Social Icons

Pages

Thursday, October 14, 2010

தசரா யானைகளின் அவஸ்தைகள்.




மைசூர் தசராவில் முக்கிய அம்சமாய் இடம் பெறுவது 'ஜம்புசவாரி' எனப்படும் யானைகளின் அணிவகுப்பும் அவைகளின் சாகசங்கள் கொண்ட விளையாட்டுக்களும்.

நாகரஹோலே காட்டிலிருந்து மைசூருக்கு 70 கிலோமீட்டர் கஜபயணம் நடைபெறும். 'பலராமா' என்ற யானையின் தலைமையில்
மற்ற யானைகள் தசராவிற்கு ஒருவாரம் முன்பாகவே மைசூர் அரண்மனை வாயிலுக்கு வந்துநிற்பது வழக்கம்.


பலராமா எனப்படும் மூத்த யானைக்கு தங்க முகப்படாம் அணிவிக்கப்படும்.
(இந்த வருஷம் பலராமன் பலமில்லாராமனாய் உடம்பு சரி இல்லாமல் இருப்பதாக் சொல்கிறார்கள்)
இதனால் யானை, மற்றவர்கள் பார்வையைக் கவர்ந்தாலும், படும்அவஸ்தையை அந்த யானைதான் உணரும்.

தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்தினால் வலி இல்லாமல் போகுமா?
அதுபோலத் தான். 750கிலோ எடை உள்ள சுமையான தங்கக் கவசம் அதன் வயோதிக உடலை வேதனைப்படுத்துவதை மிகச் சிலரே உணரமுடியும். இதே
அவஸ்தை தான் மற்ற யானைகளுக்கும், மைசூர்நகரத்தின் சந்தடித்தெருக்களீல் ஆறுகிலோமீட்டர் நெருசல்களினிடையே அவை பாகனின் கட்டளைக்கு பயந்து நடக்கும்.

தசரா வைபவத்தையொட்டி யானைகள் காட்டிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. அவைகளை ஒத்திகையின்போதே நகரத்தின் தார் சாலையில் ஏறத்தாழ 40கிலோமீட்டர் தினமும் நடந்து செல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது. காட்டின் அமைதியான சூழ்நிலையில் மிருதுவான சாலைகளில் நடந்துபழக்கப்பட்ட யானைகள் தார்சாலையின் காலடியில் கண்ணாடிச்சில்லுகள் குத்தியெடுக்க சிரமப்பட்டு நடப்பது
வேதனை. தினமும் 750 கிலோ எடை உள்ள தங்க முகப்படாமுடன் தலைமை யானை, பயிற்சிக்குச் செல்லவேண்டும். தினமும் சூரியவெப்பத்தின்கீழ் பாகனின் அங்குசத்திற்கு அடிபணிந்து அவஸ்தைகளை அழுத்திக்கொண்டு யானை
நிற்பது பரிதாபக் காட்சி.

அணிவகுப்பின்போது யானைகள் கூட்டதினரின் கூச்சலுக்கும் வானவேடிக்கை ஒலிக்கும் மிரண்டு சற்றே முரண்டு செய்தால் பாகனின் ஆயுதம் அவைகளின் உடலைப் பதம் பார்க்கும் அவைகளின் உடல் அழுத்தம் நீங்க அவ்வப்போது ரம், ஒப்பியம் அளிக்கிறார்கள், இது உடல்நலக்கேட்டை விளைவிக்கும் என அறியாமல்.

அணிவகுப்பிற்கென்றே அவைகளுக்கு செயற்கையாய் அலங்காரங்கள் செய்யப்பட அதற்கு 10லிருந்து 12 மணிநேரவிரயம். இதற்கு சம்மதிக்காத யானைகள் பாகனின் அங்குச மிரட்டலில் அடிபணிகின்றன.


