Social Icons

Pages

Friday, September 14, 2007

மீண்டும் தோப்புக்கரணம் போடலாம்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம் செய்
துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா.

Photo Sharing and Video Hosting at Photobucket


ஔவையார் நல்வழியில் இப்படி ஒரு அருமையான பாடலை வினாயகருக்கு அருளி இருக்கிறார்.

பிள்ளையார், எளிமையின் தத்துவத்தை உணர்த்தவே அரசமரத்தடியிலிருந்து பஸ்ஸ்டாண்ட், கோர்ட் ,பள்ளி விளையாட்டுத்திடல்கள் என எல்லா இடங்களிலும் கோயில் கொண்டிருக்கிறார்.

18அம் நூற்றாண்டில் பேஷ்வாக்கள் ஆட்சிகாலத்தில் வினாயக சதுர்த்தியை ஒரு சமூகப்பண்டிகையாகக் கொண்டுவந்தார்கள் .ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் இது நின்றுவிட்டது. சமூக,மதப்பண்டிகையாக இதை
பால்கங்காதர திலகர் மறுபடி ஆரம்பித்துவைத்தார்.

அது தொடர்கிறது. மஹராஷ்ட்ராவில் இதனை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

கர்நாடகாவில் முதல்நாள் கௌரிபண்டிகை என கொண்டாடிவிட்டு மறுநாள் கணேசரை வரவேற்கிறார்கள்.

10ருபாய்மண்பிள்ளையாரிலிருந்து 12000ரூபாய்க்கு கிரீடம்தரித்து அலங்காரங்களுடன் ராஜகணபதி வரை என்று பிள்ளையார்கள் விற்பனைக்கு ஒருமாதம்முன்பே தயாராகிறார்கள்.

ஆனால் கடைசியில் எல்லாவற்றையும் நீரில்தான் கரைக்கிறார்கள் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசில் செய்யபப்டும் விலைஉயர்ந்த பிள்ளையார் உருவங்கள் நீரில் கரைய அதிக நேரமாகிறது ;நீரில் அவைகள் பெரும்ரசாயன மாற்றத்தைஉண்டுபண்ணுகின்றன என பலர் கூறுகிறார்கள்.

ஆனாலும் மக்களுக்கு களிமண் உருவ மோகம் குறைந்துவிட்டது. களிமண் உருவங்கள் எளிதில்
நீரில்கரையும் அது நமது பழைய பண்பாட்டுவழக்கமும்கூட.
இதனைத்தடுக்க..

கல் அல்லது பித்தளை உலோகபிள்ளையாருக்கு வருடாவருடம் பூஜைசெய்து அதை நீரில்
சாஸ்திரப்படி முக்கிவிட்டு திரும்ப எடுத்துவைக்கலாம். அல்லது களிமண் உருவங்களையே விரும்பி வாங்கி பூஜையில் வைத்துப்பின் நீரில் கரைக்கலாம். இப்படியெல்லாம் சிலர் ஆலோசனை கூறுகிறார்கள்.

கொல்கத்தாவிலிருந்து பெங்களூர்ருக்கு மூன்றுமாதம்முன்பே உருவங்கள் செய்யவந்திருக்கும் பீபஷ் பால் என்பவர் சொல்கிறார்..'நாங்கள் உலர்ந்தபுல்லில் கங்காஜலம் சேர்த்து களிமண்ணோடு பிசைந்து உருவங்கள் செய்வோம் இது கனம் குறைவாக இருக்கும்..புனிதமானதும்கூட..
பழமை கலாசாரம் மெல்லத் தேய்கிறது.. காகிதக்கூழில் செய்த உருவங்களுக்கு மதிப்புகுறைந்துவிட்டது. கணேசரை விதவிதமான் போஸில் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள்.

இந்தவருஷம் எனது பெரிய ஆர்டர் சிவாஜி தி பாஸ் ஸ்டைலில் ஒரு பிள்ளையார் செய்துதரவேண்டும் என்பது" என்கிறார் பிபாஷ் பால்.

சரி நாம் இப்போ தோப்புக்கரணத்துக்குவருவோம்..




ஆற்றங்கரையிலொ கோயிலிலோ பிள்ளையாரைக்கண்டதும் தலையின்முன்பக்கம் நெற்றியை ஒட்டிக் குட்டிக்கொள்கிறோமே ஏன்?

