Social Icons

Pages

Friday, February 26, 2010

ஆத்தா ஒன் சீலதான்....




ஆத்தா ஒன் சீலைதான்
காத்தாக அணைச்சிருக்கு
தறியிலே நெஞ்சது என்
உசுருலே பிணைஞ்சிருக்கு.

உதிரத்துல பாலூட்டி
உத்திரத்துல சீலைதூளிகட்டி
உள்ள என்னை படுக்கவச்சே.
பத்துமாசம் வரையிலும்
பாவிமவ நான் படுத்துறங்கி
பகலிரவு நேரமெல்லாம்
ஈரப் படுத்தினதை
பன்னீரா தொடச்சதும்
ஆத்தா உன் சீலையிலே,

மாரியாத்தா திருவிளாவுல
ஆரியமாலா வேஷங் கட்ட
அன்னிக்குப் பொருத்தமாச்சி
ஆத்தா உன் சீலை தான்.

உலக்கைக்கு உள்ளாற
உட்கார்ந்த ’அந்த’ நாளில்
திரையாகக் கிடந்தததுவும்
ஆத்தா உன் சீலைதான்

அப்போதைய வறுமையில
தாவணியா மாறினதும்
ஆவணிச்சந்தையில வாங்கின
ஆத்தா உன் சீலைதான்

சொத்துபத்து எல்லாம் வித்து
சொற்பதொகை சேகரிச்சி
பாத்துப்பாத்து சீரு செஞ்சி
புகுந்தவீட்டுக்கு அனுப்பிவச்சே.
பொறப்பட்டு வருகையில
பொட்டியிலே முக்கியமா
பொக்கிஷமா வந்ததுவும்
ஆத்தா உன் சீலைதான்.

நாகரீகம் தெரிஞ்சவரு
நல்லாத்தான் மகளோடு
குடும்பம் நடத்தறாருன்னு
ஆத்தா நீ நம்பி இருக்கே.
நகரமில்லஆத்தா ,நரகத்துல
நான் வந்திருக்கிற சேதி சொன்னா
அய்யோ உன் இதயம்தான்
அப்போதே நின்னுப்பிடும்

வாய்தொறக்க வழி இல்ல
அடிதடி இம்சையினு
நாலுமாச தாம்பத்தியத்துல
நாய்ப்பொழைப்பா நாறுகிறேன்
நாலெழுத்துப்படிச்சிருந்தா
நானும் தல நிமிந்து பேசிடுவேன்.
பயத்துல செத்துக்கிட்டு
பிடி சோறுக்கும் வழி இல்லாம்
பட்டினியில் கிடக்கும் என்னை
இடிபோல தாக்கிச்சி நேத்திக்கு
என்புருஷன் சொன்ன பேச்சு

பாலோட பண்பாட்டயும் ஊட்டி
வளத்த பாசக்காரி ஒன் கிட்ட
பாதகன் சொன்ன சொல்லை
பாவிநான் சொல்லிப்புட்டா
ஆத்தா நீ தாங்கமாட்டே.
மானங்கெட்ட மக்களுக்கு
முந்தானைவிரிச்சிப்போடணுமாம்
முட்டாள்புருஷன்கட்டளை.

தாள முடியலம்மா
சாவது தான் முடிவுன்னு
ஆத்தா ஒன் சீலையினை
அழுதபடி எடுக்கறேன்,
ஆசைதீரத்தொட்டு
தொட்டு த்டவறேன்.
கழுத்துக்கு சுருக்காக
கடைசிப்பயணமாக
ஆத்தா உன் சீலதான்
ஆயுசுக்கும் என்கூட.

முடிவோட சீலையினை
மூச்சுமுட்ட அணைக்கையிலே
முந்தானைமுடிச்சு
நெஞ்சுல நெருடிடவும்
திடுக்கிட்டுப் பாக்கறேன்.

திகைப்போட முடிச்சினை
வேகமா அவிழ்க்குறேன்,
கசங்கித்தான் கிடக்குது ஒத்த
நூறுரூவா நோட்டு!
மலர்ந்தேதான் மனசும்
மானசீகமாக் கூவிக்கொள்ளுது,
”பொறந்த ஊரு போய்ச்சேர
கிடச்சாச்சு,
ரயிலு டிக்கட்டுக்கு துட்டு!”














