Social Icons

Pages

Sunday, July 19, 2009

கம்பனும், கீட்சும்!

இலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது.

அந்தவகையில்,ஆங்கிலத்தில் கீட்சும் தமிழில்கம்பனும் நம்மில்
பெரும்பாலரின் மனதைக் கவர்ந்துவிடுகிறார்கள் !

அதிகம் கரைத்துக்குடிக்கவில்லை எனினும் கண்டுகளித்தவரை கீட்சும் கம்பனும் அவர்களின் மொழிகளில் சொல்லோவியத்தைக்காட்டி இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.


சொல் ஓவியம்!

பார்த்தீர்களா. சொல்சிற்பம் என்று வருகிறதா ஓவியம் என்றே சொல்லின் பெருமைக்கு சிறப்பு சேர்க்கிறது!


ஆம்!..கம்பனும் கீட்சும் ஓவியத்தை தங்கள் பாடல்களில் ஒளித்துவைத்ததை சற்றே பார்க்கலாமா?

ஆயகலைகள் அறுபத்திநான்கு! சிற்பம் ஓவியம் நாட்டியம் எழுத்து பேச்சு, மகிழ்வு ஊட்டும் கருவிகள் என்று ..
இவைகளில் ஓவியம் ஒருதனிச்சிறப்பைப்பெறுகிறது.


குறிப்பாக காதல்நோயில் வீழ்ந்தவர்களுக்கு ஓவியம் ஒருசிறந்த உறுதுணையாக அமைகிறது.

ஆணாயினும். பெண்ணாயினும் தங்களுடைய அன்புக்குரியவர்களின் முகத்தினன நினைத்து,படத்தினைப் பார்த்து மனம் மகிழ்கின்றனர்.

நடைமுறைவாழ்க்கையில் சிறந்தபொருளை நமக்குஒருவர் கொடுக்ககவிட்டால் உடனே,' அதென்ன பெரிய ஓவியமோ?' என்று கேட்கிறோம்.

கதைகளில்கூட அவள் அஜந்தாஓவியம்போலிருந்தாள் எனக்தாசிரியர்கள் எழுதுவார்கள் அழகுச்சித்திரம், சித்திரம் பேசுதடி,காதல் ஓவியம் என்றெல்லாம் பாடல்களில் கேட்டுவருகிறோம்.

மக்கள்தங்களுக்கென்றுமொழி உருவாகாத காலத்தில் குகைகளில் சித்திரங்களைவரைந்து அதன்மூலம் உணர்சிகளை வெளிபடுத்திக்கொண்டார்கள்.

. உணர்ச்சிபூர்வமான சிறந்தஓவியம் பல கதைகளை நமக்குச்சொல்லிவிடும்.


அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியம் ஒன்றினை புலவன் கீட்ஸ் காண்கிறான்

அந்தஓவியம் வரையப்பட்டிருந்தது ஒரு தாளில் அல்ல..குகைச்சுவர்களில் அல்ல.அல்லது மரத்தூண்களில் அல்ல.மாறக ஒருதாழியில் !(URN)

அந்தத் தாழி,கிரேக்கநாட்டுச் சார்புடையதாக அவனுக்குத் தோன்றியது எனவே அந்தப்பானைக்கு Greecian Urn என்று பெயர்வைத்தான்' அந்ததாழியை வ்ரலாற்று

ஆசிரியனாகவும் (Sylvan Historian)நினைத்து அதனுடன் பேசுகிறான்

காதலன் காதலிக்கு ஊதுகுழல் ஊதி மகிழ்வித்து அவளைப் பின் தொடர்ந்து தன் அருகில் அழைத்திடுவதுபோன்ற ஓவியம் .

அவன் அழைப்பதை செவிசாய்க்காமல் அவனுடைய இன்னிசையைக்கேட்டு இசைவுகொடுக்காமல் தப்பி ஓட முயற்சி செய்கிறாள் அந்தப்பெண்

ஒருமரத்தடியிலே இந்தக்காதல்நாடகம் நடக்கிறது ,இந்த நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஓவியம் கீட்சின் சிந்தனையைக் கவர்கிறது.


