Social Icons

Pages

Monday, April 07, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்.

அத்தியாயம் 6

ராகவ் எண்டர்ப்ரைசஸ்.

மானேஜிங் டைரக்டர் சுரேஷின் பிரத்தியேக அறை.

ஏசியின் அந்தக்குளுமையிலும் சுரேஷுக்கு வியர்த்துகொட்டியது. உடம்பே பற்றி எரிகிற மாதிரி இருந்தது.எதிரே கைகட்டிக்கொண்டு
சாரங்கன் அமைதியாக நின்றிருந்தான்.அவனுக்கு சுரேஷைப்போல ஆத்திரம் வரவில்லையெனினும்
மஞ்சுநாத் இப்படிச் செய்துவிட்டதில் மனது வேதனைப்பட முடிந்தது.

கம்பெனியின் சீனியர் மேனேஜர் என்ற முறையில் மஞ்சுநாத்தை மிகவும் நம்பியிருந்தார் விபத்தில் மறைந்துபோன சுரேஷின் அப்பா.
.அதனால் அப்போது வெளிவராத உண்மைகள் எல்லாம் இப்போது தெரியவந்தன. அவன் ஊழல் செய்துவிட்டதற்கு ஆதாரமான ஃபைல்கள் ஒவ்வொன்றாய் வெளியே வரவும் சுரேஷ் அதிர்ந்துபோனான்.

"சாரங்கன்" என்றான் சுரேஷ் உடைந்தகுரலில்.

"யெஸ்சார்' என்றான் பவ்யமாய் சாரங்கன்

" இந்த மஞ்சுநாத் நிறைய தில்லுமுல்லு செய்திருக்கிறான். ராஸ்கல் அவனுக்கு எத்தனை தைரியம் பாருங்க? ஆமா... அமெரிக்காவுக்கு கால் போட்டு பேசிட்டீங்களா?"

"யெஸ் ஸார்... அமெரிக்காக்கு பேசிட்டேன்.. பேசின காலை டேப் செய்துவிட்டேன்"

" வெரிகுட்...ஒரிஜினல் கொட்டேஷன்20% போட்டிருக்க, 9%ன்னு கொட்டேஷன் செட்டப் ஆகி உள்ளது இல்லையா சாரங்கன்?"

ஆமாம் சார்.. 11%வித்தியாசம் வருகிறது... கணக்கில் பதினாலு லட்சம் குறைகிறது."

"பதினாலுலட்சம்! க்ரேட் அமௌண்ட் யார்..!அத்தனையும் முழுங்கிட்டான மஞ்சுநாத்.அவனை அவனை.."

"சார் .. பி காம் ப்ளீஸ் ...நான் உங்களுக்கு எல்லா வகையிலும் உதவறேன்அமைதியா இருங்க.."

"உங்க உதவிலதானே எல்லாமே அம்பலமயிருக்கு? ஐ ஷுட் தாங்க் யூ சாரங்கன்... ஆமா,ஆடிட்ல தெரியாம போயிடுமா? மஞ்சுநாத் என்ன தைரியத்துல இப்படி செய்தான்?'

:'"அதான் சார் எனக்கு ஆச்சர்யமா இருக்கு!"

"ஆடிட்டருக்கு ஒரு வாகனம் லஞ்சமா வாங்கித்தந்திருப்பான். வேறென்ன..ஹ்ம்ம் அவனை முழுவதும் நம்பியது பழைய எம்டியின் தப்பு.அவர் என் அப்பாவா இருந்தா என்ன ஒரு மனிதனை எந்த அளவு நம்பணும்னு அனுபவத்துல தெரிஞ்சிருக்க வேண்டாமா அவருக்கு?"

"மஞ்சுநாத்தை ஒரு நண்பன் என்கிற முறைல நான் விஜாரித்துப் பார்க்கட்டுமா சார்? கிளெரிகல் எர்ரர் மாதிரி அமைத்து அந்தப்பணத்தைக்கட்டவைத்துவிடலாம்.."

