Social Icons

Pages

Monday, May 03, 2010

விண்ணைத்தாண்டி வந்தேனே!

மரத்தடி.காம் என்று ஒருகாலத்துல ஒரு மடலாடற்குழு இருந்தது.அதில் எத்தனை எத்தனைபேர் பறவைகளாய் கூவி மகிழ்ந்தோம் தெரியுமா? பலர் அதில் முகம்தெரியாதபறவைகள் ஆனால் மனச்சிறகை விரித்து எண்ணங்களைப்பரிமாறிக்கொண்டு இருக்கிறோம் ! அதெல்லாம் விண்ணைத்தாண்டிய சந்தோஷங்கள்!


ஆசிப்ஜீ ஆசாத்ஜீ ம்ரவண்டு கணேஷ் மஞ்சூர்ராசா மதுமிதா நிர்மலா பிகே எஸ், உஷா துளசி ஐயப்பன் ஜீவ்ஸ்,ஹரிக்ருஷ்ணன், பால்ராஜன் கீதா, கேவி ராஜா, சக்திப்ரபா ஜெய்ஸ்ரீகோவிந்தராஜன்(யாரையும் மறக்கல் இங்க குறிப்பிடலேன்னாலும் மனசுல அவங்க இருக்காங்க) என்றுஎத்தனை எத்தனை நல்ல இதயங்கள் எனக்குக்கிடைத்த அரும் புதைய்ல்கள்! அவர்களுடனான நட்பு இதமாய் இருக்கிறது இன்னமும்....

அந்தப்பறவைகளில் சிலவற்றை ஏப்ரல் 30ஆம்தேதி நடந்த திரிசக்தி குழுமத்தினரின் 12நூல்கள்வெளியீட்டுவிழாவில் பார்க்க நேர்ந்ததும்...ஆஹா..! என்னவென்று சொல்வதம்மா எந்தன் மனம் கொண்ட மகிழ்ச்சியினை? விண்ணைத்தாண்டி வந்த மகிழ்ச்சிதான் அது!


நுனிப்புல் எனவலைபெயர்கொண்ட என் அன்புத்தோழி உஷா பதிவுலக அரசி துள்சிகோபால் கவிதாயினி நிர்மலா இவர்களைமுதலில்பார்க்கிறேன்! மதுமிதாவும் சேர்ந்துகொள்ள அங்கே வந்த அண்ணா கண்ணனிடம் காமிராவைக்கொடுத்து இந்த நாற்பெரும் தேவியரை சேர்ந்து படம் எடுங்கன்னு கேட்டுட்டோம்!


மரத்தடி நினைவுகளை அசைபோட்டோம் ஆசிஃப்ஜீ மண்டையை உருட்டினோம்:)

பதிவர் நட்புடன் ஜமால் என்பவர் வந்தாரு

அக்கா நான் ஜமால் என்றார் புன்னகைதவழ! ஆஹா இவரா ஜமால்! சிரித்த முகத்தோட ஜமாய்க்கிறாரேன்னு நினச்சி சந்தோசத்துல அதிகம் பேசவும் முடியாம அவஸ்தை!


நூல்வெளியீட்டுல என்னைப்பத்தி இசைக்கவிரமணன் நாலுவரி அறிமுகம் என்றுபுகழ்ந்துசொல்லிட்டே வந்தவரு மைசூர்பாக்கையும் சேர்த்துட்டுசொல்ல
நான் நடந்து மேடை நோக்கிப்போகையில் பின்னாலேயே கரகோஷம் வரவும்,’ பாருங்க இவங்கரசிகர்கூட்டத்தையும் கூட்டிட்டு வந்துட்டாங்க’ என்று லேசா கிண்டல் செய்ய..... கூச்சமாய் சிரிச்சுட்டேன் அங்கயே!


