புட்டப்பர்த்தியில் உதித்த பூந்தோட்டமே நீ
இட்ட கட்டளையை ஏற்கும் பக்தர் கூட்டமே-தீ
பட்டமரம்போலாகும் துன்பங்களே -உன்
சுட்டுவிழியாலே தீரும் துன்பங்களே.....
இப்படி சத்யசாய்யி மீது அவரது பிறந்த நாளில் சமீபத்தில் ஒரு பாடல் எழுதினேன் .. அதை அழகாய் பாடிக்கொடுத்தார் என் தோழி .அதனை காணொளியாக இன்று என்பிறந்த நாளுக்கு அளிக்கிறேன் கேட்டு சொல்லுங்கள் நன்றி!
சத்யசாயிபாபாமீது நான் எழுதிய பாடலை...
Thursday, March 19, 2015
Wednesday, March 18, 2015
கொஞ்சம் சீரியசா யோசிச்சா...:)

வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் கனவுகள் அல்லது பிரமைகள் என்கிறது ஜென் புத்தமதம். அப்படியானால் நமது பிறப்பு என்பதும் கனவா அல்லது பிரமையா? பிறந்து இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதால் கனவாய் இருக்க சாத்தியமில்லைஆயினும் கனவுகளில் நாம் பயணம் செய்வதை மறுக்கமுடியாது. எல்லாவற்றிர்க்குமே கனவு ஆதாரம் அது சில நேரங்களில் மெய்ப்படுகிறது.பிரமை என்பது...
Saturday, March 14, 2015
ஆசையின் கனி!

ராமாயணத்தை பழைய பஞ்சாங்கம், ’’Ramayana is full of cliche rhetorics. ’ திரும்பத் திரும்ப சொல்லப் பட்ட பழைய விஷயங்கள் என்கிறார்கள்! புதிய கல்யாணத்துக்கு பழையபஞ்சாங்கத்தில் தான் நாள் நட்சத்திரம் பார்க்கிறார்கள். . சூரியன் பழசு சந்திரன் பழசு ஏன் வானமே பழசுதான். ’..இன்று புதிதாய்ப்பிறந்தோம் என்று நாம்...
Friday, March 06, 2015
புது யுகப்பெண்மை !

அன்று ....
புரண்டு புலம்புவதிலேயே சுகம்
கண்டுமகிழ்ந்தனர் பெண்கள்
சுதந்திரம் பெற்றாலும் பறக்கமுடியாத
ஜோதிடக்கிளிகளாயிருந்தனர் பெண்கள்
சமத்துவம் பெற்றாலும் எண்ணச்சிறகுகளை
வடிவுக்குக்கொண்டுவர இயலாத
ஊமைக்கிளிகளாயிருந்தனர் பெண்கள்!
இன்று
பெண்கள் நிலையில் பெரும் மாற்றம்!
சென்றுவிட்டன அவநம்பிக்கை, ஏமாற்றம்!
மென்மை...
Thursday, March 05, 2015
இன்று போய் போருக்கு நாளை வா!

கம்பராமாயணத்தில் யுத்தகாண்டம்.
போர்க்களம் என்பதால் கம்பனின் பாடல்வரிகளில் அதன் தாக்கம் வந்துவிழுகிறது.
படுகளச்சிறப்பினை விளக்கும் இந்தப்பாடலைப்பாருங்கள்,
அந்தி வானகம் ஒத்தது, அவ் அமர்க் களம்; உதிரம்
சிந்தி, வேலையும் திசைகளும் நிறைந்தன; சரத்தால்
பந்தி பந்தியாய் மடிந்தது, வானரப் பகுதி;
வந்து மேகங்கள் படிந்தன, பிணப் பெரு மலைமேல்....
Sunday, March 01, 2015
படியாய்க்கிடந்து உன் பவளவாய் காண்பேனே!

மன்னன் குலசேகரனின் அவையில் மந்திரிகள் அனைவரும் குழப்பத்தில்
ஆழ்ந்திருந்தனர்.
“என்ன ஆயிற்று
நம் மன்னருக்கு? அரச வளாகத்திற்குள் திருமால்
அடியார்களை மட்டும் உள்ளே வரச்சொல்லவும் என்கிறார். ராமா ராமா என்று நாமாவளிகளும், ஆன்மீகசொற்பொழிவுகளுமாக.... இதென்ன அரச சபையா அல்லது பஜனை மண்டபமா? ” என்று
எரிச்சலடைந்தார் ...
Subscribe to:
Posts (Atom)