Social Icons

Pages

Thursday, July 24, 2008

அனி மை ஹனி!( அறிவியல்கதை போட்டிக்கு)


அனி வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.

“டாட்! இன்னமும் இந்த கையில் வச்சி புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லேயே கம்ப்யூட்டர் இருக்கில்ல? ஓபன் செஞ்சி படிக்கவேண்டியதுதானே?” என்றாள், தனது பேனாபோன்ற ஒரு சாதனத்தைத் திறந்து மின்னஞ்சலைப்பார்த்தபடி.

“என்னதான் சொல்லும்மா புஸ்தகம்னா நாங்க அந்த நாள்ள குமுதம் விகடன்லாம் கைல எடுத்துவச்சிட்டு ஆழ்ந்து படிக்கிற சுகம் இருக்கே அதுக்கு ஈடு ஆகாதுஅனிதா…” என்று ஆரம்பித்தவரைக் குறுக்கிட்டாள் அனி.

‘கால் மீ ‘அனி’ டாட்! நான் இதை முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷைலஜாகிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்…இந்த 2050ல அ, னி , தா ன்னு இவ்ளோ பெரிய பெயரை யாராலும் கூப்பிடமுடியாதுன்னுதான் நான் அனி ன்னு மாத்திக்கிட்டேன்..இன்ஃபாக்ட் இருபத்தி ரண்டு வருஷம் முன்னாடி எனக்கு நீங்க உங்க மாம் பெயரான அபிதகுசலாம்பரி என்கிற பெயர் வைக்க நினச்சிங்களாமே?அம்மாதான் பிடிவாதமா அனிதான்னு வச்சதா கேள்விப்பட்டேன்.ரெடிகுலஸ் என்ன இதெல்லாம்? அந்தகாலம் மாதிரியே பெண் அடிமைகளா இருப்பாங்கன்னு நினச்சீங்களா?”


மகள் போட்ட போட்டில் பெரியசாமி பேசாத சாமியாகி விட்டார்.
தனக்குதிருமணம் ஆகும் முன்பு எப்படி இருந்தோம் என நினைத்துப்பார்க்க ஆரம்பித்தார்… அசைபோடும் பழைய நினைவுகளேஅவரது தனிமைக்குத் துணை.

லஞ்ச் டாட் காமில் மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு டிவியை ஆன் செய்தாள்…

'கல்லைமட்டும்கண்டால்' என்றது ஏன்ஷியட் நெட் ஒர்க்ஸ் சானல்.

“ஓ மை காட்! ஏன் இப்படி பழையபாட்டாவே வைக்கிறாங்க? டாட் இதெல்லாம் உங்ககாலப் பாட்டு ,,நீங்க கேட்டுட்டு இருங்க நான் க்ளப்புக்குப்போறேன் ..மாம் வந்தா பிஸ்ஸா சமைச்சிவைங்கஇல்லேன்னா ஹாங்காங் நுடுல்ஸ் செய்யுங்க… மாம்ஸுக்கு அதான் பிடிக்கும்…. ஆமா எங்கபோனான் என் அருமைத்தம்பி டாம்?”

“தாமோதரனா? என்னம்மா அவன்பெயரையும் இப்படி சுருக்கிட்டே? அவன் டென்த் க்ரேட் ஆச்சேம்மா சின்சியரா படிக்க ப்ரண்ட்வீடுபோனான்”

‘வாட் ?மணி பத்தாகுது இன்னும் டாம் வீடுவரலையா? என்ன டாட் நீங்க பொறுப்பே இல்லாம இருக்கீங்க? ஒரு வயசுப்பையன் இருட்டி இவ்வளோநேரம் வெளில இருக்கான்னு கவலையே இல்லையா? மம்மி ஆபீஸ்போய் உழைப்பாங்களா இல்ல டாம் பத்தி கவலப்படுவாங்களா? நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆ ணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல… நைட் மம்மி வந்ததும் உங்களுக்கு நல்ல டோஸ் இருக்கு….சரி நான் கிளம்பறேன் க்ளப்ல ஜீ(வா), ஜா(னி) ஜோ(தி) ரி(ஷி) எல்லாம் வெயிட் செய்துட்டு இருப்பாங்க..பை டாட்’

அனி அந்த சொகுசுக் காரில் ஏறி உட்கார்ந்து ரிமொட்டை எடுத்துக்கொண்டாள்.. நகரப் போக்குவரத்து சந்தடி ரிமோட்டை ஆஃப்செய்யவைத்தது.

.”ச்சேசே ப்ளடி ட் ராஃபிக்…..” என்று அவளே ட்ரைவ் செய்ய ஆரம்பித்தாள்.

கார்கணிணித்திரையில் தர்ம் சிரித்தான்… “ ஹாய் ஹண்ட் சம்!மை ப்ரின்ஸ்! என்றைக்காவது நீ என்னை ஏறெடுத்துப்பார்த்து ஐலவ்யூ சொல்லத்தான் போறேடா? என்கிட்ட என்ன இல்ல,…பழைய நடிகை பாவனா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே! ஐஞ்சடி அஞ்சங்குல உயரமும் இந்த ரோஜாப்பூநிறமும், கடைஞ்சிஎடுத்த தேகமும் எல்லா காளைகளையும் மயக்கும்போது நீ மட்டும் என்னடா விஸ்வாமித்ர தபஸ் செய்றே? நான் மேனகையா மாறணும்னு நீ எதிர்பார்த்தா ஐயாம் ரெடி யார்!”

