Social Icons

Pages

Friday, March 21, 2008

காலமெல்லாம் காத்திருப்பேன்!

அத்தியாயம்2*
**
*காலமெல்லாம் காத்திருப்பேன்*
*************************************************


மாலதி, டில்லியில் சாரங்கனோடு அலுவலகத்தில் ஒன்றாய் பணி புரிந்தவள். அறிவும்
அடக்கமும் அழகும் சேரும்போது அங்கே அலாதியான முகக்களை ஏற்படுமே
கவனித்திருக்கிறீர்களா அது மாலதியிடம்
ஏராளமாகவே உண்டு.


பலவருஷங்கள்முன்பே தொழில்நிமித்தம் டில்லிக்குக் குடிபெயர்ந்த பலகுடும்பங்களில்
மாலதியின் குடும்பமும் ஒன்று. மாலதியின் அப்பா பூமிநாதன் பிரபல மேஜிக் நிபுணர்.
தன் ஒரே வாரிசான மாலதியை தனக்குப்பின் இந்தக்கலையைக்கற்று அந்தக்கலையை மேலும்
பிரபலப்படுத்த நினைத்தார். மாலதி கற்றுக் கொண்டாள்.ஆனால் அப்பாவைப்போல அதையே
தொழிலாக்கிக்கொள்ள அவள் மனம் இடம் தரவில்லை. இலக்கியம் சமூக சேவை ஆன்மீகம்
என்றே சின்னவயதிலிருந்து அவைகளில் மனம் நாட்டம் கொண்டுவிட்டது. அதனாலேயே
ஏறக்குறைய தன் ரசனைக்கேற்ப இருந்த சாரங்கனின் மீது அவளுக்கு பற்று ஏற்படது.
அழகுதேவதையான மாலதியின் கடைக்கண்பார்வைக்கு எத்தனையோ டில்லி இளைஞர்கள்
ஏங்கித்தவமிருக்க அவளோ சாரங்கனை மானசீகமாய் விரும்ப ஆரம்பித்தாள்.


பெண்கள் இலேசில் காதல்வயப்படமாட்டார்கள், அப்படிப்பட்டுவிட்டால் அதை
நிறைவேற்றிக்கொள்ள எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள்.


அன்று அலுவலக லஞ்ச் நேரத்தில் தனிமையில் சாரங்கனை சந்தித்து தன்
உள்ளக்கிடக்கையை தெரிவித்துவிட தீர்மானித்தாள். ஆனால் பாழாய்ப்போகிற நாணம்
பேசவிடாமல் தடுத்தது. இந்தகாலத்துப்
பெண்தான் என்றாலும் அவள் வளர்ப்பு அவளுக்கு சில நியதிகளை நினைவுபடுத்தியது.
மனதுக்குப்பிடித்த ஒரு ஆணை அழகினால் வசப்படுத்துவதைவிட அறிவினாலும் அன்பினாலும்
நெருங்குவது எளிது என்பதை புரிந்துகொண்டிருந்தாள்.


தன் உணர்ச்சிகளைக் கவிதையாக்கிக் கொண்டாள்.


பூரியும் ஆலுகோபியும் தட்டில் வைத்துக்கொண்டு மேஜையில் சாப்பிடத்தயாரான
சாரங்கன் தன் அருகில் மாலதி வந்தி நிற்கவும் திகைப்புடன்," வாங்க மாலதி லஞ்ச்
ப்ளேட் எடுத்துட்டு இப்படி உட்காருங்க" என்று தன் அருகில் இடம் கொடுத்தான்.


"உங்க மனசிலும் எனக்கு ஓர் இடம் வேண்டும்சாரங்கன்" என்று தன் மனம்
அடித்துக்கொள்வதை மாலதி உணர்ந்தாள்.


'என்ன ஆயிற்று எனக்கு? பருவம் மட்டுமல்ல அந்தப்பருவ வயதில் சொல்லாமல்
கொள்ளாமல் வருவது
காதலும் தானோ? காதல் வந்தால் மனம் சிறகடித்துத்தான் பறக்குமோ?ஆதே நேரம் மௌனமே
பார்வையாய் நாணமே ஜாடையாகியும் விடுமோ?


என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது?'


தயங்கி நின்றாள சிலக்கணம். ஆனாலும் இதைவிட்டால் பிறகு சாரங்கனை சந்திக்க இப்படி
ஒரு வாய்ப்பு கிடைக்காது என நினைத்து சட்டென சொல்ல ஆரம்பித்தாள்.