நிலாரசிகன் விழியன் என்று அன்புத்தம்பிகள் ஆவலாய் முன்னமே வந்திருக்க வேறு சிலரும், எனது பத்திரிகைஉலக எழுத்தாள நண்பர்களும் வந்திருக்க வலல்மைதாராயோ இயக்குநர் மதுமிதா பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் எஸ் எம் சில்க் அதிபர் இலக்கியபீடம் ஆசிரியர் கலைமாமணி விக்கிரமன் இந்துமுன்னணித்தலவர் ராம்கோபால் ,நான் அழைப்பிதழ் அனுப்பிக்கேட்டுக்கொண்டதற்கு இணங்கி வருகைபுரிந்த மதிப்பிற்குரிய திரு அப்துல ஜப்பார் யுகமாயினி ஆசிரியர் திரு சித்தன் , எழுத்தாளர்கள் இந்துமதி ஜோதிர்லதாகிரிஜா எஸ் சங்கரநாராயணன் காந்தலஷ்மி இன்னும் பலர் பலர்! மரத்தடி சிமுலேஷன் திடிரென வந்து நின்றார் திகைப்பில் நின்ற என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். வசந்த்குமார் (பதிவர்) விழாவில் கிளிமுற்றம் எனும் தனது சிறுகதைதொகுப்பினை அன்போடுபெற்றுக்கொண்டார் அவரையும் முதன்முதலில்பார்க்கிறேன்.சின்னதம்பி ப்ரபுமாதிரி கழுக்மொழுக்குன்னு இருந்தார்! என்னையும் தம்பி வசந்தையும் யாராவது அருகருகே பார்த்தால்,”சபாஷ் சரியான போட்டி’ என்றோ அல்லது ‘எந்தக்கடையிலே அரிசி வாங்கறே? னும் பாடலாம்!


பாரதி பாஸ்கரின் அற்புதமான சொற்பொழிவு அன்று சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி தான்!

எதைச்சொல்ல எதைவிட! அந்த மாலைப்பொழுதின் மயக்கம் இன்னும் தீர்ந்த்பாடில்லை! செவிக்கு விருந்தென்பது இதுதானா? விழியும் செவியும் நிறைந்தாலே வயிறும் நிறைந்து மனமும் நிறைந்துதான் விடுமோ? (வயிற்றுக்கும் நல்ல டிபன் கிடைத்தது)

ஒன்றுமட்டும் நிதர்சனம் இந்தமாதிரி விழாக்களைப்பார்க்கிறபோது பிறக்கும் நம்பிக்கை இதுதான்,,,,,தமிழ் என்றும் தரணியில் வாழ்ந்துகொண்டிருக்கும்!
தேமதுரத்தமிழோசையை உலகமெல்லாம் பரவச்செய்வது எழுத்தாளர்களின் கையில்தான் இருக்கிறது என்பதை அங்கே புரிந்துகொண்டேன்,

மறவன்புலவு க.சச்சிதானந்தம், ரவி தமிழ்வாணன், சுப்பு, வீரராகவன், தமிழ்த்தேனீ, சந்திரசேகர் அம்சப்ரியா, அய்யப்ப மாதவன், ரீச் சந்திரா, சைதை முரளி.. அண்ணாகண்ணன்,விழியன் நிலாரசிகன் ஓவியர் ஜீவநாதன், ,,,..........இன்னும் இன்னும் பலப்பலமுகங்கள்!

எனது சிறுகதை தொகுப்பு (அவனும் இவனும்) அன்று பட்டிமன்ற பேச்சாளர்பாரதிபாஸ்கர் மற்றும் மக்கள்குரல் ராம்ஜி கைகளால் எனக்கு அளிக்கப்பட்டது.கதைகள் பற்றியும் பிறகுபாரதி பாஸ்கர் சிலாகித்துப்பேசினார் அன்புத்தோழி மதுமிதாவின் நூலையும் பாராட்டி விமர்சித்தார். (இதுபற்றி ஞாயிறு தினமலரிலும் வந்துள்ளது)


மேலும் விவரங்கள் இனி தொடரும்......


--

28 comments:

  1. வாழ்த்துக்கள் ஷைலஜா.

    ReplyDelete
  2. இந்த விழாவுக்கு வரணுமுன்னே பயணத்தைத் தள்ளிவச்சுருந்தேன் ஷைலூ.

    இதைவிட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காதுக்குன்னு மனக்குரல் எச்சரிச்சது.ஆமாம்:-)

    ரொம்ப மகிழ்ச்சியான மாலைப்பொழுது!

    இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  3. செல்வராஜ் ஜெகதீசன் said...
    வாழ்த்துக்கள் ஷைலஜா.

    4:40 PM
    <<<<<<<<<<.நன்றி செல்வராஜ்!

    ReplyDelete
  4. துளசி கோபால் said...
    இந்த விழாவுக்கு வரணுமுன்னே பயணத்தைத் தள்ளிவச்சுருந்தேன் ஷைலூ.

    இதைவிட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காதுக்குன்னு மனக்குரல் எச்சரிச்சது.ஆமாம்:-)

    ரொம்ப மகிழ்ச்சியான மாலைப்பொழுது!

    இனிய வாழ்த்து(க்)கள்.

    4:51 PM
    <<<<<<<<<>.

