Social Icons

Pages

Wednesday, May 05, 2010

தென்றல் வந்ததா சேதி சொன்னதா?!

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ் இதழான தென்றல் எனும் மாதப்பத்திரிகையில் இந்தமாதம் எனது நேர்காணல் வந்துள்ளது! இலங்கையின் வீரகேசரி இதழுக்குப்பிறகு ஒரு வெளிநாட்டுப்பத்திரிகையில் என் நேர்காணல் வருவது மிகவும் மகிழ்ச்சியைத்தருகிறது!

http://www.tamilonline.com/thendral/Contentnew.aspx?id=114&cid=2

இந்தச்சுட்டில இருக்கு...எதுக்கும் அங்க இருப்பதை இங்கயும் அப்படியே அளிக்கறேன்போட்டோ மட்டும் என்னவோ வரவில்லை(தப்பிச்சீங்க)!

///////
நவீன கதைப்போக்குக்கு ஏற்றவாறு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காத்திரமான படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் ஷைலஜா.

திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஷைலஜாவின் இயற்பெயர் மைதிலி. தந்தை பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். ராகவன். பள்ளிப்படிப்பு ஸ்ரீரங்கத்தில். அப்போதே ஆனந்த விகடனுக்கு ஒரு நகைச்சுவைத் துணுக்கை எழுதி அனுப்ப, அது உடனடியாகப் பிரசுரமாக, அதுவே ஷைலஜாவின் எழுத்தார்வத்துக்குப் பிள்ளையார் சுழி ஆனது. திருச்சி எழுத்தாளர் சங்கத்திற்குத் தந்தையுடன் சென்று பல எழுத்தாளர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டதில் எழுத்தார்வம் கொழுந்து விட்டது. வீட்டுக்கு வருகை தந்த சாவி, மணியன், ஜெயகாந்தன் போன்ற பல பிரபலங்களைச் சந்திக்க முடிந்ததும் சிறுவயதிலேயே ஷைலஜாவுக்கு எழுத்தின் மீதான காதலை அதிகரிக்கச் செய்தது.

பள்ளியில் நாடகங்களுக்கு கதை-வசனம் எழுதியதுடன் தொடர்ந்து கதை, கவிதை எழுத ஆரம்பித்தார். கல்லூரியில் படிக்கும்போது எழுதிய நகைச்சுவைக் கட்டுரை விகடனில் பிரசுரமானது. அது எழுத்தில் தன்னம்பிக்கையை அளித்தது. முதல் சிறுகதை குமுதம் இதழில் 1983ல் வெளியானது. அதற்கு கிடைத்த வரவேற்பில் இவரது பேனா சுறுசுறுப்படைந்தது. விகடனில் வெளியான 'வானைத்தொடலாம் வா' என்ற இவரது தொடர்கதைக்குச் சிறப்புப் பரிசு கிடைத்ததுடன் பிரபல எழுத்தாளர்கள் முன்னிலையில் பாராட்டு விழாவும் நடந்தது. தொடர்ந்து கல்கி, கலைமகள், அமுதசுரபி, தினமலர் போன்ற இதழ்களில் எழுதினார். இணையத்திலும், மடற்குழுக்களிலும் கதை, கவிதை, கட்டுரைகள் என்று கலக்கத் தொடங்கினார்.

இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற கவிதை, கட்டுரை, நாடகங்களை எழுதியிருக்கும் ஷைலஜா, தான் எழுத ஆரம்பித்த நாளில் தந்தையார் ஊக்கம் தந்திருக்காவிட்டால் தொடர்ந்து எழுதியிருக்கச் சாத்தியமே இல்லை என்கிறார்.

வாழ்க்கையின் லட்சியம் எதுவோ அதைத்தான் இலக்கியம் என்று தாம் கருதுவதாகக் கூறும் இவர், வாழ்க்கையும் இலக்கியமும் வேறல்ல என்றே தமக்குத் தோன்றுவதாகக் கூறுகிறார். "அப்பாவின் சில சிறுகதைகளை இப்போது படித்தாலும் அந்தக் கதைகளில் ஜீவன் இருப்பதை உணரமுடியும். எத்தனையோ கதைகள் இருந்தாலும் 'அம்மா' என்ற என் அப்பாவின் சிறுகதை தந்திருக்கும் பாதிப்புதான் எனக்கு இன்னமும் உந்துசக்தியாகச் செயல்படுகிறது" என்று கூறும் இவர், லாசராவில் ஆரம்பித்து, குபரா, திஜார, சுஜாதா, ஆர். சூடாமணி, வசுமதி ராமஸ்வாமி, ராஜம் கிருஷ்ணன், மேலாண்மை பொன்னுச்சாமி, பிரபஞ்சன், இரா. முருகன், உஷா சுப்ரமணியன், எஸ் ராமகிருஷ்ணன், அழகியபெரியவன் என பலரது எழுத்துக்கள் தன்னைக் கவர்வதாகச் சொல்கிறார்.

