Social Icons

Pages

Friday, April 22, 2016

பூமியைவாழவிடு!

பூமியைவாழவிடு!  World Earth Day!



புன்னகையை  முற்றிலும்
 இழக்குமுன்னமே
எனக்குப் புதை குழி
தோண்டப் போகிறீர்களா மனிதர்களே?
புகையிலைப் படுக்கையை
தயார் செய்து
ஆலைப் புகையிட்டு
பிளாஸ்டிக் மாலை அணிவிக்க
ஆயத்தமாகி விட்டீர்கள்!

என் கொடையாய் ஆறுகளைத்தந்தேன்
அழகுமிகு சோலைகளை உருவாக்கினேன்
பூலோக சுவர்க்கமாய் மாற்றினேன்
கனிகளை காய்களை பயிர்களை வளர்த்தேன்
வனங்களை அமைத்தேன் விலங்கு
இனங்களுக்கு அடைக்கலம் தந்தேன்


முன்னொருகாலத்தில்
இங்குஎன் குழந்தைகளான
 ஆறுகளில்நீரின் ஓயாத ஓட்டம்
பறவைகள்  பறந்துதிரிந்தபின்
இலைகள் அடர்ந்த மரங்களில் வசித்தன.
வனங்களும் பச்சைவயல்களும்
வயல் வரப்புகளும் வாய்க்கால்களும்
வளமாகவே  என்றும்இருந்தன

நாட்டுப்பற்றுகொண்ட
தியாகிகளையும் தலைவர்களையும்
புலவர்களையும் புரவலர்களையும்
என்று நல்லோர்கள் பலரைக்
கண்ட புண்ணியத்தாய் நான்!

இன்று..

தர்மம் தலைகுனிகிறது
ஊழல் உற்சாக ஊற்றாய்
ததும்பி வழிகிறது.

அஹிம்சை அழிந்து
அன்பும் மனிதநேயமும்
அற்பமாகிவிட்டது.

தீவிரவாதிகளுக்குப்
புகலிடமாய் இந்த
பூமித்தாய் ஆகலாமா?.

என்னைக் கண்டபடி
கூறு போட்டு
அடுக்குமாடிக் கட்டிடங்களை
அண்ணாந்து பார்க்குமளவுக்குக்
கட்டிவிட்டீர்கள்

என்கோபத்தை
 கோபக் குலுக்கலில்
சிறுபுருவ நெரிப்பில்
நியாயமாய் தெரிவித்தேன்
புரிந்து கொள்ளவில்லை நீங்கள்
.அல்லது
புரிந்தும் புரியாதது போல்
அலட்சியமாய் இருக்கின்றீரோ?
இரண்டுமே மெய்தான்.
.
என் மூச்சு எங்கே எனத்
தேடுகிறீர்களா என்ன?
அதைத்தான் கார்பன் மோனாக்சைடில்
பத்திரப்படுத்தி விட்டீர்களே!


தாயென்கிறீர்கள் என்னை
பேணிக்காக்கத்தான்
மறந்துவிட்டீர் மைந்தர்களே!


ஆறுகளை நீரற்ற சகதி 
சேறுகளாக்கிவிட்டீர்,
 விலங்கினங்களைத்துரத்தி
வனத்தினில்புகுந்து
வான் உயரக்கட்டிடங்கள் எழுப்ப
 மானிடர்கள் வந்துவிட்டீர்கள்.



விட்டுவிடுதலையாகிப்பறந்த
 சிட்டுக்குருவிகள் எல்லாம்
விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவுகளில்
கண்கட்டுவித்தைபோல
காணாமல்போய்விட்டனவே!

ஓசோன் ஓட்டை ஆனதனால்
உலகின் வெப்பமும் கூடியதே!
பருவத்தில்பெய்தமழையை
 வருமோஇனி மழை
என ஏங்கி நின்று
வான்பார்த்து
வருத்தத்தில்
 வாடி நிற்கிறீர்கள்!

மேனியெங்கும் பாளம்பாளமாய்
வெடிப்புவந்து  வேதனையுற்று
மூச்சுவிடவும் முடியாமல்
முனகும் இந்த பூமித்தாயினை
தவிக்கவிடும் மானிடரே!
எந்தையும்தாயும்
மகிழ்ந்துகுலாவி
இருந்த நாடென்று இதனை
உமது சந்ததியினருக்குக்
கைகாட்டிடவும்
பொய்யாய்க்கனவாய்
பழங்கதையாய்
பூமித்தாயின்  வரலாறு
 போகாதிருக்கவும்
புரிந்துகொண்டு வாழுங்கள்.



வெறும் வேஷமிட்டுவாழும்
வாழ்க்கையினின்றும்
வெளியே வாருங்கள்!
வேருக்குத்தான் நீர் தேவை எனும்
விவேகச்சிந்தனைஉங்களுக்கு
விரைவில்தானே வந்துவிட்டால்
பூமித்தாயாம் நானும்தான்
பூமியைவாழவிடு’ என்று
பூகம்பமுழக்கமிடமாட்டேன்
பூப்போலே  பூமண்டலத்தை
புரிந்து என்றும் காத்திடுவேன்!


-- (  முன்புபரிசுபெற்றகவிதையை  கவிஞர்வைரமுத்து பாராட்டியதும் இணைப்பில்)

2 comments:

  1. அருமையான கவிதை வரிகள் . பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி எம் பி சார் நலமா?

      Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.