Social Icons

Pages

Showing posts with label *. Show all posts
Showing posts with label *. Show all posts

Saturday, November 08, 2008

ஆசிஃப்மீரான் சாந்தி ப்ரியா..கலக்கறாங்க.. கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!

இன்றைய சிறப்பு வெள்ளிமணிஒசைக்கு வலைஉலகப்புகழ் கவிஞரும் எழுத்தாளரும் பலரின் அன்பு நண்பரும் அண்ணாச்சி என அழைக்கபடுபவருமான திரு ஆசிஃப்மீரான் அவர்களின் வளமான குரலில் ஒருபாடலும் தாய்லாந்துதாரகை என்ப்படும் கவிஞர் வலைப்பதிவர் எழுத்தாளர் கலகலப்பான பெண்ணுமான என் அன்புத்தோழியும் உடன்பிறவா தங்கையுமான சாந்தியின் பாடலும், என் மகளின் பாடலும் இங்கே உங்கள் செவிகளை நிறைக்க வருகின்றன.
இவைகளை அளித்த அவர்களுக்கு மிக்க நன்றி

இரக்கம் வராத காரணம்... ப்ரியா



ரம்ஜானே வருக.. ஆசிஃப்மீரான்


தேவன் பாடல்..சாந்தி

மேலும் படிக்க... "ஆசிஃப்மீரான் சாந்தி ப்ரியா..கலக்கறாங்க.. கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க!"

Tuesday, November 04, 2008

கோதை-செவ்வாய்-FRENCH KISS!

மானிடவர் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துணிந்து பாடிய ஆண்டாள் அந்த நாளிலேயே தோன்றிய ஒரு பெண் நவீனகவிஞர்!

இறைவனுக்குச் சூட்டவேண்டிய மாலையை எந்தப் பெண்ணாவது தன் தலையில் சூடி அழகு பார்த்திருக்க முடியுமா? சூடிப் பார்த்துவிட்டு,"நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே? நான் முதலில் சூடிப் பார்த்து விட்டு அவருக்குச் சூட்டினால் என்ன குடி முழுகிப் போய் விடும்? "என்று தந்தையிடம் கேட்டிருக்கத் தான் முடியுமா?

ஆண்டாள் இறைவனுக்குக்காக தந்தை கட்டி வைக்கும் மாலைகளை முதலில் தான் சூடி ஒரு கிணற்றின் நீரில் அழகு பார்த்துவிட்டு தான் அதைக்கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்து வருவாள்.

பிள்ளைப் பருவத்தில் அரங்கன் மீது பித்தான அன்பு பின்பு காதலாகியது பருவ வயதில்
அரங்கன் மீது ஆண்டாளுக்கு அத்தனைக்காதல்!

காதல் என்று வந்து விட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல் தானே பெரிய புனிதம்!
கதைகள் எப்போதும் சுவாரசியமானவைதான்.
ஆனால் ஆண்டாள் விஷயத்தில் கதையைவிட அவளது பாடல்கள் ரொம்ப சுவாரசியமானது,சுவையானது!

அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதி நவீன சங்கதிகளை மட்டும் தான் அவள் தன் பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.
அதற்கு சாட்சி இந்தப்பாடல்.

ஆண்டாளுக்கு, அவளது காதலனான மாலவன் உதட்டில் முத்தமிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.

'செய்ய வாய் ஐயோ என்னைசிந்தை கவர்ந்ததுவே' என்று அமலனாதிபிரானே அலறி இருக்கும்போது ஆண்டாள் எம்மாத்திரம்?
யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது. அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!
அதை வைத்து தானே எப்போதும் வாயில் வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவை தெரிந்திருக்குமே!(புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை? இதற்கு யாராவது பதில் சொன்னால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உங்களுக்கு என் மைசூர்பாக் இலவசம்!!!)

{சரி பெரியபிராட்டியிடம் கேட்கலாமா என நினைக்கிறாள். திருப்பாவையிலேயே "மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய் காண்" என்று விரட்டியவள் ஆண்டாள்.இப்போதும் அவளிடம்போய்"என் பிரியக்காதலனின்உன் அருமைக்கணவனின் சிவந்த அதரசுவை எப்ப்டியம்மா இருக்கும்?" எனக்கேட்டால் சக்களத்தி சண்டைக்கு வரமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?}

அதனால் சங்கிடம் கேட்டுவிடுவதே நல்லது எதுக்கு வம்பு என நினைக்கிறாள்.

இந்த யுக்தி உதயமானதுமே கவிதை பீறிட்டுக் கொண்டு புறப்பட்டு விடுகிறது.
*கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?**
திருப்பவளச் "செவ்வாய்" தான் தித்தித்திருக்குமோ?**
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்**
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே**!

கருப்பூரம் என்றால் மாலவனுக்கு உகந்த பச்சை கற்பூரம்.
கமலப்பூ என்றால் கமலப்பூ தாமரை
பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம் சந்தேகம் கேட்கிறாள்.
மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!

இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்?
ஆண்டாள் அதிகம் பாடவில்லை தான்.
மொத்தம் 143 பாடல்தான்.
ஆனால்,நாச்சியார் திருமொழியின் அந்தப் பாசுரங்களுக்குள் ஒரு நட்சத்திர அஸ்தஸ்து இதற்கு மட்டுமே உண்டு.
*** இது நட்சத்திரப் பாசுரம் ***
எளிமையும் இனிமையுமான காதல் பாடல்தான் எல்லாமே, ஆனாலும் காதலின் வேகம் இந்தப் பாடலில் வெளிப்படுகிறது நளினமாகவும்.
பக்தியில் பல வகைகள் உண்டு.
இறைவனை தாயாய், தந்தையாய், தோழனாய், தலைவனாய், சேவகனாய் இன்னும் பலப்பல வடிவங்களில் கண்டு,பாடி பக்தி செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் காதலனாக வரித்துக்கொண்டு கவிதை மழை பொழிந்தவள் ஆண்டாள் தான்! வடதேசத்துக்கு ஒரு மீரா என்றால் நம்மூருக்கு ஆண்டாள்!

ஆண்டாள் காதலே சரணம்!
அவனே அதற்கு வரணும்!
வந்தே முத்தம் தரணும்!
மேலும் படிக்க... "கோதை-செவ்வாய்-FRENCH KISS!"

Monday, November 03, 2008

நானேநானா நட்சத்திரமாய் மாறினேனா?!

துளசிமேடம் ஜிரா கேஆரெஸ் சுப்பையா மதுமிதா மங்களூர்சிவா இலவசகொத்தனார் ஆசிஃப்மீரான் சிறில் அலெக்ஸ் செல்வநாயகி மங்கை குமரன் என பிரபலபதிவர்கள் ஏறிய மேடையில் இன்று நானா? நானே நானா யாரோதானா நட்சத்திரமாய் மாறினேனா?

ஆச்சர்யமா இருக்குங்க!

தமிழ்மணத்துக்கு முதல் நன்றி.

இந்த நட்சத்திரங்களைப்பற்றி சிறுகுறிப்பு(நிறையபேர் நிறைய நிறைவா சொல்லிட்டாங்க நான் சொல்ல எதுவுமில்லேன்னாலும் ஏதாவதாவது சொல்லலேன்னா எப்படிங்க?:)

மறந்துட்டேனே மறக்காம நீங்க எல்லாரும் பின்குறிப்பு பாக்கணும் என்ன?

அன்று ஒருநாள் அம்மிமிதித்து அருந்ததி பார்க்கச்சொனார்கள் பட்டப்பகலில் நட்சத்திரமானது எப்படித்தெரியுமென கல்யாணங்களில் எந்தப்பெண்ணும் எந்தமாப்பிள்ளையும் கேட்பதே இல்லை!!!

வசிஷ்டர் மனைவி அருந்ததி உத்தமபத்தினி .அதனால் நட்சத்திரமாய் வானில் ஜொலிக்கிறார் என்கிறதுபுராணக்கதை.

சிறுவன் துருவனுக்கும் வானில் சிறப்பான இடம் உண்டு.

நட்சத்திரங்கள் நிரந்தரமானவை அதனாலதான் அதற்கு அந்தஸ்து.

உண்மையில் சூரியனே ஒரு நட்சத்திரம்தா அதனால்தான் கேஆரெஸ் எனும் ரவி(சூரியன்) ஆன்மீக சூப்பர்ஸ்டாரா இருக்காரோ?!

இந்த பூமியின் சுற்றளவை விட 110 மடங்கு பெரிய சுற்றளவும், 10 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடக் கூடிய அளவு இருக்கும் சூரியனை ஏனைய நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் சமயம் அது ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்கிறது வானியல் ஆராய்ச்சிக்குறிப்பு


நம் அண்டவெளியில் மட்டும் 1000 லட்சம் நட்சத்திரங்கள் இருப்பதாக கணித்திருக்கிறார்கள். நம் அண்டவெளியில் மட்டும் இவ்வளவு என்றால் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு இருக்குமோ?

மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களும் பிறக்கின்றன.மரணிக்கின்றன.

இந்த அற்புதம் நாள்தோறும் இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

எல்லையில்லாத இறை ஆற்றலின் படைப்புகள்தான் எத்தனை அற்புதமானவை!

அறிவியல்ரீதியா சிந்திக்க இங்கபலபேருக்குதெரியும் என்பதாலும் எனக்கு இதுக்குமேல சிந்திக்கதெரியாது எனப்தாலும் இந்தவிஷயம் இங்கு நிறைவுபெறுகிறது!

நட்சத்திரங்களின் ஆளுமை பலவிதம்.

நம்ம வீடுகளில்ஜாதகம் எடுத்தா போதும் முதல்ல நட்சத்திரம் என்னன்னுதான் கேட்பாங்க

கோயிலில் அர்ச்சனைக்ளுக்கும் நட்சத்திரம் தேவை.

ஒருவரின் பிறந்த நாளைய நட்சத்திரத்தை வைத்து அவரின் குணாதிசயங்களை சொல்லலாமாம்! சுப்பையாஸாருக்கு இதுபற்றி நன்கு தெரிந்திருக்கும்.

மகம் ஜகம் ஆளுமாம்
ஆண்மூலம் அரசாளுமாம்
பெண்மூலம் நிர்மூலமாம்
பரணி தரணி ஆளுமாம்
கேட்டை ஜேஷ்டனுக்காகாது
உத்திரத்தில் ஒருபிள்ளையும் ஊர்கோடியிலொருகாணிநிலமும் இருக்கணுமாம்
பூராடம் நூலாடாது....

