Social Icons

Pages

Saturday, December 11, 2010

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்.....

சுதந்திர வேள்வியில் நெருப்பாய் எழுந்தவர் நீலகண்ட பிரும்மச்சாரி. அவரைச்சிறையிலடைத்தனர் விடுதலை ஆகிவெளியே வந்தவரின் உடலில் சிறைத்தழும்புகளையும் மீறி வறுமைத் தழும்புகள் தெரிந்தன. எம் அன்னையின் கைவிலங்குகள் என்றைக்கு உடையும் என்று கொதித்தவர் தன்னை வதைத்த வறுமையை எண்ணி வேதனையுற்றார். மகாகவியின் மனம்கவர் தோழரான நீலகண்ட பிரும்மச்சாரிக்கு நிலைகெட்ட மனிதர்களை நினைக்கும்போதே நெஞ்சுகொதித்தது. அவரின் பொது உடமை நெஞ்சம் எழுத்துகக்ளில் பொங்கிவழிந்தது, அவர் எழுத்தில் இருந்த நெருப்பு வயிற்றில் வந்து வசிக்கத் தொடங்கியது.

அப்போதுதான் ஒருநாள் மகாகவியின் இல்லத்திற்குவந்துசேர்ந்தார். பசியில் உடல்தள்ளாட கை மகாகவியின் சின்ன மகளிடம் யாசகம் கேட்டது.
சேர்த்துவைத்திருந்த இரண்டணாவை அந்த சின்னப்பெண் அவரிடம் கொடுக்க பெற்றுக்கொண்ட பெருமகனார் இரவில் திரும்பிவந்தார்.

பாரதியிடம்,”தோழா உன் மகளிடம் நான் பெற்ற இரண்டணா இன்றைய பசியை தீர்த்தது இனி நான் என் செய்வேன்? செல்வரிடம் கொள்ளையடித்துத்தான் காத்துக்கொள்ளவேண்டும் வறுமைவாட்டுகிறது இனியும் தாங்கமுடியாதையா முடியாது” என்று தேம்பினார்.

கேட்டதும் மகாகவி எரிமலையானார். “என்ன உலகமடா இது ஒரு பணக்காரனின் சுகத்துக்கு ஆயிரம் ஏழைகள் பலியாவதா? தம்பி நீலகண்டா நீ தடுமாறாதே தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் காத்திடுவாள் சக்தி கவலைப்படாதே” என்று ஆறுதல்கூறினார். அருகில்குடி இருந்தோரை அணுகி ஐந்துரூபாய்வரைப்பெற்று நண்பரை அனுப்பிவைத்தார் . தன்னைக்கும்பிட்டு நகர்ந்த நீலகண்டரைப்பற்றி எழுதினார் மகாகவி.

பாரத சமுதாயம் வாழ்கவே!

(திருமதி சகுந்தலாபாரதி வெளிப்படுத்திய நிகழ்ச்சியைக்கேட்ட என் தந்தை கூறியதிலிருந்து)
மேலும் படிக்க... "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்....."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.