அந்தஓவியக்காதலனிடம் கீட்ஸ் பேசுகிறான்

"இந்தமரத்தினடியில் நீ எப்போதும் நின்றுகொண்டிருக்கலாம் நீபாடுகின்றபாட்டினைக் கேட்காமல் அவள் எங்கேயும்தப்பித்துப்போகமுடியாது. இந்தமரங்களும் உன்னுடையபாட்டைக்கேட்டுப்பழக்கப்படவேண்டியதுதான்.
நீ அவளைமுத்தமிடமுயற்சிக்கிறாய் ,ஆனால் முடியாது.
நீ உனதுகுறிக்கோளில் வெற்றிக்குப்பக்கத்தில் நிற்கிறாய், அதற்காகபயப்படாதே !
அவளும் உன்னைவிட்டுமறைந்துவிடமுடியாது. எப்பொழுதும் உனது காதல் இருந்துகொண்டே இருக்கும் அவளும் அழகு மாறாமலே இருப்பாள்'

என்னும்பொருள்பட தாழியிலுள்ளஓவியக் காதலர்களைப்
பார்த்துச்சொல்லுகிறான் கீட்ஸ்.


அமரத்துவம் வாய்ந்தகாதல் ஓவியம் அழியாதது!
அந்தக்காதலர்களுக்கு மூப்புஇல்லை என்பதைகீட்ஸ்மறைமுகமாகசொல்கிறார்..

அதனைக்கீழ்கண்ட ஆங்கிலவரிகள் நமக்கு உணர்த்திவிடும்.



Thou still unravish'd bride of quietness,
Thou foster-child of silence and slow time,
Sylvan historian, who canst thus express
A flowery tale more sweetly than our rhyme:
What leaf-fring'd legend haunts about thy shape
Of deities or mortals, or of both,
In Tempe or the dales of Arcady?
What men or gods are these? What maidens loth?
What mad pursuit? What struggle to escape?
What pipes and timbrels? What wild ecstasy?

Heard melodies are sweet, but those unheard
Are sweeter; therefore, ye soft pipes, play on;
Not to the sensual ear, but, more endear'd,
Pipe to the spirit ditties of no tone:
Fair youth, beneath the trees, thou canst not leave
Thy song, nor ever can those trees be bare;
Bold Lover, never, never canst thou kiss,
Though winning near the goal yet, do not grieve;
She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!
(From "ode on a Grecian urn"by John Keats)





கீட்சின் இந்தவிவரிப்பும்,கம்பனின் காவியத்தில் ஒரு நிகழ்ச்சிகோர்வையையும் பார்த்தால் ஓவியக்கலையின் சிறப்பை
நாம் இன்னும் உணரமுடியும்.

ஆற்றமுடியாத துயரத்துடன் அசோகவனத்தில் அன்னை சீதை இருக்கிறாள்.

"இராமன்வருவானா? என்னைமீட்பானா?


என் தலைவன் இராமன் நல்லவன்! பேரழகன்!

ஆமாம்! அரசாட்சியை ஏற்றுக்கொள் என்றபோதும் ராஜ்ஜியம் உனக்குஇல்லை என்றபோதிலும் அவன்முகம் சித்திரத்தில்மலர்ந்த செந்தாமரையாகவே இருந்தது. "

அந்தமுகத்தை எண்ணுகிறாள் சீதை. வறண்டபாலையாய் இருந்த அவள் உள்ளத்தில் வசந்தம் எட்டிப்பார்க்கிறது.




"மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும்
இத்திருத்துறந்து ஏகென்ற போதிலும்

சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள்
"

கம்பன் காட்டும் இந்த சொல் ஓவியம் இதுதான்!


