காணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது.இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும் பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டுவார்கள் இல்லையா அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.(இப்பவும் இன்னிக்கு ஒருநாள் கண்டிப்பா மஞ்சள் பூசிக்கறோம் உண்மை!!:):)கணுப்பிடி இந்தநாளின்...
Wednesday, January 16, 2008
Tuesday, January 15, 2008
வாழ்க்கைப் பாடம்.
எல்லாப்பூக்க்களையும் பறித்தபின்னும்எப்போதும்போல இயல்புடன் இருக்கும் செடிஅத்தனை இலைகளும் உதிர்ந்தபின்னும்அப்படியே நிமிர்ந்து நிற்கும் மரம்இடியையும் மின்னலையும் தாங்கிமழைபொழிந்தபின்னும்கலங்காத தெளிந்த வானம்மண்ணில் விழுந்ததும்துள்ளி எழுந்து நிற்கும் கன்றுகொஞ்சம்கொஞ்சமாய் தேய்ந்துபோனாலும்முழுமையாய் ஒருநாள் முகம்காட்டும் பௌர்ணமிநிலவு... எல்லாமே வாழ்க்கைப்பாடம் நடத்துகின்றனஎதிலும் நம்பிக்கை இழந்த மனிதர்களுக்...
Monday, January 14, 2008
பொன்னாள் இந்நாள்!
பனிமூடும் மார்கழியின் பின்னே-பொங்கல் பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணேஇனிதான தமிழர்திருநாளாம் இதற்கு ஈடுண்டோ வேறேதும் சொல்வாய் பெண்ணே!பச்சைவயல் முழுதும் காண் செந்நெல்மணிகள்- அங்கு பகலவனை சேவிக்கும் பலதலைகள்இச்சகத்தில் உழவர்கள் உழைப்பதுவேயின்றி நம் உணவுக்கு வழியுண்டோ சொல்வாய் பெண்ணே!வருடத்தில் ஒருநாளாய் வருமிந்தத் திருநாள்தரும் வாழ்வில் என்றுமே இன்பம் பலநாள்திருவெனவே திகழும் மாதருடன் பலரும்பெருமையுடன் வரவேற்கும் பொன்னாள் இந்நாள்!மங்கலத்தமிழர்கள்...
Thursday, January 10, 2008
பூக்களில் உறங்கும் மௌனங்கள்(கவிதை போட்டிக்கு)
(மனிதன்.....)வெள்ளி அரும்புகள் விள்ளவேமெல்லிய தென்றலின் வீச்சிலேகள்ளத்தனத்தினைக் காட்டிடாக்கன்னிப் பெதும்பையைப்போலவேகொள்ளைச்சிரிப்புடன் மெல்லவேகொத்தாய்க் குலுங்கும் மல்லிகேஎன்ன மகிழ்ச்சியைக்கண்டனைஎள்ளத்தனைப்போது வாழ்க்கையில் மலரத்தெரிந்த உனக்குத்தான்மௌனம் தானே தாய்மொழி?(மல்லிகை....)வாடிடா காகிதமலரைப்போல நான்வாழவும் விரும்ப நினைத்திலேன்வாழும் காலம் சிறிதெனினும்வாசம் பரப்பியேதான் மகிழ்வேன்பாடிடும் வண்டினம் அத்தனையும்பார்த்து மயங்கியே...
Wednesday, January 09, 2008
பயணங்கள் சலிப்பதில்லை!
பயணங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை .கார் ரயில் பஸ் விமானம் என்று நமது பயணங்கள் பெரும்பாலும் இவை நான்கினில்தான் இருக்கும். விமானப்பயணத்தில் அதிகம்பேச இயலாது.அருகில் இருப்பவர் mood பொறுத்தது அது! விமானப்பயணத்தில் ஜன்னல்ஓரம் அமர்ந்தாலும் வெளியே வேடிக்கைப்பார்த்தால் வெண்பஞ்சு மேகங்கள்தான் மூட்டைமூட்டையாய் காட்சி அளிக்கும்.தெலுங்கில் இக்கட அக்கட தவிர எதுவும் தெரியாத நான் பன்னாட்டு விமானப்பயணத்தின்போது தெலுங்கு(மட்டும் தெரிந்த)பெண்மணியோடு...
அசை(kavithai)
நிலவைபார்க்கும் போதெல்லாம் உன்நினைவுவந்து முட்டுகிறதுநிலாபார்த்து நீசோறுண்ணவாய்திறந்ததைமனம்கிடந்து அசைபோடுகிறதுபண்டிகை நாட்களில்பள்ளிவிட்டு பரபரப்பாய் வீடுவந்ததும்பலகாரம் தின்றுகாரம்தாங்காமல் தவித்தபோதுவெல்லத்துண்டுஒன்றை சட்டென் உன்வாயில்மெல்ல அழுத்தியதைமனம்கிடந்துஅசைபோடுகிறதுஅப்பாவிற்குத்தெரியாமல்பின்கட்டுவழியே நடுநிசியில்நண்பனுடன் படம்பார்த்துவீடுவந்தவனைதப்பாமல் காப்பாற்றியதற்குகாத்தான் சாமிக்கு படையல்நேர்ந்துகொண்டதைமனம்கிடந்துஅசைபோடுகிறது.காதலித்த...