திரை நோக்கி பறக்கும் முத்தமிட்டாள்.

அனி யின் புத்தபுது ஜப்பானிய டொகொமோ மாடல்
5 ஜிசெல்போனில்(பிரசவம் தவிர அதில் எல்லா காரியங்களையும் வெற்றிகரமாய் செய்யலாம் என அதைக்கண்டுபிடித்த யென்சிங்மங் சொல்கிறார்) ஜோ(தி) வந்தாள்.

“வாட்ஸ் அப் டீ?”

“ஹேய் அனி…உன் ஆளு , இங்க மர்லின் மால் வந்திருக்கான்..அவன் காரை நான் பார்த்திட்டேன்....அன்பேசிவம்னு காரின் பின் கண்ணாடில கொட்டையா எழுதி இருக்கு, அவனேதான்..'


"ரியலி?'
"யெப்..கம் சூன் அனி"

*********************************

மர்லின்மாலுக்குள் அனி நுழையும்போது மெக்டொனால்ட்ஸ் வாசலில் பர்கர் கையோடேயே வந்து வழிமறித்தான் வா(சன்).

சிந்தெடிக் இழைகள்மின்னும் உடையுடன் தெரிந்தான் சராசரிக்கும் அதிகமான உயரம் ஆனால் ஆண்மையின் கம்பிரம் அதில் அதிகமாகவே இருந்தது.முகவெட்டில் பழைய நடிகர் ஷாரூக்கான்,சிரிப்பில் பழைய மாதவன்.துடிப்பில் பழையசூர்யா மொத்தத்தில் 2050ன் புதுமுகம் சாகர் போல அட்டகாசமாய் இருந்தான்.

“ ஹேய் அனி உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்றான் போதையான குரலில்.

“முதல்ல வழிவிடு…நான் அர்ஜண்டா போகணும்”

“அனி மை ஹனி! என் இனிய அழகுதேவதையே…!எவ்வளவு காலம் ஆனா என்ன தமிழ்ப்பெண்களுக்கு என்றும் தனி அழகுதான்.உன் நினைவில் நான் இருக்கேன் !அனி !இன்னும் நான் யார்கூடவும் டேட்டிங் வச்சிக்கல… பிகாஸ் உன்கூடத்தான் வாழணும்னுதான்..அனி!
நான் டேட்டிங் கேட்டால் உடனே ஓடி வர ஆயிரம் பேர் இருக்காங்க ஆனா எனக்கு அவங்க வேண்டாம்.
லுக் அனி ! நான் நாலுகோடி(டாலர்) சொத்துக்கு ஒரே வாரிசு.என்னை ஏன் நீ கல்யாணம்செய்துக்கக்கூடாது?”

“ஹலோ ஹலோ கொஞ்சம் அடங்கு….நான் தான் தர்மை லவ்பண்றேன்னு உனக்கு தெரியுமில்ல?”

“அதனால் என்ன அனி~ இ து 2050… அவனைக் காதலிச்சிக்கோ.. என்கூட டேட்டிங் வச்சிக்கயேன்..”

“வா! நான் மாடர்ன் கேர்ல்தான்… ஆனா உண்மையான காதலை மதிக்கிறவள். இன்னிக்கு விஞ்ஞானம் அசுரவேகத்துல வளர்ந்து மனித உறவுகளை சீரழிச்சிட்டிருக்கு… ஆண் பெண் இணைப்பை பயாலஜிகல் ஈவெண்ட்டா பாக்றாங்க ஆனா நான் மனசோட சம்பந்தப்படுத்திப் பாக்றேன் எனக்கு ட்ரூ லவ் தான் பெருசு என்னால் உன்மனசு கெட்டுருந்தா ஸாரி..குட்பை”

வாசனை ஒருவழியாய் கழற்றிவிட்டு ஜோதியை மொபைலில் தேடினாள். அவள் அப்போதுதான் ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

“ஜோ! நான் 'டாய்ஸ் ஆர் அஸ்' கடைவாசலில் நிக்கறேன்” தகவல் கொடுத்தாள்

“யா யா…என் செல்லுல நானும் உன்னைப்பார்த்துட்டேன்.. அங்க வரேன் இரு”

ஜோ வந்ததும்
“அனீ….இந்த காம்ப்லெக்சில் தர்ம் இருகிற இட ம் சின்னகோயில் .அ துக்கு கார்லதான் போகணும்டி ..24வது மாடி”என்றாள்.

“மொபைலில் கோயிலைத்தேடினியா?”

“தேடி அங்க அ வ னைப் பார்த்தும் ஆச்சி… வா போகலாம்”

ஹைட்ரஜன் திரவஎஞ்சினை இருதயப்பகுதியில் தாங்கி இருந்த அந்த அதிநவீன சொகுசுக்கார் வேகமாக மேல் தளம் ஏறியது. பார்க்கிங் ஸ்லாட்டில் காரை செருகிவிட்டு இருவரும் மூச்சிறைக்க வந்தார்கள்,

அங்கே இருந்த சின்ன பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து நெற்றியில் விபூதிப்பட்டை,இடுப்பில் பட்டு வேஷ்டியுடன் பாலும்தெளிதேனும் த ருவதாகவும் பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் தரும்படியும் மெய்மறந்து பிள்ளளயாரிடம் கேட்டுக்கொண்டிருந்தான் தர்ம்.