"வேற வழி? மீட்டிங் என்று கொண்டுபோனால் கம்பெனியின் மற்ற பெரிய அதிகாரிகள் தலையிட்டுப் போலீசை வரவழைக்கச் சொல்வாங்க அது அவனுக்கும் தலைகுனிவு, நம்ம கம்பெனிக்கும் அவமானம்"

"மஞ்சுநாத் அத்தனைமோசமானவர் இல்லை சார்.. மன்னிப்பு கேட்டுக்கொள்வார் என நம்பறேன்"

"சாரங்கன்1 இன்னமும் அந்த துரோகியை நீங்க சிலாகிச்சி பேசுவது வியப்பா இருக்கு! லட்சக்கணக்கில் கம்பெனி பணத்தை ஸ்வாகா செய்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல இத்தனை நாளாய் இங்கே வேலை செய்துகொண்டிருக்கிறான். நம்மை முட்டாள் என
நினைத்துவிட்டான். அமெரிக்காவிலிருந்து மூணு மெஷின்ஸ் வரவழைக்கலாம் என்று அவன் சொன்னதும் அவனை முற்றிலும் நம்பி,
அதில் இறங்க வைத்தது என் அப்பாவின் தப்புதான் அதான் இத்தனை விபரீதத்துக்குக் காரணம்"

" சார்!உங்க அப்பா- எங்க பழைய எம்டி -உத்தமமான மனிதர் சார்.. எல்லாரையும் நம்பி அவர்களைத்தட்டிக்கொடுத்து வேலைவாங்குபவர் அவருக்கு நம்பிக்கைதுரோகம் செய்தவர் மஞ்சுநாத்தானே தவிர உங்க அப்பாமீது எந்ததப்பும் இல்லை. எப்படியோ மஞ்சுநாத் தனது
ஒரிஜினல் ஃஃபைலை தவறுதலாய் தன் காபின் டேபிள் ட்ராயரில் வைத்திருக்கவும்,ஏதோ வேலையாக அந்த ட் ராயரைத் திறக்கப்
போன என் கண்ணில் பட்டுவிட்டது ...படித்துப்பார்த்ததும் திகைத்துப்போயிட்டேன் சார்,அதான் உஙக்ளுக்கு உடனே தெரிவித்தேன்"

"சாரங்கன்...நீங்க மட்டும் பாக்கலேன்னா எதுவுமே எனக்கு தெரியவந்திருக்காது. போலியாக ஒரு கொட்டேஷன் தயார் செய்து
பதினோரு பர்சன்ட்டை தன் பர்சனல் செலவுக்கு எடுத்துகிட்டு ,இந்தக்கம்பெனில மூணுமாசமா என் பக்கத்துலயே இழைஞ்சிபேசிட்டு
இருந்திருக்கான் மஞ்சுநாத், இது தெரியாம இவனை நான் வந்த்தியாசமானவன்னு அதிசயமா பார்த்து இப்படி ஏமாந்ந்திருக்கிறேன் எப்பேர்ப்படா முட்டாள் நான்? மஞ்சுநாத் ஒரு ஃப்ராட் சீட் அயோக்கியன்.."


மேஜையிலே ஓங்கிக்குத்தினான் சுரேஷ்.

"ஸார் ப்ளீஸ்.."

"ஓக்கெ ஒகே,,எனக்கு அ ந்த அயோக்கியனை நேர்ல பாக்கவும்பிடிக்கல சாரங்கன். நான் வெளியே போகிறேன் ,நீங்க பார்த்து பிடித்து
விசாரணை செய்து எனக்கு போன் செய்யுங்க.."

"யெஸ்சார்"

சுரேஷ் வெறுப்பும் விரக்தியுமாய் வெளியே சென்றான்.

சீட்டிலிருந்த ராகினிக்கு சுரேஷின் முகமே ஏதோ விபரீதத்தை கோடுகாட்டவும் சாரங்கனிடம் வந்து நின்று," என்ன ஆச்சு சார்ங் அவருக்கு?"'என்று கேட்டாள்.