--
மேலும் படிக்க... "ஆத்தா ஒன் சீலதான்...."

Monday, February 22, 2010

தமிழ்க்கடல்!








ஆழி சூழ் உலகம்!


********************************************




மொழிகள் பலவற்றில் ஒருபொருட்பலசொற்கள் அமைந்துள்ளன.தமிழ்மொழியில் ஒருபொருட்பல்சொற்கள்(பெயர்கள்)மிகுந்தே இருக்கின்றன.

அவையாவும் பொதுப்பெயரில் ஒத்து இருந்தாலும் சிறப்புப்பொருளில் தனிதனிக் கருத்தை உணர்த்துகின்றன.

கடல் எனும் சொல்லினை எடுத்துக்கொள்வோம்..


கடற்படை கடற்செலவு கடல் வணிகம் முத்துக்குளித்தல் கடலில் மீன் பிடித்தல் கடல்விளையாட்டு ஆகியவைகளில் தமிழ் மக்கள் தலை சிறந்திருந்தனர்.

கடலைக் குறிக்க தமிழில் பலசொற்கள் இருக்கின்றன.ஒவ்வொரு சொல்லும் கடலின் தனித்தனிப் பண்பை தெளிவாக விளக்குவதுடன் கடலைப்பற்றி நம்முன்னோர் பெற்றிருந்த ஆழ்ந்த அறிவையும் நன்கு புலப்படுத்துகிறது.

கடப்பதற்கு மிகவும் அரிதாக இருப்பதால் கடல்(கட+அல்=கடக்க அல்லாதது) என்று பெயர்பெற்றது.மிகவும் ஆழமாக இருப்பதால் ஆழி ,ஆழம், பௌவம் என்னும் பெயர்கள் ஏற்பட்டன. .பௌவம் என்னும் சொல் ஆழத்தைக் குறிக்கும்.

கடலில் எப்போதும் நீர் பெருகி இருப்பதால் பெருநீர் என்றும் கடலைக் குறிப்பிடுவதுண்டு.
கடலில் எப்போதும் வெள்ளம் மிகுந்திருப்பதால் வெள்ளம் என்றும் அதற்குப்பெயர்.

கடலிலிருந்து உப்பு கிடைப்பதால் உப்பின் உவர்ப்புச்சுவையை ஒட்டி கடலுக்கு உவர் என்றும் பெயர் இருக்கிறது.

கடல் மிகப்பெரியதாக பரவலாக உலகைசுற்றி இருப்பதால் பரவை என்கின்றனர்.







கடலில் அலை அடித்துக்கொண்டெ இருப்பதால் அலை என்றும், ஆறுகள் யாவும் கடலுடன் புணர்வதால் புணரி என்றும் பெயர்கள் வருகின்றன

மேகம் நீரை மொண்டு கொள்ளும் இடமாகக் கடல் இருப்பதால் கார்கோள் என்று பெயர்பெற்றது.

(கார்=கரியமேகம், கோள்=எடுத்துக்கொள்ளுதல்)

கடலி ல் எப்போதும் இரைச்சல் இருப்பதால் அது ஆர்கலி., நரலை ஓதவனம் (ஓதம்=ஈரம்) என்றும் சக்கரம் வட்டமாக இருப்பது போல கடலும் ஏறக்குறைய நிலத்தைச் சுற்றி வட்டமாக இருப்பதால் சக்கரம், நேமி ஆகியபெயர்கள் எற்பட்டன.

மீன்களுக்கு உறைவிடம் கடல் ஆகவே மகராலயம்(மகரம்=மீன் ஆலயம்=இருப்பிடம்) என்றானது.

கடலில் தண்ணீர் பெரியநிதியைப்போல இருப்பதால் அதற்கு சலநிதி(சலம்=தண்ணீர் நிதி=பெருக்கு)என்று ஒருபெயர்.

