Social Icons

Pages

Friday, January 23, 2009

நினைவில் நிற்கும் சுதந்திரப்போராட்டவீரருக்கு இன்றுபிறந்த நாள்!



1897 ஆம் ஆண்டு, ஜனவரி 23 ஆம் தேதி பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.. 2009ஜனவரி 23ஆம் தேதியுடன் அவர் வயது 113 ஆகிறது.

பாரத தேசத்தின் மறக்க முடியாத தேசீயவிடுதலைப் போராட்ட வீரரும் தலைவரும் ஆவார், நேதாஜி.

அவரைப்பற்றி சுருக்கமாய் சில செய்திகள்.



இளவயதிலேயே தேசப்பற்றும் மிகுந்த அறிவாற்றலும் கொண்டு இருந்தார் நேதாஜி. சிறு வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டார்.

மெட்ரிகுலேஷன் தேர்வில் வங்க மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறினார்.
கல்கட்டாவில் உள்ள ஸ்காட்டிஷ் சர்சஸ் கல்லூரியில் தத்துவவியல் படிப்பில் முதல் வகுப்பில் வந்து, பெற்றோரின் ஆசைக்கினங்க Indian Civil Services (ICS) தேர்வில் பங்கு கொள்ள 1919 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றார். தேர்வில் நான்காவதாக தேர்ச்சி பெற்றார்

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த ஜாலியன் வாலாபாக் படு கொலை அவரை வெகுவாக பாதித்தது. அதனால் தனது அலுவல் பயிற்சியை பாதியிலேயே விட்டு விட்டு 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.


இந்தியா திரும்பிய நேதாஜி, மகாத்மாவின் தலைமையில் தனது சுதந்திர போராட்டத்தை துவக்கினார். அதன் முதல் படியாக இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.


காந்திஜியின் அஹிம்சை தத்துவங்களை ஏற்காமல் சிறிது காலத்திலேயே கல்கட்டா சென்று அங்கே சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் தலைமையின் கீழ் தனது போராட்டத்தினை மேற்கொண்டார். பின்னர் அவரையே தனது ஆசானாகவும் வழி காட்டியாகவும் ஏற்றுக் கொண்டார்.

1921 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வரவேற்பு ஏற்பாடுகளை கண்டித்து போராடி சிறை சென்றார். சிறையில் தனது ஆசான் சித்திரஞ்சன் தாஸ் அவர்களுக்கு பணிவிடை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.


1924 ஆம் ஆண்டு கல்கட்டா கார்ப்பரேஷனின் CEO வாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட மாத சம்பளம் 3000 ரூபாய். ஆனால் அவர் 1500 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் தீவிரவாதத்தை பரப்பிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1925 ஆம் ஆண்டு நடந்த சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் மரணம் அவரை வெகுவாக பாதித்தது.


1930 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். அதனால் மீண்டும் சிறை சென்றார். . பகத் சிங்கின் முடிவால் நாடே கொதித்துக் கொண்டிருந்த வேளையில், நேதாஜி சிறையில் இறந்தால் கலவரம் ஏற்படும் என்று பயந்தது ஆங்கிலேய அரசு. அதன் தொடர்ச்சியாக 1932 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நாடு கடத்தப் பட்டார்.


. 1932 முதல் 1936 வரை அவர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயனம் செய்து பல தலைவர்களை சந்தித்தார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், முஸோலினி (இத்தாலி), ஃபெல்டர் (ஜெர்மணி), வலேரா (ஐர்லாந்து) மற்றும் ரோமா ரோலான்ட் (ஃபிரான்ஸ்). அவர் ஹிட்லரையும் சந்தித்ததாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.



இதற்கிடையில், 1936 ஆம் ஆண்டு அவர் தனது இந்திய வருகையை அறிவித்து விட்டு, பம்பாய் வந்தார். அதற்காக அவர் மீண்டும் கைது செய்யப் பட்டார்.



1937 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப் பட்டார். அதை தொடர்ந்து 1938 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். அந்நிலையில், அவர் முஸ்ஸோலினி போன்ற தலைவர்களை ஐரோப்பாவில் சந்தித்ததை அறிந்த காந்திஜி, அவர் காங்கிரஸின் தலைவராக இருப்பதை விரும்பவில்லை. அதற்காக 1939 ஆம் ஆண்டு மீண்டும் நடந்த தேர்தலில் நேதாஜியை எதிர்த்து போட்டி இட நேரு மற்றும் ராஜேந்திர பிரஸாத் இருவரின் விருப்பத்தையும் கேட்டார். அவர்கள் இருவரும் அதற்கு இனங்காததால், நேதாஜியை எதிர்த்து போட்டி இட திரு. பட்டாபி சித்தராமையாவை நிறுத்தினார். ஆனால் நேதாஜி 1580 - 1371 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திஜி "நேதாஜியின் வெற்றி எனது தோல்வி" என்று அறிவித்தார்.


.


இந்நிலையில் 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணங்களின் தலைமைகளை கலந்து ஆலோசிக்காமல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை போரில் ஈடுபடுத்தினர். இதற்கு நேதாஜி கடும் கண்டனத்தை தெரிவித்தார்.


இதைத் தொடர்ந்து அவர் இந்திய மக்களுக்கு போருக்கு ஆயத்தமாக வேண்டுமென ஒரு கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கைக்கு பல லட்சம் மக்கள் திரண்டெழுந்தனர். அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தால் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த நேதாஜி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. உலக யுத்தம் நடக்கும் நேரத்தில், நேதாஜி இறந்து இந்தியாவில் உள் நாட்டு கலவரம் நடப்பதை விரும்பாத ஆங்கிலேயர்கள், அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். 1941 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி அவரும் அவரது உறவினர் திரு. குமார் போஸும் காவலில் இருந்து தப்பினர். அவர் காவலில் இருந்து தப்பித்த செய்தியே அரசுக்கு, ஜனவரி 26 ஆம் தேதி தான் தெரிந்தது.


(

காவலிலிருந்து தப்பிய நேதாஜி, அஃப்கானிஸ்தான் பழங்குடியினரை போல் வேடம் திரித்து காபுல் வழியாக அஃப்கானிஸ்தானை கடந்து ரஷ்யா சென்றார். மாஸ்கோ சென்ற அவர் ரஷ்ய தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனால் அவர் எதிர் பார்த்த உதவியை ரஷ்ய தலைவர்கள் அளிக்கவில்லை. .

இந்நிலையில், நேதாஜி இறந்து விட்டார் என்ற வதந்தியை BBC இந்தியா முழுதும் பரப்பியது. அதை இந்திய மக்களும் நம்பினர்.