"சாரங்! நான் ஒரு கவிதை எ.எழுதி இருக்கிறேன்" என்று சொல்லி நிறுத்தினாள். சந்தன
நிறத்தில் கடைந்த சிற்பமாய் புன்னகைதவழ பறித்த புது மலராய் அருகில்வந்து
நின்றவளை பரவசமாய்ப்பார்த்தான்
சாரங்கன்.


"சொல்லுங்க மாலதி.ஆய கலைகள் அறுபத்தி நாலில் உங்களுக்கு தெரியாத கலைகளே
இல்லைபோலிருக்கே? பாட்டு ஓவியம் படிப்பு மேஜிக்கலை இப்படி ஏற்கனவே கையில்
திறமைகளோடு
இருக்கீங்க..இப்போ கவிதையுமா? எனக்குக்கவிதை எழுத வரது ஆனா படிக்கப்பிடிக்கும்
எங்கே உங்களது கவிதைகள்?"

மாலதி தன்கைகளை நெஞ்சுக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு சாரங்கனையே
ஆழமாய்ப்பார்த்தாள் பிறகு சொல்ல ஆரம்பித்தாள்.


" உனக்காக சிரிக்கும்
இந்த உதடுகளுக்கு '
வத்துவிடாதே நெருப்பு


உனக்காகப்பறக்கும்
என்மனப்பறவையின்
சிறகுகளை
வெட்டக்கூடாதது
உன் பொறுப்பு


விரல்களைவெட்டினால்
வீணையா வாசிக்கமுடியும்?
விரிக்காத காதல்வலையில்
வீழ்வதும் ஒருசுகம்தானே?


உன் கடைக்கண்பார்வைக்கு
சம்மதமே பொருளானால்
அந்தப்பார்வைக்காய் நான்..
காலமெல்லாம் காத்திருப்பேன்"


உணர்ச்சிபூர்வ்மாய் சொல்லிமுடித்தவள், சாரங்கனை மறுபடி அர்த்தம் நிறைந்த பார்வை
பார்த்தாள்.


சாரங்கனுக்குப்புரியாமல் இல்லை.இது கவிதை அல்ல என்பதை அவனும் உணர்ந்தான்.
உணர்ந்தாலேயன்றி உணர்வுகளை மதிக்கவும் இயலாது.


மாலதியைப்போன்ற அழகானபுத்திசாலியானபெண் தனக்குக் கிடைக்ககொடுத்து
வைத்திருக்கவேண்டும் என எண்ணும்போது மனம் மகிழ்ச்சியில் திளைக்க ஆரம்பித்தது.
தன்னை அவள் நேசிக்கிறாள் எனும் நினைவே நெஞ்சை நிறைத்தது. .நேசிப்பதைக்காட்டிலும்
,நேசிக்கப்படுவது சிறப்பானது.


ஒருக்கணம்தான் அந்த இனிய உணர்வுகளில் மிதந்தான் அடுத்தகணமே
சுதாரித்துக்கொண்டான் சாரங்கன்
காலங்காலமாய் காதலுக்கு குறுக்கே நிற்கும் ஜாதிமதம் அதன் உட்பிரிவுகள் என்னும்
தடைகள் சீனிவாசன் குரலில் அசரீரியாய்காதில் விழுந்தன.மதம் ஒன்றானாலும் ஜாதி
உட்பிரிவுகளைக்காட்டி சீனிவாசன் மாலதியை தனக்கு மனைவியாக்கமாட்டான்
,வறட்டுக்குடும்பப்பெருமைபேசி திரியும் சிலமனிதர்களில் அவனும் ஒருவன்என்பதை
சாரங்கன் நினைத்துப்பார்த்தான் .மீறி செய்துகொண்டால் சீனிவாசன் தன் கோபத்தை
அக்காவிடம் காட்டிவிடுவான் என்பதையும் நினைத்தபோது உடம்பேநடுங்கியது.


மனதை அடக்கிக்கொண்டான்.


பிறகு மாலதியிடம்," அருமையான கவிதை மாலதி. பத்திரிகைகு அனுப்புங்க..இணையத்துல
போடுங்க நல்லாருக்கு"என்றான் .


மாலதி அவனைவிடவில்லை ,அப்போது சாரங்கன் வேறுவழியின்றி சீனிவாசனைப்பற்றிச்
சொல்ல வேண்டிவந்தது.


