Social Icons

Pages

Monday, July 16, 2007

எண்ணிரண்டு பதினாறுவயது!

எட்டுபற்றி எழுதசொல்லி டாக்டர் எப்போதோ எனக்கு அழைப்பு விட்டிருந்தார்.இப்போது அண்ணா கண்ணன் வேறு எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்துவிட்டார்! இனியும் சும்மா இருப்பது சரி இல்லை!

வலைப்பக்கம் வராமல் அடிக்கடி ஓரங்கட்டும் என்னை அவ்வபோது ஊக்கமளித்து எழுத வைப்பவர்கள் டாக்டர் விஎஸ்கேயும் கண்ணபிரான் ரவியும் ஆசிஃப் மீரானும் தான் ! நன்றி அந்த அருமை நண்பர்களுக்கு!


1.எட்டுவயசுல நடந்த ஒருநிகழ்ச்சி. ஸ்ரீரங்கம்கிழக்கு ரங்கா பள்ளிகூடத்துல படிச்சிட்டு இருந்தப்போ கூடப்படிச்சபொண்ணு(பேர்மீனா)கணக்கு நோட்டை வாங்கி காப்பி அடிச்சி ஹோம் ஒர்க் பண்ணிட்டுத் தர்ரதா வீட்டுக்குக் கொண்டுவந்தேன்.வரவழியிலயே
அதை எங்கயோ தொலச்சிட்டேன் ..அவகிட சொன்னேன். 'தொலைசிட்டியா நீ ?இருஇரு எங்க பெரியப்பாகிட்ட உன்னைமாட்டிக்கொடுக்கறேன்'னு பயமுறுத்தினா மீனா.

அவள்பெரியப்பா போலீஸ்காரர்.மல்லிகைப்பூ அக்ரஹாரத்தை ஒட்டிய போலீஸ் குவார்ட்டஸ் வாசலில் , காக்கி உடை அவரைவிட விறைப்பாய் தெரிய கொடுவாள்மீசையோடு பாத்தாலெ நடுங்கறமாதிரி இருப்பார். ஐயோ போலீஸ் பெரியப்பா என்னை
வி஢லங்குமாட்டி ஜெயில்ல போட்டுடுவாரா?

வீட்டிற்கும் தொலைத்த கதை சொல்லவில்லை.'உனக்கு ஒண்ணூம் இழுங்கா வச்சிக்கத் துப்பு இல்லை' என் அர்ச்சனை விழுமெனும் பயம்!

அம்மாமண்டபம்போகும்வழியில் ஒருசின்ன பிள்ளையார்கோயில்வரும்..

அங்கேபோனேன்.."பிள்ளையாரப்பா!மீனாவோட கணக்குநோட்டு
தொலைஞ்சிபோச்சு ..அதுக்கு அவ போலீஸ்பெரியப்பாகிட்ட சொல்லி என்னை ஜெயில்லபோடபோறா போல இருக்கே?.அந்த பெரியப்பா உயிரோட இருந்தா தானே என்னை ஜெயில்ல போடுவாரு அவரைஉயிர் போகச் செய்துடு..அவரை சாகடிச்சிடு' னு கண்ண மூடி வேண்டிட்டு நிமிர்ந்தா......... எதிரே மீனா ! பக்கத்துல போலீஸ்காரபெரியப்பா!

அய்யோ!

தலைதெறிக்கஓட இருந்தவளை பெரியப்பா லபக் ன்னு பிடிச்சார் ."எங்கஓடறே?"

"வ வந்து..." (இப்போதும் அன்னிக்கு என் கண்முழி நெட்டுப்போனதையும் கைகால் நடுங்கியதையும் மறக்கமுடியவில்லை)

"கணக்கு நோட்டைதொலைச்சிடியாமே நீ ?சொல்லிச்சு எங்கவீட்டு பாப்பா..."

""ஆஅ ஆமாஅ. தெ தெ தெரியாஆஆம...".(பிள்ளையாரேஇப்பொகூட லேட் இல்ல ..இங்க இவருதலைக்கு
மேல தொங்கிட்டு இருக்கறபெரிய வெங்கலமணீயை டமால்னு தள்ளிவிட்டு அவர் மண்டைய உடச்சிடு.. )

கண்ணமூடினவளின் காதுல தேனா ஒருகுரல்!

'கவனமா இருக்கணும்ம்மா.இனிமே தொலைக்காதே என்ன? போனாப்போவுது நீயும் சின்னபுள்ளதானே?மீனாகூட பழைபடி பேசுபழகு..அவளும் பேசுவா"

எனக்குபோன உயிர் திரும்பி வந்தது!

