Social Icons

Pages

Friday, September 21, 2012

அறுபது ஐம்பது நாற்பது முப்பது இருபது!!

பதினைந்து நாள் முன்னாடியே சென்னைக்கு ரயிலில் டிக்கட்டை ரிசர்வ்

செய்து, பட்டுப்புடவை அதற்கு மேட்சாக (கண்ணாடி) வளை முதல் பொட்டு

 வரை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டாயிற்று. சொந்தக்காரங்க

 கல்யாணத்துக்குப்போவதுபோல ஒரே த்ரில்.பின்ன

 மரத்தடிப்பெண்பட்டாளமே வரப்போகுதே என்பதை ஓர்மிச்சாலே மதுரிக்காதா

 என்ன?!
இரவு ரயிலில் ஏறிப்படுத்த அரைமணியில் எங்கள் கம்பார்ட்மெண்டில்

 ஆட்டோ ஒன்று ஓடுவதை உணர்ந்து திடுக்கிட்டு முழித்தேன். அப்பர் பெர்த்

ஆசாமியின் ஆரவாரமான குறட்டை என்று புரிந்துபோனதும் காதுக்குள்

கர்சீப்பை சுருட்டிவைத்துக்கொண்டு தூங்க ஆரம்பிக்கும்போது, எதிர் பெர்த்

 இளம் பெண்,’நோயா...கீப் கொய்ட்.. டெல் மி நௌ அதர்வைஸ்...?” என்று

 ஆங்கிலத்தில் எதிர்முனையுடன் செல்ல ஊடலில்

 இருந்தாள்/கிசுகிசுவெனதான் பேசினாள் கர்சீப் அடைத்த செவிகளிலும் அவள்

 செல்லில்பேசியது கேட்டுவிட்டது:)(சத்தியம் வேணுமென்றே கேட்பேனா

என்ன?:)
அடுத்த கம்பார்ட்மெண்டில் ஒரு குழந்தை ஓயாமல் அழுதது. ஆக

சென்னைவரும்போது தூக்கமின்மையில் கண் எரிய ரயிலடியில் காலை

 வைத்தால் சுள் என யாரோ பின் கழுத்தில் சூடு போட்டமாதிரி இருந்தது!

ஆதவனின் நீண்ட கரங்களில் ஒன்றுதான் அது! எங்க பெங்களூர் சன்

  கூலானவர்!
அப்போ ஆரம்பிச்ச வெய்யில் பெருமூச்சு துளசி-கோபால் அறுபதின்


வைபவத்திற்குக்காலை புறப்பட்டு ஓசியில் கிடைத்த ஏசி காரில் சென்று

இறங்கியும் தொடர்ந்தது. சின்ன மணடபமானாலும் சிறப்பானமேடை அங்கே

  மணக்கோலத்தில் துள்சியும் அவர் கணவரும் !
”ஷைலூஊஊஉ”
என்னடா மண்டபத்துல குயில்கூவுதேன்னு பார்த்தா நம்ம மதுமிதா!
பக்கத்துல ரோஜாப்பூக்கு சே லை உடுத்தினமாதிரி வல்லிமா! சிரித்த முகமாய்

 அருணா சினிவாசன்! தொடர்ந்து மரத்தடி தோழி கவிஞர் நிர்மலா! லஷ்மி


என்னும் திருமதி பாலபாரதி! சுப்புத்தாதா(சுப்புரத்தினம்)சுபாஷிணி என்கிற

வலை உலக ரசிகை. பிரபல சிங்கபூர் எழுத்தாளர் சித்ரா ரமெஷின் பெற்றோர்!

 மின்னல் வரிகள் வலைப்பூக்காரர் கணேஷ்!
ஆஹா! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஷைலஜா என்று மனசுக்குள்

மத்தாப்பு விரிய பேச ஆரம்பித்தோம்.
யுவக்ருஷ்ணா உண்மைத்தமிழன் பாரதி மணி போன்றோரை மது

அறிமுகப்படுத்தினார். யுவக்ருஷ்ணாவிடம்,”மணமக்களை வாழ்த்திக்கவிதை

கொண்டுவந்திருக்கேன்” என்றதும் அந்த இளைஞரின் முகத்தில்

 புயலடிச்சமாதிரி ஒரு திகில்..அப்புறம் தெரிஞ்சுது அவருக்குக்கவிதை

அவ்வளவா பிடிக்காதாம்!

-- ஹோமம் வளர்த்து பாசுரம் சொல்லி வேதம் ஓதி அறுபதாம்

கல்யாணச்சடங்கு நடந்து தாலி கட்டலும் முடிஞ்சதும் நாங்கள் நாலைந்துபேர்

 கூட்டம் கலையுமுன்பாக அவசர அவசரமாக ஒரு பாட்டு பாடினோம்

 அந்தப்பாட்டு வழக்கமா கல்யாணங்களில் நான் பாடும்பாட்டுதான் ஒரு சில

வரிகளை மாறறினால் போதும் அதே மெட்டுதான் ஆனா புதுசா கேக்க்றவங்க

ஏமாந்துடுவாங்க ரொம்ப பிரமாதமபோல பிரமையை உண்டு பண்ணும்...:)

 என்னபாட்டுன்னு கேக்கறீங்களா காதலிக்க நேரமில்லை படத்துல வருமே

  நாளாம் நாளாம் திருநாளாம் அதான்:)
கைத்தட்டலைக்கேட்டு வாங்கிவிட்டு சாப்பிடப்போனோம்.
அப்போதே சபதம் எடுத்தேன் மனசுக்குள்ள இனிமே இந்த சென்னல

 ஃபங்கஷனுக்கு சேலையே கட்டக்கூடாது காட்டன் சூடிதார்தான் என்று.

 
அதன்படி மாலை உட்லண்ட்ஸுக்கு சென்றேன் கைப்பையில் கவிதை

பத்திரமாக இருந்தது
அந்த மினிஹாலில் மெனிமெனி முகங்கள் ! பாராமுகங்களை பார்த்து

அறிமுகம் செய்துகொண்டோம்.. மரத்தடி உஷா (பழைய பப்பாளிகலர்

போய்விட்டது இப்பொ உஷாக்கு என்பதில் உள்ளூற சந்தோஷம்தான் பின்ன

 எப்பவும் ஃப்ரிட்ஜ்ல எடுத்த தக்காளிமாதிரி்யே இரு்ப்பாங்களாம் இவங்க நாங்க

மட்டும்..?”)
“சென்னை வந்து சுத்தல் ஜாஸ்தி ஷைலஜா வெளிநாட்ல அதிகம் வெளிய

 போகமாட்டேன் அப்டியெபோனாலும் ஏசிகார்லதான் அதான்் இந்தியா வந்து

கொஞ்சம் நிறம்மங்கிட்டென் ”என்றாங்க உஷா.
கேபிள் சங்கர் லதானந்த அண்ணாகண்ணன் அப்துல்லா மோகன்குமாமார்

(வீடுதிரும்பல்)
ஸாதிகா, உண்மைத்தமிழன், , , பலாபட்டறை சங்கர், புதுகை அப்துல்லா,

 ஜோதிஜி, கேஆர்பி செந்தில், வலைச்சரம் சீனா ஐயா, வெங்கட் நாகராஜ்,

யுவகிருஷ்ணா, அதிஷா சிமுலெஷன் சாதிகா ஜாப்பர் சார் பால கணேஷ்

  பட்டர்ஃப்ளை சூர்யா சீனாசார், இன்னும் பலர்பலர் வரலாறுகாணாத

கூட்டதுல நம்ம கல்பட்டு நடராஜன் சார் மாமிகூட சாகி சார்,(மைபா எங்கன்னு

  அங்கயும் யாரோ கேட்டுட்டாங்க)
யாரோ கேட்டாங்க ஹரிகிருஷ்ணன் வந்திருக்காரா என்று? இல்லையே என

சந்தேகமாய் நானும் தேடிப்பார்த்தேன் மரத்தடிப்புகழ் ஷக்திப்ரபா வை பலர்

விஜாரித்தார்கள்.ஜீவ்சை பாலபாரதி நினைத்துக்கொண்டார்.
நான் தான் மோர் என மோருக்கு எதிர் நிறத்தில் வந்தார் அருமை்த்தம்பி மோர்

சுப்ரா!( கண்ணுக்கு மை அழகு காளையர்க்கு கருப்பழகு..அதனால மோர்

 கோச்சிக்கமாட்டாரு:) அருகே வினோத் கூடவே அச்சு! ஆஹா

 இங்கிவரையான் பெறவே எனப்பாடலாம்போல ஒர்ரெ குஷி.
.உதயன் வெறும்கையுடன் வந்தார் நான் வர்ர இந்தமாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம்

 கைல காமிரா இல்லாம வந்த உதயனுக்கு தக்க தண்டனை தர

 யோசிக்கறேன்.

 
பின்ன என்னங்க  தட்டான்பூச்சி சிட்டுக்குருவி ஈ எறும்ம்பெல்லாம் தேடித்தேடி

  பின்னாடி ஓடிப்போயிபோட்டோ எடுப்பாராம் ஒருத்தி புகழ்பெற்ற

 புகைப்படக்காரரின் காமிரால தான் விழ நினைப்பதை பலமுறை சொல்லியும்

 கண்டுக்கமாட்டாராம்! போயா போ உதயா உனக்குக்கல்யாணம் இந்த

ஐபபசில இல்லை கார்த்திகைல தான்:)
அப்புறம் துள்சிகோபால் மேடைல கேக்வெட்டினாங்க நிறைய போட்டோ

எடுத்தாங்க யாராவது போடலாம் இருங்க எல்லாரும் உதயன் இல்லையே:)
அடுதத அரைமணில அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த நிகழ்ச்சி

நடந்தது ஆமாம் நான் மதுமிதா மற்றும் துள்சிகிட்ட ரகசியமா கெஞ்சிக்கேட்டு

  கவிதைக்கொஞ்ச்ம வாசிக்கவிடுங்க இல்லேன்னா் 11மணிக்குபெங்கலூர்

ரயில்ல ஏறினால் தூக்கமவராதுன்னேன் ”:)
ச்செசேஎன்ன ஷைலு உங்க கவிதை கேட்க ஓடோடி வந்த என்னை

ஏமாத்தாதீங்க என்பதுபோல துளசிமேடம் சொன்னாரா அசரீரியா தெரியலை:)
“உஷ் என் கூட்டத்தை அதட்டிவிட்டு ”அமைதி அமைதி ஷைலஜா

பெங்கலூஊஉர்லேருந்து (எதோ சந்திர்மண்டலம்போலபில்டப்): கவிதை

வாசிக்கன்னே வந்துருக்காங்க” என்றார்.
எழுதிவச்சதை மேடை ஏறி வாசிக்க ஆரம்பிக்கும்போதே யாரோ

கைதட்டினாங்க(பின்னாடி முடியாதுன்னு தெரிஞ்சிருக்கும்:) ஒருவழியா

  வாசிச்சேன் ஏகப்பட்ட காமிராக்கள் கிளிக்கின அடட்டா இப்படியெல்லாம்

காமிராக்கள் க்ளிக்கும்னா இன்னும் நல்ல சல்வார் போட்டிருக்கலாமோ ?
“ என்ன போட்டா என்ன அக்கா இருக்றதுதான் வரும் ?”என்ற

 ஸ்னாபக்வினோத்தின் பின்னாடி ஸ்விம்மிங்பூல் இருந்தது.கண்ணால்

 அதைக்காட்டினேன் தம்பி உடனேகப் சிப் பாவம்:)
அப்புறம் அமர்க்களமாய் பஃஃபே அருமை எல்லாமே! சாப்பிடும்போதே

அரட்டை அரட்டை அரட்டை அதன்றி வேறெதுமில்லை!  எல்லா

வயதுக்காரர்களும் அங்க  இருந்தோம் அதான்  தலைப்பு  இப்படி:)
 
நிறைந்த  மனத்துடன்   ஊருக்குத்திரும்ப  ரயிலேறினேன்.
 
***************************************************************************
 
பிகு...ரொம்ப நாளா என் பச்சைக்கிளி வலைவானில் பறக்கவில்லை...காரணம்  பலருக்குத்தெரிஞ்சிருக்கும்  அருமை அப்பாவை  நான் இழந்து  எழுபது நாட்கள் ஆகின்றன.. மனதைத்தேற்றிக்கொள்ள இத்தனைகாலம் தேவையாக இருந்தது.
 
இதனால்  பொதிகை  நிகழ்ச்சி ஒன்றில் நான் வந்ததையும் இங்கே  தெரிவிக்கமுடியாமல்போனது (யாரது  அதெல்லாம்  அவசியமில்லை என்பது?:)    அதனால் நிகழ்ச்சி யு ட்யூப்  லிங்க் இங்கே!!  மதுமிதா   இரூக்காங்க என் கூட அதனால கண்டிப்பா  பாருங்க என்ன?:)

http://www.youtube.com/watch?v=QVMBDauapG8&feature=youtu.be
மேலும் படிக்க... "அறுபது ஐம்பது நாற்பது முப்பது இருபது!!"

Tuesday, June 19, 2012

அன்புள்ள அப்பா!


போன புதன்கிழமை  சிற்றஞ்சிறுகாலையிலேயே  ஸ்ரீரங்கத்துக்குள் நுழைந்துவிட்டேன்  ஆமாம்  பெங்களூரில்  அந்திமாலையில் ரயில்புறப்பட்டால்  அப்படித்தான்  3 30க்கு கோட்டை ஸ்டேஷனுக்கு    கொண்டுவந்துவிடுகிறது. அங்கிருந்து நிமிஷத்துக்கு ஒரு பஸ்  அந்தக்காலையில்குளித்து சந்தனம் தரித்து பளபளவென்று வந்து நிற்கிறது!  ஏறிக்கொண்டு தூரத்து உறவினர் வீட்டு திருமணத்துக்காக   கல்யாண மண்டபம் போனதையும் அக்காரவடிசலையும்  அமிர்தம்போல புளியோதரையும் சுவைத்ததையும் சொல்லவரவில்லை..

 அரங்கனைக்கண்குளிர  சேவித்ததை சித்திரைவீதி உலா வந்து ஏன்ஷியண்ட் எல்டர்ஸ்களை  வாசல் திண்ணையில்கண்ணாரக்கண்டு அளவளாவி அவர்கள் அளித்த  என்னரங்கப்பெருமாள் காலண்டர்களை சேகரித்துக்கொண்டு  தெற்குவாசலில்  பன்னீர்சோடாவை ஒன்றுக்கு மூன்றாக உள்ள தள்ளி(பெங்களூரில் பன்னீர் சோடாவையே  காணாததால் அப்படி ஒரு பர(ற)ப்பு:)) ராஜகோபுரம்  அருகே பழைய பாலுஸ்யூடியோ(அந்த நாளில் ஸ்டூடியோவில போட்டொ எடுத்துக்கொள்ள போனபோது   அவர்  காமிராமீது போர்த்திய  கறுப்புத்துணீயை  எடுத்தபடியே என்னைப்பார்த்து  ஏழெட்டுதடவைகண் அடித்ததும் வெறுப்பில்  நான் கூட வந்த என் சின்ன அத்தையிடம்  முணுமுணுக்க”அவர் கண்ணே அப்படித்தாம்மா  சில பேருக்குஅதுஒருவியாதி என்று  சமாதானம் செய்ததும் நினைவுக்கு வந்தது:):) வா சலில்   வற்றக்குழம்பு வைக்ககல்சட்டி வாங்கினதையும்  சிரிக்கின்ற காந்திசிலையையும் விவரித்துக்கட்டுரை  எழுதலாமென்றிருந்தேன் ஆனால்அன்று மாலை கல்யாண மேள சத்ததையும் மீறி  தம்பி சென்னையிலிருந்து  வீறிட்டான் போனில்//அப்பா  கீழே விழுந்து அடிபட்டு  எலும்பு முறிவாகி இருக்கு நீ உடனெ புறப்பட்டுவா எனறான் பதட்டமாய்.. அவ்வளவுதான்  பட்டுப்புடவையைக்கூட மாற்றாமல்சென்னைக்குப்போகிற கல்யாணப்பார்ட்டியுடன் காரில்பயணமாகிவிட்டேன்.

வியாழன் இரவு சென்னை சென்றதும் அப்பாவை   நர்சிங்ஹோம் சென்று பார்த்தேன்  உறவுக்கூட்டமேபடை திரண்டிருந்தது தவிர அப்பாவின்  வாக்கிங்  நண்பர்கள் அனைவருமே  80+! என்னைப்.   பார்த்ததும் சிரித்தார்.“கொஞ்ச நா்ளைக்கு நான் வி ஐபி!” என்றார்.
இடுப்புபக்கமாய் எலும்பு முறிவு. நாளை ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்றார் டாக்டர்.

