Social Icons

Pages

Tuesday, April 29, 2008

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு!

'இன்னிக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுன்னு வர்ஷாகிட்ட கேட்டுடணும் அதென்ன ஒருவாரமா முகத்த தூக்கிவச்சிட்டு யாரோடயும் சரியாப்பேசாம இருக்கிறா...இந்த நேரம்பாத்து என் மகன் -அதான் அவ புருஷன் -கார்த்திக்கும் வேற ஆபீசு வேலையாஅமெரிக்காபோயிட்டான்...இல்லேன்னா அவனைவிட்டு என்ன ஏதுன்னு விசாரிக்க வச்சிருக்கலாம்..

.நானும் அவங்களுக்கு கல்யாணமான இந்த ஆறுமாசமா வர்ஷாகிட்ட ஒரு மாமியார் மாதிரியா நடந்திட்டு இருக்கேன்? தாயா தோழியா தமக்கையா எத்தனை அன்பும் பாசமும் நேசமுமா இருக்கிறேன்? சீரியல் மாமியார் மாதிரி இருக்கக்கூடாது எல்லாரும் வர்ஷாவப் பாத்து பெருமப்படற மாதிரி மகத்தான மாமியாரா இருக்கணும்னு உண்மையாப் பழகறேன்;கண்ணா கவனிச்சிக்கறேன் ...அவளும் ஆறுமாசமா அப்டித்தான் இருந்தா..அமைதியான அடக்கமான பெண் .அதிர்ந்து பேசத்தெரியாது ...ஆனா இப்பதான் ஒருவாரமா மாறிட்டா.'

கவலையும்குழப்புமாய் பாக்யா தனக்குத்தானே முணுமுணுத்தபோது வாசலில் நிழலாடியது.

நீரஜாதான்.வர்ஷாவின் ஆபீஸ் தோழி.

"வாம்மா நீரஜா. லீவா இன்னிக்கு நீ ஆபீஸ்போகலயா?"

"ஆமா ஆண் ட்டீ...பையனுக்கு லேசா ஃபீவர்..பல்வரப்போகுது இல்ல அதான் பேதிவேற...அவனுக்காக லீவ் போட்டேன்...அப்டியே என் தங்கைக்கு கல்யாணமே கூடிவரலை.. அதுபத்தி விசாரிக்க அடுத்த் தெருல ஒரு புது ஜோசியர் வந்திருக்காரு.. அவரைப்பாகவும் போகப்போறேன். அவரு சொல்றது பலிக்குதாம் ..நடந்தது நடப்பது நடக்கப்போவது எல்லாத்தியும் துல்லியமா சொல்றாராம்!"

"அப்படியா?"

"ஆமா வர்ஷாவும் கார்த்திக் ஜாதகம் எடுத்திட்டு அவருக்கு ஆபீசுல ப்ரமோஷன் பத்தி கேட்க போன வாரம் போனதா சொன்னா..உங்களுக்குத் தெரியாதா என்ன?"

தெ... தெரியுமே? வயசாச்சில்ல நாந்தான் மறந்திட்டேன்..ஹிஹி.."

"அதானே பாத்தேன்..உங்க மருமகளுக்கு நீங்க கண்ணாடின்னா அவளும் உங்களுக்கு நல்ல துடச்சிவச்சபெல்ஜியம் கண்ணாடியாச்சே?
கண்ணு படாம நீங்க ரண்டு பேரும் இப்படியே இருக்கணும்...சரி நான் எதுக்கு வந்தேன்னா வர்ஷாகிட்ட நேத்து அவசரமா ஆயிரம் ரூபா ஆபீஸ்ல வாங்க்கிட்டேன் அதை திருப்பிக்கொடுக்கத்தான் வந்தேன் கொடுத்திடுங்க ஆண்ட்டி" என்று பணத்தை நீட்டினாள்.

அவள் சென்றதும் பாக்யா யோசித்தாள்.


ஓஹோ ஜோதிடரிம் போய்வந்துமுதல்தான் ஆளே மாறிட்டாளா?

அப்படி என்ன சொல்லி இருப்பாரு அந்த ஜோதிடர் நாமும்போய்கேட்போமே?

பாக்யா கார்த்திக்கின் ஜாதகத்துடன் கிளம்பினாள்

ஜாதகத்தைகூர்ந்துபார்த்த ஜோதிடர்," இந்த ஜாதகத்தை சமீபத்துல பார்த்தநினைவு .."என இழுத்தார்.

பாக்யா நிலமையைக் கூறிவிட்டாள்.

எதுக்கு இனியும் சுத்திவளைக்கணும் எல்லாமே வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுன்னா பிரச்சினை இல்லை.