மாலதி மறுவாரமே அவனை சந்திக்க கிராமத்திற்கு வந்தாள்.பேசிப்பார்த்தாள்.ஆனால்
சீனிவாசனோ,
"போம்மா வெளில.. வீரசைவ வெள்ளாளர்குடும்பம் இது, இங்கவந்து சம்மந்தம்பேசறவங்க
இதுல உள்பிரிவுல மாறி இருந்தாக்கூட நான் சம்மதிக்கமாட்டேன்...உன் குடும்பம்
இந்த பிரிவுல இல்ல...குலம்கோத்திரம் பாக்காம கண்ணாலம் செய்றது எங்ககுடும்பத்துல
கிடையாது ..காலம் எவ்வளொ மாறினாலும் இதையெல்லாம் கெட்டியாபிடிச்சிட்டு
என்னைமாதிரி இதுக்குக்காவலா இருக்கறவங்களும் இருக்காங்க.. அதான் இந்த கலாசாரம்
அழியாம இருக்குது. இந்தவீட்ல காதலும் கத்திக்காயும் நுழையமுடியாது
தெரிஞ்சுதா போ போ"என்று சீறிஅனுப்பிவிட்டான்.


சுமித்ரா, பதட்டமுடன் மாலதிக்குப் பரிந்துகொண்டுவந்தபோது கையிலிருந்த
குடையினால் அப்படியே அவளைஒருசாத்துசாத்தினான் சீனிவாசன். .நிலமை புரிந்து மாலதி
வெளியேறிவிட்டாள்.


டில்லிவந்த அடுத்த வாரமே ஒருநாள் அலவலகத்தில் நேரே எம்டியிடம் சென்று தனது
ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டாள்.


சாரங்கனின் கேபினில் ஒருகவரைவைத்துவிட்டு மௌனமாய் சென்றுவிட்டாள்.


சாரங்கனுக்கு அவன் அக்காமூலமாய் எல்லாவிஷயமும் தெரிந்திருந்தது வேதனையுடன்
அந்தக்கவரைப்
பிரித்தான். கவிதை எழுதிய அந்தக்கவிதையை நெஞ்சு கனக்கப் படிக்கத்தொடங்கினான்.


உச்சந்தலையில் நெருப்புகிரீடம்
உருகிக்கொண்டே
மெழுகுவர்த்திதருவது
வெளிச்சம்


இயந்திரப்பற்கள்
இடையே மிதிபடும்
கரும்புதருவது
சக்கரை


உன்னிடமிருந்து
உடலால்
விலகிப்போகும்
என்னுள் உன் நினைவுகள்
என்றும் அழியா சித்திரம்


புனரபி ஜனனம்
புனரபிமரணம்
மறுஜன்மம்
அதுவே என் தருணம்


சாரங்கன் கண்கலங்கியது. மென்மையும் தன்னை இறுக்குவதை உணர்ந்தபோது தன்மீதே
வெறுப்பாகவும்வந்தது. ஆனால் வளர்த்து தன்னை ஆளாக்கிய அக்காவை நினைத்தபோது
காதல்உணர்வு நீரலைமேல் தோன்றிய நிழலானது.
கவிதைத் தாளைக் கிழித்துப் போட்டவன், மாலதியை அக்கண்மே அடியோடுமறந்தான்.


அடுத்த சில நாட்களில்பெங்களூருக்கு வேலைமாற்றல் கேட்டுவந்துவிட்டான்...அடுத்த
சிலமாதங்களில்
சீனிவாசனே மனம் உவந்து தேடிப் பார்த்துவைத்த பெண்ணின்கரம்பிடித்தான்.


அழகுச் சிலையாய் இருந்தாள் ராதிகா. ஆனால் அவளிடம் அலட்சியமும் ஆணவமும் பேச்சில் தெறிப்பது
புதுக்கணவனான சாரங்கனுக்குபுதிராய் இருந்தது.


ஒவ்வொரு ஆனின் சுபாவத்திற்குள்ளும் பெண்தன்மை இருக்குமாம் அதேபோல ஒவ்வொரு
பெண்ணிற்குள் இலேசான ஆண்தன்மையும் இருக்குமாம்.

ராதிகாவின் சுபாவம் , பிறகு பேராபத்தில் கொண்டுவிடப்போவதை அப்பாவியான சாரங்கன்
அறிந்திருக்க நியாயமில்லைதான்
(தொடரும்)

2 comments:

  1. ம்ம்ம்..நன்றாக கதை சொல்றிங்க ;)
    நேரில் கதை கேட்குற மாதிரியே இருக்கு உங்க எழுத்து நடை.
    சூப்பராக கதை சொல்றிங்க ;))


    மாலதி - அய்யோ பாவம் :(

    ராதிகா தான் வில்லியா!! அப்போ சாரங்கனும் பாவம் தான்...

    ReplyDelete
  2. Anonymous8:10 PM

    //ம்ம்ம்..நன்றாக கதை சொல்றிங்க ;)
    நேரில் கதை கேட்குற மாதிரியே இருக்கு உங்க எழுத்து நடை.
    சூப்பராக கதை சொல்றிங்க ;))//

    Repeat'ei!

    Osai Chella

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.