“ஹாய் தர்ம்?”

யார் இந்த கண பதி பூஜையில் கரடி என அதிர்ந்து நிமிர்ந்தான் தர்ம்.

அனிஅவன் அருகில் சென்றாள்..ஜோ தான் போவதாயும் தர்மை சரிக்கட்டும்படியும் ஜாடைகாட்டிவிட்டு நகர்நதாள்.

“தர்ம் நான் ரெடியா… டேட்டிங்லாம் எனக்கும் பிடிக்கல வச்சிகிட்டாலும் அது உன்கூடத்தான்.. நம்ம கல்யாணம் எப்போன்னு சொல்லேன் ப்ளீஸ்?”

“லுக் மிஸ் அனிதா…எனக்கு இந்தக்கண்டதும்காதலில் நம்பிகை இல்ல…உன் பார்வைல நான் முப்பதுவருஷம் முன்னாடி இருந்திருக்கவேண்டிய மனுஷன் தான்..அப்படியே இருக்கட்டும்…என்னால உங்க மாடர்ன் லைஃபுக்கு ஈடுகொடுக்கமுடியாது…இதை பலதடவை சொல்லியும் இப்படி நான் எ ங்கே போனலும் தொடர்ந்து வந்து இப்படிக் கேட்டுதொல்லை பண்றீங்களே?”

“தர்ம் ஐ லவ் யூ.நீ இல்லாம என்னால் வாழவே முடியாது உன் உருவம் என்மனசிலயே பதிஞ்சிருக்கு அங்க வேற யார்க்கும் இடம்இல்லை”

“இந்த வச னமெல்லாம் சினிமாக்கு லாயக்கு… என்னைவிடு தாயே நான்போறேன் “
வேஷ்டிதடுக்கத் தடுக்க எழுந்த தர்ம் வேகமாய் எஸ்கலேட்டரில் இறங்கி ஓடி பேஸ்மெண்ட்டிலிருந்து காரில் ஏறிக் கொண்டான்.

அனிதா திகைப்புடன் அப்படியே நின்றவள் தன் செல்போனில் அவன்கார்போகும்பாதையை கவனித்தாள்.

கார் ஜெய்நகர் பகுதியில் பத்மஜா வீட்டுவாசலில் நிற்கவும் அதிர்ந்தாள்
“வாட் த ஹெல் இவன் கார்போய் அவ வீட்ல நிக்குது?’

பத்மஜா மௌண்ட்கார்மல் கல்லூரியில் அனியுடன் படித்தவள்.பக்கா பட்டிக்காடு. பாவாடை தாவணி என்று அணிந்து பாவயாமி ரகுராமம் பாடிக்கொண்டிருப்பாள். தன் பெயரை யாராவது பத்து என்று அழைத்தால்,"அபசாரம் ...சுவாமிக்கு ஆகாது" என்று புலம்புவாள்.
அவள்வீட்டிற்கு தர்ம் ஏன் போகிறான்?

அடுத்த பத்தாவது நிமிடம் அனி ,தர்ம் முன் ப்ரசன்னமானாள்.
“தர்ம் திஸ் ஈஸ் டூ மச் .இந்த bad m a ja க்காகவா என்காதலை நீ நிராகரிச்சே ?இவ என்னைவிட எதில உ சத்தி ? பலூன் மாதிரி இருக்கா இந்த பேட்மஜா?”

“பத்மஜா என்றால் பத்மமான தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகள்.என்று பெயர் .உனக்கு செம்மொழி தமிழும் சரியா தெரியாது தேவமொழி சம்ஸ்க்ருதமும் புரியாது…நுனிநாக்குல ஆங்கிலம் பேசும் நவநாகரீக மங்கை நீ!” தர்ம் சீண்டினான்.

“ ஏய், பேட்மஜா! என் ஆளுடிஅவன் விடு அவனை” என பத்மஜாவை பிடித்துத்தள்ளினாள் அனிதா.

“ மிஸ் அனிதா இதப்பாருங்க….நான்பொறுமையான ஆண்பிள்ளைதான் ஆனா என் காதலிமேல யார் கைவச்சாலும் வெட்டிடுவேன் ஆம்மா?”

தர்ம் உறுமவும் அனிதா அவமானத்தில் முகம் சிவக்க வீடுவந்தாள்.

ஆனால் மறுநாளே ஒரு விபரீதமுடிவெடுத்தாள்.
***************************************************

டிசம்பர்மாதத்திய பனிப்புகை, சாலையில் பரந்து சூழ்ந்திருக்க
அந்த நடுநிசியில் அனி, காரில் ஏறி புறநகர்ப்பகுதியில் இருந்த அந்த மேலைநாட்டுவாசனை கொண்ட காலனிக்குள் காரை செலுத்தினாள் தர்ம் வீட்டுவாசலில் காரை ஓசைப்படாமல் நிறுத்தினாள்.

மெல்ல காம்பவுண்டிர்குள் குதித்தாள்.

நல்ல வேளை வள்கம் சொல்லும் நாய்கள் ஏதுமில்லை

மெல்லிய கான்வாஸ் ஒலியோடு இருபக்கமும் கண்களைத் துழாவினாள், ஹாலின் ஜன்னல் வெண்டிலேட்டரின் கண்ணாடிகளை ஓசையின்றி அகற்றினாள்

மெல்ல உள்ளே உடலை நுழைத்து வளைந்து இறங்கினாள்.

