ஒரு இடைவெளி வரும் இல்லையா அதுபோல ஏதோ ஒண்ணு... அப்போ டாக்டர்விஎஸ்கே வந்து தன்பதிவில் இப்படி அரைப்ளேடுமாதிரி அன்புக்கட்டளையிட்டு என்னைப் பதிவு எழுத அழைச்சார். சக்திகொடூன்னு வேண்டுதல் செய்து மறுபடி உற்சாகமா எழுத ஆரம்பிச்சேன்.

அப்போதான் வ வா ச போட்டி வச்சாங்க.. இராமை மையமா வச்சி ஒரு காமெடி கட்டுரை எழுதினேன் பரிசும் கிடச்சிது....பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மின்னு சிலர் சொல்றாங்களே அப்படில்லாம் இல்லன்னு நிரூபிக்க நான் எழுதின உண்மை நிகழ்ச்சியாக
கவலைப்படாத காரிகையர் சங்கம் என்ற நகைச்சுவை கட்டுரைக்கு வ வா ச பரிசு கிடச்சதுல இரட்டிப்பு மகிழ்ச்சி...

http://shylajan.blogspot.com/2007/04/blog-post.html இங்கதான் அந்த கட்டுரை இருக்கு.

மத்தபடி பிரமாதமா இதுவரை ஒண்ணுமே எழுதல... அரைப்ளேடு மாதிரி யாராவது என்னை இப்படி அழைப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா ச்சும்மா அப்பவே அசத்தி இருக்கலாம்:)(ஓவர்தான் இல்ல?:))
மேலும் படிக்க... "அரைப்ளேடு அழைச்சபடி எழுதினதில் பிடிச்சது."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.