Social Icons

Pages

Friday, August 07, 2015

வங்கம் தந்த தங்கமே!





ரவீந்திரநாத் தாகூர்!

பாரததேசத்தின் புகழை உலகமறியச்செய்த  உன்னத மனிதர்  ரவீந்திரநாத் தாகூர்! வங்கம்  தந்த தங்கக்கொடை! கீதாஞ்சலி எனும் சாகாவரம்பெற்ற கவிதைத்தொகுப்பினை அளித்த கவிமேதை!

வங்கமொழியில்  அங்கொன்றும் இங்கொன்றுமாக தாம் எழுதிய கவிதைகளைத்தொகுத்து  ’கீதாஞ்சலி ’என்றபெயரில்  வெளியிட்டார்  தாமே ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து உலக இலக்கிய மேதைகள் அனைவரையும் திரும்பிப்பார்க்கவைத்தார்  ரவீந்திரநாத் தாகூர்.

பல ஆங்கில அறிஞர்கள்  தங்களிடம்  அவர்  கீதாஞ்சலியின் வங்கமொழியாக்கத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக்  கேட்டுக்கொண்டபோது  அவர்கள் இப்படிப் பணிவோடு மறுத்துக்கூறினார்கள்

”கவிப்பேரரசே! கீதாஞ்சலி உங்கள் உயிர்மூச்சின் வெளிப்பாடு அதனை நீங்கள் மொழிபெயர்த்தால் அந்த ஜீவன் இருக்கும்!:


 உண்மைதான்! வங்கமொழியின்  அதே உயிர்த்துடிப்பு ஆங்கிலமொழியாக்கத்திலும் வெளிப்பட்டது. படித்த அங்கில அறிஞர்கள் வியந்தனர்.!

 இந்தக்கவிதைகளை ஆங்கிலமொழி இலக்கிய மேதைகள் முன்னிலையில்  ஆங்கிலேயநாட்டிலேயே அரங்கேற்ற வேண்டுமென அனைவரும் ஆலோசனை சொல்லினர்.அதன்படி ரவீந்திரநாத் தாகூர் லண்டன் மாநகர் சென்றார்.. அங்கு ஆங்கில இலக்கிய மேதை கீட்ஸ் போன்றவர்களுடன் அன்பொழுகப்பழகினார் 

தாகூரின் கீதாஞ்சலி ஆங்கிலமொழியிலான தொகுப்புக்கவிதை அரங்கேறியது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு  கீதாஞ்சலிக்குக் கிடைத்தது.

அறிவாயுதமே  வறுமையை விரட்டும் சாதனம் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த தாகூர் சாந்திநிகேதனைப் படைத்தார் விஸ்வபாரதி என்ற அந்த பல்கலைக் கழகம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை  உருவாக்கி அனுப்பிக்கொண்டிருக்கிறது.

 தாகூரின் விஸ்வபாரதிக்கு காந்தி நேரு இந்திராகாந்தி போன்ற அரசியல்  பிரமுகர்கள் வந்திருக்கின்றனர்.

ஒரு மரத்தடியில் ஐந்தே மாணவர்களை வைத்துக்கொண்டு வகுப்பை நடத்ததொடங்கினார் அன்று! இன்றும் அந்தப்பகுதியை அதன் இயற்கைத்தன்மை மாறாது  பாதுகாக்கின்றனர்.

 தாகூர் சிறந்த ஓவியரும் கூட! ஓவியப்பள்ளி ஆரம்பித்து  மாணவர்களுக்கு ஓவியக்கலையை கற்பித்திருக்கிறார்.அவரது ஓவியங்கள் லண்டனில் கண்காட்சியாக்கிப்  பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


விஞ்ஞானி ஐன்ஸ்டின் இலக்கியமேதை பெர்னாட் ஷா ஆங்கிலக்கவிஞர் கீட்ஸ் போன்ற உலக மகா அறிஞர்களுடன் எல்லாம் நெருங்கிப்பழகும் வாய்ப்பு பெற்றிருந்த தாகூர் கிராமமக்கள் ஏழை எளியவர்களிடமும் மிகுந்த அன்போடு இருந்தார் என்பதற்கு  ஒரு நிகழ்வை மட்டும் இப்போது  பார்ப்போம்.

கிழக்கு வங்காளத்தில் பிரபல நகரம் டாக்கா.  அங்கே இலக்கிய
 மாநாட்டு கூட்டவேண்டுமென சில றிஞர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
 கவியரசர் ரவீந்திரநாத் தாகூரை அதற்குத் தலைமை தாங்க
 அழைத்திருந்தார்கள்.  அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார் 

கவியரசர்.,அப்போது அவருடைய வேலையாள் ஒருவனுடன்  தனது 
 கிராமத்தில் ஏதோ அலுவலக வேலையா  தங்கி இருந்தார்மாநாடு
 கூடுவதற்கு இரண்டுநாட்கள் முன்பாக வரவேற்புக்  குழுவின் 
செயலாளருக்கு ரவீந்திரரிமிருந்து இப்படி தந்தி ஒன்று வந்தது
 
.” அசந்தர்ப்பமாகிவிட்டது வர இயலவில்லை

 
செயலாளர்  கவியரசரோடு நெருங்கிப்பழகியவர்அதனால் விஷயம்

 என்னவென்று   நேரில் காண விரும்பினார் அந்தக்கிராமத்துக்குப் 

புறப்பட்டார்.
 