இன்னும் இருக்கலாம்....


இதுல நட்சத்திரப்பலன்கள் வழக்கம்போல பெண்களுக்குபாதகமாத்தான் இருக்கு. பாசிடிவ் எல்லாம் ஆணுக்கு நெகடிவ் எல்லாம் பெண்ணுக்கு!(மகம் மட்டும் விதிவிலக்கு!

சமீபத்துல தெரிந்த குடும்பம் ஒன்றில் காதலர்கள் இருவருக்கும் நட்சத்திரப்பொருத்தமே சரி இல்லையென்று பையனின் அப்பாவிலிருந்து அனைவரும் கல்யாணத்தைத்தடுக்கப்பார்த்தார்கள்.

காதலித்த அந்தப்பொண்ணு வந்து பையனின் அம்மாகிட்ட கெஞ்சிக்கேட்டுக்கொண்டது.

'மனப்பொருத்தம் இருந்தா போதும் மற்ற எதுவும் தேவைஇல்லை'ன்னு அந்தப்பெண்மணி முடிவெடுத்து மகனின் கல்யாணத்தை பல எதிர்ப்புகள் நடுவே செய்து வைச்சாங்க.

பெண்ணுக்குப்பெண்ணே எதிரியா யார் சொன்னது, பல இடங்களில் தோழி தான்!



பின்குறிப்பு. நட்சத்திரப்பதிவுகளில் நான் இடப்போகும் எல்லாபதிவுகளையும் இதேபோல வந்து பார்த்து படிச்சி கருத்து சொல்லப்போறதுக்கு உங்களுக்கெல்லாம் முன்கூட்டியே நன்றி!
மேலும் படிக்க... "நானேநானா நட்சத்திரமாய் மாறினேனா?!"

மகிழ்ச்சிக்கு என்ன வழி?


ஒருவீட்டில் கதவு தட்டப்பட்டது.

இல்லத்தரசி வேகமா வந்து கதவைத்திறந்தாங்க. வெளியே மூணு பெரியவங்க நின்றுகொண்டு இருந்தாங்க.

"நீங்கள்ளாம் யாரு என்ன வேணும் உங்களுக்கு?"ன்னு அந்தம்மா கேட்டாங்க.

"அம்மா! என்பேரு செல்வம் இவர் பேரு ஆரோக்கியம் அடுத்தவர் பேரு அன்பு. நாங்க மூணு பேருமே உங்க குடும்பத்துக்கு வேண்டப்பட்டவங்க"

"ஓ அப்படியா உள்ளே வாங்க"

"அதுமுடியாத காரியம் எங்களில் யாராவது ஒருவரைத்தான் நீங்கள் விருந்தினராய் அழைக்கமுடியும். யாரை அழைக்கிறீர்கள்? சொல்லுங்கள்?"

அந்தம்மா யோசிச்சாங்க அப்புறம்,"கொஞ்சம் இருங்க வரேன்" என்று உள்ளேபோனாங்க.
கணவரிடமும் மகளிடமும் விவரம் சொன்னாங்க.

கணவர்,"ஆரோக்கியத்தைக்கூப்பிடேன்" என்றார்.

"இல்லங்க எனக்கு செல்வத்தை அழைக்கலாம்னு தோணுது"

அப்பாவும் அம்மாவும் இப்படிச்சொல்லவும் மகள்" அம்மா! அன்பைஅழைங்க" என்கிறாள்
வாசலுக்கு வந்தவங்க அன்பை உள்ளேவரச்சொல்றாங்க.

அன்பு மகிழ்ச்சியாய் உள்ளேகாலடி எடுத்துவைத்து வரவும் தொடர்ந்து மற்ற இருவரும் கூடவே வந்துட்டாங்க.

"என்ன இது இப்போது மூணுபேரும் வரீங்களே?' இல்லத்தரசி வியப்பாய் கேட்டாங்க.

"ஆமாம். செல்வத்தையோ ஆரோக்கியத்தையோ அழைச்சிருந்தா மற்ற இருவரும் வெளியேதான் நின்றிருப்போம் நீங்க அழைச்சது அன்பை.அன்பிருக்கும் இடத்தில்தான் செல்வமும் ஆரோக்கியமும் இருக்கணும் அதான் நாங்களும் உடன் வருகிறோம்"


மகிழ்ச்சிக்கு வழி வேறெதுமில்லைங்க அது,அன்புவழி! ஆமாங்க அன்பின்வழிதான்னு இந்தக்கதை சொல்லாம நமக்கு சொல்லுது இல்லையா?


அதுசரி இந்தக்கதைக்கும் பாவ்னா படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யாரோ கேட்கறீங்க!
அந்தமுகத்தைப்பார்த்தாலே பாவனாதாஸர்களான என் அருமை செல்லத்தம்பிகள் இருவருக்கு(முதல்வர், நியுயார்க்நாயகன், ஆன்மீக சூப்பர் ஸ்டார்! இரண்டாமவர் இணையத்தின் இளையதளபதி.கத்தார் காளை,இலங்கையின் இனியபுதையல்:))etc etc...):))
மகிழ்ச்சி என்பதாலும் அவங்க மகிழ்ச்சிதான் என் மகிழ்ச்சி என்பதாலும்தான்!:):)
மேலும் படிக்க... "மகிழ்ச்சிக்கு என்ன வழி?"

