Social Icons

Pages

Wednesday, November 01, 2006

இலவச இணைப்பு (தேன்கூடு போட்டிக்கு)

ஆபீசிற்குள் நுழைந்த அரைமணியில் செல்போன், 'சுட்டும்விழி சுடரே' என்கிறது.

'காபி'னைவிட்டு நழுவி காரிடருக்கு நடந்தபடியே போனில்,"விஜி! வீட்டைவிட்டு புறப்படறப்பவே சொன்னேன் இல்ல, இன்னிக்கு முக்கியமான மீட்டிங்னு? இன்னும் பத்து நிமிஷத்துல நான் அதுக்குத் தயாராகணும்..இப்பொ எதுக்கு போன் செய்றெ? என்கிறேன் கொஞ்சம் கோபத்துடனே. ஏற்கனவே காலை ஆபீசிற்குப் புறப்பட காரை எடுத்து வெளியே வந்தபோது, சாலையில் எங்கிருந்தோ அந்த தொழுநோயாளி ஓடிவந்து என்னிடம் பிச்சைக்குக் கை ஏந்தியபோது 'போபோ'என்று சீறிவிழுந்ததின் தாக்கம் இன்னமும் முற்றிலுமாய் மறையவில்லை. எனக்கு எல்லாமே சுத்தமாய் அழகாய் இருக்கவேண்டும்.

எதிர்முனையில் அழகி- என்மனைவி- பேச ஆரம்பிக்கிறாள்.

"தெரியுங்க .ஆனாலும் முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்ட்டேன்.. உங்கப்பா ஊர்லேந்து கொஞ்சநேரம் முன்னாடி வந்துட்டாரு.."

"அதான் அன்னிக்கே போன்ல சொல்லி இருந்தாரே ' மகேஷ் பிறந்த நாளுக்கு சென்னைக்கு முதநாளே வந்துடறேன்'ன்னு?'..இத சொல்லவா போனு?"

"ஐயோ..அவர்மட்டும்வரலேங்க கூடவே அந்தபொம்பளயும் வந்திருக்காங்க"

விஜி இப்படிச்சொன்னதும்"வ்வாட்?" என்கிறேன் எரிச்சலாய். உடனேயே விஜி குறிப்பிட்ட அந்தப்பெண்ணின்முகம் கண்முன் வந்து நிற்கிறது. அந்த தீய்ந்துபோனகன்னங்களும் மோவாயும் , எரியும் நெருப்பில் உருக்குலையும் ப்ளாஸ்டிக் தாளாய் கழுத்தும் ,சிதிலமானநெற்றியும் ....ய்யக்...நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது.

அவளைப் போய் எதுக்கு கிராமத்திலிருந்து இழுத்திட்டுவந்திருக்கிறார் அப்பா?

போனமாதம் கிராமத்துக்கு வாரவிடுமுறைக்கு நான் மட்டும் போனபோது அவளை வீட்டுவாசல் திண்ணையில் பார்த்தேன். .

"யாருப்பா அவங்க கோரமா, பாக்கவே அருவெறுப்பா இருக்கு?"

"வேண்டப்பட்டவங்கதான் ரவி"

அப்பா அண்மையில் ஓய்வுபெற்ற பள்ளி வாத்தியார் .அதிகம் பேசமாட்டார் அதுவும் நாலுவருஷம்முன்பு அம்மா போனதிலிருந்து பேச்சையே குறைத்துவிட்டார். என்னோடு சென்னைக்குவந்து தங்கச்சொல்லி பலமுறை கெஞ்சிப் பார்த்துவிட்டேன்.

"வீடு நிலம் இருக்குதேப்பா..எல்லாத்தியும் கவனிச்சிட்டு நான் முடியறவரைக்கும் இங்கயே இருக்கேன்,, ஏதும் விசேஷம்னா உன் இடத்துக்கு அவசியம் வரேனே?'என்றார் .

வற்புறுத்த முடியவில்லை .அப்பாவின் முடிவுகளில் அர்த்தம் இருக்கும்.

அதனாலே அப்பாவிடம் அந்தப் பெண்மணிபற்றி அதிகம் கேட்கவும்தயக்கம்.

ஆனால் போனவாரம் கிராமத்திலிருந்து என்னைப்பார்க்க வந்த என் பள்ளி நண்பன் ப்ரகாஷுடன் பேசும்போது தெரிந்தது அந்தப்பெண்மணி இன்னமும் அப்பாவோடுதான் இருக்கிறாள் என்பது.