அங்கே நுழைந்தபோது மனிதசந்தடியே இல்லை.  ஊர் வெட்டியான் 

மட்டும் தட்டுப்பட்டான்.  அவனை விசாரித்ததில்  அங்கே கிராமம்

 முழுவதும் காலரா கண்டிருப்பது தெரிய வந்தது.

 காலரா  என்பது அந்த நாளில் கலவரமான நோய்.அதனால் திகிலுடனே 

ரவீந்தரரின்  வீட்டுக்குள் நுழைந்தார் நண்பர்.
 
 கவியரசர் அவரைக்கண்டதும்வரவேற்றார்.கீழே ஓர்  அறைக்கு அவரை 

அழைத்துப்போய்,” வேலைக்காரருக்குக் காலரா போட்டிருக்கிறது.”


 என்று தெரிவித்தார்.  
 
நண்பருக்கு ஒரே நடுக்கம்.
 
 ரவீந்தரரே தன்கையால்   நண்பருக்கு பழமும் சுடச்சுடப்பாலும்

 கொண்டுவந்து கொடுத்தார்.

மறுபடி வேலைக்காரரை கவனிக்கபோய்விட்டார்நண்பருக்கு மிகவும்

 ிகைப்பானது.  இரவு அவருக்குத்தூக்கமே வரவில்லைவிடிந்தபோது

 ரவீந்திரர உதயகீதம் பாடிக்கொண்டே நண்பரின் அறைக்குள் நுழைந்தார்.

 
சிரித்தபடி,” ஆள் தேறிவிட்டான்ஆனாலும் மிகவும் பலவீனமாகவது சரியா சொல்லுங்கள்?” என்று

 கேட்டார்.


கவியரசருக்கு எளியவரிடம் எத்தனை அன்பு உண்டு என்பதையும் 
 அவரது நெஞ்சுரத்தையும் அறிந்து நண்பர் வியந்தார்காலரா எனக்கேட்டதுமே  வேலை ஆளைப்பார்க்கவே தான் அஞ்சியதை நினைத்து 
வெட்கினார்.   ஊர் திரும்பியதும் அந்த மாநாட்டை  இரண்டு
 மாதங்களுக்கு  ஒத்திப்போட்டுவிட்டு பிறகு கவியரசர் 
தலைமையிலேயே அதனை நடத்தினார்.

  கருணை மனம் கொண்ட கவியரசரின்  போராட்டசிந்தனைகள்தான் கீதாஞ்சலியாக  உருப்பெற்றது.  

சுதந்திரம் கிடைக்குமுன்பாகவே அதாவது 1941ம் வருடம் ஆகஸ்ட் ஏழாம் தேதி தன் இறுதிப்பயணத்தில் ஆழ்ந்த அந்த நல்லமனிதர் தனது கீதாஞ்சலியில் வர்ணிக்கும் வறியநிலையானது, சுதந்திரம்கிடைத்துஇத்தனைவருடங்களாகியும்  மாறாமல்பெருகிக்கொண்டு போகிறது என்றால் நாம் பெற்ற சுதந்திரத்தைப்பேணிக் காக்கவில்லை என்றுதானேபொருள்?

தாகூரின் கீதாஞ்சலியிலிருந்து...

https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
 எங்கே மனம் அச்சமற்றுத்திகழ்கிறதோ
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ

குறுகிய சாதி சமயப்பிளவுகளால்
எங்கே உலகம் உடையாமல் இருக்கிறதோ
எங்கே உண்மையின் அடியாழத்திலிருந்து
சொற்கள் உதிக்கின்றனவோ

எங்கே தளராத முயற்சி
பூரணத்தை நோக்கிக்கை நீட்டுகிறதோ
தெளிந்த பகுத்தறிவு நீரோடை
மூடப்பழக்கவழக்கம் பாலை மணலில்
பாய்ந்து வற்றாமல் எங்கே இருக்கிறதோ

என்றென்றும் விரிந்து செல்லும்
எண்ணத்தை, செயலை, நோக்கி
என் உள்ளத்தை
எங்கே உன்னருள் அழைத்துச் செல்கிறதோ
அந்த சுதந்திரச் சுவர்க்கத்தில்
என் தந்தையே,
எனது நாடு விழித்தெழுவதாக!

6 comments:

  1. மிக அருமையான பதிவு...

    ReplyDelete
  2. அருமையானதொரு பகிர்வு.

    ReplyDelete
  3. மிக அருமையான தொகுப்பு.

    ReplyDelete
  4. உண்மையை வெளிகொணரும்
    உண்ணதமான அறிவுச்சுடரே
    உனக்குள் மறைந்திருக்கும்
    உற்சாகங்களை உணர்த்தி
    உலகிற்குதெரிவிக்கும் கவியே
    நீர்தரும் விளக்கங்கள்
    நீங்கா நினைவிருக்கும்
    நீருரைக்கும் கருத்துக்கள்
    நீடூடி வாழட்டும் என வாழ்த்துகிறேன்
    வாழ்கபல்லாண்டு.

    ReplyDelete
  5. கருத்து தெரிவித்த அனைவர்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.