Social Icons

Pages

Wednesday, August 19, 2009

GEMSHOW (அல்லது) கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?!






கோயம்பேடு மார்க்கெட்டுல கூறுகட்டி காய்கறிவிக்கறமாதிரி முத்து பவழம் கிறிஸ்டல் ஜேட் ப்ளூசஃபையர் இன்னபிற கற்களை அமெரிக்கத்தலைநகரில் (வாஷிங்டன்)விற்றுக்கொண்டிருந்த இடத்துக்கு ஒரு நன்னாளில் போனதை விவரிக்கவே இந்தப்பதிவு!


நவரத்தினங்களில் இந்த மாணிக்கம் என்கிற கல்லுக்கு ரொம்பவே மதிப்பு! Ruby இதுக்கு ஆங்கிலத்துலபேரு.

மாணிக்கத்திலும் பல தினுசுகள்.


Adelaide ruby" is a common name for almandine garnet,
"Cape ruby" is a common name for pyrope garnet found in South Africa; "Arizona ruby" and "Colorado ruby" are common names for pyrope garnet.

"American ruby" and "Mont Blanc ruby" are really garnet or rose quartz.

"Bales Ruby" is really pale red spinel.

"Bohemian ruby", "Montana ruby" and "Mountain ruby" are really red garnet.

"Brazilian ruby" is really pink or "fired" topaz, or pink tourmaline.





இப்படி ஒவ்வொரு கல்லுக்கும் பலதினுசான வடிவங்கள் தோற்றங்கள் அவைகளை பல்லாயிரம் அல்லது லட்சக்கணக்கில் வியாபாரத்திற்க்கொண்டுவந்து வைக்கும் இடம்தான ஜெம் ஷோ!







அதைக்கொட்டியும் மாலையாய் கட்டியும் வச்சிருக்காங்க ! வைரம் பிளாட்டினம் எல்லாம் கண்ணாடி ஷோகேசிலிருந்து கண்ணடித்தது.

.


எதைப்பார்க்க எதைவிட? ஜம்னு தான் இருக்கு ஜெம்ஷோ!


அமெரிக்கால இருக்கறவங்களுக்கும் அவங்கவீடுகளுக்கு என்னைமாதிரி வந்துபோறவங்களுக்கும் இதுதெரிஞ்சிருக்கும்

அதனால அப்படிப்பட்டவங்க அடுத்த சிலவரிகளை ஸ்கிப் பண்ணிடுங்க!

அமெரில்லால 30முக்கிய ந்கரங்களில் இந்த ஜெம் ஷோ சில(1967முதலாம்) வருஷங்களா நடத்தறாங்க...நம்ம ஊர் கல்யாணமண்டபம் மாதிரி நாலுமடங்கு பெருசா இருககற கட்டிடத்துல நூத்துக்கண்க்கான ஸ்டால்கள்.

உலகத்தின் அத்தனை விதமான கற்களும்(கூழாங்கல்போன்ற ஏதோகல்லில் கூட மோதிரம் கைக்குப்ரேஸ்லெட் என்றுசெய்து வைத்திருந்தனர். ”wow! amazing! awesome!" என்று அதனை அந்நியமக்கள் சிலர் சிலாகித்துக்கொண்டிருந்தனர்).

ஜெம்ஷோ நடக்கும் இடத்துக்குள்

உள்ள நுழைய ஆறுடாலர் நுழைவுக்கட்டணம் முன்னே இருந்ததாம் இந்தவாட்டி இலவசக்கூப்பன் கொடுத்திருந்தாங்க. அதைக்காண்பிச்சி நுழைஞ்சா வாயிலில் ஒரு காவல்காரர் கூப்பனைவாங்கிட்டு இடதுகைமணிக்கட்டுல OK அப்படீன்னு entryஸ்டாம்ப்பினால் ஒத்தி எடுத்தார்...(.மறுநாள்குளிக்கிறவ்ரை இது தேர்தல்ஓட்டுமசி மாதிரி ஒட்டிட்டு இருக்கு!)

பேருக்கு ஐஞ்சாறு ரோஸ்நிற உடம்பு போலீஸ்காரர்கள் நுழைவு வாயிலில ஒருஓரமா பயமுறுத்தாமல் கருணைக்கண்களோடு நிக்கிறாங்க.

இவங்களை நம்ம ஊர்க்காரங்க மாமா என்கிறாங்க பெண்போலீசை மாமிங்கறாங்க அங்கேஒரேஒரு அழகானமாமிகண்ல தென்பட்டாங்க,

உள்ள நுழைஞ்சதும் ஏதோ தேவலோகம்மாதிரி காட்சி அளித்தது. பலஸ்டால்களில் மணிகளின் விறபனைக்கு அழகழகான பெண்(மணிகள் பள) பலர்!...

.கல்யாணத்துக்கு வைரமோதிரத்தை செலெக்ட் செய்துகொண்டிருந்தது வைர ஸ்டாலில் ஒரு அமெரிக்கஜோடி .

pretty! wow ! என்று இருவரும் சில மோதிரங்களை அணிந்துபார்த்தபடி புகழ்ந்துகொண்டார்கள்..




முத்தானமுத்தல்லவோன்னு பாடலாம்போல முத்துச்சரக்கள் ஆயிரக்கணக்கில் சரம் சரமா
கோல்கேட்வெண்மையில், தந்தக்கலரில் லேசா மஞ்சள்பூச்சோடு என காணப்பட்டது கோலிக்குண்டு சைசிலிருந்து கடுகு அளவுவரை எல்லா மணிவகைகளும் இருந்தன. ஒரிஜினலைபோல டூப்ளிகேட் கற்களும் சொன்னாலேதவிர தெரியாத வகையில் ஏமாற்றின:).


எத்தனை வண்ணங்கள் அப்பப்பா!

சிவப்புன்னா அதுல அடர்த்தியான சிவப்பிலிருந்து மிகமென்மையான சிவப்புவரை ஏழுவிதங்கள் அதுபோல எல்லா வர்ணங்களிலும்.