விஜி கூட கிண்டலாய் ,"உங்கப்பாவோட அந்த நாள் கேர்ல் ஃப்ரண்டோ என்னவோ ?வயசு காலத்துல அந்தம்மா அதிரூப சுந்தரியா இருந்திருக்கலாம்... இப்பொ பழய நெனப்புல இழைய வந்திட்டாங்க போல இருக்கு...ஆனாலும் அறுபதுவயச நெருங்குற உங்கப்பாக்கு புத்தி இப்டிபோகவேணாம் ?" என்றாள்.

விஜி சொல்வது நிஜம்தானோ?

"சரி, நீ போனை வை..நான் வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட பேசிக்கறேன்"

மதியம் லீவுபோட்டு வீட்டிற்குவருகிறேன்.

அழைப்புமணியை அடித்தேன் கதவுதிறந்தது கதவுக்குபின்னால் ....

அந்த கோரமுகம் கண்டு எரிச்சலுடன்முறைக்கிறேன்.

"விஜ்ஜீஈஇ எங்க தொலைஞ்சே?" எட்டூருக்குக் கேட்கிற மாதிரி கத்துகிறேன்.

"என்னங்க ?"என்று விஜி ஓடிவருகிறாள்.

"குழந்தயக் குளிப்பாட்டிகிட்டு இருந்தேன் ..காலிங்பெல் சத்தமே கேக்கல எனக்கு... உங்கப்பா ரூம்ல தூங்கறார் போல்ருக்குது...?"

நான் எரிச்சலுடன் அப்பா படுத்திருந்த அறைக்குள் நுழைகிறேன்.

சின்னதாய் குறட்டைவிட்டபடி தூங்கிக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி," என்னப்பா இதெல்லாம் தேவையா உங்களுக்கு?" என்று கடுப்புடன் கேட்கிறேன்.

அப்பா இடுப்பு வேஷ்டியை இறுகக் கட்டியபடியே எழுந்து உட்கார்ந்தவர்,
"அடடே ரவி வந்திட்டியாப்பா ?சாயந்திரம்தான் நீ வருவேன்னு விஜி சொன்னா..சரி ,குட்டிதூக்கம் போடலாம்னு படுத்தென் நானும்..நாளைக்கு உன்பையன் பிறந்தநாளுக்கு நான் ஃப்ரெஷா சுறுசுறுப்பாத்தெரியணுமில்ல?" என்கிறார் புன்னகைத்தபடி.

"ஆ! ரொம்பவே சுறுசுறுப்பாத்தான் தெரியறீங்க !வாலிபம் திரும்புதில்ல உங்களுக்கு? ஏன்ப்பா, தெரியாமத்தான் கேக்கறேன் அந்த பொம்ளைய எதுக்கு இங்கயும் கூட்டிவந்தீங்க? இதெல்லாம் ஸோஃபிஸ்டிகேட்டட் ஃப்ளாட்ஸ்.ரொம்ப டீசண்ட் ஜனங்க வசிக்கறஇடம் .இங்க ஊர் பேர் தெரியாத அந்த தீஞ்சிபோன முகத்துக்காரப் பொம்பளைய அழைச்சிட்டு வரணுமா நீங்க? "

"ரவி..அவங்க வரேன்னு சொல்லலப்பா...நாந்தான் அழைசிட்டுவந்தேன்.."

"விலைகொடுத்து வாங்கற பொருளோட சில நேரங்களில் ஒட்டிக்கிட்டு வருமே ஒண்ணு , அதுமாதிரி இலவச இணைப்பா? இலவச இணைப்பெல்லாம் எனக்குத்தேவைஇல்லை..எனக்கு விலைமதிப்பு பெறுமானது தான்முக்கியம்"

"ரவி! நீ வெறுக்கிற இலவச இணைப்பு நாந்தாம்பா.."

என்ன உளற்றீங்க ?"

