Social Icons

Pages

Sunday, December 21, 2008

பாரதிக்குப் பல்லக்கு!

தேசியமும் தெய்வீகமும் தனது கண்களாக பாவித்து விடுதலைக் கனல்மூட்டி தமிழ் அன்னையின் அருந்தவப்புதல்வனாக வாழ்ந்தவர் மகாகவி பாரதியார்.

கவிராஜன் கதையில் பாரதியின் இறுதி ஊர்வலத்தைப்பற்றி கவிஞர் வைரமுத்து எழுதும்போது பாரதியின் உடலில் ஒட்டியிருந்த ஈக்களைவிட அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வேதனையுடன் குறிப்பிட்டிருப்பார்.


அதற்குப் பிராயச்சித்தம் தேடுவதுபோல கடந்த 12 ஆண்டுகளாக பாரதி பிறந்த நாள் விழாவை 4நாட்கள் திருவிழாபோலக்கொண்டாடி வருகிறது சென்னையில் உள்ள வானவில்பண்பாட்டு மையம்.


இந்த விழாவின் சிறப்பு அம்சம் ஜதிபல்லக்கில் பாரதியின் சிலையை ஊர்வலமாக எடுத்து வருவார்கள். விழாவையொட்டி சிறந்த கவிஞர் ஒருவருக்குப் பொற்கிழி வழங்கி சால்வை போர்த்துவார்கள்.

இந்த‌ ஆண்டு திருவ‌ல்லிக்கேணி பார்த்த‌சார‌தி கோவில் வ‌ளாக‌த்தில் இந்த‌நிக‌ழ்ச்சி ந‌ட‌ந்த‌து. முன்ன‌தாக‌ பார‌தியின் உருவ‌ச்சிலையினை ப‌ல்ல‌க்கில் அம‌ர்த்தி பார‌தீய‌ ஜ‌ன‌தாக‌க்க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ திரு இலக‌ணேச‌ன் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ந‌டிக‌ர் எஸ்விசேக‌ர் க‌விஞ‌ர் திருவைபாபு ம‌ற்றும்க‌விஞ‌ர்பூவைவாகீச‌ன் ஆகியோர் சும‌ந்தார்க‌ள்.

ஜ‌திப்ப‌ல்ல‌க்கு பார்த்த‌சார‌தி கோயில் வ‌ரை ஊர்வ‌ல‌ம் வ‌ந்த‌து.
கோவில் முக‌ப்பில் விழா தொட‌ங்கிய‌து.


பார‌திகுல‌த்தோன்ற‌ல் திரும‌தி ல‌லிதாபார‌தி க‌விஞ‌ர் வாலிக்கு பார‌திவிருதை வ‌ழ‌ங்கினார்
நிறைய‌ க‌விஞ‌ர்க‌ளும் பார‌தி அன்ப‌ர்க‌ளும் இதில்க‌ல‌ந்துகொண்ட‌ன‌ர்.


ஆண்டுதோறும் பார‌தி திருவிழாந‌ட‌த்தும் வான‌வில்ப‌ண்பாட்டு மைய‌த்தின் த‌லைவ‌ராக‌ இருப்ப‌வ‌ர் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ர‌வி.இவ‌ர் செய்திவாசிப்பாள‌ராயிருந்த‌ ஷோப‌னா அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர்.
ஜ‌திப்ப‌ல்ல‌க்கு ஊர்வ‌ல‌ம் ந‌ட‌த்த‌ உங்க‌ளுக்கு எப்ப‌டி எண்ண‌ம் தோன்றீய‌தென‌க்கேட்ட‌போது அவ‌ர் சொன்ன‌து.


:க‌விபார‌தி த‌ன‌து இறுதிக்கால‌த்தில் வ‌றுமையில் வாழ்ந்தார். அவ‌ர‌து ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் எட்ட‌ய‌புர‌ம் ச‌ம‌ஸ்தான‌த்துக்கு உத‌விகோரி க‌டித‌ம் எழுதும்ப‌டி ஆலோச‌னை சொன்னார்க‌ள்.
இத‌ற்கு பார‌தியின் தன்மான‌ம் இட‌ம்த‌ர‌வில்லை. இருந்தாலும் ந‌ண்ப‌ர்க‌ளின் வ‌ற்புறுத்த‌ல் கார‌ண‌மாய் த‌ன‌து புத்தகங்களை பிரான்சிலும் இங்கிலாந்திலும் அச்சிட்டு வெளியிடப் பொருளுத‌வி கேட்டு சீட்டுக்க‌வி எழுதி அனுப்பினார்.

அந்த‌ க‌விதையில் ஜ‌திப்ப‌ல்ல‌க்கு பொற்குவை த்ந்து ம‌ரியாதை த‌ர‌வேன்டும் என்றும் கூறி இருந்தார். பாரதி தனது வாழ்க்கையில் த‌ன‌க்காக‌க் கேட்ட‌து இது ஒன்றுதான் ஆனால் அவ‌ருக்கு எட்ட‌ய‌புர‌ம் ச‌ம‌ஸ்தான‌த்திலிருந்து ப‌திலே வ‌ர‌வில்லை.


என‌வேதான் நாங்க‌ள் பார‌தியின் விருப்ப‌த்தைப்பூர்த்தி செய்ய‌ அவ‌ர‌து பிற‌ந்த‌ நாளில் ஜ‌திப்ப‌ல்ல‌க்கில் அவ‌ர‌து சிலையை வைத்து ஊர்வ‌ல‌ம் செய்கிறோம். அவ‌ருக்கு சால்வையும் பொற்குவையும் வ‌ழ‌ங்கிய‌பின் அத‌னை ஒரு மூத்த‌க‌விஞ‌ருக்கு த‌ருகிறோம்:
மேலும் படிக்க... "பாரதிக்குப் பல்லக்கு!"