திங்'கள்'தகவல்!


கவிஞர் கண்ணதாசனுக்கு தேர்தலில் நிற்க ஆசை ஏற்பட்டது.

கலைஞருக்கு போன் செய்து," என்னை ஒருவேட்பாளராக நியமிக்கவேண்டும்" என்றபோது
" சரி எந்ததொகுதியில் நிற்க விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார் கலைஞர்.

"பாண்டிச்சேரி சின்னதொகுதி.. அங்குதான் நிற்கவிரும்புகிறேன்" என்றார் கண்ணதாசன்.

"பாண்டிச்சேரியில் உங்களால் 'நிற்க'முடியுமா ?"என்று சிலேடையாய் கலைஞர் கேட்க, கண்ணதாசன் அதைப்பெரிதும் ரசிததாராம்!
மேலும் படிக்க... "திங்'கள்'தகவல்!"

Sunday, November 02, 2008

இணையத்தின் இளைய தளபதிக்கு இன்று பிறந்த நாள்!

இணையத்தின் இளையதளபதி , ஈடில்லா தமிழ்க்கவிதைகளை, கதைகளை
அள்ளித்தந்துகொண்டிருக்கும் பலரின் அன்புத்தம்பி, இலங்கைஇளவரசு,
கத்தார் காளைக்கு இன்றுநவம்பர் 3ம்தேதி பிறந்தநாள்! நட்சத்திரவாரத்தில் ரிஷான் ஷெரீஃப்
நூறாண்டுகாலம் நோய்நொடியில்லாமல்
பேரும்புகழும் பெற்று பெருமையோடு திகழவும்
அமைதியை அவரதுநாட்டிற்குத்தந்து
அனைவரும் அங்கு சுகமாய் இருக்கவேண்டும் எனவும்
அன்போடு மனநிறைவோடு வாழ்த்துவோம்!

இனிய இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரிஷான் ஷெரீஃப்!
மேலும் படிக்க... "இணையத்தின் இளைய தளபதிக்கு இன்று பிறந்த நாள்!"

சனிக்கிழமைன்னாலே சாப்பாடுதான்!

Noveber8th saturday 2008....

//முன்குறிப்பு..உப்புமா பதிவென்று இதை ஒதுக்கிடாதீங்க!!!//

நம்ம தங்கத்தமிழ் நாட்டுல பல சிற்றுண்டிகள் இருந்தாலும் உப்புமா என்ற சங்ககால(எந்த சங்கம்னு கேட்டால் எங்க மாதர்சங்கம்னு சொல்லி சமாளிச்சிடுவேன்:))) சிற்றுண்டியின் மறுபெயர் ஆபத்பாந்தவன். இன்னொரு செல்லப்பெயர் நிலையவித்வான்(வானொலில வேறபாடகர்நிகழ்ச்சி ஏதுமில்லைன்னஅவசரத்துக்கு டக்குனு நிலையத்துக்காரங்க பாடினது வாசிச்சதை வச்சி சரிக்கட்டுவாங்க.அதனால யாராவது திடிர்னு வீட்டுக்குவந்தாசட்டுனு செய்யக்கூடிய டிபன் என்பதால் இந்தப்பேரு:)


பெங்களூர்ல இதற்கு காராபாத் என்றுபெயர். ஹோட்டலில் அழகாய் கப்பில் கொட்டி அதையே தட்டில் சின்னக்குன்றுமாதிரி கவிழ்த்து உச்சியில் தக்காளியைவட்டமாய் கட் செய்து கண்ணைக்கவரும் விதமாய் கொடுப்பாங்க..வடக்கில் கிச்சடின்னு பேரோ?

அவசரத்துக்கு சட்டுனு செய்யலாம்னு இதைப்புகழ்ந்துகிட்டே கொஞ்சம் அலட்சியமா செய்தோம்னு வைங்க அவ்வளவுதான் நம்மை ஏமாத்திடும.

உப்புமாக்கு எதுக்கு இந்தப்பேர்வந்திருக்கும்னு யோசிச்சிபாத்தா எவ்வளவோ கவனமாபார்த்துப்பார்த்துபோட்டாலும் இதுல உப்பு இருக்கே அது ஒண்ணு கம்மியாகும் ,இல்ல அதிகமாகும். அதனால் இந்த சிற்றுண்டிக்கு உப்பு போடறப்போ,
" உப்பு.... மா கவனமாபாத்துப்போடுமா"ன்னு யாரோ எச்சரிச்சிருப்பாங்க... காலப்போக்கில் அதுவே உப்புமா ஆகி இருக்கலாம். சிலர் உப்மா என்கிறார்கள்

உப்புமாக்குவிடும் தண்ணீர் அதிகமானால் அது உப்புபோட்ட, ரவாபாயசமாய் ஆகிடும்,ஸ்பூன்போட்டு கொடுத்துடவேண்டியதுதான்....அப்படியே சாப்பிடுங்கன்னும் சொல்லலாம்!
நீர்கம்மியாச்சுன்னு வைங்க உப்புமா, கல்லு உருண்டைதான்.
!