"அதுவந்து... சின்ன ப்ராப்ளம் ராகினி ...அப்புறமா விவரம் சொல்ட்டுமா இப்போ கொஞ்சம் வேலை இருக்கே ப்ளீஸ்?'

சாரங்கன் இப்படிசொல்லும்போது ராகினி அவன் முகத்தையே ரசித்தபடி குறும்பாய் அவனிடம்," கையில் ஃப்ளூட் வச்சிடா அசல் காலண்டர்
க்ருஷ்ணர்தான் சாரங் நீங்க! எத்தனை அழகானமுகம் உங்களுக்கு! 'மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே" ன்னு அமலனாதிபிரான் அரங்கனைப்பார்க்கும்போது பாடிய பாடல் நினைவுக்கு வருது..உங்க கண்களும் இப்போ என்னைப்பாடாய் படுத்துது! பார்வை ஒன்றே போதுமே என்கிறதெல்லாம் இதனால்தானா சாரங்?"


சாரங்கன் வெட்கம்கலந்தபுன்னகையுடன் நகரவும் எதிரில் மஞ்சுநாத் வரவும் சரியாக இருந்தது.

"வழக்கம்போல சார் லேட் இன்னிக்கும் ஆபீசுக்கு! எங்க சுத்திட்டுவராரோ யார்கண்டாங்க?" ராகினி மஞ்சுநாத்தைக் கண்டதும் முணுமுணுத்தபடிபோய்விட்டாள்.

சாரங்கனிடம் ராகினி பேசிக்கொண்டிருந்ததையும் அதற்கு சாரங்கன் வெட்கப்பட்டதையும் தூத்த்திலிருந்து கவனித்துகொண்டு வந்த மஞ்சுநாத்," வாட் மேன்! அழகுதேவதை ஏதும் அடல்ட்ஸ் ஒன்லிஜோக் அடிச்சிதா உன்கிட்ட? கன்னமெல்லம் இப்ப்டி சிவந்திருக்கு உனக்கு? கொடுத்துவச்சவன்பா...எல்லாப் பொண்ணுங்களும் உன்னையே சுத்தறாங்க..."என்று சொல்லி கண்களைச் சிமிட்டினான்.

சாரங்கன் அதற்கு முகத்தை சகஜமாய்வைதுக்கொண்டு,"மஞ்சுநாத் !உங்ககூடதனியாபேசணும்"என்றான்.

"எ என்ன விஷயம் ?" முகத்தில் கடுப்பேற மஞ்சுநாத் கேட்டான்.

"அ அது வந்து.."

"என்ன பர்சனல் விஷயமா?" இப்ப்டிக்கேட்கும்போது முகம் வெளிறியது மஞ்சுநாத்திற்கு.

"இல்லை இது அஃபீஷியல்.."

பெருமூச்சுவிட்டபடி தோளைக்குலுக்கிய மஞ்சுநாத், சாரங்கனுடம் அந்த அறைக்குள் நுழைந்தான்.

சாரங்கன் சுற்றிவளைக்காமல் அனைத்தையும் கூறிவிட்டு அமைதியாய் நின்றான்.

"ஓஹோ இத்தனைக்கும் நீதான் கராணமா ?" மஞ்சுநாத் சுட்டுவிடுவதுபோல பார்த்தான்.

கம்பெனியின் ஊழியன் என்கிற முறையில் என்கடமையை செய்தேன் மஞ்சுநாத்"

அப்பாவிம மாதிரி இருந்திட்டு எனக்கே குழி பறிக்கிறியா? என்னை ஒருவார்த்தைகேட்காமல் புது எம்டிகிட்ட எல்லாத்தியும்
சொல்லீ இருக்கணுமா ?அதைவிட அமெரிக்கால நான் மெஷின் வாங்கின கம்பெனிக்கும்போன் செய்து சவிசாரித்து அதையும்
டேப்பில் பதிவு செய்திட்டியா ? டேய், நீ துப்பறியும்கதை அதிகம்படிப்பாயோ?"