இயற்கையில் இத்தனை நிறங்களான்னு கவிதை எழுதலாம்போல கைதுறுதுறுத்ததுன்னா பாத்துக்குங்களேன்!

எதைபாகக்றது எதைவிடறதுன்னே தெரியல!

மாணிக்கச்சரங்கள் (தங்கத்தில் கட்டிய சரமாகவோ நெக்லசாகவோ இல்லை அப்படியே இயற்கையாக ஒரு நூலில்மட்டும் கோக்கப்பட்டு) அந்த விளக்குவெளிச்சத்தில்கண்ணைப்
பறித்தன.

இந்த ஸ்டாலில் நல்லகூட்டம் நானும்
எட்டிப்பார்த்தேன்.

இக்கட ச்சூடு அக்கடச்சூடு என்று ஒரே சுந்தரத்தெலுங்கு நிறையவேகேட்டது.
கடைக்காரர் ஜப்பான்காரர்போலத்தெரிந்தார்

அவர் ஸ்டாலில் ரூப் தேரா மஸ்தானான்னு பாடலாம் போல ரூபி சிவந்திருந்தாள்.

ஆஹா!

மாணிக்கம்!
எத்தனை உசத்தியான கல் இது! அபிராமிபட்டர் அன்னையைப்பாடும்போது முதல்பாடலிலேயே உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்கிறாரே!

மாணிக்கங்கட்டி வயிரமிடைகட்டி. ஆணிப்பொன்னாற்செய்த என்று பெரியாழ்வார் இந்தக்கலைத்தான் முதலில் கொண்டுவந்து கண்ணனுக்கு வண்ணத்தொட்டில் கட்டுகிறாரே!


சிலம்பில்மாணிக்கப்பரல்! (சிலப்பதிகாரமும் கண்ணகியும் நினைவுக்கு வரணுமே இங்க?) எனக்கு பூம்புகார்படம் புகையாய் ரீவைண்ட் ஆகியது. லேசா விஜயகுமாரியின் நீண்ட(ஒட்டு? கூந்தலும் உருட்டுமுழியும் கூடவே நினைவில்வந்தன!

மனிதருள்மாணிக்கம் என்கிறார்கள்



கல்லெல்லாம் மாணிக்கக்கல் ஆகுமா?


ஆகாதுதான் கண்ணதாசரேன்னு கவிஞருக்கு பதில் சொல்லியபடி


மாணிக்கத்தைப்பார்ததும் மலர்ந்த நான் என் கணவரைத்திரும்பிப்பார்த்தேன் ..காணவில்லை அங்கு.

தெரியுமே,.

இதுமாதிரி இடங்கள் துணி,நகைக்கடைகள் எல்லாம் உடன்வந்தால் எனக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததுபோல வேறுபுறம் வேடிக்கைபார்த்து நிற்பார். துப்பறிந்து அவரை இழுத்துவந்து .”மாணிக்கம் பாருங்க”

என்றேன் கிசுகிசுப்பானகுரலில்.

”ஆ மாணிக்கமா? என்கூட பெங்களூர்ல ஒர்க் பண்ணிட்டுவேறகம்பெனிமாறிபோன அந்த டூல்ரூம் டிபார்ட்மெண்ட்மாணிக்கமா ? வாவ் ! அதுவும் இங்கயா? நல்லவேளை..பொழுதுபோகாம இந்தமணிக்கூட்டதுல மாட்டிட்டு தவிச்சிட்டு இருக்கோமேன்னு நினச்சேன் பேச்சுத்துணைக்கு நல்ல ஆள் கிடைச்சாரு..எங்கே மாணிக்கம் எங்கேமாணிக்கம்(maani come)! ” என்று பரபரத்தார்.

இடுக்கண்வருங்கால்மட்டுமல்ல இப்படியொரு இக்கட்டான நிலமையிலும் சிரிச்சிப்பழக்கம் எனக்கு ஆகவே சிரித்துதொலைத்துவிட்டு விவரம்கூறினேன்

‘ ரூபி அதாவது மாணிக்கம் இதான்பாருங்க அழகா இருக்கு என்ன ஒரு ஒளிபாருங்க? ஜோரா இல்ல? ”!


ஏதோ துர்வஸ்துவைப்பார்க்கிறவர்
போலபார்த்துவிட்டு.” ஓ இதானா? மஞ்சளா இருந்தா தங்கம் அதுதான் உன்னைக்கல்யாணம் செய்தபின்னாடி தெரிஞ்சிட்டேன் மத்தபடி நான், இந்த நவரத்தின கல் பத்தின அறிவு இல்லாத ’கல்’ லாதவன்” என்று சொல்லி நகர்ந்தார் என் தங்கமான புருஷன்!

மாணிக்கத்தின விலையைக்கேட்டதும் அதை எனது இந்திய மூளை ரூபாயில் பெருக்கிப்பார்த்து அம்மாடியோவ் என வாய் முணுமுணுத்து மனசு இப்ப வேணாம் என்று முடிவெடுத்தது.


ஏதேதோ கொழுக்மொழுக்கென்றமணிகள் மாலைகளை எல்லாம் அசராமல் வெளிநாட்டுப்பெண்கள் வாங்கிப்போகிறார்கள்.கழுத்திலிட்டு அழகுபார்க்கிறார்கள். தரம் குணம் பார்த்துப்பலர் நிதானமாய் பொறுமையாய் வாங்கிறார்கள்

வழக்கம்போல இந்தியஸ்டாலில் நம்ம மக்கள்கூட்டம் அலைமோதியது.

பவழங்களை ரோஜாப்பூபோல செய்து செயி்னில்பதித்து பரப்பி இருந்தார்கள்.

பவழமா பழவமா எதுசரி?

