Social Icons

Pages

Friday, July 31, 2015

ஆளவந்தார், ஆளவந்தார்!

ஆளவந்தார்!  1.
இவருடைய திருநட்சத்திரம் இன்று.



நாலாயிர திவ்யபிரபந்தம் எனும் தமிழ் வேதத்தை மீட்ட நாதமுனிகளின் பேரர்  தான்,  அறிவின் வலிமை மிக்க அந்த சிறுவன்.

யமுனைத்துறைவர்  என்பது  அந்த சிறுவனுக்குப்பெயர். 

மகாபாஷ்யபட்டரிடம் கல்வி பயின்ற காலத்தில்  தன் குருவை  கப்பம் கட்ட வைத்த   பாண்டிய அரசபையின் புலவர்  ஆக்கியாழ்வானிடம்  தானே  வாதாட  தீர்மானித்தான்
.
 ஆக்கியாழ்வான் அனுப்பிய தூதுவனிடம் யமுனைத்துறைவன் சொன்னான்.

” ஒரு பெரும் கல்வியாளருக்கு சமமாக நானும் வாதாடப்போகிறேன் ஆகவே நான் அரசவைக்கு வருவதற்கு பல்லக்கு அனுப்புங்கள்” என்றதும் அரசனும் அதை நிறைவேற்ற  சித்தமானான்.

மகாபாஷ்யப்பட்டர் பதறிப்போனார்,”குழந்தாய்! உனக்கு  யாரிடம் வாதாடப்போகிறோம் என்று நிஜமாகவே தெரிந்திருக்கிறதா?உன்னிடம் பாடசாலைப்பொறுப்பை விட்டு சற்று நேரம் நான் வெளியே சென்றபோது கப்பம் கேட்டுவந்த அரசுப்பணியாளிடம் நீ  விவரம் தெரிந்து  வாக்களித்துவிட்டாய்! ஆக்கியாழ்வான் தன் தர்க்கவாதத்திறமையால் பல கல்வியாளர்களை ஒளிமழுங்கச்செய்து அவர்களீடம் கப்பம் வசூல் செய்பவர்  கையில் பணம் இல்லாததால் மூன்றுவருடக் கப்பத்தொகை நின்றுவிட்டது நானும் வழிதெரியாமல்  தவிக்கிறேன். “

“குருப்பெருமானே  கவலைவேண்டாம்   குள்ளநரியை பயமுறுத்த சிங்கம் செல்லவேண்டுமா என்ன? வந்தவன் உங்களை அவமானப்படுத்துவதுபோலப்பேசினான் ,என்னால் அதைப்பொறுக்கமுடியவில்லை.. ஆக்கியாழ்வானுக்கு தைரியமும் உறுதியும் இருந்தால்  தங்கள் மாணவரான என்னிடம் வாதாடிப்பார்க்கசொல்’என்று சொல்லி அனுப்பினேன். அரசனும்  பல்லக்கு அனுப்புவிட்டான்  ஆசிர்வாதம் செய்யுங்கள் குருவே நான் சென்று வருகிறேன்”

ஒரு  பெரும்புலவர்போலவே கம்பீரமாக பல்லக்கில் அமர்ந்தான் யமுனைத்துறைவன் பல்லக்கில் அவன் பவனி செல்வதை சாலையில் அனைவரும் பார்த்தனர் அரசவையும் வியப்போடு காத்திருந்தது வரப்போகும் சிறுவனைக்காண்பதற்கு. ஆக்கியாழ்வான் மட்டும் ஆணவம் குன்றாது அமர்ந்திருந்தான்.

சிறுவனைப்பார்த்ததுமே  அரசியாருக்கு  மனதில் உற்சாகம் பெருகியது அந்த  ஒளி பொருந்திய கண்கள் அதன் விளைவால் பிரகாசமான முகம் அமைதியான புன்னகை அதிராத நடை என்று  யமுனைத்துறைவன் அரசவையில் நுழைந்ததும் அரசியார் சொன்னாள்”இந்தச்சிறுபிள்ளை ஆக்கியாழ்வானின் கர்வக்கோட்டையை உடைத்துவிடுவான்:”

“என்ன அரசியாரே  சிறுவனைப்பார்த்ததும் தீர்மானித்தேவிட்டாயா? நம் அரசவைப்புலவர் ஆக்கியாழ்வானை யாராலும் வீழ்த்த முடியாது என்ன பந்தயம் கட்டுகிறாய்?’ அரசன் சீறினான்.

