Social Icons

Pages

Monday, August 24, 2009

2050 லவ்ஸ்டோரி!







அனி வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.

“டாட்! இன்னமும் இந்த கையில் வச்சி புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லயே நெட் கனெக்‌ஷன் இருக்கே அதுலபடிக்கவேண்டியதுதானே?” என்றாள், தனது பேனாபோன்ற ஒரு சாதனத்தைத் திறந்து மின்னஞ்சலைப்பார்த்தபடி.

“என்னதான் சொல்லும்மா புஸ்தகம்னா நாங்க அந்த நாள்ள குமுதம் விகடன்லாம் கைல எடுத்துவச்சிட்டு ஆழ்ந்து படிக்கிற சுகம் இருக்கே அதுக்கு ஈடு ஆகாதுஅனிதா…” என்று ஆரம்பித்தவரைக் குறுக்கிட்டாள் அனி.

‘கால் மீ ‘அனி’ டாட்! நான் இதை முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷை(லஜாபாட்டி)கிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்…இந்த 2050ல அ, னி , தா ன்னு இவ்ளோ பெரிய பெயரை யாராலும் கூப்பிடமுடியாதுன்னுதான் நான் அனி ன்னு மாத்திக்கிட்டேன்..இன்ஃபாக்ட் இருபத்தி ரண்டு வருஷம் முன்னாடி எனக்கு நீங்க உங்க மாம் பெயரான அபிதகுசலாம்பரி என்கிற பெயர் வைக்க நினச்சிங்களாமே?அம்மாதான் பிடிவாதமா அனிதான்னு வச்சதா கேள்விப்பட்டேன்.ரெடிகுலஸ் என்ன இதெல்லாம்? அந்தகாலம் மாதிரியே பெண் அடிமைகளா இருப்பாங்கன்னு நினச்சீங்களா?”


மகள் போட்ட போட்டில் பெரியசாமி பேசாத சாமியாகி விட்டார்.
தனக்குதிருமணம் ஆகும் முன்பு எப்படி இருந்தோம் என நினைத்துப்பார்க்க ஆரம்பித்தார்…
அசைபோடும் பழைய நினைவுகளேஅவரது தனிமைக்குத் துணை.

லஞ்ச் டாட் காமில் மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு டிவியை ஆன் செய்தார்…

ஏன்ஷியட் நெட் ஒர்க்ஸ் சானலில் பனிக்கால உடையில்விக்ரம், கடும்கோடைகால உடையிலிருந்த ஷ்ரேயாவோடு டுயட் பாடிக்கோண்டிருந்தார்,

சட்டெனத்திரும்பின அனிதா டிவியைப்பார்த்து அலறினாள்.

“ஓ மை காட்! கந்தசாமியா? 2009ல் வந்தபடமா?ஏன் இப்படி பழையபடமாவே வைக்கிறாங்க? டாட் இதெல்லாம் உங்ககாலப் படம்!நீங்கதான் பாக்கணும்! நான் பப் அல்லதுக்ளப்புக்குப்போகப்போறேன் ..மாம் வந்தா பிஸ்ஸா சமைச்சிவைங்கஇல்லேன்னா ஹாங்காங் நுடுல்ஸ் செய்யுங்க… மாம்ஸுக்கு அதான் பிடிக்கும்…. ஆமா எங்கபோனான் என் அருமைத்தம்பி டாம்?”

“தாமோதரனா? என்னம்மா அவன்பெயரையும் இப்படி சுருக்கிட்டே? அவன் டென்த் க்ரேட் ஆச்சேம்மா சின்சியரா படிக்க ப்ரண்ட்வீடுபோனான்”







‘வாட் ?மணி பத்தாகுது இன்னும் டாம் வீடுவரலையா? என்ன டாட் நீங்க பொறுப்பே இல்லாம இருக்கீங்க? ஒரு வயசுப்பையன் இருட்டி இவ்வளோநேரம் வெளில இருக்கான்னு கவலையே இல்லையா? மம்மி ஆபீஸ்போய் உழைப்பாங்களா இல்ல டாம் பத்தி கவலப்படுவாங்களா? நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல… நைட் மம்மி வந்ததும் உங்களுக்கு நல்ல டோஸ் இருக்கு….சரி நான் கிளம்பறேன் க்ளப்ல ஜீ(வா), ஜா(னி) ஜோ(தி) ரி(ஷி) எல்லாம் வெயிட் செய்துட்டு இருப்பாங்க..பை டாட்’

அனி அந்த சொகுசுக் காரில் ஏறி உட்கார்ந்து ரிமொட்டை எடுத்துக்கொண்டாள்.. நகரப் போக்குவரத்து சந்தடி ரிமோட்டை ஆஃப்செய்யவைத்தது.

.”ச்சேசே ப்ளடி ட் ராஃபிக்…..” என்று அவளே ட்ரைவ் செய்ய ஆரம்பித்தாள்.

கார்கணிணித்திரையில் தர்ம் சிரித்தான்… “ ஹாய் ஹண்ட் சம்!மை ப்ரின்ஸ்! என்றைக்காவது நீ என்னை ஏறெடுத்துப்பார்த்து ஐலவ்யூ சொல்லத்தான் போறேடா? என்கிட்ட என்ன இல்ல,…பழைய நடிகை பாவனா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே! ஐஞ்சடி அஞ்சங்குல உயரமும் இந்த ரோஜாப்பூநிறமும், கடைஞ்சிஎடுத்த தேகமும் எல்லா காளைகளையும் மயக்கும்போது நீ மட்டும் என்னடா விஸ்வாமித்ர தபஸ் செய்றே? நான் மேனகையா மாறணும்னு நீ எதிர்பார்த்தா ஐயாம் ரெடி யார்!”

திரை நோக்கி பறக்கும் முத்தமிட்டாள்.