இந்தமாதிரி கல்லான உப்புமாவை ஆடுமாடுகள்,தோட்டத்தில் மேய்ந்தால்' சூ போபோன்'னு விரட்ட உபயோகிக்கலாம்!

தபாலை ஒட்டவீட்ல பசைஇல்லென்னா காதலாகிக் கசிந்துகுழைந்த உப்புமா உதவலாம்!

ஒருமுறை கல்யாணமான புதிதில்நான் செய்த ரவா உப்புமா எப்படி வந்தது தெரியுமா?:)

உப்புமாவாகவுமில்லாமல்,பாயசமாகவும் இல்லாமல் இருந்தது.
சாப்பிட விருந்தினர் ஒருவர் அதை சாப்பிட்டு,பின் வாயைத்திறக்கமுடியமால்,மூடவும்முடியாமல் கம்முனு இருந்தார்.
அப்புறம்தான் தெரிந்தது, அன்றைய உப்புமா கம்(gum) அதாவது பசைபோலாகி அவரை வாயடைக்க வைத்துவிட்டதென!!.அப்புறம் அவர் வீடுபக்கம்வருவதேஇல்லை.

உப்புமாக்கள்பலரகம்.!

அவுல், அரிசி .ஜவ்வரிசி .ரவை .சேமியா, ப்ரெட் என்று விதவிதமா இருக்கு!
அரிசிஉப்புமாவும் சுட்டகத்திரிக்காய்ய்புளிகொத்சும்.,
ரவா உப்புமாவும் தேங்காசட்னியும்,

சேமியாஉப்புமாவும் தக்காளிசட்னியும்...

நல்லகாம்பினேஷன்ஸ்.

மற்ற உப்புமாக்கள் இதற்குப்பின்னே க்யூவில் நிற்கின்றன.

உப்புமா கொழுக்கட்டை தெரியுமா?மிஞ்சின உப்புமாலயும் நைசா தேங்கா திருவிப்போட்டு
கொழூக்கட்டை வடிவத்துல பிடிச்சி ஆவிலவச்சி எடுக்கலாம்.புளி உப்புமா என அரிசிமாவில் வண்டி எண்ணைவிட்டு செய்யலாம்.



உப்புமா டிப்ஸ் ...
ரவாஉப்புமா செய்யறப்போ நெய்விட்டு வறுக்கணும், ஓவரா சிவப்பா வறுத்தா அப்றோம் அது தான் வறுபட்டதைக்காட்டிக்கொடுத்து நம்காலைவாரிடும். நல்ல பொன்மகள்நிறத்துல வறுக்கணும் அப்போதான் பொலபொலன்னு உதிர்ந்து வரும்.

பாதிஅளவுக்கு நீருக்குபதில்மோர் சேர்த்து கடசில கொத்தமல்லி இலை கேரட் துருவல் ஓரமம தூவி, ட்ரெஸ் பண்ணிங்கன்னா அவ்ளோதான் ஒன்ஸ்மோர் கேட்பாங்க!

அரிசிஉப்புமாக்கு லேசாலேசாதேங்கா எண்ணை விட்டா கேரளாவரைக்கும் மணக்கும்.

சேமியாஉப்புமாக்கு சேமியாவைவறுத்து வச்சதும் பச்சதண்ணீலகழுவணுமாம் அப்போதான் ஒவ்வொருசேமியாகுச்சியும் மாமியார்மருமகளா இருக்குமாம்!

காய்கறிகள் நிறைய உப்புமால சேர்த்தாலே தனி ருசிதான். என்னங்க,
உப்புமா விவரம் உப்பு சப்பில்லாம இலையே!?:) அடுத்து வருது இணையப்புகழ் மைபா!!!

உப்புமா, மா மா மா மா மா, மா மா மா மா மா?

மேலும் படிக்க... "சனிக்கிழமைன்னாலே சாப்பாடுதான்!"

Saturday, November 01, 2008

இயற்கை என்னும் இனியகன்னி ஏங்குகிறாள் தன் நிலையை எண்ணி..

எத்தனை மலர்கள் எத்தனை இலைகள்!
எத்தனைபறவைகள் எத்தனை உயிர்கள்!
மரங்கள் இருந்தால்..?



சுற்றுச்சூழல்பற்றி ஒரு சிறுமி எழுதியகவிதை இது.

மரங்கள் இருந்தால் என்றுமுடிக்கிற போது அந்தச்சிறுமியின் கவலை நமக்குப்புரிகிறது.

"மரம் செடிகொடி சுத்தமான நீர் காற்று என்று
வருங்காலக்குழந்தைகளுக்கு நாம் அனுபவித்த இயற்கைசெல்வத்தை அப்படியே விட்டுப்போகப்போகிறோமா இல்லையா நாம்?" என்னும் விடைதெரியாத கேள்வியும் எழுகிறது.

காற்று நீர் நிலம் நெருப்பு ஆகாயம் என்னும் பஞ்சபூதங்கள் அடங்கிய இயற்கை, மனிதன் இல்லாமல் வாழ்ந்துவிடும். ஆனால் மனிதனால்தான் இயற்கை இல்லாமல் வாழமுடியாது.

தண்ணீரும் காற்றும் உணவுமின்றி மனிதன் வாழ்வது சாத்தியமே இல்லையே.

ஒருபக்கம் மரங்களைவெட்டுகிறோம்.
இன்னொருபக்கம் மலைகளை இடிக்கிறோம்
காற்றை மாசுபடுத்தி பிராணவாயுவை அழித்துவருகிறோம்.

