Social Icons

Pages

Saturday, December 31, 2011

புத்தாண்டே வருக!

வாடையும் பனியும் சூழ்ந்த மார்கழித்திங்கள் நாளில் நாடெல்லாம் புதுமை செய்ய காடெல்லாம் விளைந்து செழிக்க தேடிவந்ததிங்கு தேன்சுவைப் புத்தாண்டு! வீடெல்லாம் நிறைந்த தூசி ஓடிடப் பெருக்கித்தள்ளி பாடி நாம் பரவசமாய் ஆடிக் கொண்டாடியே வரவேற்கும் புத்தாண்டு!! செந்தமிழ் நாட்டிற்கென்றே சிறப்புற அமைந்தபொங்கல் வந்ததும் விளைவுபொங்கத்...
மேலும் படிக்க... "புத்தாண்டே வருக!"

Friday, December 30, 2011

நானும் 2011ம்.

நானும் 2011ம்  என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுத  அனந்து  அழைத்துள்ளார்.  கேள்விகள் சிக்கலாக இல்லை ஆகவே தைரியமாய் களத்தில் குதித்துவிட்டேன். ம் நானும்.. படித்ததில் பிடித்தது :  சமீபத்தில் படித்ததில் பிடித்தது என்று நெம்பர்40 ரெட்டைத்தெரு ..இராமுருகன் எழுதிய நாவலை சொல்வேன். பொதுவா கேட்டா   பெரியலிஸ்ட்டே...
மேலும் படிக்க... "நானும் 2011ம்."

Saturday, December 24, 2011

அன்புப்பூ ஒன்று வந்தது!

அகிலத்தைக்காத்திட்டு அன்பினைப் பரப்பிட அன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது- அது ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு அனைவரையும் கவர்ந்தது. மனிதாபிமானத்தை மக்களுக்குச் சொல்லி மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று -நல் மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது, மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது. தன்னிரு கரங்களில் சிலுவையைத்தாங்கிடினும் கண்ணிரண்டில்...
மேலும் படிக்க... "அன்புப்பூ ஒன்று வந்தது!"

Thursday, December 22, 2011

வாரணம் ஆயிரம்!

கனவா கனாவா? எது சரியான சொல் என்ற ஆராய்ச்சியில் இரண்டுமே சரி என்பதுபோலத்தெரிகின்றன. மங்கியதோர்நிலவினிலே கனவினிது கண்டேன் என்கிறார் பாரதி. இன்பக்கனா ஒன்று கண்டேன்  என்ற பாடலில் கனா தான் வருகிறது! ஆண்டாள் கனா என்கிறாள். பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள் கண்ணனை நினைத்துப்பாடிய பாடல்கள் நாச்சியார் திருமொழி என்ற பெயரில் வருகிறது. வாரணமாயிரம்...
மேலும் படிக்க... "வாரணம் ஆயிரம்!"

Friday, December 16, 2011

மார்கழித் திங்கள் அல்லவா?

நம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர். எண்ணிக்கைகளுள் வேர்போன்றது என்பது இந்த சொல்லின் பெயர். மற்ற எண்களுக்கு இல்லாத மகிமை இந்த எண்ணுக்கு உண்டு. இந்த எண்ணின் பெருக்கலினால் கிடைக்கும் எண்களை மேலும் கீழுமாய் வைத்துக்கூட்டினால் ஒன்பது என்னும்...
மேலும் படிக்க... "மார்கழித் திங்கள் அல்லவா?"

Wednesday, December 14, 2011

வானும் கடலும்!

மேகத்திரள்கள் எழுகின்ற அலைகள்! நட்சத்திரங்களோ ஆழ்கடல்முத்துக்கள்! பிறைநிலாதான் கவிழும் படகு! சாயம் இழக்கா சமுத்திர வர்ணம்! தலைகீழ்கடல்தான் இரவுவானம்! ...
மேலும் படிக்க... "வானும் கடலும்!"

Saturday, December 10, 2011

பாரதி நீ இன்றிருந்தால்..?

பாரதி! நீ இன்றிருந்தால் என்ன செய்வாய்? தேமதுரத்தமிழோசையினை உலகமெலாம் பரவச்செய்ய வேண்டும் என்றாய் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தடுமாறும் தமிழினைக்கேட்டுவிட்டால் திரும்பிப்பார்க்காமல் போய்விடுவாய்! பாரதியின் கவிதைத்தோட்டத்தில் ஏகாதிபத்தியக்கழுகுகள் அமர்ந்து ஆட்சிஒலியை இசைத்தாலும் அவற்றில் ஒன்றால்கூட உன்னைப்போல் ஆன்மாவைத்தொடமுடியவில்லை. கந்தல்கோட்டணிந்தகவிஞனே நீ பாரதவீணையின் சுதந்திரத்தந்திகளைப் பாழாக்கிய...
மேலும் படிக்க... "பாரதி நீ இன்றிருந்தால்..?"

Thursday, December 08, 2011

அரங்கபவன்.(சிறுகதை)

நீண்ட நாளாய் ஓர் ஆசை. சொன்னால் சிரிப்பீர்கள். அதனாலேயே மனைவி, மகனிடமும் ’தெற்கு வாசல்’ வரை போய் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பி வந்து விட்டேன். ஏனென்றால் நீங்களெல்லாம் என் ஆசை என்னவென்று கூறிச் சிரித்துவிட்டுப் போய் விடுவீர்கள். ஆனால், என் மனைவி ஆனந்தியும் மகன் பரத்தும் மானம் போய்விட்ட மாதிரி கூச்சல் போடுவார்கள். “உங்கப்பாக்கு ...
மேலும் படிக்க... "அரங்கபவன்.(சிறுகதை)"

Saturday, December 03, 2011

நடை உடை பாவனை!

அனிதா வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார். “டாட்! இந்த 2020வருஷத்திலும் கையில் வச்சிட்டு புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லயே 2011ன் ஆப்பிள் மறைந்து  தமிழ்ப்பெண் ஆ.ரஞ்சனா என்பவர் கண்டுபிடிச்ச  ஆரஞ்ச் இருக்குதே அதுலபடிக்கவேண்டியதுதானே?” என்றாள்,...
மேலும் படிக்க... "நடை உடை பாவனை!"

Thursday, December 01, 2011

புன்னகைக்கும் மத்தாப்பு!!

போதுமுந்தன் பொல்லாப்பு! புன்னகைக்கும் மத்தாப்பு! பூவை யார் திறப்பதுவாம்? பொழுதையார் விரிப்பாராம்? மோதுகின்ற மேகமெல்லாம் மொத்தம் கவிழ்ந்தாலும் சின்னப் பறவையின் சிறகுச் சீண்டலினால் மொத்தம் கவிழ்ந்து கதிர் முத்தாய் இறைத்துவிடும்! மூடிவிட்ட இமைகளோ முடங்கிவிட்ட மனமோ முத்தத்தால் இதயம் முகையவிழ்ந்து நிற்பதுபோல் மன்னவனின்...
மேலும் படிக்க... "புன்னகைக்கும் மத்தாப்பு!!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.