‘நற்பவழம் இங்ககிடைக்குமாடீ புவனா ?”என்று ஒருமாமி அடுத்தவாரம் பிரசவிக்க இருக்கிற தன்மகளிடம் ஆர்வமாய்க் கேட்டுகொண்டிருந்தார்

காதில்தேன் பாய்ந்தமாதிரீ இருக்கவும் அந்த செந்தமிழுக்குச்சொந்தக்காரர்களைப்பார்த்து புன்னகைத்தேன்.அவங்க வேற ஏதோநகைபார்ப்பதில்பிசியா இருந்ததால் என்புன்னகையை கண்டுக்கல!

சர்தார்ஜீஒருத்தர் ஜீ என்றார் என்னைப்பார்த்து அவர்ஸ்டாலுக்குபோனதும்...தெரிஞ்ச
ஹிந்திலகொஞ்சம் அவர்கிட்டபேசினேன். வடக்கத்திக்கார நகைகள் ராஜஸ்தானி நகைகள் 18கேரட் தங்க நகைகள் என ஏதேதோ இருந்தன. ஆனால் மாணிக்கத்தைக்கண்ட என்கண்கள் மற்றொன்றினைப்பரவசமாய்க்காணவிரும்பவில்லை

இருந்தாலும் வந்ததுக்கு ஏதும் வாங்கணுமே! இந்தியா போனா காலனி சிநேகிதிங்க கேப்பாங்க இல்ல ?:)

அடுத்து இனனொரு ஸ்டால்ல கருப்பில் ஒருக்றிஸ்டல் சரம், முத்துசரம், சிவப்பு மணிமாலை அஞ்சுடால்ர்னாங்க அதுல நாலுசரம் வாங்கினேன்.

இன்னும் கைப்பைகள் கிஃப்ட்பொருட்கள்
இவைகளுக்கு தனி ஸ்டால்கள்!

எழுபதுவயது கொரியப்பெண்மணி சுறுசுறுப்பாய் கல்லாப்பெட்டில உட்கார்ந்தபடி ஐபோனில் பேசிக்கொண்டிருந்தார்.

அழகான டப்பாவில் மடித்தபொட்டலத்தில் கற்கள் மணிகள்! மணி (money) மட்டும் நம்மகிட்டகொள்ளையா இருந்தா போட்டுத் தாக்கலாம்..அப்படி ஒரு வெரைட்டி!

ஒருஇடத்தில் சட்டென மெல்லிய துணியில் ஸ்டால்களின் பாதை நடுவே திரைபோட்டிருந்தார்கள்.

திரைக்குப்பின்னால் என்ன நடக்கிறதென.
தெரிஞ்சிக்கலேன்னா டைலினால் மாத்திரையைமுழுங்கினாலும் தலை வெடிச்சிடும்போல இருக்கவே திரைக்குமுன் சின்னமேஜைஅருகே நாற்காலியில்அமர்ந்திருந்த அந்த அயல்நாட்டுமனிதரைக்கேட்டேன்

ஹோல்சேல் பிசினஸ் அதாவது மொத்தவியாபாரமாம் ஜுவல்லரிக்கடைக்கார்கள் வியாபரிகள்மட்டும் தங்கள் அடையாள அட்டையைக்காட்டிட்டு உள்ளபோகலாமாம்.

நன்றிகூறிவிட்டு வேற பெரிய நகைக்கடைக்கெல்லாம் சொந்தமில்லை என்பதால் ட்ரேட்மார்க் புன்னகையைமட்டும் சிந்திவிட்டு அங்கேருந்து நகர்ந்தேன்.






2டாலர்கள்( அமெரிக்கப்பணமில்லைஇது செயின் டாலர்) 2 வெள்ளிமாதிரியான உலோகமோதிரங்கள் ஏழெட்டு மணிமாலைகள் ஒரு கார்னெட்பேஸ்லெட் மட்டும் அந்த் ஐந்துமணிநேரத்தில் இருபதுடாலர்களைகொடுத்துவாங்கி மகிழ்ச்சியாய் வீடுவந்தேன்.

அன்று வீட்டுக்குவந்த விருந்தினர்கூட்டதில் ஒருபெண்.தானும் மதியம் ஜெம்ஷோபோய் மாணிக்கச்சரம் வாங்கி வந்ததை கழுத்தில்போட்டுக்காட்டினாள்

’நல்லாருக்கு’ என்றேன் நான் கண்களைவிரித்தபடி

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஷைலஜா?!

அந்தப்பெண் தொடர்ந்தாள்

’என்னவோபோங்க வாங்கிட்டேனே தவிர அசல்மாணிக்கமான்னு டவ்ட்டாவே இருக்கு, அவ்ளோவிலைகொடுத்தது தரமானதுதான்னு வித்தவங்க சொல்றாங்க. இருந்தாலும் நம்மூர் நாதெள்ளசம்பத்துசெட்டிக்கடைலயோ இல்ல ஜாயலுக்காஸ்லயோ தங்கமாளிகைலயோ வாங்கீனா ஒருத்ருப்திதான்.மேலும்...ராசிக்கேத்த கல்போடணும்னு ஒருதமிழ் வெப்சைட்ல படிச்சது வீடுவந்ததும் நினைவுக்கு வந்தது. மாணிக்கம்னாலும் இந்தக்..கல்லுபோட்டதிலிருந்து ஒரே குழப்பமா இருக்கு... என்னஎன்னவோ சிந்தனைகள்”
என்றாள்கவலையோடு.

அடப்பாவமே மனசு தெளிவில்லேன்னா எந்தக்கல்லுல நகைபோட்டுட்டாலும் குழப்பம்தான்னு புரிஞ்சிக்கவேண்டாமோ?

மனசுக்குள் சொல்லியபடியே


அந்தப்பெண்ணை நான் வியப்பாய் நிமிர்ந்து பார்த்தபோது அவள் கழுத்திலிருந்த மாணிக்கங்கள் எதுக்கும் கவலைப்படாமல்இயல்பாக மின்னிக்கொண்டே இருந்தன.!









!