அப்பொழுது நேதாஜி அவர்களே ஜெர்மனியிலிருந்து அதாவது1941 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் ஜெர்மனியில் இருந்து உருவாக்கிய சுதந்திர இந்திய வானொலியில் உரையாற்றினார். "நான் இன்றும் உயிருடன் இருக்கும் சுபாஷ் சந்திர போஸ் பேசுகிறேன்." என்று தொடங்கும் அந்த உரையில் அவர், ஜெர்மணியில் இருந்தே சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். டாகூரின் "ஜன கன மன" கீதத்தை தேசிய பாடலாகவும், ஹிந்தியை தேசிய மொழியாகவும், காந்திஜியை தேச தந்தையாகவும் அறிவித்தார். "ஜெய் ஹிந்த்" என்ற பதத்தை முதன் முதலில் பயன் படுத்தியதும் அவர் தான்.

இந்நிலையில் நேதாஜி உயிரோடு இருப்பதை அவரது உரை மூலம் அறிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் அவரை கொலை செய்யுமாறு உளவுத்துரைக்கு ஆணை பிறப்பித்தனர்.

1943 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினைத் தொடர்ந்து 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். அதனால் மனம் வருந்திய நேதாஜி வங்காள மக்களுக்கு பர்மிய அரிசியை தர முன் வந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு அதை ஏற்க மறுத்தது. மேலும் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வந்த உணவுப் பொருட்களை இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் நேதாஜியின் கோபம் பல மடங்கானது.


1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பர்மாவை கைப்பற்றியது ஜப்பானிய இராணுவம். அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை இரங்கூனுக்கு மாற்றினார் நேதாஜி. அதைத் தொடர்ந்து கோஹிமாவிலும், இம்பாலிலும் நடந்த போரில் ஜப்பானியர்களுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. அதனால் அவர்கள் இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு அளித்த உதவியையும் ஊதியத்தையும் நிறுத்திக் கொண்டனர்.

ஜப்பானும் இந்திய தேசிய இராணுவத்திற்கு தணம், யுத்த தளவாடம் போன்றவற்றை தருவதுடன், யுத்தத்தில் கைப்பற்றப்படும் இந்திய நாட்டு பகுதிகளை நேதாஜியிடம் ஒப்படைக்க உருதி தந்தனர். 85000 வீரர்கள் இருந்த அந்த இராணுவத்தில், கேப்டன் லட்சுமியின் தலைமையில் தனி பெண்கள் பிரிவு படையும் இருந்தது.




அதே சமயத்தில் (ஆங்கிலேய) இந்திய இராணுவத்திலிருந்து பலர் இந்திய தேசிய இராணுவத்திற்கு வருவார்கள் என்ற நேதாஜியின் நம்பிக்கைக்கு மாற்றாக இந்திய தேசிய இராணுவத்திலிருந்து பலர் வெளியேறினர். இதனால் அவர் வீரர்களை ஊக்குவிக்க பல உரைகளை ஆற்ற வேண்டி இருந்தது.


அவரது உரைகளில் மிகவும் 1944 ஆம் ஆண்டு பர்மாவில் இந்திய தேசிய இராணுவத்தினருக்கு அவர் ஆற்றிய "உதிரம்(ரத்தம்) அளியுங்கள் சுதந்திரம் அளிக்கிறேன்" என்ற உரை. நெகிழ்வானது.

"நமக்கு ஒரே ஒரு கனவு மட்டுமே இருக்க வேண்டும். அது மரணத்தைத் தழுவும் கனவு; ..ஆம் இந்தியா வாழ நாம் இறப்பது அவசியம். " என்றார் உணர்ச்சிவசப்பட...


.



அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் நேதாஜிக்கு சாதகமாக இல்லை. ஜெர்மனி ஜப்பான் மற்றும் இத்தாலியின் தொடர் தோல்விகள் நேதாஜியை மிகவும் சிந்திக்க வைத்தன. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது. உலகம் முழுவதும் 6 கோடி மக்களின் உயிரைக் குடித்த பிறகு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.


ஜப்பான் சரணடைந்தாலும் தான் சரணடைய மறுத்து, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி பாங்காக் சென்றார். 17 ஆம் தேதி அங்கிருந்து சாய்கோன் சென்றார். அவருடன் அபிபூர் ரெஹ்மான், ப்ரீதம் சிங், அபித் ஹாஸன், S.A. ஐயர், தேப்நாத் தாஸ் ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்து தாய்பேய் செல்ல இருந்த விமானத்தில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருப்பதாகவும், அவர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மட்டும் தாய்பேய் சென்றார். அங்கிருந்து டாய்ரன் செல்ல திட்டமிட்ட அவர் 17 ஆம் தேதி காலை 5 மணிக்கு இரு பெரிய பெட்டிகளில் தங்கத்துடன் மேலும் 10 ஜப்பானியர்களுடன் விமானத்தில் ஏறினார். விமானம் கிளம்பி உயரே பறந்து 30 அடி உயரம் சென்றதும் வெடித்து சிதறியது. அவரது மரணத்தை பற்றி பலர் பலவித கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.



சொல்லுதல் யார்க்கும்எளிதாம் அரிது சொல்லியவண்ணம் செயல்

என்பார்கள். நேதாஜி சொல்லியதை செய்தார்.



இவ்வளவு தியாகங்களையும் செயற்கறிய செயல்களையும் செய்தவரை, அன்னாரது பிறந்த நாளிலாவது நினைத்து அவரது ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

ஜெய்ஹிந்த்!
மேலும் படிக்க... "நினைவில் நிற்கும் சுதந்திரப்போராட்டவீரருக்கு இன்றுபிறந்த நாள்!"

திருக்குறளில் தமிழ் இல்லை!

தமிழில் எழுதப்பட்ட திருவள்ளுவரின் குறளில் தமிழ் என்கிற வார்த்தை எங்கேயும் இல்லை .

உயிர் எழுத்துக்களில் என்கிற உயிரெழுத்தை ஒருகுறளிலும் வள்ளுவர் பயன்படுத்தவே இல்லை

1 என்கிற எண்ணை 11 இடத்திலயும்


2 என்கிற எண்ணை 10இடத்திலேயும்

4 --------11 இடத்திலேயும்

5 ------ --- 14 இடத்திலேயும்

6 ------ ---- ஒரே ஒருஇடத்திலேயும்

7 --------------- ஏழுதடவையும் வருகிறது.

8 ,10 , 100 ,1000 ஆகியஎண்கள் தலா ஒருதடவைமட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

கோடியை வள்ளுவர் 7 இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்.