ட்ராயிங் ஹால் ரீடிங் ஹால் அடுத்து வீடு நடுவில் தெரிந்த மாடிக்குச்செல்லும் படிகளில் ஏறி சன்ன நீல நிற வெளிச்சம் தெரிந்த பெட்ரூமுக்குள் போனாள். அங்கு கட்டிலில் கழுத்துவரை கம்ஃபர்ட்டரைப் போர்த்திக்கொண்டு தர்ம் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.

அனி அவன் அருகில்வந்து நின்றாள்.

“ஹேய் ஹாண்ட்சம் .தூக்கத்திலயும் நீ அழகுடா செல்லம்!இந்த அழகு எனக்குக்கிடையாதா?அப்படி என்றால் அந்த பேட்மஜாக்கும் கிடைக்கக் கூடாது ,, காதலுக்காக கொலையும் செய்வா இந்த மிஸ்அனி,ஆமா.. ஒழி நீ செத்துப்போ உனக்கு என்கையால்தான் முடிவு”
குனிந்து பலத்தையெல்லாம்திரட்டி கைகளை அவன்கழுத்தில் வைக்கும்போது அவள் கழுத்தை ஒரு வலியகரம் சட்டெனப் பற்றியது

“அவுட்ச்!” சன்னமாய் கூவியபடி திரும்பினாள்.

அவளைஅப்படியே ஓசைப்படாமல் வரும்படி ஜாடைகாட்டி அடுத்த அறைக்கு இழுத்துப்போன உருவம் அங்கு லைட்போட்டது .

வெளிச்சதில் அனிபார்த்தாள். அது ஒரு பெண். ஜீன்ஸும் டிஷர்ட்டும் அணிந்து நரைத்தபாப்தலைக்கு கணிசமாய் டை அடித்திருந்தாள்.வயது அறுபதுகளில் இருக்கலாம்பொல இருந்தது..

“நான் தர்ம்மின் மாம்..நீ யார்?” என்றாள் அதட்டும்குரலில்
“நான் ,நா…ன்…”
“பார்த்தா நல்லபடிச்சபொண்ணா தெரியற… நீ காரைநிறுத்தி உள்ளகுதிச்சி ஹால்ஜன்னல் கண்ணாடிகளைநகர்த்தி என் சன்னோட ரூம் போகிற வரை நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன் ..இங்க எல்லாஇடத்திலும் அலார்ம் இருக்கு..விரல அமுக்கினா போலீஸ் வந்துடும் ..செக்யூரிடி துப்பாக்கி உன்மேல நீண்டுடும ஆ னா நான் செய்யல பிகாஸ் உன் துணிச்சல் எனக்குப்பிடிச்சிருக்கு. ப்ரேவ்கேர்ல்! உன்னைமாதிரி நானும் துணிச்சல்காரிதான்
சரி எதுக்குவந்தே ?ஏன் என் பையனைக்கொலைசெய்ய நினச்சே?”

அனி தயங்கிப்பிறகு விவரம் சொன்னாள்.கடைசியில்
“அத்தை என்னைப் புரிஞ்சுக்குங்க உங்க மகனை உயிராகக் காதலிக்கிறேன்…தர்ம் இல்லேன்னா எனக்கு வாழ்வேஇல்ல”கண் பனித்தாள்.

“ரொம்பதமிழ் சினிமா பார்த்திருக்காங்க உன் அம்மா,நீ வயத்துல இருகக்றப்போன்னு நினைக்கிறேன்..தர்ம் மீது நீ கொண்ட காதலை நான் மதிக்கிறேன் …சரி இப்போ என்னோடுவா” என்றாள்.



அவளோடு அந்த அறையில் நுழைந்த அனி, அங்கு நிறைய சோதனைகுழாய்கள் பிப்பெட்டுகள்,ப்யூரெட்கள் இருப்பதையும்பார்மலின் நெடி அடிப்பதையும் உணர்ந்தாள். .கண்ணாடிஜாடிகளில் ரசாயனதிரவத்தில் தவளைகள் மிதந்தன சதைத்துணுக்குகள் பாலிதீன்பைகளில் ..மூட்டைமூட்டைகளாய்.

குரங்கு ஒன்று விட்டத்திலிருந்து க்ர்ர் என்று அசிங்கமாய் சிரித்தது. கேரட்டைக்கடித்துக்கொண்டு வெள்ளை முயல்கள் இரண்டும் கூண்டிற்குள் ஓட்டப்பந்தயம் நட த்தின. ஒரமாய் சின்ன மேஜைமீது சாதுவாய் வெள்ளைஎலிதூங்கிக்கொண்டிருந்தது.

“மேடம் நீங்…. நீங்க?”குழப்பமும் திகைப்புமாய் அனி கேட்டாள்.

“நான் ஒரு சயின்டீஸ்ட் பேர் குந்தளா தேவி.செல்லமா’குந்த்!’ அனி! என்கதை ரொம்ப சோகமானது முப்பது வருஷம் முன்னாடி எனக்கு கல்யாணமாகி அந்த உறவில் பிறந்த குழந்தை இறந்துபோனது அதில் ரொம்பமனம் உ டைஞ்சிபோனேன்.
அ ப்போது என் கவனத்தை திசைமாற்ற க்ளொனிங் துறையில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் இதுக்கு சம்மதித்தார். என்னோட ரண்டாவது குழந்தையை க்ளோனிங் முறைலதான் பெற்றேன் அவன்தான் தர்ம்… அடுத்து அர்ஜ் ,பீம் .நகுல், சகா ன்னு மொத்தம் அ ஞ்சுபையன்கள் எனக்கு .