ஷைலஜாவின் எழுத்துக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிப்பது தம் கணவர்தாம் என்று கூறும் ஷைலஜா, பிரபல எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்திரராஜன், இலக்கியபீடம் விக்கிரமன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் போன்றோரது அக்கறையும், ஊக்குவித்தலும் தம்மைத் தொடர்ந்து உற்சாகத்தோடு இயங்கச் செய்கிறது என்கிறார்.

"கலைமகள் பத்திரிகையில் அமரர் கி.வா. ஜகந்நாதன் சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்ற எனது 'சருகு' சிறுகதைக்கு, முதியோர் இல்லத்திலிருந்து ஒரு பெண்மணி நெகிழ்ச்சியுடன் எழுதிய விமர்சனக் கடிதத்தை மறக்க முடியாத பாராட்டாகக் கருதுகிறேன்" என்று கூறும் ஷைலஜா, அரங்கன் கோயில், ஆழ்வார் பாடல்கள், ஆண்டாள் பாசுரங்கள், அகண்ட காவிரி, தெளிந்த கொள்ளிடம், தெற்கு வாசல் என்ற பசுமையான ஊர்ச் சுவைகளே இன்றும் தனது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதாகக் கூறுகிறார்.


தினபூமி, தினச்சுடர், மாலைமதி, குடும்ப நாவல், குங்குமச் சிமிழ் என பல மாத இதழ்களில் இவரது நாவல்கள் வெளியாகியுள்ளன. 'திரும்பத் திரும்ப' என்னும் சிறுகதைத் தொகுப்பு திருமகள் வெளியீடாக வெளியாகியுள்ளது. பல சிறுகதைத் தொகுப்புகளிலும் இவரது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. திரிசக்தி பதிப்பகம் 'அவனும் இவனும்' என்ற சிறுகதைத் தொகுப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. இவரது இரு சிறுகதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி, இலக்கியபீடம் சிறுகதைப் போட்டி, தினமலர் சிறுகதைப் போட்டி, கலைமகள் கிவாஜ சிறுகதைப் போட்டி எனப் பல போட்டிகளில் பரிசு வென்றிருக்கும் ஷைலஜா, இணையத்தில் மரத்தடி, தமிழுலகம் ஆகியவை நடத்திய கதை, கவிதைப் போட்டிகளிலும் பரிசு வென்றதுண்டு.

விக்கிரமன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'இலக்கியபீடம்' இதழ் நடத்திய அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'திக்குத் தெரியாத காட்டில்' என்னும் நாவலுக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது. விளம்பரப் படங்கள் மற்றும் குறும் படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துவரும் ஷைலஜா, இணைய வானொலியில் சிலகாலம் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இசை, ரங்கோலி, ஓவியத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் அனைத்துத் தமிழ் நாடக மன்றங்களுக்கான நாடகப் போட்டியில் இவர் நடித்ததற்குச் சிறந்த நடிகைக்கான முதல் பரிசு கிடைத்திருக்கிறது. கோவை, திருச்சி, பெங்களூரு வானொலிகளில் இவரது படைப்புகள் ஒலிபரப்பாகியுள்ளன. பொதிகைத் தொலைக்காட்சியில் சித்தர்கள் பற்றிய கலந்துரையாடலில் பதினெட்டு வாரங்கள் கலந்துகொண்டிருக்கிறார்.

நிறைவாக இன்னும் எதுவும் எழுதவில்லை எனும் நெருடல் இருக்கிறது என்று கூறும் ஷைலஜா, "சொற்களையே சார்ந்திருக்கும் எழுத்துத் துறையில், அனைவரும் பாராட்டி வியக்கும்படியான சிறப்பான சிறுகதை ஒன்றைப் படைக்கவேண்டும், அது மொழி எல்லையைக் கடந்து எல்லாருடைய மனங்களையும் ஊடுருவிச் செல்லவேண்டும், காலத்தால் அழியாத கலைப் படைப்பாய் இருக்கவேண்டும். இதுவே எனது லட்சியம்" என்கிறார்.

