Social Icons

Pages

Thursday, October 07, 2010

நவராத்திரி தகவல்1 செய்குதம்பி பாவலர்.

ஒரு நவராத்திரி விழாவில் சதாவதானி செய்குதம்பி பாவலரை அவரது நண்பர் இட்டாபார்த்தசாரதி நாயுடு என்பவர் பாடும்படி கேட்டபோது

“உருமகளை அயன் நாவில் உறைபவளை
பொறை மகளை உலகுக்கெல்லாம்
குருமகளை அன்பர் புகழ் குலமகளை
மலர்மகளை குறைதீர் செல்வத்
திருமகளின் மருமகளை நிலமகட்கும்
கலைமகளை செவ்வி வாய்ந்த
ஒரு மகளை எனக்கருள வருமகளை
பெருமகளை உன்னல் செய்வாய்!”

என்று பாடலைப்பாடினார்.

இந்து தெய்வத்தை இதுபோன்று எதுகை மோனையுடன் பாடிய இஸ்லாமியப்பெரியவர் செய்குதம்பி பாவலரின் நாவன்மையும் பாவன்மையும் அவர்தம் பெருந்தன்மையைப்போலவே சிறப்பாக இருக்கிறது அல்லவா?

இதை இங்கே உங்களுக்கு அளித்தவர்.....:)

ஷைலஜா(எ) மலைமகள்

1 comment:

  1. கேள்விப்படாதது..ம்ம்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.