அனி யின் புத்தபுது ஜப்பானிய டொகொமோ மாடல்
5 ஜிசெல்போனில்(பிரசவம் தவிர அதில் எல்லா காரியங்களையும் வெற்றிகரமாய் செய்யலாம் என அதைக்கண்டுபிடித்த யென்சிங்மங் சொல்கிறார்) ஜோ(தி) வந்தாள்.

“வாட்ஸ் அப் டீ?”

“ஹேய் அனி…உன் ஆளு , இங்க மர்லின் மால் வந்திருக்கான்..அவன் காரை நான் பார்த்திட்டேன்....அன்பேசிவம்னு காரின் பின் கண்ணாடில கொட்டையா எழுதி இருக்கு, அவனேதான்..'


"ரியலி?'

”யெப் உடனே இங்க வா அனி"

*********************************

மர்லின்மாலுக்குள் அனி நுழையும்போது மெக்டொனால்ட்ஸ் வாசலில் பர்கர் கையோடேயே வந்து வழிமறித்தான் வா(சன்).

சிந்தெடிக் இழைகள்மின்னும் உடையுடன் தெரிந்தான் சராசரிக்கும் அதிகமான உயரம் ஆனால் ஆண்மையின் கம்பிரம் அதில் அதிகமாகவே இருந்தது.முகவெட்டில் பழைய நடிகர் ஷாரூக்கான்,சிரிப்பில் பழைய மாதவன்.துடிப்பில் பழையசூர்யா மொத்தத்தில் 2050ன் புதுமுகம் சாகர் போல அட்டகாசமாய் இருந்தான்.

“ ஹேய் அனி உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்றான் போதையான குரலில்.

“முதல்ல வழிவிடு…நான் அர்ஜண்டா போகணும்”

“அனி மை ஹனி!மை ப்ரெட்டி கேர்ல்! என் இனிய அழகுதேவதையே…!எவ்வளவு காலம் ஆனா என்ன தமிழ்ப்பெண்களுக்கு என்றும் தனி அழகுதான்.உன் நினைவில் நான் இருக்கேன் !அனி !இன்னும் நான் யார்கூடவும் டேட்டிங் வச்சிக்கல… பிகாஸ் உன்கூடத்தான் வாழணும்னுதான்..அனி!நான் டேட்டிங் கேட்டால் உடனே ஓடி வர ஆயிரம் பேர் இருக்காங்க ஆனா எனக்கு அவங்க வேண்டாம்.லுக் அனி ! நான் நாலுகோடி(டாலர்) சொத்துக்கு ஒரே வாரிசு.என்னை ஏன் நீ கல்யாணம்செய்துக்கக்கூடாது?”

“ஹலோ ஹலோ கொஞ்சம் அடங்கு….நான் தான் தர்மை லவ்பண்றேன்னு உனக்கு தெரியுமில்ல?”

“அதனால் என்ன அனி~ இ து 2050… அவனைக் காதலிச்சிக்கோ.. என்கூட டேட்டிங் வச்சிக்கயேன்..”

“வா! நான் மாடர்ன் கேர்ல்தான்… ஆனா உண்மையான காதலை மதிக்கிறவள். இன்னிக்கு விஞ்ஞானம் அசுரவேகத்துல வளர்ந்து மனித உறவுகளை சீரழிச்சிட்டிருக்கு… ஆண் பெண் இணைப்பை பயாலஜிகல் ஈவெண்ட்டா பாக்றாங்க ஆனா நான் மனசோட சம்பந்தப்படுத்திப் பாக்றேன் எனக்கு ட்ரூ லவ் தான் பெருசு என்னால் உன்மனசு கெட்டுருந்தா ஸாரி..குட்பை”

வாசனை ஒருவழியாய் கழற்றிவிட்டு ஜோதியை மொபைலில் தேடினாள். அவள் அப்போதுதான் ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

“ஜோ! நான் 'டாய்ஸ் ஆர் அஸ்' கடைவாசலில் நிக்கறேன்” தகவல் கொடுத்தாள்

“யா யா…என் செல்லுல நானும் உன்னைப்பார்த்துட்டேன்.. அங்க வரேன் இரு”

ஜோ வந்ததும்
“அனீ….இந்த காம்ப்லெக்சில் தர்ம் இருகிற இட ம் சின்னகோயில் .அ துக்கு கார்லதான் போகணும்டி ..24வது மாடி”என்றாள்.

“மொபைலில் கோயிலைத்தேடினியா?”

“தேடி அங்க அ வ னைப் பார்த்தும் ஆச்சி… வா போகலாம்”

ஹைட்ரஜன் திரவஎஞ்சினை இருதயப்பகுதியில் தாங்கி இருந்த அந்த அதிநவீன சொகுசுக்கார் வேகமாக மேல் தளம் ஏறியது. பார்க்கிங் ஸ்லாட்டில் காரை செருகிவிட்டு இருவரும் மூச்சிறைக்க வந்தார்கள்,

அங்கே இருந்த சின்ன பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து நெற்றியில் விபூதிப்பட்டை,இடுப்பில் பட்டு வேஷ்டியுடன் பாலும்தெளிதேனும் த ருவதாகவும் பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் தரும்படியும் மெய்மறந்து பிள்ளளயாரிடம் கேட்டுக்கொண்டிருந்தான் தர்ம்.

“ஹாய் தர்ம்?”

யார் இந்த கணபதி பூஜையில் கரடி என அதிர்ந்து நிமிர்ந்தான் தர்ம்.

அனிஅவன் அருகில் சென்றாள்..ஜோ தான் போவதாயும் தர்மை சரிக்கட்டும்படியும் ஜாடைகாட்டிவிட்டு நகர்நதாள்.

“தர்ம் நான் ரெடியா… டேட்டிங்லாம் எனக்கும் பிடிக்கல வச்சிகிட்டாலும் அது உன்கூடத்தான்.. நம்ம கல்யாணம் எப்போன்னு சொல்லேன் ப்ளீஸ்?”