முத்து பவழம் போன்ற பொருட்களை வாரிவாரித்தருவதால் வாரி, வாரிதி.
கடல் நீரின் உறைவிடம், ஆகவே அதற்குப்பெயர் சலதி.

கடலின் நிறம் கருநீலம்,சுவையோ உவர்ப்பு. இரண்டையும் கருதி கடலுக்கு கார்மலி உவரி என்றும் சொல்கின்றனர்.

இவ்வாறு கடலைக் குறிக்கும் பல சொற்கள் தமிழ் மொழியில் பொருட் செறிவுடன் விளங்குகின்றன.

கடலைக்குறிப்பிட பல சொற்கள் இருப்பதுபோலவே கடலில் செல்லும் பல்வேறு ஊர்திகளை உணர்த்த பல சொற்கள் அமைந்திருத்தல் இயல்பே.

மரக்கலம் என்னும் பொதுச்சொல் நீரில் செல்லும் எல்லா ஊர்திகளையும் குறிக்கும்.
நிரில்மிதக்கும் கட்டை புணை எனப்படும், இதனை மிதவை என்றும் சொல்வர்.

பலமிதப்புக்கட்டைகளின் இணைப்புக்கு தெப்பம் எனப்பெயர்.

இருபக்கங்களிலும் வளைந்த மரக்கட்டு கட்டுமரம் எனப்படும்.

கட்டுமரம் என்ற தூய தமிழ்ச்சொல்லை ஆங்கிலேயர்கள் கடன் வாங்கி கட்டமாரான் (catamaran)என்கிறார்கள்!

மரத்தைக் குடைந்து தோண்டி செய்யபடுப்வது தோணி.

ஓடுவதுபோல விரைந்து செல்வது ஓடம் .மீன்பிடிக்க பயன்படும்மரக்கலம் திமில்.
பன்றிபோல வடிவமுள்ள மரக்கலத்திற்கு பஃறி.

விலங்கு அல்லது பறவைமுகம் போன்ற கலம் அம்பி எனப்படும்.

'பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும்..'

என்னும் அடிகளை சிலப்பதிகாரத்தில் காணலாம்.

பரிசல் என்பது பிரம்பால ஆகிய வட்டமான கலம்,
காற்றின் இயக்கத்தால் செல்லும் பாய்கட்டிய கலம் படகு.

தண்ணீரைப் பிளந்து செல்லும் போர்க்கலம் நாவாய்.

கப்பல் வங்கம் ஆகிய சொற்கள் பெருங்கலத்தைக்குறிக்கும்.

நீரில் மூழ்கிச்செல்லும் கலம் நீர்மூழ்கிக்கப்பல்.

submarine சொல் பிற்காலத்தில் தோன்றியது.

தமிழ் மொழியே கடலாக இருக்க , அதனுள் புதைந்திருக்கும் சொல் எனும் முத்துக்கள் தான் எத்தனை எத்தனை!
மேலும் படிக்க... "தமிழ்க்கடல்!"

Sunday, February 14, 2010

”தேவதை”யைக் கண்டேன்!

மனம்கவரும் ஒரு மகளிர் இதழாக தேவதை , தமிழ்ப்பத்திரிகை உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறது! வண்ணப்படங்களுடன் கண்ணையும் கருத்தையும் கவரும் தகவல்களுடன் இணையதள படைப்பாளிகளைப்பற்றி வெளி உலகுக்கு அடையாளம்காட்டி அறிமுகப்படுத்தும் தேவதையின் பணி சிறப்பானது. ஏனென்றால் இணையம் பக்கம் அனைவராலும் வர இயல்வதில்லை. பத்திரிகையை மட்டும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் இணையத்தின் தமிழ் ஆர்வலர்களைப்பற்றிய செய்தியை
கொண்டு சேர்க்கிறது தேவதை என்றால் அது மிகை இல்லை.















இன்றைய தேவதை(15.02.’10) இதழில் என்னைப்பற்றியும் வலைப்பூவினைப்பற்றியும் சிறப்பாகக்கூறி இருக்கும் தேவதைக்கு முதலில் என் நன்றி.