“நான் தோற்றால் உங்கள் அடிமைக்கு அடிமையாகிறேன் “

“சரி நான் தோற்றால் என் அரசில் பாதியைத்தருகிறேன்”

அரச தம்பதிகள் இப்படிப்பிணங்கிக் கொண்டிருக்க, ஆக்கியாழ்வான்  கிண்டலாக,:இந்தச்சிறுவனா என்னை ஆளவந்திருக்கிறான்?” எனக்கேட்க அரசியார்,” ஆம் அவன்  உம்மை வென்று ஆள்வதற்குவந்தவன்  தான்” என்றாள்  உறுதியான குரலில்,.

தர்க்கவாதம் தொடங்கியது..

ஆக்கியாழ்வான் இலக்கணத்திலும் அமரகோசம் போன்ற நூல்களிலும்  எளீயகேள்விகளைக்கேட்டான், அவற்றிர்க்கு  உடனடி பதில் வரவும் பிறகு கடுமையான பல கேள்விகளைக்கேட்டான். பதில் அளித்து முடித்த யமுனைத்துறைவன்,”நான் சிறுவன் என்பதால் என்னை இளக்காரம் செய்கிறீர் போலும். ஜனகரின் அவையில்  அஷ்டவக்கிரர் என்று ஒரு மகரிஷி பந்தியைத்தோல்வியுறச்செய்தாரே  அப்போது அவர் முதியவரா  அல்லது சிறுவரா?  ஒரு மனிதனின் உருவத்தைக்கண்டு அவன் கல்வியை நீர் அளவிடுகிறீர்! அப்படியானால் உம்மைவிடப்பெரிய பொலிக்காளையைத்தான் பெரும் புலவர் என்று சொல்லவேண்டும்!” என்றான்.

 ஆக்கியாழ்வானுக்கு  இந்த அவமதிப்பான பேச்சைக்கேட்டதும் கொதிப்பு உண்டானாலும் சமாளித்தபடி,”சரி சரி  நீ என் கேள்விகளுக்கு சரியாகத்தான்  பதில் சொன்னாய் இப்போது நீ என்னிடம் கேட்க ஆரம்பிக்கலாம் விடை அளிக்கிறேன்” என்றான்  வெறுப்பான குரலில்.

“அதிகம் கேள்விகள் இல்லை  வெறும் மூன்றே வாக்கியங்கள் அதை உங்கள் முன் வைப்பேன் அதை மறுத்து நீங்கள் பேசவேண்டும்”

“சர்  உடனே சொல்”

“நல்லது முதல் வாக்கியம்… உங்கள் தாய் மலடி.

இல்லை என்று இதை முடிந்தால் மறுத்துப்பேசுங்கள்”

“சிறுவா உன் புத்தியைக்காட்டிவிட்டாயே என் தாய் மலடி எனில் நான் எப்படிப்பிறந்திருப்பேன் முட்டாளே?”

“பொறுமை பொறுமை.. இரண்டாவது வாக்கியம். ’பாண்டிய அரசன்மிகவும் நீதிமான்  ’இதையும் மறுத்துக்கூறுங்கள்”

“என்ன என்ன !  அரசனை நீதிமான் என்பதை மறுப்பதா  ?எதிரில் அரசன் அமர்ந்திருக்கிறான் அவனை நீதிமான அல்ல என்று சொல்வதா?  இந்தப்பையன் என்னை அழிக்கவந்திருக்கிறானோ?’ ஆக்கியாழ்வானின் மனம் ஓலமிட்டது.

மூன்றாவது வாக்கியம் என்னவாக இருக்குமோ என அரச சபையே ஆர்வமாகக் காத்திருந்தது.யமுனைத்துறைவன் புன்னகை  மறையாமல்  சொல்ல ஆரம்பித்தான்,

“கடைசி வாக்கியம்.. அரசியார்  பதிவிரதை..இதையும் மறுத்துப்பேசவேண்டும்”?”

ஆ! இதென்ன சோதனை!

ஆக்கியாழ்வான் கொதித்து எழுந்தான்.