“லுக் மிஸ் அனிதா…எனக்கு இந்தக்கண்டதும்காதலில் நம்பிகை இல்ல…உன் பார்வைல நான் முப்பதுவருஷம் முன்னாடி இருந்திருக்கவேண்டிய மனுஷன் தான்..அப்படியே இருக்கட்டும்…என்னால உங்க மாடர்ன் லைஃபுக்கு ஈடுகொடுக்கமுடியாது…இதை பலதடவை சொல்லியும் இப்படி நான் எங்கே போனலும் தொடர்ந்து வந்து இப்படிக் கேட்டுதொல்லை பண்றீங்களே?”

“தர்ம் ஐ லவ் யூ.நீ இல்லாம என்னால் வாழவே முடியாது உன் உருவம் என்மனசிலயே பதிஞ்சிருக்கு அங்க வேற யார்க்கும் இடம்இல்லை”

“இந்த வசனமெல்லாம் பழைய தமிழ்சினிமாக்கு லாயக்கு… என்னைவிடு தாயே !நான்போறேன் “

பட்டு வேஷ்டிதடுக்கத் தடுக்க எழுந்த தர்ம் வேகமாய் எஸ்கலேட்டரில் இறங்கி ஓடி பேஸ்மெண்ட்டிலிருந்து காரில் ஏறிக் கொண்டான்.

அனிதா திகைப்புடன் அப்படியே நின்றவள் தன் செல்போனில் அவன்கார்போகும்பாதையை கவனித்தாள்.

கார் ஜெய்நகர் பகுதியில் பத்மஜா வீட்டுவாசலில் நிற்கவும் அதிர்ந்தாள்

“வாட் த ஹெல் இவன் கார்போய் அவ வீட்ல நிக்குது?’

பத்மஜா மௌண்ட்கார்மல் கல்லூரியில் அனியுடன் படித்தவள்.பக்கா பட்டிக்காடு. பாவாடை தாவணி என்று அணிந்து பாவயாமி ரகுராமம் பாடிக்கொண்டிருப்பாள். தன் பெயரை யாராவது பத்து என்று அழைத்தால்,"அபசாரம் ...சுவாமிக்கு ஆகாது" என்று புலம்புவாள்.
அவள்வீட்டிற்கு தர்ம் ஏன் போகிறான்?

அடுத்த பத்தாவது நிமிடம் அனி ,தர்ம் முன் ப்ரசன்னமானாள்.
“தர்ம் திஸ் ஈஸ் டூ மச் .இந்த bad m a ja க்காகவா என்காதலை நீ நிராகரிச்சே ?இவ என்னைவிட எதில உ சத்தி ? பலூன் மாதிரி இருக்கா இந்த பேட்மஜா?”

“பத்மஜா என்றால் பத்மமான தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகள்.என்று பெயர் .உனக்கு செம்மொழி தமிழும் சரியா தெரியாது தேவமொழி சம்ஸ்க்ருதமும் புரியாது…நுனிநாக்குல ஆங்கிலம் பேசும் நவநாகரீக மங்கை நீ!” தர்ம் சீண்டினான்.

“ ஏய், பேட்மஜா! என் ஆளுடிஅவன் விடு அவனை” என பத்மஜாவை பிடித்துத்தள்ளினாள் அனிதா.

“ மிஸ் அனிதா இதப்பாருங்க….நான்பொறுமையான ஆண்பிள்ளைதான் ஆனா என் காதலிமேல யார் கைவச்சாலும் வெட்டிடுவேன் ஆம்மா?”

தர்ம் உறுமவும் அனிதா அவமானத்தில் முகம் சிவக்க வீடுவந்தாள்.

ஆனால் மறுநாளே ஒரு விபரீதமுடிவெடுத்தாள்.
***************************************************

டிசம்பர்மாதத்திய பனிப்புகை, சாலையில் பரந்து சூழ்ந்திருக்க
அந்த நடுநிசியில் அனி, காரில் ஏறி புறநகர்ப்பகுதியில் இருந்த அந்த மேலைநாட்டுவாசனை கொண்ட காலனிக்குள் காரை செலுத்தினாள் தர்ம் வீட்டுவாசலில் காரை ஓசைப்படாமல் நிறுத்தினாள்.

மெல்ல காம்பவுண்டுக்குள் குதித்தாள்.

நல்ல வேளை வள்கம் சொல்லும் நாய்கள் ஏதுமில்லை

மெல்லிய கான்வாஸ் ஒலியோடு இருபக்கமும் கண்களைத் துழாவினாள், ஹாலின் ஜன்னல் வெண்டிலேட்டரின் கண்ணாடிகளை ஓசையின்றி அகற்றினாள்

மெல்ல உள்ளே உடலை நுழைத்து வளைந்து இறங்கினாள்.

ட்ராயிங் ஹால் ரீடிங் ஹால் அடுத்து வீடு நடுவில் தெரிந்த மாடிக்குச்செல்லும் படிகளில் ஏறி சன்ன நீல நிற வெளிச்சம் தெரிந்த பெட்ரூமுக்குள் போனாள். அங்கு கட்டிலில் கழுத்துவரை கம்ஃபர்ட்டரைப் போர்த்திக்கொண்டு தர்ம் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.

அனி அவன் அருகில்வந்து நின்றாள்.

“ஹேய் ஹாண்ட்சம் .தூக்கத்திலயும் நீ அழகுடா செல்லம்!இந்த அழகு எனக்குக்கிடையாதா?அப்படி என்றால் அந்த பேட்மஜாக்கும் கிடைக்கக் கூடாது ,, காதலுக்காக கொலையும் செய்வா இந்த மிஸ்அனி,ஆமா.. ஒழி நீ செத்துப்போ உனக்கு என்கையால்தான் முடிவு”
குனிந்து பலத்தையெல்லாம்திரட்டி கைகளை அவன்கழுத்தில் வைக்கும்போது அவள் கழுத்தை ஒரு வலியகரம் சட்டெனப் பற்றியது

“அவுட்ச்!” சன்னமாய் கூவியபடி திரும்பினாள்.