!:)



--

40 comments:

  1. Anonymous8:16 AM

    நீங்களே ஒரு ஜெம் , உங்களுக்கு எதுக்கு ...... :)
    எத்தனை நாள் அமெரிக்கா வாசம்??

    ReplyDelete
  2. எதைப்பார்க்க எதைவிட? ஜம்னு தான் இருக்கு ஜெம்ஷோ! ]]

    ஏன் விடனும்

    எதுக்கு விடனும்

    ReplyDelete
  3. சின்ன அம்மிணி said...

    நீங்களே ஒரு ஜெம் , உங்களுக்கு எதுக்கு ...... :)]]


    ஆஹா! ஆஹா!

    நானும் கூவிக்கிறேன் ...

    ReplyDelete
  4. //
    கோயம்பேடு மார்க்கெட்டுல கூறுகட்டி காய்கறிவிக்கறமாதிரி முத்து பவழம் கிறிஸ்டல் ஜேட் ப்ளூசஃபையர் இன்னபிற கற்களை அமெரிக்கத்தலைநகரில் (வாஷிங்டன்)விற்றுக்கொண்டிருந்த இடத்துக்கு ஒரு நன்னாளில் போனதை விவரிக்கவே இந்தப்பதிவு!//

    வெயிட்டீஸ்ஸ்ஸ்.. இந்த பாராவை படிச்சு முடிக்கறதுக்குள்ள எனக்கு மூச்சு வாங்குது..

    //பலதினுசான வடிவங்கள் தோற்றங்கள் அவைகளை பல்லாயிரம் அல்லது லட்சக்கணக்கில் வியாபாரத்திற்க்கொண்டு//

    படிக்கறப்போவே மலைப்பா இருக்கு.... நேர்ல பார்த்தால், மயக்கமா??

    //அமெரிக்கால இருக்கறவங்களுக்கும் அவங்கவீடுகளுக்கு என்னைமாதிரி வந்துபோறவங்களுக்கும் இதுதெரிஞ்சிருக்கும்

    அதனால அப்படிப்பட்டவங்க அடுத்த சிலவரிகளை ஸ்கிப் பண்ணிடுங்க!//

    எனக்கு தெரியாது... அதனால நான் படிச்சுக்கறேன் ப்ளீஸ்...

    //பேருக்கு ஐஞ்சாறு ரோஸ்நிற உடம்பு போலீஸ்காரர்கள் நுழைவு வாயிலில ஒருஓரமா பயமுறுத்தாமல் கருணைக்கண்களோடு நிக்கிறாங்க.//

    இதே இங்கன்னா?? நம்ம ஷர்ட் பாக்கெட்டுலயும், ஹேண்ட் பேக்லயும் ஏறி ஒருத்தர் உட்கார்ந்து விடுவார்...

    //சிவப்புன்னா அதுல அடர்த்தியான சிவப்பிலிருந்து மிகமென்மையான சிவப்புவரை ஏழுவிதங்கள் அதுபோல எல்லா வர்ணங்களிலும்.

    இயற்கையில் இத்தனை நிறங்களான்னு கவிதை எழுதலாம்போல கைதுறுதுறுத்தது//

    ஐயோ மிஸ் பண்ணிட்டீங்களே ஷைலஜா... எங்களுக்கு ஒரு அருமையான கவிதை போச்சு...

    //இக்கட ச்சூடு அக்கடச்சூடு என்று ஒரே சுந்தரத்தெலுங்கு நிறையவேகேட்டது.
    கடைக்காரர் ஜப்பான்காரர்போலத்தெரிந்தார் //

    கியாமோ கெ க‌ஹிமோ மிமா.... இது நான் சொன்ன‌து இல்ல‌. அந்த‌ ஜ‌ப்பான் க‌டைக்கார‌ர் சொன்ன‌து... இன்னாபா திட்ட‌ற‌ன்னு கேட்டேன்... ச‌வுக்கிய‌மான்னு கேட்டேன்னு சொன்னான்.... (சும்மா....இது ந‌ம்ம‌ளோட‌ ட‌ய‌லாக்...)

    //மாணிக்கம்!
    எத்தனை உசத்தியான கல் இது! அபிராமிபட்டர் அன்னையைப்பாடும்போது முதல்பாடலிலேயே உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்கிறாரே!//

    //மாணிக்கங்கட்டி வயிரமிடைகட்டி. ஆணிப்பொன்னாற்செய்த என்று பெரியாழ்வார் இந்தக்கலைத்தான் முதலில் கொண்டுவந்து கண்ணனுக்கு வண்ணத்தொட்டில் கட்டுகிறாரே!//

    //சிலம்பில்மாணிக்கப்பரல்! (சிலப்பதிகாரமும் கண்ணகியும் நினைவுக்கு வரணுமே இங்க?) எனக்கு பூம்புகார்படம் புகையாய் ரீவைண்ட் ஆகியது. லேசா விஜயகுமாரியின் நீண்ட(ஒட்டு? கூந்தலும் உருட்டுமுழியும் கூடவே நினைவில்வந்தன!//

    அடி தூள்....க‌விஞ‌ர்க‌ளும், க‌தாசிரியைக‌ளும், எங்கே போனாலும், அவ‌ர்க‌ள் ம‌ன‌சு அதை வ‌ச்சு எதோட‌ ஒப்பிட‌லாம்னு இருக்குமோன்னு கேக்க‌ற‌ மாதிரி உங்க‌ளோட‌ இந்த‌ ஒப்பீடு பார்க்கும்போது... வாழ்த்துக்க‌ள் ஷைல‌ஜா...

    //இதுமாதிரி இடங்கள் துணி,நகைக்கடைகள் எல்லாம் உடன்வந்தால் எனக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததுபோல வேறுபுறம் வேடிக்கைபார்த்து நிற்பார்.//

    வேடிக்கை எங்க‌ள் வாடிக்கை...இதுக்கு அவ‌ரும் விதிவில‌க்கில்லை..

