
பாலைக் கறந்து அடுப்பேற வைத்து
பல்வளையாள் என் மகளிருப்ப
மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று
இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமமுடைய நம்பி
சாய்த்துப் பருகிட்டுப் போந்துநின்றான்
ஆலைக் கரும்பின் மொழியனைய
அசோதைநங்காய் உன்மகனைக் கூவாய்!
யசோதையிடம்
பொல்லாதக்கண்ண்ணனைபற்றி...