கணவர், குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வரும் ஷைலஜா, அங்குள்ள கன்னட அமைப்பினருடன் இணைந்து சமூகப் பணிகளும் ஆற்றுகிறார். "பெண்கள் அழுமூஞ்சிகள். அவர்களால் நகைச்சுவை எழுதமுடியாது என்ற பொதுவான கருத்தை என் எழுத்தின் மூலம் மாற்றியமைக்க விரும்புகிறேன்" என்கிறார் மாறாத புன்னகையுடன் ஷைலஜா. அதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார் என்பதைத்தான் அவரது எழுத்துகள் சொல்கின்றன.//////


************************************************************************


இதை சொல்லாமல் விட்டால் சிலர் ஏன் சொல்லல்லேன்னு கோபிக்கிறார்கள் சொன்னால் ரொம்பத்தான் பெருமையடிச்சிக்கிறோமோன்னும் எனக்குத்தோன்றுகிறது! என்னவோ போங்க எப்போதும் நான் தோற்கிறேன்!

சரி அப்படியே அன்னிக்கு நூல்வெளியீட்டில் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.பாரதிபாஸ்கர் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் பாராட்டிப்பேசினதையும் சிலவரிகள் சொல்லிடறேன்.


“பேச்சாளர்களுக்கு பேசினதும் உடனே கைதட்டல் கிடைச்சி அந்த மகிழ்ச்சி சில நிமிஷங்களுக்குத்தான், ஆனா எழுத்தாளர்களுக்கு அவங்களைப்பார்க்காமலேயே வாசகர்கள் அவங்க எழுத்துக்களை தினமும் நினைச்சி மகிழ்கிறாங்க.அது நிரந்தர நினைவுகள்! கதை சொல்லும் யுத்தி காலங்காலம் ஆனாலும் அழியாது மாறாது! என்றோ படித்த ஒரு சிறுகதையின் ஒரு சில வரிகளும் படைப்பில் வந்த கதாபாத்திரங்களும் என்ரும் நம்மனசில் பூவாய் வாசம் வீசிக்கொண்டிருக்கும்! மாமியார்களையும்(சீரியலில்) சாமியார்களையும்(செய்தியில்) காண்பித்துக்கொண்டிருக்கும்
தொலைக்காட்சியில் மனங்களைத்தொலைத்துவிடாமல் இப்படி எழுத்தாளர்களின் சங்கமத்திற்கும் நூல் வெளியீட்டுவிழாவிற்கும் இத்தனை பேர் வந்திருப்பது வாசிப்பின்மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது ”

இன்னும் சுவைபட பேசினார் அதை நான் இங்கே எழுதுவதைவிட காதாரக்கேட்டால்தான் இனிமை! பேச்சுகக்லை எல்லாருக்கும் வந்துவிடுமா என்ன?அல்லது யார் பேசினாலும் நம்மால்தான் கேட்டுவிடமுடிகிறதா? அன்று பாரதிபாஸ்கர் ஒருமணிநேரம் பேசினதை முடித்தபின்பே உணர்ந்தோம் அப்படி ஒரு கட்டிப்போட்ட பேச்சு!


ஏப்ரல் 10ம்தேதி நங்கநல்லூர்ல ஒரு கவியர்ங்கம்ல கவிதை வாசிச்சேன் அன்னிக்கு எடுத்துட்ட போட்டோ இது! மதுமிதா இசைக்கவிரமணன் ஆர் எஸ் மணி ஹரிக்ருஷ்ணன் த்ரிசக்தி சுந்தர்ராமன் இவர்களோட கீழ படத்துல நானும் ஆரஞ்சு சல்வார்ல !

a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7bu9-BpwPJznR5jHJWsenuTZppXpJk3FXP76BU3cGt2SQ3yw6uGC91dfhLXkpmpd3Mw8DYLSf7xdBy-kgWXezyGlPQbTr_FUbP2y4tuJ5u0ZxauIZ706w3fcvgzySwxD1dXLWJg/s1600/kaviyarangam+with+Madhumitha+Rasmaniji+ramanan+ad+thrishakthi+MD.jpg">










இதுல பாரதிபாஸ்கர் என் நூலை வெளியிட முதலில்பெறுபவர் மக்கள்குரல் ராம்ஜி அவர்கள் நீலசேலைல நான்!

a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz6jq3dFzagoQNLryez6i_axOk5OJuz3ehKnji0aJVPqcn47b2NKd-F38zcmC9nczQpwm8vNKjo-vor0raU2Qi2wsIhjbMPOr0yYhYZHUyl3eu4oJ_TnC3u0kJifDrVmCG5-52Xw/s1600/bookrelease+snap2.jpg">

இதுவும் புத்தகவெளியீட்டில் மேடையில் நிற்கும்போது.....




