'இன்னிக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுன்னு வர்ஷாகிட்ட கேட்டுடணும் அதென்ன ஒருவாரமா முகத்த தூக்கிவச்சிட்டு யாரோடயும் சரியாப்பேசாம இருக்கிறா...இந்த நேரம்பாத்து என் மகன் -அதான் அவ புருஷன் -கார்த்திக்கும் வேற ஆபீசு வேலையாஅமெரிக்காபோயிட்டான்...இல்லேன்னா அவனைவிட்டு என்ன ஏதுன்னு விசாரிக்க வச்சிருக்கலாம்...நானும் அவங்களுக்கு கல்யாணமான இந்த ஆறுமாசமா வர்ஷாகிட்ட ஒரு மாமியார் மாதிரியா நடந்திட்டு இருக்கேன்? தாயா தோழியா தமக்கையா எத்தனை அன்பும்...
Tuesday, April 29, 2008
காற்றின் ஒலி இசையா?
இசைக்கு மனது கட்டுப்படுகிறது. இசைக்கு மனிதர்கள் மட்டுமின்றி பறவைகளும் விலங்குகளும் கூட மயங்குகின்றன.மனிதன் ஏற்படுத்தும் ஒலிகளைப்போலவே சில நேரங்களில் இயற்கையும் ஓசையை அதாவது ஒலியை உண்டாக்கும். காட்டில் விளாம்பழ ஓடு ஒன்று கிடக்கிறது யானை ஒன்றுஅதனைத்தின்று போட்டதில் அதன்மீது துளை ஒன்று எப்படியோ வந்துவிட அதனுள் காற்று புகுந்து புறப்படுகிறதாம். அது குழல் ஊதுவதைப்போல ஒலிக்கிறதாம்!இந்தச்செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.பொரியரை விளவின்...
தமிழ்ப்பிரவாகம் நடத்தும் இலக்கியப்போட்டிகள்!
அன்புடன் நண்பர்களுக்கு!வணக்கம்!ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின்பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது.இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை...
Monday, April 28, 2008
உன்னதங்கள்!
அடிச்சுவடுகள் ஏதுமின்றிஅலம்பிவிட்டதுபோலதெரிகிறது வானம் இதில் பூமிக்காகமழைகொண்டுதந்தமேகம் எது? கால்களின்றி விண்ணில் உலாவந்தநிலா,எப்படிப்பயணித்தது? எத்தனைக் *கிரணங்களைசூரியன்பதித்தது? இதைப்பற்றிய சிந்தை ஏதுமின்றிபயணித்த பாதைகளில்பதித்துக்கொண்டே போகிறோம்நாம் ,நமது அடிச்சுவடுகளை.____________________________*கிரணம்=கத...
Sunday, April 27, 2008
காலமெல்லாம் காத்திருப்பேன்.
அத்தியாயம் 12ஜெய்நகர் போலீஸ் ஸ்டேஷன்.இன்ஸ்பெக்டர் பசவராஜ் தனக்குத்தெரிந்த அரைகுறை தமிழில் பேச ஆரம்பித்தார்."சொல்லுப்பா மஞ்சுநாத்.!..எதுக்கு நீ அந்தம்மாவே கொலே செய்தே? "அவர் எதிரில் முகம் இறுகி நின்று கொண்டிருந்த மஞ்சுநாத் சட்டென," இன்ஸ்பெக்டர்! நான் ராதிகாவைக்கொலை செய்யல... இதோ நின்னிட்டு இருக்கானே சாரங்கன், இவனுக்குத்தான் மனைவி மேல சந்தேகம் அதான் தீர்த்துக்கட்டி இருக்குறான்...ஆனா ஃப்ளாட்டுல அந்த பத்ரிக்கிழவர் ஏதோ என்கூட ராதிகா...
Saturday, April 26, 2008
மனம் ஒரு குழந்தை.
அதட்டிப்பார்த்தேன்அடங்கவில்லைஅன்பாய் சொல்லிப்பார்த்தேன்அழுது அடம்பிடித்ததுஆனது ஆகட்டும் என்றுஅலட்சியம் செய்தேன்அமைதியாகிப்போனதுமனக்குழந்...
காலமெல்லாம் காத்திருப்பேன்.
அத்தியாயம் 11"யாரும்மா நீங்க? இந்த சூர்யா ·ப்ளாட்டுல யாரைப்பாக்கணும்?" தூக்கக்கலக்கத்தில் காம்பவுண்ட் கதவைத் திறந்தபடி வேலய்யா கேட்டான். ஆட்டோக்காரருக்கு அவர் மீட்டருக்கு மேல் கேட்ட பணத்தை பர்சிலிருந்து எடுத்துக்கொடுத்துவிட்டு வந்த சுமித்ரா,"என் தம்பி சாரங்கனைப்பாக்க வந்தேன்ப்பா....சூர்யா ·ப்ளாட்ஸ் நாலாவது ப்ளாக்குல வீடுன்னு அட்ரஸ்ல படிச்ச ஞாபகம். அங்க போகணும்.கொஞ்சம் வழி காட்டறியா? நான் ஊருக்குப்புதுசு" என்று கெஞ்சும்...