அவளைஅப்படியே ஓசைப்படாமல் வரும்படி ஜாடைகாட்டி அடுத்த அறைக்கு இழுத்துப்போன உருவம் அங்கு லைட்போட்டது .

வெளிச்சதில் அனிபார்த்தாள். அது ஒரு பெண். ஜீன்ஸும் டிஷர்ட்டும் அணிந்து நரைத்தபாப்தலைக்கு கணிசமாய் டை அடித்திருந்தாள்.வயது அறுபதுகளில் இருக்கலாம்.
பெரியசாமி அந்த நாளில் தான் மிகவும் சிலாகித்துரசித்ததாய் சொன்னதால் அனிதா நெய்ல்டாப்பில் கஷ்டப்பட்டுப்பார்த்த ஏய் படத்து நடிகை நமீதாபோலவும் தெரிந்தாள்.

“நான் தர்ம்மின் மாம்..நீ யார்?” என்றாள் அதட்டும்குரலில்

“நான் ,நா…ன்…” திணறினாள் அனி.


“பார்த்தா நல்லபடிச்சபொண்ணா தெரியற… நீ காரைநிறுத்தி உள்ளகுதிச்சி ஹால்ஜன்னல் கண்ணாடிகளைநகர்த்தி என் சன்னோட ரூம் போகிற வரை நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன் ..இங்க எல்லாஇடத்திலும் அலார்ம் இருக்கு..விரல அமுக்கினா போலீஸ் வந்துடும் ..செக்யூரிடி துப்பாக்கி உன்மேல நீண்டுடும ஆ னா நான் செய்யல பிகாஸ் உன் துணிச்சல் எனக்குப்பிடிச்சிருக்கு. ப்ரேவ்கேர்ல்! உன்னைமாதிரி நானும் துணிச்சல்காரிதான்
சரி எதுக்குவந்தே ?ஏன் என் பையனைக்கொலைசெய்ய நினச்சே?”

அனி தயங்கிப்பிறகு விவரம் சொன்னாள்.கடைசியில்
“அத்தை என்னைப் புரிஞ்சுக்குங்க உங்க மகனை உயிராகக் காதலிக்கிறேன்…தர்ம் இல்லேன்னா எனக்கு வாழ்வேஇல்ல”கண் பனித்தாள்.

“ரொம்பதமிழ் சினிமா பார்த்திருக்காங்க உன் அம்மா,நீ வயத்துல இருகக்றப்போன்னு நினைக்கிறேன்..தர்ம் மீது நீ கொண்ட காதலை நான் மதிக்கிறேன் …சரி இப்போ என்னோடுவா” என்றாள்.



அவளோடு அந்த அறையில் நுழைந்த அனி, அங்கு நிறைய சோதனைகுழாய்கள் பிப்பெட்டுகள்,ப்யூரெட்கள் இருப்பதையும்பார்மலின் நெடி அடிப்பதையும் உணர்ந்தாள். .கண்ணாடிஜாடிகளில் ரசாயனதிரவத்தில் தவளைகள் மிதந்தன சதைத்துணுக்குகள் பாலிதீன்பைகளில் ..மூட்டைமூட்டைகளாய்.

குரங்கு ஒன்று விட்டத்திலிருந்து க்ர்ர் என்று அசிங்கமாய் சிரித்தது. கேரட்டைக்கடித்துக்கொண்டு வெள்ளை முயல்கள் இரண்டும் கூண்டிற்குள் ஓட்டப்பந்தயம் நட த்தின. ஒரமாய் சின்ன மேஜைமீது சாதுவாய் வெள்ளைஎலிதூங்கிக்கொண்டிருந்தது.

“மேடம் நீங்…. நீங்க?”குழப்பமும் திகைப்புமாய் அனி கேட்டாள்.

“நான் ஒரு சயின்டீஸ்ட் பேர் குந்தளா தேவி.செல்லமா’குந்த்!’ அனி! என்கதை ரொம்ப சோகமானது முப்பது வருஷம் முன்னாடி எனக்கு கல்யாணமாகி அந்த உறவில் பிறந்த குழந்தை இறந்துபோனது அதில் ரொம்பமனம் உ டைஞ்சிபோனேன்.
அ ப்போது என் கவனத்தை திசைமாற்ற க்ளொனிங் துறையில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் இதுக்கு சம்மதித்தார். என்னோட ரண்டாவது குழந்தையை க்ளோனிங் முறைலதான் பெற்றேன் அவன்தான் தர்ம்… அடுத்து அர்ஜ் ,பீம் .நகுல், சகா ன்னு மொத்தம் அ ஞ்சுபையன்கள் எனக்கு .

எல்லாருமே ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருப்பாங்க .அதனால குழப்பம் வேண்டாம்னு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஊ ர்ல அனுப்பி படிக்கவச்சிட்டேன். தர்ம் மட்டும் இங்க பெங்களூர்ல என்கூட இருக்கான்..வருஷம் ஒருமுறை எல்லாரும் இங்க வருவாங்க.. ஒருவாரம் வீட்லயே இருப்பாங்க சேர்ந்து வெளில போக மாட்டாங்க…..இப்போ இங்க தான் இருக்காங்க….