அறிவின் உருவாகத்தான் ஆனைமுகத்தனை நமது புராணங்கள்காட்டுகின்றன. பாரதத்தை வியாசர்
சொல்லச்சொல்ல தமது கொம்பையே எழுத்தாணியாக்கி ஒரேமூச்சில் எழுதி முடித்தவர் அல்லவா ?

வினாயகபெருமான் முன்புதலையில்குட்டிக்கொள்வது நமது அறிவாற்றலை வகைப்படுத்தும். நரம்புகளைத் தூண்டிவிடும் தோப்புக்கரணத்தை "இருபக்க மூளையையும் செயல்படசெய்யும் சூப்பர் ப்ரெயின்
யோகா "என்றுபுகழ்ந்திருக்கிரார் ப்ரானிக் ஹீலிங் சூப்பர் மாஸ்டரான சோவாகாக் ஸுயி.

இரண்டுகைகளாலும் காதைபிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழும் எளிய வழிபாடு தோப்புக்கரணம்.
இது சிறந்த யோகாசனப்பயிற்சியும்கூட.

வளரும் குழந்தைக்கு படிப்பில் ஈடுபாடும் ஞாபகசக்தியும் அளிக்க இது பெரிதும் உதவுகிறதாம்
முளையின் வலது மற்றும் இடப்பகுதி இரண்டும் ஆற்றலும் அடைகிறதாம் .இதனால்தான் கடவுளுக்கு செய்யும் வழிபாடாக பண்டைகாலத்தில் நம்முனோர்கள் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.

பள்ளிகளில் பாடங்களை சரிவர புரிந்துகொள்ளமுடியாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இதனை தண்டனையாக தருவதும் இதற்குத்தான்.(நம்மில் எத்தனைபேர் தோ.க. போட்டிருக்கோம்?:))

நம் அறிவும் கூர்மையா ,பளிச்சுனும் இருக்கணுமா அதுக்கு தோப்புக்கரணம் போடலாமா?

சரியான முறைல போடணுமாம் அதை நான் கேட்டு தெரிஞ்சிட்டதை இங்க சொல்றேன்..

காலைல எழுந்து குளிச்சி கிழக்குநோக்கி நின்று மனசில வினாயகரை தியானிக்கணும்.

முதல்ல நாக்கை அடக்கணுமாம் !அதாவது நாக்கை மடக்கி மேலண்ணத்துல ஒட்டினாப்ல வச்சிக்கணும்.

வலதுகாதின் மடலை இடதுகை கட்டைவிரல்மற்றும் ஆள்காட்டிவிரல்ல பிடிக்கணும்.. இடது காதின்மடலை வலதுகையின் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலினால்பிடிக்கணும்(கம்மல் போடும் பெண்கள் கவனம் கழட்டிவச்சிடுங்க)
மெதுவா மடல்களை அழுத்திக்கணும், பிடிமானம் இல்லாம நழுவிடக்கூடாது இல்ல அதுக்குத்தான்!

இடதுகை உள்புறமா வலதுகை மேல்புறமா இருக்கறது அவசியம். இப்போ
மெதுவா முச்சை உள்ளுக்கு இழுத்தபடி குந்தி( அர்ஜுனன் அம்மா இல்லீங்க) உக்காரணும் .பிறகு எழுந்திருக்கும்போது மூச்சை வெளியே இழுக்கணும் மீண்டும் மீண்டும் இதுபோல 7தடவை செய்ய ஆரம்பிச்சி 14வரை ஒருநாளைக்கு செஞ்சா நல்லது.
இரண்டுவேளையும்முடிஞ்சா செஞ்சா ரொம்பவே நல்லது..

உடல் உறுதியடையும்; மனம் அமைதிபெறும் இதெல்லாம் விஞ்ஞான ரீதில நிரூபிக்கப்பட்டு இருக்கு.

அறிவு, செல்வம், உடல்நலம் ,கலைகள் எல்லாம் சிறக்க, வேழமுகத்தானை வேண்டி தோப்புக்கரணம் போடலாமா?
மேலும் படிக்க... "மீண்டும் தோப்புக்கரணம் போடலாம்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.