Monday, December 15, 2008

பேசுவது கிளியா !

மார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம் என்பது அனைவரும் அறிந்த தகவல் தான்.

திரும்பத் திரும்ப ஆண்டாள் எழுதிய திருப்பாவை நாச்சியார் திருமொழி பற்றி
எழுதுவதிலிருந்து சற்று வித்தியாசமாய் ஏதும் யோசிக்கத் தோன்றிய போது
வழக்கம் போல சந்தேகம் ஒன்று எழுந்தது.

பதிவில் அமர்ந்திருக்கும் பஞ்சவர்ணக் கிளி வேறு பார்வையைக் கவர்ந்தது.

சந்தேகம் என்னவென்றால்...
அதாவது ஆண்டாளின் கரத்தில் கிளி ஏன் அமர்ந்திருக்கிறது என்பது தான் அது.

மீனாட்சி கரத்திலும் உண்டு. அத‌ற்கும் கார‌ண‌ம் ச‌ரி வ‌ர‌த் தேவையாக‌ இருக்கிற‌து.

கிளி நாம் சொல்வ‌தை திரும்ப‌ச் சொல்லும் என்ப‌தால் என்று சில‌ர் சொல்கிறார்க‌ள். கிளி சுக‌ப்ர‌ம்ம‌முனி அதாவ‌து சிவ‌ன் பார்வ‌திக்கு வேத‌ம‌றையை கூறிய‌போது குகையில் ம‌றைந்திருந்து கேட்ட‌து.அதனால் வேத‌ம் அறிந்த‌ப‌ட்சி என்ப‌தாலா அல்ல‌து அர‌ங்க‌விமான‌ம் காவேரி ம‌ண்புதைய‌லில் மூழ்கி காடுகளால் சூழப்பட்டுக்கிட‌ந்த‌போது அங்கிருந்த‌ ம‌ர‌த்தின் மீது அம‌ர்ந்திருந்த‌ கிளி ஒன்று அத‌னைப்ப‌ற்றி அங்கு வேட்டைக்கு வ‌ந்த‌ அர‌ச‌னிட‌ம் தெரிவித்து கோயிலை மீட்ட‌தாலா........

கிளியிட‌ம் ஆண்டாள் தூதுவிட்ட‌பாசுர‌ம் இருக்கிற‌தா என்ன‌ குயில் மேக‌ம் என்று ப‌ல‌வ‌ற்றை அவ‌ள்க‌ண்ண‌னிட‌ம் த‌ன‌க்காக‌ தூது அனுப்பிய‌தாக‌ம‌ட்டுமே ப‌டித்த‌ நினைவு.

ப‌ற‌வைக‌ளில் கிளி சைவ‌ம் என்கிறார்க‌ள் வேறுப‌ற‌வை அப்ப‌டி உண்டா என‌தெரிய‌வில்லையே!

சொல்ல‌வ‌ல்லாயோ கிளியே என்று பார‌தி பாடுகிறார்! கிளியையே கேட்டுவிட வேண்டியதுதானா:)

என் ச‌ந்தேக‌த்தை தீர்க்க‌வ‌ல்ல‌ அறிஞ‌ர் பெரும‌க்கள் யாரோ, வாருங்க‌ள் , வ‌ந்து ச‌ற்றே விள‌க்குங்க‌ள் ந‌ன்றி!
மேலும் படிக்க... "பேசுவது கிளியா !"

கொடுப்பதும் கிடைப்பதும்!

ஒருதந்தையும் மகனும் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஒரு மலைமீது ஏறி அதன் உச்சியை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். திடிரென மகன் கல் ஒன்றுதடுக்கி கீழே தடுமாறிவிழுந்துவிட்டான் , \ஆ\ என்று கத்தினான்.

\ஆ\ என்று எதிரொலி வந்தது.


என்ன இது என்றான்

என்ன இது என்று மறுபடி எதிரொலிகேட்டது.

என்ன நடக்கிறதெனப்புரியாமல் சிறுவன் தந்தையை குழப்பமாய் பார்த்தான்.

புன்னகைபுரிந்தபடியே அந்தத்தந்தை மலையை நோக்கிக்கூவினார்.

நான் உன்னைப்பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என்றார்.

நன் உன்னைப்பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என பதில்வந்தது.

நீ ஒரு வீரன் என்றார் அதே பதிலாக வந்தது.

வியப்புடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மகனிடம் அவர் சொன்னார்.

:இதனை எதிரொலி என்பர்கள். ஆனால் ,மகனே! உண்மையில் இதுதான் வாழ்க்கை !

வாழ்க்கை என்பது நமது செயல்களின் பிரதிபலிப்பே.

இந்த உலகத்தில் உனக்கு நிறைய அன்பு வேண்டுமானால் நீ நிறைய அன்பு செலுத்தவேண்டும் .உன் இதயத்தில் அன்பு சுரக்கவேண்டும்.

நட்பு பெருகவேண்டுமானால் நீ பிறரோடு நட்பாய் இரு.

வாழ்க்கை , இந்த உலகிற்கு நீ எதைக்கொடுக்கிறாயோ அதனையே திருப்பிக்கொடுக்கும்!:



(பின்குறிப்பு..வாசித்ததில் பிடித்ததால் பகிர்ந்துகொண்டபதிவு இது!)
மேலும் படிக்க... "கொடுப்பதும் கிடைப்பதும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.