அனி! உனக்கு தர்ம் கிடைக்கலேன்னா என்ன, மீத நாலுபேர்ல யாரையாவது செலெக்ட் செஞ்சிக்கோயேன்? எல்லாருமே க்ளோனிங் கைஸ்! லுக்கிங் நைஸ்! அவங்களில் ஒருத்தனுக்கு கண்டிப்பா என் கண்ணுக்குபழையநடிகை ஐஸ்வர்யாராய் மாதிரி இருக்கற உன்னைப்பிடிச்சிடும். நான் கல்யாணம் செஞ்சிவைக்கிறேன்…”

குந்தளாதேவி இபடிச்சொல்லும்போது, “ஹாய் மாம் யாரோட பேசிட்டு இருக்கிங்க?’ எனக்கேட்டபடி வந்த நால்வரையும் பார்த்தாள் அனி, அடுத்தகணம் மயக்கம்போட்டு விழுந்தாள்.



*****பிகு:)************************************************************
ஓண்ணு ரண்டுவார்த்தைகள்+தலைப்பில் மட்டும் மாற்றம் செய்து மீள்பதிவு! .

38 comments:

  1. படம் சூப்பர். இவ்வளவு பெரிய டிரஸ் போட்டு இருப்பாங்களா ?

    சந்துரு

    ReplyDelete
  2. நொந்ஜாமிய ஓட்ட இப்படி ஒரு மீள் பதிவா ...

    ReplyDelete
  3. Anonymous4:11 AM

    ஒரே டெரர்ரா இருக்கு. நல்ல கற்பனை.

    ReplyDelete
  4. C said...
    படம் சூப்பர். இவ்வளவு பெரிய டிரஸ் போட்டு இருப்பாங்களா ?

    சந்துரு
    ?>>>>>>>>>>>>>>>

    சந்துரு படத்தை இப்ப மாத்திட்டேன்..இப்பவாவது கதை சூப்பரில்லேன்னாலும் சுமார்னாவது சொல்லக்கூடாதா?:)

    ReplyDelete
  5. நட்புடன் ஜமால் said...
    நொந்ஜாமிய ஓட்ட இப்படி ஒரு மீள் பதிவா ...

    9:36 PM
    >>>>>>>>>>>>>>:):) நொந்ஜாமி? அது என்ன ஜமால்சாமி?:)

    ReplyDelete
  6. சின்ன அம்மிணி said...
    ஒரே டெரர்ரா இருக்கு. நல்ல கற்பனை.

    4:11 AM
    >>>>>>>>>>>>>>>>>>
    டெர்ரரா? வாட் சின்னம்மிணீ? அப்டியா இருக்கு ! நல்லகற்பனைன்னும் சொல்றீங்க...நன்றி நன்றி

    ReplyDelete
  7. கதை நல்லா இருக்கு. சந்தடி சாக்கில் பாவனா, நமீதா எல்லாரையும் பழைய நடிகை ஆக்கிட்டீங்களே! அவ்வ்வ்.

    நல்ல வேளை நயன் தாரவை விட்டு வெச்சீங்க. :))

    ReplyDelete
  8. மாணிக்கத்தையும் இப்ப தான் பாத்தேன். நல்லா இருக்கு. :))

    ReplyDelete
  9. சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடல் பாடி பதிவு செய்தாச்சா ஷைலு.

    இந்தப் பதிவு 'லவ் ஸ்டோரி' அதுவும் 2050வருஷத்தியதுன்னு போட்டிருக்கிறீங்க. வாழ்க...

    இன்னும் வாசிக்கல. வாசிச்சுட்டு எழுதறேன்.

    ReplyDelete
  10. கதை நீளம் கொஞ்சம் ஜாஸ்தி. otherwise, it's சூப்பர்

    Chandru

    ReplyDelete
  11. ப‌டிச்சுட்டு வ‌ரேன் ஷை(ல‌ஜாபாட்டி)... ரொம்ப‌ இல்ல... கொஞ்ச‌ம் பெரிசா இருக்கு..

    ReplyDelete
  12. //அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.//

    ஆஹா... ஆரம்பிச்சுட்டேளா??

    //அதான் உங்க வாட்ச்லயே நெட் கனெக்‌ஷன் இருக்கே //

    சூப்பர்...2050ன் விஞ்ஞான வளர்ச்சியா?? பேஷ்...பேஷ்...

    //முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷை(லஜாபாட்டி)கிட்டயும் //

    ஹைய்யா.... அனி கிட்ட மாட்டினா, இப்படிதான் உண்மைய போட்டு ஒடைச்சுடுவா...!!

    //மகள் போட்ட போட்டில் பெரியசாமி பேசாத சாமியாகி விட்டார்.//

    பே...பே பெரிய‌சாமி....

    //லஞ்ச் டாட் காமில் மதிய உணவுக்கு ஆர்டர்.//

    ந‌ல்ல‌ முன்னேற்றமுங்கோ.....

    //ஒரு வயசுப்பையன் இருட்டி இவ்வளோநேரம் வெளில இருக்கான்னு கவலையே இல்லையா?...///

    ஓஹோ...இதுதான் பெண்ணாதிக்கமா??? நல்ல வேளை இப்போவாவது சொன்னீங்களே..

    //ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆணீயம் பேசிக்கிட்டு இருக்கறது //

    ஹா...ஹா....

    //புத்தபுது ஜப்பானிய டொகொமோ மாடல்.//

    ஹிமாஷோ...ஹியாபா... டோயி?? (இது கொஞ்சம் முன்னாடியே ரிலீஸ் ஆகாதான்னு ஜ‌ப்பான் பாஷையில் கேட்டேன்??

    //இன்னிக்கு விஞ்ஞானம் அசுரவேகத்துல வளர்ந்து மனித உறவுகளை சீரழிச்சிட்டிருக்கு… ஆண் பெண் இணைப்பை பயாலஜிகல் ஈவெண்ட்டா பாக்றாங்க ஆனா நான் மனசோட சம்பந்தப்படுத்திப் பாக்றேன் எனக்கு ட்ரூ லவ் தான் பெருசு //

    2050லும்....?? சூப்பர்......