(இதை ஒருமுறை என் தோழி என்கிட்ட சொல்லி உடனே இங்க இட்டுவிட்டேன்.:))
மேலும் படிக்க... "திருக்குறளில் தமிழ் இல்லை!"

Thursday, January 22, 2009

பளிங்கினால் ஒரு மாளிகை!


உலகின் அதிசியம்! காதலர்களின் கனவு மாளிகை ! பாரதத்தின் பெருமைச்சின்னம்!

இப்படி தாஜ்மஹால் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இத்தனை வருடங்களாகியும் தாஜ்மகால் வெண்ணிறப்பதுமையாகவே இருப்பது எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா!

நம்வீட்டிலும் சலவைக்கற்கள் உபயோகித்துக்கட்டுகிறோமே சிலவருடங்களில் அவை வெண்மைப்பொலிவு இழந்து விடுகிறதே, ஆனால் தாஜ்மஹால் மட்டும் அப்படியே இருக்கிறதே எனறுதோன்றுகிறதா...!

காரணம் இருக்கிறது அதற்கு!

தாஜ்மஹாலு்க்கு ஷாஜகான் பயன்படுத்திய சலவைக்கற்களே வேறு. அது மேக்ரான் என்ற உயர்ந்தபிரிவைச்சேர்ந்தவை எந்த ஒரு அமிலமும் இதனைக் கறுப்பாக்கமுடியாது,சேதப்படுத்தமுடியாது. இந்தவகைக்கற்களின்மேல்படியும் அழுக்குகள்பிசுபசுப்பாகி ஒட்டிக்கொள்ளாது.

இன்னொரு முக்கியமான விஷயம், நாம்பயன்படுத்தும் கற்கள் சந்திரனின் வெளிச்சத்தில்மிளிர்கிறது.
ஆனால் தாஜ்மகாலில்பயன்படுத்திய மேக்ரான் கற்களுக்கு நிலா வெளிச்சத்தின்மீது அபாரக்காதல! அதனால் பௌர்ணமிநாட்களில் தாஜ்மஹாலைப் பார்த்தால்,
பாலில் அபிஷேகம் செய்ததுபோலக் காட்சி அளிக்கிறது! அத்ற்கு இந்தக்ககற்களின் காதலே காரணம்!

ஆக்ராவில் இன்னும் எத்தனை ரசாயன தொழிற்சாலைவந்தாலும் சரி, தாஜ்மகால் கறுக்காது.

என்றும் மாறாத வெண்மையின் சின்னம் அது!


( இதுவரை நீங்க வாசித்தது, கேட்ட ஒரு தகவல்தான்)

சரி ஒரு சந்தேகம் இப்போ அந்த மேக்ரான் கற்கள் புழக்கத்தில்இல்லையா அதன் விலை அதிகமா அந்தகற்களைவைத்துக்கட்டப்பட்ட வேற கட்டிடங்களே கிடையாதா உலகில்!

விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்!
மேலும் படிக்க... "பளிங்கினால் ஒரு மாளிகை!"

நீலநிறம்! வானுக்கும்கடலுக்கும் நீலநிறம் காரணம் ஏன்...!



வானம் என்ன நிறம்னு கேட்டா நீல நிறம்னு உடனே சொல்றோம்
ஆனா உண்மைல வானத்துக்கு எந்த நிறமும் இல்லையாம்!

வானம் ஒரு வெற்றுவெளிதான். பின்ன எப்படி அங்க நீல நிறம்வந்ததுன்னு

கேட்டதுக்கு, ஒரு
எழுத்தாள நண்பர் சொன்னதை அப்படியே உங்களுக்கு இங்க தெரிவிக்கறேன்!

சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களில் எல்லா நிறங்களும் இருக்கும் அதுல இந்த நீலமும் ஐக்கியம்.

இதுல ஆச்சர்யம் என்னன்னா சூரியனின் ஒளிக்கதிர்களில் உள்ள எல்லா நிறங்களுக்குமே அதன் ஒளியலைகளின் நீளம் அதிகம். நீலநிறத்தின் ஒளி அலைகள் மட்டும் நீளம் குறைவானவை.

பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம்பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.

நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.

வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.

காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம்போதுமட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம் சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!
மேலும் படிக்க... "நீலநிறம்! வானுக்கும்கடலுக்கும் நீலநிறம் காரணம் ஏன்...!"

Wednesday, January 14, 2009

புத்தகக் கண்காட்சியும் புதிய அனுபவங்களும் 2!

என் ஒன்பதாவது வயதில் நான்மட்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்திருக்காவிட்டால் இன்றைக்கு இந்த கவிஞன் வைரமுத்து உங்கள்முன் வந்து நின்றிருக்கமாட்டான்.ஆகவே வாசியுங்கள்! தொலைக்காட்சிப்பெட்டியிலேயே நேரத்தைத்தொலைக்காமல் வாசிப்பை நேசியுங்கள்

என்ற வைரமுத்துவின் கணீர்க்குரலை செவிமடுத்தபடியே மறுபடி கண்காட்சிக்குள் நுழைந்தோம்.

சில்லென்ன மழைச்சாறல் தூவினமாதிரி இருந்தது அந்த மேற்கூரைமூடிய வளாகத்தில்! ஆமாம் மழைக்காதலன் சார்லஸ் அங்கே வந்துகொண்டிருந்தார்.


கல்லூரிமாணவனைப்போல தெரிந்தார்!சிரித்த அந்த முகத்திடம் நிலாரசிகன் ,

இவங்க.....என என்னைபப்ற்றி இழுத்தபடி அறிமுகத்தை ஆரம்பிக்கவும்

மைபா தானே என சார்லஸ் கேட்கவும், சிரிப்பலை அங்கேஇருந்த புத்தகப்பக்கங்களையெல்லாம் தட்டிப்புரட்டியது!

விடைபெற்று அவர் சென்றதும் நாங்கள் ஒவ்வொரு கடையாக செல்ல ஆரம்பித்தோம்.

வார்த்தை மாத இதழ்களை மாலையாகப்போட்டுக்கொண்டு காட்சி அளித்த எனி இந்தியன் .காம் கடையில் உமாமகேஸ்வரியின் அரளிவனம் வாங்கிக்கொண்டேன்.

கவிஞர் மதுமிதாவின் தங்கை அங்கே கடையின் விற்பனைப்பிரிவில் இருந்தார்

500க்குமேல கடைகள் இருப்பதால் அதை சிலமணிநேரங்களில் பார்த்து முடிக்கவேண்டிய கட்டாயத்தில் வேகமாகவே பார்வையிட ஆரம்பித்தோம்.

