Social Icons

Pages

Friday, March 28, 2008

சுடோகுசுமதி!

சுமதி, சிறுகுறிப்பு...


சமையலில் கைதேர்ந்தவள்.. அதுவும் வட இந்திய உணவுகள் மேலைநாட்டு பாஸ்தா, பீஸ்ஸா இவைகளில்
தேர்ந்தவள். ஓவியக்கலையில் மன்னி. ஹிந்துஸ்தானீ இசை அவளிடம் கொஞ்சும். மிமிக்ரி
செய்து அசத்துவாள்.
கைபார்த்து ஜோதிடம் சொல்வாள். சீட்டுக்கட்டினைவைத்துக்கொண்டு மேஜிக்
செய்வாள்..இன்னும் பல கலைகள் அவள் வசம் இருக்கிறது.


ஒருநாள் சுமதி என் வீட்டிற்கு வந்தாள் கணவர் பாஸ்கருடன்.


வந்ததும்,"நியூஸ் பேப்பர் இருக்கா?" என்றுகேட்டாள்.


லஞ்சம் வாங்கிய எம்பியைபற்றியோ அடிக்கடி உருவாகிவரும் காற்றழுத்த
மண்டலம்பற்றியோ, கருடாமாலில் நடக்கும் கார்டன்சில்க் சேல் பற்றியோ அண்மையில்
கைதான போலிசாமியார்பற்றியோ - இதில் ஏதாவது ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ
தெரிந்துகொள்ளத்தான் சுமதி ஆர்வமாய் கேட்கிறாள் என நான் நினைத்தேன்


ஆனால் பேப்பர்அவள் கைக்குபோனதும்தான் உண்மையே தெரிந்தது.


அவள்கணவர் பாஸ்கர் என்னைபரிதாபமாய்பார்த்தார்.


"எத்தனை நாளாய் இந்த வியாதி?' என்று நான் கேட்டது கூட சுமதியின் காதில்
விழவில்லை.


அதைவிட எகிறிவிட்ட மியூசிக்சானலின் காதைப்பிளக்கும் சத்தமோ,
எட்டூருக்குக்கேட்பதுபோல கிச்சனில் அலறும் மில்க்குக்கரின்
விசிலோ எதுவுமே கேட்காமல் சுற்றுப்புறம் மறந்த நிலையில் கையிலிருந்த பேப்பரில்
சுடோ க்கு கட்டங்களில் எண்களை இடுவதும் பின் அழிப்பதுமாய் இருந்தாள்.


"சுமதிகிட்ட சென்னாபடூரா இன்னிக்கு கத்துக்கலாம்னு நினச்சேன்...கஜல் பாடச்
சொல்லி கேட்க ஆவலா இருந்தேன்... அவ என்னடானா வந்ததுமுதல் சுடோக்குலயே மூழ்கி


சோகக்தையை ஆரம்பித்தார் பாஸ்கர்.


"என்ன சுமதி , வீடுவாசல், பாட்டு படம்வரைவது, சமையல் மேஜிக் -எல்லாத்தியும்
மறந்தே போயிடபோறியா என்ன?" என்று அவளிடமே கேட்டுவிட்டேன்.


"நீயுமா ஷைலஜா? வீட்டுமுல்லைமணம் யாருக்குமே தெரியாதா? .. ஒரு நிகழ்ச்சில சுடோ
கு அறிஞர்கள் அத்தனைபேரும்
கலந்துகிட்டு சுடோ குவில் நான் சாதனை செய்த போது ஆச்சரியப்பட்டு அப்ரிஷியேட்
செய்தாங்க தெரியுமா? வீட்லதான்
ஒரு ரெகக்னீஷன் இல்ல...ஜப்பான்லயோ சீனாலயோ சுடொகுபத்தி புது புத்தகம்
வந்திருக்காம் ஒண்ணு வாங்கித்தாங்கன்னு கேட்டேன் , பாஸ்கர்கிட்ட... காதில்
போட்டுக்கவே இல்ல. எல்லாம் மேல் ஷாவனீசம்... பார்த்திட்டே இரு... நான் சுடோ கு
எக்ஸ்பர்ட் ஆயிடுவேன் உலகமே என்னைப்புகழும் அந்த நாள் அருகில்தான் தோழி!"


சொல்லிவிட்டு திரும்ப பேப்பரில் கட்டம்கட்டமாய் எண்களோடு
முன்னேறிக்கொண்டிருந்தாள்.