இனி உங்களிடன் தேவதை வருகிறாள் , நீங்களும் காணவேண்டுமென்று இங்கே அளித்திருக்கிறேன்!

















மேலும் படிக்க... "”தேவதை”யைக் கண்டேன்!"

Saturday, February 13, 2010

அழகாய் அவனே இருக்கின்றான்!

ஓர் அறிவிப்பு!

பாடல் குரல்பதிவிலும் வருகிறது!





காதலர்தின சிறப்புக்கவிதை!
***************************

அழகாய் அவனே இருக்கின்றான்
ஆதலால் மனதை அடைக்கின்றான்
ஆற்றுமணலில் அவன் நடந்துவந்தால்
ஊற்றுப்புனலாய் உள்ளம் பொங்கிடுமே!

அருவிவீழ்ச்சியில் தலைகொடுத்தே
அந்த அழகன் நிற்கும் கோலம்தான்
மருவித் துளைத்தென் மனத்துள்ளே
மயக்க அருவிதான் பொழிகின்றதே!

அங்காடித்தெரு வாசலிலே
அடிகள்மிதித்து அவன் நடக்கையிலே
இணைந்த என் இரு பாதஅடி
இழைந்தே போகவும் விழைகின்றதே!

தென்றல் சுகமாய் வீசுகையில்
தெள்ளிய நிலவு வானில்தெரிகையில்
நெஞ்சம் மட்டும் அலைபாயும்
நினைத்துநினைத்துத் தடுமாறும்!

என்னே இந்த ஏக்கமோ
என்னபெயர்தான் இதற்கோ?
முன்னே பின்னேகண்டதில்லை
இன்னமும் பெருக இதற்கேது எல்லை?

காதலென்றுதான் சொல்வீரோ
காமன் கணைதான் இதுவோ?
ஏதும அறிய இயலாமல்
மாது நான் மயங்கிக்கிடக்கின்றேன்!



(இந்தப்பாடலைப்பாடியவர் யார் எனக்கண்டுபிடிக்கறவங்களுக்கு அரைகிலோ மைசூர்பாக் இலவசம்:)
மேலும் படிக்க... "அழகாய் அவனே இருக்கின்றான்!"

Friday, February 05, 2010

அம்பி, ரிஷான் ,துளசிடீச்சர் ,சுப்பையா சார், இந்தமாதம் கலைமகள் பத்திரிகையில்!

இணையஎழுத்தாளர்களைப்பற்றிய கட்டுரை இம்மாதக்கலைமகள் பத்திரிகையில் பிரசுரமாகி உள்ளது. தொடர்ந்து இதில் பலரும் வர இருக்கிறார்கள்.
இப்போது உங்கள் பார்வைக்கு இங்கே அந்தக்கட்டுரை!








a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJqqFpVORjNfv-VZXEw6YhijJTx_zlKN7oFfQNiuZQX_Iksp1gd9B6VkgalQQGMPyhMgmYinA7_P7ZXRt66dD44QXSnn1KdQG2YV5GtajKPmThBtGEMBgN2FuMP5q6u4wwAHMaXA/s1600-h/page2.jpg">


a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK59DeUdlOdI36rj9pG2ztO98qIsA6g3BFa8wKFLLE9pqahwXGcKN0FBNYYXKxNWjMS0-pxkC2yFUesgnN8V2dAGp5tmCoPYLaf-Ezqufmv6NZBfqWgpRsPfBPpmDgpS87KpxYnA/s1600-h/page3.jpg">







மேலும் படிக்க... "அம்பி, ரிஷான் ,துளசிடீச்சர் ,சுப்பையா சார், இந்தமாதம் கலைமகள் பத்திரிகையில்!"

Thursday, February 04, 2010

தமிழர் இசை!