    துள்சி மேடம் எவ்ளோ மகிழ்ச்சி தெரியுமா நீங்கள்ளாம் வந்ததுல? அன்று மகிழ்ச்சிமட்டுமா பொன்னான மாலைப்பொழுதும்கூட அமைந்ததே! உங்க கணவரும் அன்பாய் விஜாரிச்சாரே! நாம எல்லாரும் நிறையநேரம் உக்காந்து அரட்டை அடிக்கணும் !

    ReplyDelete
  5. \\மேலும் விவரங்கள் இனி தொடரும்......
    \\

    ஆகா கலக்கல் விழா போல...தொடருங்கள். ;)

    ReplyDelete
  6. நல்வாழ்த்துகள் ஷைலஜா.

    ReplyDelete
  7. மேடம்! நான் கூட கொஞ்ச நாள் மரத்தடில டஸ்ட்டு கொட்டிட்டு இருந்தேன். ஞாபகமிருக்கலாம். கருணாநிதி பாணியில் 'இணையத்தில் இடமில்லை, ஆனால் இதயத்தில் இடமுண்டு'னு சொல்லிடாதீங்கோவ். :-))

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. Anonymous8:31 PM

    \இந்துமுன்னணித்தலவர் ராம்கோபால்\

    ஓ.. யாருங்க.. இந்த வீரத்துறவின்னுலாம் அடைமொழி போட்டு அட்டகாசம் பண்ணுவாரே.. பெரியார திட்டோதிட்டுன்னு திட்டி அலைவாரே அந்த காவிக்கார, இந்து வெறி இராம கோபாலனுங்களா? இப்ப ஸ்டைலா பேரா மாத்திட்டாரா என்ன?
    இல்லன்னா அன் -ல ஆண் பெயர் முடிறது தமிழ்முறை, அப்படிலாம் நாம பேர எழுதக் கூடாதேன்னு இந்தி, சம்ஸ்க்ருத ஸ்டைலுக்குப் போயிட்டாரா?

    அந்த அரண்ட கேசு வந்த விழாவுக்கு பெரியவங்க மறவன் புலவு ஐயா, ஜபார் ஐயா எல்லாம் வந்திருந்தாங்களா? விழாவ ஒழுங்கு செஞ்ச புண்ணியவான் யாருங்க?

    உண்மைய சொல்லுங்க, மரத்தடி முழுப் பார்ப்பனியக் குழுமமா இயங்கி வல்ல? உயர் நடுத்தர வர்க்கத்தோட அரட்டை வெளியா இருந்து வல்ல?
    ஆசீப்பும் சிலரும் தான் விதிவிலக்கு!
    அத ஆட்டி வச்ச பலரின் மறைமுக பார்ப்பனிய ஆதரவயும், சிலர் இப்ப வெளிப்படையா எங்கே பிராமணன் படங்காட்டிடும் இருக்கறத பார்த்துட்டு தானே இருக்கோம்.

    மத்தப்படி வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. மீண்டும் வாழ்த்துகள்!

    இன்னும் பலரை சந்திக்க முடியும் எனவும் வந்தேன், சிலரை மட்டுமே சந்திக்க வாய்த்தது.

    மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் :)

    ReplyDelete
  11. //கோபிநாத் said...
    \\மேலும் விவரங்கள் இனி தொடரும்......
    \\

    ஆகா கலக்கல் விழா போல...தொடருங்கள். ;)

    5:54 PM


    மாதேவி said...
    நல்வாழ்த்துகள் ஷைலஜா.

    6:21 PM

    ////...<<>>>


    நன்றி மாதேவி மற்றும் கோபிநாத்.

    ReplyDelete
  12. // சுரேஷ் கண்ணன் said...
    மேடம்! நான் கூட கொஞ்ச நாள் மரத்தடில டஸ்ட்டு கொட்டிட்டு இருந்தேன். ஞாபகமிருக்கலாம். கருணாநிதி பாணியில் 'இணையத்தில் இடமில்லை, ஆனால் இதயத்தில் இடமுண்டு'னு சொல்லிடாதீங்கோவ். :-))

    6:44 PM
    //////இல்லை சுரேஷ் மறக்கல.....எல்லார்பேரையும் எழுத கொஞ்சம் டைம் இல்ல அதான் நன்றி சுரேஷ் வரவிற்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  13. தாமோதர் சந்துரு said...
    வாழ்த்துக்கள்