அதுக்கு அவர்," ஆமாம இந்த ஜாதக்காரருக்கு ரண்டுகல்யாணம் இருக்கு.. ஒண்ணு முடிஞ்சிபோயிருக்குனு சொன்னேன். ஜாதகத்துல அது தெளிவா எனக்குத் தெரியுது..பெத்த தாயான உங்களுக்கும் அது தெரிஞ்சி இருக்கும் உண்மைதானே?" எனக்கேட்டார்.

பாக்யா சற்றுதயங்கி பிறகு." ஆமா "என்றாள்.

பிறகு பாக்யா வீட்டிற்குள் நுழையவும் டெலிபோன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.
ரிசீவரை எடுத்தாள்."ஹலோ?" என்றாள்

" அம்மா நான் தான் கார்த்திக் ..ஒருமுக்கியமான விஷயம்..வர்ஷா போன்ல சரியா பேசவே மாட்டேங்கறா..மெயில் அனுப்பினா பதிலே இல்ல.. கேட்டா ஒண்ணுமே சொல்லமாட்டேங்கறா....ஏதும் பிரச்சினையா உங்களுக்குள்ள?"

"பிரச்சினை எங்களுக்குள்ள இல்லப்பா, எல்லாம் உன் ஜாதகத்துலதான்.."

"என்னம்மா சொல்றீங்க?"

"ஆமாகார்த்திக்...உங்கப்பா குடும்பத்துல உங்க தாத்தாவுக்கு தாத்தா எப்போவோ யாரோடயே வந்த பகைல அவரு எதிரியோட வாழைத்தோப்பையே குலையோட வெட்டி சாய்ச்சிருக்காரு..பச்சசமரத்தை அதுவும் குலைவாழையை பகைமையோட வெட்டக்கூடாதாமே? அதனால அதுவே சாபமாகி அவங்க குடும்பவாரிசு அல்பாயுசுல போயிடும்னு இப்படி ஒரு
சாபம் இருக்கறதா முன்னமே ஊர்ல ஒரு ஜோசியர் சொல்லி அதுக்குப்பரிகாரமும் சொன்னதை எல்லாரும் அலட்சியப்படுத்தி இருக்காங்க...அது உங்கப்பாவரை தொடர்ந்திருக்கு . அறுபது வய்சுக்கு மேலே ஆண்வாரிசு நம்ம குடும்பத்துல தங்கலப்பா..ஆமா உங்கப்பாவும் ரண்டு வருஷம் முன்பு தன்னோட ஐம்பதாவதுவயசிலேயே போயிட்டாரே? நானும் உன் அப்பாவும் பரிகாரம் செய்துட முடிவு செய்தோம். அதன்படி உன்னோட அந்த அறியா ஆறு வயசுல, வாழைமரத்தோட ஒருகல்யாணம்செய்து வச்சி ரண்டு வாழைக்கன்றுகளை ரண்டுபவுன் காசுவச்சி ரண்டு ஏழைக்கு தானமா கொடுத்தோம். இது பலருக்கு பரிகாசமா இருக்கலாம்.ஆனா எனக்கு என் மகன் பலகாலம் ஆயுசோட வாழ இப்படி ஒண்ணு செய்தா தப்பில்லைனு தோணிச்சி. .கிராமத்துக்கோயில்ல இருபது வருஷம் முந்தி உனக்கு வாழைமரத்தோட நடந்தது முதல் கல்யாணம்.அதை நாம் அப்பவே மறந்துட்டோ ம்.இதை அரைகுறையா இங்க ஒரு ஜோசியர்கிட்ட போனவாரம் வர்ஷா கேட்டுட்டு உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சி அதை நாம் மறைச்சிட்டதா நினச்சி மனம் புழுங்கிட்டு தவிச்சிட்டிருக்கான்னு என்னால இப்பத்தான் உணரமுடிஞ்சிது..."

பாக்யா சொல்லும்போது,"நானும் உணர்ந்திட்டேன் அத்தை" என்று கூவிக்கொண்டேவந்த வர்ஷாவின் குரலில் உற்சாகக் குற்றாலம்!


வ வா ச போட்டி இரண்டுக்கு!!!!!!!!!!

4 comments:

  1. mm..கதை நல்லா இருக்கு. விறுவிறுப்பா போனுச்சு! வாழ்த்துகள்!!

    ReplyDelete
  2. /.உங்க மருமகளுக்கு நீங்க கண்ணாடின்னா அவளும் உங்களுக்கு நல்ல துடச்சிவச்சபெல்ஜியம் கண்ணாடியாச்சே?/

    நல்ல இருக்கு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. விறுவிறுப்பான கதை...நல்லாருக்கு ;)

    ReplyDelete
  4. நல்ல கதை திருவரங்கபிரியா அக்கா. :-)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.