<

எனது நூல் அவனும் இவனும் சிறுகதைத்தொகுப்பு நூல் தெரியுதா? .... அங்கே ஸ்டாலில் விற்பனையில்!




மதுமிதா தமிழ்ச்செல்வியின் நூல் மேடையில் மஞ்சள்பட்டுசேலையில் மது!

a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5lNAP8SzFVYgMbgbM3PW7a4IF5DEz3qXwQLwNxUEuhyphenhyphenW5_3zYYvydZ-hRsDjdPKM4WXx_8KUgB6xgjOqmVhQefQYqD4ajfCtvQI_00IscvYsJ0uYGEoIP8-QFnWTo114T8UGCsQ/s1600/jamal+++ithula.jpg">

ஜம்முனு சிரிச்சிட்டு ஜமால் எங்களுடன்! துளசி மேடத்துடனும்///







யார் இந்த நால்வர்? கண்டுபிடிச்சா...யெஸ்...அதான் பரிசு!



எனக்காக அன்று வந்த துளசிமேடம் உஷா நிர்மலா ஜமால் மற்றும் அனைவருக்கும் மறுபடி நன்றி.
மேலும் படிக்க... "தென்றல் வந்ததா சேதி சொன்னதா?!"

Monday, May 03, 2010

விண்ணைத்தாண்டி வந்தேனே!

மரத்தடி.காம் என்று ஒருகாலத்துல ஒரு மடலாடற்குழு இருந்தது.அதில் எத்தனை எத்தனைபேர் பறவைகளாய் கூவி மகிழ்ந்தோம் தெரியுமா? பலர் அதில் முகம்தெரியாதபறவைகள் ஆனால் மனச்சிறகை விரித்து எண்ணங்களைப்பரிமாறிக்கொண்டு இருக்கிறோம் ! அதெல்லாம் விண்ணைத்தாண்டிய சந்தோஷங்கள்!


ஆசிப்ஜீ ஆசாத்ஜீ ம்ரவண்டு கணேஷ் மஞ்சூர்ராசா மதுமிதா நிர்மலா பிகே எஸ், உஷா துளசி ஐயப்பன் ஜீவ்ஸ்,ஹரிக்ருஷ்ணன், பால்ராஜன் கீதா, கேவி ராஜா, சக்திப்ரபா ஜெய்ஸ்ரீகோவிந்தராஜன்(யாரையும் மறக்கல் இங்க குறிப்பிடலேன்னாலும் மனசுல அவங்க இருக்காங்க) என்றுஎத்தனை எத்தனை நல்ல இதயங்கள் எனக்குக்கிடைத்த அரும் புதைய்ல்கள்! அவர்களுடனான நட்பு இதமாய் இருக்கிறது இன்னமும்....

அந்தப்பறவைகளில் சிலவற்றை ஏப்ரல் 30ஆம்தேதி நடந்த திரிசக்தி குழுமத்தினரின் 12நூல்கள்வெளியீட்டுவிழாவில் பார்க்க நேர்ந்ததும்...ஆஹா..! என்னவென்று சொல்வதம்மா எந்தன் மனம் கொண்ட மகிழ்ச்சியினை? விண்ணைத்தாண்டி வந்த மகிழ்ச்சிதான் அது!


நுனிப்புல் எனவலைபெயர்கொண்ட என் அன்புத்தோழி உஷா பதிவுலக அரசி துள்சிகோபால் கவிதாயினி நிர்மலா இவர்களைமுதலில்பார்க்கிறேன்! மதுமிதாவும் சேர்ந்துகொள்ள அங்கே வந்த அண்ணா கண்ணனிடம் காமிராவைக்கொடுத்து இந்த நாற்பெரும் தேவியரை சேர்ந்து படம் எடுங்கன்னு கேட்டுட்டோம்!


மரத்தடி நினைவுகளை அசைபோட்டோம் ஆசிஃப்ஜீ மண்டையை உருட்டினோம்:)

பதிவர் நட்புடன் ஜமால் என்பவர் வந்தாரு

அக்கா நான் ஜமால் என்றார் புன்னகைதவழ! ஆஹா இவரா ஜமால்! சிரித்த முகத்தோட ஜமாய்க்கிறாரேன்னு நினச்சி சந்தோசத்துல அதிகம் பேசவும் முடியாம அவஸ்தை!