    8:28 PM
    <<<<<<<<<<<<>.நன்றி தாமோதரன்


    ////Anonymous said...
    \இந்துமுன்னணித்தலவர் ராம்கோபால்\

    ஓ.. யாருங்க.. இந்த வீரத்துறவின்னுலாம் அடைமொழி போட்டு அட்டகாசம் பண்ணுவாரே.. பெரியார திட்டோதிட்டுன்னு திட்டி அலைவாரே அந்த காவிக்கார, இந்து வெறி இராம கோபாலனுங்களா? இப்ப ஸ்டைலா பேரா மாத்திட்டாரா என்ன?
    இல்லன்னா அன் -ல ஆண் பெயர் முடிறது தமிழ்முறை, அப்படிலாம் நாம பேர எழுதக் கூடாதேன்னு இந்தி, சம்ஸ்க்ருத ஸ்டைலுக்குப் போயிட்டாரா?

    அந்த அரண்ட கேசு வந்த விழாவுக்கு பெரியவங்க மறவன் புலவு ஐயா, ஜபார் ஐயா எல்லாம் வந்திருந்தாங்களா? விழாவ ஒழுங்கு செஞ்ச புண்ணியவான் யாருங்க?

    உண்மைய சொல்லுங்க, மரத்தடி முழுப் பார்ப்பனியக் குழுமமா இயங்கி வல்ல? உயர் நடுத்தர வர்க்கத்தோட அரட்டை வெளியா இருந்து வல்ல?
    ஆசீப்பும் சிலரும் தான் விதிவிலக்கு!
    அத ஆட்டி வச்ச பலரின் மறைமுக பார்ப்பனிய ஆதரவயும், சிலர் இப்ப வெளிப்படையா எங்கே பிராமணன் படங்காட்டிடும் இருக்கறத பார்த்துட்டு தானே இருக்கோம்.

    மத்தப்படி வாழ்த்துகள்!///

    <<<>.
    வாழ்த்துக்கும் தங்களின் கருத்துக்கும் நன்றி.

    8:31 PM

    ReplyDelete
  14. // நட்புடன் ஜமால் said...
    மீண்டும் வாழ்த்துகள்!

    இன்னும் பலரை சந்திக்க முடியும் எனவும் வந்தேன், சிலரை மட்டுமே சந்திக்க வாய்த்தது.

    மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் :)

    8:34 PM

    //////


    நன்றி ஜமால் நான் சொன்னேனென்னு வந்தீங்க விழாக்கு ..மிக்க நன்றி...அன்புதம்பியோட இன்னொரு தடவை நல்லாபேசணும்.

    ReplyDelete
  15. // நட்புடன் ஜமால் said...
    மீண்டும் வாழ்த்துகள்!

    இன்னும் பலரை சந்திக்க முடியும் எனவும் வந்தேன், சிலரை மட்டுமே சந்திக்க வாய்த்தது.

    மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் :)

    8:34 PM

    //////


    நன்றி ஜமால் நான் சொன்னேனென்னு வந்தீங்க விழாக்கு ..மிக்க நன்றி...அன்புதம்பியோட இன்னொரு தடவை நல்லாபேசணும்.

    ReplyDelete
  16. வாழ்த்துகள் ஷைலஜா

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் ஷைல்ஸக்கோவ்...

    ReplyDelete
  18. வாழ்த்துகள் ஷைலஜா

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் ஷைலஜா மேடம், கலக்கலான விழாதான் போலிருக்கிறது.

    ReplyDelete
  20. viNNai thaaNdi vanthen-nu paathavudan, neenga vizhavukku flight pudichi pOneengaLo nu ninachen! natpugaLai santhicha vitham chonnapo neenga paRakkura pola thaan irunthuchi-kka! :)

    ungaLukaaga DC-la irunthu intha pinnoottam :)
    madhumitha-kka kitta annikki kaalai-laye pesitten! :)

    vasanth-kku vaazthukkaL! :)

    ReplyDelete
  21. இனிய மாலைப் பொழுதில் எத்தனை இனிய சந்திப்புக்கள்? விழாவும் சிறப்பாக நடந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    வழக்கம் போலக் கலகலப்பாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்:))!

    வாழ்த்துக்கள் ஷைலஜா!

    ReplyDelete
  22. T.V.ராதாகிருஷ்ணன் said...

    வாழ்த்துகள் ஷைலஜா


    மதுரையம்பதி said...

    வாழ்த்துக்கள் ஷைல்ஸக்கோவ்...

    10:51 PM
    நேசமித்ரன் said...

    வாழ்த்துகள் ஷைலஜா

    11:58 PM
    அமைதிச்சாரல் said...