" மஞ்சுநாத் எனக்கு வேறு வழி தெரியவில்லை ...என்னால் இப்போது முடிந்ததெல்லாம் கோபமாய் இருந்த சுரேஷை சமாதானம் செய்யமுடிஞ்சதுதான்.. அவர் மட்டும் இப்போ உங்க முன் இருந்தால் உங்களை போலீசில் பிடிச்சி தள்ளி இருக்கலாம்"

"ஷட் அப்..இந்த நிலைமையை மோசமாக்கியதே நீதான்.. அதை நான் உடனே எரிச்சிருக்கணும் விட்டதால் உன் கண்ணில் பட்டிருக்கு"

"போகட்டும் மஞ்சுநாத்! எடுத்தபணத்தை கம்பெனிக்கு கட்டிடுங்க எல்லாம் சரியாய்டும்.."

"இல்லேன்னா?"

"விஷயம் டைரக்டர்ஸ் மீட்டிங் வரைபோய்டும் உங்க கதை அம்பலமாயிடும்"

"என்ன மிரட்டறியா?"

நோ நோ எம்டியின் அடுத்த நடவடிககீதுவாக் இருக்கும் என்கிறேன்"

சாரங்கா.. சாதுமாதிரி இருந்துகிட்டு இப்படி சாமர்த்தியமான காரியம் செய்துட்டோ ம்னு பெருமையாஉனக்கு?"

பெருமை ஏதுமில்ல... கடமைதான், கம்பெனியின் ஊழியன் என்கிற வகையில்.. இப்போதும் மோசமில்லை.உங்கள காப்பத்தணும்னுதான்
நீங்க கம்பெனிமூலமா எடுத்த பணத்தை திரும்ப போடச்சொல்றேன்.."

அதுக்கு பதிலா நீ ஒண்ணு செய்

என்ன சொல்லுங்க.


"ஆடிட்டரை ஏற்கனவே கவனிச்சிடேன்.. உனக்கும் ஒரு லட்சம் தந்துடறேன்..சுரேஷை சமாளிச்சிட்டு ஒரிஜினல் ஃபைலை என்கிட்டக்
கொடுத்திடு"

"நோ மஞ்சுநாத்..நான், நேர்மையா இருக்கவே விரும்பறேன்.."

"ஆமாண்டா, பெரிய நேர்மை, நீதின்னு வாய் கிழியப் பேசுங்க ...நாட்ல அவனவன் கோடிகோடியா சுருட்டறான் ..
எதோ சில லட்சம் அடிச்சா என்னைமாட்டிவிடுங்கடா..டேய் இப்ப சொல்றேன், உங்களால் ஆனத பாத்துக்குங்க..".என்று கத்திவிட்டு
காலை தரையில் அழுத்தி சத்தமாய் ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.

சாரங் சற்றே வெறுப்பும் பயமுமாய் தலைகுனியும்போது , கால்களை அலட்சியமாய் தரையில் குத்தி வைத்து நின்று
கொண்டிருந்தவனின் பாதங்களை மூடி இருந்த அந்த ஷூக்களை சட்டென கவனித்தான்.

சில நாட்கள்முன்பு இதே சாக்லேட்ப்ரவுன் கலரில், லேஸ்போடுமிடத்தில் சின்னதாய் பித்தளைவண்ணத்துப்பூச்சி அமர்ந்த நிலையில் ,இதே
ஷூக்கள் இரண்டை தன்வீட்டு அறையின் திரைச் சீலையின் கீழேபார்த்தது நினைவுக்குவந்தது.

திடுக்கிட்டவன் நிமிர்ந்தபோது மஞ்சுநாத் அங்கு இல்லை.

சாரங்கனின் நெஞ்சில் சந்தேகம் நூலிழையாய் நுழைய ஆரம்பித்தது.
(தொடரும்)

1 comment:

  1. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;))

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.