நூல்வெளியீட்டுல என்னைப்பத்தி இசைக்கவிரமணன் நாலுவரி அறிமுகம் என்றுபுகழ்ந்துசொல்லிட்டே வந்தவரு மைசூர்பாக்கையும் சேர்த்துட்டுசொல்ல
நான் நடந்து மேடை நோக்கிப்போகையில் பின்னாலேயே கரகோஷம் வரவும்,’ பாருங்க இவங்கரசிகர்கூட்டத்தையும் கூட்டிட்டு வந்துட்டாங்க’ என்று லேசா கிண்டல் செய்ய..... கூச்சமாய் சிரிச்சுட்டேன் அங்கயே!


நிலாரசிகன் விழியன் என்று அன்புத்தம்பிகள் ஆவலாய் முன்னமே வந்திருக்க வேறு சிலரும், எனது பத்திரிகைஉலக எழுத்தாள நண்பர்களும் வந்திருக்க வலல்மைதாராயோ இயக்குநர் மதுமிதா பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் எஸ் எம் சில்க் அதிபர் இலக்கியபீடம் ஆசிரியர் கலைமாமணி விக்கிரமன் இந்துமுன்னணித்தலவர் ராம்கோபால் ,நான் அழைப்பிதழ் அனுப்பிக்கேட்டுக்கொண்டதற்கு இணங்கி வருகைபுரிந்த மதிப்பிற்குரிய திரு அப்துல ஜப்பார் யுகமாயினி ஆசிரியர் திரு சித்தன் , எழுத்தாளர்கள் இந்துமதி ஜோதிர்லதாகிரிஜா எஸ் சங்கரநாராயணன் காந்தலஷ்மி இன்னும் பலர் பலர்! மரத்தடி சிமுலேஷன் திடிரென வந்து நின்றார் திகைப்பில் நின்ற என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். வசந்த்குமார் (பதிவர்) விழாவில் கிளிமுற்றம் எனும் தனது சிறுகதைதொகுப்பினை அன்போடுபெற்றுக்கொண்டார் அவரையும் முதன்முதலில்பார்க்கிறேன்.சின்னதம்பி ப்ரபுமாதிரி கழுக்மொழுக்குன்னு இருந்தார்! என்னையும் தம்பி வசந்தையும் யாராவது அருகருகே பார்த்தால்,”சபாஷ் சரியான போட்டி’ என்றோ அல்லது ‘எந்தக்கடையிலே அரிசி வாங்கறே? னும் பாடலாம்!


பாரதி பாஸ்கரின் அற்புதமான சொற்பொழிவு அன்று சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி தான்!

எதைச்சொல்ல எதைவிட! அந்த மாலைப்பொழுதின் மயக்கம் இன்னும் தீர்ந்த்பாடில்லை! செவிக்கு விருந்தென்பது இதுதானா? விழியும் செவியும் நிறைந்தாலே வயிறும் நிறைந்து மனமும் நிறைந்துதான் விடுமோ? (வயிற்றுக்கும் நல்ல டிபன் கிடைத்தது)

ஒன்றுமட்டும் நிதர்சனம் இந்தமாதிரி விழாக்களைப்பார்க்கிறபோது பிறக்கும் நம்பிக்கை இதுதான்,,,,,தமிழ் என்றும் தரணியில் வாழ்ந்துகொண்டிருக்கும்!
தேமதுரத்தமிழோசையை உலகமெல்லாம் பரவச்செய்வது எழுத்தாளர்களின் கையில்தான் இருக்கிறது என்பதை அங்கே புரிந்துகொண்டேன்,

மறவன்புலவு க.சச்சிதானந்தம், ரவி தமிழ்வாணன், சுப்பு, வீரராகவன், தமிழ்த்தேனீ, சந்திரசேகர் அம்சப்ரியா, அய்யப்ப மாதவன், ரீச் சந்திரா, சைதை முரளி.. அண்ணாகண்ணன்,விழியன் நிலாரசிகன் ஓவியர் ஜீவநாதன், ,,,..........இன்னும் இன்னும் பலப்பலமுகங்கள்!

எனது சிறுகதை தொகுப்பு (அவனும் இவனும்) அன்று பட்டிமன்ற பேச்சாளர்பாரதிபாஸ்கர் மற்றும் மக்கள்குரல் ராம்ஜி கைகளால் எனக்கு அளிக்கப்பட்டது.கதைகள் பற்றியும் பிறகுபாரதி பாஸ்கர் சிலாகித்துப்பேசினார் அன்புத்தோழி மதுமிதாவின் நூலையும் பாராட்டி விமர்சித்தார். (இதுபற்றி ஞாயிறு தினமலரிலும் வந்துள்ளது)


மேலும் விவரங்கள் இனி தொடரும்......


--
மேலும் படிக்க... "விண்ணைத்தாண்டி வந்தேனே!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.