Social Icons

Pages

Monday, April 28, 2008

உன்னதங்கள்!

அடிச்சுவடுகள் ஏதுமின்றி
அலம்பிவிட்டதுபோல
தெரிகிறது வானம்


இதில் பூமிக்காக
மழைகொண்டுதந்த
மேகம் எது?

கால்களின்றி
விண்ணில் உலாவந்த
நிலா,
எப்படிப்பயணித்தது?

எத்தனைக் *கிரணங்களை
சூரியன்
பதித்தது?


இதைப்பற்றிய சிந்தை ஏதுமின்றி
பயணித்த பாதைகளில்
பதித்துக்கொண்டே போகிறோம்
நாம் ,
நமது அடிச்சுவடுகளை.
____________________________


*கிரணம்=கதிர்

4 comments:

  1. சூப்பர்!
    உன்னதக் கவிதை!

    சுவடுகள் விட்டுச் செல்லாத அதே நிலவு அதே மேகம் அதே வானம்...
    சுவடுகள் விட்டுச் சென்ற பல தலைமுறைகளைப் பார்த்து நகைக்கின்றன! நிலைக்கின்றன! :-)

    ReplyDelete
  2. கோபிநாத் said...
    அருமை..;)

    >>நன்றிகோபிநாத்

    ReplyDelete
  3. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    சூப்பர்!
    உன்னதக் கவிதை!

    சுவடுகள் விட்டுச் செல்லாத அதே நிலவு அதே மேகம் அதே வானம்...
    சுவடுகள் விட்டுச் சென்ற பல தலைமுறைகளைப் பார்த்து நகைக்கின்றன! நிலைக்கின்றன! :-)

    >>>ஆமாம் மனிதர்கள் சாதனைகளை தடம் பதிக்க விரும்புகிறோம் உன்னதங்கள் அதனைக்கடமையாய் நினைக்கின்றன. அதனால்தான் நீங்க சொல்வது போல நிலைக்கின்றன
    நன்றி ரவி கருத்துக்கும் பாராட்டியதற்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.