Social Icons

Pages

Friday, January 23, 2009

திருக்குறளில் தமிழ் இல்லை!

தமிழில் எழுதப்பட்ட திருவள்ளுவரின் குறளில் தமிழ் என்கிற வார்த்தை எங்கேயும் இல்லை .

உயிர் எழுத்துக்களில் என்கிற உயிரெழுத்தை ஒருகுறளிலும் வள்ளுவர் பயன்படுத்தவே இல்லை

1 என்கிற எண்ணை 11 இடத்திலயும்


2 என்கிற எண்ணை 10இடத்திலேயும்

4 --------11 இடத்திலேயும்

5 ------ --- 14 இடத்திலேயும்

6 ------ ---- ஒரே ஒருஇடத்திலேயும்

7 --------------- ஏழுதடவையும் வருகிறது.

8 ,10 , 100 ,1000 ஆகியஎண்கள் தலா ஒருதடவைமட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

கோடியை வள்ளுவர் 7 இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்.


(இதை ஒருமுறை என் தோழி என்கிட்ட சொல்லி உடனே இங்க இட்டுவிட்டேன்.:))

29 comments:

  1. தோழி சொன்னதை தோளிலிருந்து இறக்கி வைத்து விட்டீர்களா:)))?
    தெரியாத விஷயங்கள் எனக்கு. பகிர்தலுக்கு நன்றி ஷைலஜா!

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றிங்க

    இணையத்திலிருந்து
    இன்னும் ஒரு தகவல்

    திருக்குறளில் 133 அதிகாரக்கள். 1330 குறள்கள். இந்த எண்ணிக்கைக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? தமிழில் மொத்தமுள்ள நெடில் எழுத்துக்கள் 133. எனவே திருக்குறள் 133 பத்துக்களால் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் முனைவர். மு. இளங்கண்ணன். (நூல்଻ திருக்குறளின் வடிவமைப்பும் திட்டமும் செயல்திறனும் - பதிப்பு 2002. பக்கம் 33)
    உயிரெழுத்து நெடில் 7. உயிர்மெய் எழுத்து நெடில் 18 பெருக்கல் 7 =126.
    7ஐயும் 126ஐயும் கூட்டினால் 133.
    இது ஆய்ந்து தோய்ந்த விளக்கம். அரிய உண்மை.

    ReplyDelete
  3. அட. உண்மை தான். தமிழ் என்ற சொல்லை திருவள்ளுவர் எங்குமே பயன்படுத்தவில்லை. இந்த இடுகையைப் படித்தவுடன் சென்று தேடிப் பார்த்ததில் தமிழ் என்ற சொல் திருக்குறளில் காணவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லையே? சங்க இலக்கியத்தில் வேறு எங்கேனும் தமிழ் என்ற சொல் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கும் ஆவலைக் கிளப்பிவிட்டீர்கள்.

    ReplyDelete
  4. ராமலக்ஷ்மி said...
    தோழி சொன்னதை தோளிலிருந்து இறக்கி வைத்து விட்டீர்களா:)))?
    தெரியாத விஷயங்கள் எனக்கு. பகிர்தலுக்கு நன்றி ஷைலஜா!

    5:23 PM
    >>> எனக்கும் அவங்க சொல்றவரை தெரியல ராமலஷ்மி .

    ReplyDelete
  5. திகழ்மிளிர் said...
    தகவலுக்கு நன்றிங்க

    இணையத்திலிருந்து
    இன்னும் ஒரு தகவல்

    திருக்குறளில் 133 அதிகாரக்கள். 1330 குறள்கள். இந்த எண்ணிக்கைக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? தமிழில் மொத்தமுள்ள நெடில் எழுத்துக்கள் 133. எனவே திருக்குறள் 133 பத்துக்களால் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் முனைவர். மு. இளங்கண்ணன். (நூல்଻ திருக்குறளின் வடிவமைப்பும் திட்டமும் செயல்திறனும் - பதிப்பு 2002. பக்கம் 33)
    உயிரெழுத்து நெடில் 7. உயிர்மெய் எழுத்து நெடில் 18 பெருக்கல் 7 =126.
    7ஐயும் 126ஐயும் கூட்டினால் 133.
    இது ஆய்ந்து தோய்ந்த விளக்கம். அரிய உண்மை.