வனவாழ்வுநலப்பாதுகாப்பு அமைப்பு (Wildlife Rescue and Rehabilitation Centre (WRRC) தலைமைப் பொறுப்பிலிருக்கும் சுபர்ணாபக்ஷி கங்குலி சொல்கிறார், "வனவிலங்கு நல்வாழ் உரிமைச் சட்டப்படி எந்த யானைக்கும் 400கிலோ எடைக்குமேல் பாரம் சுமக்க
அனுமதி இல்லை.காட்டிலிருந்து பிடிக்கப்பட்ட யானைகள் இந்தியா முழுவதும் மொத்தமாக 3000 வரை இருக்கலாம், இதில்
கேரளாவிலிருந்து மட்டுமே 800 யானைகளாம். பிடிக்கப்பட்டயானைகள் ஜெய்ப்பூரில் சுற்றுலாவாரியத்தில் 87ம், ராஜஸ்தானில் அம்பேர்கோட்டையின்கடின சாலையில் சுற்றுலா பயணிகளை சுமக்க 120 யானைகளும் உள்ளனவாம்.
தவிரகோயில்களுக்கு சில கொடுக்கப்படுகின்றன. கோயில் யானைகள் சங்கிலியால்பிணைக்கப்பட்டு கான்க்ரீட் தரையில் அதன் பாதம் பதிய நிற்கவைக்கப்
படுகிறது. இதை வனத்தில் வாழ்ந்த எந்த மிருகமும் தாங்கிக் கொள்ளாது. அரசுதான் இதைக் கருத்தில் கொண்டு கவனிக்கவேண்டும்" என்கிறார்.

தசரா கமிட்டிக்கும் Department Of Wildlife Rescue and Rehabilitation Centre (WRRC)- க்கும் சில ஆலோசனைகளை வைத்தாயிற்று.

1. தசரா நேரத்தில் யானைகளை உபயோகிப்பதை நிறுத்தவேண்டும்.

2. யானைகளுக்கு, சுமையான முகப்படாம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3, 20 அல்லது 30 கிலோ எடைக்குமேல் உள்ள மர உருளைகளை யானைகள் தூக்கக்கூடாது.

4. யானைகளின்மீது வண்ணமிட்டு அலங்கரிப்பது கூடாது.

5. வன்மையான பயிற்சிகளைத் தடை செய்யவேண்டும்.

2003ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் மட்டும் யானைக் கலவரம் மூன்று முறை நடந்தது. அதில் கொச்சினில் கோயில் விழாவுக்குச் செல்லும் வழியில் பாகனைக் கொன்ற நிகழ்ச்சி மிகவும் வேதனையானது. அமைதியான மனித சஞ்சாரமற்ற
காட்டின் இயற்கைச் சூழலிலிருந்து நகரத்திற்கு கொண்டுவரப்படும் விலங்குகள் வன்மையாகவும் கொடூரமாகவும் செயல்படக் காரணம் அவற்றிற்கு நகரத்தின்
சந்தடியும் தங்களது தனிமை பறிபோவதாலும்தான்.
அன்று 'ஆதிமூலமே' என்று கஜேந்திரன் என்னும் யானை கத்தியதும் ஆண்டவன் ஓடிவந்து காப்பாற்றினார்;
இன்று அரசு அதைச் செய்யுமா?

இதோ மைசூரில் தசரா திருவிழா ஆரம்பமாகிவிட்டன!.
'மைசூருதசரா எஷ்டந்து சுந்தரா?' (மைசூரின் தசராப்பண்டிகை, எத்தனை அழகு!’
என்று ஒலிபெருக்கியில் பாடல் வீறிடுகிறது.

பயிற்சி யானைகள் அணிவகுப்புப் பாதைகளில் நடக்கத் தயாராகிவிட்டன!




--

3 comments:

  1. மிக நல்ல பதிவு.

    கடைசி வரி, இதற்கு என்னதான் முடிவு எனக் நினைக்க வைக்கிறது.

    //கோயில் யானைகள் சங்கிலியால்பிணைக்கப்பட்டு கான்க்ரீட் தரையில் அதன் பாதம் பதிய நிற்கவைக்கப்
    படுகிறது. இதை வனத்தில் வாழ்ந்த எந்த மிருகமும் தாங்கிக் கொள்ளாது.//

    நான் படம் பிடித்த கோவில் யானைகள் எல்லாமே சங்கலியுடனேதான் காட்சி தந்தன பரிதாபமாக. பழகியிருக்கக் கூடுமென நாம் நினைக்கிறோம். அவஸ்தையை அனுபவிப்பது அவைதாம்.

    ReplyDelete
  2. Awesome.. Manidhargalukku manidhabimaaneme irukka matengardhu. Jeevakarunyam enga varapogudhu akka.

    ReplyDelete
  3. ரொம்ப லேட்டா உள்ளே வந்துட்டேன் போல

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.