/////கொஞ்சநாள்முன்னாடி மணற்கேணி அமைப்பும், சிங்கைபதிவர்கள் மற்றும் இணையதளமும் நடத்தின கருத்தாய்வுபோட்டிக்காக கஷ்டப்பட்டு இதை ஆராய்ந்து எழுதி அனுப்பினேன்.பரிசு கிடைச்சா சிங்கப்பூருக்கு அனுப்பறதா அறிவிப்பு கொடுத்திருந்தாங்க. உடனே .கனவுல முஸ்தபா போய் ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சேன்! பெரிய சிங்கப்பூர் விசிறி வாங்கி ஹால் சுவரில் மாட்டி அழகுபார்த்தேன்! சிங்கை நண்பர்களைசந்தித்து மைசூர்பாக்கெல்லாம் கொடுத்தேன். கனவு நனவாகவே இல்லை! ஆமாம்,
போட்டியே நடக்கலன்னு அப்புறமா தெரிஞ்சது); ’இனிபொறுப்பதில்லை பெண்ணே’ என்று மனசு குரல்கொடுக்கவும் இப்போ இதை இங்கே இட்டுவிட்டேன்!/////

**********************************************************************





இசை என்றாலே இனிமை எனலாமோ? செவிவழிபுகுந்து மனதிற்கு மகிழ்ச்சியைத்தரும் ஓர் ஒலிதான் இசை என்பது!

இசை என்ற சொல்லுக்கு இசையவைப்பது என்று பொருள் இருக்கிறது.

ஒழுங்கான கட்டுபடுத்தப்பட்ட இனிய ஒலியை இசை என்கிறோம்.இனிய இசைஒலியை நாதம் என்று சொல்கிறோம்.

பிறப்புமுதல் இறப்புவரை இசை நம்மோடேயே பயணிக்கிறது.


தாலாட்டாக ஆரம்பித்து இறப்பில் ஒப்பாரியாக இசை விரியும் பரிமாணங்கள் அடர்த்தியானது. தமிழரின் வாழ்நாட்களில் மகிழ்ச்சியைக்கொண்டாட இசை நிகழ்ச்சிகள் நடத்துவதும் அதனைப்பலர் கேட்பதும் இன்றும் தொடர்கிறது.

அகம்புறம் இரண்டினையும் ஐக்கியப்படுத்தி ஒருமித்த தன்மையில் இவற்றில் ஊடுருவி உள்ளம், உடல் இரண்டினுக்கும் விவரிக்க இயலாத சுகமான அனுபவத்தை வழங்கக்கூடியது இசை என்றால் அதை மறுப்பதற்கில்லை.

தமிழ்மொழியை இயல், இசை, நாடகம் என்று பாகுபடுத்திக்கூறுவது தமிழ்மொழியில் தவிர வேறெந்த மொழியிலும் இல்லாத புதுமையாகும்.

பரதமுனிவர்,தமது நாட்டிய சாத்திரம் என்னும் நூலில் தென்னாட்டுமக்கள் பாட்டிலும் பல இசைக்கருவிகள் வாசிப்பதிலும், கூத்திலும் மிக்கதிறம் வாய்ந்தவர்கள் என்றுகுறிப்பிட்டுள்ளார்.

அவர்குறிப்பிட்டிருப்பது பண்டைய தமிழ் இசையே என்பதும் பண்டையதமிழிசையே இன்றைய கர்னாடக சங்கீதத்திற்கு தாயாகத் திகழ்ந்தது எனபதும் அனைத்து ஆய்வாளர்களின் ஒருமித்தக் கருத்தாகும்.

தொல்காப்பியத்தில் மக்கள்தம் தொழிலைச்செய்ய உதவும் கருவி இசை ஒன்றைப், ‘பறை’ என்றும் ,பொழுதுபோக்கிற்கான கருவி இசையை’ யாழ் ’என்றும் குறிப்பிடுகிறார்.
.
எட்டுத்தொகை சேர்ந்த பரிபாடல் பண்ணுடன்கூடிய,70இசைப்பாடல்களைக்
கொண்ட ஒருதொகுப்பாகும் ஆனால் நமக்கு 20பாடல்களே கிடைத்திருக்கின்றன.

எட்டுத்தொகையைச்சேர்ந்த அகநானுற்றில் பெண் ஒருத்தி,யாழெடுத்துக்,குறிஞ்சிப்பண் இசைத்து தினை உண்ன வந்த யானையைத் தூங்கும்படி செய்துவிட்டாள் என்ற செய்தி கிடைக்கிறது.