    5:32 PM
    >>>ஆஹா இத்தனை விஷயமிருக்கா நன்றி திகழ்மிளிர்

    அபாரமான ஆராய்ச்சி இது இங்கு இட்டதற்கு நன்றி

    ReplyDelete
  6. குமரன் (Kumaran) said...
    அட. உண்மை தான். தமிழ் என்ற சொல்லை திருவள்ளுவர் எங்குமே பயன்படுத்தவில்லை. இந்த இடுகையைப் படித்தவுடன் சென்று தேடிப் பார்த்ததில் தமிழ் என்ற சொல் திருக்குறளில் காணவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லையே? சங்க இலக்கியத்தில் வேறு எங்கேனும் தமிழ் என்ற சொல் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கும் ஆவலைக் கிளப்பிவிட்டீர்கள்.

    5:52 PM
    >>>>>>>>>>>>>>வாங்க குமரன்

    எனக்கும் இப்போதான் இந்த தமிழ் விவரம் தெரிந்தது
    சங்க இலக்கியத்தில் பார்த்து சொல்லுங்க நன்றி குமரன் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  7. இணைத்திலிருந்து
    இன்னும் ஒரு தகவல்

    அதாவது, தமிழ் எண்ணியலில், 'ஒன்பது' என்ற எண்ணே கிடையாதாம். இதற்குச் சாட்சியாக, திருவள்ளுவரைக் காட்டுகிறார் திரு. ராமையா - திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம், கோடி, ஏன் பத்துக் கோடி, எழுபது கோடிகூட உள்ளது. ஆனால், இந்த 'ஒன்பது' என்ற எண்மட்டும் திருக்குறளில் இல்லவே இல்லை.

    இதற்குக் காரணம், தமிழில் ஒன்பது என்கிற எண்ணே இல்லை. அதனால்தான், திருவள்ளுவர் அந்த எண்ணைப் பயன்படுத்தவே இல்லையாம்.

    அப்படியானால், எட்டுக்குப்பிறகு, பத்துதானா ?

    இல்லை, எட்டுக்குப் பிறகு, 'தொண்டு' என்று ஒரு எண் இருந்ததாம். இப்போது அந்த எண் வழக்கத்தில் இல்லை. இதற்குச் சாட்சியாக, பரிபாடலில் ஓர் உதாரணம் தருகிறார் :

    .... ஒன்றென
    இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
    ஆறென ஏழென எட்டெனத் தொண்டென ...

    ஆகவே, தமிழில் எண்களை அடுக்கினால்,

    ஏழு
    எட்டு
    தொண்டு
    பத்து

    என்றுதான் வரவேண்டும்.

    ஆனால், எப்படியோ இந்தத் 'தொண்டு' என்கிற சொல்லை / எண்ணைத் தொலைத்துவிட்டார்கள். ஆகவே, அங்கே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அதைச் சரி செய்வதற்காக, பத்துகளை எண்ணும் வரிசையிலிருந்து ஒரு சொல்லை, முன்னே கொண்டுவந்துவிட்டார்களாம்.

    அதாவது,

    எழுபது
    எண்பது
    தொன்பது ... இந்தத் 'தொன்பது'தான், இப்போது எட்டுக்குப் பிறகு வரும் 'ஒன்பது'

    இதேபோல்,

    எழுநூறு,
    எண்ணூறு,
    தொன்னூறு ... இந்தத் 'தொன்னூறுதான்', இப்போது எண்பதுக்குப்பிறகு வருவது.

    இதேபோல்,

    ஏழாயிரம்
    எட்டாயிரம்
    தொள்ளாயிரம் ... இந்தத் தொள்ளாயிரம்தான், இப்போது எண்ணூறுக்குப்பிறகு வருகிறது.