எல்லாருமே ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருப்பாங்க .அதனால குழப்பம் வேண்டாம்னு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஊ ர்ல அனுப்பி படிக்கவச்சிட்டேன். தர்ம் மட்டும் இங்க பெங்களூர்ல என்கூட இருக்கான்..வருஷம் ஒருமுறை எல்லாரும் இங்க வருவாங்க.. ஒருவாரம் வீட்லயே இருப்பாங்க சேர்ந்து வெளில போக மாட்டாங்க…..இப்போ இங்க தான் இருக்காங்க….

அனி! உனக்கு தர்ம் கிடைக்கலேன்னா என்ன, மீத நாலுபேர்ல யாரையாவது செலெக்ட் செஞ்சிக்கோயேன்? எல்லாருமே க்ளோனிங் கைஸ்! லுக்கிங் நைஸ்! அவங்களில் ஒருத்தனுக்கு கண்டிப்பா பழைய ஐஸ்வர்யாராய் மாதிரி இருக்கற உன்னைப்பிடிச்சிடும். நான் கல்யாணம் செஞ்சிவைக்கிறேன்…”

குந்தளாதேவி இபடிச்சொல்லும்போது, “ஹாய் மாம் யாரோட பேசிட்டு இருக்கிங்க?’ எனக்கேட்டபடி வந்த நால்வரையும் பார்த்தாள் அனி, அடுத்தகணம் மயக்கம்போட்டு விழுந்தாள்.
*****************************************************************
“ஏய் என்னாச்சு அனிதா? சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல்கதைப்போட்டிக்கு எழுதணும்னு சொல்லிட்டு இன்னமும் தூங்கிட்டு இருக்கே? காலேஜுக்கு நேரமாச்சு…ஏந்திரு அனிதா ஏந்திரு?”

ஜோதி வந்து தன்னைத்தட்டி எழுப்பவும் அனிதா ,”கனாக்கண்டேனடி தோழி” என்று பாடியபடியே பாத் ரூமுக்குப்போனாள் .

*************************************************************

55 comments:

  1. கதை செம அசத்தல். வித்யாசமான கதை களம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  2. //ambi said...
    கதை செம அசத்தல். வித்யாசமான கதை களம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)//

    அன்புத்தம்பி அம்பி முதல் பின்னூட்டமா? டாங்க்ஸ்!! ஜுனியர் சௌக்கியம அம்பி?

    ReplyDelete
  3. Anonymous12:18 PM

    தசாவதார கதை போல எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ கொண்டு போய் முடிச்சிட்டீங்க.. நல்லா இருக்கு, இது
    உண்மையிலேயே கனவு அறிவியல் கதை தான்.



    காமேஷ்.
    [வாழ்க்கையில் முதல் முறையாக
    ப்ளாக்குக்கு கமண்ட் எழுதியிருக்கேன்.]

    ReplyDelete
  4. Anonymous12:27 PM

    என்னோட கமண்ட் வரலியே.. !

    ReplyDelete
  5. Anonymous12:28 PM

    Your comment has been saved and will be visible after blog owner approval.

    சரி சரி இப்பத்தான் இதை கவனிச்சேன்..
    இதுவும் நல்லதுக்கு தான்..!

    ReplyDelete
  6. Anonymous2:22 PM

    சூப்பர் அனி செம சூப்பர் எப்படி இதெல்லாம்?

    ReplyDelete
  7. ஜூப்பருங்க கதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. கதை களம்

    அதகளம் அருமை!

    ReplyDelete
  9. /
    ‘கால் மீ ‘அனி’ டாட்! நான் இதை முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷைலஜாகிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்
    /

    ஹாஹா

    :)))

    ReplyDelete
  10. /
    நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆ ணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல…
    /

    2050 லயே இப்பிடியா!?!?
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  11. /
    பழைய நடிகை பாவனா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே!
    /

    எலும்பும் தோலுமாய் கன்றாவியாவா!?!?
    :))))

    பழம்பெரும் நடிகை நயந்தாரா பத்தி எதும் இல்லையே :((

    கண்டனங்கள்

    ReplyDelete
  12. /
    5 ஜிசெல்போனில்(பிரசவம் தவிர அதில் எல்லா காரியங்களையும் வெற்றிகரமாய் செய்யலாம்
    /

    '5ஜி' யா!?
    இருக்கட்டும் இருக்கட்டும்
    :)

    ReplyDelete
  13. /
    2050ன் புதுமுகம் சாகர் போல அட்டகாசமாய் இருந்தான்.
    /

    இதுதான் பழம்பெரும் நடிகை ஜோதிகா பையன் பேரோ!?!?!?

    :)))))

    ReplyDelete
  14. /
    “ ஏய், பேட்மஜா! என் ஆளுடிஅவன் விடு அவனை” என பத்மஜாவை பிடித்துத்தள்ளினாள் அனிதா.
    /

    இதெல்லாம் 2004 'திருடா திருடி' படத்திலேயே பாத்துட்டோம்!!

    என்ன ஒரு தொலை நோக்கு பார்வை இல்ல
    :))))

    ReplyDelete
  15. மிக அருமை.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. 2050ல் குளோனிங்... ம்ம்ம்.... குளோனிங் 2001 வந்துட்டது...

