Social Icons

Pages

Tuesday, November 10, 2009

கலங்குகிறேன்.

பாலில்நீரைக்கலப்படம் செய்த
காபியை காலையில் அருந்திவிட்டு
கலப்படம் பற்றிக் கவிதைஎழுத
கணிணியைத்திறந்தால்
கணிணிக்குள்ளே
வைரஸின் கலப்படம்


’அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்திருப்பது கலப்படம்’
என்று சொல்ல வரும்போது
கண்கள் கலங்குகின்றன

காரணம்..
காற்றில்வரும் தூசியிலும்
கரியமலவாயுக்கலப்படம்

சுவாசிக்கும் மூச்சிலும்
சுற்றுபுறசூழலின்
நச்சுப்புகைக்காற்றின் கலப்பு



உயிரையே பலிவாங்கும்
கலப்பட மருந்துகள்
நோயைவிட மனித உடம்பை
மேலும் பாதிக்கும்

சிமெண்டில் கலப்படமாம்
சரிந்துவிழுகிறது கட்டியசுவர்கள்
மிளகுக்கு நடுவே பப்பாளிவிதையாம்
மிளகாய்த்தூளில் செங்கல்தூளாம்
உணவுப்பொருளில் கலப்படம்
எப்படிச் செய்வதென்பது தேர்ந்த
வியாபாரிகளுக்கு மனப்பாடம்

இன்னும் இன்னும் இருக்கிறது
கேட்கக்கேட்க மனம் பதறுகிறது
எல்லா உரிமையும் ஜனநாயகநாட்டில்
இருக்கின்றது என்பதினால்
கலப்பட உரிமையை பட்டாபோட்டு
களிக்கின்றது ஒருகூட்டம்.

ஆயகலைகள் இப்போது 65
கலப்படம் கடைசியாய் புகுந்த
கைவந்தகலையாய் ஆகியது.
இந்த அக்கிரமங்களை
தமிழில் எழுதவந்தால்
அங்கும் கலப்படம ஆடுகிறது
சென்னைத்தமிழாம் நெல்லைத்தமிழாம்
தஞ்சைத்தமிழாம் அதெல்லாம் அமிழ்தாம்!

தொலைக்காட்சிகென்று
வெள்ளைக்காரன்மொழியொடுகலந்த
ஒரு தொல்லைத்தமிழைக்
கேட்கவும் கொடுமை.

இந்திரலோகத்து அமுதமாயினும்
கலப்படமின்றி
ஏதும் நம்கைக்குவராத நிலமை
எனும்போது தமிழ் என்ன செய்யும் பாவம்!



பாலில் நீரினை
பகுத்தறிந்த
அன்னப்பறவையையும்
அடியோடு காணோம்
நளன் தமயந்திக்கு
தூதுசென்றதில்
சோர்ந்து ஓய்வு
எடுக்கின்றதோ?

சாராயத்தில் கலப்படமாம்
சாவுஎண்ணிக்கை சொல்கிறது

கலப்படம் என்பதை
ஜாதிகள்மலிந்த நம்தேசத்தில்காணும்
கலப்புத்திருமணத்தில் வரவேற்போம்

பொன்னுடன் செம்பைசேர்த்தால்தான்
மின்னும நகைகள் உருவாகும்

புதுப்புதுவர்ணங்களின்கலவை
ஓவியக்கலைதரும் பிரமிப்பு

ஆணும்பெண்ணும் கலப்பதில்
அதிசியத்தக்கமனிதப்படைப்பு

ஆயின்
நோய்தீர்க்கும் மருந்தில்
குழந்தைஉணவில்
கலப்படம் செய்யும்கயவர்களை
விரல்நகம்போல்
வெட்டி எறியவேண்டும்
இல்லாவிடில் நம்
விரல்களே பறிபோய்விடும்.










--
மேலும் படிக்க... "கலங்குகிறேன்."

Tuesday, November 03, 2009

உள்ளம் கவர் இல்லம்!



”அழகினைத்தேடி உலகம் முழுவதும் திரிந்தேன் என் வீட்டுவாசலில் இருந்த புல்லின் பனித்துளியில் பிரபஞ்சத்தை தரிசிக்கத்தவறிவிட்டேன் ” என்கிறார் தாகூர்.

