செல்வாயோ எனைப் பிரிந்து,செல்வதுதான் மிக எளிதோ?சொல்லத்தான் நினைப்பாய்சொல்லமாட்டாய்சொல்லு சொல்லு என்றுஎன்னைத்தான் வற்புறுத்துவாய்என் மனக் கேணியில்உன் நினைவேதினம் சுரக்கும்புது ஊற்றுகூட்டங்களில் தனியாகதனிமையில் கூட்டமுடன்தவிப்பாக ம்னது.அவசரக்கணங்களிலும்அப்ப்டியே அச்சடித்தாற்போல் நெஞ்சினிலே உன்முகம்இது என்ன அதிசியம்?சொல்ல் இயலுமோஅது ரகசிய...
Saturday, October 28, 2006
Friday, October 27, 2006
உறக்கம் கலைக்கும் கனவுகள்
கனவுகள் காணவேகண்களை மூடிஉறங்க நினைத்ததுஅந்தக்காலம்கனவுகளின் நினைவுகளைகற்பனையாய்விற்பனை செய்துகளிப்படைந்ததும்ஒருகாலம்மணிக்கணக்கில்மாதக்கணக்கில்மகிழ்ந்துபோன உணர்வுகளைநித்திரையில்இலவச இணைப்பாய்கனவில் கண்டதும்அந்தக்காலம்வசந்தத்தின் வாசத்தைவாடாத நிலையோடுகனவில்கண்டதுஒருகாலம்பாலை நிலத்தில்கானல் நீரில்நாணல்புற்களைகனவில் கண்டதுஅந்தக்காலம்உறக்கதில் கனவுகள் கண்டதுகட்ந்தகாலம் .நிழலும் நிஜமும் புரியாமல்நிம்மதி தொலைந்த நிலைதன்னில்கற்பனைமுழுதும்...
Thursday, October 26, 2006
சில்லுனு ஒரு நாடகம்
எம்டி அறையினின்றும் ப்யூன் ரங்கசாமி தன் அருகில் வந்து நிற்பதுகூடத் தெரியாமல்'ஜீ சாட் 'டில் மூழ்கி இருந்தான் கார்த்திக் .உகாண்டா சினேகிதி நிமேகிமியுடன் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தபோது அவள் இசகு பிசகாய் ஒரு கேள்வி கேட்டுவிட்டாள்.'கார்த்திக் ஆர் யூ மேரிட்?'இதற்கு அவளுக்கு என்ன பதில் சொல்வதென யோசித்தான்.செல் , 'வள்' என்றது. வீட்டிலிருந்து 'கால்' வந்தால் செல்லில் அல்சேஷன் குரைக்கும்."என்ன சந்திரா ஆபீஸ்ல மும்முரமா வேலை செய்யறபோதுதான்...
Monday, October 23, 2006
ஆண்மனசு.
பொழுதோட வாரேன்னுபொறப்பட்டுப்போன மச்சான்பொம்பள என் மனசத்தான்பொறுமை இழக்க வச்சான்சந்தைக்குப் போயெனக்குசாதிமல்லி வாங்கியாந்துசட்டுனு தலயில் வச்சிசாகசமாப் பேசிப் போனான்புதுப்பொண்ணு நாந்தனியேபுருஷனுக்குக் காத்திருக்கபுன்னகைச்ச (வேற)பொண்ணருகேபுல்லரிச்சி நிக்கிறானா?புதிராக இருக்குதம்மாபுரியாத ஆண்ம...
Thursday, October 19, 2006
விடுதலை ஹைக்கூ
பெண்விடுதலை பற்றிபேசவேண்டும்அனுமதிகேட்கிறாள் கணவனிடம்மனவி.***************************விடுதலை கிடைத்தும்பறக்கமுடியாதநிலைஜோதிடக்கிளி*****************************மௌனத்திரை போட்டுவிட்டாய்மனசிறைக்குள் வந்த உனக்கு,இல்லைவிடுதலை.*****************************...
Saturday, October 14, 2006
விடுதலை வேண்டா விருட்சங்கள்(தேன்கூடு போட்டிக்கு)
அடித்த பெருங்காற்று சொல்லி இருக்கலாம்ஏறிக் குதித்துகிளைக்குக்கிளை தாவிவிளையாடியகுரங்குகள்சொல்லி இருக்கலாம்தவறாமல் நிழல்தேடிவந்துநிற்கும் நெஞ்சங்களில்ஏதாவது ஒன்றாவதுசொல்லி இருக்கலாம்,சாலைவிரிவுப் பணியில்வேலை பார்ப்பவர்கள்நாளை மாலைக்குள்மரத்தை வேரோடு விழ்த்தப்போவ...
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!(தேன்கூடு போட்டிக்கு)
பரசுவிற்கு இன்று விடுதலை.சட்டம் வழங்கிய மூன்றுமாத தண்டனை இன்று பூர்த்தியாகிறது."நாளையிலிருந்து நீ சுதந்திரமனிதன்!" என்று நேற்று படுக்கப்போகும்போது ஆறுமுகம் பரசுவைப் பார்த்து சொன்னான்."ஜெயிலு விட்டு போனதும் எங்களை எல்லாம் மறந்துடுவே, இல்லியா பரசு?' வரதன் வேதனையுடன் அவன் விரலைப்பற்றியபடி கேட்டான்.மூன்றே மாதத்தில் எல்லாருடைய மனத்திலும் இடம் பிடித்து விட்ட பரசு, சிறைக்குள் நுழைந்த முதல்நாள் நடுங்கித்தான் போனான். இருபத்துமூன்றுவயதில்...