    //இடுக்கண்வருங்கால்மட்டுமல்ல இப்படியொரு இக்கட்டான நிலமையிலும் சிரிச்சிப்பழக்கம் எனக்கு ஆகவே சிரித்துதொலைத்துவிட்டு//

    இது எங்க‌ளுக்கு தெரியுமே....

    //மஞ்சளா இருந்தா தங்கம் அதுதான் உன்னைக்கல்யாணம் செய்தபின்னாடி தெரிஞ்சிட்டேன் மத்தபடி நான், இந்த நவரத்தின கல் பத்தின அறிவு இல்லாத ’கல்’ லாதவன்” என்று சொல்லி நகர்ந்தார் என் தங்கமான புருஷன்!//

    ய‌ப்பா....

    //பவழமா பழவமா எதுசரி?//

    ப‌வ‌ழ‌ம் தான் ச‌ரி...

    //நற்பவழம் இங்ககிடைக்குமாடீ புவனா ?”என்று ஒருமாமி அடுத்தவாரம் பிரசவிக்க இருக்கிற தன்மகளிடம் ஆர்வமாய்க் கேட்டுகொண்டிருந்தார்

    காதில்தேன் பாய்ந்தமாதிரீ இருக்கவும் அந்த செந்தமிழுக்குச்சொந்தக்காரர்களைப்பார்த்து புன்னகைத்தேன்.அவங்க வேற ஏதோநகைபார்ப்பதில்பிசியா இருந்ததால் என்புன்னகையை கண்டுக்கல!//

    ஒரு கதாசிரியை ந‌ட்பை இழந்து விட்டார்க‌ள்..அவ‌ர்க‌ள் கொடுத்து வைக்காத‌வ‌ர்க‌ள்..

    //அழகான டப்பாவில் மடித்தபொட்டலத்தில் கற்கள் மணிகள்! மணி (money) மட்டும் நம்மகிட்டகொள்ளையா இருந்தா போட்டுத் தாக்கலாம்..அப்படி ஒரு வெரைட்டி!//

    ஹா...ஹா...ஹா...சூப்ப‌ர் வ‌ர்ண‌னை...

    //திரைக்குப்பின்னால் என்ன நடக்கிறதென.
    தெரிஞ்சிக்கலேன்னா டைலினால் மாத்திரையைமுழுங்கினாலும் தலை வெடிச்சிடும்போல இருக்கவே //

    அதானே, ப‌க்க‌த்துல‌ என்ன‌ ந‌ட‌க்குதுன்னு தெரிஞ்சுக்காத‌வ‌ங்க‌ எல்லாம் ம‌னுஷ‌ங்க‌ளா?? ஹீ...ஹீ....

    //மனசு தெளிவில்லேன்னா எந்தக்கல்லுல நகைபோட்டுட்டாலும் குழப்பம்தான்னு புரிஞ்சிக்கவேண்டாமோ?//

    அதே அதே ச‌பாப‌தே..

    //அந்தப்பெண்ணை நான் வியப்பாய் நிமிர்ந்து பார்த்தபோது அவள் கழுத்திலிருந்த மாணிக்கங்கள் எதுக்கும் கவலைப்படாமல்இயல்பாக மின்னிக்கொண்டே இருந்தன.!//

    வாவ்........ இதுதான் ஷைல‌ஜா ட‌ச்..... நச்......

    க‌ல‌க்கிட்டீங்க‌..... வாழ்த்துக்க‌ள் ஷைல‌ஜா......

    ReplyDelete
  5. மறுபடியும் அமெரிக்கா ஓடிட்டீங்களா?
    அங்கே நடக்கும் குட்டி குட்டி விஷயங்களையும் அழகாக கோர்த்து பதிவு போடுவது உங்களால் மட்டுமே முடியும். ஹாஸ்யம் சொட்டுகிறது.

    ReplyDelete
  6. /சின்ன அம்மிணி said...

    நீங்களே ஒரு ஜெம் , உங்களுக்கு எதுக்கு ...... :)
    எத்தனை நாள் அமெரிக்கா வாசம்??
    /

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    :))))))))))))))))))))))

    ReplyDelete
  7. ஷைலஜா

    நீங்களே ஜெம்.....உங்களுக்கு எதுக்கு .... என்று கேட்ட சின்ன அம்மணிக்கும்

    அமெக்காவில் நடக்கும் குட்டி குட்டி விஷயங்களையும் அழகாக கோர்த்து பதிவு போடுகிறீர்கள் என்று பாராட்டிய ஷக்திபிரபாக்கும்

    மற்றும் இவர்கள் இருவரையும் சிபாரிசு செய்த எனக்கும், அமெரிக்காவிலிருந்து ரெண்டு, ரெண்டு மாணிக்க கல் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்........ ஹீ..ஹீ...

    ReplyDelete
  8. //மற்றும் இவர்கள் இருவரையும் சிபாரிசு செய்த எனக்கும், அமெரிக்காவிலிருந்து ரெண்டு, ரெண்டு மாணிக்க கல் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்........ //

    எனக்கும் சேர்த்து பார்செல் கேட்கும் உங்கள் நல்ல உள்ளம் புல்லரிக்க வெக்குதுங்க...

    ஷைலஜா இருக்க 'மாணிக்கக் கல்' ன்னு தனியா வேணுமா? (இப்டி சொன்னதால எனக்கு ரெண்டு கல் extrava கொடுத்தா அதுல ஒண்ணு உங்களுக்கு) btw, எனக்கு 'நீலக்கல்' கொடுத்தா இன்னும் சந்தோஷம் :))))

    ReplyDelete
  9. இப்படிஎல்லாம் விவரிச்சு எங்கள் மனசுலயும் ஆசைய வளர்த்தக் கூடாது

    ReplyDelete
  10. //
    சின்ன அம்மிணி said...
    நீங்களே ஒரு ஜெம் , உங்களுக்கு எதுக்கு ...... :)
    எத்தனை நாள் அமெரிக்கா வாசம்??