"ரவி... சொல்லாம இனியும் மறைக்கமுடியாது. சில தர்மங்களை நிலை நிறுத்தணும்னா கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியாம போகக்கூடும்னு சொல்வாங்க..இப்போ அது நிஜம்னு நிரூபணமாகுது..ஆமாம்ப்பா... முப்பதுவருஷம்முன்னாடி உங்கம்மா பிரசவத்துல வயித்துலேயே இறந்துபோன குழந்தையைத்தான் பெத்தெடுத்தா..
இனிமேகுழந்தை பிறக்க வாய்ப்பில்லைனு டாக்டர்சொல்லிய அந்த நேரத்துல உங்கம்மாவோட சிநேகிதி கமலா ,
'என் புருஷன் மூணுமாசம் முன்னாடி ,குழந்தைவயத்துல இருக்கறப்போவே செத்துட்டாரு. இப்போ உன் குழந்தையை நீ இழந்த சமயத்தில எனக்கும் குழந்தை பொறந்திருக்கு இது இனி உன்குழந்தையா வளரட்டும்..நான் அம்மான்னு சொந்தம் கொண்டமாட்டேன்..நீங்க ரண்டு பேரும் தான் குழந்தைக்கு அப்பா-அம்மா.இதை சத்திய வாக்கா நாம் நினைச்சிக்கணும் ".ன்னு சொல்லி எங்க கைல உன்னைக் கொடுத்தா...பாலூட்டி உன்னை வளர்க்க கூடவேஇருந்தா ஒன்றரைவயசு குழந்தையா இருக்கறப்போ விளக்குல விளையாட்டா நீ ஏதோ செய்யப் போக அது தீவிபத்தாகவும் உன்னைக் காப்பாத்த செய்தமுயற்சில கமலாவோட சேலைல நெருப்பு பிடிச்சிபரவி தலையிலிருந்து பாதம் வரைக்கும் தோல், தீக்கு இரையாயிடிச்சி. அவங்க உயிரைத்தான் எங்களால காப்பாத்தமுடிஞ்சிது.ஆஸ்பித்திரிலிருந்து திரும்ப வீடுவராமல் எங்ககிட்ட எதுவுமே சொல்லாம,எங்கயோ போனவளை போனமாசம் திருச்செந்தூர்ல கோயில் வாசல்ல பிச்சை எடுத்துட்டு நிற்கிறபோது பாத்தேன்..வற்புறுத்தி அழைச்சிட்டு வந்தேன்.'உன் பேரனை ஒருவாட்டிப் பாத்துட்டுப்போ'ன்னுசொன்னேன் தயங்கித்தான் கமலாவும் வந்திருக்கா இங்க.."

அப்பா நீண்ட நேரம் பேசிய களைப்பில் பெருமூச்சு விடுகிறார். விஜி திகைப்புடன் என்னையே பார்க்கிறாள்.நான் வேதனையுடன்," என்னைப் பெத்த தாயா அவங்க? கடவுளே!" என்று கதறி நிமிர்ந்தபோதுஅந்த அறையின்சுவரில் மாட்டப்படிருந்த நிலைக் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கிறேன்.

அகத்தின் அழகை கண்ணாடி பிரதிபலிக்கிறது முகம் வழியே.

பரிதவிப்புடன் ஹாலிற்கு ஓடிவருகிறேன், அங்கே என் அம்மா இல்லை.

வெளியே சாலைக்கு வேகமாய் வந்த என்னைப் பார்த்ததும், எதிரே மரத்தடியில் உட்கார்ந்திருந்த அந்த தொழு நோயாளி பயத்துடன் வேறுபக்கமாய் நகர்கிறான்.
நான் , அவனைத் தொடர்கிறேன்.
****************************************************************

23 comments:

  1. //விலைகொடுத்து வாங்கற பொருளோட சில நேரங்களில் ஒட்டிக்கிட்டு வருமே ஒண்ணு , அதுமாதிரி இலவச இணைப்பா? இலவச இணைப்பெல்லாம் எனக்குத்தேவைஇல்லை..எனக்கு விலைமதிப்பு பெறுமானது தான்முக்கியம்"

    "ரவி! நீ வெறுக்கிற இலவச இணைப்பு நாந்தாம்பா//

    போட்டிக்கான தலைப்பு வந்துடுச்சு :-)

    ReplyDelete
  2. இந்த தலைப்பின் கீழ் இவ்வளவு சீரியஸாக கூட எழுத முடியுமா என வியக்க வைக்கிறது.

    வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. Anonymous2:50 PM

    A really touching story, vetri pera vaashthukkal :-)

    ReplyDelete
  4. ஷைலஜா, நல்ல கதை.... சென்டிமென்ட் கதை.... நான் இந்த தலைப்புல அதிகம் நகைச்சுவை கதைகள்தான் வரும்னு நெனச்சேன்... ஆனா நல்ல எமோஷனல் கத ஒன்ன கொடுத்துருக்கீங்க... போட்டிக்கான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. "அப்பாவின் முடிவுகளில் அர்த்தம் இருக்கும்".

    "சில தர்மங்களை நிலை நிறுத்தணும்னா கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியாம போகக்கூடும்னு சொல்வாங்க"..

    ஆழமான வரிகள்.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்,
    என்றென்றும் அன்புடன்,
    பா.முரளி தரன்.

    ReplyDelete
  6. நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். எனது பதிவு பற்றிய உங்கள் க்ருத்து அறிய ஆவல்

    ReplyDelete
  7. நன்மனம் உங்க + கதை ஒகேன்ன்னு சொல்லுதா? நன்றிங்க

    உஷா! ஆனாலும் குறும்பு உங்களுக்கு!