'க்லூரோஃப்ளூரோ கார்பன்' என்னும் ரசாயனபுகையை நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் ஏசி, ஃப்ரிட்ஜ் புகையூட்டும்கருவிகள் இன்னபிற சாதனங்கள் வெளிவிடுவதால் இது விண்வெளியை அடைந்து ஓசோனைப்பெரிதும் அழித்துக்கொண்டிருக்கிறது.

பிளாஸ்டிக் பொருட்களை ஓரளவு உபயோகத்திலிருந்து குறைத்துக்கொண்டுவிட்டாலும் முற்றிலும் நாம் அதை அழித்துவிரட்டவில்லை.

மெல்லமெல்ல நாம் இழக்கும் பொகிஷங்கள்தான் எத்தனை?

கார்ல்மார்க்சின்
எதை நீ இழந்தாலும் அதன் மதிப்பு இரண்டாகிவிடுகிறது என்பதை எப்போது உணரப்போகிறோம்?

' இதற்கு நான் மட்டும்என்ன செய்வது இது நாட்டின் பிரச்சினையல்லவா?' என்று நாம் ஒவ்வொருவரும் நினைத்து செயல்படுத்த மட்டுமல்ல செயலுக்கான எண்ணங்களுக்கே இடம்கொடுக்க தவறுகிறோம்.

ஒருகதை உண்டு, இது பலருக்குத் தெரிந்தகதைதான் ஆனாலும் இங்கே கொஞ்சம் நினைத்துப்பார்க்கலாம்.

வானத்தில் மேகம் ஒன்று உலா போய்க்கொண்டிருந்தது.மேலிருந்தபடியே கீழே பூமியை
பார்த்துக்கொண்டே வந்த மேகம் அங்கே வயலக்ளில் பயிர்கள் எல்லாம் பரிதாபமாய் வாடி இருப்பதை கவனித்து கவலைகொண்டது.

இன்னும் உற்றுப்பார்த்தபோது செடிகொடிகள் எல்லாம் 'தாகம்!தாகம்! தண்ணீர்! தண்ணீர் 'என கூக்குரலிடுவதுபோல உணர்ந்தது.

உடனே பயிர் செடிகொடிகளுக்கு உதவ நினைத்த மேகம் நகர்ந்துபோய்க்கொண்டிருந்த தென்றலை அழைத்து,'எப்படியாவது இவைகளின் உயிரைக்காப்பாற்றேன்' எனக்கேட்டுக்கொண்டது.


தென்றல் அலட்சியமாய்' ஆகட்டும்பார்க்கலாம்' எனசொல்லிப்போனது.

சற்றுதூரத்தில் நகர்ந்துகொண்டிருந்த நதியினைக்கேட்டது.

அதுவும் ,'நிற்க நேரமில்லை எனக்கு நானே ஓடிக்கொண்டிருக்கிறேனே' எனப் போனது.

மலையிடம் கெஞ்சவும் அது,' நான் இங்கிருந்தபடியேதான் பார்க்கமுடியும்' என்றது.

பயிர்களின் பரிதாபக்குரல் மேகத்தின்காதுகளில் விழுந்து அது துடித்தது.

"ஐயோ நீர் வேண்டித்தவிக்கிறதே எல்லாம்,யாருமே உதவத்தயாராய் இல்லையே?" என்று மனம் வாடியது.

பிறகு அதுவே," உதவநினைகக்ணும் என்றால் நாமேதான்அந்தச்செயலை செய்யத்தயாராக்ணும் "என்றுதீர்மானிக்கிறது.

உடனே அது மேலே உயர்ந்தது.

குளிர்ச்சி அடைந்தது.

தன் அழகான் பஞ்சுப்பொதி உடல்கரைவதைப்பற்றி கவலைப்படாமல் பல உயிர்களைக்காப்பாற்றுகிறோம் என்னும் மகிழ்ச்சிநிறைவில் தான் கரைந்துமரணத்தை தழுவிக்கொண்டு மழையைபூமிக்குஅளித்து மறைந்தது.


நாம் மேகமாய் மாறமுடியாவிட்டாலும் மனிதனாய் நம் எண்ணங்களை உயர்த்தி சின்னசின்ன செயல்களில் நமது அக்கறைகளை ஆரம்பித்து இயற்கைவளத்தைக்காபபற்றலாமே?

மரங்கள் வெட்டுவதை தடுப்போம்
மணல்கொள்ளையை தடுப்போம்

எரிசக்தியை சேமிப்போம்

வீட்டில் அவசியமின்றி எரியும் மின்விளக்கை
வீணாக்கும்குழாய்நீரை கவனிப்போம்
பிளாஸ்டிக்கின் உயோகத்தைநிறுத்துவோம்.


ஆடம்பரவிழாக்களில் அதிகம் மின் சக்திவீணாவதைக்குறைப்போம்
மழைநீரை சேமிக்கப்பழகுவோம்
மூலப்பொருட்களைபாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பரப்புவோம்




ஓசோனில் விழுந்திருக்கும் ஓட்டையை தனது இதயத்தில் விழுந்த ஓட்டையாக நாம் நினைத்துக்கொண்டால் இயற்கையை எப்படியாவது பாதுகாத்துவிடுவோம்.