    8:16 AM

    //

    >>>>>>>>>>>>>>>>>>>>

    சின்ன அம்மிணி என்னது நானே ஒருஜெம்மா? உங்க அன்புக்கு அளவே இல்லையா?:) அமெரிக்க்கால இன்னும் ஒருமாசம்தான் குளிருக்குமுன்னாடி தப்பிச்சிடணும்!

    ReplyDelete
  11. //நட்புடன் ஜமால் said...
    எதைப்பார்க்க எதைவிட? ஜம்னு தான் இருக்கு ஜெம்ஷோ! ]]

    ஏன் விடனும்

    எதுக்கு விடனும்

    8:52 AM
    /////

    ஏன் எதுக்குவிடணும்னா கடையைமூடிடுவாங்க ஜமால் :):)

    ReplyDelete
  12. //நட்புடன் ஜமால் said...
    சின்ன அம்மிணி said...

    நீங்களே ஒரு ஜெம் , உங்களுக்கு எதுக்கு ...... :)]]


    ஆஹா! ஆஹா!

    நானும் கூவிக்கிறேன் ...

    8:52 AM
    ???

    //
    <>>>>>>
    கூவற உங்களைலாம் விட நான் என்ன பெரிய ஜெம்?

    ReplyDelete
  13. R.Gopi said...



    படிக்கறப்போவே மலைப்பா இருக்கு.... நேர்ல பார்த்தால், மயக்கமா??/////



    ஆமாம் கோபி ..தலைகிர்ர்ர்ர்ர்ர் அடிக்குது!

    ///ஐயோ மிஸ் பண்ணிட்டீங்களே ஷைலஜா... எங்களுக்கு ஒரு அருமையான கவிதை போச்சு...//

    தப்பிச்சீங்க கோபி:):)

    //

    கியாமோ கெ க‌ஹிமோ மிமா.... இது நான் சொன்ன‌து இல்ல‌. அந்த‌ ஜ‌ப்பான் க‌டைக்கார‌ர் சொன்ன‌து... இன்னாபா திட்ட‌ற‌ன்னு கேட்டேன்... ச‌வுக்கிய‌மான்னு கேட்டேன்னு சொன்னான்//

    ஹஹ்ஹஹா::)

    //
    க‌ல‌க்கிட்டீங்க‌..... வாழ்த்துக்க‌ள் ஷைல‌ஜா///


    மிக்க நன்றிகோபி வார்த்தைக்கு வார்த்தை ரசிச்சிப்பாராட்டறீங்க!

    ReplyDelete
  14. //Shakthiprabha said...
    மறுபடியும் அமெரிக்கா ஓடிட்டீங்களா?
    அங்கே நடக்கும் குட்டி குட்டி விஷயங்களையும் அழகாக கோர்த்து பதிவு போடுவது உங்களால் மட்டுமே முடியும். ஹாஸ்யம் சொட்டுகிறது.

    12:49 PM

    >???

    வாம்மா ஷக்தீ சௌக்கியமா? உன் மொழிலகேக்கணும்னா வாட்ஸ் அப் யா?:) கருத்துக்கு நன்றி கண்காணாமல் மெயிலுக்கு பதில்போடாமல் இருப்பதுக்கு ஜெம்ஷோ கல்லால ஒரு அடி இந்தா வாங்கிக்கோ:)

    ReplyDelete
  15. //திகழ்மிளிர் said...
    /சின்ன அம்மிணி said...

    நீங்களே ஒரு ஜெம் , உங்களுக்கு எதுக்கு ...... :)
    எத்தனை நாள் அமெரிக்கா வாசம்??
    /

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    :))))))))))))))))))))))

    2:25 PM
    >>>>>>>>>>>>>>>>>>>>>

    என்ன ம்ம்ம்ம்ம்ம் திகழ்? என்னைப்போய் ஜெம்ங்கறதுக்குத்தானே? அப்பாடி நீங்களாவது சொல்லுங்க சின்னம்மணிக்கு.

    ReplyDelete
  16. R.Gopi said...
    ஷைலஜா

    நீங்களே ஜெம்.....உங்களுக்கு எதுக்கு .... என்று கேட்ட சின்ன அம்மணிக்கும்

    அமெக்காவில் நடக்கும் குட்டி குட்டி விஷயங்களையும் அழகாக கோர்த்து பதிவு போடுகிறீர்கள் என்று பாராட்டிய ஷக்திபிரபாக்கும்

    மற்றும் இவர்கள் இருவரையும் சிபாரிசு செய்த எனக்கும், அமெரிக்காவிலிருந்து ரெண்டு, ரெண்டு மாணிக்க கல் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்........ ஹீ..ஹீ...

    2:45 PM
    ///


    >>>>>>>>>>>>>>>>

    இதென்ன மசாலா தோசையா கோபி பார்சல்பண்ண?:):)

    ReplyDelete
  17. ///


    Shakthiprabha said...
    //மற்றும் இவர்கள் இருவரையும் சிபாரிசு செய்த எனக்கும், அமெரிக்காவிலிருந்து ரெண்டு, ரெண்டு மாணிக்க கல் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்........ //

    எனக்கும் சேர்த்து பார்செல் கேட்கும் உங்கள் நல்ல உள்ளம் புல்லரிக்க வெக்குதுங்க...
    //

    கோபி நோட் திஸ் பாயின்ட்!


    //ஷைலஜா இருக்க 'மாணிக்கக் கல்' ன்னு தனியா வேணுமா? (இப்டி சொன்னதால எனக்கு ரெண்டு கல் extrava கொடுத்தா அதுல ஒண்ணு உங்களுக்கு) btw, எனக்கு 'நீலக்கல்' கொடுத்தா இன்னும் சந்தோஷம் :))))///


    ஐஸ்லாம் வச்சா அறிவேன் என் அருமைத்தோழி ஷக்தீ! நீலக்கல்தானே வாங்கிட்டுவரேன் உனக்கு!