2
பத்துவயசுல ஒருநாள் கைதுறுதுறுத்தது.அப்பாவிடம்போய் 'விகடனுக்கு நான் ஒருஜோக் எழுதப்போறேன்' ன்னதும் இதையே பெரிய
ஜோக்காய் நினைத்து வீடே சிரித்தது. உடனே சீரியஸா யோசிச்சி ஜோக் எழுதி அது விகடனில் பிரசுரமும் ஆகிவிட்டது!என்ன ஜோக்குனு கேக்கறீங்களா?.ஒரு ஆளு சாமியார்கிட்ட போயி குருவே நான் உங்க சிஷ்யனா இருக்கட்டுமா என்று கேட்கிறான்.
குரு அதுக்கு "நீ இங்க ஆஸ்ரம்த்துல சேர்ந்து சீக்கிரமா எழுந்து கடினமா வேலைசெய்து பயிற்சி செய்யணும்,"அதுஇதுன்னு சொல்லிட்டே போனாரு
இவன் யோசிச்சான், "சிஷ்யனாகும்னா இவ்ளோ கஷ்டமா? அப்போ நான் குருவா இருக்கேனே!"என்றான்.

என்ன சிரிப்பு வரலயா? :) என்னவோ போங்க பத்திரிகை உலகில் நான் கால் பதிக்க இதுதான் காரணம்!

3
அப்போ 16வயசு...எண்ணிரண்டு பதினாறுவயதுன்னு பதிவுக்கு தலைப்பு வைக்கக்காரணம் இதைப்படிச்சா புரிஞ்சிடும்!!

ப்ளஸ்டூபடிக்கறப்போ ஆண்டுவிழா தினம் வருவதால் வழக்கம்போல வகுப்பை கட் அடிச்சிட்டு நாடக ரிகர்சலில் மூழ்கிட்டேன்.

நாடகத்துல எனக்கு18வயசு ரிக்ஷாக்காரபையன் வேஷம்.. எங்க அப்பாவின் நண்பர் நட் ராஜன் எனும் நட்டுமாமாஅப்போ பிரபலமேக்கப்கலைஞர் ..அவருகிட்ட ஆண் வேஷம் போட்டுகிட்டேன்..கட்டம்போட்ட லுங்கிகட்டி, லூஸா கருநீலக்கலர்ல ஷர்ட்டு முழங்கைவரை அதை மடிச்சிவிட்டுட்டேன்.நட்டுமாமா என் தலைமுடியை வளைச்சிஎன்னவோ இங்க அங்க பின் குத்தினாசர்ர்ர்ர்னு ஒருபாட்டிலேந்து ஏதோ திரவத்தை தலையில் பீச்சினார்.கமகமன்னு வாசனை!தலைமுடியை ஜோரா கிராப்பா மாத்தி கைல துண்டுபீடி(பத்தவைக்காததுங்க) கொடுத்து,
அவரோட கருப்புகலர் ஸ்டாண்டர்ட் கார்ல நிறைய சத்தத்தோட பள்ளிக்கூட வாசலில் என்னை கொண்டுவிட்டாரு. நேரா
எங்க சிநேகிதிங்க தங்கீ இருந்த மேக்கப்ரூமுக்குப்போனேன்.. அங்கே ஒருத்தியும் காணோம்..

கண்ணாடி முன்னாடிநின்னு லுங்கியமடிச்சிகட்டிட்டு வாய்ல வெறும்பீடிவ ச்சிட்டு நாடக டயலாக்கை சொல்லிப்பாத்தேன் "இப்போ இன்னாங்கற கீசிடுவேன் கீசி அக்காங்!.".

வாவ்!
நல்லா வர்தே:)

அவசரமா பாத்ரூம்போகவேண்டி இருக்கவும் அங்க இருந்த அட்டாச்டுபாத்ரூம்ல நுழைஞ்சேன். அஞ்சுநிமிஷத்துல
திரும்பவந்தா கதவைத்திறக்கமுடியல. பட்பட்னு கதவதட்டினேன் .யாரோ வெளில தாழ்ப்பாள் போட்டுட்டாங்கன்னு தெரிஞ்சி,
".அய்யோதிறங்க யாராச்சும்?" கத்தினேன்

சடால்னு கதவுதிறக்க,.என்னைபாத்து ஒருத்தி "அய்யோ பொண்ணுமாதிரி குரல் கொடுத்து ஏமாத்றான்.. பிடி இவனை.. லேடீஸ் ரூமுக்குவந்து கலாட்டாவா பண்றே?"

