Social Icons

Pages

Monday, January 19, 2015

பெருமை! கவிதை.

கதிரவனை சந்திரனை
காலத்தில் ஞாலத்திற்காய் அனுப்புவதால்
விண்ணுக்குப்பெருமை

உடலிலே உயிருக்குத்துணையாக‌
ஊடுருவி இருப்பதால்
காற்றுக்குப்பெருமை

நிலமங்கை மனம்குளிர‌
மழை அளிக்கமுயல்வதால்
நீருக்குப்பெருமை

ஏழைக்கு இன்னல் செய்யும்
ஏமாற்றுமனிதர்களைப்பொசுக்குவதால்
நெருப்புக்குப்பெருமை

அவர் இவர் என்றில்லாது
அனைவரையும் தாங்கி நிற்கும்
பூமிக்குப்பொறுமையே பெருமை.

4 comments:

  1. மனதிற்கு இதமான கவிதை.வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அடடே... அழகான கவிதையைச் சொல்லி அசத்திட்டீங்க அக்கா.

    ReplyDelete
  3. கருத்துக்களை அளித்த கணேஷ் டிடி கேபி சார் குமார் அனைவர்க்கும் நன்றி மிக

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.