Social Icons

Pages

Wednesday, September 15, 2010

இதயங்களில் இன்றும் இருப்பவர்!





இன்று வாழ் சமுதாய்ச் சிறப்பெலாம்
எழில் படங்களாய் வார்த்திட்ட வித்தகர்
ஒன்றினோடொன்று மாறுபற்றிடும்
உலகமக்களின் உள்ளங்கள் ஆய்ந்தவர்
வென்றிபெற்றிடும் மானிடன் மாட்சியும்
வீழ்ச்சியுற்றிடும் தாழ்ச்சியும் கண்டவர்
என்றும் வாழும் தமிழிலக்கியம் தந்தவர்
இதயங்களில் இன்றும் இருப்பவர்!


மனிதர் மேல் அபிமானம் மிகுந்தவர்
மாநிலமுதலமைச்சர் பதவிவகித்தவர்
கனவு கொண்டிடும் நற்றமிழ் வாழ்வுறக்
கதை கவிதைகள் பலவும் படைத்தவர்
புனிதமாம் சமுதாயம்பிறந்திடப்
புதினம் பற்பல நன்கு அளித்தவர்
இனிமையே உருவாகவேவிளங்கியவர்
இதயங்களிலே இன்று இசைந்தே இருப்பவர்!



காவிரி வெள்ளமென களிமணம் கொண்டவர்
கலைகள் யாவினும் ரசனை மிகுந்தவர்
பூவினைப்போன்றுள மென்மனம் வாய்த்தவர்
பொருந்து நண்பரைத்தோளொடு அணைப்பவர்
நாவினாலுரைத் தேனினை வார்த்தவர்
நாடு முற்றும் புகழ்பெறத் திகழ்ந்தவர்
யாவும் செய்யும் பேனாவினை ஆணடவர்
யாவரும் போற்றும் தலைவராய் இருப்பவர்!

--~--~---------~--~----~------------~-------~--~----~
மேலும் படிக்க... "இதயங்களில் இன்றும் இருப்பவர்!"

Saturday, September 11, 2010

தாலாட்டு பாடாத பாரதி!




கனக்கும் செல்வமும் நூறுவயதும் கணபதியிடன் தரவேண்டிப் பாடியவன்!அமுதம்தரவேண்டி அன்னை சக்தியின் தாள் பணிந்தவன்! கனக்கும் செல்வத்தையும் அவன் காணவில்லை அன்னையிடம் அமுதம்பெற்று ஆயுள் நீண்டு வாழவுமில்லை. ஆனாலும் சத்தியமாய் உரைத்திட்ட அவனது சாகாவரிகளில் நித்தியம் வீற்றிருப்பான் பாரதி!


உணவின்றி ஒருமனிதன் பசித்திருந்தாலும்கூட உலகினை அழிப்பதுதான் சரியென்று சொன்னவன். ஜாதியில் பேதம் சொன்ன பாவிகளைப்பார்த்து சவுக்கடியாய் அவன் கேட்ட கேள்விகளில் தலைகுனிந்தது அந்தக்கூட்டம். அடுப்பூதப் பிறந்தவளா ஆரணங்கு அவள் மகத்துவத்திற்குத் தலைவணங்கு என்றான் மகாகவி!

காக்கையும் குருவியும் உறவென்று சொல்லிக்களிநடம்புரிந்தவன் எரியும் தீக்குள் விரலைவைத்தால் அது தெய்வத்தின் தீண்டலான இன்பம் என்று உணர்ந்து உரைத்தவன்!

நிலைகெட்ட மனிதரை நினைத்துக்கொதித்தவன், நெஞ்சு பொறுப்பதில்லையே என்று துடித்தவன்! எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று இயற்கை அழகினில் மனத்தை பறிகொடுத்தவன்!

ஒருநாள் பாரதி தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்தான் அப்போது ஒருவீட்டில் அழும் குழந்தையை வாய்வார்த்தைபேசி சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள் அது கேட்கவில்லை வீறிட்டு அழுதபடியே இருக்கவும் வீட்டின் உள்ளிருந்த ஒரு வயதான பெண்மணி வாசலுக்குவந்தவள் நடந்துபோகும் பாரதியைப்பார்த்தாள்

“அப்பா பாரதி! இந்தக்குழந்தை ஓயாமல் அழுகிறது இதைதூங்க வைக்க நீ ஒரு தாலாட்டுப்பாடேன்” என்று கேட்டுக்கொண்டாள்.

