Social Icons

Pages

Tuesday, February 19, 2008

பேசும் மௌனங்கள்!

அமைதியை ஆடையாய்கொண்ட
வெட்டவெளியில்
அரவத்தின் சீற்றலாய்
மௌனம்.

உடலில் ஊர்ந்து, நகர்ந்து,பின்
வளைக்கும் உத்தேசத்தில்
காலசர்ப்பத்தின் பிடியினைப்போல
காற்றுவெளியில்
சொற்கள் சிதறிய
காலடிப்பாதைகள்.

அவ்வப்போது தலைதூக்கிப்படமெடுக்கும்
நாகத்தின் அழகில்
மயங்கத்தான் தோன்றும்மனதைப்போல
நெஞ்சக்கூட்டிலேயெ
அடைந்துகிடக்கும் சொற்கள்
புறம்தள்ளி வரும்போது
புதுமைக்கீறல்
விடியல்வானில்!

4 comments:

  1. மெளனத்தை இப்படியும் பார்க்காலாமா? ஆகா ஷைலஜாவால் தான் முடியும் போல! :-)

    //காலசர்ப்பத்தின் பிடியினைப்போல
    காற்றுவெளியில்
    சொற்கள் சிதறிய
    காலடிப்பாதைகள்//

    நான் மிகவும் ரசித்த வரிகள்!

    ReplyDelete
  2. நல்ல கவிதை ... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி ரவி மற்றும் அதிஷா உங்களின் வருகைக்கும் கருத்துக்க்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.