அப்பா  கேட்டார். அந்த நேரம் தியானம் செய்ய அனுமதி உண்டா ஏனென்றால் எனக்கு  ஆபரேஷன் என்றால் கொஞ்சம்  பயம்  மேலும் தியானம் பல வலிகளுக்குத்தீர்வு!

டாக்டர் சிரித்தபடி போய்விட்டார்.



மறுநாள் ஆப்ரேஷன் தியேட்டர் போகுமுன்பு என் தம்பிகளின் உதவியுடன் முகத்தை ஷேவ் செய்து ஆஃப்டர் ஷேவ் லோஷன் அப்பிக்கொண்டார்.  நன்றாய் தலையை வாரி பவுடர்போட்டுக்கொண்டார்..நெற்றியில் வழக்கம்போல பாபா விபூதியும் அகிலாண்டேஸ்வரி குங்குமமும் தரித்துக்கொண்டார்.  கண்ணாடிகொண்டுவரச்சொல்லி தன்னை பார்த்துக்கொண்டார்  என் தம்பியின் எட்டுவயதுப் பையன் ’என்ன தாத்தா நீ  ஆபரெஷன்  தியேட்டர்போகப்போறியா இல்ல சினிமாதியேட்டர்போகப்போறியா?’ என்று கேட்டான்.

அதில்லப்பா  வியாதியஸ்தர்னா  கசங்கின தலை அயர்ன் செய்யாதசட்டை   தாடி பாழ் நெற்றி சோக புன்னகை ன்னு முத்திரை குத்திடறாங்க....  அப்படி இருக்க நான் விரும்பல  பாரதி என்ன சொல்லி இருக்கார்?

உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன்
மனக்கேதம் யாவினையும் மாற்றி எனக்கே  நீ
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம்  பேரழகு
வேண்டு மட்டும் ஈவாய் விரைந்து


பேரழகாஇல்லைன்னாலும் கொஞ்சம் அழகா  இருக்கவேண்டாமா?”    எனக்கேட்டுபுன்னகைத்தார்.
 கூடவே   தம்பியின்  மொபைலில்  இப்படி என்னுடன்  போட்டோவும் எடுத்துக்கொண்டார்!



வயது 84 ஆகிறதே  சக்கரை  பிபி  இல்லாவிடினும் ஆபரேஷன் நல்லபடியா ஆகணுமே என  நாங்கள் கவலைப்பட்டதை அப்பாவின்  பேச்சு  சற்று நீக்கியது ஆபரேஷனும் நல்லபடியாக முடிந்தது..

அட  இத்தனை சீக்கிரம் ஆபரேஷன் ஆகிட்டதா  நான் என்னவோன்னு பயந்தேனே இனிமே  அடி்க்கடி அடிபட்டுக்கலாம் போல இருக்கே..எல்லாரும்கொஞ்சம் ஸ்பெஷலாகவே நம்மை கவனிக்கி்றாங்க என்று ஜோக்கடித்தார்.

அப்பாவுடன்  மருத்துவ மனை அறையில் பலமணி நேரங்கள் இந்த  நான்குநாட்களில்  பேசியதில்பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.

“ நிறையப்  படித்தபிறகுதான்  தெரிகிறது நாம் ஒண்ணூமே படிக்கவில்லை என்று” என்றார்.


 கம்பனை  பாரதியை ஆழ்வார்பெருமக்களை  தாம்  வியந்து  போற்றீய  கிவாஜ,  திருலோக சீதாராம் சுகிசுப்ரமண்யம் ந பிச்சமூர்த்தி  போன்ற உன்னதமனிதர்களை  நினைவுகூர்ந்தார்...

 ஆனாலும் அப்பாவுக்கு என்றைக்கும் செல்லப்பிள்ளை கவிஞர்ஸ்ரீரங்கம்  மோகனரங்கந்தான்,...”என்னமா எழுதறான்மா தலைமாட்டில் அவனோட ஹிந்துமதம் அறிமுகம் புக் தான் வச்சிருக்கேன் பாரதிபக்கத்துல... அவன் போயி இந்த இந்தியன்பாங்குல ஏன் உக்காந்திருககான்? அவன் எங்கயோ இருக்கவேண்டியவன் எங்கயோ இருக்கவேண்டியவ்ன்!” என  கண்பனித்தார்...   மோகனரங்கன் ஆபரேஷன்முடிந்து அவரைப்பார்க்க வந்தபோது  சாதாரணமாய் வீட்டில்  சமீபகாலமாய்  காது சரியாகக்கேட்பதில்லை என்பதால் அதிகமாகப்பேசாத அப்பா  அரங்கனாரிடம் நிறையவே பேசிவிட்டு ,”என்ன  நான்  பிரவசனம்  (உபந்நியாசம்) செய்கிறமாதிரி இருக்கா?” எனக்கேட்க அதற்கு அரங்கனார்,”பிறவசனம்(வெட்டிப்பேச்சு) விடவும் பிரவசனமதேவலை” எனச்சொல்ல அதில்  பூரித்துப்போனார்! சிலபேர் ராசி    பாருங்க நாம  ஏதேதோ சொல்வோம் ஆனா நம்மை கண்டுக்கமாட்டாங்க:!

  ‘நிங்க அரசியல்வாதியா  இல்ல  பிரபலபுள்ளீயா  இவ்வளோபேர்வந்துபாக்கறாங்க?  “ ஆஸ்பித்திரி சிப்பந்தி கேட்டார் அப்பாவிடம்

அப்பா சொன்னார்  ...எல்லாருக்கும் நான் நிறையக்கொடுத்திருக்கேன்ப்பா

அப்படியா  அவளோபணக்காரரா நீங்க?

ஆமாம்ப்பா மனசுல பெரிய பணக்காரந்தான் அன்பைவாரிக்கொடுத்துருக்கேன்ப்பா அதான்  திருப்பிக்கொடுக்க  இப்போ வந்துருக்காங்க...

ஆஸ்பித்திரி சிப்பந்திக்கு புரியவில்லை. ஆனாலும், ஒரு விஷயம் போகிறபோக்கில் சொல்லிப்போனார்.” பக்கத்துரூம்ல  ஒரு இளம்வயசுப்பையன் மண்டைல அடிபட்டுக்கிடக்கான்..  அவன் பொண்டாட்டிவீட்டுல  தன் பொண்ணு வேற மதத்து்காரப்பையனைக்கட்டிக்கிட்டான்னு  பொண்ணுவீட்டுக்காரங்க பையன் தனியா போவிறப்போ  சாத்திடடுபொண்ணை கடத்திட்டுப்போயிட்டாங்க  ப்ரண்ட் ஒருத்தன் கொண்டுவந்துச் சேர்ந்திருக்கான்  பாவம்..  யாரும் பாக்கவரல அனாதையாகிடக்கான்  பரிதாபமா இருக்குது் ஜாதி  மதச்சண்டை  நம்ம நாட்டுல எப்பதான் ஓயுமோ?’


கடைசி வாக்கியம் காதில் சுழன்றுகொண்டே  இருக்க,

  இன்றுகாலை ப்ருந்தாவன் ரயிலில் ஏறினேன்//எதிர் சீட்டில் முதியவர் ஒருவர்  கையில் உத்தராட்சமாலையை உருட்டி ஜபித்தபடி    அமர்ந்திருந்தார்.

அவர்  அருகே  இஸ்லாமிய முதியவர்  மணிமாலை ஒன்றைக்கையில் வைத்து ஜபித்தபடி  இருந்தார்.. இருவரும்  தனித்தனியே  பயணம் செய்ய வந்த ரயில் பயணிகள்தான்!.


.  பிறகு  சில நிமிஷங்களில்  ஜன்னல்வழி அடித்த காற்றில்   இஸ்லாமியப்பெரியவர்  அருகிலிருந்த  சைவப்பெரியவரின்  தோளில்  தனது வெண் தாடி  சாமரம்  வீச  உறங்கிக்கொண்டிருந்தார்.

*************************************************************************************************************************************************************************************************
 பிகு  இன்று என்  அப்பாவின் பிறந்த நாள் என்பதால் நீண்ட நாளைக்குப்பிறகு  பதிவாக எழுதிவிட்டேன்!  யாரும் வாசித்து திரட்டிகளில்  சேர்த்தால்  நன்றி முன்கூட்டியே!
மேலும் படிக்க... "அன்புள்ள அப்பா!"

Tuesday, April 24, 2012

கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்!

சென்றவாரத்தின் ஆரம்பதினத்தில்  மதியம் ஒளிபரப்பாகும் என்று அறிவித்திருந்த  நிகழ்ச்சி பற்றி பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் முதல்
ஒ.பாமா(ஒரத்த நாடு பாமா! தூரத்து உறவினர்)வரை அனைவருக்கும்
தண்டோரா போடாத  குறையாக   அறிவித்துவிட்டுக்காத்திருந்தேன்.
அப்போது வரவில்லை.பிறகு திங்கள் இரவு  வழக்கம்போல  9-30க்கு ஒளிபரப்பாகும் என்று தகவல் வந்தது. கொட்டகொட்ட 11மணிவரை முழித்துக்கொண்டு இருந்ததுதான் மிச்சம்! வரவே இல்லை!

கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்  என்னும்  நிகழ்ச்சி யைப்பற்றி  பலர் அறிந்திருக்கலாம்.பொதிகை தொலைக்காட்சியில் ஒருவருடமாக  வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு 930லிருந்து 10வரை ஒளீபரப்பாகும்.
நிகழ்ச்சியை அமைப்பவர் இசைக்கவி ரமணன் .ரமணன் கவிஞர் பாடகர் இசை அமைப்பாளர் சொற்பொழிவாளர் 24தடவை இமயம் சென்றுவந்தவர், பாரதி பக்தர் பராசக்தி மைந்தர்! அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதே பெருமையான விஷயம்.

மார்ச்மாதம்  பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில்  நிகழ்ச்சிபதிவானது. வழக்கமாய்  திங்கள் கிழமை வரவேண்டியது சித்திரை புத்தாண்டிலிருந்து நாள்+நேரம் மாறிப்போனது.


என்னுடன் திரு ஹரிகிருஷ்ணன்(இலக்கிய ஆர்வலர்களுக்கு  இவரை கண்டிப்பாக தெரியும்) அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அப்படி இப்படிபோன செவ்வாய்க்கிழமை மதியம்
  4-10க்குஇஞ்சித்தேநீர்போட்டுக்கொண்டிருக்கிறேன்  குறுஞ்செய்தி மணியடித்தது  4 30க்கு  கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சி நீங்கள் பங்குகொண்டது வருகிறது என.

யாருக்கும் தெரிவிக்க  நேரம் இல்லை அப்படியும்  கொஞ்சம் பேருக்கு  தெரிவிக்கலேன்னா மண்டை வெடிச்சிடும்போலாகிவிட சொல்லிவிட்டேன்.
“அன்னிக்கே மத்தியானம்  ஒருமணீக்குமேல காத்திருந்து  ஏமாந்தோம்...என்னவோ போ” என்று அலுத்துக்கொண்டாள் காலனி சிநேகிதி

 விசிஆரை  உயிர்ப்பித்து காசட்டை நுழைத்து   அது மறுத்து திரும்பிவர
அதட்டிக்கெஞ்சி ஒழுங்காய் நிகழ்ச்சியை பதிவு செய்ய  உத்தரவு பிறப்பித்துக்காத்திருந்தேன்
நல்லவேளையாய்  430க்கு  நிகழ்ச்சி வந்தேவிட்டது.
பதிவும் செய்துவிட்டேன்   முப்பது நிமிஷ நிகழ்ச்சி,ஆனால்பாருங்கள்  அதை விசிடியாக மாற்றி யுட்யூப்பில் அளிக்க மறுநாள் ஆர்வமாய்   கடையில் கொண்டுகொடுத்தேன்  இரண்டொருநாளில் தருவதாக சொன்ன கடைக்காரர் கடையைப்பூட்டிக்கொண்டு எங்கேபோனாரோ தெரியவே இல்லை.செல்லில் ஒரு சொல்லும் கிடைக்கவில்லை!

அன்று திரு ஹரிக்ருஷ்ணன் அவர்களும்  நிகழ்ச்சியை பதிவு செய்திருந்தார் ஆனால் கடைசி சில நிமிஷங்களில்அவர் பதிவிலும் மின் தடை ஏற்பட்டுவிட்டது  பெரும்பாலும் நிகழ்ச்சிபதிவானதை யுட்யூப்பில் அளித்துள்ளார் இங்கே அதையே உங்களுக்கும் அளிக்கிறேன்.

பார்த்து கேட்டு  கருத்துகூறினால் மகிழ்வேன் நன்றி. இரண்டு சுட்டிகளும் அல்லது ஏதேனும் ஒன்றாகிலும்  வேலை செய்யும்!


கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சி இங்கே


அல்லது  இங்கே

http://youtu.be/0S4KJBwBF-0



மேலும் படிக்க... "கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்!"

Thursday, April 05, 2012

சேர்த்தி!

சக்கரவர்த்திதிருமகனிடமிருந்து பெற்றுக்கொண்ட சீதனத்தை
விபீஷணன்  தற்காலிகமாக இறக்கி வைத்த இடத்தினருகில், உறையூரினைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழப்பேரரசன் தர்மவர்மா  அருந்தவம் செய்து கொண்டிருந்தான். அவனது நிஷ்டை கலைகின்றது.

எதிரே அரங்கன் ஜ்வலிக்கும் ரெங்கவிமானத்துடன் எழுந்தருளியுள்ளார். அவனுக்குத் தான் கண்டது கனவா? அல்லது நினைவா? என்றே புரியவில்லை. நினைவு வந்த போதெல்லாம் அடிக்கடி மூர்ச்சையாகின்றான்.

    தர்மவர்மாவின் தவத்தினை நிறைவு செய்தான் அரங்கன்!விபீடணன் தனது அனுஷ்டானங்களை காவிரிக்கரையில் முடித்து விட்டு வந்து பார்த்தால் இங்கு ஒரே கோலாகலம்!.

விபீஷணன் மறுநாள் இலங்கைக்குச் சென்று ஆதிபிரம்மோற்சவம் நடத்துவதற்காக முற்பட்டான். தர்மவர்மா அவரை திருவரங்கத்திலேயே அந்த உற்சவத்தை நடத்தித்தர பிரார்த்தித்தான். வெகுவிமரிசையாக முதன்முதலாக திருவரங்கத்தில் ஆதிபிரம்மோற்சவம் நடைபெற்றது.


இன்று திருவரங்கத்தில் நடைபெறும் பிரும்மோற்சவங்களுக்கெல்லாம் ஆதியும் இதுவேயானது.

பிரும்மோற்சவம் முடிந்து விபீடணனால் விமானத்தினைத் தூக்க இயலவில்லை. அரங்கன் காவிரிக்காகவும், தர்மவர்மாக்காகவும், நமக்காகவும் நமது சந்ததியினர்க்காகவும் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட தீர்மானித்துவிட்டார்.


   நாம் அனைவரும் அறிந்த அரங்கனின் பிரசித்தப்பெற்ற சேர்த்தி பங்குனி உத்திரம் மட்டும்தான். ஆனால் அரங்கன் நான்கு சேர்த்தி உற்சவம் கொண்டாடுகின்றார்.

இதில் சித்திரையில் இரண்டு! பங்குனியில் இரண்டு!. வருஷ ஆரம்பமான சித்திரையில் சித்ராபெளர்ணமியன்று காவேரிக்கரையில் முதல் சேர்த்தி. காவேரியில் பெருமாளின் மாலை மரியாதைகள் எல்லாம் சேர்த்து சேர்த்தி!.

   அதே மாதத்தில் ஸ்ரீராமநவமியன்று குலசேகராழ்வார் குமாரத்தியான சேரகுலவல்லியுடன் சேர்த்து. இரண்டாம் சேர்த்தி!.

  பங்குனி 6ம் திருநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் உறையூர் சோழராஜா குமாரத்தி கமலவல்லியுடன் சேர்த்தி! உத்திரத்தில் ரெங்கநாயகியுடன் சேர்த்தி! வருஷ ஆரம்பத்தினை கலயாணத்துடன் ஆரம்பித்து வருஷ முடிவினையும் கல்யாணத்துடன் முடிக்கின்றார் இந்த வைபோக ரங்கன்.

உத்திரத்தின் சேர்த்தி சேவை  உன்னதமானது உயர்த்தியானது. படிதாண்டா பத்தினியான அரங்கபிராட்டியார் இருப்பிடம் சென்று அங்கேயே சேர்ந்தருளுவார் அரங்கபெருமான். சேர்த்திமண்டபம்   வெறும் நாட்களிலும் சேவிக்கவேண்டிய திருமண்டபம்.