பீச்சில் மாங்காய் பத்தைகளை கலைஉணர்வோடு கீறி விசிறிபோல வைத்திருப்பார்களே அப்படி சில கடைகளில் புத்தகங்களை(கீறாமல்) மிகவும் அழகாக அமைத்து வைத்திருந்தார்கள்.

எத்தனைபதிப்பகங்கள் தமிழகத்தில் என்று அங்கே போனால்தான் தெரிகிறது! உயிர்மைவாசலில் எஸ்ராமக்ருஷ்ணன் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.நிறையபேர் அவரிடம் புத்தகம் பிரித்து ஆட்டோக்ராஃப் வாங்கிக்கொண்டார்கள். நான் அவரிடம் பேசியபோது என் வலைமுகவரியைக்கேட்டுக்கொண்டார்!நான் அவருடைய தேசாந்தரி கதாவிலாசத்தை சிலாகித்துப்பேசினேன் சில நிமிஷங்கள்!

திருமகள் மீனாட்சி பாரி செண்பகா எனப்பலபிரசுரங்களின் கடைகளுக்குப்போய் நாஞ்சில்நாடனைத்தேடினேன். அவருடைய சிறுகதைத்தொகுப்பிற்குமட்டும் அறுபது கடைகள் ஏறி இறங்கினோம்.

அது விஜயா பதிப்பகம் ஸ்டால்ல கிடக்கும்ங்க என்றார் ஒருவர் . அந்தஸ்டால் எண்ணை குறிப்புஏட்டில்பார்த்து தேடினோம் தேடினோம்....கடைசியில் தான் தெரிந்தது விஜயாபதிப்பகம் கோவையிலிருந்து புத்தகங்களை எடுத்துவரும்வாகனக்கோளாறினால் ஸ்டாலை அமைக்கவே இல்லை என்று!!

விகடன்பிரசுரஸ்டாலில் கூட்டம் அலைமோதியது மனசே ரிலாக்ஸை இன்னமும் பலர் வாங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரு கடையில் மேலாண்மைபொன்னுச்சாமியின் காகிதம் சிறுகதை தொகுப்பினை எடுத்துக்கொண்டிருந்தபோது நிலா சொன்னார்

அக்கா அங்க இருக்கு பாருங்க கிழ்த்தட்டுல அந்தக்கதை அதை எழுதினவர்பேரு,கண்மணிகுணசேகரன்! நல்லா எழுதறாருக்கா..அவரோட அஞ்சலை படிச்சி அசந்துட்டேன்

அப்படியா

ஆமா கண்மணிகுணசேகரன் அவர் பேரு பாருங்க அங்க...

நிலாரசிகன் இப்படிச்சொல்ல நான் குனிந்து புத்தகத்தை எடுக்க,

என்பேரைகூப்டீங்களா எனக்கேட்டபடி அங்கே நின்ற ஒருவர் கேட்டார்

அட நீங்களா என வியந்தார் நிலாரசிகன்

ஆமாம் அங்கே நின்றுகொண்டிருந்தவர் கண்மணிகுணசேகரனேதான். நிலாரசிகன அவரை அடையாளம் தெரிந்து பேச ஆரம்பிக்க எதிர்பாராத
மகிழ்ச்சியுடன் முகம் மலர்ந்தார் அந்தஎழுத்தாளர்.

பாடகர் சஞ்சய் சுப்ரமண்யம் பாடாமல் யாருடனொ அங்கே பேசிக்கொண்டிருந்தார் ஏற்கனவே பெங்களூரில் கொஞ்சம் தெரியும் என்பதால் சின்னபுன்னகைபரிமாற்றலுடன் அவரைக்கடந்தேன்.

சாரு நிவேதிததா சுஜாதா ஜெயகாந்தன் ஜெயமோகன் போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகளை ஏற்கனவே வாங்கிவிட்டதால் பார்வையிட்டபடியே ஸ்டால்களைக்கடந்தோம்.

பெய்தலும்,ஓய்தலும் - வண்ணதாசன் [சந்தியா பதிப்பகம்]
மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
மிகச்சிறந்த தொகுப்பு அதிலும் குறிப்பாக 'மரப்பாச்சி' சிறுகதை. அதி அற்புதமான எழுத்து
புனைவின் நிழலில் - மனோஜ் [உயிர்மை] இவைகளை தம்பிவாங்கிவிட்டதாக போனில் சொல்லிவிட்டதால் நான் மறுபடி வாங்கவில்லை.
-


சிங்கை எழுத்தாளர் ஜெயந்திசங்கரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதியான 'திரைகடலோடி' யில் 10 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ரவி சுப்ரமணியம் எழுதியிருக்கும் முன்னுரையின் ஒருபகுதியிரிலிருந்து (பின் அட்டை) --- 'இந்தக்கதைகளில் வரும் மனிதர்கள் நம் மனிதர்கள். இரண்டாயிரம் வருஷமாய் பொருள் தேடப்பிரிந்து செல்லும் மரபுடைய நம்மினத்தின் வாரிசுகள். கதைகளைத் திறம்படச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கும் உள்ளடக்கத் தேர்வில் செலுத்தும் கவனம் அசாத்தியமானதாக இருக்கிறது. மொழியையும் உணர்வுகளையும் சம்பவங்களையும் சம்பாஷணைகளையும் ஊடுபாவாய் இவர் இணைக்கும் விதம், கதைக்குள் தென்படும் தற்காலத் தன்மை போன்றவை இவரைத் தனித்துக் காட்டுகிறது. மதிபதிப்பக வெளியீடு இது.

கிழக்கில் ஒபாமா பராக் பராக் என்றது ஒபாமா அட்டைப்படம் எங்கும் காணப்பட்டது!பாராவின் மாயவலை விரிந்திருந்தது.

காலச்சுவட்டினில்


அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில். . என்ற நூல்

(சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)

ந. முருகேச பாண்டியன்
எழுதியது விலை ரூ195 என்றதால் தயங்கிவிட்டேன்.

-


கிழக்கு உயிர்மை காலச்சுவடு பாரதி மீனாட்சி செண்பகா பாரி பதிப்பகங்களின் கடைகளைக்கடந்துவரும்போது 98.3 என்று ரேடியோமிர்ச்சி கடை ஒன்றில் 2இளைஞர்கள் புத்தகங்கள் ஏதுமின்றி வெறுமனே டைகட்டி டிப்டாப்பாக அமர்ந்திருக்கவும் நான் போய் எதுக்கு இங்க கடைபோட்டுருக்கீங்க ஏதும் குரல் முலம் புத்தக விளம்பரம் செய்றீங்களா அபப்டீன்னா நான் என்குரலில் ஏதும் தமிழுக்காக இலவசமாய் புத்தக சேவை செய்ய ரெடி என்றேன்!

