Social Icons

Pages

Tuesday, February 19, 2008

பேசும் மௌனங்கள்!

அமைதியை ஆடையாய்கொண்ட
வெட்டவெளியில்
அரவத்தின் சீற்றலாய்
மௌனம்.

உடலில் ஊர்ந்து, நகர்ந்து,பின்
வளைக்கும் உத்தேசத்தில்
காலசர்ப்பத்தின் பிடியினைப்போல
காற்றுவெளியில்
சொற்கள் சிதறிய
காலடிப்பாதைகள்.

அவ்வப்போது தலைதூக்கிப்படமெடுக்கும்
நாகத்தின் அழகில்
மயங்கத்தான் தோன்றும்மனதைப்போல
நெஞ்சக்கூட்டிலேயெ
அடைந்துகிடக்கும் சொற்கள்
புறம்தள்ளி வரும்போது
புதுமைக்கீறல்
விடியல்வானில்!
மேலும் படிக்க... "பேசும் மௌனங்கள்!"

உங்க்ளுக்குத் துப்பறியத் தெரியுமா?:)

ஆதித்யா டிடக்டிவ் ஏஜென்சீஸ் என்றபோர்டை, அண்ணாசாலையில் நட்டநடுசென் டரில் ,ஒரு
பெரியகட்டிடமாடியில், மாதம் நாற்பதாயிரம் வாடகைக்கு எடுத்த அறைவாசலில் மாட்டி, ஆறுமாசமாய் அறுபதாயிரம் ஈக்களை ஓட்டிக்கொண்டிருந்த ஆதித்யாவிற்கு,(ஸ்ஸ்ஸ் நீஈஈள வசனம்மூச்சுவாங்குதே:)) அன்றுதான் மொபைலில்' சிங்கநடைபோடு சிகரத்தில் ஏறு என்றபாடலோடு நாள்
தொடங்கியது.

நிச்சயமாய் ராங்நம்பராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்து சுரத்தில்லாமல் ஹலோவினவனுக்கு
எதிர்முனை உற்சாகமாய் ,"ஆதித்யா துப்பறியும் நிறுவனம் தானே?" என்று ஆவலாய் கேட்கவும் "யெஸ் ஆமாம் அவுனு ஜிஹாங் ஹவுது "என்று பலமொழிகளில் உணர்ச்சிவசப்பட்டான்..

"நாந்தான் காமேஷ் பேசறேன் ஆதித்"

'ஆ காமேஷா!'அலறினான் ஆதித் ஏனெனில் இவன் தனது தொழில்பலகையை அறைவாசலில் அன்று
ஒருநாள்மாட்டியதும் அதில் விஷமம் செய்தவன் இதேகாமேஷ்தான்.

ஆதித்யாடிடக்டிவ் ஏஜென்சீஸ் என்ற எழுத்துகளில் டிடக்டிவ் என்பதை டிஃபெக்டிவ் என சாக்பீசால் எழுதி சிரித்தவன்.

"யேய் ..பழையகோபத்தை இப்போ நினைவு வச்சிக்காதடா மச்சி...இப்போ நான் உஜாலாக்கு மாறிட்டேன் ஸாரி..உறையூருக்கு மாறிவந்துட்டேன்"

'எதுக்கு சர்ச்சில்குடும்பத்துக்கு சுருட்டு தயாரிக்கவா?'

'ஏண்டா இவ்ளோ எரிச்சல் உன் கேள்வில? அப்பாவோட ஆயுர்வேதப்பொருள்பிசினசை கவனிக்கத்தான் அதிருக்கட்டும்.. ஆதி, இப்போ உன்னை முக்கியமா நான்கூப்பிடகாரணம்,உபயோகமே இல்லாதிருந்த உன்மூளைக்கு வேலைதரத்தான்.."

ரஜனிபடத்துக்கு முதல்நாள்முதல்ஷோ செல்லும் ரசிகனாய் முகம்மலர்ந்தான் ஆதித்.

"என்ன என்ன சொல்லு சொல்லு?"

"வீட்லவேலைக்கு புது வேலைக்காரன் வச்சிருக்கேன்..பேரு-அப்பு .. வேலைல குத்தம் சொல்லமுடியல ஆனா
கை சுத்தமில்லனு இப்பொதான் தெரிஞ்சிது.. நேத்து என் பாண்ட் பாக்கெட்ல ஆயிரம் ருபா நோட்டை வச்சிட்டு குளிக்கபோயிட்டு வந்துபார்க்கறேன், காணலடா ....வீட்ல அப்புவைவிட்டா அப்போ வேற
யாருமில்ல....விசாரிச்சி கேட்டா அப்பு இல்லைங்கறான்...எனக்கென்னவோ அவன்மேலதான் டவுட் உன் துப்பறியும் மூளைய உபயோகிச்சி இதை நீ கண்டுபிடிக்க வரியாடா ஆதித்? "

"வரேன் வரேன் இல்லேன்னா என் மூளையும் துருப்பிடிச்சிடுமே? இப்போவே வரேன்.."

ஆதித் நேரில் போய்அப்புவை விஜாரித்தான்.

அப்பு கடைசியில்," உண்மையை சொல்லிடறேனுங்க... சின்னய்யா குளிக்கபோனதும் அவரு கோட்ஸ்டாண்டுல மாட்டி இருந்த ப்பேண்டிலேருந்து ஆயிரம் ரூபா நோட்டைஎடுத்தேங்க.. ஆனா அப்போபாத்து அவரு குளிச்சிவர்ரது தெரியவும் சட்டுனு அதை அப்படியே அங்க இருந்த ஒருபுத்தகம் நடுவில வச்சிட்டு வந்துட்டேன் ..அப்றோம் யார் எடுத்தாங்களோ எனக்கு தெரியாதுங்க"
என்றான்.