அகளங்கன் திருச்சுற்றில் ஸ்ரீரங்க நாச்சியார், (வில்வ மரத்தடியில்) தாயார் சந்நிதி அமைந்துள்ளது. பங்குனி உத்திர நாளன்று மட்டும், நம்பெருமாளும், தாயாரும் 'சேர்த்தியில்' ஒன்றாக எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதிப்பது, சிறப்புடைய மிகப் பெரும் நிகழ்ச்சியாகும்!

அன்று பக்தர்கள் சக்திக்கேற்ப, வெண்ணெய், டைமண்ட் கல்கண்டு, திராஷை, முந்திரி, ஏலப்பொடி சேர்த்து வெள்ளிக் கிண்ணங்களில் அமுது படைப்பர் நிவேதனமாக. அன்று(இன்று) ஸ்ரீரங்கத்தார் இல்லங்களில் சக்கரைப்பொங்கலும் செய்வார்கள்.


பிரணய கலகம் என்றழைக்கப்படும் மட்டையடி நிகழ்ச்சி சேர்த்திக்கு முன்பாக நடக்கிறது. உற்சவ அரங்கன்  உலாப்பிரியர்..  ஒன்று உள்ளூரில் சுத்திக்கொண்டு இருப்பார் அல்லது  அன்பர்களின் இதயத்திற்குள் சுழன்று கொண்டிருப்பார். ஜீயபுரம் என்கிற சி்ற்றூரில்  ஒரு
 மூதாட்டி தன்பேரனை நீண்டநேரமாய் காணாமல் பதறித்தவித்து அவன் பெயரை அழகியமணவாளா என்றழைக்கவும் அவள் மனம்வேதனைப்படக்கூடாதென்று அரங்கன்  சிறுவன் வடிவில் சென்று தீந்தயிர் சோற்றுடன் கீரையும் வாங்கி உண்டான்.இன்றும்  வருடம் ஒருமுறை ஜீயபுரம் செல்கின்றான்.தேர்த்திருவிழா வீதி உலா என வருடம் முழுக்க அரங்கனுக்குக்கொண்டாட்டம்தான். ஆனாலும் உறையூர் இளவரசி கமலவல்லியை காதலித்து மணந்த நாளை மறக்கமுடியுமா அரங்கனால்? ஆகவே அந்ததினம் உறையூருக்கு ஓசைப்படாமல் போய்விடுவார்.

ரங்கநாதர் தான்  அணிந்து இருந்த மோதிரத்தை உறையூர்  கமலவல்லிநாச்சியாருக்கு அன்பளிப்பாக கொடுத்து இருப்பார். அவ்வாறு கொடுத்து விட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதாயாரிடம் வரும்போது மோதிரம் எங்கே? என்று ஸ்ரீரெங்கநாதரிடம் சண்டையிட்டு அவரை மட்டையால் தாக்கும் நிகழ்ச்சிதான் வருடா வருடம் நமக்கு

 நடித்து காட்டப்படும்.

இந்த வினோதமான நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஸ்ரீதாயார் சன்னதிக்கு வருவார்கள்.

ஸ்ரீரங்கத்தில் இருந்தவரை  இதற்கு நான் ஆஜராகிவிடுவேன்  தாயார் சந்தியிலிருந்து வேகமாக வாழைமட்டைகள்  அரங்கன் பல்லக்குமீது வீசிவர உடனே அரங்கன் பல்லக்கை மூடிக்கொண்டு பயந்தமாதிரி பின்னோக்கி நகர...இந்த வேடிக்கை விளையாட்டு ஊடல் காட்சிகள் கண்ணுக்கு ரம்மியமானவை..அனைத்தையும் தானே நடித்துக்காடும் அரங்கனின் குறும்பினை ரசிப்போம்.



நம்பெருமாள் சித்திரை வீதி மற்றும் உத்தர வீதிகளில் அரையர் இசையுடன் வலம் வந்தபிறகு, ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதிக்குள் போகையில் கதவுகள் சாற்றப்பட்டு புஷ்பங்களையும் பழங்களையும் எறிந்து நம்பெருமாளைத் தடுத்துவெளியே நிறுத்தி வைப்பார்கள். கதவுகள் திறக்கப்படும்போது பெருமாள்
உள்ளேபோக முயற்சி செய்வதும்  கதவு தடால் என சாத்தியதும் திரும்பவருவதுமாக  இருப்பார்.

கடைசியில் சமாதானம் ஆகும்.

நம்பெருமாளு்ம் சமாதானத்திற்கு அருளப்பாடு ஸாதித்து நம்பெருமாள் சொல்ல வேண்டியவைகளை அரையர்கள் தாள இசையில் இசைப்பர்.
 நம்பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே நிகழும் சொற்றொடர் பரிமாற்றத்தை தம்பிரான்படி பாசுரங்கள் கொண்டு சேவிப்பர்கள்.அரையர்கள் நம்பெருமாள் வார்த்தையை நம்பெருமாளிடம் விண்ணப்பித்து, தாயாரிடமும் விண்ணபிப்பார்கள்.
 பண்டாரிகள் சொல்லிய தாயார் வார்த்தையை அரையர்கள் நம்பெருமாளிடம் விண்ணப்பிப்பார்கள். (நம்பெருமாள் அஞ்சு வார்த்தை, தாயார் வார்த்தையானது இரட்டிப்பாகிறபடியால் அரையர்கள் 15 தடவையும் பண்டாரிகள் 5 தடவையும் நம்பெருமாள் மற்றும் ஸ்ரீரங்கநாச்சியார் வார்த்தைகளாகச் சொல்லுவர்.

ஸ்ரீரங்கநாச்சியாரால் அனுமதிக்கப்பட்ட பிறகு நம்பெருமாள் ஸந்நிதி வாசலில், எழுந்தருளி ஆழ்வாருக்கு மரியாதை செய்து அனுப்புவார்.
உடனே முதல் ஏகாந்தம் நடக்கும். தளிகை நிவேதனம் நடந்து பங்குனி உத்தர மண்டபத்திற்கு நம்பெருமாள் எழுந்தருளுவார், பிறகு இரவு 10 மணி வரை பொதுஜனஸேவை நடைபெறும்.

இரண்டாம் ஏகாந்தம்-தீர்த்தபேரர் பெரியகோயிலிலிருந்து புறப்பட்டு வடதிருக்காவிரியில் தீர்த்தவாரி கண்டருளி, நம்பெருமாளிடம் வந்ததும் கத்யத்ரயம் ஸேவிக்கப்படும்.
இராமாநுசர் அருளிச் செய்த கத்யத்ரயம் என்னும் க்ரந்தம் இன்றைய தினம்தான் அவதரித்தது. கத்யத்ரய சாற்றுமுறைக்காக இரண்டாம் ஏகாந்தத்தளிகை நிவேதனம் ஆனதும் தீர்த்தபேரர் பெரியகோயிலுக்கு எழுந்தருளுவார்



மூன்றாம் ஏகாந்தம் நம்பெருமாள் நாச்சியார் இருவருக்கும் பதினெட்டு ஆவர்த்தி திருமஞ்சனம் ஆகும். (எம்பெருமானார் திருக் கோட்டியூர் நம்பிகளிடம் பதினெட்டு ஆவ்ருத்தி நடந்த சிரமத்தை எம்பெருமானார்க்கு தீர்த்தருளுவதற்காக பதினெட்டு தடவை கைலி ஸமர்ப்பித்துத் திருமஞ்சனம் நடைபெறுகிறது)) திருமஞ்சன திருவாராதனத்தில் அரையர்களுக்கு “வசந்தனுக்கு அருளப்பாடு” என்று ஸாதித்து இசையில் தம்பிரான்கள் இயற்றிய வசந்தன் பாட்டு (கூடின காலத்தின் வர்ணனை) ஸேவிக்க இருவரும் கேட்டு மகிழ்ந்தருளுவர்.

 மூன்றாம் ஏகாந்தத் தளிகை நிவேதனம் ஆனதும், ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளே எழுந்தருளுவார். நம்பெருமாள் பங்குனி உத்தர மண்டபத்திலிருந்து புறப்பட்டுத் தாயார் ஸந்நிதிக்கு முன் ஸ்ரீரங்கநாச்சியாரைப் பார்த்து திரும்பிக் கொண்டு, பிரியமனம் இல்லாமல் ஒரு ஒரு அடியாக வைத்து வைத்து மெல்ல எழுந்தருளுவார்.



,



அரங்கத்தமாவென்றே மொழிந்தேனாக
 அரங்கனுடன் அரங்கத்து நாச்சியாரும்
இரங்கவெனை அழைத்தான் என்றென்முன் வந்தார்
இனிய தமிழ் மொழிநயத்தைத் தெளிந்திட்டேனே!

(புலவர் சக்திசரணன்)

--

மேலும் படிக்க... "சேர்த்தி!"

Friday, March 30, 2012

அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற!

முடியொன்றிமூவுலகங்களிலும் ஆண்டுஉன்


அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த

படியில்குணத்துப் பரதநம்பிக்குஅன்று

அடிநிலை  ஈந்தானைப்பாடிப்பற

அயோத்தியர்கோமானைப்பாடிப்பற


காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு


ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்

நேராஅவன் தம்பிக்கே நீளரசீந்த

ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற








ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்திய வேந்தனைப் பாடிப்பற என்கிறார் பெரியாழ்வார்.




எப்போது நம்மால் பறக்கமுடியும்?



மனம் இலேசானால்..



மனம் எப்போ லேசாகும்?



அழுத்தங்கள் அகலும்போதுதான்..



அழுத்தங்கள் எனும் பாரங்கள் எப்போது நமக்குள் வரும்?



கவலையும் கோபமும் சூழும்போது வரும்.



கவலை நம்மைத் தின்று விடுமாம். அதனால் தான் பாரதி என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் என்கிறார்.



நம்மைக் கவலையும் கோபமும் ஆட்கொள்ளாமலிருக்க இறைவனை சரணடைய வேண்டுமாம்.



சரி, அந்த இறைவனுக்கே கோபம் வந்தால்..?
இறைவனுக்கு நம்மைப்போல காரணமேயின்றி கண்டதற்கும் கோபம் வந்துவிடுமா என்ன?


கருணையே உருவான கடவுளுக்கும் கோபம் வருமளவு நடந்து கொள்வதும் முறையா?

இந்தக் கோபம் சக்கரவர்த்தித் திருமகனை சிலநேரங்களில ஆட்கொண்டதாய் ராமாயணக் காவியத்தில் காண்கிறோம்.

அண்ணலை அந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யாரார் எனப் பார்ப்போமா?



ராமனுக்கு இளவரசுப் பட்டாபிஷேகம் செய்வதாய் தீர்மானிக்கப்பட்டு விட்டது ...ஊரே உற்சாகத்தில் மிதக்கிறது.அரச சபையில் அனைவர் முகத்திலும் குதூகலம் நிரம்பிவழிகிறது. ராமனும் சீதையும் பட்டாபிஷேகத்திற்குரிய விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள்.



இதற்கிடையில் மந்திரையின் பேச்சில் புத்தி தடுமாறி கைகேயி தசரதனிடம் ராமன் 14 வருடங்கள் வனவாசம் போகவேண்டும் என்றும் தனது

மகன் பரதன் முடிசூட்டிக் கொள்ள வேண்டுமென்றும்( வரம்) கேட்டு அதனை பெற்றும் விடுகிறாள்.



இதைக் கேள்விப்பட்ட ராமன் சற்றும் கோபமடையவில்லையாம்.

தந்தை சொல்லைக் காப்பாற்றுவதைவிட சாம்ராஜ்யம் பெரிதல்ல என நினைத்தானாம். ராமனின் முகத்தில் கோபத்திற்கு மாறாக மகிழ்ச்சிதான் தெரிந்ததாம்...'அவ்வாசகம் உணரக்கேட்ட அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதம்மா' என்கிறார் கம்பர்.



எம்பெருமான் ஜிதக்ரோத: அதாவது கோபத்தைவென்றவன் ஆகிறார்.

சீற்றமில்லாதானைப்படிப்பற, சீதைமணாளனை பாடிப்பற! என்பது பெரியாழ்வார் வாக்கு.

கோபத்தை வென்ற தாசரதிக்கு எப்போது கோபம் வந்தது?




பிராட்டியை ராவணன் அபகரித்துப் போனதும் காணாமல் துடிக்கிறான் ராமன். மரத்தை, நதியை எல்லாம் கேட்கிறான். ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை திகைத்தனை போலும் செய்கை என்று பின்னர் கிஷ்கிந்தா காண்டத்தில் கம்பர் கூறியதுபோல என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறான்.



கோபம் அதிகரிக்கிறது.

சக்கர்வர்த்தி திருமகனின் கோபத்தை ஒரு சர்க்கம் முழுவதும் ராமக்ரோத: என்று அரண்யகாண்டம் 64வது சர்கத்தில் வால்மீகி விவரிக்கிறார்.



ஒருகட்டத்தில் ராமன் "என்பிரியபிராட்டியை யார் கவர்ந்து சென்றார்? என்னிடம் திரும்ப ஒப்படைக்காவிட்டால் என்னுடைய பாணங்களால் மூவுலகங்களையும் அழித்துவிடுவேன்" என்று கோபத்துடன் சூளுரைக்கிறார்.



பிராட்டியின் பிரிவினால் மிகவும் கோபமாயிருக்கும் அண்ணனை இளையவர்(கோபத்திற்குப்பெயர்போனவர்)::0 அவரை சமாதானம் செய்கிறார்.

யாரோ ஒருவன் செய்த தவறுக்காக உலகத்திற்கு தண்டனை கொடுக்கலாகாது. கவர்ந்து சென்றவனைக் கண்டுபிடித்து அவனுக்கு

தண்டனை கொடுப்போம்.. ஆகவே நாம் தேடுதல் வேட்டையை செய்வோம்' என்றபின் சக்கரவர்த்தி திருமகனுக்குக் கோபம் தணிந்தது.

.



அடுத்து வனவாசத்தில் காகாசுரன் சீதையின் உடலைத்தீண்ட அதனின்றும் பெருகிய ரத்தம் கண்டு கட்டுக்கடங்காத கோபம் உண்டாயிற்றுராமனுக்கு.

காலசர்ப்பதைப் போல மூச்சு விட்டான் ராமன் என்கிறார் வால்மீகி.

ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்த்ர மந்திரத்தை அந்தக் காக்கையின் மேல் ஏவினான். அந்த அளவு கோபமுண்டாகிவிட்டது.



பிறகு காகாசுரன் அடைக்கலமாகி காலில் விழுந்ததும் அவனுக்கு கோபம் தணிந்து உயிர்பிச்சை அளித்தான். சரணம் என்றவரை தள்ளியதில்லை தசரத மைந்தன்.



அதேபோல இலங்கைசெல்ல கடல் அரசன் வழிவிடாதபோது கோபம் வந்தது.

'லட்சுமணா என் தனுசைக்கொண்டுவா.. கொல்லும் பாம்புகள் போன்ற குரூரமான பாணங்களையும் எடுத்துவா.. இந்தக் கடலை முற்றிலும் வற்றச் செய்துவிடுகிறேன். வானர வீரரகள் நடந்தே லங்கை செல்லட்டும் .."என்றதும் கடலரசன் அஞ்சி சரணம் எனப் பணிந்தான். அவனுடைய சரணாகதியை அண்ணலும் ஏற்றுக்கொண்டார்.




ராவணனுடன் போர் செய்கையில் அனுமனை தன் பாணங்களால் காயப்படுத்துகிறான் ராவணன். அதைக்கண்ட ராமனுக்குக் கோபம் வந்தது.




உடனே ராவணனின் ஆயுதங்களை அழித்து அவனை நிராயுதபாணியாக்கி ,'இன்று போய்நாளை வா' என்கிறான் .



இப்படித் தான் அடியார்க்கு தீங்கிழைத்தால் பெருமாளுக்குக் கோபம் மிகுந்து வருமென்பதற்கு பிரஹலாதன் பெரும் சாட்சி.


'அங்கண் ஞாலம் அஞ்ச 'என்றும் 'முளைத்த சீற்றம் விண்கடப்போய் மூவுலகும் பிறவும் அனைத்த அஞ்ச' என்று ஆழ்வார் அருளிச்செய்ததில் இதனை உணரலாம்.



தன் உயிரான இனிய சீதையைக் கவர்ந்ததும், தனக்காக் போராடிய வானர வீரர்களைக் கொன்று குவித்ததும் போன்ற தகாத செயலை செய்ததால் ராவணன் மீது ராமனுக்குக் கோபம் வந்தது. அதுவே ராவணனின் முடிவிற்கும் காரணமானது..



இதைத்தான் ஆண்டாளும், 'சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்ற மனதுக்கினியானை' என்று திருப்பாவையில் சொல்கிறாள்.