அக்கால மன்னர்கள் இசையைஆதரித்ததை இப்பாடல்களில் அறியமுடிகிறது. மூவேந்தர்களின் அவையில் தமிழ் இசை பெரிதும் போற்றப்பட்டிருக்கிறது!

சிலப்பதிகாரத்தில் இளங்கோஅடிகள் யாழ் ஆசிரியன் மற்றும்குழல ஆசிரியன் ஆகியோரின் இலக்கணங்களை சிறப்பாக எடுதுரைக்கிறார். புலவரே இசை மற்றும்நாட்டியகக்லை நுட்பங்களில் தேறியவர் என்பதால் தமிழர் இசை பற்றிய அறிவு நிரம்பப்பெற்றவராய் இருந்தார்.

.ஆய்ச்சியர் குரவையில் ஏழுமகளிர் ஏழு இசையின் பெயர்தாங்கி இசைஇலக்கணத்தை விளக்கும் வகையில் நின்று ஆடும்முறை அருமையாக விளக்கப்பட்டுள்ளது.

இன்னும் திவாகரம் பிங்கலம் ஆகிய நிகண்டுகளிலிருந்தும் பண்டைத்தமிழைபற்றிய பலசெய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது
.
103பண்களின் பெயர்கள் தமிழர் இசையில் விளங்கியதை சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன

,கிபி3ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி6ஆம்நூறாண்டுவரை தமிழக வரலாற்றுக்கும் தமிழ் இசைக்கும் இருண்டகாலம் என்றுகூறப்படுகிறது.

கிபிஆறாம் நூற்றாண்டு சமணர்காலத்தில்,சமணர் இசையை வெறுத்ததால் பல இசைநூலக்ள் அழிந்து போய்விட்டன.

கிபிஏழு, எட்டு, ஒன்பதாம்நூற்றாண்டுகளில் ,தேவார திவ்யபிரபந்தங்கள் தமிழில் தோன்றின.


ஆழ்வார்களும், நாய்ன்மார்களும்பண்ணோடு பாடிய சிறந்த தமிழ்ப்பாடல்கள், தமிழுக்குக்கிடைத்த அரும் புதையல்கள்!


பாடல் தாய் மொழியில் இருக்கும்போது அதை நாம் ஆழ்மனத்தோடு உணர்ந்து அனுபவிக்கிறோம். நாவுக்கரசரின் ‘தூக்கிய திருவடி எடுத்த பொற்பாதம்’ எனும் பாடலுக்கு சைவ சித்தாந்தத்தில் பலவித அர்த்தங்கள் உண்டு. மொழியிலிருந்து இசையைப்பிரிக்கமுடியாததால்தான் புல்லாங்குழலில் ‘’தீராதவிளையாட்டுப்பிள்ளை’; என்று வாசித்தால் நமது மனம் கண்ணனின் குழந்தை விளையாட்டை கண்முன் காண ஆரம்பித்துவிடுகிறது,



மணிமேகலை சீவகசிந்தாம்ணி பெரியபுராணம திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்களில் பல இசைக்கருத்துக்கள் காணப்படுகின்றன.

தமிழர்இசை எனும்போது தமிழ்மொழிமட்டுமல்ல தமிழ்ப்பண்பாட்டினையும் சேர்த்துதான் நாம் காணவேண்டி உள்ளது.

மொழிலியிலிருந்து,இசையைப்பிரிக்கமுடியாது ,அதனால்தான் இசைத்தமிழ் என்கிறோம்.


நான்குவகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தவர் தமிழர். நான்கிற்கும் கருப்பொருள், உரியபொருள் வகுத்தது நம் மரபு.