இல்லைங்க...ச்சும்மா எங்க வானொலி பேருக்கு ஒரு விளம்பரம் . எங்ககடைகுவரவங்ககிட்ட 6க்குள்ள ஒரு எண் சொலல்சொல்வோம் சொல்லும் எண்ணுல ஒருகேள்விகேட்போம் அதுக்கு பரிசுதருவோம்ன்னு சொன்னாங்க.

விடுவோமா என்ன கேள்வி கேளுஙக் என் எண் 5 என்றேன் நான்முதலில்

TOPAZ stone
என்ன கலர் ன்னு கேட்டாங்க

ஜுஜிபி கேள்வியாச்சே அதனால விடையை சரியா சொல்லிட்டேன்.

உடனேயே கங்கிராட்ஸ் என சொல்லி 2500ரூக்கு ஒரு பிரபல ஜிம்க்கு (FITNESSONE-INDIAs FASTEST GROWING FITNESS CHAIN) தேகபயிற்சிக்கான இலவசகூப்பன்(15நாட்களுக்கு)தந்தனர்!!

ஆளப்பாத்துத்தான் அவசியம்னு கொடுத்ருக்காங்கன்னு நிலாரசிகன் கிண்டல் செய்தார்.

ஷன்முகப்ரியாவிடம் சிக்கலான கேள்விக்கேட்டுட்டாங்க அதாவது இளையராஜாவின் 200வதுபடம் என்னன்னு யோசிக்கும் அவகாசம் அதிகமில்லாததால் பரிசுஅவருக்குக்கிடைக்கலை!
நிலாரசிகன் இதெல்லாம் வேண்டாம்னு தள்ளிப்போயிட்டார்!

சாப்பாட்டுக்காண்டீனில் மைபாபுகழ் க்ருஷ்ணா ஸ்வீட் வாசலில் நான்போய்நின்ற ஒற்றுமையை நானே சொல்லிக்கக்கூடாதுங்க!!! கட்டைவிரல் சைஸ் காகிதடம்ளரில் காபியை பத்துரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். டிபன் பலகார சாட் ஸ்வீட் ஐட்டங்கள் இருந்தன. அங்கே நேரம் அதிகம்கழிக்காமல் உடனே மறுபடி ஸ்டால்களுக்குள் நுழைந்தோம்.
அலைஞ்சி திரிஞ்சதுல திமிழினி ஸ்டால்ல நாஞ்சில்நாடன் கிடைச்சார்! கண்மணி குணசேகரன் மாதிரி இவரும் நேர்ல வந்து நிற்பாரோன்னு ஓர் ஆவலில் இருந்தோம் ஆனா வரல!

சூடியபூ சூடற்க சிறுகதைதொகுப்பு இவருடையதை வாங்கினேன். சமிபத்தில் எழுதிய அவரது சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். படிக்க ஆரம்பிக்கவில்லை இன்னும்.

சில இலக்கியசம்பந்தமான புத்தகங்களை வாங்கிக்கொண்டேன்.

திஜாவின் மோகமுள்ளை ஷண்முகப்ரியா ஆவலோடு எடுத்து குத்தும்னோ என்னவோ திரும்ப வச்சிட்டா! வேறு சில நாவல்கள் கவிதைத்தொகுப்புகள் வாங்கினாள்.

மணிமேகலைப்ரசுரத்தில் எப்படி குண்டாவது எப்படி ஒல்லியாவது என்பதிலிருந்து எப்படி பணம் சேர்ப்பது என்பதுவரை எப்படிகளில் பல புத்தகங்கள் கொட்டிக்கிடந்தன.

காணக்கண்கோடிவேணும் என ஒருபாட்டு உண்டு அதுபோல புத்தகக்கண்காட்சியைக்கான ஒரு கோடிக்கண்ணும் ஒருவாரகாலமும் கிடைத்தால் அத்தனையையும் பார்த்து வரலாம் தேவையானதை தேர்வு செய்யலாம்.

கிடைத்தநேரத்தில் தேர்வு செய்து சிலபுத்தகங்களை வாங்கிக்கொண்டோம் .

கையில் சிலதான் ;ஆனால் கண்பார்த்த புத்தகங்கள் பல!

மறுபடிவெளியே வரும்போது எழுத்தாளர்ப்ரபஞ்சன் எதிர்ப்பட்டார் அவரோடு சில நிமிஷங்கள் பேசினோம்.

எல்லாரும் தன்மையாகப்பேசறாங்க அக்கா என மகிழ்ந்தார் நிலாரசிகன்.

அதுதானே எழுத்துக்கு வெற்றி என நினைத்தபடி வெளியே வந்தபோது டிசம்பர்மாலையின் சில்லிட்ட குளிர்க்காற்றிலும்கூட புத்தகவாசனை மிதந்து வந்தது!

***************************************************************************
மேலும் படிக்க... "புத்தகக் கண்காட்சியும் புதிய அனுபவங்களும் 2!"

Tuesday, January 13, 2009

புத்தகக் கண்காட்சியும் புதிய அனுபவங்களும்!

சென்னைப்புத்தகக்கண்காட்சிக்கு ஒருமுறையாவதுசெல்லவேண்டுமெறு பலநாள் வேண்டுதல் இந்ததடவை பலித்தது!

ஸ்ரீரங்கத்தின் சூறாவளிப்பயணம்முடித்து அதைப்பற்றிய நினைவுகள் மறைவதற்குள் உறவினர்வீட்டு முக்கிய நிகழ்ச்சிக்காக அடுத்தபயணம் நேர்ந்துவிட்டது!

ப்ளாட்பாரத்தில் போர்ட்டர்கள் காபி டீ கடைக்காரர்கள், நந்தினி பால்கோவாகடைப்பையன், சாரிடோன் வாங்கப்போன மருந்துக்கடை. என எல்லா இடத்திலும் எல்லோரும்,

இப்பத்தான் பெட்டியோட போனீங்க வந்திடீங்களா மறுபடி
என்று கேக்கிறமாதிரி இருந்தது!


எக்ஸ்பரசோஃகாபி கடைல நான்போய் நின்றதுமே ஸ்பெஷல்காபி தானே உங்களுக்கு எனக் கேட்டு விட்டுஸ்நேகமாய் சிரித்தார் காபிக்கலப்பவர்!