ஒவ்வொருமனிதனுக்கும் மகிழ்ச்சி அவனுடைய வீட்டின் மையத்திலிருந்தே ஆரம்பமாகிறது. எங்கு சென்றாலும் வீடு திரும்பும்பொழுது ஏற்படும் உற்சாகம் அளவில்லாதது

வீட்டை ஒவ்வொருக்கணமும் நேசிக்கும் மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நேசிக்கும் ரசனைகொண்ட மாந்தர்களாக இருக்கின்றனர்.

ஒருவன் உலகளாவ ஓங்கி உயர்ந்து நின்றுதன் புகழ்க்கிளைகளை பரப்பினாலும் அவன் கால்கள் வேரூன்றி நிற்பது அவன வீட்டில்தான்.


உறவுப்பிரியங்களை அடையாளம் காட்டும் வீடு

இளமை முதல்முதுமைவரை நமது அந்தரங்கம் அனைத்தையும் கண்டுகொண்டிருப்பதுவீடு. நமக்கான எல்லாவற்றையும் சுமக்கும்வீடு வெறும் சுவர்களால் கட்டப்படது அல்ல , அங்கு அன்பிற்குரியவர்களின் சுவாசம் நிறைந்திருக்கிறது ! அது இளைப்பாற அமரும் மர நிழல்! விருப்பம் போல சிற்குவிரித்துப்பறக்க அகாயம் ! இயலாமையின் தோல்வி சறுக்கல்களில் கீழேவிழும்போதெல்லாம் நம்மை ஏந்திக்கொள்ளும் அன்புக்கரங்களைக் கொண்டது வீடென்பது.

வெளி உலகில் எத்தனையோ சாதனைகள் புரிந்தாலும் வெற்றிவாகைகளை சூடிக்கொண்டாலும் உலாசென்ற தேர் நிலைக்கு வருவது போல முடிவில் மனிதன் விட்டிற்கே திரும்புகின்றான்.

மகிழ்ச்சியுடனோ கோபத்துடனோ விருப்பமுடனோ வெறுப்புடனோ எப்படியாயினும் திரும்பும் நம்மை ஏற்றுக்கொள்ளும் வீடு கடவுளின் கருணைபோன்றது.

’என்வீடுமிகச் சிறியவீடு ஆனாலும்
வீடுதிரும்ப விரும்புகிறேன்
ஒவ்வொருவீடும்
நிரந்தரச்சூரியனை
ஜன்னல்வழியே அழைக்கிறது
படியில் ஏறியதும்
பயங்கள் மறையும்
பின்கதவைத்
திறந்துபார்க்கிறேன்
வீட்டிற்கு அப்பால்
வேறு எதுவும் இல்லை’

என்கிறார்

தேவதச்சன் தன்கவிதை ஒன்றில்.



இல்லறம்துறந்து கானகம் செல்லும் துறவிகளுக்கும் ஆகாயமே கூரையாய் சுவர்களில்லா வீடாக இருந்திருக்கவேண்டும்.

வாழ்க்கை எந்த ஒருஇடத்திலும் நின்றுவிடப்போவதில்லை அது ஒரு பிரும்மாணட் ஊர்வலம் ஊர்வலத்தின் உயிர்நாடியாய் வீடுகளும் மனிதர்களும்.

வீடுகளில் நாம் தங்குகிறோமோ இலையோ சிலவீடுகள் நம் மனதில் தங்கிவிடுகின்றன


.


ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வீடு என்பதன் பொருள் பல்பரிமாணமுடையது. புலம்பெயர்ந்த புகலிடங்களில் தங்களைப் பொருத்திக்கொண்டவர்களுக்கு சிக்கல்கள் இல்லை. . ‘எனது வீடு எங்கோ தொலைவில் திரும்பவியலாத தேசத்தில் இருக்கிறது’என்று வருந்தும் அகதிகளாய் இருப்பவர்களின் வீடு தரையில் இல்லை. அது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஈழத்திற்குள்ளேயே புலம்பெயர்க்கப்பட்டு அலைக்கழிபவர்களின், முகாம்களில் இருப்பவர்களின் வீடுகளோ கல்லறைகளாகவோ மாற்றப்பட்டுவிட்டன. கூரை, சுவர்கள், வாசல், முற்றம் தோட்டம், பூச்செடி, கிணறு, பூனைக்குட்டி முதலியன கனவாய்ப்பழங்கதையாய் போய் தவிக்கும் அவர்களின் வாழ்வு மீள்வது என்று என்ற கேள்வி நமக்கு வதைத்துக்கொண்டே இருக்கிறது