ஓவியக்கலையின் சிறப்பை மிக நுணுக்கமாக பொதித்துவைக்கிறான் கம்பன் இங்கு,

அரசுரிமையைத்துறந்து காட்டிற்குச்செல்லவேண்டும் என்றுகைகேயிகூறியபோது 'அன்றலர்ந்த தாமரையினை வென்றதம்மா' என்று இராமனின்முகத்தை வர்ணிக்கிறார்.


கைகேயின் சுடு சொல் கேட்டமுகம் அன்றுமலர்ந்த தாமரையாம்.
. அன்றுமலரும்தாமரைக்கு உயிருண்டு ..நேரமாகிவிட்டால் வாடிவிடும் .

ஆனால் சீதையைப்பற்றி கம்பன்கூறும்போது 'சித்திரத்தில் அலர்ந்ததாமரை' என்கிறார், இராமனின் முகவதனத்தினை!

சித்திரத்தாமரைக்கு அழிவில்லை என்றும் மலர்ந்தே இருக்கும்.
சீதை தனிமையில் இருக்கும்போது அவளுக்கு மகிழ்ச்சி அளிப்பது என்றும் மலர்ந்திருக்கும் இராமனின் திருமுகம்!

அதுமட்டுமல்ல சித்திரச்செந்தாமரைமுகத்தை நினைக்கும்போது சீதைக்குஇன்னொன்றும்தோன்றி இருக்கவேண்டும் அந்த அழகான முகத்தை சூர்ப்பனகை போன்ற அரக்கியர்களால் காணநேர்ந்துவிட்டால், அவர்களால் கண்டுமட்டுமே மகிழலாம் என்றும் எண்ணிக்கொள்ளலாம்!


கம்பன்காட்டிய சொல்லோவியத்தையும் தாழியில்வரையப்படிருந்த காதலர்களின் உள்ளப்பாங்கினை கீட்ஸ் நமக்கு உணர்த்தும் உருவகமும் நாம் படித்து மகிழ வேண்டிய சுவையான காட்சிகள் !


கலைகளில்பலபிரிவுகளில் ஓவியம் ஓர் உயர்ந்த இடத்தைபிடிக்கிறது என்பதில் ஐயமே இல்லை.

இதனால்தானோ என்னவோ, கம்பனையும்கீட்சையும் பின்பற்றி கண்ணதாசனும் இப்படிப்பாடினான்?

காலங்களில் அவள் வசந்தம்!
கலைகளிலே அவள் ஓவியம்!

16 comments:

  1. ///இதனால்தானோ என்னவோ, கம்னையும்கீட்சையும் பின்பற்றி கண்ணதாசனும் இப்படிப்பாடினான்?

    காலங்களில் அவள் வசந்தம்!
    கலைகளிலே அவள் ஓவியம்!////

    நயங்களை நயமாகச் சொல்லி நயத்துடன் நச்சென்று முடிதீர்கள் சகோதரி.
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. suuuuuuuuperp writing

    ReplyDelete
  3. நல்ல ஒப்பிடல்.....

    அருமையான மற்றும் ஆழமான அலசல் ஷைலஜா.....

    வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  4. அமெரிக்க அக்காவின் முதல் பதிவே வருக! :)
    அதான் கீட்ஸைத் தாங்கி வந்தனையோ? அதுக்கு லண்டனுக்கு-ல்ல போகணும்? :)

    ReplyDelete
  5. //Thy song, nor ever can those trees be bare;
    Bold Lover, never, never canst thou kiss,

    Though winning near the goal yet, do not grieve;
    She cannot fade, though thou hast not thy bliss//

    Awesome! Astounding! Very apt! :)
    Though thou cant kiss
    Never miss the bliss!
    wow!

    ReplyDelete
  6. இராமனின் முகம் அன்றலர்ந்த செந்தாமரை தான்!