Friday, April 25, 2008
எனக்கு எப்போதும் இரண்டாவது இடம்
கூட்டம் ஆரம்பிக்க இன்னும் சில நிமிஷங்களே இருந்தன உதயன் தலைவரின் அருகே போய் நின்றுகொண்டுவிட்டான். நான் வழக்கம் போல இரண்டாவதாய் சற்று தள்ளிநின்று கொண்டேன். எனக்குப்பின்னே முகிலன், நிலவன் ஏனையோர் தலைவர் அரசியலில் மிகவும் பிரபலமானவர். இருமுறை மந்திரிபதவி வகித்தவர். இப்போதும் தேர்தல்கூட்டத்திற்குத்தான் நாங்கள் கோவைக்கு வந்திருக்கிறோம். தலைவரைப்பற்றி எதிர்கட்சிகள் அவதூறாய்ப் பேசினாலும் அவர்மீது எனக்கு அபிமானம் உண்டு. ஆனால் உதயனைப்போல...
காலமெல்லாம் காத்திருப்பேன்.
அத்தியாயம்-10. எதிர் கட்டிடத்தில் கோகுலாஷ்டமி நிகழ்ச்சிகள் முடிந்து விட்டன. அப்பார்ட்மெண்ட்டில் அனைவரும் தங்களது ஃப்ளாட்டுக்குத் திரும்ப ,சாரங்கன் மட்டும் அந்த தியான மண்டபத்தில் ஒரு தூண் ஒரமாக சாய்ந்து உட்கார்ந்திருந்தவன் அந்த ஆன்மிக சொற்பொழிவின் உள் அர்த்தம் நிறைந்த கதையை மறுபடியும் அசை போட்டான். சட்டென உடம்பு சிலிர்த்துப்போனது. ஏதோ புரிந்த மாதிரி இருந்தது, அமைதியான அந்த இடத்தில் காதுக்குள் மீண்டும் மீண்டும் அந்தக்குரல்...
Monday, April 21, 2008
காலமெல்லாம் காத்திருப்பேன்.
அத்தியாயம்.9."ஹலோ மஞ்சுநாத்?" ஜெய்நகர் போவதாக சாரங்கனிடம் சொல்லிய ராதிகா தெருமுனையிலிருந்த பார்க்கில் போய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்துகொண்டாள். சுற்றிலும் பார்வையை நுழைத்தபடி செல்போனில் மஞ்சுநாத்தை அழைத்தாள் ஏற்கனவே ஆபீசில்தான் வசமாய்மாட்டிக்கொண்டுவிட்ட கவலையில் வீட்டில் முடங்கிக்கிடந்த மஞ்சுநாத் ராதிகாவின் அழைப்பை வழக்கம்போல் ஆரவ்மாய் ஏற்காமல் சுரத்தில்லாமல்" ஹலோ ?"என்றான். " ஹேய் மஞ்சு, வேர் ஆர் யூ யா? இங்க, சாரங்கனுக்கு சந்தேகம்...
Tuesday, April 15, 2008
காலமெல்லாம் காத்திருப்பேன்.
காலமெல்லாம் காத்திருப்பேன்அத்தியாயம் 8"சுமித்ரா! சுமித்ரா!"எதிர்வீட்டு பாக்யா அலறிக்கொண்டு ஓடிவந்தாள்கோகுலாஷ்டமிக்காக பூஜை அறையை அலங்கரித்துக்கொண்டிருந்த சுமித்ரா நிமிர்ந்தாள்."வா பாக்யா!ரொம்ப பதட்டமாய் தெரியறியே, உக்கார்ந்து நிதானமா சொல்லேன்?' என்றாள் மென்மையானகுரலில்.சாரங்கனைப்போல சுமித்ராவிற்கும் அதிர்ந்து பேசிப்பழக்கமில்லை."சு சுமித்ரா...உன் பொறுமைக்கு சோதனை வந்திடிச்சி...ஆமா..உன் புருஷனை..உன் புருஷனை..""என்னாச்சு பாக்யா?...
Saturday, April 12, 2008
சித்திரைப்பெண்ணே! சித்திரைப்பெண்ணே!
மெல்லசிவந்த மாங்கொழுந்தும் மண்ணில் சிதறிக்கிடக்கும் வேம்பூவும்கொள்ளை அழகாய் நறுமலர்கள்பூக்கக் கொண்டாடிவரும் வசந்தமுடன்மஞ்சள்பலாவும் பலஇன் கனியும் மக்கள் மகிழத் திருவிழாக்களும்பஞ்சமின்றி பாரில் தந்திடவே பாவை சித்திரை வருகின்றாள்உண்ணும் உணவிலும் வாழ்க்கையின் உயர்ந்த தத்துவம் பல உண்டுஎண்ணிப் பார்க்கையிலே அதுவும் எளிதில் நமக்கு புலனாகும்இனிக்கும் வாழ்க்கை என்றைக்கும் இசைந்தே கசப்பையும் ஏற்றுவிடும்விரும்பி கசப்பை உண்ணுவதை வேப்பம்பூபச்சடி...
