Social Icons

Pages

Sunday, November 21, 2010

திருக்கார்த்திகை மாதம்!

தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகைமாதம்! பன்னிரண்டு தமிழ் மாதங்களிலேயே கார்த்திகைக்கு மட்டுமே திருக்கார்த்திகை என்று பெயர் உண்டு. ஆதியிலிருந்தே மனிதன் அக்னியை தெய்வமாகக் கொண்டாடி வந்தான். பெரும்பான்மையான பண்டிகைகளில் நாம் விளக்கேற்றி வைப்பது இந்த அடிப்படையில்தான்.

ஒளியானது குறிப்பிட்ட அளவுள்ள சலனத்திலேயே நம் கண்ணுக்குத் தெரியும். இவ்வுலகில் நாம் கண்ணால் காண முடியாத ஒளியும், காதால் கேட்க முடியாத ஒலியும் உள்ளது. ஆந்தை பூனை இவற்றுக்கு இரவில் கண் தெரியும் மர்மம் இதுவே. நம் கண்ணால் பார்க்க இயலாத அளவுக்கு குறைந்த சலனம் உள்ள ஒளியை நாம் இருள் என்கிறோம். அளவுக்கு அதிகமான சலனம் உள்ள ஒளியும் மனிதனுக்கு இருளாகவே தெரிகிறது.

'தீப மங்கள ஜோதி நமோ நம...'

'அருட்பெரும் சோதி தனிப் பெரும் கருணை'

இறைவன் ஜோதி மயமானவன். சிவம் என்றால் சிவப்பு நிறம் என்று அர்த்தம். சிவம் என்னும் நாமம் தமக்கே உரிய செம்மேனி அம்மான் என்று பாடினார் திருநாவுக்கரசர். சூரியனை நாம் வழிபடுவதும் ஒரு இறைவழிபாடுதான். பின்பு அது ஒளி வழிபாடாகப் பரிணமித்தது. அந்த ஒளி வழிபாடே திரு விளக்கு வழிபாடாயிற்று. பின்னர் அதுவே திருக்கார்த்திகை தீபமாயிற்று.

தூண்டுச் சுடரளைய சோதி கண்டாய் என்கிறது தேவாரம். ஒரு சமயம் பிரும்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தமக்குள் யார் பெரியவர் என்கிற போட்டி ஏற்பட சிவபெருமானோ தன்னுடைய அடி அல்லது முடியை காண்பவரே வெற்றி பெற்றவராவார் என்று தெரிவித்தார். பிரும்மன் அன்னப் பறவை வடிவம் கொண்டு வானில் பறந்து சென்று முடியைக் காண முயன்று தோற்கிறான். பகவான் விஷ்ணுவோ வராக அவதாரமெடுத்து பாதாள உலகம் சென்று மலரடியைக் காணமுடியாது போக முடிவில் இறைவன் ஜோதிவடிவமாகக் காட்சி அளித்த இடமே திருவண்ணாமலை. ஆகவேதான் இதை அக்னி ஸ்தலம் என்று கூறுவர். இங்கு ஏற்றப்படும் ஜோதியைக் காண பஞ்ச மூர்த்திகள் தப்பாமல் வருவதாய் ஐதீகம். இந்த ஜோதியைத் தரிசித்தால் ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் பெருகுமாம். 'எமது உடல் ஒருமனை உள்ளம் ஒரு பாத்திரம் அதில் உணர்வாகிய நெய்யை ஊற்றி உயிரெனும் தீயை இட்டு பிராணன் எனும் காற்று நிரப்பி அறிவுச் சுடரை ஏற்றி அன்பினால் தூண்டிக் கொண்டே இருந்தால் ஆணவமாகிய மாய இருள் அகலும் பின்பு சிவ பரஞ்சோதி தரிசனம் கிட்டும்' என்று மிக அழகாக அப்பர் சுவாமிகள் கார்த்திகை தீப சரித்திரத்தை நமக்கு எடுத்து இயம்புகிறார்.

இவற்றிலிருந்து திருவிளக்கே இருள் அகற்றும் பெரும் பொருள் என்பது புலனாகிறது. நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கேற்றி நீங்காச் சிவபதம் அடைந்தார்.

கார்த்திகை தீபம் ஏற்றுவோம்! காலமெல்லாம் ஓளிமயமாய் வாழ்வோம்!
மேலும் படிக்க... "திருக்கார்த்திகை மாதம்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.