 ”அற்பப்பயலே என் வாயை மூடவைக்கவேண்டுமென்று நீ என்னவேண்டுமானாலும் கேட்பாயா? அரசன் நீதிமான அல்ல என்றும் அரசி பதிவிரதை இல்லை என்றும் அரசனிடம் பரிவுள்ள  யாராவது சொல்வார்களா? இந்தவாக்கியங்களை நீயே மறுத்துப்பேசு பார்க்கலாம்  இல்லையானால் இந்த அரசவையில்  உயிரை இழப்பாய்! அரசனையும் அரசியையும் அவர்கள் இருப்பிடத்திற்கே வந்து பழிக்கிறாயா உனக்கு எத்தனைத்திமிர்?”

அரசவை சலசலத்தது அரசியார் மட்டும்  சிறுவனின் தேஜசான  முகத்தைப்பார்த்தபடி அவன் பதில்களுக்காக ஆர்வமாய் காத்திருந்தாள்,

“நானே சொல்கிறேன் அனைவரும் கேளுங்கள்”  யமுனைத்துறைவன் ஆரம்பித்தான்,.

“என் முதல் வாக்கியத்துக்கு இது மறுப்பு..நமது சாஸ்திரங்களில் ஒருமகவைப்பெற்ரவள் மலடி ஆகிறாள். ஒருமரம் தோப்பல்ல. ஒருபிள்ளையும் பிள்லையல்ல என்பது உலக வழக்கு.  உங்கள் தாய்  ஒரே ஒருமகனைப்பெற்றிருப்பதால் அப்படிச்சொன்னேன்… அடுத்து இரண்டாவது வாக்கியத்திற்கான மறுப்பு..  இது கலியுகம்  இங்கு தர்மம் ஒருகாலிலும் அதர்மம் மூன்றுகால்களிலும் நிற்கிறது.நமது புனித நூல்களில்,”ஒரு அரசன் தன் குடிமக்களை நன்கு காக்கும்போது, அவர்களின் புண்ணியத்தில் ஆறில் ஒருபங்கும், நன்கு காக்காத போது பாவத்தில்  ஆறிலொரு பங்கும் ஏற்க நேரிடுகிறது. ஆகவே சாஸ்திரங்கள்படி பார்க்கும்பொழுதில் ஓர் அரசன் அநீதிமான் ஆகவும் ஆக நேர்கிறது.
அடுத்து  மூன்றாம் வாக்கியத்திற்கான மறுப்பு.. அரசன் தனது செங்கோல் வலிமையில் அக்கினி வாயு சூரியன் யமன் சந்திரன் குபேரன் வருணன் இந்திரன் ஆகிய தேவர்களின் அம்சம் கொண்டு விளங்குகிறான். ஆகவே அரசி என்பவள் அரசன் என்ற தனிமனிதனுக்கு மட்டும் வாழ்க்கைப்படவில்லை இந்த அஷ்டதிக் பாலகர்களுக்கும் அவள் மனைவி ஆகிறாள்.இத்தனை தேவர்களுடன் தொடர்பு கொண்டவளை பதிவிரதை என்று சொல்லமுடியுமா?”

யமுனைத்துறைவனின் இந்த மறுமொழிகளைக்கேட்டு அவை ஆனந்தத்தில் ஆரவாரமானது. ஆக்கியாழ்வானும் வியந்துபோனான்.
அரசனும் அரசியும் மகிழ்ந்து எழுந்து,” ஆளவந்தாரே ஆளவந்தாரே” என்ற அவையினரின் கோஷத்தோடு தாங்களும் கலந்துகொண்டனர்.

“இந்த இளம் சூரியன் முன்பு  ஒரு தாரகை மங்கிவிட்டது. ஆம் உங்கள் வாதத்திறமையும் கல்வித்திறமையும்  அபாரம் அபாரம்! நான் பந்தயம் கட்டியபடி அரசில் பாதியைத்தருகிறேன் இனி அதனை நீரே ஆள வேண்டும் .உம் பெயரும் இனி ஆளவந்தார் என ஆகட்டும்!”


பன்னிரண்டு வயதில்  பாண்டியப்பேரரசின் பாதிப்பங்கைப்பெற்ற  யமுனைத்துறைவன்  பாடசாலையைத்துறந்தார்,ஆளவந்தார் ஆகி ராஜ்ஜியபரிபாலனம் செய்ய ஆரம்பித்தார்.
(தொடரும்)





மேலும் படிக்க... "ஆளவந்தார், ஆளவந்தார்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.