    லக்கிலுக்! பரிசுபெற்ற உங்களுக்கு வாழ்த்துமுதல்ல..சீரியசா எழுதறது ஈசிங்க..காமெடிதான் கஷ்டம்.
    ஹனீஃப் அமுதன் முரளி!
    உங்க மூவரின் விமர்சனத்துக்கும் மிக்க நன்றி
    சூர்யகுமார்! விரைவில் உங்க வலைபக்கம் போய் படிச்சி விமர்சிக்கறேன்

    ஷைலஜா

    ReplyDelete
  8. நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. Anonymous11:10 AM

    http://valai.blogspirit.com/archive/2006/11/03/விமர்சனங்கள்-இலவசம்.html

    ReplyDelete
  10. இலவசத்துல, சென்டிமெண்ட் கூட காட்டமுடியுமா? காட்டியிருக்காங்களே ஷைலஜா.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. கதை நன்றாக வந்திருக்கிறது ஷைலஜா அவர்களே!

    பாராட்டுக்கள்!

    +

    ReplyDelete
  12. நல்ல்லா இருக்கு ஷைலஜா..

    ReplyDelete
  13. ஆகா....இலவசம் அதற்குள் கிடைத்து விட்டதே. நல்ல கதி ஷைலஜா. உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பது எத்துணை பெரிய உண்மை. முருகா!

    உலகம் முழுதும் அன்பு மயமாய் விளங்க இறைவனை வேண்டுகிறேன். ஏனென்றால் அன்பு வாழ வைக்கும். எதிர்பார்த்த திருப்பமேயென்றாலும் உங்கள் கதைக் கரு என்னை மிகவும் நெகிழ வைத்து விட்டது.

    ReplyDelete
  14. கதையை விமர்சித்த நன்மனம்,(பெயரிலேயே மனம் தெரிகிறதே?) சிந்தாநதி(அழகான பேரு)நெல்லை சிவா,பித்தானந்தா,(எதுல பித்து?) பொன்ஸ்(ஹை! வாட் எ சர்ப்ரைஸ்!) எ(பெ)ங்களூரு ராகவன்..அனைவருக்கும் மிக்க நன்றி
    ஷைலஜா

    ReplyDelete
  15. //பித்தானந்தா,(எதுல பித்து?)//

    இருந்த பித்துக்கள் அனைத்தையும் துறந்தால் ஆனந்தம் கிடைக்கும்.

    ஆக எதைப்பற்றியும் கவலை கொள்ளா நிலையாகியா பேரானந்தத்தின் மீது பித்தாக இருப்பதால் பித்தானந்தா என்று பெயர் கொண்டேன்.

    தவிர பிதற்றிக் கொண்டிருப்பவனே பின்னாளில் பித்தனாக மாறி ஆனந்தமாய்ச் சுற்ற முடியும்.

    ReplyDelete
  16. கொஞ்சம் பார் மகளே பார் வாசனை அடிக்குதே. ஆனாலும் பரவாயில்லை. நன்றாக வந்திருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. கதை அருமையா இருக்குங்க... யூகிக்க முடிஞ்ச திருப்பம்தான்னாலும் இறுதிவரைக்கும் படிக்க வச்சுது!!!
    வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  18. //ஓகை said...
    கொஞ்சம் பார் மகளே பார் வாசனை அடிக்குதே. ஆனாலும் பரவாயில்லை. நன்றாக வந்திருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள். //



    பார்மகளே பார் சினிமாவையா சொல்றீங்க ஓகை? நான் பார்க்கல அதை
    உங்க வாழ்த்துக்கு நன்றி
    ஷைலஜா

    //அருட்பெருங்கோ said...
    கதை அருமையா இருக்குங்க... யூகிக்க முடிஞ்ச திருப்பம்தான்னாலும் இறுதிவரைக்கும் படிக்க வச்சுது!!!
    வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி அருட்பெருங்கோ..(அருமையான தமிழ்ப்பெயர்!)

    ஷைலஜா

    ReplyDelete
  19. இலவச இணைப்பாக வந்துள்ள இந்த கதையில் இறுகிய உறவுகளின் மறுப்பக்கம் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    நல்லதொரு கதை.

    ஷைலஜாவிற்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. மஞ்சூர் ராசா! உங்களின் விமர்சனத்துக்கு மிக்க நன்றி. உடல்நிலை பரவாயில்லையா?
    ஷைலஜா

    ReplyDelete
  21. கலக்கிட்டீங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. ஷைலஜா
    நல்ல கதை
    வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.