அதற்கு பாரதி,”தமிழர்கள் எல்லாரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் அதனால் நான் தாலாட்டுப்பாடமாட்டேன். தூங்குவோரை எழுப்பும் சக்தி கொண்டபாடல்களையே பாட விரும்புகிறேன்” என்று கூறி பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடினார்.

கடைசிவரை பாரதி ஒரு தாலாட்டுப்பாடல்கூட பாடவில்லை!
மேலும் படிக்க... "தாலாட்டு பாடாத பாரதி!"

Thursday, September 09, 2010

மலர்போல மனம் வேண்டும்!






செப்டம்பர்1ம்தேதி குங்குமச்சிமிழ் நாவல் மலர்போல மனம் வேண்டும் !

சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த புத்தகத்தின் விலை ஐந்துரூபாய்க்குள்தான்! நான் எழுதி இருப்பதால் உடனே வாங்கிப்படிக்கணும் என்ன?!(எப்படில்லாம் அதட்டி உருட்டி படிக்கவைக்கவேண்டி இருக்குப்பா?!

இம்மாதம் கலைமகள் பெண்மணி மாத இதழ்களிலும் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கு ! யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்!
இதை அறிவிக்கவே இந்தப்பதிவு!!
எங்கே யார் ஃபஸ்ட் கடைக்குபோயி புக் வாங்கிப்படிச்சி பின்னூட்டம் இடப்போறீங்க?!
மேலும் படிக்க... "மலர்போல மனம் வேண்டும்!"

Saturday, September 04, 2010

வேருக்கு விழா!

ஆசிரியர்தினம் வருவதற்கு முன்பே சிறந்தஆசிரியர்களுக்கான விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.

சென்னையில் நடந்த ‘அன்புள்ள ஆசிரியர்க்கு’என்ற இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய 14 ஆசிரியர்களில் 7பேர் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு!

இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சிப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள். இவர்கள் கடந்த ஆண்டு தனியார்பள்ளிகளுக்கு இணையாக 10மட்டும் 12ம் வகுப்பு பொதுதேர்வுகளில் தேர்ச்சி சதவீததை சாதித்துள்ளார்கள்.

ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவதாக சொன்ன ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளி தன்னுடைய பள்ளிப்பருவ அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரதுபேச்சு தனது ஆசிரியர்கள்மீது அவர் வைத்திருந்த அன்பை உணர்த்துவதாக இருந்தது

மனதைத்தொடும் ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார் தன் பேச்சில்.

ஒருமுறை தனது ஆசிரியரின் பிறந்தநாளை ஞாபகம் வைத்து அதனை பத்திரிகை ஒன்றில்புகைப்படத்துடன் அளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

படத்தைக்கண்ட் பல நண்பர்களுக்குப் பழையநினைவுகளை அது கிளறிவிட அவர்களும் ஆசிரியருக்கு உடனே போனில் வாழ்த்துசொன்னார்களாம் !ஆசிரியர் நெகிழ்ந்துபோய்விட்டாராம்.


இதைத் தொடர்ந்து ஒவ்வொருவருடமும் இவருடைய நண்பர்கள் ஆசிரியரின்பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்களாம்! இதைச் சொன்ன முரளி மாணவர்களும் ஆசிரியர்களை தங்கள் வாழ்நாளில் மறவாமல் இருக்க வேண்டும் என்றார். ஆசிரியர்களும் மாணவரிடம் அன்போடும் பரிவோடும் நடந்துகொள்ளவேண்டும் அப்போதுதான் சிறந்தகுடிமகனாக ஒரு மாணவன் உருவாகமுடியுமென்றார்.

சென்னை ஐஐடியின் துணைப்பதிவாளர் சூர்யகுமாரும் ஆசிரியரின்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்தினார் .விருதுபெற்ற் ஆசிரியர்களுக்கு மறகக்முடியாதபொன்னாளாக அன்றைய தினம் அமைந்தது .

சிலமாதங்கள் முன்பு வாழ்ககையில்வெற்றிபெற்ற பிரபலங்களின் அன்னையர்களை கௌரவித்தது இதே கிருஷ்ணாஸ்வீட்ஸ் நிறுவனம் .அதனை தொலைக்காட்சி ஒன்றில் பிறகு காண்பித்தார்கள். இப்போது நாளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களை கௌரவிக்க விழா எடுத்திருப்பது வேர்களை என்றும் நினைவுபடுத்துவதாக இருக்கிறது!
மேலும் படிக்க... "வேருக்கு விழா!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.