Social Icons

Pages

Sunday, January 26, 2014

விடியலின் வெளிச்சம்.






கொலையும் கொள்ளையும்
நாட்டினிலே பெருகிப்போச்சு-இந்தக்
கோயில்கூட பலருக்கிங்கே
பாசறையாச்சு
 
தலைவன் திருடன் என்றிருந்த
பேதமும்போச்சு- அட
தலையை ஆட்டும் பொம்மைக்கிங்கே
ராஜ்ஜியம் ஆச்சு
 
தன்னலம்தான்  நாளும் இங்கே
பொதுநலமாச்சு-உயர்
பொன்னைவிட பதருக்குத்தான்
பெருமையும் ஆச்சு
 
துன்பம் உனக்கு இன்பம் எனக்கு
என்பதுமாச்சு-நமது
தேசத்தந்தை நினைவு இன்றோ
வெறுங் கனவாச்சு
 
 
பறங்கியரை நாம் விரட்டிப்
பல காலமும்ஆச்சு- உடன்
பண்பாடதுவும்  காற்றினிலே
பறந்தே போச்சு
 
 
இரவில்கிடைத்தசுதந்திரத்தை
இன்று புரிந்தவரில்லை-அன்று
வெள்ளையரை விரட்டியதும்
வெறும் கதையாச்சு!
 
நாறுமிந்த சமூகம் இன்று
நரகம் ஆச்சு- அதுவும்
நாலுகாசு உடையவனுக்கே
அடிமையென்றாச்சு.
 
ஆணவத்தின் பெயரும் அதி
காரம் என்றாச்சு  -பலர்
அடித்துக்கொண்டு அழிவதிங்கே
வாழ்க்கையும் ஆச்சு!
 
 
விடியல் வெளிச்சம் என்பதெல்லாம்
  வார்த்தையில்தானா-இளைஞர்
படை திரண்டு எழுந்துவிட்டால் துன்பம்
போயே போச்சு!
 
 
 (ஈகரைத்தளம் நடத்திய  சித்திரைப்புத்தாண்டுக்கவிதைப்போட்டி(2013)தனில் முதல்பரிசுபெற்ற  எனது கவிதை)

http://www.eegarai.net/t98914-6
 

3 comments:

  1. மனதில் உள்ள குமுறலும் நெஞ்சில் உள்ள வேதனையையும் நன்றாக வெளிப்படுத்துகிறது .நாடு செழிக்க..இந்த அவலம் மாற வேண்டும்.

    ReplyDelete
  2. மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.