"சுடோ க்கு சொடக்கு சுடேகு என்றுகடமுடன்னு இதை எப்படிவேணாலும் அழைக்கலாம்.
இந்தக்கட்டம் நிரப்பும் ஆட்டத்தை நாந்தான் இவளுக்கு பொழுதுபோக்காய் இருக்குமேன்னு
முதலில்அறிமுகப்படுத்தினேன், சொல்லியும் கொடுத்தேன். இப்போ இவள் வெறும் சுமதீ
இல்லை, சுடோ குசுமதி ஆகிட்டாளே என்ன செய்வேன் நான்?" அழாதகுறையாகப்
புலம்பினார் பாஸ்கர்.


பிறகும் நான் அவளை கவனித்ததில்,


டிவி சீரியல்களையே ஒதுக்கும் அளவுக்கு அதில் ஈடுபாடும், வாரமாதநாவல்களை
மறக்கும் அளவுக்கு அதில் மனம் லயிப்பதும்,
மார்கழிமாதம் வாசலில் அரிசிமாவில்போட்டு வைத்து அதற்கு அடுத்தவீட்டு
மாமிகளிடம் விடைகேட்டு உபத்திரம் செய்யுமளவுக்குபோய் விட்டாள் என்பது
தெரியவந்தது.


பாஸ்கரின் மனக்குறையைத் தீர்க்க யோசித்தேன்.


தலைமேல் சட்டென பல்பு எரிந்தது.


சுமதியின் சுடொக்கு பித்தினையே ஒரு உபயோகமான முறையில் கொண்டுபோய்விடுவது என்ற என் எண்ணத்தை செயலாக்க முயன்றேன்.


கம்யூட்டரில் ஒரு விளம்பரத்தை லேசர்ப்ரிண்ட் அடித்துக்கொண்டு அவள் வீடுபோனேன்
.
சுலோகவகுப்பு யோகாவகுப்பு போல சுடோகுவகுப்பு நடத்தக்கூடாதா என்ன ?


*இவ்விடம் சுடோ கு கற்றுத்தரப்படும். மாதக்கட்டணம் நபருக்கு நூறேரூபாய்தான்.
சுமதிபாஸ்கர்
7.முதல்குறுக்குத்தெரு
பசவண்ணா லேஅவுட்
பெங்களூர்*
விளம்பரத்தாளை நல்ல அட்டைஒன்றில் ஒட்டிக்கொண்டேன்.


"வீட்டுவாசலில் உடனே இந்த விளம்பரஅட்டைபோர்டை அவசரத்திற்கு மாட்டிவிடு சுமதி
அப்புறமாய் முறைப்படி விளம்பரப்பலகை மட்டிக்கலாம். உனக்கு இதில் உன்
எண்ணம்போலபொழுதும்போகும் வருமானமும் வரும் எப்படி ஐடியா?"


இப்படிக்கேட்க மனதிற்குள் ஒத்திகை செய்து கொண்டேன்.


ஆறுகிலோமீட்டர் அட்டோவில் பயணித்து அன்று ஆர்வமுடன் அவள் வீட்டுக்கதவைத்
தட்டினேன்..


திறந்த கதவிற்குப்பின்னே கையில் அன்னக்கரண்டியுடன் பாஸ்கர்!


'கவலைப்படாதே சகோதரா..ஷைலஜா வந்திருக்கா கவலையைத்தான் தீர்த்திடுவா கவலைப்படத
சகோதரா' அகன்ற புன்னகையுடன் ஏறிட்டேன்.


"உள்ளவாங்க"


சமையற்கட்டிலிருந்து புகைமண்டலம் தெரிந்தது. ஏதோ தீயும்வாசனை. சுமதி சுடோ கு
போட்டபடியே சமைக்கிறாள்போலும்.


உள்ளேபோனதும் பாஸ்கர் ஏதோ சொல்ல வாயெடுக்குமுன்பாக நான் பெருமையாய் விளம்பர
அட்டையைக்காண்பித்து என் திட்டத்தை கூற வாய் எடுப்பதற்குள் அவர்மகன்
மாடியிலிருந்து கிழே இறங்கினவன்,"அம்மாவைத்தேடியா வந்தீங்க ஆண்ட்டீ? அவங்க
காலைல சுடொகுக்ளாஸ்போயிட்றாங்க...நான் தினம் ஸ்கூலுக்குப் போகிற மாதிரி தினமும்
எனக்கு முன்னாடி கிளம்பிடறாங்க....சாய்ந்திரம்தான் வராங்க...
மாசம் ஐநூறுருபாயாம் இதுக்கு..... அப்பா சொன்னாரா?" என்று கேட்டான்.
***************************************************************************

2 comments:

  1. :-)
    சுடோகு சுவையாய் இருந்தது!
    :-)

    ReplyDelete
  2. :)))

    பாவம் அந்த மனுஷன் ;)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.