"யேயேய்! நிறுத்துடி நாந்தான்.."ன்னு மீசையை எடுத்து தலையை கலைச்சேன்.

"அடப்பாவி நீயா என்னடி இது பையன் மாதிரியே தத்ரூபமா மேக்கப்?"
எல்லாரும் சிரிச்ச்சாங்க, நாந்தன் சோகமாயிட்டேன். பின்ன திரும்ப எனக்கு யார் நட்டுமாமா மாதிரி மீசை ஒட்டி தலைல கிராப் அழகா செய்வாங்கன்னு..

அப்றோம் ஏதோ நானே சரி செஞ்சிஅன்னிக்கு நாடகத்துல நடிச்சி முடிச்சேன்.

4.நாடகம்னதும் சிலவருஷங்கள் முன்னே என் கணவரின் அலுவலக நண்பர்கள் எங்கள் வீட்டு மொட்டைமாடில வந்து நாடக ரிகர்சல் செய்தது நினைவுக்குவர்து. கர்னாடகாவின் அனைத்துதமிழ்நாடகமன்றங்களுக்கான நாடகப்போட்டி. என்கணவரின் நண்பர் சென்னையில் பெரிய நாடக ஆசிரியர்கிட்டேருந்து நாடகம் ஒண்ணூ கேட்டுவாங்கி இருந்தார். அன்னிக்குப் பாத்து ஹீரோயின் ரோல்ல நடிக்க இருந்தவர் ரிகர்சலுக்கு வரல.. என்னைச் சும்மா படிக்கவச்சி அவங்க உடன் நடிச்சி ரிகர்சல் நடத்தினாங்க ..நமக்கு பள்ளிகல்லூரிநாட்களில் க்ளாஸ் கட் அடித்து ட் ராமா நடத்திபழக்கமா அதனால உணர்ச்சிபூர்வமா படிக்கவும் பூரிச்சிபோயிட்டார் டைரக்டர்!

"நீங்களே அவங்களவிட நல்லா நடிக்கறீங்க நீங்கதான் ஹீரோயின்"னு என்னைஐஸ் வச்சி கட்டாயப்படுத்தி நடிக்கவும் வச்சிட்டாங்க.

நானும் கொடுத்த பொறுப்பை ஒழுங்கா செய்தேன் .

அன்னிக்கு நாடகவிழா பரிசு அறிவிப்புதினம். மொத்தம் 14நாடகங்கள்.நடித்த 30 பெண்களில் சிறந்த நடிகைக்கான பரிசினைஅப்போ அறிவிச்சி மேடைல கொடுக்கபோறாங்கன்னு கேள்விப்பட்டேன். எல்லாரும் தொழில்நடிகைகள்,நமக்கு எங்ககிடைக்கும்ன்னு நான் போகல.ஆனா என்ன ஆச்சர்யம் எனக்குத்தான் அந்தப்பரிசு .சிறந்த நடிகைக்கான பரிசு!!அதை இயக்குநர்என் சார்புல வாங்கிட்டுவந்து கொட்டறமழைல
வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்தாரு! ஒரெஒருமுறை வாங்கின அந்தப்பரிசோட நடிப்புக்கு நமஸ்காரம் சொல்லிட்டேன் ..அடுத்தமுறை பரிசோ,கல்லடியோனு ஒருபயம்தான்!!

5.ராஜீவ் காந்தி இறந்ததினம் வடக்கே ரயிலில்பயணம்,, ஒருகைல ராணிமுத்து..இன்னொருகைல கைமுறுக்கு.ஜாலியா இருந்த என்னை
திடிர்னு ரயில் ஒரு ஸ்டேஷனில் நிற்கிற போது கேட்ட கலவரக்குரல் துக்கிவாரிப் போட்டது.'ராஜீவ் காந்தி சுட்டுக்கொலையாம்"
ஜன்னல்களை மூடசொன்னார்கள்
.எல்லார்முகத்திலிம் பீதி. ரயில் மட்டும் மெதுவா ஊர்ந்துபோக ஆரம்பிச்சிது..என் பெட்டில எல்லார்முகத்திலும் பிரேதகக்ளை அங்க இங்க நடக்கற கலவரங்களைபற்றி அடுதடுத்த ஸ்டேஷனில் ஏறினவங்க சொல்றாங்க.. இப்போமாதிரி அப்போ செல்போன் வந்திருக்கவில்லை..விவரம் முழுமையாதெரியல்.என்னை அனுப்பிட்டு ஊர்ல கணவருக்கு என்ன ஆச்சோனு கலக்கம்.... போகபோற ஊர்ல அவங்களுக்கு நான் எப்படி வரபோறேனோன்னு பயம்(இதெல்லாம் பின்னாடி தெரியவந்தது).