    //சின்ன பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து நெற்றியில் விபூதிப்பட்டை,இடுப்பில் பட்டு வேஷ்டியுடன் பாலும்தெளிதேனும் த ருவதாகவும் பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் தரும்படியும் மெய்மறந்து பிள்ளளயாரிடம் //

    2050லயாவது தந்தாரா??

    //கணபதி பூஜையில் கரடி //

    டப்பிங் பட டைட்டில் மாதிரி இருக்கு ஷைலஜா...

    //“பத்மஜா என்றால் பத்மமான தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகள்.என்று பெயர்//

    விளக்கத்திற்கு நன்றி... இதுதான் ஷைலஜா ஸ்டைல்...

    //நெய்ல்டாப்பில் கஷ்டப்பட்டுப்பார்த்த ஏய் படத்து நடிகை நமீதாபோலவும்.//

    டெஸ்க்டாப் போய், இப்போ நெயில்டாப்??

    //தர்ம்… அடுத்து அர்ஜ் ,பீம் .நகுல், சகா //

    ஐயா...இந்த கதை எனக்கு தெரியும்... தெரியும்... ரொம்ப பழைய கதை இது...

    ஜிங்ராட்ஜ்..... (2050ல புது வார்த்தை.... வாழ்த்துக்கள்னு அர்த்தம்...)

    ReplyDelete
  13. எப்படி யோசிச்சாலும் கடைசியில என்ன ஆச்சுன்னு புரியவே இல்லையே "ஷை"

    இப்படி கூப்புடறதை வெச்சு கதையா திரிச்சிட்டீங்களே!!!

    ReplyDelete
  14. //ambi said...
    கதை நல்லா இருக்கு. சந்தடி சாக்கில் பாவனா, நமீதா எல்லாரையும் பழைய நடிகை ஆக்கிட்டீங்களே! அவ்வ்வ்.

    நல்ல வேளை நயன் தாரவை விட்டு வெச்சீங்க. :))

    12:54 PM
    ambi said... ......

    வாங்கப்பா அம்பி தி க்ரேட்! காத்தடிச்சதுல குளிர்ச்சி! நயனதாராவை விட்டுட்டேன் ஆமா...
    தெரியும் சொன்னா நீங்க கொதிச்சி எழுவீங்கன்னு:) நன்றி வருகைக்கும் கருத்துக்கும் அம்பி

    ReplyDelete
  15. //மதுமிதா said...
    சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடல் பாடி பதிவு செய்தாச்சா ஷைலு.

    இந்தப் பதிவு 'லவ் ஸ்டோரி' அதுவும் 2050வருஷத்தியதுன்னு போட்டிருக்கிறீங்க. வாழ்க...

    இன்னும் வாசிக்கல. வாசிச்சுட்டு எழுதறேன்.

    6:57 PM
    >>>>>வாங்க மது
    சின்னக்கண்ணன் அழைகிறான் இன்னும் பாடல..பாலமுரளி மாதிரி பாடவரல அதான் தயக்கம்:)(நான் எப்படி பா.மு மாதிரிபாடறதுன்னு கேக்கக்கூடாதுமது:)

    கதை மெதுவா படிங்க கொஞ்சம் நீளமாம் நிறையபேரு அம்பிமாதிரி பொறுமையாபடிக்கமுடியாம தவிக்கிறாப்ல இருக்கு:) வருகைக்குநன்றி தோழி

    ReplyDelete
  16. C said...
    கதை நீளம் கொஞ்சம் ஜாஸ்தி. otherwise, it's சூப்பர்

    >>>>>>>>>>>>
    ஒகே சந்துரு நெக்ஸ்ட் டைம் சிக்கனம் ஷைலஜாதான்:0 நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  17. R.Gopi said...
    //அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.//

    ஆஹா... ஆரம்பிச்சுட்டேளா??

    //அதான் உங்க வாட்ச்லயே நெட் கனெக்‌ஷன் இருக்கே //

    சூப்பர்...2050ன் விஞ்ஞான வளர்ச்சியா?? பேஷ்...பேஷ்...
    பெயர்//

    .//

    டெஸ்க்டாப் போய், இப்போ நெயில்டாப்??


    ஜிங்ராட்ஜ்..... (2050ல புது வார்த்தை.... வாழ்த்துக்கள்னு அர்த்தம்...)//



    >>வாங்க கோபி

    விவரமாவழக்கம்போல கருத்து..ஆஹா கோபின்னா கோபிதான் ..நன்றிமிகவே அந்த

    புது வாழ்த்துக்கும்:)

    1:04 PM

    ReplyDelete
  18. // Shakthiprabha said...
    எப்படி யோசிச்சாலும் கடைசியில என்ன ஆச்சுன்னு புரியவே இல்லையே "ஷை"

    இப்படி கூப்புடறதை வெச்சு கதையா திரிச்சிட்டீங்களே
    /////

    ஹஹ்ஹா:9 கண்டுபிடிச்சிட்டியா ஷ?:)

    ReplyDelete
  19. ம்ம்ம் கதையெல்லாம் எழுதி கலக்கறீங்க, கற்பனை நல்லாருக்கு, இப்படி நடக்குமுன்னு நீங்களும் நடக்காதுன்னு நாங்களும் நம்பலாம்
    jemshow போஸ்ட் முன்னமே படிச்சேன், மத்ததை 1-2 நாள்ல படிச்சுடறேன்
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்
    bostonsriram.blogspot.com

    ReplyDelete
  20. sriram said...
    ம்ம்ம் கதையெல்லாம் எழுதி கலக்கறீங்க, கற்பனை நல்லாருக்கு, இப்படி நடக்குமுன்னு நீங்களும் நடக்காதுன்னு நாங்களும் நம்பலாம்
    jemshow போஸ்ட் முன்னமே படிச்சேன், மத்ததை 1-2 நாள்ல படிச்சுடறேன்
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்
    bostonsriram.blogspot.com

    7:31 PM
    >>>>>>>>>>>>>>>>>>>>>>

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் தொடர்ந்து எடுக்கப்போற படையெடுப்புக்கும் நன்றி அன்புத்தம்பி ஸ்ரீராம்!