பசுமையும் வளமும் கொண்ட சுற்றுப்புற சூழ்நிலைதான் நாம் நமது வருங்காலசந்ததியினருக்கு சேர்த்துவைக்கப்போகும் அரும்பெரும் சொத்து ஆகும்.
*********************************************
மேலும் படிக்க... "இயற்கை என்னும் இனியகன்னி ஏங்குகிறாள் தன் நிலையை எண்ணி.."

Wednesday, October 29, 2008

காதல்(கவிதை)

 
Posted by Picasa





(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)
மேலும் படிக்க... "காதல்(கவிதை)"

Tuesday, October 28, 2008

நானே நானா நட்சத்திரமாய் மாறினேனா?:)


துளசிமேடம் ஜிரா கேஆரெஸ் சுப்பையா மதுமிதா மங்களூர்சிவா இலவசகொத்தனார் ஆசிஃப்மீரான் சிறில் அலெக்ஸ் செல்வநாயகி மங்கை குமரன் என பிரபலபதிவர்கள் ஏறிய மேடையில் இன்று நானா? நானே நானா யாரோதானா நட்சத்திரமாய் மாறினேனா?

ஆச்சர்யமா இருக்குங்க!

தமிழ்மணத்துக்கு முதல் நன்றி.

இந்த நட்சத்திரங்களைப்பற்றி சிறுகுறிப்பு(நிறையபேர் நிறைய நிறைவா சொல்லிட்டாங்க நான் சொல்ல எதுவுமில்லேன்னாலும் ஏதாவதாவது சொல்லலேன்னா எப்படிங்க?:)

மறந்துட்டேனே மறக்காம நீங்க எல்லாரும் பின்குறிப்பு பாக்கணும் என்ன?

அன்று ஒருநாள் அம்மிமிதித்து அருந்ததி பார்க்கச்சொனார்கள் பட்டப்பகலில் நட்சத்திரமானது எப்படித்தெரியுமென கல்யாணங்களில் எந்தப்பெண்ணும் எந்தமாப்பிள்ளையும் கேட்பதே இல்லை!!!

வசிஷ்டர் மனைவி அருந்ததி உத்தமபத்தினி .அதனால் நட்சத்திரமாய் வானில் ஜொலிக்கிறார் என்கிறதுபுராணக்கதை.

சிறுவன் துருவனுக்கும் வானில் சிறப்பான இடம் உண்டு.

நட்சத்திரங்கள் நிரந்தரமானவை அதனாலதான் அதற்கு அந்தஸ்து.

உண்மையில் சூரியனே ஒரு நட்சத்திரம்தா அதனால்தான் கேஆரெஸ் எனும் ரவி(சூரியன்) ஆன்மீக சூப்பர்ஸ்டாரா இருக்காரோ?!

இந்த பூமியின் சுற்றளவை விட 110 மடங்கு பெரிய சுற்றளவும், 10 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடக் கூடிய அளவு இருக்கும் சூரியனை ஏனைய நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் சமயம் அது ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்கிறது வானியல் ஆராய்ச்சிக்குறிப்பு


நம் அண்டவெளியில் மட்டும் 1000 லட்சம் நட்சத்திரங்கள் இருப்பதாக கணித்திருக்கிறார்கள். நம் அண்டவெளியில் மட்டும் இவ்வளவு என்றால் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு இருக்குமோ?

மனிதர்களைப் போலவே நட்சத்திரங்களும் பிறக்கின்றன.மரணிக்கின்றன.

இந்த அற்புதம் நாள்தோறும் இந்த பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

எல்லையில்லாத இறை ஆற்றலின் படைப்புகள்தான் எத்தனை அற்புதமானவை!

அறிவியல்ரீதியா சிந்திக்க இங்கபலபேருக்குதெரியும் என்பதாலும் எனக்கு இதுக்குமேல சிந்திக்கதெரியாது எனப்தாலும் இந்தவிஷயம் இங்கு நிறைவுபெறுகிறது!

நட்சத்திரங்களின் ஆளுமை பலவிதம்.

நம்ம வீடுகளில்ஜாதகம் எடுத்தா போதும் முதல்ல நட்சத்திரம் என்னன்னுதான் கேட்பாங்க

கோயிலில் அர்ச்சனைக்ளுக்கும் நட்சத்திரம் தேவை.

ஒருவரின் பிறந்த நாளைய நட்சத்திரத்தை வைத்து அவரின் குணாதிசயங்களை சொல்லலாமாம்! சுப்பையாஸாருக்கு இதுபற்றி நன்கு தெரிந்திருக்கும்.

மகம் ஜகம் ஆளுமாம்
ஆண்மூலம் அரசாளுமாம்
பெண்மூலம் நிர்மூலமாம்
பரணி தரணி ஆளுமாம்
கேட்டை ஜேஷ்டனுக்காகாது
உத்திரத்தில் ஒருபிள்ளையும் ஊர்கோடியிலொருகாணிநிலமும் இருக்கணுமாம்
பூராடம் நூலாடாது....

இன்னும் இருக்கலாம்....


