Social Icons

Pages

Monday, February 04, 2013

தமிழ்ச்சங்கம் தந்த பரிசு!





பெங்களூர் தமிழ்சங்கம் பெங்களூரில் அல்சூர்ப்பகுதியில் அழகான ஏரிக்கு எதிரே அமைந்துள்ளது.



ஒருமுறை தமிழ்நாட்டிலிருந்து வந்த பிரபல எழுத்தாளர் சொன்னார்’ எங்களுக்கு இப்படி ஒருகட்டிடம் அமையவில்லை’ என்று.ஆமாம் அப்படி ஒரு அழகான கட்டிடம். தமிழைப்போல உயர்ந்து நிற்கும் கட்டிடம்!
 
 
பெங்களூர் தமிழ்சங்கம், தமிழை வளர்ப்பதுடன் இதுவரை ஐம்பாதாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கன்னடம் கற்று தந்திருக்கிறது! வள்ளுவர் சிலை பலகாலம் முடிக்கிடந்ததை விழா எடுத்து வெளிக்கொணர்ந்து இன்றும் வருடாவருடம் வள்ளுவர் நாளை விமரிசையாகக்கொண்டாடுகிறது. தமிழ்ச்சங்கத்தின் உள் அரங்கத்தின் பெயரே வள்ளுவர் அரங்கம்தான் எங்கும் தமிழ்ப்புலவனின் படங்கள் அவன் எழுதிய குறள்கள் அதற்கான மிக அழகிய படங்கள், நால்வகை நிலம் பற்றிய சித்திரங்கள் என்று கலைக்கூடமாக காட்சி அளிக்கிறது.சங்கத்தின் அரிய பணிகள் பலப்பல. ஏரிக்கரைகவியரங்கம் என்று மாதாமாதம் புதுக்கவிஞர்களை அறிமுகப்படுத்துகிறார்கள் சில சமயங்களில் அல்சூர் ஏரியில் படகில் வலம் வந்தபடியே கவிதைகள் பொழிவார்கள் கவிஞர்கள்!
வள்ளுவரைப்பல்லக்கில் வைத்து வருடாவருடம் வீதி உலா வருகிறார்கள் அந்த சமயம் பல அமைப்புகள் சங்கத்திற்கு உதவுகின்றன. பல திரைநடிகர்களின் ரசிகர்சங்கங்கள் அதில் பணிபுரியும் இளைஞர்கள் பலவிதங்களில் உதவுகிறார்கள்.நான் என்னவோ ரசிகர்மன்றங்கள் என்றாலே அவர்கள் நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் பல ரசிகர்மன்றங்கள் பலவிதமான நற்பணிகள் செய்கின்றன. அவர்கள் அனைவரையும் சிறப்பிக்க நேற்று அத்தனை பேரையும் வரவழைத்து பொன்னாடை போர்த்தி நற்சான்றுப்பத்திரமும் கேடயமும் அளித்தார்கள்.
தொடர்ந்து சங்கத்தின் இலக்கியபணியாக கதை கவிதை கட்டுரைப்போட்டியில் வென்றவர்களையும் சிறப்பித்தார்கள்..நாற்காலியில் அமரவைத்து பொன்னாடை போர்த்தி சான்றிதழ் கேடயம் கையில் அளித்து(அதை பத்திரமாய் எடுத்துப்போக கூடவே ஒரு ப்ளாஸ்டிக்கிலான பெரிய பையும் தந்து) இறுதியில் சிற்றுண்டியும் இட்டு அனுப்பினார்கள்!
 
சிறுகதையில்  இரண்டாமிடமும் கவிதை கட்டுரைகளில் முதல்பரிசும் என
மூன்று பரிசுகள்  எனக்குக்கிடைத்தன!
 