    வாழ்த்துக்கள் ஷைலஜா மேடம், கலக்கலான விழாதான் போலிருக்கிறது.

    12:11 M<<<<<<>>


    அமைதிச்சாரல் மௌலி நேசமித்ரன் ராதா க்ருஷ்ணன்....உங்க எல்லார்க்கும் மிகக் நன்றி
    ஆமா அமைதிச்சாரல் விழா ரொம்ப கலக்கலா இருந்தது!

    ReplyDelete
  23. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    viNNai thaaNdi vanthen-nu paathavudan, neenga vizhavukku flight pudichi pOneengaLo nu ninachen! natpugaLai santhicha vitham chonnapo neenga paRakkura pola thaan irunthuchi-kka! :)

    ungaLukaaga DC-la irunthu intha pinnoottam :)
    madhumitha-kka kitta annikki kaalai-laye pesitten! :)

    vasanth-kku vaazthukkaL! :)

    12:40 AM
    /////////////////<<<<<<>>.வாஙக் ஸார் வாங்க! அமெரிக்காவின் தலைநகர்ல என்ன செய்றீங்க? ஒபாமாக்கு உப்பும்மா பண்ணிக்கொடுக்கறீஙக்ளா என்ன?:)
    வாழ்த்துக்கு நன்றி..ஊரு வந்து ஒழுங்கா தமிழ்ல அழகா எழுதவும்!!!

    ReplyDelete
  24. //ராமலக்ஷ்மி said...
    இனிய மாலைப் பொழுதில் எத்தனை இனிய சந்திப்புக்கள்? விழாவும் சிறப்பாக நடந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

    வழக்கம் போலக் கலகலப்பாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள்:))!

    வாழ்த்துக்கள் ஷைலஜா!

    8:50 PM
    ///////////<<>>நன்றி ராமலஷ்மி........நீஙக்ளெல்லாம் அன்னிக்கு இருந்தா அந்த தமிழின் இனிமையை அனுபவித்திருக்கலாம்!

    ReplyDelete
  25. /*வசந்த்குமார் (பதிவர்) விழாவில் கிளிமுற்றம் எனும் தனது சிறுகதைதொகுப்பினை அன்போடுபெற்றுக்கொண்டார் அவரையும் முதன்முதலில்பார்க்கிறேன்.சின்னதம்பி ப்ரபுமாதிரி கழுக்மொழுக்குன்னு இருந்தார்! என்னையும் தம்பி வசந்தையும் யாராவது அருகருகே பார்த்தால்,”சபாஷ் சரியான போட்டி’ என்றோ அல்லது ‘எந்தக்கடையிலே அரிசி வாங்கறே? னும் பாடலாம்!
    */

    ஹை...! அக்கா என்னைச் சின்னதம்பி பிரபு மாதிரி இருக்கேன்னு சொல்லிட்டாங்க..! ஹேப்பி..!

    நாங்க எந்தக் கடையில அரிசி வாங்கினாலும் இப்படித் தான் இருப்போம். சொல்லப் போனால் நான் தமிழ் அரிசிக்கே இப்படி இருந்தவன். இப்போ கேரளாவில் அரிசியே குண்டா இருக்கு. அப்ப அதை சாப்பிடற நான் எப்படி இருப்பேன்..? :))

    ReplyDelete
  26. // மேடம்! நான் கூட கொஞ்ச நாள் மரத்தடில டஸ்ட்டு கொட்டிட்டு இருந்தேன். ஞாபகமிருக்கலாம். //

    ஆமாமா! சுரேஷ் சொன்னதுபோல
    நானும்... :)

    ஆனா தெரியும் மறக்கலே யாரையும்னு :)

    ReplyDelete
  27. புத்தக வெளியீட்டு விழாவிற்கு வர இயலவில்லையே என்ற வருத்தம் நீங்கியது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. ஒரு புத்தக வெளியீட்டு விழா இவ்வளவு சுவாரசியமாகவும் ஒழுங்கோடும் நடந்தது பெரும் வியப்பு. மரத்தடி கால நண்பர்களைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

    உங்கள் புத்தகம் எனது அம்மா படித்து முடித்து விட்டுப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். நான் இன்னமும் படிக்கவில்லை. ஆணி அதிகம்.

    அப்புறம், நுனிப்புல் உஷா, துளசி கோபால், நிர்மலா இவங்களையெல்லாம் இப்போதுதான் பாக்கிறீங்களா? நீங்களெல்லாம் ஒருவருக்கொருவர் பழக்கம் கொண்ட மரத்தடி சீனியர் (கேங்) என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்?

    - சிமுலேஷன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.