உணர்ந்திருக்கிறீர்களா நீண்டநாள் கழித்து உங்கள் வீட்டுக்குச்செல்லும் போது வீதிமுனையிலேயே கால்களோடுமனமும் வேகமாய் நகர்வதை? பலநேரங்களில் வெளிதேசங்களிலிருந்து வீடுவந்து திரும்பும் போது வராமலேயே இருந்திருக்கலாம் என்று சிலருக்குத்தோன்றிவிடுவதுண்டு. வந்து மகிழ்ந்து களித்த சில நாட்களின் நினைவுநெடியின் தாக்கம் கொடுமையானது.





கால வெளிகளில் திரிந்தலைந்தபின் வீடு திரும்ப
என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வீடு
தன் அறைகளோடும் வாசத்தோடும்

என் அலைதல் ஒவ்வொன்றும்
வீட்டை மையப்படுத்தியே இருந்திருக்கிறது
ஒரு நாளைக்கு 56 தடவைகள் வீட்டைப் பற்றி நினைக்கிறேன்
பதினோரு முறை வெளியிலிருந்து வீட்டிற்குள் பிரவேசிக்கிறேன்
சதாசர்வ காலமும்
மூடிக்கிடக்கும் கதவைத் திறக்கும்போது கேட்கும் ஒலிகள்
என் காதில் ஒலித்துகொண்டே இருக்கின்றன
வீட்டுக்குள் தொங்கும் சட்டைகளோடு என் நினைவுகளும் தொங்க
வெளியே வெற்றுடலாய் அலைகிறேன்

வீட்டின் கூரைகளும் சுவர்களும் நெகிழ்ந்திருக்கின்றன
தன் எஜமானனுக்கான வரவை நோக்கி

இன்று கதவு திறக்கும் பொழுதில்
என் சப்தங்கள் உள்நுழைய
ஒடுங்குகிறது வழிதவறிய நத்தை
சுவர் மூலையில்.
நான் உரக்கச் சொன்னேன்,
அது தன் வழி கண்டடைந்த நத்தை’

எனும் ஹரன் ப்ரசன்னாவின் கவிதையும்






,
மரங்களும் சாலைகளும்
முடிந்து போன ஒரு
புள்ளியில்
இருந்ததாக ஞாபகம்
எனக்கொரு வீடு!

எனது செளந்தர்யத்தையும்
இளமையும் எடுத்துக் கொண்டு
தன் தனிமையும் துயரையும்
திருப்பித் தந்தது அது!

ஆவேசமற்ற ஆற்றாமையுடன்
அதனிடம் முறையிட்டப் போது
இறுக்க சாத்திக் கொண்டது
தன் கதவுகளையும் ஜன்னல்களையும்!

வளையல்கள் உடைய ரத்தம் கசிய
தட்டியும் ஒரு போதும்
திறக்கவில்லை அவ்வாழ்வின் கதவுகள்.

அசைக்க முடியாத நம்பிக்கையுடன்
மீண்டும் மீண்டும் வீடு திரும்புகிறேன்,
சாத்திய கதவுகளுக்கு அப்பால்
சாத்தியப்படும் வாழ்வினைத் தேடி!’

****************************************

எனும் உமாஷக்தியின் கவிதையும் இல்லங்களைப்போலவே நம் நெஞ்சில் பதிந்துவிடுகின்றன.
மேலும் படிக்க... "உள்ளம் கவர் இல்லம்!"

Monday, November 02, 2009

திக்குத் தெரியாத காட்டில்...

மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
அதேநேரம் அடக்கமாக எளிமையாக இருக்கும் சாதனையாளர்களையும் பார்க்கிறபோது
இதையெல்லாம் விளம்பரப்படுத்தவும் வேண்டுமா என்றும் தோன்றிவிடுகிறது. ஆனாலும் அன்பு நட்பு உள்ளங்கள் பல கேட்டுக்கொண்டதால் இந்தத்தகவலை இங்கே அளித்துவிட்டு நாவலினை விரைவில் தட்டச்சு செய்து அளிக்கிறேன். கையில் எழுதி (100பக்கங்கள்) அனுப்பிவிட்டதால் கணிணியில் சேர்த்துவைக்கவில்லை.

நன்றி!












<\
மேலும் படிக்க... "திக்குத் தெரியாத காட்டில்..."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.