    ஏன்னா அன்று அலர்ந்த தாமரை முதலில் பூக்கும் போது பளிச்-ன்னு தான் இருக்கும்! ஆனால் பொழுது சாய சாய, வாடத் துவங்கும்! ஏன்னா அதற்கு சூரியன் தேவை! இராமனுக்கும் தர்மம் என்னும் சூரியன் தேவை! அது குன்றும் போது அவனுக்கும் கோபம் வரும்! வாட்டம் வரும்!

    //சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை//

    பிராட்டிக்கு அப்படி இல்லை!
    அவள் மணமுள்ள செந்தாமரை! மலரும் போதே சித்திரத்திலும் மலர்ந்து விட்டாள்!
    சித்திரத் தாமரைக்கு வாட்டமே இல்லை! கோபமும் இல்லை!

    தர்மம் குன்றினாலும், தீமை புரிந்தாரைக் கண்டு அவள் வெருள்வதில்லை! அவர்களைக் கடைத்தேற்றவே அவள் எண்ணுவாள்! அதனால் அவள் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை!

    இராமயணத்தில் வதங்கள் எல்லாம் பிராட்டி அருகில் இல்லாத போது தான்! அருகில் இருந்த போது காகாசுரன் (இந்திரன் புதல்வனே ஆனாலும் காகா+அசுரன் தான்) முதற்கொண்டு சூர்ப்பனகை வரை, எவருமே வதம் செய்யப்படாதது....

    இவள் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை என்றே காட்டுகிறது!

    ReplyDelete
  7. கீட்ஸின் கல்லறையில், "தண்ணீரில் பெயர் எழுதப் பட்ட ஒருவன் உறங்குகிறான்" என்ற வாசகம் மட்டுமே பொறிக்கப் படவேண்டும் என்ற அளவுக்கு, சொந்த வாழ்க்கையில் துயரங்களை அனுபவித்தவர். அதே நேரம், "A thing of beauty is a joy for ever", என்று தொடங்கும் அற்புதமான கவிதையையும் தந்தவர்[ Endymion].

    கம்பனோடு ஒப்பீடா, நன்று நன்று!

    ReplyDelete
  8. VR. SUBBIAH said...
    ///இதனால்தானோ என்னவோ, கம்னையும்கீட்சையும் பின்பற்றி கண்ணதாசனும் இப்படிப்பாடினான்?

    காலங்களில் அவள் வசந்தம்!
    கலைகளிலே அவள் ஓவியம்!////

    நயங்களை நயமாகச் சொல்லி நயத்துடன் நச்சென்று முடிதீர்கள் சகோதரி.
    பாராட்டுக்கள்

    8:10 AM
    >>>>>>

    வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி சகோதரர் சுப்பையா.

    ReplyDelete
  9. ராஜா | KVR said...
    suuuuuuuuperp writing

    5:44 PM
    >>>>>

    Really? Thanks a lot Raja!
    (ராஜா சொன்னா தமிழ்ராஜ்யமே சொன்னமாதிரி:)

    ReplyDelete
  10. R.Gopi said...
    நல்ல ஒப்பிடல்.....

    அருமையான மற்றும் ஆழமான அலசல் ஷைலஜா.....

    வாழ்த்துக்கள்.....

    9:37 AM
    >>>>>>>>>>
    நன்றி திரு கோபி.

    ReplyDelete
  11. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    அமெரிக்க அக்காவின் முதல் பதிவே வருக! :)
    அதான் கீட்ஸைத் தாங்கி வந்தனையோ? அதுக்கு லண்டனுக்கு-ல்ல போகணும்? :)

    7:47 PM

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ஜூலை4 பற்றி குழுமமல எழுதினது முதல்பதிவு இங்க வந்ததும்!