 
பெரிய பெரிய பத்திரிகைகள் சிறுகதை கவிதை கட்டுரைப்போட்டிகளை வருடாவருடம் நடத்துகின்றன அவற்றில் சிலவற்றில் சின்னச்சின்ன பரிசினை வென்ற அனுபவம் எனக்கு உண்டு. அமெரிக்கப்பத்திரிகையான தென்றல் சிறுகதைப்போட்டி நடத்தியபோது கதை கிடைத்தமைக்கும் பரிசீலனையில் இருப்பதையும் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டதையும் கச்சிதமாக செய்தார்கள்..பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுப்பத்திரம் தவிர சிறுபரிசுப்பொருட்கள் புத்தகங்கள் இவைகளை சன்மானத்தொகைக்கான காசோலையுடன் அனுப்பிவைத்தார்கள். கூடவே ஆசிரியர் கைப்பட எழுதிய பாராட்டுக்கடிதம்! தென்றல் பெயரில் மட்டுமல்ல அவர்களின் செயலிலும் தெரிந்தது!
விகடன் , அதன் பவழவிழாவினை(1997) காமராஜர் கலைஅரங்கில் மிகப்பிரமாதமாக நடத்தி அப்போது விகடனில் வைத்த போட்டியில் வென்றவர்களுக்கு அரங்கில்முதல் இரண்டு வரிசைகளில் உட்காரும் நாற்காலியில் பெயர் எழுதிவைத்து மேடைக்கு பணியாளருடன் கூட்டிச்சென்று இன்னாரின் இந்தபடைப்புக்கு இன்ன பரிசென்று(எனக்கு அப்போது படக்கதைப்போட்டியில்முதல்பரிசு 30ஆயிரம் ரூபாய்) கூறி சான்றோர் பெருமக்களைவிட்டு மாலை அணிவித்து மற்ற மரியாதைகளை செய்தார்கள்..
இலக்கியபீடம் என்றொரு பத்திரிகை அதற்கு திருவிக்கிரமன் ஆசிரியர் எண்பதுகளை எப்போதோ கடந்துவிட்டவர் அவரும் போட்டிக்கான பரிசளிப்புகளை விழா நடத்தி படைப்பாளிகளை கௌரவிக்கிறார் இன்னமும்,இதைப்பல சிரமங்களிடையே செய்துவருகிறார். ஆனால் பெரும்பாலான பிரபல பத்திரிகைகள் பரிசு கிடைத்த விவரத்தைக்கூட சில நேரம் தெரிவிக்கத்தவறிவிடுவார்கள் நாமாக புத்தகம் வாங்கிப்பார்த்தால்தான் தெரியவரும்:) இடம் ஏற்பாடு செய்து அனைவரையும் அழைத்து பரிசளிப்பு விழா நடத்த தயங்குகின்றார்கள் ஏனென்றால் இதில் பொறுப்பு மிக அதிகம் செலவும் கூட! நான் ஒரு பத்திரிகையில் சிறுகதைக்குப்பரிசுவாங்கினபோது,”ஆசிரியரே நீங்கள் எனக்கு சன்மானத்தொகை அனுப்பாவிட்டால் பரவாயில்லை நான் பங்கேற்று வென்றதற்கு சான்றிதழாவது அனுப்புங்கள்’ என்று நச்சரித்து வாங்கிக்கொண்டேன்!
படைப்பாளிக்கு பணம் இரண்டாமிடம்தான். பாராட்டுப்பத்திரம்தான் ஒரு படைப்பாளி எதிர்பார்ப்பது.
அந்தவகையில் பெங்களூர் தமிழ்ச்சங்கம் நேற்று நடத்திய விழா உன்னதமானது!(ஆனால் சற்று அவசரமாய் ஏற்பாடு செய்துவிட்டார்கள் முன்கூட்டி சொல்லி இருந்தால் அத்தனை பெங்களூர் நட்புகளையும் அழைத்திருக்கலாம்!)
இணைப்பு..சில படங்கள்.
தேர்வான கதையை  முதலில் இங்கு விரைவில் அளிக்கிறேன்!


 







--

 

  
 

20 comments:

  1. \\படைப்பாளிக்கு பணம் இரண்டாமிடம்தான். பாராட்டுப்பத்திரம்தான் ஒரு படைப்பாளி எதிர்பார்ப்பது.//
    உண்மைதான் படைப்பாளிகளுக்கு தேவை அங்கீகாரம் எல்லோரும் எதிர்பார்பதுதான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மகிழ்ச்சி ஷைலஜா:). பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete

  3. எனக்கு மெல்லிய நினைவு வருகிறது. நான் முன்பு பெங்களூரில் இருந்தபோது (1959முதல் 1965 வரை ), மதுரைத் கடைத் தமிழ் சங்கம் போல் ஒன்று நிறுவ வேண்டும் என்று தமிழகத்தின் முக்கிய தமிழ்ப் பாவலர்களை ( ஐம்பது பேருக்கு மேல் ) வரவழைத்து இரண்டு மூன்று நாட்கள் அமர்க்களப் படுத்தி விட்டார்கள்.உங்கள் பதிவிலிருந்து அந்தக் கனல் இன்னும் இருக்கிறது என்பதை அறிய மகிழ்ச்சி அளிக்கிறது. பரிசுகள் வென்றதற்கு உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  5. இனிய வாழ்த்துகள் ஷைலஜாக்கா..