இதுல நட்சத்திரப்பலன்கள் வழக்கம்போல பெண்களுக்குபாதகமாத்தான் இருக்கு. பாசிடிவ் எல்லாம் ஆணுக்கு நெகடிவ் எல்லாம் பெண்ணுக்கு!(மகம் மட்டும் விதிவிலக்கு):)

சமீபத்துல தெரிந்த குடும்பம் ஒன்றில் காதலர்கள் இருவருக்கும் நட்சத்திரப்பொருத்தமே சரி இல்லையென்று பையனின் அப்பாவிலிருந்து அனைவரும் கல்யாணத்தைத்தடுக்கப்பார்த்தார்கள்.

காதலித்த அந்தப்பொண்ணு வந்து பையனின் அம்மாகிட்ட கெஞ்சிக்கேட்டுக்கொண்டது.

'மனப்பொருத்தம் இருந்தா போதும் மற்ற எதுவும் தேவைஇல்லை'ன்னு அந்தப்பெண்மணி முடிவெடுத்து மகனின் கல்யாணத்தை பல எதிர்ப்புகள் நடுவே செய்து வைச்சாங்க.

பெண்ணுக்குப்பெண்ணே எதிரியா யார் சொன்னது, பல இடங்களில் தோழி தான்!



பின்குறிப்பு. நட்சத்திரப்பதிவுகளில் நான் இடப்போகும் எல்லாபதிவுகளையும் இதேபோல வந்து பார்த்து படிச்சி கருத்து சொல்லப்போறதுக்கு உங்களுக்கெல்லாம் முன்கூட்டியே நன்றி!





மேலும் படிக்க... "நானே நானா நட்சத்திரமாய் மாறினேனா?:)"

Monday, October 27, 2008

தீபாவளிக்கவிதைகள்.

வருவாய் ஒளியே, தீபாவளியே!
************************************************


சுதந்திரக்காற்றையெல்லாம்,நீர்
சூழ்ந்த அந்தத்தீவில்
எந்தச்சுனாமி
அள்ளிக் கொண்டுபோனதோ?

நெருப்பு சுவாலைக்கு மத்தியிலும்
உருகாத பனிக்கட்டியாய்
பாலைவனவெப்பத்திலும்
தோகை விரித்தாடும் மயில்களாய்
உப்புக்கடலில் உதித்த
செப்புத்தாமரைகளாய்
அதர்மக்கூடாரத்தில்
தர்மவான்களாய் வாழும்
தமிழினத்தின் உயிரினம்
அழிந்துகாண்பதுசுடுவனம்

விடியலைவேண்டும் அந்த
வெள்ளைமனங்களின்
இருளடர்ந்த வாழ்வில்
படியளக்க வரவேண்டும்
நம்பிக்கை தீபம்!

சமமாக எங்குமேபரவி
அமைதியை இலங்கைக்குத்தந்து
எல்லோரும் நன்றாக
எல்லாரும்ஒன்றாகவாழ
எங்கெங்கும் ஒளிதந்து
எல்லையில்லா ஆனந்தம்
எம் இனத்தமிழர்க்கு இன்று
ஏற்றமுடன் தந்திடவே
வருவாய்ஒளியே! தீபாவளியே!
************************************************



மத்தாப்பூவாய்.....



மத்தாப்பூவாய் மலர்ந்த காதல் உன்
அப்பாவின் அணுகுண்டு கோபத்தில்
புஸ்வாணமாகிப்போனது
தரைச்சக்கரமாய் சுழல்கிறது என்மனது
சாட்டையடியாய் திரும்பிப் பேசி
தவுசண்ட் வாலாவாய் வெடிக்கத்
தெரியும் எனக்கும் .
ஓலைக்குள் சுருண்டிருக்கும்
பட்டாசாய்மௌனம்காக்கிறேன்
நேரம் வரும் எனக்கும்
வேலைஒன்றுகிடைக்கும் பின்பு
வானம்அதிரவெடிவைப்பேன்
மாலையும் சூட்டுவேன் உன்கழுத்தில்!


(இரண்டு கவிதைகளும் விகடன் மின்னிதழ் தீபாவளி மலரில் வந்துள்ளன)
மேலும் படிக்க... "தீபாவளிக்கவிதைகள்."

Saturday, October 25, 2008

தொட்டிச்செடி

கொட்டும் மழையில்
ஒருநாள் கிடப்பேன்
கொளுத்தும் வெய்யிலில்
மறுநாள் கிடப்பேன்.

கூண்டுக் கிளிக்காவது
சீட்டு எடுக்கும்போது
சில நிமிட விடுதலை.
தொட்டிச் செடிக்கு
அப்படி எதுவுமில்லை.

வேர்க் கால்களை
வீசி நடக்க
வேறு பாதை ஏதுமில்லை.

வேடிக்கை காண வரும்
விந்தை மனிதர்களைப்
பார்த்தபடியும்
மேய்ந்துவரும் மாடுகளிடம்
என்னில் பாதியை
இழப்பதுவுமே
வாடிக்கையாகிவிட்டது.

அலையும் மனதிற்கு
ஆதரவாய் அருகில்
கிளைக்கரம் தொட்டு
ஆறுதல் சாமரம் வீச
மரம் செடி எதுவுமில்லை.

தொட்டிக்குள் அடங்கிவிட்டது,
என் உடல் மட்டுமல்ல
விடுதலை கிடைக்குமென்ற
வாழ்க்கைக் கனவுகளும்தான்
மேலும் படிக்க... "தொட்டிச்செடி"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.