காணாமல்போன களிமனது
காணாமல் போன களி மனதுஷைலஜா கரியடுப்பில் கொதிக்கும்கற்சட்டிக்குழம்பின் வாசனையும்சாணமிட்டு மெழுகிய தரையில்பளிச்சிடும் கோலமும்அணில் விளையாடித் திரிந்தமுற்றமும்அகல்விளக்கு எரியும் பிறைகளும்ஆடிப் பிடித்து விளையாடும் தூண்களும்கொண்ட அழகான கூடமும்நிலா பதுங்கும் கிணறும்வந்தவர்கள் அமர்ந்துவம்புபேசும் திண்ணையும்கொலுசொலிக்குப் போட்டியாய்கிணுகிணுக்கும் ஊஞ்சலொலியும்சிட்டுக்குருவிகள் கூடுகட்ட வாகாய்இடம்கொடுக்கும் உத்திரமும்அவ்வப்போது ஓட்டப்பந்தயம்...
அப்பாவைப்போல.....
அறுந்த வார் செருப்புடனேயேஅவசர அவசரமாய்அலுவலகம் செல்வார்எங்கள் ஐவருக்கும்அப்பாவே தாயுமானவர்.அழுத்தும் குடும்பச்சுமைகளிலும்அகலாத புன்னகை.எளியவர்; நல்லவர்; நாணயமானவர்.அதனாலேயே கிடைத்த பட்டம்பிழைக்கத்தெரியாதவர்.வார இறுதி நாட்களில்சைக்கிள்பெடல் அழுத்திமைல்கணக்கில் பாதைகடந்துசில்லரைவியாபரம் செய்துபைக்குள் சிறுபணம்கொண்டுவருவார்.அக்காவின் கல்யாணக்கடனைஅல்லல்பட்டு அடைத்து முடித்தவருக்குஅறுபதுக்குள் வந்தது மாரடைப்பு.அப்பா போனதும்அதற்காகவே...
பெருசு (கவிதை)
தவித்த வாய்க்கு நெஞ்சு நனைக்க தண்ணீர் கொடுத்ததில்லைதற்போது தாராளக் குளியலில்உடம்பே நனைகிறது.பொங்கலுக்கே கிட்டாத புதுத்துணிப் போர்த்திக்கிடக்கிறது உடல்முழுதும்கனவில்மட்டுமே அனுபவித்த சந்தனமும் சவ்வாதும்கையிலும் காலிலும் மணக்கிறது.புத்தகம்படிக்க சிறுவிளக்கு தந்ததில்லைபுதுக்குத்துவிளக்கு இன்று பூரித்து எரிகிறது.அதட்டி விரட்டி ஒடுக்கிய குரல்கள் எல்லாம்அழுகை பொங்க அல்றிடஅமைதியாய் கண்மூடிஅப்படியே கிடக்கிறது,வீட்டுப்பெருசு என்று நேற்றுவரைஅழைக்கப்பட்டஇன்றைய...
Monday, January 07, 2008
பாசாங்குகள்.
அன்றாடம் அணிந்து கொள்கிறோம்பாசாங்குப் புன்னகைகளை.அறிமுகமாகும் முதல்மனிதருக்குகாலைவணக்கம் சொல்வதிலிருந்துஆரம்பமாகும் பாசாங்குகள்அலுவலகப்பணி முடித்துஆயாசமுடன் வீடுதிரும்பும்வரைஆக்கிரமித்துக்கொள்ளுகிறது.அனைவரிடமும்தன்னை மறைத்துக்கொண்டுஅழுத்தமாய்அப்பிக்கொண்டிருக்கும் பாசாங்குகள்,வீட்டிற்குள் நுழைந்ததும்தெறித்துவிடுகிறது,தன் உயிரற்ற புன்னகைக...
எங்கும் நிறைந்தவன்!(கவிதை)
சிறப்புவழிக்கு சீட்டுவாங்கிசீக்கிரமாக கடந்து செல்லபறக்கும் ஒருகூட்டம்(முக்கிய பிரமுகர் என்றால்முதுகிற்குப்பின் மூச்சுவிட யாருமின்றிமுன்னே செல்ல அனுமதி உண்டு.)முட்டிமோதி க்யூவில் நின்றுஎட்டிப்பார்த்து எம்பிக்குதித்துகிட்டும்தர்மதரிசனத்திற்கு ஓடும் ஒருகூட்டம்.எங்கும் நிறைந்த இறைவனைக்காணஎத்தனை வழிகள் மனிதனுக்க...
