Social Icons

Pages

Tuesday, October 10, 2006

வாழ்க்கை எங்கும் வாசல்கள்!

இன்றைய மங்கையரே!
வாழ்க்கை என்பது என்ன?
பிரச்சினைகள் சூழ்ந்த ஒன்றா? அழகிய ஓடமா? எதிர்நீச்சல் போடவேண்டிய நதியா? புதிரான கேள்விதான்!
ஒவ்வொரு கால கட்டத்திலும் நமது வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது..குழந்தையாய், சிறுமியாய்,பருவப் பெண்ணாய், மனைவியாய், தாயாய் என்று பெண் எடுக்கும் அவதாரங்களுக்கு ஏற்ப வாழ்க்கைமாறுகிறது
.வாழ்வெனும் பெருங்கடலை நீந்துவதற்கு அனுபவம் எனும் படகில் ஏறி அமர்கிறோம். பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள்தான் எத்தனை எத்தனை பேர்கள்! அவர்களிடம் பழகும்போது நாம் கற்றதும் பெற்றதும் அதிகமிருக்கும்...ஆயினும்....
வாழ்க்கை எப்போதுமே இனிமையாக இருக்கிறதா? இல்லையெனில் அதை இனிமையாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.
பெண்களாகிய நம்மிடம் திறமை இருக்கிறது,உற்சாகம் இருக்கிறது, ஆனால் ஒரு செயலை செய்து முடிக்கத் தேவையான மனத்தீவிரம் இல்லை.
நம்மை நாமே புரிந்துகொள்ள சுய அலசல் செய்து பார்க்கலாம் அப்படிப் பார்க்கும்போது குறைகள் தெரியவரும். அவைகளைப் போக்க முயற்சி செய்ய ஆரம்பிக்கலாம்.
முதலில் என்ன செய்யபோகிறோம் என்பதை திட்டமிடுதல் வேண்டும் அதைப்பற்றிய விஸ்தாரமான விவரங்களை வெளிப்படுத்துதல் அவசியமில்லை ஏனெனில் செய்து முடிக்க இயலாத பெரிய திட்டத்தைவிடவும் செய்யக்கூடிய சிறிய திட்டமே மேலானது.
செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போடுதல் முக்கியம். கடைக்குபோகவேண்டியதிலிருந்து இரவுபடுக்கபோகுமுன்பு வாசல்கதவினைப் பூட்டவேண்டியதுவரை எல்லாமே திட்டமிட்டு செய்யும்போது கோடுகிழித்தாற்போல் நேராகபோய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையும்.
நம் மகிழ்ச்சியை அழகு அந்தஸ்தினால் நம் பெற்றுவிடமுடியாது நம் மனதின் எண்ணங்களினால் தான்அவை சாத்தியமாகும் .எண்ணியமுடிதல் வேண்டும் என்றபாரதி நல்லவைஎண்ணல் வேண்டும் என்றான் அடுத்து.ஆகவே நல்லவைகளை எண்ணும்போது அந்த நல்லெண்ணங்களைக் கொண்டு இயங்கும்போது நல்ல சூழ்நிலை நமக்கு உண்டாகும்.
நல்ல எண்ணங்கள் தோன்றுவதற்கு அன்பின் வழியதில் நாம் செல்லவேண்டும். அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு என்பது தான் உண்மை வாழ்க்கை நெறியும்கூட,,குற்றம் பாராது அனைவரையும் ஏற்றுகுணங்களோடு வாழும்போது வாழ்க்கையில் ஒளி வீசத்தொடங்கிவிடும். வீண்கவலைகளில் மனதை உழலவைக்காமல் அதற்கான தீர்வு என்ன என்று யோசிப்போம், உலகைப் பார்த்து ரசிக்கப்பழக்கிக் கொள்வோம்.
மனிதர்களாகிய நாம் தவறுதலாக சில குற்றங்கள் செய்யகூடும் அதை நினைத்தே மருகாமல் திருத்திக்கொண்டு வாழலாம்
உணவு உடை படிப்பு பொழுதுபோக்கு என எல்லாவற்றிலும் ருசி,ரசனையோடு தேர்ந்தெடுத்து விட்டால் குழப்பங்களுக்கு வாய்ப்பில்லை.
குறிக்கோள் ஒன்றை வைத்துகொண்டு அந்த இலக்கினை அடைய முயற்சிப்பது அதைப்பற்றிய சிந்தனையை வளர்க்கும்.
வீட்டுப்பணி அலுவலகப்பணியைதவிர பெண்களுக்கு வேறு ஒருகலை தெரிந்திருந்தால் ஓய்வுக்காலங்களில் மனதை அதில் செலுத்தமுடியும். பாடுவது படிப்பது எழுதுவது ஓவியம்வரைவது என பலகலைகளில் எதையாவது இளம்பருவத்தில் பயிற்சி எடுத்துவைப்பது நல்லது.
முக்கியமாய் தன்னம்பிக்கை மனதில் வேண்டும் .உறுதியான மனது தெளிவான அறிவு இவைகளுடன் வெளி உலகம் செல்லும்போது மதிக்கப் படுகிறோம் என்பது உண்மை.
நம்மால் முடியும் என்னும் உணர்வை வளர்த்துக் கொண்டால் வெற்றிப் படிகளில் தடுக்கி விழமாட்டோம் ..

ஆம் வாழ்க்கையெங்கும் வாசல்கள்! வாழ்ந்து பார்க்கலாம் வாருங்கள்! ************************************************************************************

2 comments:

  1. நல்ல கதை.

    நானும் எழுதுகிறேன். போட்டி பலமாக இருக்கும்போல் இருக்கிறது.

    ReplyDelete
  2. ஓகை! இது போட்டிகதை இல்லீங்க கட்டுரை.போட்டிக்கான
    கதை வேற ..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.