இறைவனுக்கு நம்மீது கோபம் ஏற்படாத வகையில் நாம் நடந்துகொள்வோம் அப்படியே அறியாது தவறு செய்தாலும் அண்ணலின் பாதங்களை சரணமெனப்பிடித்துவிடுவோம்!

********************************************************************************



மேலும் படிக்க... "அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற!"

Thursday, March 22, 2012

தண்ணீர்!தண்ணீர்!








எந்த பத்திரிகை ஆனாலும் எந்த ஊடகங்கள் ஆனாலும் அறிவுசார் விவாதங்கள் ஆனாலும் உலக நாடுகளின் தலைவர்கள் ஆனாலும் விவாதிக்கப்படும் முக்கியமான பொருளாக புவி வெப்பமயமாதல் இடம் பெற்றுவிட்டது.
ஓசோன் படலம் பற்றி ஒன்றுமே அறியாத அந்த நாளைய மன்னர்கள் ராஜ்யபரிபாலனத்தில் தினமும் கேட்கும் கேள்வி மாதம் மும்மாரிபெய்கிறதா என்பதுதான்.
இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் மாதம் மும்மாரியில் ஒரு மாரி குறைந்தாலும் ஆபத்துதான் என்பது.ஆக எப்போதோ மாதம் மும்மாரி பொழிந்தது. வானத்தில் புகைமூட்டம் இல்லை வாகன நச்சுப்புகை வளி மண்டலத்தை நிரப்பவில்லை மும்மாரி பொழிந்தது.குளிர்சாதன இயந்திரங்களின் கொடிய நச்சு வாயு வெளியேறவில்லை மனிதன் அமைதியாக வாழ்ந்தான் ஓசோனில் ஓட்டைவிழவில்ல, பூமி வெப்பம் அடையவில்லை ஆகவே மழை பொழிந்தது அன்று.
மாதம் மும்மாரி பொழிய வளிமண்டலம் சுத்தமாக அல்ல,பரிசுத்தமாக இருக்கவேண்டும். ஆனால் இப்போதோ கரியமில வாயு-மீத்தேன் நைட்ரஜன் ஆக்சைடு சல்பா ஹெக்சா புளோரைடு ஹைட்ரோ ஃப்ளோரைடுகார்பன், பெர்புளோரா கார்பன்கள் ஆகிய தீயநச்சுவாயுக்கள் பூமியிலிருந்து வளிமண்டலத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளது.
முன்னே வனங்கள் செழிப்பாக பசுமையாக இருந்தன மும்மாரி பொழிந்தன. இன்று விஞ்ஞான வளர்ச்சி என்னும் வரங்களே நமக்கு சாபங்களாகிவிட்டன.
இமயத்தில் பனிப்பாறைகள் உருகிக்கொண்டு இருக்கின்றன.பனிக்கரடி இனம் பூ்ண்டோடு அழிந்துபோய்விடும் அபாயம், அரிய தாவரங்கள் அழியும் துயரம்,. மனி்தனுக்கு குடிநீர் கிடைக்காமல்போகும் அவலம் ஏற்படும்.
மரங்களை பாதுகாத்து மரங்களை அதிகம் நட்டு இருப்பிடத்தை பசுமைக்காடாக மாற்றினால் கரியமில வாயு எனும் அரக்கன் ஒழிவான் ஓசோன் காப்பற்றப்படும். புவி வெப்பமய்மாகாது மாதம் ஒரு மாரியாவது பெய்யும்.தண்ணீர்கஷ்டம் தீரும்.


வரப்பு உயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர மணி உயரும். மணி உயர குடி உயரும்.
குடி உயர கோல் உயரும். கோல் உயர கோன் உயர்வான்.

ஔவை  வாக்கு மெய்ப்படவேண்டும்!
.
இந்த உலகில் 75% தண்ணீர்.இருக்கிறது.

இதில் 97% சமுத்திரம்.(உப்புத் தண்ணீர்.)
3% மட்டுமே குடிப்பதற்கு உபயோகப் படுத்தலாம்.

ஏறத்தாழ 75% நல்ல தண்ணீர் போலார் பகுதிகளில் ஐஸ் கட்டியாக உரைந்து கிடக்கிறது.

ஒரு மனிதனால் உணவு இல்லாமல் ஒரு மாதத்திற்கு மேல் உயிர் வாழ முடியும் ஆனால், தண்ணீர் இல்லாமல் ஏறத்தாழ ஒரு வாரம் தான் வாழ முடியும்.

ஒரு கேலன் தண்ணீர் என்பது 3.785 லிட்டர்கள் ஆகும்

பற்களை துலக்க தினமும் ஒரு மனிதன் 2 கேலன் தண்ணீர் செலவிடுகிறான்.

கழிவறையில் flush செய்ய 2-7 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்த படுகிறது.

குளிப்பதற்கு மட்டும் 25-50 கேலன் தண்ணீர் உபயோகப்படுத்த படுகிறது.

..

மனிதனால் உப்பு நீரை குடிக்க முடியாது.

நம் உடலானது 66% தண்ணீர்.

நம் இரத்தத்தில் 82% தண்ணீர் உள்ளது.
நல்ல தண்ணீரை நம்பி வாழும் விலங்கினங்கள் மற்ற விலங்குகளை விட 5 மடங்கு அதிகமாக மறைந்து வருகிறது.

இந்தியா என்ற நமது தேசத்தின் பெயர், இன்டஸ் என்ற நதியின் பெயரில் இருந்து உருவானது.

நமது தட்பவெப்பநிலையை தண்ணீரே தீர்மானிக்கிறது.
இந்த உலகில் பெரும்பாலான மக்கள் குடிக்கும் நீருக்காக 3 மணி நேரம் நடக்க வேண்டி உள்ளது.

இந்த உலகில் கால் வாசி மக்கள் பாதுகாபற்ற குடிநீரே குடித்து வாழ்கின்றனர்.

இன்றைய நிலை நீடித்தால் 2025 ஆம் ஆண்டில் உலகில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாய நிலை உருவாகும்.

உலகில் தினமும் 3900 குழந்தைகள் அசுத்த நீரை குடிப்பதாலும், சுகாதரமற்ற முறைகளாலும் இறக்க நேரிடுகின்றனர்.
கவிதை தாகத்தில் எழும் கவிதையோடு பதிவை முடித்துவிடுகிறேன்.
நீ தாய்
தவிக்கும்போதெல்லாம்
தாகம் தீர்ப்பதில்!
நீ மரம்
நெஞ்சுக்கு நிழலாக
இருப்பதில்!
நீ மொழி
அனைவரிடமும்
உலா வருவதில்!
நீ நடிகை
எல்லா பாத்திரங்களுக்கும்
ஏற்றதாய் வடிவெடுப்பதில்!
நீ மரம்
பலவகைகளில்
பயன்படுவதில்!
நீ தெய்வம்
மழையாகப்
பொழிகையில்!
நீ விளக்கு
வாழ்வின் ஒளியாக
இருப்பதில்!
நீ உயர்ந்தவள்
உலகில் பெரும்பகுதி
உன்னுடையதாயிருப்பதில்!
நீதான் நான்
என்னுள்ளே
கலந்து இருப்பதில்!

--







--




--


மேலும் படிக்க... "தண்ணீர்!தண்ணீர்!"

Tuesday, March 20, 2012

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?


சர்வதேச குருவிகள் தினமாக மார்ச் 20 ஐ பறவை, விலங்கின ஆர்வலர்கள் 2010 முதல் கொண்டாடி வருகின்றனர்.

சிட்டுகுருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா  உன்னைவிட்டுப்பிரியவே செல்போனைக்கட்டி அழுகிறோம் நாங்கள் என்று   இனி பாடவேண்டியதுதான்.

  சிட்டுக்குருவிகளை இன்று நகரங்களில் பார்க்க முடியவில்லை. குருவிகளின் உயிரை பறிக்கும்கோடரிகள் எவை தெரியுமா "மொபைல் போன் டவர்'களில் இருந்து வரும் ரேடியோ அலைகள் தான் என்கிறார் மதுரையில் பறவைஇனங்களை ஆய்வு செய்து வரும் டாக்டர் பத்ரி நாராயணன்.  அதுபற்றி நமக்கென்ன கவலை என்பதுபோல  கணந்தோறும் காதில் செல்போனை வைத்துக்கொண்டு நாம் அலைகிறோம்.


 காக்கா காக்காகண்ணுக்கு மைகொண்டுவா
குருவி குருவி  கொண்டைக்குப்பூ கொண்டுவா
கொக்கே கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டுவா
கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டுவா....


இப்படியெல்லாம் பாட்டுப்பாடி பறவைகளை அழைத்த காலமெல்லாம் கனவாகிப்போய்விடும் அபாயச்சூழ்நிலையில்  இருக்கிறோம்.

 நாம் பெரும்பாலும அழகானவற்றை ஏற்றுக்கொண்டு மிகவும் உபயோகமானவற்றை  கைவிட்டுவிடுகிறோம் என்னும் பிரெஞ்சுபழமொழிக்குஏற்ப வாசலில் இருக்கும்  பச்சைமரங்களை வெட்டிவிட்டு  வரவேற்பறையில் ப்ளாஸ்டிக் செடிகளை கொண்டு வைக்கிறோம் மரத்தைவளர்க்கத்   தெரியாத மனங்களுக்கு  பிளாஸ்டிக்  தாவரங்களில்   படிந்த   தூசியை துடைக்கத் தெரிந்திருக்கிறது.

 நாம் வளர்த்த  மரங்களின் எண்ணிக்கையைவிட  நாம்    தொலைத்த மரங்களின் எண்ணிக்கை அதிகம்.

சாலைகள் அமைக்க  ரயில்பாலங்கள்கட்ட குடிநீர் குழாய் அமைக்க குடியிருப்புகள் தொழிற்சாலைகள்   கட்ட   என்று  மரங்களை  வெட்டிசாய்த்துவிட்டோம்  அதனால் பறவைகளின் வீடுகளை அழித்துவிட்டோம் . வசிக்க இடமினறி அவைகள் காணாமல்போய்க்கொண்டிருக்கின்றன .


ஒருபறவை  பறந்து கொண்டிருக்கும்போது மிதந்துகொண்டிருந்தது கூடவே வானமும் , பறவையைச்சுட்டார்கள் விழுந்ததோ   துண்டுவானம் எனும் கவிதையைப்  படிக்கிறபோது  நம் மனமும்  சிதறி விழுகிறது.

பறவைகள் நம் சுற்றுச்சுழலின்நண்பர்கள் .செல்போன்களை நாம் அதிகம்   பயன்படுத்தத்  தொடங்கியதும் அதன் அலைவரிசைத்தாக்கம்  பொறுக்கமுடியாமல் சிட்டுக்குருவிகளின் இனம்அழிந்துவருகிறது .

ஒரு சிட்டுக்குருவியின் அழிவுக்கும் பிரபஞ்சத்தின் அழிவுக்கும் தொடர்பிருக்கிறது என்று பறவைஇயல் நிபுணர் சலீம் அலி எழுதுகிறார்.


மாதா பிதா குரு தெய்வம் என்னும் வரிசையில் இயற்கையும் இருந்திருக்கலாமோ அப்படி இருந்திருந்தால் இயற்கையை பூஜை செய்தாவது காப்பாற்றவேண்டிய +மதிக்கவேண்டிய சிந்தனை மனிதனுக்கு வந்திருக்குமோ?


பறவைகள் இந்த  உலகினை அ ழகுபடுத்துகின்றன ஆனால்சூழல் பற்றிய அக்கறையே இல்லாமல்  பறவைகளே இல்லாமல் போகிற உலகத்தை நாம் உருவாக்கிவருகிறோம் என்பது எவ்வளவு வருத்தமானது?

பறவைகளுக்கும் உணர்வு உண்டு.கோபதாபம்  காதல் அன்பு அச்சம்  உண்டு.

 ஏதாவது ஒருகாகம் நம்தலையை தட்டிவிட்டுப்போனாலே நாம் பதறிவிடுவோம் ஆனால் சாதுவான பறவை தன் இயல்பை மீறி தன் சகாக்களோடு  மனிதர்களைத் தாக்கத் தொடங்கினால்  எப்படி இருக்கும்?


அப்படி ஒரு திகிலான கதைதான் The Birds !



  சிலவருடம் முன்பு  வெளிவந்தது.


Alfred Hitchcok    இயக்கத்தில். இந்தப்படத்தின் ஒவ்வொரு நிமிடமும்   நம்மை  உறைய வைக்கும் இந்தப்படம் கோல்டன் க்ளோப் விருதுபெற்றது.
அதிகம் தொழில் நுட்ப வசதிகள் அதிகம்  இல்லாத காலத்தில் mattprinting உத்தியுடன்  தயாரிக்கப்பட்ட பறவைக்காட்சிகள் இப்போது பார்க்கும்போது ஆச்சரியம் அளிக்கின்றன படம் முழுக்க விதம்விதமான பறவைகளின் சத்தமே பின்னணி இசையாகப்பயன்படுத்தி இருந்தது.

துவக்கத்தில்  வீட்டுக்குள் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகள் வருவதும் தீவிபத்து நடக்கையில் நகரத்தின் மேலிருந்து இறங்கி பறவைகள் தாக்கும் காட்சியும் சிலிர்க்கவைப்பவை. பறவைகள்   பற்றிய இந்தக் கதையில் மெலிதான காதல் மனித உறவுகள் குறித்த காட்சிகளும் திகிலோடு  இணைந்துவருகின்றன.

கதாநாயகனும் கதாநாயகியும் இருக்கும் இடத்திற்கே பறவைகள் வந்து  தாக்குதல்களை செய்கின்றன ஜன்னல் கதவுகளின் கண்ணாடியைக்கொத்திகொத்தி  கதவு உடையும்நிலைக்குவருகிறது....இன்னும் சிலநொடிகளில் கதவின் கண்ணாடி  உடைந்து நூற்றுக்கணக்கான் பறவைகள்   வீட்டிற்குள் வரநேரிடலாம் அந்த சுழலில் என்ன நடந்தது ?ஒருமுறை அந்தப்படம்   கிடைத்தால் வாங்கிப்பாருங்கள்...(இணையத்திலும் இருக்கலாம்)



எதற்கு இந்தப்படம்பற்றி   இப்போது  என்றால் பறவைகளுக்கும்உணர்ச்சி உண்டு என்பதை அறிந்துகொள்ளத்தான்.

மரங்கள் அடர்ந்த காட்டில்  குறுக்கும்நெடுக்குமாய் ஒழுங்கற்று நீண்டிருக்கும்  கூரியமுட்களின் இடையே  உடலைக்கொண்டுநுழைத்து வெளியேறி இரைதேடிப்   பசியாறிவரும்  பறவைகள் நமக்கு வாழ்க்கையின் வடிவத்தையும் வாழ்தலின் அர்த்தத்தையும் சொல்லுகிறது அல்லவா?



சிட்டுக்குருவிகளின் சுதந்திரத்தில் மனதைப் பறிகொடுத்த   பாரதி ,’விட்டுவிடுதலையாகி நிற்கவேண்டும் இந்தச்சிட்டுக்குருவிகளைப்போல’ என்றானே!


தோல்வியில் துவளும்போது ஃபீனிக்ஸ்பறவையைபோல சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவேன் என்கிறான் மனிதன். உதாரணங்களுக்கெல்லாம் இயற்கை வேண்டி இருக்கிறது பறவைகள் மரங்கள் என  எடுத்துக்கொள்வோம் ஆனால் ஓசோன் மண்டலத்தில் துவாரத்தையும் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடையும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சத்தையும் வறட்சியின் உக்கிரத்தையும் கண்டுகொள்ளமாட்டோம்.  பூமி வெப்ப மயமாவதை தடுக்க மரங்கள் வளர்க்கவேண்டும் அதனை பாதுகாக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை என்றைக்கு வளர்த்துக்கொள்ளப்போகிறோம்?

நம்மைச்சுற்றிலும் பறவைகள் இருகின்றன அழகழகான நிறங்களோடு உருவங்களோடு அவை நம்மை வசீகரிக்கின்றன ! கவிதைகள் எழுதுவதற்கு கவிஞனுக்குப்பறவைகளே ஆதாரம் !எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்க அவன் பறவைகளை நோக்குகிறான். ஒரு பறவையின் பறத்தலை ரசிக்கத்தெரியாதவன் கவிஞனாக முடியாது.

ஆனால்  பறவைகளுக்கான  சுதந்திரத்தை நாம் எப்போதும்  மதிப்பதில்லை அவைகளை ஒரு பொருட்டாகக் கருதுவதுமில்லை.

விழாக்கால  இரவுகளில் நெருப்புகள் வெடித்துச்சிதறும் பேரதிர்வுகள் நமக்குக்கோலாகலம்!  ஆனால் பறவைகளுக்கு  திசைதெரியாமல் இருளினுள்   அவைபீதியுற்று கதறியபடி பறப்பதை நாம் பார்த்ததில்லை.