    3:27 PM

    ReplyDelete
  18. //Eswari said...
    இப்படிஎல்லாம் விவரிச்சு எங்கள் மனசுலயும் ஆசைய வளர்த்தக் கூடாது

    4:30 PM
    ///ஆமாங்க ஈஸ்வரி.....ஆசை ஆசைபேராசை இப்போதுன்னு பாடலாம்போல அவ்ளோ பிரமாதமா இருந்தது!

    ReplyDelete
  19. /ஓ இதானா? மஞ்சளா இருந்தா தங்கம் அதுதான் உன்னைக்கல்யாணம் செய்தபின்னாடி தெரிஞ்சிட்டேன் மத்தபடி நான், இந்த நவரத்தின கல் பத்தின அறிவு இல்லாத ’கல்’ லாதவன்” என்று சொல்லி நகர்ந்தார் என் தங்கமான புருஷன்!//

    ஆஹா ஐஸோ ஐஸ்!

    ReplyDelete
  20. Super post.
    You are tempting me to go to the next gem exhibition.
    By the Way, where is it organized in DC ?

    - Chandru

    ReplyDelete
  21. PM


    ஆயில்யன் said...
    /ஓ இதானா? மஞ்சளா இருந்தா தங்கம் அதுதான் உன்னைக்கல்யாணம் செய்தபின்னாடி தெரிஞ்சிட்டேன் மத்தபடி நான், இந்த நவரத்தின கல் பத்தின அறிவு இல்லாத ’கல்’ லாதவன்” என்று சொல்லி நகர்ந்தார் என் தங்கமான புருஷன்!//

    ஆஹா ஐஸோ ஐஸ்!

    7:24 PM
    >>>>>>>>>>>>>>>> ஆயில்!!!!! ஐஸா வச்சிருக்கேன் மறைமுகமா
    முணுமுணூக்கறது தெரியலையா?:)

    ReplyDelete
  22. //C said...
    Super post.
    You are tempting me to go to the next gem exhibition.
    By the Way, where is it organized in DC ?

    - Chandru

    7:59 PM
    /////

    yeah tell you soon just wait plz..

    ReplyDelete
  23. http://www.intergem.com/


    chandru! have a look in this page jus click it !

    ReplyDelete
  24. Shy mail-a? enga? eppo?
    I got lost into the oblivion cause, ennaala blog account marupadi open panna mudiyalai. ஒருவழியா இப்போ சால்வ் ஆகியாச்சு ப்ராப்ளம். neela kal elaam venam shy, unga anbu irundha pothum

    (சே! ஒரே நாளில் எவ்ளோ பொய் சொல்ல வேண்டிருக்கு!

    ReplyDelete
  25. சந்துரு கவனிங்க..

    Virginia la - Dulles Expo in Chantilly la nadakkum every 3-4 months

    ReplyDelete
  26. Shakthiprabha said...
    Shy mail-a? enga? eppo?>>>>

    ஆக்ஸ்ட் முதல்வாரம் ஒருபொன்னாளில் அனுப்பினேன் சுதந்திர நாளுக்கு விகடன் .காமுக்காக ஒருகட்டுரை அனுப்பித்தரசொல்லி.பதிலே வரல.அதான்.
    //I got lost into the oblivion cause, ennaala blog account marupadi open panna mudiyalai. ஒருவழியா இப்போ சால்வ் ஆகியாச்சு ப்ராப்ளம்.//



    பாப்புலர் ஃபிகர் ஆகிட்டீங்கன்னு தெரியுது ப்ளாக்ல ப்ராப்ளம்லாம் வருது ஒபன் ஆகாம ம்ம்ம்:)

    neela kal elaam venam shy, unga anbu irundha pothum

    //(சே! ஒரே நாளில் எவ்ளோ பொய் சொல்ல வேண்டிருக்கு!///


    நான் மட்டும் என்ன உண்மையா சொன்னேன் ?:):)

    8:56 PM
    >>>>>

    ReplyDelete
  27. //ஆக்ஸ்ட் முதல்வாரம் ஒருபொன்னாளில் அனுப்பினேன் சுதந்திர நாளுக்கு விகடன் .காமுக்காக ஒருகட்டுரை அனுப்பித்தரசொல்லி.பதிலே வரல.அதான்.//

    மெயிலே வரலையே :( உங்க மடலுக்கு பதில் எழுதாம இருப்பேனா? எனக்குன்னு நினைச்சு நீங்க வேற யாருக்கோ அனுப்பியிருகீங்க :grrr:

    //பாப்புலர் ஃபிகர் ஆகிட்டீங்கன்னு தெரியுது //

    யாரு?????? நானா??????? (சிரிச்சு வயிறே புண்ணா போச்சு போங்க!)

    // ப்ளாக்ல ப்ராப்ளம்லாம் வருது ஒபன் ஆகாம ம்ம்ம்:) //

    Thats my stupidity. En nanbargaL (enum virothigaL ) சிலரின் பேச்சைக் கேட்டு ஆர்கூட் அக்கௌண்ட் open பண்ணேன். அதனால வந்த வினை :( I wasn't able to access blog with the same email id :(

    vigadan.com il vantha unga katturai enga? enga? enga?

    ReplyDelete
  28. Shakthiprabha said...
    ///

    மெயிலே வரலையே :( உங்க மடலுக்கு பதில் எழுதாம இருப்பேனா? எனக்குன்னு நினைச்சு நீங்க வேற யாருக்கோ அனுப்பியிருகீங்க :grrr:

    /////


    :) அவங்களும் அனுப்பலையே :)
    ஹலோ உனக்கே உனக்குத்தான் அனுப்பினேன் எங்குவந்தபோதும் உன்னைமறக்கமுடியுமா?:)




    http://youthful.vikatan.com/youth/india63

    shakthi! here is the link....
    சல்யூட் அடிச்சிட்டு போஸ்லாம் வேற..கிண்டல்பண்ணாதே:)

    ReplyDelete
  29. link isn't opening :?

    evlo naaL achu ipdi continuous aa post- paniyE vethu chat panni :))))))))))) I am enjoying

    ReplyDelete
  30. ரொம்ப நன்றி.
    லௌகீக பதிவுக்கு தான் எவ்வளவு ஹிட்ஸ் மற்றும் பின்னூட்டங்கள் :-)

    ReplyDelete
  31. http://youthful.vikatan.com/youth/india63/shilaja15082009.asp

    ஷக்தீ

    இதை காப்பி பேஸ்ட் அல்லது க்ளிக்பண்ணிப்பாரேன்ப்ளீஸ்!