"ஓஹோ நீபணத்தைவச்சது என்னபுத்தகம்னு நினைவிருக்கா?"

"இருக்குதுங்க..டெலிபோன் மேஜைமேல இருக்குற கம்பராமாயணபுத்தகங்க"

"ஐசீ? எந்தப்பக்கம்ன்னு நினைவு இருக்குதாஅப்பு?"

'ஓ நல்லா இருக்குங்க...273ஆம் பக்கத்துக்கும் 274ஆம் பக்கத்துக்கும் இடைல செருகி வச்சது நல்லா
நினைவுல இருக்குங்க..வேற யாரோ அதை எடுத்துருக்கணும்... அப்ப வர்ட்டுங்களா நான்?"

ஆதித் அட்டகாசமாய் சிரித்தான் .

பிறகு,"காமேஷ்! இவன் சொல்வது பக்கா டூப்..ஹிந்தில ஜூட்.
அதை அழகா சொல்லிட்டு இவனுமிப்போ விடறான் ஜூட்டு! பிடிங்க அவனை. இவந்தான்
திருடினான் "என்றான் உறுதியான குரலில்.

ஆதித் ஏன் இப்படிக்கூறினான் என உங்களில் யாராவது துப்பறிந்து சொல்லமுடியுமா?
மேலும் படிக்க... "உங்க்ளுக்குத் துப்பறியத் தெரியுமா?:)"

Thursday, February 14, 2008

ஆருயிரே....(கவிதை)

ஆழ்ந்து நீகண்ணுறங்கும் வேளை தன்னில்
ஆருயிரே நினைக் காண வருவேன் ஓர் நாள்
நீள் தொலைவிலிருந்து நீ எதிர்பார்த்திராத
நபர்போல நான் வருவேன் நின்னைக் காண
தாழிட்டுக் கதவுதன்னைச் சாத்திடாதே
தாமதிக்க வைக்காதே வாசல்தன்னில்

மெதுவாக அடி எடுத்து நடந்து வந்து
வீற்றிருப்பேன் நின்னருகே எந்தன் அன்பே
மதி காணா இருளினிலே நெருங்கி நின்று
மன்னவனே நின்னை உற்று நோக்கி நிற்பேன்
பதித்த என் முத்தத்தை நீ உணரும்போது
பரவசத்தில் பாய்ந்தோடி ஒளிந்தே கொள்வேன்
மேலும் படிக்க... "ஆருயிரே....(கவிதை)"

Tuesday, February 05, 2008

நிழலும், நிஜமும்.

நிழலும் நிஜமும்
எப்போதுமே பயணம் செய்கிறது
அருகருகே.

நிழலின் பரிணாமம்
மாறிக்கொண்டே வருகிறது,
நிஜம் எப்போதுமே
ஒரேமாதிரியாய்.

இருட்டிலே சில சம்யம்
நிஜம் தேடுவதுண்டு
உடன் வந்த நிழலை

விடிந்ததும் வரும் நிழலிடம்
நிஜம் கேட்கும்
இருட்டில் அது மறைந்ததுபற்றி

நிழல் சொல்லும் மௌனமாய்..
"பலநேரங்களில் நம்பயணம் நீயும் நானுமாய்
சில நேரங்களில் நம்பயணம்
நீயே நானாய்."
மேலும் படிக்க... "நிழலும், நிஜமும்."

Sunday, February 03, 2008

அரைப்ளேடு அழைச்சபடி எழுதினதில் பிடிச்சது.

அன்புச் சகோதரர் அரைப்ளேடு என்னை சென்ற வருஷத்துல எழுதினதுல பிடிச்சதை பத்தி இங்க எழுத அழைச்சிருக்காரு.

நான் சென்ற வருஷம் பாதிநாளு காணாம போயிருந்தேன்! வேற ஏதாவது வேலைகளில் பிசியான்னா அப்ப்டி ஏதுமில்ல... சில நேரங்களில் சில விஷய்ங்களுக்கு சில மனிதர்க்ளிடையே பழகிய பழக்கத்திற்கு ஒரு இடைவெளி வரும் இல்லையா அதுபோல ஏதோ ஒண்ணு... அப்போ டாக்டர்விஎஸ்கே வந்து தன்பதிவில் இப்படி அரைப்ளேடுமாதிரி அன்புக்கட்டளையிட்டு என்னைப் பதிவு எழுத அழைச்சார். சக்திகொடூன்னு வேண்டுதல் செய்து மறுபடி உற்சாகமா எழுத ஆரம்பிச்சேன்.

அப்போதான் வ வா ச போட்டி வச்சாங்க.. இராமை மையமா வச்சி ஒரு காமெடி கட்டுரை எழுதினேன் பரிசும் கிடச்சிது....பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மின்னு சிலர் சொல்றாங்களே அப்படில்லாம் இல்லன்னு நிரூபிக்க நான் எழுதின உண்மை நிகழ்ச்சியாக
கவலைப்படாத காரிகையர் சங்கம் என்ற நகைச்சுவை கட்டுரைக்கு வ வா ச பரிசு கிடச்சதுல இரட்டிப்பு மகிழ்ச்சி...

http://shylajan.blogspot.com/2007/04/blog-post.html இங்கதான் அந்த கட்டுரை இருக்கு.

மத்தபடி பிரமாதமா இதுவரை ஒண்ணுமே எழுதல... அரைப்ளேடு மாதிரி யாராவது என்னை இப்படி அழைப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா ச்சும்மா அப்பவே அசத்தி இருக்கலாம்:)(ஓவர்தான் இல்ல?:))
மேலும் படிக்க... "அரைப்ளேடு அழைச்சபடி எழுதினதில் பிடிச்சது."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.