நால்வகை நிலங்களுக்குமான நான்குபெரும்பண்கள் உருவானது. பண்களே,காலப்போக்கில் ராகங்களாக வளர்ச்சியடைந்தன பண்ணென்பது பாடலின் இசைவடிவம் அதை’மெட்டு’என்றும்கூறலாம்

நான்குநிலத்திற்கும் உரிய பெரும்பண்ணை ’பாலை’ என்கிறோம்
ஒரு பழையபண்தான் இன்று முக்கிய ராகமாகத் திகழ்கிறது

.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர்குரவை பாடலில் ’முல்லைத்தீம்பாணி ’என்று குறிப்பிடப்பட்டுள்ளது

ச ரி க ப த இதன் சுரம்(ஸ்வரம்)

இதுதான், இன்றையமோகன ராகம்.திரைப்படப்பாடல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ராகம்..ஆம், இதுவேமோகனம்! சுகமான ராகம் இது!


தமிழர் இசையானது, அடிப்படையில் இன்னிசை( மெலொடி) யானது!அதுதான் நமக்கு அடிபடையானசுவை !


15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழ்பாடல்களில், பல,தாள எண்ணிக்கைகளைப் பயன்படுத்திஅமைத்தார்.

18ஆம் நூற்றாண்டில் அருணாசலக்கவிராயர்.’இராம நாடகம்’ என்னும இசைநாடகத்தைதமிழில் இயற்றினார்.

திரிகூடராசப்பகவிராயர்,’குற்றாலக்குறவஞ்சி ’என்னும் அருமையான இசைநாடகத்தை இயற்றினார்.



19ஆம் நூற்றாண்டில் கவிகுஞ்ச்ரபாதி,அண்ணாமலைரெட்டியார்,((காவடிச்சிந்தின் தந்தை)
ராமலிங்க அடிகளார்,பாரதியார் பாரதிதாசன் போன்றவர்களின்பாடல்கள்,தமிழரின் இசைஎனும் பாரம்பரியத்திற்கு வலிமையும் பெருமையும் சேர்த்த பாடல்கள் என்பதில் ஐயமில்லை.

ஆப்ரஹாம்பண்டிதர் சேக்கிழாருக்குப்பின் தமிழர் இசைக்கு ஆக்கம் தந்தவர்’

இவரது அரியமுயற்சியால் ’கருணாமிர்தசாகரம்’ என்னும் இசைத்தமிழ்நூல்நமக்குக்கிடைககப்பெற்றது.


முதன்முதலாகத்தமிழில் கீதங்களையும் வர்ணங்களையும் இயற்றியதுமட்டுமில்லாமல் எல்லாவற்றையும்
மாணவமாணவிகளுக்கும் கற்பிக்க வேண்டுமென்றார்.


விபுலானந்த அடிகள் பல ஆண்டுகாலம் இடைவிடாது ஆராய்ந்து ’யாழ்நூல்’என்ற அரிய நூலை இயற்றினார்.
பண்டைத்தமிழர் கண்டுணர்ந்த யாழினை மீண்டும் தமிழ்கத்துக்கு வழங்கிய பெருமை அடிகளாரையே சேரும் . எஸ்.ராமனாதனின் ;சிலப்பதிகார ’இசை நுணுக்க விளக்கம்’ சாம்பமூர்த்தி அய்யர் அவர்களின் ’தென்னிந்திய இசை’

,’ தமிழிசை வளம், தமிழிசை இயல், தமிழ் இசைக்களஞ்சியம்’ என்று வி.ப.க. சுந்தரம் அவர்கள் எழுதிய மூன்று நூல்கள் டாக்டர் சேலம் ஜெயலட்சுமி எழுதி உள்ள’சிலப்பதிகாரத்தில் இசைச்செய்திகள்’ இப்படிப்பல நூல்கள் தமிழர் இசை பற்றிய பல தகவல்களை நமக்கு அளிக்கிறது.

லட்சுமணப்பிள்ளை பொன்னையா பிள்ளை போன்றோர் தமிழர் இசைக்கு பெரும் சேவைபுரிநது மறைந்தனர்.

முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை போன்றோரின் பாடல்கள் தமிழரின் இசையில் பெரும் பங்குவகித்தது. இன்னும் பலரது பங்களிப்பு உள்ளது ..இங்கு இட்ட பட்டியல் குறைவே.

தமிழர் இசையானது, தமிழ்போலவே சிறப்பாக இன்றும் திகழ்கிறது.!


!
மேலும் படிக்க... "தமிழர் இசை!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.