Thursday, October 12, 2006
மௌனமே பார்வையாய்....
பாசாங்குகளைக் களைந்துபரிவுடனே நீ பார்க்கும்போதுபரவசத்தில் என் விழிகள்படபடத்து இமை கொட்டுகின்றனநேசத்தை விழிகளில் தேக்கிஆசையுடன் நீ பேசும்போதுபதில் கூறவும் தெரியாதுமௌனமாகிறேன்கடந்து சென்ற பூக்கூடையினின்றும்மிதந்துவரும் பூவாசம்போலபிரிந்து சென்ற பின்பும்உன் பார்வையின் தாக்கமும்பேச்சின் வீச்சும் என்னுள்ளேபரவிக்கிடக்கின்றன ..உன்னைப்போல்பார்க்கவும் தெரியாமல்உன்னைப்போல்பேசவும்தெரியாமல்மௌனமாகவே இருக்கிறேன்,இன்னமும்.உன்னதங்களில்மௌனமும்...
மகரந்தசேர்க்கை
உன் நட்பு வேண்டித்தான்என் இருகரங்களை நீட்டுகிறேன்.எதிர்பார்ப்பு இல்லாத அன்புஎப்படி சாத்தியம்?வசப்படுத்த நினக்கும்போதெல்லாம்வாராது நழுவுகிறாய்கையணைப்பில் அடங்க மறுக்கும்காற்றாகக் கடக்கின்றாய்மணல் பிரதேசங்களை மூழ்கடித்துநுரை சுழித்தோடும் வெள்ளமெனபிரவாகமெடுக்கிறது என் ஆவல்பனி படர்ந்த சோலைகளுக்குள்படர்ந்து விரிகிறதுபூக்களுக்கான என் கனவுநில வெ(வொ)ளியில் திரிகிறதுஎன் காதல் நினைவுகள்சில்லென்ற காற்றில்சிறகடிக்கும் மழைத்தும்பிகள்சேர்க்க...
காதல் மொழி
சட்டென்று சொல்லிவிட்டாய்என்னை நேசிக்கிறேன் என்றுசொல்ல நாணம் எனக்குசொல்லாததால் கோபம் உனக்குநீ விரும்பும் மலர் என்கூந்தலில்நீ விரும்பும் வண்ணம் என் உடையில்நீ விரும்புவதெல்லாம் என் செயலில்.மனதின் நிலையைமௌனத்தில் மொழி பெயர்க்கிறேன்.விழிகளின் ஒளியில்கண்டுகொள் காதலைவார்த்தைகள் அர்த்தமற்ற...
Tuesday, October 10, 2006
வாழ்க்கை எங்கும் வாசல்கள்!
இன்றைய மங்கையரே!வாழ்க்கை என்பது என்ன?பிரச்சினைகள் சூழ்ந்த ஒன்றா? அழகிய ஓடமா? எதிர்நீச்சல் போடவேண்டிய நதியா? புதிரான கேள்விதான்!ஒவ்வொரு கால கட்டத்திலும் நமது வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது..குழந்தையாய், சிறுமியாய்,பருவப் பெண்ணாய், மனைவியாய், தாயாய் என்று பெண் எடுக்கும் அவதாரங்களுக்கு ஏற்ப வாழ்க்கைமாறுகிறது.வாழ்வெனும் பெருங்கடலை நீந்துவதற்கு அனுபவம் எனும் படகில் ஏறி அமர்கிறோம். பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள்தான் எத்தனை எத்தனை...
Monday, October 09, 2006
எழுதாத கவிதை ஒன்று
எப்போதோ சந்தித்ததுசாவகாச நினைவுகள்கரைந்த உணர்வுகள்உன்னைத் தேடுகின்றனஉனக்குப் பிடித்த பாடல்களைஎஃப் எம் ஒலிபரப்புகிறதுஉனக்குப் பிடித்த படங்களைதொலைக்காட்சி ஒளிபரப்புகிறதுகவிதை, மலர், வாசனை என்றுஉனக்குப் பிடித்ததெல்லாம்என் நினைவுப் பதிவில்நிரந்தரமாகி விட்டனநினைவுகளைப் புரட்டவேநிகழ்வினில் நேரமில்லைஉன்னைப்பற்றி கவிதை எழுதஒருநாளும் முடிவதில்லைஎழுதாத கவிதை ஒன்றுஎனக்குள்ளேஎப்போதும் இருக்கிற...
என்னை பற்றி
மைதிலி நாராயணன் என்னும் ஷைலஜாவாகிய நான் காவிரிக் கரையில் பிறந்து (ஸ்ரீரங்கம்) காவிரியின் பிறந்த வீட்டில்(கர்நாடகா) வசிக்கிறேன். நீண்டநாட்களாய் எழுதிவந்தாலும் நிறைவாக இன்னும் எதுவும் எழுதவில்லை எனும் நெருடல் இருக்கிறது.சமையல், அரட்டை என்று பொழுதினைக் கழிக்கும் உற்சாகமான இல்லத்தரசி. விளம்பரப் படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுத்து வருகிறேன். ஒலி எஃப் எம் இணைய வானொலியில் பகுதி நேர அறிவிப்பாள...
Subscribe to:
Posts (Atom)