ஒருகூடை செண்பகப்பூவோடு எதிர்ப்பட்ட பூக்காரம்மா, என்னிடம் ,|பேக்கா| என்றாள். வழக்கமாய் சென்னைஉறவினர்களுக்காக பெங்களூர்புகழ் அதிரடிமயக்கவாசனை(என் போல் சிலருக்கு அதுதலைவலி!! என்ன ஆனாலும் ஜாதிமல்லிக்கே என் ஓட்டு!!!! )செண்பகத்தை பிளாட்பாரத்திலிருந்து கடத்திப்போவது வழக்கம்.

கன்னட பேக்கு(வேணும்) வை தமிழ்பேக்கு(அசடு) என நினைக்கமாட்டேன் என்றாலும் அன்றைய சூழ்நிலை என்னை அப்படி யோசிக்கவைத்து , பதிலே சொல்லாமல் நடையைக்கட்ட வைத்தது!.


மைசூர் எக்ஸ்ப்ரசில் ஏறிப்படுக்கும்போது பெங்குளுரில் வெடவெடத்தவர்கள் அனைவரும் சென்னையில் காலை சுறுசுறுப்பாய் எழுந்துவிட்டோம்.

முன்பே போனில் பேசிக்கொண்டபடி
நிலாரசிகனும் ஷண்முக ப்ரியாவும் அவள்தோழிதேவியும் என்னோடு புத்தகசாலைவர சம்மதித்திருந்தார்கள்.

விழியனுக்கு வரஇயவில்லை சஹாரா தேகியாலும் வரமுடியவில்லை நாமக்கல் சிபி வரேன்னு சொல்லி எஸ்கேப்! அவசரப்பயணமாகிவிடவும் அதிகம்பேருக்கு நான் சொல்லவும்முடியவில்லை

சரி அத விடுங்க புத்தகசாலைக்குப்போன(க)தைகேளுங்க!

நிலாரசிகன் மாலை 4மணிக்கே இரண்டாம்தடவையாய் அங்கே சென்றுவிட அடையாரிலிருந்து நானும் ஷ.ப்ரியாவும் தேவியும் அங்கேபோனோம்.

வாசலிலேயே எழுத்தாளர்களுக்கு வண்ணப் போஸ்டர்கள்!வாவ்! ஒரு திரைப்பட நடிகரைப்போல நம்ம எழுதுகோல்மன்னர்கள், அரசிகள் எடுப்பாக காணப்பட்டனர்!

கன்னத்திலகைவைத்துக்கொண்டு ராஜம்க்ருஷ்ணன்
புத்தகம் உள்ள இடங்களில் நான் இல்லாமலா என்க்கேட்டுசுஜாதா அமானுஷ்யப்புன்னகையுடன் இந்திரா சௌந்தர்ராஜன்

நறுக்கென்றபார்வையில் நாஞ்சில்நாடன்
அகலப்புன்னகையுடன் பெரிய போஸ்டரில் ஆண்டாள்ப்ரியதர்ஷிணி இன்னும் பிரபலங்கள் பலர்!பலர்!

பொருட்காட்சிசாலைக்குள் நுழைவதுபோல இருந்தது,
ஏனெனில் நிறைய ஆண்பெண் குழந்தைகள் என பலர்,பலவயதினர் உள்ளே செல்வதும் வருவதுமாயிருந்தனர்.பெங்களூரில் இப்படியொரு கூட்டத்தை புத்தகக்கண்காட்சியில்பார்க்காததால் ,
ப கா, மி .க பார்க்கறமாதிரி நான் பிரமித்தேன்.

இரவுக்கு இன்னும் சிலமணிநேரம் இருக்கும்போதே அப்போது நிலா உதித்தது!கைகொடுத்தது! கண்மலர்ந்தது!

வாங்க என்றது .

ஓர் உலா உள்ளே சென்றுமுடித்துவிட்டதாய் சொன்னது. வாசலில் இருந்த பெரியபந்தல்போட்ட திடலில்,

வைரமும் முத்தும் சற்றுநேரத்தில்வரும், என்று சேதி சொன்னது நிலா.

நுழைவுச்சீட்டுவாங்கிவிட்டு சட்டென சின்ன வட்டமடித்து எனி இண்டியன் .காம் கடைக்குமட்டும் எட்டிப்பார்த்துவிட்டு அங்கே போட்டோவும் எடுத்துக்கொண்டு மறுபடி வெளியே போடப்பட்டிருந்த பெரிய பந்தலின் கீழ் போய் நின்றோம் ,


பத்துநிமிஷம்முன்பு பார்த்தபோது எண்ணி இருபதுபேர் நின்ற பந்தல், இப்போது ஹவுஸ்ஃபுல்! வைரமுத்து மேடைக்குவந்திருந்தார். நிலா சட்டென அப்படியே ஓரிடத்தில் நின்றுவிட்டது!

அக்கா என் குரு பேசறதகேட்டுட்டு அப்றோமாம் புக்வாங்க உள்ளபோகலாம்

சரி நிலா

மேடையில் நீராரும்கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்தினை இருபெண்கள்(ஒருவர் சிறுமி) சோகமாய்பாடினர் .ஓடிப்போய்,மைக்கைபிடுங்கி உரக்க உற்சாகமாய்பாட ஆவலானதை அடக்கிக்கொண்டேன் புரிந்த நிலாரசிகனும் சங்கடமாய் சிரித்துவைத்தார்.



சிலநிமிடங்கள் மேடையில்யாரோ பேசிமுடிக்க பிறகு பொங்கியது வைகை!

தமிழ் சிலருக்கு சிம்மாசனம்போட்டு உட்காரவைப்பதை வைரமுத்துவின் பேச்சினில் கேட்கமுடிந்தது. வாசிப்பின்மீது உள்ள மக்களின்நேசிப்பினை தாம் அங்கு கண்ணாரக்கண்டுவியந்ததை தனக்கே உரிய தமிழ் நடையில் புகழ்ந்தார். அவரால் தமிழே மேலும் அழகுபெற்று கண்ணையும்காதையும் மனத்தையும் நிறைத்தது.

முழுதும்கேட்க நேரமில்லாததால் பாதியிலேயே மனமின்றிப்பிரிந்து உள்ளே
புதையல்களைக்காணச் சென்றோம்

(தொடரும்)
மேலும் படிக்க... "புத்தகக் கண்காட்சியும் புதிய அனுபவங்களும்!"

Thursday, January 08, 2009

அரங்கனைக்காண வாருங்கள்!

