Social Icons

Pages

Thursday, February 14, 2013

காதலா என்றிது தெரியவில்லை!


காதலா என்றிது தெரியவில்லை மனம்
ஆதலால் என் வசமில்லை-உடல்
விறகாய் எரிவதைப்பார்த்தாயா-நறு
மணத்தை அதனில் சேர்ப்பாயா?
 
 
 
 
பாடாப்பாடல் அறிந்துகொண்டேன் - அது
உன் பேர்தான் எனவும் உனர்ந்துகொண்டேன்
இரவுப்பூவை மலர வைத்தாய்-பின்
உறக்கத்தில் சுகத்தை வரவழைத்தாய்-உன்
பார்வை என்ன மணல் வெளியோ-நினைவுப்
புதைந்து அழுந்தி மீள்கிறதே!
 
 
உன் வழிப்பாதையில் என் இதயம் -அது
மீட்டும் ராகம் இன்று உதயம்!
நெஞ்சிற்குள் ஏன் இந்நெருப்பு-அட
நீதானடா இதற்குப்பொறுப்பு!

8 comments:

  1. காதலர்தினம் என்பதால் காலையில் எழுந்து ஒரு காதல் கவிதையைப்பறக்கவிட்டுவிட்டேன்!! முதலில் வாசிக்கவருபவர் இதனை திரட்டிகளில் சேர்த்துத்தந்தால் காதல்கடவுளின் அருள்பார்வை கிட்டிவிடும் என நினைக்கிறேன்!

    ReplyDelete
  2. enakku arulellaam venaam!

    kavithai rasanai...

    ReplyDelete
  3. அழகாக பறக்க விட்டு விட்டீர்கள்... அருள்பார்வை எல்லோருக்கும் கிட்டட்டும்... வாழ்த்துக்கள்...

    Tamilmanam submitted and voted

    நன்றி...

    ReplyDelete
  4. காட்டுக்கு நடுவே ஓர் இடம் - தேன்
    கூட்டுக்கு அதுவே திறப்பிடம்!

    ReplyDelete
  5. ஆம் அவனை சும்மா விடக்கூடாது

    ReplyDelete
  6. கருத்துகூறிய அனைவர்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  7. தி.தமிழ் இளங்கோ8:44 PMஅன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (20.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும்

    ,,,நன்றி வலைசரம் வருகிறேன்

    ReplyDelete
  8. அப்பாதுரை6:55 AM

    sweet
    வாங்க அப்பாதுரை...காதல் என்றாலே ஸ்வீட் தானே! நன்றி கருத்துக்கு

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.