Social Icons

Pages

Wednesday, April 09, 2008

கொலையும் செய்வாள் பத்மினி!

இன்னிக்கு ரண்டுல ஒண்ணு பாக்காம விடமட்டேன் ஆமா..
அன்னிக்கு முறத்தால்புலியை விரட்டிய வீரத்தமிழ்மரபில்வந்த பெண் நான் என்கிறதை நிரூபிக்கத்தான்
போறேன்

பத்மினியின் முகம் கோபத்தில் விசாகப்பட்டினம் வெய்யிலாய் தகித்தது.

நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்... வலை போட்டு தடுத்தும் பாத்தேன்..
ஆனா அதையும் மீறி என்னை என்னை...

கன்றிச்சிவந்த தன்கன்னங்களை கண்ணாடியில் பார்த்தாள்.

ஐயோ இந்தபாதகம் செய்தால் பார்த்திட்டு நான் சும்மா இருக்கணுமா?

பல்லைக்கடித்தவள் யோசித்தாள்.


அன்று இரவு நினைத்தபடி தன் திட்டதை முடித்தாள் பத்மினி.

வெளியூர்போன கணவனுக்குபோன் செய்தாள்.

"சந்துரு! நேத்திக்கே நான் உங்க கிட்ட சொன்ன விஷயம்தான்..என்னால ஒருவாரமா பொறுக்கமுடியல நீங்களும் ஊர்ல இல்ல ,, நான் என்ன செய்யறது
சொல்லுங்க கடைசில கடைசில....."

"என்னாச்சு பத்மினி தீர்த்துக்கட்டிட்டியா?"

"ஆமாங்க..வலைகட்டி படுத்துட்டாலும் எப்படியாவது உள்ளவந்தா நான் என்ன செய்வேன்?அதான்
இன்னிக்கு கொசுமருந்துவாங்கி எல்லா கொசுக்களையும் கொலைசெய்துட்டேன்.. இனி கொசுக்கடி இல்லாம நிம்மதியா தூங்கலாம் இல்ல?"

*******************************************************************************

2 comments:

  1. அவ்வ்வ்வ்வ்வ்....அக்கா என்ன ஆச்சு!!?

    ReplyDelete
  2. ஓவர் கொசுக்கடி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.