ஆனா என்னாச்சுனா எங்க ரயில்மெதுவா போனதே தவிர கலவரம் ஏதுமில்லை என்ன சாப்பாடுதான் பிரச்சினைஆனது இருந்த இட்லி சப்பாத்தி சப்ஜிகளை ஆளுக்குக்கொஞ்சமாய் பிச்சி சாப்ட்டு பசியை அடக்கி என்ன ஆனாலும் எல்லாரும் ஒத்துமையா இருந்து பாதுகாப்பாய் போவோம்னு உறுதி எடுத்துட்டோம். அதிகம்தெரியாத நிலைமல ரயில்சிநேகிதங்கள் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாய் பேசி கடைசிவரை துணையாய் இருந்தது மறக்கவே முடியாது. அப்போ எனக்கு கலவரத்துல என் உயிர் போயிடுமோன்னு லேசா மரணபயம் வந்தது..ஆனா பாருங்க இப்படி தமிழ் மணத்துல நான் எழுதணும்னு இருக்கே? விதி வலியது!(உங்களுக்கு):)

6. 1996ல் விகடனில் பவழவிழாபோட்டிவச்சாங்க..படக்கதை தொடர்போட்டிக்கு நான் அனுப்பிவச்சது தேர்ந்தெடுக்கப்படு கலைவாணர் அரங்குல விகடன் ஆசிரியர், வாலி,வைரமுத்து சுஜாதா, இன்னும் பலபெரிய தலைகள் முன்பு அந்தப்பரிசினை வாங்கினது மறக்கவே
முடியாது...அன்றிலிருந்து பிறகு சில பத்திரிகைகளில் ஜெயித்த போட்டி சேர்த்து இன்றுஇணையத்தில் வ வாச போட்டி மற்றும் அன்புடன் கவிதைப்போட்டிவரை பரிசுகள் வாங்குதில் ஒரு தனி
மகிழ்ச்சி எனக்கும் உடனே ட் ரீ ட் கேட்டு உடுப்பிகார்டன் ஹோட்டலில் ச்சனா படூரா பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் சாப்பிடும் என் நட்பு வட்டத்துக்கும்!!

7 பெங்களூரின் ஒரு கன்னட அமைப்புடன் சிலவருஷங்களாக நாங்கள் பக்கத்து கிராமங்கள் சென்று சமூகசேவை செய்துவரோம். என் பங்கு இதில்கொஞ்சம்தான் இங்கே அதை சொல்லிக்கொள்வதும் பெருமைக்கு இல்ல,.அங்கேபோனப்போ நடந்த நிகழ்ச்சியை பகிர்ந்துகொள்ள.
ஒரு தெருலபோயி பெண்கல்வி,பெண்சிசுகொலை டாகுமென்ட்ரி படம் போட்டுக்காமிச்சி கன்னடத்துல அவங்ககிட்ட நிறைய அறிவுரை சொன்னோம்.சுமார் ஆறுமணிநேரம் வெய்யில்வேற நாக்கு உலர்ந்துபோச்சு.பக்கத்துல டீகுடிக்க கடை ஒண்ணும் காணோம்.புறப்பட இருந்த போதுஒரு பெண்மணி.'வந்துட்டு சும்மா போறீங்களே இவ்ளோதூரம் பேசிட்டு?" என்றாள்.நான் அவ்சர அவசரமா,"சிரமம் எதுக்கு உங்களுக்கு டீ காபி ஏதும் வேணாம் மோர் போதும்'ன்னேன் அதுக்கு அவள்,'ஆங்...மோரா? இத்தனை நேரம் பேசி எங்கள உக்காரவச்சி எங்கநேரம் விரயம் ஆக்கினதுக்கு நீங்க எங்க எல்லார்க்கும் பணம் கொடுக்கணும்னு சொல்லவந்தேன்'னாளேபாக்கணும்..அசந்துபோயிட்டேன் நான்!