    ஆனா வலைக்கு இதான்..கண்டுகொண்ட ரவிக்கு நன்றி

    நியூயார்க்ல உக்காந்திட்டு ஆண்டாள் ஆழ்வார் அருணகிரி நாயன்மார்னாலாம் எழுதிட்டு இருக்கீங்க!! நான் கொஞ்சமா கீட்சைப்பத்தி எழுதினா லண்டன்போகணுமாக்கும்?:)

    ReplyDelete
  12. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //Thy song, nor ever can those trees be bare;
    Bold Lover, never, never canst thou kiss,

    Though winning near the goal yet, do not grieve;
    She cannot fade, though thou hast not thy bliss//

    Awesome! Astounding! Very apt! :)
    Though thou cant kiss
    Never miss the bliss!
    wow!
    >>>>>

    Awesome! Right Ravi?
    8:02 PM

    ReplyDelete
  13. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    இராமனின் முகம் அன்றலர்ந்த செந்தாமரை தான்!

    ஏன்னா அன்று அலர்ந்த தாமரை முதலில் பூக்கும் போது பளிச்-ன்னு தான் இருக்கும்! ஆனால் பொழுது சாய சாய, வாடத் துவங்கும்! ஏன்னா அதற்கு சூரியன் தேவை! இராமனுக்கும் தர்மம் என்னும் சூரியன் தேவை! அது குன்றும் போது அவனுக்கும் கோபம் வரும்! வாட்டம் வரும்!

    //சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை//

    பிராட்டிக்கு அப்படி இல்லை!
    அவள் மணமுள்ள செந்தாமரை! மலரும் போதே சித்திரத்திலும் மலர்ந்து விட்டாள்!
    சித்திரத் தாமரைக்கு வாட்டமே இல்லை! கோபமும் இல்லை!

    தர்மம் குன்றினாலும், தீமை புரிந்தாரைக் கண்டு அவள் வெருள்வதில்லை! அவர்களைக் கடைத்தேற்றவே அவள் எண்ணுவாள்! அதனால் அவள் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை!

    இராமயணத்தில் வதங்கள் எல்லாம் பிராட்டி அருகில் இல்லாத போது தான்! அருகில் இருந்த போது காகாசுரன் (இந்திரன் புதல்வனே ஆனாலும் காகா+அசுரன் தான்) முதற்கொண்டு சூர்ப்பனகை வரை, எவருமே வதம் செய்யப்படாதது....

    இவள் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை என்றே காட்டுகிறது!

    8:23 PM
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    தாயின் கருணை அது! நல்ல விளக்கம் ரவி நன்றி

    ReplyDelete
  14. கிருஷ்ணமூர்த்தி said...
    கீட்ஸின் கல்லறையில், "தண்ணீரில் பெயர் எழுதப் பட்ட ஒருவன் உறங்குகிறான்" என்ற வாசகம் மட்டுமே பொறிக்கப் படவேண்டும் என்ற அளவுக்கு, சொந்த வாழ்க்கையில் துயரங்களை அனுபவித்தவர். அதே நேரம், "A thing of beauty is a joy for ever", என்று தொடங்கும் அற்புதமான கவிதையையும் தந்தவர்[ Endymion].>>>>>

    ஆமாம் கிருஷ்ணமூர்த்தி ஸார் சோகங்களை அனுபவித்தவர்களே நம்பிக்கையான வரிகளை அள்ளித்தருகிறார்கள் கீட்சின் இந்த வாக்கியம் என் 10வயதில் அம்னதில்பதிந்த ஒன்று

    //கம்பனோடு ஒப்பீடா, நன்று நன்று!//

    ஆமாம் சின்ன முயற்சி. நன்று என்றதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றியும் கூட.

    11:05 PM

    ReplyDelete
  15. சீதையின் அழகையும் நம்மை உணரவைத்தது ஓவியங்கள் தானே!!

    ReplyDelete
  16. // T.V.Radhakrishnan said...
    சீதையின் அழகையும் நம்மை உணரவைத்தது ஓவியங்கள் தானே
    //


    >>>>>>>>>>>>>>


    ஆமாம் சொல் ஓவியங்கள்!
    நன்றி ராதாக்ருஷ்ணன் வருகைக்கும்கருத்துக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.