    ReplyDelete
  8. திகழ்மிளிர் said...
    இணைத்திலிருந்து
    இன்னும் ஒரு தகவல்

    அதாவது, தமிழ் எண்ணியலில், 'ஒன்பது' என்ற எண்ணே கிடையாதாம். இதற்குச் சாட்சியாக, திருவள்ளுவரைக் காட்டுகிறார் திரு. ராமையா - திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம், கோடி, ஏன் பத்துக் கோடி, எழுபது கோடிகூட உள்ளது. ஆனால், இந்த 'ஒன்பது' என்ற எண்மட்டும் திருக்குறளில் இல்லவே இல்லை.

    <<<<<>>>

    அப்படியா தகவல் அருமை
    திகழ்மிளிர்



    \\\அப்படியானால், எட்டுக்குப்பிறகு, பத்துதானா ?

    இல்லை, எட்டுக்குப் பிறகு, 'தொண்டு' என்று ஒரு எண் இருந்ததாம். இப்போது அந்த எண் வழக்கத்தில் இல்லை. இதற்குச் சாட்சியாக, பரிபாடலில் ஓர் உதாரணம் தருகிறார் :

    .... ஒன்றென
    இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
    ஆறென ஏழென எட்டெனத் தொண்டென ...\\\


    ஓ அப்போ இன்னும் சில இலக்கியங்களில் கூட இருக்கலாம் நல்ல பணி இது திகழ்மிளிர்


    \\\\
    எழுபது
    எண்பது
    தொன்பது ... இந்தத் 'தொன்பது'தான், இப்போது எட்டுக்குப் பிறகு வரும் 'ஒன்பது'

    இதேபோல்,

    எழுநூறு,
    எண்ணூறு,
    தொன்னூறு ... இந்தத் 'தொன்னூறுதான்', இப்போது எண்பதுக்குப்பிறகு வருவது.

    இதேபோல்,

    ஏழாயிரம்
    எட்டாயிரம்
    தொள்ளாயிரம் ... இந்தத் தொள்ளாயிரம்தான், இப்போது எண்ணூறுக்குப்பிறகு வருகிறது ..\\\\


    அப்படியா இதெல்லாம் எல்லாரும் தெரிஞ்சிகக்ணுமே!! உங்களுக்கு நன்றி இங்க எல்லா தகவலும் சொன்னதுக்கு திகழ்மிளிர்

    ReplyDelete
  9. திகழ்மிளிர் said...
    இணைத்திலிருந்து
    இன்னும் ஒரு தகவல்

    அதாவது, தமிழ் எண்ணியலில், 'ஒன்பது' என்ற எண்ணே கிடையாதாம். இதற்குச் சாட்சியாக, திருவள்ளுவரைக் காட்டுகிறார் திரு. ராமையா - திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம், கோடி, ஏன் பத்துக் கோடி, எழுபது கோடிகூட உள்ளது. ஆனால், இந்த 'ஒன்பது' என்ற எண்மட்டும் திருக்குறளில் இல்லவே இல்லை.

    <<<<<>>>

    அப்படியா தகவல் அருமை
    திகழ்மிளிர்



    \\\அப்படியானால், எட்டுக்குப்பிறகு, பத்துதானா ?

    இல்லை, எட்டுக்குப் பிறகு, 'தொண்டு' என்று ஒரு எண் இருந்ததாம். இப்போது அந்த எண் வழக்கத்தில் இல்லை. இதற்குச் சாட்சியாக, பரிபாடலில் ஓர் உதாரணம் தருகிறார் :

    .... ஒன்றென
    இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
    ஆறென ஏழென எட்டெனத் தொண்டென ...\\\


    ஓ அப்போ இன்னும் சில இலக்கியங்களில் கூட இருக்கலாம் நல்ல பணி இது திகழ்மிளிர்


    \\\\
    எழுபது
    எண்பது
    தொன்பது ... இந்தத் 'தொன்பது'தான், இப்போது எட்டுக்குப் பிறகு வரும் 'ஒன்பது'

    இதேபோல்,

    எழுநூறு,
    எண்ணூறு,
    தொன்னூறு ... இந்தத் 'தொன்னூறுதான்', இப்போது எண்பதுக்குப்பிறகு வருவது.