காகத்தின் கரைதல்விருந்தினர்வருவதற்கான அறிவிப்பு  என்கிறோம்.
நாராய் நாராய்  செங்கால் நாராய் பழம்படுபனையின் பழக்கூர்வாய் செங்கால் நாராய் என்றார்  ஒருபுலவர்.

பறவைகளைப்பார்த்தால் சிலருக்குபாட்டுவரும் .சிலருக்கு வயிற்றுப்பாட்டுக்கு ஆனதென்று தோன்றி  குறிவைத்து அடித்து வீழ்த்ததோன்றும்.

அன்பைக்கிளைகளாய் விரித்து மரம் சுமந்திருந்த பறவைகளை அதன் மொழிகளை கூவலை  மரங்களை வெட்டி சாய்ப்பதின் மூலம் பெரிதும் இழக்கிறோம். இரட்டிப்பு இழப்பு.

சாலைகள் இரயில்வேபாலங்கள் கட்டவும் தொலைபேசி குடிநீர்குழாய் அமைக்கவும் குடியிருப்பு்கள், தொழிற்சாலைகட்டவும்  மரங்களைவெட்டுகிறோம் .மரங்கள்போனால் பறவைகள் காணாமல்போகும். பாதிப்பறவை இனம் பூண்டோடு அழிந்துவிட்டது


தூக்கணாங்குருவி முதல் கட்டிட நிபுணர் !ஆகாயதோட்டி காக்கை !பல்லவி சரணம் பாடும் வானம்பாடி.!
கொக்கின் ஒற்றைக்கால்தவம்  எல்லாம்  இனி வரும் சந்ததியினருக்குப்பாடபுத்தகத்தில் மட்டும்  பார்க்க என்றாகிவிடுமா?

 ஆலாப்பறவை வேகமாய் பறக்குமாம் ‘ஏன் ஆலாய்ப்பறக்கறே?’ என்பார்களே இதனால்தான்! ஆல்பட்ரோஸ்  பறவை சிறகைவிரித்துவிட்டல்; ஏறத்தாழ ஐந்துவருடங்கள் பறக்குமாம் !புறாக்கள்  தூதுபோயிருக்கின்றன.

ஒற்றுமைக்கு காகம்! இனிமையாகப்பாடுபவர்களை குயில் என்கிறோம் !மழையை தோகை விரித்து அறிவிக்கும்மயில்! கழுகுப்பார்வை என்கிறோம்.
கொய்யாமரத்தில் எப்போது  பழுக்கும் எனத்தெரிந்த அணில்.  கல்யாணமுருங்கை   எப்போது பூபூக்கும் என அறியும் கிளிகள்.
தும்பிகளுக்கு மழைவருவது தெரியு!ம் களிமண்ணை பிரபஞ்சமாக்கி பச்சைப்புழுவைப்பறக்கவைக்கும் மந்திரம் குளவிக்குதெரியும்.
நமக்கு என்ன தெரியும்?


சிட்டுக்குருவிக்கு சின்ன கவிதையாவது எழுதி சமர்ப்பிக்கிறேன் இன்றைக்கு.

சிறகில் அடிபட்ட
சிட்டுக்குருவி ஒன்று
வீட்டு வாசலில் வீழவும்
சட்டென அதை எடுத்து
சேலைத்தலைப்பினைதூளியாக்கி
குருவியை படுக்கவைத்து
அருமையாய் வருடி கொடுத்து
மருந்திட்டுக்காத்துவந்தேன்
இரண்டுநாட்களுக்குள் குருவி
இல்லத்து மனிதர்களின்
உள்ளத்தில் ஒட்டிக்கொண்டது
சிறகுகள் சீரானதும் மனைச்
சிறைவைப்பது சரி இல்லையென
மனதைக்கல்லாக்கிக்கொண்டு
கையிலேந்தியபடி வான்நோக்கி
பறக்கவிடுகிறேன்
உற்சாகமாக உயரப்பறந்தகுருவி
திரும்பிவந்தாலும்
அறிந்துகொள்ளமுடியாத
ஊர்க்குருவியானது!


மேலும் படிக்க... "சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?"

Monday, March 19, 2012

ஆண்டொன்று போனால்...!!

வாழ்வின் எல்லா நிகழ்வுகளும் கனவுகள் அல்லது பிரமைகள் என்கிறது ஜென் புத்தமதம். அப்படியானால் நமது பிறப்பு என்பதும் கனவா அல்லது பிரமையா? பிறந்து இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதால் கனவாய் இருக்க சாத்தியமில்லைஆயினும் கனவுகளில் நாம் பயணம் செய்வதை மறுக்கமுடியாது. எல்லாவற்றிர்க்குமே கனவு ஆதாரம் அது சில நேரங்களில் மெய்ப்படுகிறது.

பிரமை என்பது கொஞ்சம் ஒத்துக்கொள்ளகூடியதாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்வின் பலகணங்களை பிரமிப்போடுதான்கழித்துக்கொண்டிருப்பதாகப்படுகிறோம்.
புனரபி ஜனனம், புனரபி மரணம்
மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு. இந்த பஜகோவிந்த வரிகள் மனித வாழ்வை மட்டும் சொல்லவில்லை இந்த வரிகள் மிக ஆழமான அர்த்தம்கொண்டது.

பார்டிக்கள் இயற்பியல்,
காஸ்மாலஜி என்ப்படும் பிரஞ்சத்தின் தோற்றம், போன்றவைகள் எல்லாமே இதற்குள் அடங்கும்.
விஞ்ஞானிஐன்ஸ்டினின் பிரபல சமன்பாடு ( E = MC2) அணுவை பிளந்து சக்தியாக மாற்றி அணுசக்தியயை மனிதன் உபயோகிக்க வழி வகுத்தது. அணுகருவுக்குள் இருக்கும் துகள்கள் சக்தியாகவும், சக்தி மீண்டும் துகள்களாகவும் மாறிக்கொண்டுஇருக்கின்றன. இதுவே சிவசக்தி. சிவம் சக்தியாகவும், சக்தி சிவமாகவும்
மாறிக்கொண்டே இருக்கிறது. சிவதாண்டவத்தின் பின்னனி இதுவே.
குவாண்டம் மெக்கனிக்ஸ் விஞ்ஞானி நியல்ஸ்போர் 'இந்த மாதிரி தனிப்பட்ட துகள்கள் என்பதெல்லாம் ஒருவித கற்பனைதான். அவைகளை நாம் அறிந்து கொள்வதெல்லாம் மறைமுகமாகத்தான்.’ என்கிறார்.
.
'நம் எதிரே காணும் பொருள் தனிப்பட்ட ஒன்றல்ல. பிரபஞ்சத்தின்,
ஒரு பெரிய உண்மையின், நாம் உணரும்+ காணும் அத்தனையும் சேர்ந்த ஒரு மகா உண்மையின் வெளிப்பாடு' என்பது அரவிந்தர் வரிகள்.

என்ன திடீரென கனவு பிரமை, பிறப்பு மரணம் என்று பேச ஆரம்பித்துவிட்டேன் என்று பார்க்கிறீர்களா?:) காரணம்
கடைசியில் தெரிந்துவிடும்!


ஒப்பற்ற கவிதை ஒரு கவிஞனின் படைப்புத்திறனால்மட்டும் பிறப்பதில்லை உலகம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே பிறக்கிறது என்று சொல்வார்கள்.

எம் எஸ் அவர்களின் குறை ஒன்றும் இல்லை என்கிற பாடலைக்கேட்கும்போது பாடல்வரிகளின் எளிமை பாடியவரின் அசாத்திய திறமை இதெல்லாம் நாம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே கிடைத்ததாக தோன்றுகிறது.குறை ஒன்றும் இல்லை என்ற நினைப்பே நி்றைதானே!






அதுபோல நான் செய்த அதிர்ஷ்டம் எனக்குக்கிடைத்த நல்லபெற்றோர்கள். இங்கிவரை யான்பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்று தினமும் நினைத்துக்கொள்வதுபோன்ற அருமையான அப்பா அம்மா.
குழந்தை கண்ணனை இடுப்பில்வைத்துக்கொண்டு சந்திரனைப்பார்த்து தாய் சொல்லும் பாவனையில் பெரியாழ்வார் பாடிய பாடல் ஒன்று உண்டு.
எல்லா பக்கமும் ஒளி சூழ அதன் ஜோதி எங்கும் பரந்துஎன்ன செய்தாலும் அதெல்லாம் என் மகன் கண்ணன் முக ஒளிக்கு நேராகுமோ என்பதான பொருள்கொண்ட பாடல் . அதாவது முழுநிலவைப்போலமுகம் என்போம் அல்லவா? என்ன பிசாத்துமுழுநிலா நீ என் மகன் கண்ணன் ஜோதி முகம் முன்னாடி நீ ஒண்ணுமில்ல‘ என்கிறாராம் பெரியாழ்வார் பொங்கும் தாய்மைப்பரிவில்.

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து
சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யினும்
என் மகன் முகம் நேரொவ்வாய்

அப்படித்தான் நான் பிறந்த சில வருஷங்களுக்கு வீட்டில் தலையில்வைத்துக்கொண்டு கொண்டாடினார்கள்.இத்தனைக்கும் ஒன்றும் ராயல் ஃபாமிலி இல்லை..கூட்டுக்குடும்பம் கொண்ட நடுத்தர வர்க்கம்தான்..மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி ஆனிப்பொன்னால் செய்த தொட்டிலை ஓலைக்குடிசையில் இருந்துகொண்டு அண்ணலுக்கு பெரியாழ்வார் மானசீகமாய் அளித்தமாதிரி எங்கள் இல்லத்திலும்மகிழ்ச்சியை வானுயர அளித்தனர்..அப்புறம் உடன்பிறப்புகள் வந்ததும் பாசமும் அன்பும் பகிர்ந்துபோனது! ஆனாலும் இன்றைக்கும் பிறந்தவீட்டுக்கு விருந்தாளிபோல அவ்வப்போது போனாலும் அந்தப்பாசமும் அன்பும் சற்றும் குறைவில்லை. குறை ஒன்றும் இல்லை
உறவும் நட்பும் என்று வளர்ந்த நாட்களில் கிடைத்ததில் குறை ஒன்றும் இல்லை
பள்ளி ஆசிரியரிடமிருந்து வாழ்க்கைப்பாடமும் கற்கமுடிந்தது
தமிழை நேசிக்க வைத்த ஆதார வேர் பள்ளிக்கூடத்தில்தான் ஆரம்பமானது.
உதடுபடாமல் பேசாதே
உச்சரிப்புக்கொலை செய்யாதே
எதுவானாலும் மொழி அழகு
அதை மாற்றுங்கால் வரும் பிசகு
என்று இசைக்கவிரமணன் எழுதியதுபோல தமிழின் அழகை ரசிக்க இளம்வயதிலேயே முடிந்தது.
தமிழுக்கும் மதுவென்று பேர் என்றாரே பாரதிதாசன் !மதுமயக்கம் இன்னமும் தீரவில்லை!! தமிழ் கற்றால் குறை ஒன்றும் இல்லை.
புகுந்தவீடு கணவர் குடும்பம் குழந்தைகள் இங்கும் குறை ஒன்றும் இல்லை. கவலைகள் இல்லாமலே வளர்ந்தாயா அப்படியே இருக்கிறாயா என்றால் அது முழுக்க உண்மை இல்லை வருத்தங்கள் வார்த்தைகளால் காயங்கள் சோகங்கள் அவமானங்கள் சோர்வுகள் இல்லாமல்  வாழ்க்கை இல்லை. ஆனால் என்னைக்கவலைகள் தின்னத்தகாதென்று நின்னைச்சரணடைந்தேன் என்று பாரதி சொன்னதுபோலகவலைகளை மனதில்போட்டு உழன்றுகொள்வதில்லை.
எண்ணும் திறன் உள்ளவரை எண்ணுவோம், நமக்கு வசமாகி உள்ள கலைகளையும் காரியங்களையும் செய்வோம், நமக்கு முடிகிறவரையில் பிறருடன் நமது இன்பங்களையும் நாம் பிறருடைய துயரங்களையும் பகிர்ந்துகொள்வோம்’ மனதை மாத்திரம்புதிதாக வைத்துக்கொள்வோம் கர்மத்தொடர்பை ஆன்மா என்று எண்ணி விடக்கூடாது என்று அமரர் மகாகவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் சொல்வார்.
அதாவது நாம் செய்த செயல்களையும் அவற்றின்  விளைவுகளையும் தொகுத்துவைத்துக்கொண்டு அதுவே  நாம் என்று எண்ணிக்கொள்ளக்கூடாது.இப்படி வாழ்கிற வாழ்க்கைதான் வாழ்வாங்குவாழ்தல் என்கிறார் .
 அப்படி ஒரு வாழ்க்கை சித்தியானால் அது அமரவாழ்வு என்கிறார் பாரதி அதிமானிடவாழ்வென்றார் அரவிந்தர் அருள்வாழ்வென்றார் வள்ளலார்.

 விளங்கிக் கொள்ளமுடியாமல்  திணறுகிறோம் நாம்!
(இன்று (19.3.)புதிதாய்ப்பிறந்தேன் ஆகவே இப்படி ஒரு பதிவு எழுததோன்றியது)



--





மேலும் படிக்க... "ஆண்டொன்று போனால்...!!"

Wednesday, March 14, 2012

கனவில் எழுதும் கடிதங்கள்!








கடித விருந்தாளியை
எதிர்பார்த்து
கதவைத் திறந்தே
வைத்திருக்கும்
தபால்பெட்டியின்
வீட்டிற்கு
முன்னெல்லாம்
கார்டுசித்தப்பாக்களும்
கவர் பெரியப்பாக்களும்
வாழ்த்து அட்டை வசீகரிகளும்
வந்தவண்ணம் இருப்பார்கள்!

சிலமணி நேரங்களாவது
உடல் பொங்கப்பூரித்திருப்பார்
தபால்பெட்டிக்காரர்.

விலைவாசி அதிகமோ
விருப்பம்தான் இல்லையோ
விருந்தாளிகள் வருகை
அத்திப்பூ போலஆகிப்போனது.

பறந்து சென்ற புறா ஒன்று
‘என் நிலமைக்கு நீயும் வந்துவிட்டாயா?’
என்பதுபோல்
பெட்டி அருகே எட்டிப்பார்த்தபடி
பறந்துபோயிற்று.

கால ஆட்சி மாற்றத்தில்
செல்போன் செங்கோலாக
கம்ப்யூட்டர் க்ரீடமாகிவிட்டன!


சிம்மாசன மின்சாரம்
பம்மாத்து  செய்துவிட்டால்
கடிதப்பலகைமீது தான்
காலமே வந்து உட்காரப்போகிறது.
பார்க்கலாம் அதற்குள்
நானும் எழுதிவிடுகிறேன்
 சில கடிதங்களை ,
கனவிலாவது!

மேலும் படிக்க... "கனவில் எழுதும் கடிதங்கள்!"

Thursday, March 08, 2012

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?







மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்கு!



மார்ச் 8 –ம் நாள் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாள் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.



இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.



ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதைக் குறிப்பிடத்தான் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. பழங்காலத்தில் கிரேக்கத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போது பெண்கள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத் தன்மை வேண்டி போராடினார்கள்



ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள, உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க, அரசமாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது! அரசமாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் "கைது செய்வோம்" என்று மிரட்டிய அரசனின் மெய்காப்பளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கி கொன்றனர்.



இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்துபோனான். "கோரிக்கைகளைக் கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன்", என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களைச் சமாதானப்படுத்தினான். இயலாது போகவும் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!



தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட.. ஆளும்வர்க்கம் அசைந்துகொடுக்கத் துவங்கியது.



இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்ட நாள் கோரிக்கையான வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.



பிரான்சில், புருஸ்ஸியனில் (Prussian King) இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.


இத்தனை அல்லல் பட்டு கிடைத்த இந்த நாளின் பெருமையை சில மகளிரே உணர்ந்திருக்கவில்லை முழுமையாக.

ஆமாம்! "மங்கையராய்ப்பிறப்பதற்கே மாதவம் செய்திடவேண்டுமம்மா" என்றார் கவிஞர் ஒருவர். அப்படிப்பட்ட உயர்நிலையை தக்கவைத்துக்கொண்டிருக்க தவறிக்கொண்டிருக்கிறோம். நமது இளைய தலைமுறைகளுக்குச் சரியான வழிகாட்டியாக முந்தைய தலைமுறைபெண்களில் சிலர் இருப்பதில்லை. அதற்கு உதாரணம் அழகிப்போட்டி.