8 முடிவா என்னைப்பத்தி சொல்லணும்னா அன்பானவள் கொஞ்சம் அறுவையானவள்(நட்புவட்டதுக்குதெரியும் என் அறுவைமகாத்மியம்)
சமையல்பாட்டுபடிப்பது எழுதுவது அரட்டைஅடிப்பது என எல்லாம் சேர்ந்த கலவையில் ஷைலஜா.சுயப்ரதாபம் அலர்ஜி! வேற வழி இல்ல இங்க அதத் தான் எழுதணுமாமே?:)

எல்லாரும் அருமையா அழகா எழுதி இருக்காங்க நானும் ஏதோ எழுதிட்டேன் காவிரிபிரவாகம் மாதிரி.. கொஞ்சம் எல்லாரும்
எட்டிப்பாத்துட்டுப்போங்க ப்ளீஸ்!


இதுவரை எழுதாத அந்த 8பேரை இங்கு அழைக்கிறேன்!

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும்.

7 comments:

  1. எட்டையும் படிக்க பணம் கொடுப்பீங்க என்று வந்தேன்!! :-))

    ReplyDelete
  2. ஒரே மூச்சில் படிக்கும்படியாக ஓட்டமான நடை. நீங்க கதாசிரியர் என்பதை நிரூபிச்சிட்டீங்க. அழைப்பை ஏற்றதற்கு நன்றி.

    ReplyDelete
  3. attakaasam... ivvalavu periya aalunnu erkanave theriyum.. aana ennanna saathanaikalnu unga ettula irunthu therinjukitten :))

    ReplyDelete
  4. //இங்க இவரு தலைக்கு
    மேல தொங்கிட்டு இருக்கறபெரிய வெங்கலமணீயை டமால்னு தள்ளிவிட்டு அவர் மண்டைய உடச்சிடு//

    பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பாங்க தெரியும்!
    மண்டை உடைப்பு மகாதேவியை இன்னிக்கி தான் பாக்கறேன் ஷைலஜா! :-)

    //அடப்பாவி நீயா என்னடி இது பையன் மாதிரியே தத்ரூபமா மேக்கப்?"
    எல்லாரும் சிரிச்ச்சாங்க//

    ஆகா...அப்பவே அவ்வை ஷண்முகி ரிலீஸ் ஆயிடுச்சா? :-)
    பதிவுலகில் ஆண் வேஷம் போட்டு எழுதறதா ஒரு சேதி வந்துச்சே காத்து வாக்குல! SK அது யாருன்னு தெரியுதுங்களா? :-)

    ReplyDelete
  5. //உடனே ட் ரீ ட் கேட்டு உடுப்பிகார்டன் ஹோட்டலில் ச்சனா படூரா பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் சாப்பிடும் என் நட்பு வட்டத்துக்கும்!!//

    இது அநியாயம்! அக்ரமம்! அநீதி! அதர்மம்! எட்டு பதிவில் 'எப்'பட்டமான பொய்!
    ஷைலஜா எனக்கு இதுவரை ச்சனா படூரா பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் வாங்கித் தரவே இல்லை!

    அண்ணா கண்ணன் சார்...உங்களுக்காச்சும் கிடைச்சுதா இல்லை அங்கும் அமெரிக்காவில் மைசூர்பாகு அரங்கேறாத கதை தானா?

    வாங்கித் தராமல் வாங்கித் தந்ததாகச் சொல்லி நட்பு வட்டத்திடம் சுயபிரதாபம் செய்யும் ஷைலஜா அவர்களிடம் "ஜி கையில் இருக்கும் போர் வாள் கொண்டு போராடுவோம் என்று வ.வா.ச சார்பாகச் சொல்லிக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன்! :-)

    ReplyDelete
  6. அடிப்பாவி , உனக்கு பிளாக் இருக்கிற மேட்டரே இன்னைக்குதான் தெரிஞ்சுது, ஆனாலும் மகா மகத்துக்கு மகாமகம் பதிவு போடுகிறா மாதிரி இருக்கு. (ஆடிக்கு ஒரு நாள் பழமொழி கூட சூட் ஆகாது) அது சரி, எட்டை பற்றி உன் விமர்சனம் என்னன்னு கேட்காதே :-)

    ReplyDelete
  7. ஷைலஜா
    நான் தெரிந்தோ தெரியாமலோ சில கிறுக்கல் செய்யலாம் என்று தான் புலொக் பக்கம் வந்தனான். ஒருவரிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வர கொண்டுவந்த எட்டுக்கு ஒரு பெரிய "ஓ" போடலாம். நிறைய எட்டுக்கள் இருக்குப் போல எட்டிப் போய் பார்த்திட்டு வாறன். உங்கள் திறமைகளுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.