    இதேபோல்,

    ஏழாயிரம்
    எட்டாயிரம்
    தொள்ளாயிரம் ... இந்தத் தொள்ளாயிரம்தான், இப்போது எண்ணூறுக்குப்பிறகு வருகிறது ..\\\\


    அப்படியா இதெல்லாம் எல்லாரும் தெரிஞ்சிகக்ணுமே!! உங்களுக்கு நன்றி இங்க எல்லா தகவலும் சொன்னதுக்கு திகழ்மிளிர்

    ReplyDelete
  10. இணைத்திலிருந்து
    இன்னும் ஒரு தகவல்

    பரிபாடலில் zero என்பதற்குத் தமிழில் பாழ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டினார்கள். குறிப்பிட்ட பாடலைத் தகவலுக்காக இங்கு இடுகிறேன்.
    பாழெனக் காலெனப் பாகென ஒன்றென
    இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
    ஆறென ஏழென எட்டெனத் தொண்டென
    நால்வகை ஊழிஎண் நவிற்றும் சிறப்பினை!

    .........................

    ReplyDelete
  11. திகழ்மிளிர் said...
    இணைத்திலிருந்து
    இன்னும் ஒரு தகவல்

    பரிபாடலில் zero என்பதற்குத் தமிழில் பாழ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டினார்கள். குறிப்பிட்ட பாடலைத் தகவலுக்காக இங்கு இடுகிறேன்.
    பாழெனக் காலெனப் பாகென ஒன்றென
    இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
    ஆறென ஏழென எட்டெனத் தொண்டென
    நால்வகை ஊழிஎண் நவிற்றும் சிறப்பினை
    >>>>>>>>>>>>>>>>>>>>>>சபாஷ் திகழ்மிளிர் ..அசத்தலா தேடிக்கொண்டுவந்திட்டீங்க நன்றி

    ReplyDelete
  12. மொழிக்கு பெயர் இருந்திருக்காது அன்றைய காலத்தில்.

    ReplyDelete
  13. குடுகுடுப்பை said...
    மொழிக்கு பெயர் இருந்திருக்காது அன்றைய காலத்தில்.

    9:09 PM
    >>.வாங்க குடுகுடுப்பை
    ஆமா நீங்க சொல்ற மாதிரியும் இருந்திருக்கலாம்.நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  14. of all the blogs I read here..this is one of the useful (or intriguing/informative one)

    ReplyDelete
  15. வெத்து வேட்டு said...
    of all the blogs I read here..this is one of the useful (or intriguing/informative one)

    7:34 AM
    >>>thank you வெத்துவேட்டு
    நிறைய பேரு உபயோகமாகவும் தகவல்பல தரும் பதிவுகளும் தராங்களே வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீ.

    ReplyDelete
  16. பட்டாம் பூச்சியை உங்க பக்கம் பறக்க விட்டு இருக்கேன். முடிஞ்சபோது, நீங்களும் எடுத்து பறக்க விடலாம்! இல்லைனாலும் பரவாயில்லை!
    http://jeevagv.blogspot.com/2009/01/blog-post_31.html

    ReplyDelete
  17. ஜீவா (Jeeva Venkataraman) said...
    பட்டாம் பூச்சியை உங்க பக்கம் பறக்க விட்டு இருக்கேன். முடிஞ்சபோது, நீங்களும் எடுத்து பறக்க விடலாம்! இல்லைனாலும் பரவாயில்லை!
    http://jeevagv.blogspot.com/2009/01/blog-post_31.html

    7:25 AM
    >>>>>>>

    நன்றி ஜீவா! நேரம்பார்த்து பறக்கறேன் இப்போ வீட்ல வேலைல ஒரே பரபரப்பு!!!!

    ReplyDelete
  18. சுவையான பதிவு - சுவையான தொடர்ச்சி.
    மேலும் தொடரட்டும்.

    ReplyDelete
  19. selvakkumar said...
    சுவையான பதிவு - சுவையான தொடர்ச்சி.
    மேலும் தொடரட்டும்.

    12:35 PM
    <<<<<<<<<<<<<்

    நன்றி செல்வகுமார் தொடர்கிறேன் வேறுஒரு இடுகையில்.

    ReplyDelete
  20. என்ன உள ?
    என்பதை உணர்ந்துவிடின்
    என்ன இல எனும் எண்ணம்
    எழாமலே நீர்த்துவிடும்.