இதில் பங்குபெற எனக்குத்தெரிந்த ஒரு மத்தியதரக்குடும்பத்துப்பெண்மணி தன் மகளை மேடைக்குப் போட்டித் தேர்வுக்கு அனுப்பி இருந்தார். பள்ளியில் நடந்த அழகுப்போட்டியில் அழகுராணியாக அவள் மூடிசூடிக்கொண்டதைப் பெருமை வழியக்கூறி இனிப்புகளை அனைவருக்கும் விநியோகித்தார். அழகுப்போட்டியில் கலந்துகொண்ட அந்த ஒன்பதுவயதுக்குழந்தை அழகான குட்டிப்பெண் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லைதான். ஆனால் படிப்பிலும் சுட்டியான அந்தக்குழந்தை எப்போதும் வகுப்பில் முதல் ராங்க். எம் ஐ டி யில் ஏரோநாடிக்ஸ், தொடர்ந்து மாஸ்டர் டிகிரி என முடித்துவிட்டு விண்வெளி ஆராய்ச்சிக்குச் செல்லவேண்டும் என்பது அவளின் லட்சியம். இப்படி படிப்பை நோக்கிய லட்சியப்பாதையில் செல்லும் குழந்தைகளை அழகிப்போட்டி திசை திருப்பிவிடுகிறது.




கொலை, வன்முறை, குண்டுவெடிப்பு, ஆள்கடத்தல், குழந்தைகளின் பாலியல் வன்முறை கொடுமைகள், உள்நாட்டு அரசியல் லஞ்சங்கள், அதில் சிக்கிக்கொண்ட பெரியதலைகள், தீவிரவாத தாக்குதல்கள், அந்நிய நாடுகளுடன் கருத்து வேற்றுமைகள் என்கின்ற பலவிதமான சோர்வுகளுக்கு நடுவே இந்தியாவுக்கு உலக அழகியாக இந்தியப்பெண் ஒருவர் முடிசூடிக்கொள்வது சற்று ஆசுவாசத்தைத் தருகின்றது.



விளையாட்டுத்துறை, வணிகத்துறை என்று இந்தியா பின்தங்கி இருந்தாலும் அழகுத்துறையில் இந்தியா முதலிடம் பெற்றது பெருமையாகிவிட்டது!



வணிக நிறுவங்களும் தங்களது பிஸினஸ் முன்னேற்றத்திற்கு அசுர விளம்பரம் செய்து பெண் என்னும் பிரமாதமான சரக்கினை அது அள்ள அள்ளக்குறையாத தங்கச்சுரங்கம் என்ற எண்ணத்தில் அழகிப்போட்டிகளை நடத்த ஆரம்பித்தனர்.



வணிக நிறுவனங்களின் வியாபாரத்திற்குத் தங்களை விட்டில் பூச்சியாக பலி கொடுப்பதைப் போட்டியில் பங்கு கொள்ளும் அழகிகள் அறிய நியாயமில்லை.



"பெண் என்றால் அழகு; ஆண் என்றால் வீரம்" என்னும் நீண்டகாலப்பாகுபாடு எத்தனையோ காலமாகியும் காப்பாற்றப்பட்டு வருவதால், இதன் உச்சக்கட்ட மோசடியாக நடப்பது அழகிப்போட்டி என்றாகிறது.



தங்களைப் பிறருக்காக அழகுப்படுத்திக்கொள்வதில் பலப்பல பெண்கள் தங்கள் நேரத்தை, சிந்தனையைச் செலவழிக்க நேரிடுகிறது. தங்கள் ஆற்றல், பண்பு, சிந்தனை என்று எதையும் வளர்த்துக்கொள்ளாமல் அழகுப்பதுமைகளாகவும் அலங்காரப்பொருட்களுமாகவே இருந்துவிடுகிறார்கள். போட்டிகளில் பங்கு பெறும் இளம் பெண்கள் ஒரு கனவுலகில் வாழ்கிறார்கள்!



இன்றைய நம் தமிழ்ச்சமுதாயத்தில் அழகுப்போட்டிக்கான சிந்தனை அவளை விபரீதமான இடத்தில் கொண்டு நிறுத்துகிறது.



மனதைச் சலனப்படுத்தி மாய உலகில் அவளைச் சஞ்சரிக்கவைக்கிற அழகுப்போட்டிகள் நமக்குத்தேவைதானா?

இதனைப் பெற்றோர் உணரவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

விளையும் பயிருக்கு வேலியாய் பெற்றோர் இருக்க வேண்டும். அதுவும் பெண் எனும் இளம்பயிரைத் தாய் எனும் வேலி பேணிக்காக்க வேண்டும்.



"குடும்பம் என்பது ஜனநாயக பண்புகளை வளர்க்கும் தொட்டிலாக இல்லை" என்று ஐ நா வின் அறிக்கையே கூறுகிறது.



போன தலைமுறைப் பெண்களைவிடவும் இந்தத் தலைமுறைப் பெண்களின் சிந்தனை வேகம் கூடி இருக்கிறது.



ஆகவே இந்தியா போன்ற ஏழைநாட்டிற்கு அவசியமில்லாத அழகுப்போட்டியில் தன் மகளை கலந்துகொள்ள வைப்பதைவிட, ஆற்றலை வளர்த்துக்கொள்ள சிந்தனையை சீராக செலுத்திக்கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும்.



மனிதநேயம், தன்னலமற்ற பாசம் பகிர்ந்துகொள்வது, பரஸ்பரம் விட்டுக்கொடுப்பது, பண்பு கலாசாரம் ஆகியவற்றை மதிப்பது போன்றவைகளை சிறுவயதிலேயே குழந்தைகளூக்குப் பாலோடுபுகட்டும்போது சாதகமான சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மாற்றங்களை இளைய தலைமுறையினரால் கொண்டுவர இயலும்.



இத்தகைய உன்னத நிலைக்கு நம் குழந்தைகளைக் கொண்டு செல்ல நாம் பாடுபடுவோம். இவற்றுக்கு எதிரான அழகுப்போட்டி போன்ற சக்திகளைப் பலவீனப்படுத்துவோம்!








அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்

அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை

உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!



பாரதியின் வரிகளை பாரெங்கும் முழக்குவோம்!


(நன்றி இன்று என் இந்தக்கட்டுரையை வெளியிட்ட இந்நேரம்.காமிற்கு)











--







மேலும் படிக்க... "உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?"

Sunday, March 04, 2012

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!(தொ.ப)

பள்ளிக்கூடம் என்கிற வார்த்தையே எத்தனை அழகானது!
 எழிலான  ஒரு தமிழ்ச் சொல் பள்ளி என்று சொல்லலாம். கல்விக்கூடம் என்று சொல்லாமல் பள்ளிக்கூடம் என்று ஏன் சொல்கிறோம்? பள்ளி என்றால் நேரடிப்பொருள் இடம் என்பதாகும். பள்ளத்தில் இருப்பது பள்ளி.முன்காலத்தில் குருகுலவாசம் என்று மரத்தடியில் கல்விகற்க மாணவர்கள் கூடுவார்கள். ஆசிரியர்  மேட்டில் அமர்ந்திருக்க கீழே பள்ளமான பகுதியில் மாணவர்கள் அமர்ந்திருப்பார்கள்.


பள்ளிக் கூடம் = ஆறு போல் பல படிப்புகள் வந்து ஒன்றாகத் தேங்கும் பள்ளம் , பள்ளி! .பாடசாலை என்கிறார்கள் இலங்கையில். அழகான பொருள் கொண்ட சொல்தான் இதுவும்.



திருப்பள்ளி எழுச்சி இறைவனுக்கு சொல்கிறோம். இறைவன் இருக்குமிடம்  சிறந்தது அல்லவா அதனால் திருப்பள்ளி.   ’அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே* என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில் அதென்ன பள்ளிக்கட்டில்?

!

* பள்ளி = பள்ளிவாசல் என்பது சமய வழிபாட்டு இடம்!

* பள்ளி = படுக்கை என்றும் பொருள்.சங்ககாலப்பாடல்களில் இதற்கு உதாரணம் உள்ளது.  பள்ளியறை என்பது படுக்கை அறை!

* பள்ளி = மடைப்பள்ளி என்பது சமையல் அறை! இன்னமும் வைணவர் வீடுகளில் சமையல் அறையை திருமடப்பள்ளி என்பார்கள் அது திரிந்துஇன்று  திருமாப்படி ஆகிவிட்டது !


வேளாண்மை நிலங்கள், வரப்பில் இருந்து பள்ளமாய்த் தான் இருக்கும்! அங்கே உழுபவன் = பள்ளன்/ பள்ளத்தி! அங்கே பாடும் பாட்டு = பள்ளுப் பாட்டு!மனதின் ஆழத்திலிருந்து வரும் பாட்டு பள்ளுப்பாட்டு! (முக்கூடற் பள்ளு) அதான் பாரதி  ஆடுவோமே பாட்டு பாடுவோமே என்று சொல்லவில்லை.ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்றான் போலும்!

பள்ளிவாசல் என்பது இறைவனின் கருணை வந்து தேங்கும் பள்ளம்! பிரார்த்தனைத் தலம்!

 பள்ளி அறை = உறங்கும் அறை, மற்ற பகுதிகளை விடச் சற்று தாழ்வாத் தான் இருக்கும்! மேட்டில் உறங்காமல், சற்றே பள்ளமான இடத்திலேயே உறங்குவார்கள்! மேட்டில் உருண்டு விழுந்தால் அடி பலம்:) பள்ளமே கள்ளத்துக்குச் சரி என்று பதிவர் கேஆர் எஸ் தன் வலைப்பூவில்  கூறியதை அப்படியே இங்கே காப்பியடிக்கிறேன்:)


 மடைப் பள்ளி  என்னும் சமைக்கும் இடமும் அப்படியே! பல பேருக்குச் சமைக்கும் இடம், சற்றே பள்ளமாக இருக்கும்! பெரும் பாத்திரங்களை இறக்கிச் சமைப்பார்கள்!


அரசனின் அரியணை உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், அது ஆடாமல் என்றுமே நிலையா நிக்கணும்! அதன் பொருட்டு, அதன் கால்கள் அங்கேயே சற்றே பள்ளத்தில் ஆழ்ந்திருக்கும்!

அப்படித் தான் இறக்கிக் கட்டுவார்கள்! அப்படியான அரியணைக் கட்டில் = பள்ளிக் கட்டில்!

இறைவன் கொலுவிருக்கும் இடமான பள்ளிக் கட்டில் = அரியணை! அந்த அரியணையைத்தான் ஆண்டாள் பள்ளிக்கட்டில் என்கிறாள் தன் பாசுரத்தில்.

 பள்ளிக்கட்டு (டில்) சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை-ன்னு பாட்டும் நினைவுக்கு வரணுமே!

எதற்கு இப்படி பள்ளிக்கு  இன்று இவ்வளவு முக்கியத்துவம் என்றால் பதிவர் கணேஷ் அவர்கள்  என்னை தொடர்பதிவாக  எழுத அழைத்துள்ளார். மீண்டும் பள்ளிக்கூடம் போக சொல்கிறார்! ரொம்ப பின்னாடி நான் போகணும் இதுக்கு! தம்பி உடையாள் படைக்க அஞ்சலாமா?:) அதனால்  நினைவுக்கு வருவதை இங்கே படைக்கிறேன்!!கொஞ்சம் பெரிய படையல் பொறுமையா படிங்க  ..உங்களை மாட்டிவிட்ட புண்ணியம் கணேஷுக்கே!!!

            *************************************************

சர்ச்பார்க் கான்வெண்டிற்கு வாயில் சாக்லேட்டை சுவைத்தபடியே ஆங்கிலத்தில் அம்மாவிடம் ‘பை மம்மி’ என்றும், ‘இட்ஸ் கெட்டிங் லேட்,, கோ ஃபாஸ்ட்’ என்று கார் ட்ரைவரிடம்  சொல்லியபடிகறுப்பு நிற  காரில் போனதாகவும் ரீல் விட ஆசைதான் ஆனால் பொய் சொன்னா போஜனம் கிடைக்காதாமே..  சாப்பிடாம எப்படி உயிர்வாழறது இன்னும் எழுதி எல்லாரையும் எப்படிப்படுத்தறதாம் அதனால நிஜத்தையே சொல்லிடறேன்:)
    
அப்போல்லாம் இந்த எலிகேஜி பூனை கேஜில்லாம் கிடையாது நேரா ஒண்ணாம்கிளாஸ்தான் நான் பள்ளிக்குப்போக  மூணுவயசிலிருந்து ஒற்றைக்காலில் நின்னதால் அம்மா என் அப்பாக்குத்தெரியாம 2வயசு ஜாஸ்திபோட்டு ஒண்ணாங்கிளாசில் சேர்த்துட்டாங்க ஆள்வேற அப்படித்தான் பம்ளிமாஸ் மாதிரி இருப்பேனா யாருக்கும்  சந்தேகமே வரலையாம்.ஆனா இந்த வயசுக்கூடுதலாய் போட்டதுக்கு அம்மா இன்னிவரைக்கும் அப்பாகிட்ட அர்ச்சனைவாங்கிட்டு இருக்காங்க:)( என்னவோ நான் பெரிய கலெக்டர் வேலை பாக்கறமாதிரி  கரண்டி உத்தியோகம்தான் கல்யாணம் ஆன நாள் முதலாய்!!!)

வீட்ல அப்பாவின் பெற்றோர்கள்  கல்யாணமாகாத தங்கைகள் அதாவது என் அத்தைகள் என்று கூட்டுக்குடும்பம் குடும்பத்தின் முதல் பேத்தி நான் தான் ஆகவே அளவுக்கு மீறீய செல்லம் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். தினமும் பள்ளிக்கூடம் போய்விட்டுவரும்போது சிலேட்டை வழியில் தொலைத்துவிடுவேன் கேட்டால் காற்றில் பறந்துவிட்டது என்பேனாம்!  இரண்டாம் வகுப்புவரை இரண்டு டஜன் சிலேட்டுகளை தொலைத்துவிட்டேனாம்!! சிலேட்டையாவது தொலைத்தால் சரி ஒருநாள்  இரண்டாம் வகுப்பு பரிட்சை எழுதிவிட்டுவருகிறபோதே நானே தொலைந்துவிட்டேனாம். அன்று.வீட்டில் ஒரே கலவரமாகிவிட்டது  ஏகப்பட்ட தெய்வங்களுக்கு மஞ்சள்துணிமுடிப்புகள் பிரார்த்தனைகள் அழுகை கண்ணீர் கதறல்.

கடைசியில் என்னை சாத்தாரவீதி முனையில் ஒரு மனிதன்  கையில் கண்டுபிடித்தார்களாம் அவன் சொன்னது,”இந்தப்பொண்ணு காலாற இப்படியே நட்ந்துவந்திச்சி.... கைல பள்ளிக்கூட பை ஒண்ணூமில்ல ஆனா பள்ளிக்கூடத்திலிருந்துவரேன்னு சொல்லிச்சி...எங்கேவீடுன்னா சொல்லத்தெரியல,’தாகமாயிருக்கு கூல்ட்ரிங்  வாங்கிகொடுன்னிச்சி அப்றோம் கடலைமிட்டாய் லேகா உருண்டை கொடுக்காப்புளின்னு செலவு ஏழுரூபாய்க்குமேல(இன்னிக்கு 700ரூ) வச்சிடிச்சி...பணத்தைகொடுத்திட்டு புள்ளையைக்கூட்டிப்போங்க’ என்றானாம் . அவன்  கடத்திப்போக வந்தவனோ அல்லது வழிதெரியாமல் போனவளை காப்பாற்ற வந்தவனோ பதட்டத்தில் அவன் கேட்ட  பணத்தைகொடுத்துவிட்டு மீட்டுவந்தாராம்.

அதற்குப்பிறகு நாலாம்வகுப்புவரை அத்தைகளில் ஒருவர் அரைகிலோமீட்டர் அருகிலிருந்த பள்ளிவரைகொண்டுவிடுவது திரும்ப அழைத்துவருவது என்று பொறுப்பேற்றனர்.
சின்ன அத்தை பாதிதூரம் மூச்சிறைக்க தூக்கிக்கொண்டே வந்துவிடுவார்! அவ்வளவு பிரியமும் பாசமும்!