சீராரும் மார்கழித் திங்கள் வளர்பிறையின்
ஏரார் விழாவிற்கே ஏகிடுவாய்-பாரேத்தும்
காவிரியில் நீராடிக் களித்துக் கடவுளைத்தான்
பூவினால் போற்றியே பூசித்து-மேவினால்
மங்கலமாய் உள்ள மதுரப்பிரசாதம்
எங்கும் கிடைக்கும் இனிதுண்பாய்-அங்கதன்பின்
எத்திசையின் கண்ணும் இருக்கும் புலவரெல்லாம்
சித்தங்களித்தங்கே சேர்ந்திருப்பர்-புத்தமுதை
உண்ணவரும் தேவர் ஒருங்குற்றாற் போலங்கே
நண்ணூவரே இப்பெரிய நானிலத்தோர்-கண்ணிறைந்த
காட்சி அதனை நாம் காணலாம் அல்லாமல்
மாட்சியை யாரே வகுத்துரைப்பர்-ஆட்சிபுரி
மன்னன் திருமுன் வணங்கி அரையர்கள்
பொன்னிலுறும் தாளத்தைப் போட்டபடி-இன்னிசையால்
சீரார் திருமொழியின் இன்பம் செவிக்களிப்பார்
ஊரார் வியக்க உரைபகர்வார்-பேரருளால்
அண்ணல் சுவைக்க அபிநயமும் தாம் செய்வார்
கண்ணும் செவியும் களிப்படையும்-நண்ணுவிழா
பத்துப் பகல் நடக்கும் பாற்கடலின் மோகினிபோல்
உத்தமன் அங்கே உலா வருவான் -பத்தர்கள்
எங்கும் நிறைந்திருக்க ஏகாதசியன்று
பொங்கும் பரிவால் புறப்பட்டு-மங்கலமாய்
அந்தணர்கள் போற்ற அருமறைகள்தாமேத்த
சிந்தித்து மக்களெலாஞ் சேவிக்க-முந்துற்று
மின்னுமெழில் வைகுந்த வாயில் வழியாக
அன்னநடையோடழகாகப்-பொன்னரங்கன்
ஏராரும் ஆயிரங்கால் மண்டபத்தை எய்தியங்கு
சீரார் அமளியிலே சென்றமர்வான்-பாரோர்கள்
வந்தங்கே கூடிவலம் வந்து நாளெல்லாம்
சிந்தை களித்திடவே சேவிப்பார்-செந்தமிழில்
செஞ்சொல் அரையர்கள் செய்யும் விரிவுரையால்
நெஞ்சம் மகிழ்ந்து நெகிழ்வுறுவர்-கொஞ்சும்
தமிழுக் கவர்செய் யபிநயத்தைப் பார்த்தே
அமிழ்தம் குடித்தவராய் ஆவர்-குமிழ் சிரிப்பால்
சிந்தை கவரும் சிறப்பார் கலியன் தான்
வந்து புரியும் வழிப்பறியும்-முந்துற்று
நாடும் பராங்குச நாயகியைக் கண்டிறைவன்
ஈடில்லா இன்பமிக எய்துவதும்-நீடுவளர்
மாட்சியுறுகின்ற மகிழ்மாலை நம்மாழ்வார்
மோட்சமுறு நாடகமும் முற்றும் நீ-காட்சியிலே
கண்டு மகிழ்ந்து களைதீர்வாய் அன்னதன் பின்
அண்டர்கோன் ஆழ்வார்ககருள்புரிவான் -மண்டுகிற
ஆர்வத்தால் தாள்போற்று மாசாரியர்க்கெல்லாம்
சீர்வரிசை செய்தபின் செல்லுங்கால்-நேர்வந்தே
ஐயன் அடியில் அடங்கிப் பணிந்தெழுந்து
செய்ய தமிழ்ப்பாடல் செப்பினையேல்-மெய்யன் தான்
அன்பால் உனக்கே அருள்புரிவான் அதன்பின்னே
உன் போல் உறுவாரார் உண்டு.


(மரத்தடி.காமில்முன்பு எழுதியகவிதை இங்கு மீள்பதிவு)
மேலும் படிக்க... "அரங்கனைக்காண வாருங்கள்!"

பிறந்தமண்!

பிறந்த ஊருக்குப்போய்ப்பாருங்கள்
அங்கு வீசும் காற்றும்
காதோரத்தில்
கதைபலபேசும்,
பெண்மனம் போல
ஒருக்கணம் நெகிழும்.

முனைமழுக்கிக்கொண்டு
குத்தாமல் பாதம்தொடவே
முட்களும் காத்திருக்கும்.

வீதிக்கோலங்கள் எல்லாம்நாளின்
பாதிப்போதிலேயே
பொலிவிழந்தாலும்
மீதிக்கோலத்திலும்
மகிழ்ச்சியாகவேமலர்ந்திருக்கும்

பூக்கள் எல்லாம் நமக்காகவே
புதிதாக மணம்வீசும்.

ஊரின் உதயத்தோடு
நம் இதயமும்
ஊரின் அஸ்தமனத்தோடு
அடிமனமும்
ஆனந்தக்கூத்தாடும்.

எதிரில் தெரியும்
எந்தமுகமும்
அறிமுகம் செய்து
நலம் விசாரிக்கும்.

தெருநாய்கூட
தெரிந்தாற்போல
வாலைக்குழைத்து
வாசலுக்கு வந்து நிற்கும்.

சாரிசாரியாய் செல்லும் எறும்புகள்
சின்னத்தீண்டலில்
'என்னநலமா?'
என்று விசாரிக்கும்.

பிறந்ததும் கிடந்த
தாயின் மடிபோல்
பிறந்தமண் ,பாதத்தில்
மெத்தென்றேதான்
பரந்திருக்கும்!
மேலும் படிக்க... "பிறந்தமண்!"

Wednesday, January 07, 2009

நம் நெஞ்சில் பள்ளி கொண்டவன், ஸ்ரீரங்கநாயகன்!


எண்களில் ஏழுக்கென்று தனிச்சிறப்பு உண்டு.

உலகில் உள்ள ஜீவராசிகள் அவ்வளவும் பஞ்சபூதங்களால் ஆனவை அவைகளில் மனிதன் ஒருவன் தான் அந்த ஐந்தைக் கடந்து ஆறாகிய அறிந்திடும் அறிவு நிலையை பெற்றவன் ஆகிறான்.

அறிவுதான் மனமாக செயல்படுகிறது.மனத்தை உடைவன் என்பதே மருவி மனிதன் என்றானது.

இந்த மனிதன் தன் அறிவு நிலையை வெளிப்படுத்துவது ஏழாகிய 'சப்தத்தால்' தான்.

அதாவது சிந்திப்பது பேசுவது என்கிற அவ்வளவுமே சப்தமாகிய ஏழால் தான்.

இந்த ஏழாகிய பேச்சால் மற்றும் சிந்தனையால் அவன் எட்டுவதே ஒன்பதாகிய இறைநிலை.