    ReplyDelete
  6. அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சிறுகதையில் இரண்டாம் பரிசு பெற்றவர் நீங்கள்தானா! பெயரும் விலாசமும் நீக்கிவிட்டுத்தான் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கும் ஃபைலை எனக்கு அனுப்பிவைத்திருந்தார்கள். தேர்ந்தெடுத்த எனக்கே நீங்கள்தான் பரிசுக்குரியவர் என்பது இப்போதுதான் தெரியும். மீதி இரண்டு பரிசுகளும்கூட உங்களுக்குத்தானா? வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அல்சூர் ஏரியில் மிதந்தபடி கவிதைகள்.... நினைத்தாலே இனிக்கிறது அக்கா... மூன்று பரிசுகள் என்ன... உங்கள் எழுத்துக்கள் 3 ஆயிரம் பரிசுகளையும் வெல்லத் தக்கவை. மனம் நிறைய மகிழ்ச்சியுடன் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் ஷைலஜா.

    ReplyDelete
  10. //Amudhavan12:24 AMசிறுகதையில் இரண்டாம் பரிசு பெற்றவர் நீங்கள்தானா! பெயரும் விலாசமும் நீக்கிவிட்டுத்தான் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கும் ஃபைலை எனக்கு அனுப்பிவைத்திருந்தார்கள். தேர்ந்தெடுத்த எனக்கே நீங்கள்தான் பரிசுக்குரியவர் என்பது இப்போதுதான் தெரியும். மீதி இரண்டு பரிசுகளும்கூட உங்களுக்குத்தானா? வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.

    //

    நன்றி அமுதவன்...தேர்வு செய்தவர் நீங்கள்தான் என இப்போதுதான் தெரியும் எனக்கும்!! பழைய நட்பு அல்லவா விட்டுப்போகுமா என்ன? நன்றி மிக.ஆம் மற்ற இரண்டில் முதல்பரிசு கிடைத்தது தங்களைப்போன்ற நல்ல நட்பு உள்ளங்களின் நல் வாழ்த்துகளால்தான்! விழாவிற்கு நீங்கள் வர இயலவில்லையா சிறப்பாக செய்தார்கள்.

    ReplyDelete
  11. .M Balasubramaniam6:03 PM
    எனக்கு மெல்லிய நினைவு வருகிறது. நான் முன்பு பெங்களூரில் இருந்தபோது (1959முதல் 1965 வரை ), மதுரைத் கடைத் தமிழ் சங்கம் போல் ஒன்று நிறுவ வேண்டும் என்று தமிழகத்தின் முக்கிய தமிழ்ப் பாவலர்களை ( ஐம்பது பேருக்கு மேல் ) வரவழைத்து இரண்டு மூன்று நாட்கள் அமர்க்களப் படுத்தி விட்டார்கள்.உங்கள் பதிவிலிருந்து அந்தக் கனல் இன்னும் இருக்கிறது என்பதை அறிய மகிழ்ச்சி அளிக்கிறது. பரிசுகள் வென்றதற்கு உங்களுக்குப் பாராட்டுக்கள்.

    //

    வாங்க பாலு சார்.ஆமாம் இன்னமும் சங்கம் தன்பணிகளை சிறப்பாக செய்கிறது நன்றி தங்கள் வாழ்த்துக்கு

    ReplyDelete
  12. கோமது அரசு. கணேஷ் அமைதிச்சாரல் தனபாலன் அருணா கவியாழி ் கண்ணதாசன் ராமல்ஷ்மி!
    தங்கள் யாவருக்கும் மனம் கனிந்த நன்றி....

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அக்கா
    எப்படி இருக்கீங்க? நீண்டநாட்களுக்கு பிறகு உங்கள் தளம் வருக்கின்றேன்

    ReplyDelete
  14. தோழிக்கு வாழ்த்துக்கள் மேலும் பல பரிசுகளை குவிக்க

    ReplyDelete
  15. //(ஆனால் சற்று அவசரமாய் ஏற்பாடு செய்துவிட்டார்கள் முன்கூட்டி சொல்லி இருந்தால் அத்தனை பெங்களூர் நட்புகளையும் அழைத்திருக்கலாம்!)//

    எனக்கு தெரிந்திருந்தால் கட்டாயம் வந்திருப்பேன்.
    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.பரிசு பெற்ற கதையை படிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  16. படிக்க சந்தோஷமாக இருந்தது

    ReplyDelete
  17. வாழ்த்துகள்

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள் ஷைலஜா!

    ReplyDelete
  20. ரஞ்சனிநாராயணன் திகழ் ராஜா தமிழிளங்கோ சரளா பார்த்தசாரதி ராம்வி...உங்கள் அனைவர்க்கும் தாமதமான ஆனால் உளமார்ந்த நன்றி//ராம்வி விரைவில் சந்திப்போம் நாம்..ராஜா...உங்க வலைப்பூ வருகிறேன் நலம்தானே?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.