பள்ளிக்கூட ஆண்டுவிழாவிற்காக   எனக்கு நடனம் கற்றுக்கொடுத்தார்கள். அப்போ பிடித்தது நடன ஆசை.யாராவது வீட்டிற்குவந்தால் அவர்கள்  ஆ என்பதற்குமுன்பாக  ஆட  ஆரம்பித்துவிடுவேன். நிறுத்தவே மாட்டேன். பாதிபேர் இதற்குபயந்துகொண்டே அதிகம் வீட்டிற்குவராமல்போய்விட்டார்கள்.:)

அப்பா எழுத்தாளராயிருந்ததால்(இருப்பதால்) வீட்டில் மாடி ரூமில்வெள்ளைதாள்கள் நிறைய இருக்கும். ஒருநாள் அதில் ஒன்றை எடுத்து ஒரு ஜோக் எழுதும்போது அம்மா வந்துவிட்டாள்” மொட்டை மாடில் உக்காந்து வடாத்தைப்பார்த்துண்டு பாடம்படின்னா  என்ன எழுதறே பேப்பர்ல?” என்றாள்/

ஜோக்கும்மா

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... படிச்சிக்கிழி போதும். ஏற்கனவே ஸ்கூல்போனா ட்ராமா டான்ஸுன்னு பொழுதைதள்ளிட்டுவரே இதுல ஜோக்கு கதைன்னு ஆரம்பிச்சிடாதே உருப்படியா படிக்கணும் என்ன?


ஆனால் அப்பா பார்த்து புகழ்ந்துதள்ளிவிட்டு அதை விகடனுக்கு எப்படி அனுப்புவதென சொல்லி அதை அனுப்பி ஜோக்கும் வெளிவந்து விட்டது.ஆஹா அன்று பள்ளிக்கு எல்லாருக்கும் பாரிஸ் சாக்லேட் தந்தேன். என்னவோ  ஞானபீட பரிசு  வாங்கினகினமாதிரி பள்ளியே என்னை அன்று கொண்டாடியது.

கூடப்படிச்சபொண்ணு(பேர்மீனா)கணக்கு நோட்டை வாங்கி காப்பி அடிச்சி ஹோம் ஒர்க் பண்ணிட்டுத் தர்ரதா வீட்டுக்குக் கொண்டுவந்தேன்.வரவழியிலயே வழக்கம்போலஅதை எங்கயோ தொலச்சிட்டேன் ..அவகிட்ட நடந்ததை சொன்னேன். 'தொலைசிட்டியா நீ ?இருஇரு எங்க பெரியப்பாகிட்ட உன்னைமாட்டிக்கொடுக்கறேன்'னு பயமுறுத்தினா மீனா.



அவள்பெரியப்பா போலீஸ்காரர்.மல்லிகைப்பூ அக்ரஹாரத்தை ஒட்டிய போலீஸ் குவார்ட்டஸ் வாசலில் , காக்கி உடை அவரைவிட விறைப்பாய் தெரிய கொடுவாள்மீசையோடு பாத்தாலெ நடுங்கறமாதிரி இருப்பார். ஐயோ போலீஸ் பெரியப்பா என்னை விலங்குமாட்டி ஜெயில்ல போட்டுடுவாரா?



வீட்டிற்கும் தொலைத்த கதை சொல்லவில்லை.'உனக்கு ஒண்ணூம் இழுங்கா வச்சிக்கத் துப்பு இல்லை' என் அர்ச்சனை விழுமெனும் பயம்!



அம்மாமண்டபம்போகும்வழியில் ஒருசின்ன பிள்ளையார்கோயில்வரும்..


அங்கேபோனேன்.."பிள்ளையாரப்பா!மீனாவோட கணக்குநோட்டு

தொலைஞ்சிபோச்சு ..அதுக்கு அவ போலீஸ்பெரியப்பாகிட்ட சொல்லி என்னை ஜெயில்லபோடபோறா போல இருக்கே?.அந்த பெரியப்பா உயிரோட இருந்தா தானே என்னை ஜெயில்ல போடுவாரு அவரைஉயிர் போகச் செய்துடு..அவரை சாகடிச்சிடு' னு கண்ண மூடி வேண்டிட்டு நிமிர்ந்தா......... எதிரே மீனா ! பக்கத்துல போலீஸ்காரபெரியப்பா!

அய்யோ!
தலைதெறிக்கஓட இருந்தவளை பெரியப்பா லபக் ன்னு பிடிச்சார் ."எங்கஓடறே?"


"வ வந்து..." (இப்போதும் அன்னிக்கு என் கண்முழி நெட்டுப்போனதையும் கைகால் நடுங்கியதையும் மறக்கமுடியவில்லை)



"கணக்கு நோட்டைதொலைச்சிடியாமே நீ ?சொல்லிச்சு எங்கவீட்டு பாப்பா..."



""ஆஅ ஆமாஅ. தெ தெ தெரியாஆஆம...".(பிள்ளையாரேஇப்பொகூட லேட் இல்ல ..இங்க இவருதலைக்கு

மேல தொங்கிட்டு இருக்கறபெரிய வெங்கலமணீயை டமால்னு தள்ளிவிட்டு அவர் மண்டைய உடச்சிடு.. )



கண்ணமூடினவளின் காதுல தேனா ஒருகுரல்!



'கவனமா இருக்கணும்ம்மா.இனிமே தொலைக்காதே என்ன? போனாப்போவுது நீயும் சின்னபுள்ளதானே?மீனாகூட பழைபடி பேசுபழகு..அவளும் பேசுவா"



எனக்குபோன உயிர் திரும்பி வந்தது!




ஐந்தாவது வகுப்பிலிருந்து எங்கள் கிழக்குரங்காபள்ளிக்கூடத்தைவிட்டு ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் 6த்ஸ்டாண்டர்ட் சேர்ந்தபோது அருகில் இருந்த பாய்ஸ் ஹைஸ்கூலைக்கடந்துதான் செல்லவேண்டும். அந்தப்பக்கமே பாக்காமல் நேராபோகணம் தெரிஞ்சுதா என்று வீட்டில் அதட்டி அனுப்பிவைப்பார்கள். கொஞ்சமாய் ஓரக்கண்ணால் பாய்ஸ் கேர்ல்ஸை பாக்கறாங்களான்னு பார்த்துக்கொண்டே போயிடுவோம் நாங்க நாலைஞ்சிபேர்!
 
குடுகுடுராமசந்திர ஐயர் என்று ஒரு வாத்தியார் இருந்தார் அவர் குடுகுடுவென வேகமாக நடப்பார் என்பதால் பாய்ஸ் ஹைஸ்கூலில் அந்தப்பட்டபெயர் அவருக்கு .அவர் இரண்டுபள்ளிகளுக்கும் காம்ப்வுன்ட் குறுக்கே இருக்கும் சின்ன தடுப்புகதவுவழியே வந்து பாடம் எடுப்பார். என்னவோ அவரைப்பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துவிடும் ஒழுங்காய் பாடம் கவனிக்கும் மற்ற மாணவிகளையும் சிரிக்கவைத்துவிடுவேன்.

ஏழு எட்டாம் வகுப்புகளில்
பள்ளியில் NCCயில் சேர்ந்துவிட்டேன்  ஞாயிறுகளில் சிற்றஞ்சிறுகாலை காக்கி உடுப்போடு பள்ளிக்குப்போய்விடுவேன்  பின்ன ரங்கபவன்லேந்து சூடா இட்லி வடை சாம்பார் கிடைக்குமே!

 அம்மா,’என்சிசில சேர்ந்தா நாளைக்குகல்யாணம் ஆகுமா இவளுக்கு?  எதுக்கு ஆண்பிள்ளையாட்டம் பாண்ட் சர்ட் போட்டுண்டு போறா வேண்டாம்னு சொல்லுங்கோ” என அப்பாவிடம் சொல்லிச்சொல்லி  இரண்டேவருஷத்தில் அதிலிருந்து நான்விலகும்படி ஆகிவிட்டது அதற்குள் ஜே1 சர்டிஃபிகேட் வாங்கிவிட்டேன்! எல்லையில் நின்று ராணுவச்சேவை செய்ய நினைத்தவளை வீட்டில் அரிசிசேவை செய்ய வைத்த  பாவம்(புண்ணீயம்?:) என் தாயையே சேரும்!!

எழுத்தாளர் ஜெயகாந்தன்  சிறுமியாய்  இருக்கறப்போ வீடுவந்தார் அவரையும் விடவில்லை"   மாமா தெற்குவாசல்போய் கூல்ட்ரிங்க் வாங்கித்தாங்க" என்றேன் . கருப்பாயிருந்தாலும் ஹாண்ட்சம்மாய் இருப்பார். எப்போ பார்த்தாலும் சிகரெட் கையில் இருக்கும். ‘ஏன்மாமா சிகரெட் பிடிக்கறீங்க?”
‘பிடிச்சதை பிடிக்கறேன்மா’ என்பார் சிரித்தபடி எனக்கு ஒன்றும் புரியாது.
‘ஏம்மா உனக்கு கூந்தல் சுருட்டையா அழகா இருக்கே தவிர  நீளம் போதலையே  அதுக்கு ஒரு தைலம் வாங்கித்தரேன்” என்று தெற்குவாசல் கடையில் ஒரு கூந்தல் வளர் தைலம் வாங்கிக்கொடுத்தார்.
அடுத்த ஏழெட்டுமாதத்தில் திருச்சி தேவர் ஹாலில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தவர் மறுபடி ஸ்ரீரங்கம் வீடுவந்தார் அப்போ கேட்டார்’ என்னம்மா  வளர்ந்திச்சா?’ நானும், “ ம்ம் வளந்திச்சி மாமா  அந்த கூந்தல் தைலக்கம்பெனி வியாபாரம் நாந்தான்  நிறைய வாங்கறேன் ஆனா என்  தலைமுடி அப்படியே இருக்கு” என்றேன் சிரித்துவிட்டு .

அப்பாவிடம்,’இதுமகாவால்’என்றார்.

அப்பாவோடு பல எழுத்தாளர்கூட்டங்களுக்குப்போயிருக்கிறேன் கவனமெல்லாம்  கேசரி வெண்பொங்கல் பஜ்ஜி வாசனையில்தான் இருக்கும் மேடை சொற்பொழிவை கவனிக்காமல் விட்டதற்கு இப்போது வருந்துகிறேன்! குயிலன் என்றொரு மகாகவிஞர் வருவார் வீட்டுக்கு அவரிடம்  ‘ஏன்மாமா இவ்ளோ கருப்பா இருக்கீங்க” என்று கேட்டுவிட்டேன் அவரும் .”அதான்மா நான் குயிலன்” என்றார். அவர் போனதும் அப்பா அம்மாவிடம் எனக்கு கிடைத்தது லட்சார்ச்சனை! பின்னாளில் அவர் கவிதைகளை  வாசித்தபோது கண்பனித்தது அவரிடம் பழைய நிகழ்வை சொல்லி மன்னிப்பு கேட்டேன்  “ என்னம்மா நீ? குழந்தை மனசாய் இருப்பதுதான் இயல்பு அதுக்கு எதையும் மறைக்கத்தெரியாது  வயசானாலும் நீ குழந்தைமையை இழக்காதே’ என்றார் பெருந்தன்மையாக.

ப்ளஸ்டூ வரை பள்ளியில் படிப்பைவிட மற்ற கலை நிகழ்ச்சிகளில் நான் பிரசித்தம். மதிய இடைவேளையில் சாப்பிட்டதும் சகமாணவிகள் என்னிடம் ஏதும் கதை கேட்பார்கள் இட்டுக்கட்டி அளந்துவிடுவேன் அதை ரசித்து மகிழ்வார்கள்.அப்பாவின் தொடர்கதை அப்போது  ராணி யில்வந்துகொண்டிருந்தது.சில ஆசிரியைகள் தொடரின் அடுத்தபாகம் என்ன விறுவிறுப்பா இருக்கு என்று கேட்பார்கள்.’தெரியாது டீச்சர்’ என்றாலும் உள்ளூறப் பெருமை தாங்காது.

துணி நீயப்பா என்று  பழம் நீயப்பா பாடல்பாணியில் பாட்டு எழுதி  மாம்பழம் முருகன் வினாயகர் சம்பவத்தை  அப்படியே நவீனமாய் மாற்றி  பள்ளி பிரிவு உபசார நாளுக்கு ஸ்கிரிப்ட் தயாரித்தேன்.  அதை பிறகு திருச்சிவிவித்பாரதியில் விரும்பிக்கேட்டு ஒலிபரப்புமளவுக்கு  பிரபலமானது.

ஆக  எனக்கு இப்போ ஏதாவதுகொஞ்சம் சுமாரா எழுதவருகிறதென்றால் அதற்கு வித்திட்டது என் பள்ளிக்கூட நாட்கள்தான். பசுமை நிறைந்த நினைவுகள் மட்டும் மிச்சமிருக்கஅன்று என்னை  ஆதரித்த ஆசிரியர்களும் தோழிகளும்  பழகிய அனைவரும்  இன்று எங்கங்கோ சிதறி இருக்கிறார்கள்.....  என்றாவது மீண்டும் கண்டால் அவர்களுக்கு சொல்ல என்றே நல்லகதை ஒன்றையும் வைத்திருக்கிறேன்!

இது தொடர்பதிவு  ஆகவே நான் இதைத்தொடர நாலுபேரை அழைக்கிறேன் அவர்களும் பள்ளி நினைவுகளை அசைபோடும்படி அன்போட கேட்டுக்கறேன்.

1மாதவன்

2ஷக்திப்ரபா

3மகேந்திரன்

4புதுமாப்பிள்ளை தக்குடு!



மேலும் படிக்க... "மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!(தொ.ப)"

Thursday, March 01, 2012

எண்பதைக் கடந்த எளியவர்!

நகைச்சுவை உணர்வு கொண்டிருப்பவர்களை சற்று புத்திசாலிகள் என்பார்கள். நகைச்சுவையாகவே எழுதுபவர்கள்  கண்டிப்பாக அதிபுத்திசாலிகள் என்றால் அது மிகை இல்லை.
நாலுபேரை சிரிக்க வைப்பது சாமான்ய செயல் இல்லை. அழ அழ பெரிய கவிதை எழுதுவது எளிது சிரிக்க சிரிக்க  சின்ன கட்டுரைகூட எழுதுவது கடினம். நன்றாக வாய்விட்டுச்சிரித்தால் உடல் எடை கணிசமாய் குறையுமாம்! இதை அமெரிக்க மருத்துவர்கள் சொல்கிறார்கள். மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே சாப்பிட்டால் சாப்பாட்டில் சக்கரையின் அளவுகூட அதிகமாய் கூடாதாம்! சிரிப்பே சிறந்த மருந்து என்று சும்மாவா சொன்னார்கள்?!

யாமறிந்த  நகைச்சுவைகளிலே தமிழரின் நகைச்சுவைபோல் எங்கும் காணேன் என்று  தைரியமாக சொல்லலாம்!

நகைச்சுவையில் நம் தமிழ்மக்களை  மிஞ்சமுடியாதுதான்.. பழைய எழுத்தாளர் நாடோடியிலிருந்து பலர் நகைச்சுவையாக எழுதுவதில் வல்லவர்கள். ஏன் தி ஜா  கூட தன் சிறுகதைகளில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை வர்ணிக்கும்போதே சிரிப்பு வந்துவிடும். ராஜேந்திரகுமார் ஙே என்று முழிக்க வைத்தே சிரிக்கவைப்பார். பல பிரபல எழுத்தாளர்கள் நகைச்சுவையை முயன்றிருக்கிறார்கள்.
சுஜாதா மட்டும் என்ன அவரது பல சிறுகதைகளை ஊன்றிப்படித்தால் நைசாக சிரிக்கும்படி சில வாக்கியங்கள் இருக்கும். அதை அவரிடமே நாங்கள்  குடும்ப நண்பர்கள் என்பதால் உரிமையுடன் சந்திக்கும் போது கூறி அவரிடம் வெட்கப்புன்னகை வரவழைத்துவிடுவோம்! அதிலும் என் உடன்பிறப்புகள் இருக்கிறார்களே அவர்கள் மூவரும் அவரிடம்,”அதென்ன சார் ஸ்ரீரங்கத்தில் அந்த லேடீஸ் சைக்கிளில் போகும் அந்த '.......' மாமா யார் ஸார், அதற்கு அந்தரங்கக்காரணம் இருக்கிறது என்று வேற எழுதி இருக்கீங்க?’ என்று கேட்டு தர்ம சங்கடத்தில் ஆழ்த்த அவரென்னிடம்”என்னம்மா  உன் தம்பிகள் இப்படி வாலாய் இருக்கிறாங்க?” என்று சிரித்தபடி கேட்பார்.

(நான் கேக்கமுடியாது ஆதான் அவங்கள அனுப்பினேன் என்றால் நீ பெரியவாலா இருக்கியேன்னு சொல்லிடுவார்!:0

சோவின் சடையரில் மெலிதான நகைச்சுவையை பெரிதும் ரசிக்க முடியும். பாக்கியம் ராமஸ்வாமியின் சீதாப்பாட்டி அப்புசாமியை  தேவனின் துப்பறியும் சாம்புவை  யாரால் மறக்கமுடியும்?க்ரேசிமோகன் ஜிகே  என்று பலர் நாடக உலகிலும் திரை உலகிலும் !