    ReplyDelete
  21. ரொம்ப நல்லா இருக்கு. நல்ல கற்பனை. நகைச்சுவை கலந்த சூப்பர் நடை.

    தொடர்ந்து கலக்குங்க..

    ReplyDelete
  22. ///படுக்காளி said...
    ரொம்ப நல்லா இருக்கு. நல்ல கற்பனை. நகைச்சுவை கலந்த சூப்பர் நடை.

    தொடர்ந்து கலக்குங்க..

    3:21 PM
    /////

    நன்றி படுக்காளி....நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு ரொம்பவும் நன்றி.

    ReplyDelete
  23. அன்பின் ஷைலஜா
    என்னடா யக்கோவ் எல்லாம் எங்கடா போச்சுன்னு பாக்கரீங்களா..
    2009ன் அனைத்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். உங்க ரேஞ்சே வேறன்னு அறிந்தேன். என்ன மாதிரி மொக்க பதிவர்ன்னு நெனச்சி கலாய்ச்சிட்டேன். நீங்க கதை, கவிதை, கம்பன், கீட்ஸ்ன்னு பெரிய லெவல்ன்னு புரிந்தேன்.

    பேனா,தாஜ்மகால், சுபாஷ்ன்னு நெறய இடங்கள்ள நம்ம டேஸ்ட் / frequancy ஒத்துப்போகுது... interesting

    1. 32 ல உங்களப்பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்

    2. ஜனனி சிறுகதை - ரசித்தேன்.

    3. ஜென் கதை - மொக்க /filler

    4.ஒபாமா - மறுபடி மொக்க

    5. காலணி கதை: இதப்படிக்கும் (பார்த்த) போதுதான் அசந்து போனேன், இதை புத்தகத்தில் படிச்சிருக்கிறேன், எழுதியது நீங்கள் என அறிந்த் போது வியந்தேன்.

    6. மைசூர் பாக் - படித்தேன், சிரித்தேன், ரசித்தேன்.

    7. எனக்கு எல்லா நிறங்களும் பிடிக்கும் (லூசாப்பா நீன்னு கேக்கறீங்களா- தெரியலயே..) ஆனா கருப்பு - very special
    கறுப்பு:-இந்த நிறம் விரும்புகிறவ்ர்களிடம் பிடிவாதம் நிறைந்திருக்கும். ஆனால் மனதில் சூட்சமமும் எதிலும் ஒரு கவர்ச்சியும் இருக்கும். மனமுதிர்ச்சி, வாழ்வினை நன்கு புரிந்து கொள்ளும் தன்மை, அதே நேரத்தில் மற்றவர்களை ஊக்குவித்து அவர்களை சரியான பாதையில் செலுத்தி அவர்கள் ஆற்றலை வெளிப்பட உதவும் பண்பு கொண்டவர்கள்.... hmmmmm....

    8. mills and boon : இத்த நான் படிச்சதே இல்லீங்க.. நான் ஆ.வி, குமுதம், ராஜேஷ்குமார், சுபா, ப கோ பி, பாலகுமாரன் இவங்களோட நிறுத்திட்டேன்.

    நிறைய எழுதுங்க, படிக்கிறேன்..
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்..

    ReplyDelete
  24. //sriram said...
    அன்பின் ஷைலஜா
    என்னடா யக்கோவ் எல்லாம் எங்கடா போச்சுன்னு பாக்கரீங்களா..
    2009ன் அனைத்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். உங்க ரேஞ்சே வேறன்னு அறிந்தேன். என்ன மாதிரி மொக்க பதிவர்ன்னு நெனச்சி கலாய்ச்சிட்டேன். நீங்க கதை, கவிதை, கம்பன், கீட்ஸ்ன்னு பெரிய லெவல்ன்னு புரிந்தேன்
    ////

    ஹலோ ஹலோ ஸ்டாப்! பெரிய லெவல்னு ஒண்ணும் இல்லப்ரதர்....நான் பத்துவயசுலயே பேனா பிடிச்சிட்டேன் அப்பா எழுத்தாளர் அதனால் எழுத்தின்மேல சின்னவயசுலயே மோகம் வந்தது. கீட்சும்கம்பனும் அப்பாவால் படிக்கமுடிந்தது.மத்தபடி நான் அலுவலகம் சென்று பணிபுரிகிற அளவு உங்களைமாதிரில்லாம் பெரியபடிப்பு படிக்கலையே. ஏதோ தெரிஞ்சதை வச்சி கதைபண்ணினா அதுக்கு இப்படி பெரிய லெவல்னு சொல்லி தள்ளிவைக்கிறதா அன்புத்தம்பியே?:)

    எல்லாபதிவுகளையும் படிச்சதே பெரிய சாதனைதான் பொறுமையின் திலகம் ஸ்ரீராம் நன்றி அதுக்கு முதல்ல.

    ReplyDelete
  25. //
    5. காலணி கதை: இதப்படிக்கும் (பார்த்த) போதுதான் அசந்து போனேன், இதை புத்தகத்தில் படிச்சிருக்கிறேன், எழுதியது நீங்கள் என அறிந்த் போது வியந்தேன்.