    நல்ல இருக்குது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. நல்லா இருந்ததுங்க கதை....!

    ReplyDelete
  18. //Anonymous said...
    தசாவதார கதை போல எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ கொண்டு போய் முடிச்சிட்டீங்க.. நல்லா இருக்கு, இது
    உண்மையிலேயே கனவு அறிவியல் கதை தான்.



    காமேஷ்.
    [வாழ்க்கையில் முதல் முறையாக
    ப்ளாக்குக்கு கமண்ட் எழுதியிருக்கேன்//


    காமேஷ் வா தம்பி வா! உன் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி!!! நன்றி காமேஷ்

    ReplyDelete
  19. Anonymous said...
    என்னோட கமண்ட் வரலியே.. !

    11:57 PM


    Anonymous said...
    Your comment has been saved and will be visible after blog owner approval.

    சரி சரி இப்பத்தான் இதை கவனிச்சேன்..
    இதுவும் நல்லதுக்கு தான்..//

    என்ன்ங்க பேரை எழுதக்கூடாதா? யாருன்னே தெரியலையே வருகைக்கு நன்றி அனானிமஸ்!

    ReplyDelete
  20. //bharathi said...
    சூப்பர் அனி செம சூப்பர் எப்படி இதெல்லாம்?/


    வாங்க வாங்க பாரதி தமிழன்!உங்க வருகைக்கு முதல் நன்றி கருத்துக்குஅடுத்த நன்றிவித் மகிழ்ச்சி!!!

    ReplyDelete
  21. மதுரையம்பதி said...
    ஜூப்பருங்க கதை. வாழ்த்துக்கள்.//

    >>>>>மதுரையம்பதி வாங்க! ஜூப்பரா...ம்ம்ம்..ஏதோ தெரிஞ்ச அலவு எழுதீருக்கேன் அவ்ளோதான்! நன்றிகருத்துக்கு.

    ReplyDelete
  22. மங்களூர் சிவா said...
    கதை களம்

    அதகளம் அருமை...

    மங்களூர் சிவா said...
    /
    ‘கால் மீ ‘அனி’ டாட்! நான் இதை முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷைலஜாகிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்
    /

    ஹாஹா///


    மங்களூர்சிவா வாங்க தம்பி
    சௌக்கியமா? சிரிச்சீங்களாகதைபடிச்சி..மகிழ்ச்சி!:)

    ReplyDelete
  23. மங்களூர் சிவா said...
    /
    பழைய நடிகை பாவனா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே!
    /

    எலும்பும் தோலுமாய் கன்றாவியாவா!?!?
    :))))

    பழம்பெரும் நடிகை நயந்தாரா பத்தி எதும் இல்லையே :((

    கண்டனங்கள்//

    அதுசரி அப்றோம் நமீதான்னு யாராவது வருவாங்க.....அவசரத்துக்கு பாவ்னாதான் அகப்பட்டாங்கப்பா..
    எலும்புதோல் பாவ்னாவா? வராங்க பாவ்னாரசிகர்கள் இருங்க சிவா!:)

    4:13 AM

    ReplyDelete
  24. மங்களூர் சிவா said...
    /
    5 ஜிசெல்போனில்(பிரசவம் தவிர அதில் எல்லா காரியங்களையும் வெற்றிகரமாய் செய்யலாம்
    /

    '5ஜி' யா!?
    இருக்கட்டும் இருக்கட்டும்
    :)
    >>>>> ஆமா ச்சிவா வந்துடாதா அது?:)

    ReplyDelete
  25. Mastan said...
    2050ல் குளோனிங்... ம்ம்ம்.... குளோனிங் 2001 வந்துட்டது...

    நல்ல இருக்குது...

    வாழ்த்துக்கள்..//

    >>>>>
    நன்றி மஸ்தான்!.

    6:11 AM

    ReplyDelete
  26. மங்களூர் சிவா said...
    /
    “ ஏய், பேட்மஜா! என் ஆளுடிஅவன் விடு அவனை” என பத்மஜாவை பிடித்துத்தள்ளினாள் அனிதா.
    /

    இதெல்லாம் 2004 'திருடா திருடி' படத்திலேயே பாத்துட்டோம்!!

    என்ன ஒரு தொலை நோக்கு பார்வை இல்ல
    :))))////


    ஹோம் மேக்கர்ப்பா நான்...ரொம்ப தொலை பார்க்கமுடியலியே!!!:) கருத்துக்கு நன்றி சிவா.

    ReplyDelete
  27. மங்களூர் சிவா said...
    மிக அருமை.வெற்றி பெற வாழ்த்துக்கள்.'////
    >>நன்றி சிவா வெற்றியைவிட அட்டெம்ப்ட் செய்ய நினைத்ததை இங்கு நிறைவேற்றிக்கொண்டேன் என்பதே உண்மை.

    ReplyDelete
  28. நல்ல கதை ஷைலஜா... சிறிது நீளம் அதிகம் என்றாலும் முடிவு அசத்தலாக இருந்தது..

    ReplyDelete
  29. யக்கா
    //இந்தக்கதையை எழுதப்போகும் ஷைலஜாகிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்…இந்த 2050ல அ, னி , தா ன்னு இவ்ளோ பெரிய பெயரை யாராலும் கூப்பிடமுடியாதுன்னுதான் //

    அலோ அனி
    இந்தக் கதையை எழுதியது ஷைலஜா இல்லை! இந்த 2050ல ஷை, ல , ஜா ன்னு இவ்ளோ பெரிய பெயரா?