எப்போதும் இறைநிலையை எட்டுவதற்கு அல்லது இறையருளை எட்டுவதற்கு ஏழுதான் துணை புரிவதாக உள்ளது. ஏழு எனும் சப்தம் ஏழுஸ்வரங்களுக்குஆதாரமாகிறது.

ஜோதிடசாஸ்திரத்தில் ஏழாம் கட்டத்தைத்தான் உன்னிப்பாக கவனிப்பார்கள். அதில்தான் நமது இல்லறம் எப்படிப்பட்டது போன்ற ரகசியங்கள் ஒளிந்துள்ளன.

இன்னும் பலசிறப்புகள் கொண்ட ஏழாம் எண்ணைப்பற்றி பிறகுபேசுவோம். இப்போது இந்த ஏழுஎண்ணைக்கொண்ட பிராகாரங்கள் கொண்ட திருவரங்கநகரைப்பற்றி இன்றைய வைகுண்ட ஏகாதசிநன்னாளில் கொஞ்சம் பார்க்கலாமா?


அரங்கனின் சிறப்புபற்றி சொல்லி மாளாது.

அவனைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாமலும் போய்விடுவது அனுபவித்தவர்களின் ஆனந்த நிலையுமாகும்!!!

திருவரங்கம்!

'கம்' என்றால் அடங்கி இருத்தல்(கம்முனு கிட நினைவுக்கு வருகிறதா?:)) லிங்கம் என்றால் அனைத்தும் அடங்கிய பொருள் வரும் சைவர்களுக்கு! வைனவர்களுக்கு அதுவே அரங்கம்!

அரங்கன் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருப்பது ம் ஒரு
காரணம் கருதியே! ஆதிசேஷனைப்பாருங்கள்! ஐந்து சிரசுகள்! இது பஞ்சபூதங்களைக் குறிக்கும்! அந்த பூதங்கள் நம் உடம்பிலும் உள்ளது! அது சீறினால் விஷம்! அது அடங்கி இருக்கிறது என்றால் நம் நெஞ்சில் இறைவன் பள்ளி கொண்டிருக்கிறான் எனப்பொருள்!

மாயை நிரம்பிய உலகில் மானுட இனம் தவறான பாதைகளில் சென்று பாவங்கள் பெருகி உலகம் நரகமாகிவிடக்கூடாதே என பாற்கடலில் இருந்து பிரும்மதேவன் பொருட்டும் அவன்செய்த தவத்தின் பொருட்டும் முதலில் வெளிக்கிலம்பிய ரங்கவிமானம் பின் பிரம்மனின் சத்ய லோகத்தில் சிலகாலம் இருந்தது பின் மன்னன் இஷுவாகுவால் அது பூலோகத்திற்குவந்தது.

பூலோகம் வந்த ரங்கவிமானத்தை தசரத சக்கரவர்த்தியின் தவப்புதல்வரான ஸ்ரீ ராமர் பூஜித்தார் , பிறகு பல சூட்சம காரணங்களிம் பொருட்டு அந்த விமானத்தை அவர் விபீஷணரிடம் ஒப்படைத்தார்,

ஆனால் பிரணவசொரூபியான வினாயகப்பெருமானின் திருவிளையாடலாலும் தர்மவர்மன் என்னும் சோழாரசனின் தவத்தின் காரணமாகவும் கிளிமொழிமூலமாக அந்த ரங்கவிமானம் காவிரிக்கரையில் நிலைபெற்றது


ஏழு சுற்றுக்கள் ஏழு பிராகாரங்கள் நடுவிலேதான் கோயில் அமைந்துள்ளது.

மாடங்கள் சூழ்ந்த முதல் சுற்று பூலோகம்
திரிவிக்கிரமன் உலாவந்த சுற்று புவர்லோகம்
கிளீச்சோழன் பேரால் அமைந்த சுற்று ஸீவர்லோகம்
திருமங்கைமன்னன் பேரால் அமைந்த சுற்று மஹர்லோகம்
குலசேகரன் சுற்று ஜநோ லோகம்
ராஜமகேந்திரன் சுற்று தபோலோகம்
தர்மவர்மன் சோழன் சுற்று கர்ப்க்ரஹம் உடைய சத்யலோகம் என உணரப்படுகிறது

இந்த ஏழு சுற்றுக்களையும் ஏழுதினங்களும் வலம்வந்து அதாவது 49முறைவலம் வந்து அரங்கனை வணங்குபவர்களுக்கு அவர்களது ஏழாம்கட்ட கர்மங்கள் கெட்டதாக இருந்தால் நீங்கிவிடும் நல்லதாக இருந்தால் நன்மை பெருகிவிடும் .அதுமட்டுமல்ல ஏழாகிய இசைவசப்படும்.. ஏழாகியமந்திரம் வசப்படும். ஏழாகிய சப்தம் இனிமையானதாகும்/ ஏழாகியவண்ணங்கள் வாழ்வில் சேர்ந்து வாழ்க்கை வண்ணமயமாகும்!

இந்த ஏழாகிய சப்தம் அடங்குமிடம் அமைதி, தானாக வந்துவிடும். ஏழைக்கடந்து எட்டும் அமைதியாக அந்த அரங்கன் இருக்கிறான்.

அவை எட்டிட வழிகாட்டும் ஒருவைபவமாக இம்முறையும் ஏழுவருடங்களுக்கு ஒருமுறை ஏழுதிருவீதிகளை ஏழுநாட்கள் சுற்றிவரும் வைபவம் நடத்தினர், சித்திரைவீதியில் பந்தலிட்டு இசைக்கச்சேரிகள், பாசுரங்கள் சொற்பொழிவு, நடன நிகழ்ச்சிகள். கோலப்போட்டிகள்,என பல கலைகளை ஆதரித்து விழா ஏழுநாட்கள் நடந்தது. அதில் கலந்துகொள்ளும் பேறு எனக்கும் கிடைத்தது.

மாதவனுக்கு உகந்த மார்கழிநாளில் மாயன் அரங்கனைப்பற்றி இந்த வைகுண்டஏகாதசித்திருநாளீல் அதுவும் ஏழாம்தேதியான இன்று பதிவு எழுத எனக்குக் கிடைத்த பாக்கியத்தை பெருமையுடன் நினைக்கிறேன்!

அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா
துணையேன் இனி நின் அருளல்ல தெனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதநா
பணயா யெனக்குய்யும் வகை பரஞ்சோதி

பெரியதிருமொழி
மேலும் படிக்க... "நம் நெஞ்சில் பள்ளி கொண்டவன், ஸ்ரீரங்கநாயகன்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.