    ///


    பத்திரிகை எழுத்தாளர்தான்/

    சும்மா டைம்பாசுக்கு இணையத்துக்கு பத்துவருஷம்முன்னாடி வந்தேன் இங்கயே இப்பொ அதிக டைம் செல்வழிக்கிறேன் ஆனா பத்திரிகையையும் விடல:)

    ReplyDelete
  26. //6. மைசூர் பாக் - படித்தேன், சிரித்தேன், ரசித்தேன்///



    சிரிச்சீங்களா ஸ்ரீராம்? அதானே வேணும்...என்னவோ பெண் எழுத்துன்னா சோகம் விரக்தி பெண்ணீயம் இப்படித்தான் இருக்கும்னு சொன்னாங்க பாருங்கன்னு நான் நகைச்சுவையை அதிகம் கையாளுகிறேன். எனக்கும் அது பிடிக்கும் என்பதால்.

    ReplyDelete
  27. எனக்கு எல்லா நிறங்களும் பிடிக்கும் (லூசாப்பா நீன்னு கேக்கறீங்களா- தெரியலயே..) ஆனா கருப்பு - very special
    கறுப்பு:-இந்த நிறம் விரும்புகிறவ்ர்களிடம் பிடிவாதம் நிறைந்திருக்கும். ஆனால் மனதில் சூட்சமமும் எதிலும் ஒரு கவர்ச்சியும் இருக்கும். மனமுதிர்ச்சி, வாழ்வினை நன்கு புரிந்து கொள்ளும் தன்மை, அதே நேரத்தில் மற்றவர்களை ஊக்குவித்து அவர்களை சரியான பாதையில் செலுத்தி அவர்கள் ஆற்றலை வெளிப்பட உதவும் பண்பு கொண்டவர்கள்.... hmmmmm....
    //////


    <<<<<<<<<<<<<<<<<< நல்ல கோணத்துல சொல்றீங்க...ஸ்ரீராம். உண்மையும் இதுதான்.

    ReplyDelete
  28. நிறைய எழுதுங்க, படிக்கிறேன்..
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்..

    1:50 AM
    >>>>>>
    எழுதறேன் ஸ்ரீராம் அதுதான் தெரியும் சுமாரா! நன்றி நீண்ட பின்னூட்டத்துக்கும் வருகைக்கும் மேலான கருத்துக்கும்!

    ReplyDelete
  29. enakku future fiction stories romba pidikkum!!!! kadhaila varra madhri things/scenes ellam imagine panni pakave romba nalla irukkum :) loved this one too!

    ReplyDelete
  30. //அன்பின் ஷைலஜா
    என்னடா யக்கோவ் எல்லாம் எங்கடா போச்சுன்னு பாக்கரீங்களா..
    2009ன் அனைத்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். உங்க ரேஞ்சே வேறன்னு அறிந்தேன். என்ன மாதிரி மொக்க பதிவர்ன்னு நெனச்சி கலாய்ச்சிட்டேன். நீங்க கதை, கவிதை, கம்பன், கீட்ஸ்ன்னு பெரிய லெவல்ன்னு புரிந்தேன்.
    //

    aiyiyo appdiya??? apo adiyen appeata? :O (ingayum ore 'a' parunga!)

    ReplyDelete
  31. //Porkodi (பொற்கொடி) said...
    enakku future fiction stories romba pidikkum!!!! kadhaila varra madhri things/scenes ellam imagine panni pakave romba nalla irukkum :) loved this one too!

    10:28 PM

    ///வாங்க பொற்கொடி..என்ன ஒரு அழகான பேரு நிஜப்பேரா புனைபெயரா எதான்னா என்ன ரோஸ் ஈஸ் எ ரோஸ்! (ஐஸ்லாம் இல்ல நெஜமாத்தான்:) கதைபிடிச்சிதா குட்! நன்றி பொற்கொடி.

    ReplyDelete
  32. Porkodi (பொற்கொடி) said.. //

    aiyiyo appdiya??? apo adiyen appeata? :O (ingayum ore 'a' parunga!)’’’\\\\


    ஆ! அப்படில்லாம் இல்ல! அன்பாய் அழைக்கிறேன் அப்பப்போவாவது வாங்க பொற்கொடி அப்பீட் ஆகாம( அ! தொடருது அம்பிபதிவைப்போல:)))))

    10:29 PM

    ReplyDelete
  33. //வள்கம் சொல்லும் நாய்கள் //

    இந்த சொல்லாடலை மிகவும் இரசித்தேன்.

    //அன்பின் ஷைலஜா
    என்னடா யக்கோவ் எல்லாம் எங்கடா போச்சுன்னு பாக்கரீங்களா //

    டெல்லிக்கு இராஜான்னாலும் வீட்டுக்கு பிள்ளைதானே???
    அக்கா எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் எனக்கு யக்கோவ் தான் :)


    யக்கோவ் அமெரிக்காவுலேந்து வந்துட்டீங்களா??

    ReplyDelete
  34. நல்ல ப்ளாக் இது

    ReplyDelete
  35. //
    எம்.எம்.அப்துல்லா said...
    //வள்கம் சொல்லும் நாய்கள் //

    இந்த சொல்லாடலை மிகவும் இரசித்தேன்.

    //அன்பின் ஷைலஜா
    என்னடா யக்கோவ் எல்லாம் எங்கடா போச்சுன்னு பாக்கரீங்களா //

    டெல்லிக்கு இராஜான்னாலும் வீட்டுக்கு பிள்ளைதானே???
    அக்கா எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் எனக்கு யக்கோவ் தான் :)


    யக்கோவ் அமெரிக்காவுலேந்து வந்துட்டீங்களா??

    5:51 AM
    ...
    sorry brother

    இந்தமடலை இப்பத்தான் பாத்தேன் அக்டோபர்ல இந்தியா வரேன் எப்பவு ம்
    நான் உங்களுக்கு யக்கா தான்!!!

    ReplyDelete
  36. Several tips said...
    நல்ல ப்ளாக் இது

    5:29 PM
    >>>நன்றிங்க

    ReplyDelete
  37. Anonymous10:57 PM

    Creative story!!

    ReplyDelete
  38. //mittu said...
    Creative story!!

    10:57 PM
    ...//

    thanks mittu

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.