    அவங்க பேரு ஷை!

    ReplyDelete
  30. கதை ஜூப்பருக்கா
    ஆங்காங்கே ஷைலு டச்!
    எக்ஜாம்பிள்: நாய் குரைப்பது வள்-கம் :)

    மைத்துனன் தர்ம் வந்தென் கைத்தலம் பற்றிக்
    க்ளோனிங் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
    :)))))))))))))))

    ReplyDelete
  31. //பழைய நடிகை பாவனா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே!
    //

    எலும்பும் தோலுமாய் கன்றாவியாவா!?!?
    :))))//

    What the heck!
    Absolute nonsense!
    How dare u call my Bhavana like this?
    I will delete all my previous pinoottams!

    ReplyDelete
  32. வெண்பூ said...
    நல்ல கதை ஷைலஜா... சிறிது நீளம் அதிகம் என்றாலும் முடிவு அசத்தலாக இருந்தது..///


    மிக்க நன்றி வெண்பூ...தவிர்க்க முடியாமல் கதை நீளமாகிவிட்டது.
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  33. இரா. வசந்த குமார். said...
    நல்லா இருந்ததுங்க கதை....!
    /////

    நன்றி வசந்த குமார் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  34. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    யக்கா
    //

    அலோ அனி
    இந்தக் கதையை எழுதியது ஷைலஜா இல்லை! இந்த 2050ல ஷை, ல , ஜா ன்னு இவ்ளோ பெரிய பெயரா?

    அவங்க பேரு ஷை!///

    ஆஹா இதை நான் கவனிக்கல்யே:0 இதுக்குத்தான் செல்லத்தம்பி இங்க வரணும் என்கிறது!!

    ReplyDelete
  35. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    கதை ஜூப்பருக்கா
    ஆங்காங்கே ஷைலு டச்!
    எக்ஜாம்பிள்: நாய் குரைப்பது வள்-கம் :)//

    :):) நன்றி...

    மைத்துனன் தர்ம் வந்தென் கைத்தலம் பற்றிக்
    க்ளோனிங் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்
    :)))))))))))))))//
    க்ளோனிங் செய்யக்கனா?:) ஆன்மீகடச் இங்கயுமா? அருமை!!
    7:02 AM

    ReplyDelete
  36. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //பழைய நடிகை பாவனா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே!
    //

    எலும்பும் தோலுமாய் கன்றாவியாவா!?!?
    :))))//

    What the heck!
    Absolute nonsense!
    How dare u call my Bhavana like this?
    I will delete all my previous pinoottams!
    /////
    >>>> அமைதி அமைதி!!! உங்க பாவனாவை நான் ஏதும் சொல்லலப்பா..மங்களூர் சிவாதான்..
    அவர் பதிவுல போய் எல்லாபின்னூட்டத்தையும் அழிச்சிட்டு வந்து உங்க கோபத்தைத் தணிக்கிறேன் சரியா?:):)

    ReplyDelete
  37. /
    kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //பழைய நடிகை பாவனா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே!
    //

    எலும்பும் தோலுமாய் கன்றாவியாவா!?!?
    :))))//

    What the heck!
    Absolute nonsense!
    How dare u call my Bhavana like this?
    I will delete all my previous pinoottams!
    /

    கேஆரெஸ் நோ ரென்சன், நோ ரென்சன்

    பழம்பெரும் நடிகை நயந்தாரா உங்கள் கனவில் வந்து சமாதானப்''படுத்து''வாராக!!

    ReplyDelete
  38. கதை நல்லாருக்குங்க மை!

    ReplyDelete
  39. //கேஆரெஸ் நோ ரென்சன், நோ ரென்சன்//

    சொன்னது சிவா என்றாலும்...
    பதிவு அக்காவோடையது...
    தூற்றுவார் தூற்றல் எல்லாம் போகட்டும் அக்காவுக்கே! :)

    ஹிஹி
    ஷைலு அக்கா கிட்ட சண்டை போட்டு ரொம்ப நாளாச்சா? அதான்! ஒங்க புண்ணியத்துல! :)))

    //பழம்பெரும் நடிகை நயந்தாரா உங்கள் கனவில் வந்து சமாதானப்''படுத்து''வாராக!!//

    ஓ நோ!
    தீதும் நன்றும் நயன்தாரா வாரா!

    அடியேன் பாவனப் ப்ரியன்! :)

    ReplyDelete
  40. சூப்பர் ஷைலஜாக்கா!! :))

    ReplyDelete
  41. சூப்பர்..ரொம்ப ரொம்ப அருமையான கதை...கற்பனைய நல்லா திகட்டாம Present பண்ணிருக்கீங்க.. அசத்தல்..வாழ்த்துக்கள்..வெற்றி நிச்சியம் :))

    ReplyDelete
  42. ஏனுங்க்கா... நீங்களும் இந்த ஆட்டத்துல இருக்கீங்களா?? :((( இத முன்னமே சொல்லிருந்தா நாங்கெல்லாம் அப்பவே ஜகா வாங்கிருப்போம்ல.....

    கத அட்டகாசம்.... :)))

    ReplyDelete
  43. மங்களூர் சிவா said...
    /
    kannabiran, RAVI SHANKAR (KRS) said...