Friday, April 11, 2008
சித்திரையே வருவாய்!
வசந்தமதை வரவழைத்துவாசலிலே நிற்கவைத்துவாசனை மலர்கள் அளித்துவாழ்த்துகூற வந்தனையோ?விழியின் மணியேபோல்விரித்தமலர் மணமேபோல்உரித்துவைத்த முக்கனிச் சுவையேபோல்உவந்த தமிழ் சொல்லே போல்சிரித்துவரும் மழலைபோல்சித்திரையே நீ வந்தாயோ!ஓய்வின்றி உழைப்பவரைஉலகில் வளர்ப்பாய்!தாயாகி அன்புமழைதரணிக்குத் தருவாய்!தமிழ்நாட்டோ டு வையகமும்தழைத்திடச் செய்வா...
Thursday, April 10, 2008
காலமெல்லாம் காத்திருப்பேன்!
காலமெல்லாம் காத்திருப்பேன்அத்தியாயம் 7சந்தேக நூலிழை கயிறாகமுன்பு அதை அறுத்து எறிய நினைத்த சாரங்கன், அன்று வீடுவந்ததும் ராதிகாவை அழைத்தான்."என்ன இது புதுசா இருக்கு குரலை உயர்த்தி என் பேரைச்சொல்லிக்கூப்பிடறீங்க?" வியந்தாள் ராதிகா.'காரணம் இருக்கு ராதிகா..ஆமா அன்னிக்கு எனக்காக வாங்கினதாய் நீ காண்பித்த அந்த பித்தளைபட்டர்ப்ளை வச்ச ஷூ எங்க? ஷூ ராக்கிலயும் காணோமே?' என்று சாரங்கன் கேட்டான்."அ அது அதுவந்து... அந்த மாடல் உங்க அழகுக்கு...
மூலிகையே! மூலிகையே!
முன்குறிப்பு..மறக்காமல்பின்குறிப்பு பார்க்க:)மேனகா ஆறுமாதம் முன்புவரை மேனகா கார்த்திகேயனாக இருந்தாள் இப்போது மூலிகைமாமணிமேனகாகார்த்திக் என்றாகிவிட்டாள்.இந்த ஆறுமாதத்தில் நடந்தது என்னன்னு கேக்கறீங்களா?ரொம்ப டார்டாய்ஸ் வத்தி சுத்தவேண்டாம்னாலும் நாலுமாதம்முன்பு என்பதால் கொஞ்சம்பின்னோக்கித்தான் போகணும்.அன்னிக்கு ஹொசூர்-க்ருஷ்ணகிரி நெடுஞ்சாலைல நானும் மேனகாவும் போய்க்கொண்டிருந்த கார் , ஹோசுரைத் தாண்டியதுமே எல்லைதாண்டிய வருத்தமோ என்னவோ...
Wednesday, April 09, 2008
கொலையும் செய்வாள் பத்மினி!
இன்னிக்கு ரண்டுல ஒண்ணு பாக்காம விடமட்டேன் ஆமா..அன்னிக்கு முறத்தால்புலியை விரட்டிய வீரத்தமிழ்மரபில்வந்த பெண் நான் என்கிறதை நிரூபிக்கத்தான் போறேன்பத்மினியின் முகம் கோபத்தில் விசாகப்பட்டினம் வெய்யிலாய் தகித்தது.நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்... வலை போட்டு தடுத்தும் பாத்தேன்.. ஆனா அதையும் மீறி என்னை என்னை...கன்றிச்சிவந்த தன்கன்னங்களை கண்ணாடியில் பார்த்தாள்.ஐயோ இந்தபாதகம் செய்தால் பார்த்திட்டு நான் சும்மா இருக்கணுமா?பல்லைக்கடித்தவள்...
Monday, April 07, 2008
காலமெல்லாம் காத்திருப்பேன்.
அத்தியாயம் 6ராகவ் எண்டர்ப்ரைசஸ்.மானேஜிங் டைரக்டர் சுரேஷின் பிரத்தியேக அறை.ஏசியின் அந்தக்குளுமையிலும் சுரேஷுக்கு வியர்த்துகொட்டியது. உடம்பே பற்றி எரிகிற மாதிரி இருந்தது.எதிரே கைகட்டிக்கொண்டு சாரங்கன் அமைதியாக நின்றிருந்தான்.அவனுக்கு சுரேஷைப்போல ஆத்திரம் வரவில்லையெனினும் மஞ்சுநாத் இப்படிச் செய்துவிட்டதில் மனது வேதனைப்பட முடிந்தது.கம்பெனியின் சீனியர் மேனேஜர் என்ற முறையில் மஞ்சுநாத்தை மிகவும் நம்பியிருந்தார் விபத்தில் மறைந்துபோன...
Friday, April 04, 2008
ஞானம்(கவிதை)
நாறும் திசையெங்கும்நாலுகால்பாய்ச்சலில் ஓடுகிறது நாய்.இருந்த இடத்திலேயேகண்ணிவைத்துஇரை தேடுகிறது சிலந்தி.நாய்க்கு, அலைச்சல்சிலந்திக்கு, வலை . ஞான...
Subscribe to:
Posts (Atom)