உயிர்களிடத்து அன்பு வேண்டும் .
ஷைலஜா
வாஷிங்டனிலிருந்து வந்து இறங்கி முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை. ஸ்ரீதரனுக்காக காத்திருந்த முதல் அதிர்ச்சியான விஷயம், அவர் அனுமதி இல்லாமல் மகன் கிரீஷ் அவருடைய வீட்டை விற்றதுதான்.
‘பையன் பெயருக்குத் தானே உரிமைப் பத்திரம் தருகிறோம், தன்னை மீறியோ,கேட்காமலோ என்ன செய்யப் போகிறான் என்று நினைத்தது...
Sunday, November 16, 2014
Thursday, November 13, 2014
நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும்!

குழந்தைகள் தினக்கவிதை!
நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும்நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும்உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும்உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்இளமையிலே கல்விதனை கற்றிடல் வேண்டும்இன்முகத்துடனே பழக அறிந்திடல் வேண்டும்தெளிவுடனே ஏடுகளைப்படித்திடல் வேண்டும்தேர்ந்த கல்வி கொண்டபின்னும்...
Monday, November 10, 2014
வாசி வல்லீர் இந்தளூரீரே! - வாழ்ந்தே போம் நீரே!

அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனைஆலிமா முகிலை வாலி காலனைஇந்த ளூருறை எந்தைபெம் மானைஈசன் நான்முகன் வாசவன் தலைவனைஉள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியைஊரகம் நின்றருள் நீரகத் தடிகளைஎவ்வுள் மாயனைத் தெய்வநா யகனைஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியைஐவாய் அரவில் அறிதுயில் அமலனைஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே !ஓதநீர் ஞாலத் துழலும்ஔவியப் பிறப்பில் அழுந்தி...
Sunday, November 02, 2014
தேனமரும் பூ மேல் திரு.
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பேர் இவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து
என்கிறார் மணவாள மாமுனிகள்.
முதலாழ்வார்கள் மூவரில் இன்று பேயாழ்வாரின் திருநட்சத்திரம்ஐப்பசி சதயம்.
.பேய்க்காற்று பேய்மழை என்போம் அல்லவா அதிகமாய் காற்றும் மழையும் வரும்போது? அப்படித்தான் இந்த ஆழ்வாரும் மால்மீது பேய்க்காதல்கொண்டவர் பேய்பக்தி பூண்டவர் அதனால்...
Saturday, November 01, 2014
அன்பே தகளியாக..

பொய்கை ஆழ்வார்! பூதத்தாழ்வார்! பேயாழ்வார்!
(படம் நன்றி தினமலர்)
முதலாழ்வார்கள்: எனப்படும்
இம்மூவரும் ஒரே ஆண்டில், அடுத்தடுத்த நாள்களில் பிறந்துள்ளனர்.
ஐப்பசி அவிட்டமான இன்று பூத்ததாழ்வார் திருநட்சத்திரம்.
வேறு வேறு ஊர்களில் பிறந்த இவர்கள் எப்படி ஒத்த எண்ணமுடையவராய்இருந்தனர்? மூவரும் ஒன்றாக பள்ளியில் படித்தனரா? அதுதான் இல்லை. இவர்கள்மூவரும் ஒருவரை ஒருவர் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. ஆனால் இவர்கள்மூவரின் நோக்கமும், சிந்தையும் எம்பெருமானைப் பற்றியே இருந்தன.
‘அன்பே...
Subscribe to:
Posts (Atom)