    What the heck!
    Absolute nonsense!
    How dare u call my Bhavana like this?
    I will delete all my previous pinoottams!
    /

    கேஆரெஸ் நோ ரென்சன், நோ ரென்சன்

    பழம்பெரும் நடிகை நயந்தாரா உங்கள் கனவில் வந்து ......//
    சிவா!!! சிரிப்பு தாங்கல எனக்கு:):):)

    ReplyDelete
  44. கவிநயா said...
    கதை நல்லாருக்குங்க மை!
    //////நன்றி மை கவி!!!

    ReplyDelete
  45. இலவசக்கொத்தனார் said...
    சூப்பர் ஷைலஜாக்கா!! :))

    1//

    கொத்ஸ் உங்க திறமைக்கு முன்னாடீ இதெல்லாம் ஒண்ணுமே இல்ல....சயின்ஸ் ஃபிக்ஷன்ன்னு
    ஏதாவது எழுதணும்னு சின்ன முயற்சி அவ்வளோதான் நன்றி பாராட்டுக்கு கொத்ஸ்

    ReplyDelete
  46. Ramya Ramani said...
    சூப்பர்..ரொம்ப ரொம்ப அருமையான கதை...கற்பனைய நல்லா திகட்டாம Present பண்ணிருக்கீங்க.. அசத்தல்..வாழ்த்துக்கள்..வெற்றி நிச்சியம் //


    நன்றி ரம்யா ரமணி. உங்க வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  47. கதை நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  48. ஜி said...
    ஏனுங்க்கா... நீங்களும் இந்த ஆட்டத்துல இருக்கீங்களா??
    :((( இத முன்னமே சொல்லிருந்தா நாங்கெல்லாம் அப்பவே ஜகா வாங்கிருப்போம்ல.....///>>>>>>


    வாங்க தம்பி ஜீ!! என்னது நீங்க ஜகாவாங்கறதா? இதெல்லாம் ஓவராதெரியல?:0 உங்க இயல்பான காமெடியானநடைல கலக்கலாநீங்க எழுதுவதை நான் எப்படி ரசிக்கிறேன் தெரியுமா?

    //கத அட்டகாசம்.... :)))//

    நன்றி ஜீ!!

    ReplyDelete
  49. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கேஆரெஸ் நோ ரென்சன், நோ ரென்சன்//

    சொன்னது சிவா என்றாலும்...
    பதிவு அக்காவோடையது...
    தூற்றுவார் தூற்றல் எல்லாம் போகட்டும் அக்காவுக்கே! :).///

    >>>>>போற்றிப்பாடுங்க ஆணே!!!!!:):)

    //ஹிஹி
    ஷைலு அக்கா கிட்ட சண்டை போட்டு ரொம்ப நாளாச்சா? அதான்! ஒங்க புண்ணியத்துல! :)))//

    தெரியாதாக்கும் இதுக்கெல்லாம் அஞ்சமாட்டாஅரங்கப்ரியா ஹ:):)

    //ஓ நோ!
    தீதும் நன்றும் நயன்தாரா வாரா!//

    ஆஹா என்ன ஒரு சொல்லாட்சிப்பா:):)

    //அடியேன் பாவனப் ப்ரியன்! ://

    பாவ(ம்)னப்ரியனா?:) பாக்லாம் எத்தனை நாளைக்குன்னு?:):):)

    ReplyDelete
  50. லதானந்த் said...
    கதை நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்//

    நன்றி லதானந்த்! கேள்விபதில் பகுதிக்கு வந்து உங்கள சிக்கலான கேள்வி கேட்டு தாக்கறேன் இருங்க:):)

    ReplyDelete
  51. ஹலோ ஷைலஜா,

    ஆஹா, என்ன கற்பனை... என்ன கதை... சூப்பர் போங்க.

    நிஜமாவே 2050 ல இப்படிலாம் மாறிடுமா?

    நாம் இதெல்லாம் ரொம்பவே ரசிச்சேன்.
    // நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆ ணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல… //

    //bad m a ja//

    //எக்ஜாம்பிள்: நாய் குரைப்பது வள்-கம் :)//

    ReplyDelete
  52. Sumathi. said...
    ஹலோ ஷைலஜா,

    ஆஹா, என்ன கற்பனை... என்ன கதை... சூப்பர் போங்க.

    நிஜமாவே 2050 ல இப்படிலாம் மாறிடுமா?

    நாம் இதெல்லாம் ரொம்பவே ரசிச்சேன்.
    // நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆ ணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல… //

    //bad m a ja//

    //எக்ஜாம்பிள்: நாய் குரைப்பது வள்-கம் :)//

    >>>>>> vaanga sumathi! thamiz font suddena ippo makkar ! epdiirukinga pinnuttamittathukku nandri sumathi

    ReplyDelete
  53. Anonymous3:53 PM

    hi Shai...

    நாயகி நமீதா போல் இருந்தால் என்றால் நீங்க என்ன குறைஞ்ச போவிக???

    ராம்ஜி

    ReplyDelete
  54. ராம்ஜி said...
    hi Shai...

    நாயகி நமீதா போல் இருந்தால் என்றால் நீங்க என்ன குறைஞ்ச போவிக???

    ராம்ஜி//

    வாங்க ராம்ஜி
    நமீதாபோல நாயகி இருந்தா ஒரு குறைவும் இல்லதான்!!!!! அடுத்தகதைக்கு நாயகியாய் நமீதாதான்!! கோவிச்சிக்காதீங்க:)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.