Social Icons

Pages

Monday, January 07, 2008

எங்கும் நிறைந்தவன்!(கவிதை)

சிறப்புவழிக்கு சீட்டுவாங்கி
சீக்கிரமாக கடந்து செல்ல
பறக்கும் ஒருகூட்டம்

(முக்கிய பிரமுகர் என்றால்
முதுகிற்குப்பின் மூச்சுவிட யாருமின்றி
முன்னே செல்ல அனுமதி உண்டு.)

முட்டிமோதி க்யூவில் நின்று
எட்டிப்பார்த்து எம்பிக்குதித்து
கிட்டும்தர்மதரிசனத்திற்கு
ஓடும் ஒருகூட்டம்.

எங்கும் நிறைந்த இறைவனைக்காண
எத்தனை வழிகள் மனிதனுக்கு?


.

2 comments:

  1. எல்லாரும் செய்வதனாலே
    எல்லாமும் சரியென்றே
    எல்லாரும் நினைக்கின்றார்.
    எல்லாமாய் நிறைந்தவனை
    எல்லைக்குள் சிறைப்பிடித்தாலோ?

    ReplyDelete
  2. உண்மை... உண்மை... உண்மையைத் தவிர வேறில்லை..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.