    சுப்புரத்தினம்

    ReplyDelete
  21. sury said...
    என்ன உள ?
    என்பதை உணர்ந்துவிடின்
    என்ன இல எனும் எண்ணம்
    எழாமலே நீர்த்துவிடும்.

    சுப்புரத்தினம்
    >>>>>

    வாங்க சுப்புரத்தினம் ஸார்.
    அருமையா சொன்ன்னீங்க....நன்றி மிக

    ReplyDelete
  22. It seems concept of nine related terms in Tamil is later copied from
    North Indian languages. Prefixing Un or One Or thon to the next number to derive the nine related numbers.

    Eg.

    In Hindi
    19 Un-ees
    20 bees
    29 Un-thees
    30 thees
    39 Untal-ees
    40 chaal-ees
    49 Un-chaas
    50 Pachas

    Tamil

    09 Un-pathu
    10 Paththu

    99 Thon-Nooru
    100 Nooru

    999 thol-Aayirathu thon-Noorri Un-pathu
    1000 Aayiram

    ReplyDelete
  23. supersubra said...
    It seems concept of nine related terms in Tamil is later copied from
    North Indian languages. Prefixing Un or One Or thon to the next number to derive the nine related numbers.

    >>>>>
    வியப்பாக இருக்கிறது இந்த உங்கள் தகவல் இங்கு இட்டதற்கு நன்றி

    ReplyDelete
  24. பயனுள்ள தகவல். பின்னூட்ட ஆராய்ச்சிகள் கூடுதல் தகவல்கள். பாராட்டத்தக்க நல்ல முயற்சி/பதிவு.

    ReplyDelete
  25. சுல்தான் said...
    பயனுள்ள தகவல். பின்னூட்ட ஆராய்ச்சிகள் கூடுதல் தகவல்கள். பாராட்டத்தக்க நல்ல முயற்சி/பதிவு.

    1:24 AM

    >>>>>>>>>>>>>>


    நன்றி சுல்தான் வருகைக்கும் கருத்துக்கும்.

    ஆமாம் பின்னூட்டத்தகவல்கள் பலர் அற்புதமாக அளித்துள்ளனர்

    ReplyDelete
  26. /
    இதை ஒருமுறை என் தோழி என்கிட்ட சொல்லி உடனே இங்க இட்டுவிட்டேன்.
    /

    ஏகப்பட்ட புள்ளி விவரமா இருக்கு.

    இதை விஜயகாந்த் ஸ்டைல்ல பல்லை கடிச்சிகிட்டே படிக்கணுமோ!?

    :))))))))))))))))))


    அருமையான தகவல்.

    ReplyDelete
  27. @ திகழ்மிளிர் //எழுபது
    எண்பது
    தொன்பது ... இந்தத் 'தொன்பது'தான், இப்போது எட்டுக்குப் பிறகு வரும் 'ஒன்பது'

    இதேபோல்,

    எழுநூறு,
    எண்ணூறு,
    தொன்னூறு ... இந்தத் 'தொன்னூறுதான்', இப்போது எண்பதுக்குப்பிறகு வருவது.

    இதேபோல்,

    ஏழாயிரம்
    எட்டாயிரம்
    தொள்ளாயிரம் ... இந்தத் தொள்ளாயிரம்தான், இப்போது எண்ணூறுக்குப்பிறகு வருகிறது.//

    எனக்கு ரொம்ப நாளா இருந்த சந்தேகம் இது. இபோது தான் தீர்ந்தது . நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete
  28. @திகழ்மிளிர்
    //ஆனால், எப்படியோ இந்தத் 'தொண்டு' என்கிற சொல்லை எண்ணைத் தொலைத்துவிட்டார்கள். //
    எப்படி தொலைத்தார்கள் என்று தெரிஞ்சுக்க ஆர்வமாய் இருக்கிறேன்.

    ReplyDelete
  29. இந்தத் 'தொண்டு' என்கிற சொல்லை எண்ணைத் தொலைத்துவிட்டார்கள்.
    எப்படி தொலைத்தார்கள் என்று தெரிஞ்சுக்க ஆர்வமாய் இருக்கிறேன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.