மனசு..(கவிதை)
இறுக்கிக்கட்டிச் சரமாய்தொடுத்தபின்னும்மணம்பரப்பும் மலர்போலஅடக்கிப்பின்னலிட்டும்அடங்கமறுக்கும்தலைமுடிபோலகுடம்குடமாய் நீர்விட்டும்மழையை விரும்பும்மலர்ச்செடிபோலஎத்தனையோ மனிதர்கள்அருகில் இருந்தும்தொலைதூரத்திலிருக்கும்உன்னையே எதிர்பார்க்கும்,மன...
ஆண்சிலை
அன்பினை அதிகம் தின்றுஅபரிமிதமாய் வளர்ந்திருக்கிறதுநம் தோழமை. காதலாக மாறியதைக்கண்களால் சொல்லபெண்களால் இயலும்பின் விளைவுகளைஎண்ணிப்பார்க்காதஅவசரமும் ஆர்வமும்உன் பார்வைகளில்ததும்பிவழிகின்றன. சுமைகளை தோள் ஏற்றிக்கொண்டதில்அமைதியாய்இருக்கமுயன்றும்அவ்வப்போது வெறுக்க நினைப்பதாய் நடித்து இறுகிக் கிடக்கும் என்னை இனியவனாய் வடிவமைக்கஉன் புன்னகை உளியுடன் வந்து நிற்கிறாய். தெறித்துவிழும் துணுக்குகளில் தெரியும்கண்ணீர்ச்சொட்டுகளும் குருதித்துளிகளும்...
Friday, January 04, 2008
story about four people!
டைரக்டர் விசு பாணில ஒரு ஆங்கிலக்கதை!There is a story about Four People!Every body, Somebody,Any body, Nobody!There was an important job to be done and Everybody was asked to do it. Every body was sure Smebody would do it. Anybody could have done it. but Nobody did it. Somebody got angry about that because it was Everybody's job. Everybody thought Any body could do it. but No body realised that. Everybody wouldn't do it....
Thursday, January 03, 2008
ஆஹா மெல்ல நட மெல்ல நட!
தலைவலி பல்வலி சைனஸ் தொல்லை டைபாயிடு மலேரியா காலரா எல்லாமே நல்ல நோய்கள்! ஞானசம்பந்தர் தன் உள்ளத்தில் சிவபெருமான் புகுந்தபோது எல்லாக்கோள்களும் சனி ராகுகேது உட்பட 'நல்ல நல்ல' என்றுதான் பாடி இருக்கிறார்! அப்படித்தான் போன வருடம் இந்தியா முழுவதும் பரவலாய் ஆக்கிரமித்திருந்தது, சிக்குன்குனியா chickungunya . என்ற நோய். அது உடலில் புகுந்தபோது அனைத்து நோய்களுமேநல்லவை ஆகிவிட்டன! ஹிட்லராய் பின்லேடனாய் அனைவரையும் பயமுறுத்திய...
Tuesday, January 01, 2008
வருக 2008!(கவிதை)
வாடையும் பனியும் சூழ்ந்தமார்கழித்திங்கள் நாளில்நாடெல்லாம் புதுமை செய்யகாடெல்லாம் விளைந்து செழிக்கதேடிவந்ததிங்கு தேன்சுவைப் புத்தாண்டு!வீடெல்லாம் நிறைந்த தூசிஓடிடப் பெருக்கித்தள்ளிபாடி நாம் பரவசமாய் ஆடிக் கொண்டாடியே வரவேற்கும் புத்தாண்டு!!செந்தமிழ் நாட்டிற்கென்றே சிறப்புற அமைந்தபொங்கல்வந்ததும் விளைவுபொங்கத் தருவதும் புத்தாண்டு!இத்தாரணியில் நாம் என்றும் இனிதே வாழபுத்தாண்டில் உறுதிமொழி இப்படியே எடுப்போம்!"அறிவெனும் நீரைப்பாய்ச்சி...
புத்தாண்டு சபதம்!
பாஞ்சாலிசபதம் சிவகாமியின்சபதம் மாதிரி (வேற இன்னும் சபதங்கள் இருக்கும்..கண்ணபிரான் ரவி ஹெல்ப் ப்ளீஸ்!!) இது புத்தாண்டுசபதம்! இனி வருடம்முழுக்க எப்படில்லாம் இருக்கணும்னு முன்கூட்டியே தீர்மானம்போட்டுட்டு அப்படியே இருக்கபோறேன் பாருங்கன்னு சபதம் எடுப்பதுதான் இந்தபுத்தாண்டுசபதம்! சபதம் நிறைவேறுகிறவரை பாஞ்சாலிகூந்தலை முடியவேஇல்லையாம்..!!இப்போ சபதம்லாம் எடுக்கமாயே பெண்கள் பலர் அப்படித்தான் இருக்கோம்:!! சரி ...இப்போ நான் என சொல்லவரேன்னா...
Subscribe to:
Posts (Atom)