    ReplyDelete
  32. Anonymous5:35 AM

    நல்லவேளை ஷைலஜா, GEM - இதுக்கு இன்னோரு அர்த்தமும் இருக்கு.காலேஜ்ல ஓவரா பேசர பசங்களை இத சொல்லிதான் கலாட்டா பண்ணுவோம். ஆனா நான் நல்ல அர்த்தத்தில தான் சொன்னேன்.:)

    ReplyDelete
  33. //சின்ன அம்மிணி said...
    நல்லவேளை ஷைலஜா, GEM - இதுக்கு இன்னோரு அர்த்தமும் இருக்கு.காலேஜ்ல ஓவரா பேசர பசங்களை இத சொல்லிதான் கலாட்டா பண்ணுவோம். ஆனா நான் நல்ல அர்த்தத்தில தான் சொன்னேன்.:)

    5:35 AM
    ////

    ?>>>>>>>>>>>>>>>>>

    சினன் அம்மிணி

    இப்போ நீங்க சொன்னதுதான் சரி எனக்கு! அப்ப்பப்போ ஓவராப்பேசறது என் வழக்கமாச்சே:)

    ReplyDelete
  34. //ஒரு நன்னாளில் போனதை விவரிக்கவே இந்தப்பதிவு!//

    உங்களுக்கு நன்னாள்! அவருக்கு? :))

    நல்ல வேளை நீங்க வோல் சேல் திரைக்குள்ளாற போகலை-க்கா! :)

    //’என்னவோபோங்க வாங்கிட்டேனே தவிர அசல்மாணிக்கமான்னு டவ்ட்டாவே இருக்கு//

    ஹா ஹா ஹா
    ரொம்ப பேரு இப்படித் தான்! :)

    புன்னகை கூட்டத் தானே பொன்னகை?
    அந்தப் புன்னகையே போயிரிச்சின்னா அப்பறம் என்ன பொன்னகை போட்டு என்ன பிரயோசனம்? :)

    //அந்தப்பெண்ணை நான் வியப்பாய் நிமிர்ந்து பார்த்தபோது அவள் கழுத்திலிருந்த மாணிக்கங்கள் எதுக்கும் கவலைப்படாமல்இயல்பாக மின்னிக்கொண்டே இருந்தன.!//

    நானும் தான் பதிவைப் பாத்து மின்னிக்கிட்டே இருக்கேன்! :)

    ReplyDelete
  35. ஷைலஜா, சக்திப்ரபா, சின்ன அம்மணி... ஈஸ்வரி..இதோ விகடன்.காம்ல‌..என் பதிவு

    http://youthful.vikatan.com/youth/gopipoem20082009.asp

    ReplyDelete
  36. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //ஒரு நன்னாளில் போனதை விவரிக்கவே இந்தப்பதிவு!//

    உங்களுக்கு நன்னாள்! அவருக்கு? :))


    >>>>>>>>>>>>>>>>>>>>>

    :) ஆஹா இனம் இனத்தோடா?:)

    ! :)


    //
    நானும் தான் பதிவைப் பாத்து மின்னிக்கிட்டே இருக்கேன்! :)//

    >>>>>>>>>>>>>>>

    மின்னுவதெல்லாம் இங்கு மாணிக்கமே! நன்றி ரவி..உடம்பு சரி இல்லாத நிலைலயும் பதிவைப்படிச்சிகருத்து சொன்னதுக்கு

    ReplyDelete
  37. R.Gopi said...
    ஷைலஜா, சக்திப்ரபா, சின்ன அம்மணி... ஈஸ்வரி..இதோ விகடன்.காம்ல‌..என் பதிவு

    http://youthful.vikatan.com/youth/gopipoem20082009.asp

    9:21 AM

    >>>>>>>>>>>>>>

    பாத்து நான் பின்னூட்டம் உங்க பதிவில் விகடன்லயும் போட்டுட்டேன் கோபி. அசத்தல் கவிதை!

    ReplyDelete
  38. ஒரு மாணிக்கமே
    மாணிக்கங்களைப் பற்றி
    பதிவு எழுதியிருக்கிறதே!


    தோராயமா பர்ஸுக்கு எவ்வளவு வேட்டு ஷைலு

    ReplyDelete
  39. மதுமிதா said...
    ஒரு மாணிக்கமே
    மாணிக்கங்களைப் பற்றி
    பதிவு எழுதியிருக்கிறதே!


    தோராயமா பர்ஸுக்கு எவ்வளவு வேட்டு ஷைலு

    7:00 PM
    >>>>>>>>>>>>>>>

    வாங்க மது! ரொம்ப மகிழ்ச்சி உங்க வரவே நவரத்தினம் இங்கு! என்னைப்போய் மாணிக்கம்னு சொல்ல என்ன ஒரு நல்லமனசு உங்களுக்கு!
    பர்சுல நம்ம இந்தியன் பணமா 500ரூமதிப்புல டாலர் வச்சிட்டுப்போனேன் அதுலதான் வாங்கினேன் ..:)

    ReplyDelete
  40. மிஸ் ஷைலஜா
    வணக்கம்.
    நான் இதுவரை நவரத்தினங்களைப் பார்த்ததேயில்லை. தாங்கள் பார்த்ததாக கூறினீர்கள். வாழ்த்துக்கள்.
    ஆனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நவரத்தினங்களை வெறும் 500 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படி வாங்குவது?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.