
வாடையும் பனியும் சூழ்ந்த
மார்கழித்திங்கள் நாளில்
நாடெல்லாம் புதுமை செய்ய
காடெல்லாம் விளைந்து செழிக்க
தேடிவந்ததிங்கு தேன்சுவைப் புத்தாண்டு!
வீடெல்லாம் நிறைந்த தூசி
ஓடிடப் பெருக்கித்தள்ளி
பாடி நாம் பரவசமாய்
ஆடிக் கொண்டாடியே வரவேற்கும் புத்தாண்டு!!
செந்தமிழ் நாட்டிற்கென்றே
சிறப்புற அமைந்தபொங்கல்
வந்ததும் விளைவுபொங்கத்...