சித்ராலயா கோபுவின்  திரை வசனங்களைப்பற்றி  சொன்னால் சூரியனுக்கு ஒளிவிளம்பரம் கொடுக்கிறமாதிரி இருக்கும்!
ஜேஎஸ் ராகவன் என்னும் நகைச்சுவை எழுத்தாளர் வாழைப்பழத்தில் ஊசியாய் நகைச்சுவையை எழுத்திதள்ளுவார் அனாயாசமாக!

இணைய உலகில் காமெடி மன்னர்களாய்   அம்மாஞ்சி, திரு.அப்பாதுரை,தக்குடுபோல பலர் இருக்கிறார்கள்.

பெயரில் கடுகு அகஸ்தியன் என்றெல்லாம் வைத்துக்கொண்டு
எழுத்தால் உயர்ந்த மனிதரானவர் இவர். சமீபத்தில்  எண்பதுவயதைக்கடந்துள்ள திரு பிஎஸ் ரங்கநாதன் அவர்களின் நகைச்சுவை கதைகளைப்படித்திருக்கிறீர்களா? ஒருமுறை ரயிலில் நான் அவருடைய   சிறுகதையை தீபாவளிமலரில் படித்தபடி  சிரித்துக்கொண்டே  இருக்கவும் அருகில் அமர்ந்திருந்த பலர் என்னை  லூசுப்பெண்ணோ என பார்த்தது நிஜம்!

இந்த நகைச்சுவை ஜாம்பவான்களை எல்லாம் ஒரே மேடையில் பார்த்தால் எப்படி இருக்கும்?

கடுகுசாரின் எண்பதாம் பிறந்த நாள் வைபவத்தில் பார்த்துவிட்டேன்!  கடுகு சார்  மிக எளிமையாகப்பழகுகிறார்! உன்னதங்கள் அனைத்துமே ஆர்ப்பாட்டமில்லாதவை தான்.

 ((மேடையில் துக்ளக் சத்யா அவர்கள்,ராணி மைந்தன்சித்ராலயா கோபு ஜே எஸ் ராகவன் பாகியம் ராமஸ்வாமி(ஜராசு) காத்தாடிராமமூர்த்தி கல்கி ஆசிரியராயிருந்த ராஜேந்திரன்)

கீழே எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை இயக்குநர் சிவி ராஜேந்திரன்சுரேஷ்பாலாவின் குடும்பம் இன்னும் சில சின்ன பெரியதிரை நடிகர்கள் இயக்குநர்கள்  வந்திருந்த அந்த நிகழ்ச்சி  கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் அமைந்தது.

சித்ராலயா கோபு அவர்கள் இயக்குநர் ஸ்ரீதருடன் தான் பணிபுரிந்த நினைவுகளை அசைபோட்டார். எழுத்திலும் வயதிலும் முதிர்ந்த எழுத்தாளர்களின் அனுபவங்களை மேடையில் கேட்பது நமக்கு புது அனுபவமாக இருந்தது.




க்ரேசிமோகன் கடைசிநேரத்தில் வெளியூர்போக நேர்ந்ததால் வரவில்லை அவர் எழுதி அனுப்பிய வெண்பா வாழ்த்துக்கவிதைகளை ராணிமைந்தன்  வாசித்தார். க்ரேசியின்  வெண்பாக்கள் பல நான் வாசித்ததுண்டு நீங்களும் கண்டிப்பாக  வாசிங்க அற்புதமாய் இருக்கும்!
செவிக்கும் வயிற்றுக்கும் சிறந்த உணவு அளித்து புறப்படும்போது நல்ல  அழகானபிரயாணப் பை ஒன்றில் நான்கு புத்தகங்கள்(நானூறு ரூபாய்க்குமேல்  இருக்கலாம்)
 போட்டு கொடுத்தார்கள்.

க்ளிக்ரவி எனும் பிரபல புகைப்படக்காரர் நல்ல எழுத்தாளரும் கூட. அவரது கைவண்ணம் இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பிரசித்தம்.



மேடையில்  நகைச்சுவை  நடிகர் நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று ஆண்கள்தான் அமர்ந்திருந்தனர். ’பெண்கள் யாரும் அந்தத்துறையில் பிரபலமாகலைபோல்ருக்கு  ஒரு எழுத்தாளர்கூட இல்லையே?” என்றார் ஒரு பெண்மணி -என்அருகில் அமர்ந்திருந்தவர்.

‘சில காமெடிப்பதிவுகள் வலையிலும் இன்னும்சில கட்டுரைகள் பத்திரிகைகளிலும்    என்று ஷைலஜா என்பவருடையது வந்திருக்கு ...நகைச்சுவை அவங்களுக்குப்பிடிக்கும் அதனால்  ஓரளவு வரும் இன் ஃபாக்ட் அவங்க பத்துவயசில் எழுதின முதல் படைப்பே ஒரு ஜோக்தான்..’ என்று சொல்ல நினைத்தேன் வேண்டாம் அதுவே ஜோக்காகிடும் என்று நினைத்து யாகாவாராயினும்  என்று வள்ளுவர் எதைக்காக்க சொன்னாரோ அதைக் கஷ்டப்பட்டு காத்துவிட்டேன்!!:)


கடைசியாய்இந்த இடுகையில் ஒருத்தருக்கு  நன்றி சொல்லணும் அவருக்குப்பிடிக்காதுன்னாலும்!!ஆமாம்  நன்றி  மின்னல்வரிகள் வலைப்பூவின் அதிபர்  கணேஷுக்கு..அவர்தான்  இந்த நிகழ்ச்சிக்கு நான் வர ஏற்பாடு செய்து என்னை  அந்த இடத்திற்கும் அழைத்துச்சென்ற அன்புச்சகோதரர்.. இருவரும் ஹாலில்  நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!!(காரணம்  தெரிஞ்சிருக்குமே?:)))
மேலும் படிக்க... "எண்பதைக் கடந்த எளியவர்!"

Tuesday, February 21, 2012

மலர்போல ,மலர்போல மனம் வேண்டும் தாயே!

பிப்ரவரி 21.


ஸ்ரீஅரவிந்த அன்னையின் பிறந்த நாள் இன்று.






அன்னையின் அருள் அவரை ஒருமுறை நினைத்தவருக்கு எளிதாகக்கைகூடும்.








புதுச்சேரியில் அரவிந்த ஆஸ்ரமத்தில் மகாசமாதிஅருகே நாம் கண்மூடி அமைதியாய்நிற்கும்போதுஅரூபமாக அன்னையும் அரவிந்தரும் ஆசிவழங்குவதை ஆத்மார்த்தமாக உணரமுடியும். அந்த சமாதியில் விரல்தொட்டு வணங்கும்போது உடலில் தெய்வீகமின்அலை ஏற்படுவதை அனுபவித்து மெய்சிலிர்க்க இயலும்!



மலர்களை வைத்து அன்னையை நாம் வழிபடுவது மலர்போன்ற மென்மையான மனமும் மலர்போன்ற மலர்ந்த மனத்தையும் நமக்கு உண்டாக்கிவிடும்!

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது வெற்றிகளை விட தோல்விகளே மனமாற்றத்திற்கான குறுக்கு வழியாக மாறும் என்பதாகும்.இப்படிச் சொல்வதனால் தோல்வியே வெற்றிக்குத்தானாக அழைத்துக் கொண்டுபோகும் என்பதல்ல. தோல்வி தந்த பாடத்தைச் சரியாகக்கற்றுக் கொண்டால், அந்தப் படிப்பினையே வெற்றிக்கான ஆதாரமாக, படியாக
இருப்பதென்னவோ உண்மை.







மாற்றத்திற்கான விதை நமக்குள்ளேயே தான் இருக்கிறது.விதை முளைப்பதற்குஉதவியாக நம்முடைய அணுகுமுறை, மன நிலை பொருந்தி வருகிறதா என்பதே கேள்வி.இறைக்கருணை இல்லாவிடில் எதுவும் சாத்தியமில்லை நாம்தான் அறியாமை இருளில் மூழ்கிக்கிடக்கிறோமே அதனால்தான்வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய் என்று கடவுளிடம் கேட்டுக்கொள்கிறோம்.

அசதோ மா சத் கமய



தமஸோ மா ஜ்யோதிர் கமய



ம்ருத்யோர் மா அம்ருதம் கமய



ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:










பராசக்தியின் அம்சமான அரவிந்த அன்னையின் அமுதமொழிகள் சில...



 என்னை நினைத்தவர்களுடன் நான் எப்போதும் இருக்கிறேன்.



பயம் என்பதே எப்போதும் கூடாது,. அச்சமற்றவனுக்கே வெற்றி.



எப்போதும் நான் உனக்கு உறுதுணையாய் இருந்து உன்னை ரட்சிப்பேன். ஒருபோதும்பயப்படக்கூடாது தூங்கும்போது கூட என்னை ஸ்மரிக்கும் சக்தி உனக்கு இருக்கவேண்டும் ஆபத்து ஏற்படின் என்னை அழைக்கும் சக்தி உனக்கு இருக்கவேண்டும்



இறைசக்தியைப்பற்றி மட்டுமே நினை அது உன்னுடன் இருக்கும்}



அன்னை கூறிய சில கதைகள்...........


ஒரு கிராமத்துப்பண்ணை வீட்டில் தாத்தா காலத்து பழைய கடிகாரம் ஒன்று இருந்தது.

அது 150 ஆண்டுகள் இடைவிடாமல்ஓடி சரியான நேரத்தைக்காட்டிவந்தது.

ஒவ்வொருநாள் காலையும் அந்த வீட்டில் இருந்த விவசாயி காலை எழுந்ததும் முதலில் அந்தகடிகாரம் அருகில் சென்று அது சரியாக ஓடுகிறதா என்றுபார்ப்பார்.

ஒருநாள்காலை அவர் இப்படி நின்றுபார்த்தபோது திடீரென கடிகாரம் பேசத்தொடங்கியது.


 150 ஆண்டுகளாக நானும் வேலை செய்துவருகிறேன் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது எனக்கு ஓய்வு வேண்டாமா : என்று கேட்டது.


;உன்னுடைய புகார் சரி இல்லை என் அருமை கடிகாரமே என்று ஆரம்பித்த விவசாயிதொடர்ந்தார்,

உன்னுடைய ஒவ்வொரு டிக்கிலும் ஒருவினாடி ஓய்வு இருப்பதை நீ மறந்துவிட்டாயே: !


கடிகாரம் ஒருநிமிடம் யோசித்தது பிறகு மறுபடி தன்பணியைத்தொடர்ந்தது.
இந்தக்கதை கூறும் நீதி என்ன

ஓர் ஒழுங்குமுறையிலான வேலையில் களைப்பும் ஓய்வும் சரியானபடி ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து அமைக்கப்பட்டால் அந்த ஒழுங்குமுறையே அதிகபளுவையும் அதனால் உண்டாகும் வலியையும் நீக்கிவிடும் என்பதுதான்!

**********************************


பெர்ஷியாவில் தேன் விற்கும் பெண்மணி ஒருத்தி வாழ்ந்துவந்தாள்.
அவள் எப்போதும் மலர்ந்த முகத்தையும் இனிய சுபாவத்தையும் கொண்டிருந்தாள்.

அவளுடைய கடைக்கு வாடிக்கையாளர்கள் கூட்டமாக வந்து தேன் வாங்குவது வழக்கமாகிவிட்டது.

இதைப்பார்த்து என்ரிச்சலைடைந்த ஒருமனிதன் அதே வியாபாரத்தை தானும் செய்ய நினைக்கிறான்

கடை வைத்து வரிசையாக தேன்குடங்களைக்கொண்டுவந்து அடுக்கினான் அங்கே வந்தவர்களை எல்லாம் அவன் அலட்சியமாக நடத்தினான் .

ஒருவர் இதைகவனித்துக்கூறினாராம், கடுமையான இவன்முகம் விஷத்தைவிற்கிறமாதிரி இருக்கிறதே!

சிரித்தபடியே இருந்த அந்த தேன்விற்கும்பெண்மணி இயற்கையாகவே முகமலர்ச்சியுடன் இருந்தாள் .அவள் வாடிக்கையாளர்களுக்கு தேனைமட்டும் விற்கும்பெண்ணாகத்தெரியவில்லை அதற்கும் மேலானவளாக உலகின் அதிகமுகமலர்ச்சி உள்ளபெண்ணாகத்தெரிந்தாள்.

நாம் இந்த உலகில் விற்கவோ வாங்கவோ மட்டும் வரவில்லை, ஒருவரோடு ஒருவர் தோழமையுடன் இருக்கவேண்டும்.

அந்த தேன் விற்கும்பெண்போல இயற்கையான முகமலர்ச்சியைக்கொண்டிருக்கவேண்டும் .அந்த மலர்ச்சியே தோழமையை அதிகப்படுத்தும்!

**********************************************************************

ஸ்ரீ அரவிந்த அன்னையின் அருள் தோழமைகளுக்கு என்றும் கிடைத்திட இந்நாளில் அன்னையிடம் வேண்டிக்கொள்கிறேன்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ
ஓம் ஆனந்த மயி சைதன்யமயி சத்யமயி பரமே!









--














--







மேலும் படிக்க... "மலர்போல ,மலர்போல மனம் வேண்டும் தாயே!"

Monday, February 20, 2012

பித்தா !பிறைசூடி!

ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு



நன்மையொடு தீமையிலை நாடுவது ஒன்று இல்லை


சீலம் இலை தவம் இல்லை விரதமொடு ஆச் சிரமச்


செயல் இல்லை தியானம் இல்லை சித்தமலம் இல்லை


கோலம் இலை புலன் இல்லை கரணம் இல்லை;

குணம் இல்லை குறி இல்லை குலமும் இல்லை


பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் மருவிப்

பாடலினொடு ஆடல் இவை பயின்றிடினும் பயில்வர்

என்கிறார் சிவஞான சித்தியார். ஞான நிஷ்டை  உடையவர்கள் மானிட உடல் பெற்றிருந்தும் அந்த சரீரத்துடன் தொடர்பின்றி அருள்வசப்பட்டிருப்பார். அவர் செய்யும் செய்கைகள் உலகினர்க்கு பாலகர் பித்தர் முதலானவர் செய்யும் செய்கைகள் போலத்தோன்றும்..அபிராமிபட்டரின் நிலைமை இப்படித்தான் ஆகி இருந்தது.

ஆனால் இறைவனே பித்தனாமே  எப்படி அது?




பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது பழமொழி.அன்னை தன் குழந்தைமீது அன்பு மிகுதியால் பித்தாகிறாள் அண்ணலும் நம் மீது கொண்ட அன்பினால் பித்தன் ஆகிறான். உயிர்கள் மீது கொண்ட கருணை மிகுதி அவனை பித்தன் என்ற பேரைக்கொடுக்கிறது. தாய் தன் குழந்தை செய்யும் தவறுகளை எல்லாம் மன்னித்துவிடுகிறாள். தாயினும் சாலப்பரியும் இறைவன் பெரும் பித்தன் தான்.

அவருக்குத்தான் எத்தனை துன்பங்கள்!

  செருப்படிக்கடிகள் செம்மாந்திருந்தும்
தொல்புகழ் விசயன் வில்லடி பொறுத்தும்
அருந்தமிழ் வழுதி பிரம்படிக் குவந்தும்,
எளியரின் எளியர் ஆயினர்
அளியர் போலும் அன்பர் தமக்கே!

என்கிறது திருவாரூர் நான்மணிமாலைப்பாடல்.
இப்படி எளிமையாய் அன்பர்களை ஆட்கொள்ளும் இவரை பித்தன் என்பதில் என்ன தவறு?

"முன்னமவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்; பின்னையவனுடைய வாரூர் கோட்டாள்; பெயர்த்துமவனுக்கே பிச்சியானாள்" என்றபடி பித்தனிடம் பிச்சியாகும் நிலைதான் உண்மை பக்தனுக்கு!


திருவாசகத்துப்பாடலில்  பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறை பெரும்பித்தனே   என்கிறார் மாணிக்க வாசகர்!

சிவபெருமான முதலில் முதியவர் வடிவத்தில் தம்மை ஆட்கொள்ள வந்தது தெரியாமல் சுந்தரமூர்த்தி நாயனார் அண்ணலை பித்தன் என்கிறார்கோபமாக  பிரான் அதனை பொருட்படுத்தாமல் வலிந்து ஆட்கொண்டதும் அவருடைய அருட்பெரும் பித்தை அறிந்துகொண்டவர் அவரைப்போற்றிப்புகழ்ந்து

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா


எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே ’

என்று கண்பனிக்கிறார்!






மேலும் படிக்க... "பித்தா !பிறைசூடி!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.